Monday, March 18, 2024

சீனா மெட்ரோ....!

The structured and courteous behaviour of people at the Beijing Xierqi metro station.

Watch this:



அழகு.....!

 அழகோ....அழகு....!



சைக்கிள்....!

 சைக்கிள் - அழகிய நினைவுகள்....!



செய்யது சாதி அலி ஷிகாப் தங்ஙள் கண்டனம்....!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது...!

ஒன்றிய பாஜக அரசுக்கு,செய்யது சாதி அலி ஷிகாப் தங்ஙள் கண்டனம்


மும்பை, மார்ச்18- காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் மும்பையில் நிறைவு பெற்றது. இதையொட்டி, இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் மும்பை சிவாஜி பூங்காவில் நேற்று (17.03.2024) நடைபெற்றது.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் ஆலோசனைக் குழு தலைவர் செய்யது சாதிக் அலி ஷிகாப் தங்கள் கலந்துகொண்டு, மணிப்பூர் முதல் மும்பை வரை பயணம் மேற்கொண்ட ராகுல் காந்திக்கு வாழ்த்து கூறி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழாவில் நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடியிருக்கிறோம். ஆனால், நாட்டின் ஒற்றுமை, வளர்ச்சி அனைவருக்குமான நீதி உள்ளிட்ட அம்சங்களுக்கான இந்த பயணம், இன்றோடு நிறைவு அடையவில்லை. நாம் இன்னும் வீரியத்துடனும், வேகத்துடனும், செயல்படவேண்டிய, பணியாற்ற வேண்டிய  கட்டாயம் நம் அனைவருக்கும் இருக்கிறது. 

இத்தகைய உயர்ந்த நோக்கத்திற்காக நமது அர்ப்பணிப்புகள், பணிகள் இன்னும் வேகம் எடுக்க வேண்டும். அனைத்து சமுதாய மக்களுக்கும் மனித நேயத்துடன் ஆற்ற வேண்டிய பணிகள், அர்ப்பணிப்புகள் ஆகியவை மேலும் வலிமையுடன் நாம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். 

ராகுல் காந்தியின் பயணம்:


நமது மதிப்பிற்குரிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு, மக்கனை நேரில் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள் என்ன? அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன? ஆகியவை குறித்து நேரில் அறிந்துகொண்டு, அதற்கான தீர்வுகளுக்கு பல்வேறு வழிகளையும் எடுத்துக் கூறியுள்ளார். 

தனது பயணத்தின் மூலம் நாட்டில் உள்ள சாதாரண மக்களின் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண முடியும் என்பதை அறியக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பு ராகுல் காந்திக்கு கிடைத்து இருக்கிறது. 

நாட்டு மக்களிடையே இன்று பிளவை ஏற்படுத்தி, அதன்மூலம் அரசியல் லாபம் பெற பாசிச சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வை ராகுல் காந்தி, தனது இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் மூலம் மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறார். அதை இனியும் ஏற்படுத்த முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன். 

சி.ஏ.ஏ. சட்டம் அமல்:

ஒன்றிய பாஜக அரசு, மக்களிடையே பிரிவினையையும், பிளவையும் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும், சட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை தற்போது நாடு முழுவதும் பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது. இதேபோன்று என்.ஆர்.சி. உள்ளிட்ட திட்டங்களையும் நடைமுறைத்த முயற்சி செய்து வருகிறது.

ஆனால் ஒன்றை மட்டும் நான் இங்கு உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். தனது பாசிச சட்டங்கள் மூலம் நாட்டு மக்கள் மத்தியில் தற்போது இருக்கும் ஒற்றுமைய பாஜக சீர்குலைக்க முடியாது. நாட்டு மக்களிடையே இருக்கும் பாசப் பிணைப்பை பறித்துவிட முடியாது. நமது பெருமை மிக்க இந்திய நாட்டின் தலைவர்கள்,  நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றை நமக்கு மிகச் சிறப்பாக போதித்து இருக்கிறார்கள். அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்தும் நன்மைகள் குறித்தும், அமைதி குறித்தும் அந்த தலைவர்கள் மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறார்கள்.

உறுதியுடன் பணியாற்ற வேண்டும்: 


பெருமை மிக்க சிவாஜி பூங்காவில் கூடியுள்ள நாம் அனைவரும், தற்போது நாட்டில் உண்மையான சுதந்திரம் பறிக்கப்பட்டு வரும் நிலையில், அதை தடுத்த நிறுத்த உறுதியாக பணியாற்ற வேண்டும். 

வரும் நாடாளுமன்றத் தேர்தல், நமது ஒற்றுமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும். அந்த வகையில் நமது பணிகளை நாம் அமைத்துக் கொண்டு செயல்புரிய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் நாம் அனைவரும் உறுதியுடன் இருந்து செயல்பட்டால் மட்டுமே பாசிச சக்திகளை வீழ்த்த முடியும். 

நாட்டு மக்கள் கட்சியை அடிப்படையாக கொண்டு, தங்களது வாக்குகளை அளிப்பதை விட்டுவிட்டு, கொள்கையை அடிப்படையாக கொண்டும், நாட்டு நலனில் அக்கறை கொண்டு செயல்படும் கட்சிகள் எவை? என்பதை அறிந்துகொண்டும் வாக்களிக்க வேண்டும். நாட்டின் மீது உண்மையாக அக்கறை கொண்டவர்கள் யார்? நாட்டில் ஜனநாயகம், நீதி, அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு, மக்கள் மத்தியில் ஒற்றுமை ஆகிய அம்சங்களை முன்வைத்து, நன்கு ஆராய்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும். 

ஒருங்கிணைந்த செயல்பாடுகள்:


நாட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே  ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மிகவும் அவசியம். ஒளிமயமான எதிர்காலத்தையும் இந்தியாவையும் உருவாக்க வேண்டுமானால்,  ஒருங்கிணைந்த பணிகள், செயல்பாடுகள் மிகவும் அவசியம் என்பதை நாம் உணர்ந்துகொண்டு, அதை ஒரு கடமையாக நாம் நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் மட்டுமே ஒளிமயமான, அமைதியான, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க முடியும். 

இவ்வாறு செய்யது சாதிக் அலி ஷிகாப் தங்ஙள் பேசினார்.

- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Sunday, March 17, 2024

ஒளியின் பக்கம் செல்ல...!

ஒளியின் பக்கம்....!


மனித வாழ்க்கையை ஒரு விசித்திரமானது. ஆனால், அதேநேரத்தில் மிகவும் அற்புதமானது. இந்த அற்புதமான, அழகான வாழ்க்கையில், அடுத்த ஒவ்வொரு நொடியும் என்ன நிகழும் என்பதை மனிதனால் நிச்சயம் யுகிக்க முடியாது. பல ஆச்சரியங்களும், அதிசயங்களும், மகிழ்ச்சியும், வேதனைகளும் நிறைந்தது தான் மனித வாழ்க்கை. 

ஏக இறைவனால் வழங்கப்பட்ட வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினால், வாழ்க்கையில் நிச்சயம் மகிழ்ச்சியும் ஆனந்தமும், நிம்மதியும் நிறைந்து இருக்கும். மாறாக, வாழ்க்கையை அதன் போக்கில் செல்லவிட்டால், வேதனையும் துன்பங்களும் தாண்டவமாடும். இதனால் மனித வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறிவிடும். 

மனிதன் ஒளியின் பக்கம் பயணம் செய்தால், நிச்சயம் அவனுக்கு ஒரு சிறந்த நல்ல வழி கிடைக்கும் இந்த வழியின் மூலம், பயனுள்ள வாழ்க்கையை தனக்கும் சமுதாயத்திற்கும் மனிதன் உருவாக்கிக் கொள்ள முடியும். பயனுள்ள வாழ்க்கைக்காக மனிதன் செய்ய முதல் பணி, தன்னை ஒளியின் பக்கம் செல்லும் வகையில் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். 

ஒளியின் பக்கம் செல்ல...!


மனிதன் ஒளியின் பக்கம் செல்ல, முதலில் தன்னை நேசிக்க வேண்டும். தனது வாழ்க்கையின் நோக்கம் என்ன? அதன் உண்மையான அர்த்தம் என்ன? வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? போன்ற கேள்விகளை கேட்டு, தன்னை ஒளியின் வாழ்க்கைக்காக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். 

ஏக இறைவன் அருளிய திருமறையாம் திருக்குர்ஆனினை, நாம் பொருள் அறிந்து படித்தால், மனித வாழ்க்கையின் உண்மையான அற்புதம், பயன் ஆகியவற்றை நம்மால் அறிந்துகொள்ள முடியும். மனிதன் மீது ஏக இறைவனுக்கு இருக்கும் அக்கறை, அன்பு, இரக்கம், மனித நல்வாழ்விற்காக ஏக இறைவன் அறிவுறுத்தும் அற்புதமான பண்புகள், செயல்கள், மனிதன் ஆற்ற வேண்டிய பணிகள், கடமைகள், நல்ல செயல்கள் ஆகியவற்றை உணர்ந்து கொள்ள முடியும்.  

திருக்குர்ஆனை படிக்கும்போது, ஒளியின் பக்கம் பயணம் மேற்கொள்வதன் மூலமே, வாழ்க்கையின் உண்மையான பயனை மனிதன் அடைய முடியும் என்பதை புரிந்துகொள்ளலாம். ஏக இறைக் கொள்கையை வலியுறுத்தும் திருக்குர்ஆன், மனிதன் நல்ல பண்புள்ள மனிதனாக வாழ வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. அதை தொடர்ந்து வலியுறுத்துகிறது.

மனிதன் தன்னுடைய வாழ்க்கையில், எல்லோரிடமும் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டும் என சொல்லும் திருக்குர்ஆன், தாய், தந்தை மற்றும் உற்றார் உறவினர்கள் என அனைவரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. 

திருக்குர்ஆனில் மனிதனுக்கு ஏக இறைவன் திரும்ப, திரும்ப கூறும் அறிவுரைகளை சற்று உற்று நோக்கினால், மனிதனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும் அவன் பதில் சொல்ல வேண்டியது அவசியம் என்பது தெளிவாக அறிய முடிகிறது. 

திருக்குர்ஆனில் ஏக இறைவன்க இப்படி கூறுகிறான்: “அறிந்து கொள்ளுங்கள்: ‘நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை” (அல்-குர்ஆன் 57:20)

இதன்மூலம், உலக வாழ்வின் அலங்காரங்களில் நாம் மயங்கிவிடாமல், பொறுமையுடன் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என நமக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

நல்ல செயல்கள் மூலம்:


"எண்ணங்களை எப்படி இருக்குமோ, அதைக் கொண்டே செயல்கள் அமையும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக அழகாக கூறி, மனிதன் தன்னுடைய எண்ணங்கள் எப்போதும் நல்ல எண்ணங்களாக அமைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்கள். 

உங்களுடைய செயல்கள் மிகவும் சிறப்பான முறையில் அமைய வேண்டுமானால், உங்களுடைய எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக அமைய வேண்டியது மிகவும் அவசியம். எண்ணங்களும், செயல்களும், நல்லவிதமாக அமைந்துவிட்டால், அதை விட மிகப்பெரிய பரிசு மனிதனுக்கு என்னவாக இருக்க முடியும். 

உலகில் தற்போது மனிதன் அமைதி இழந்து தவிப்பதற்கு முக்கிய காரணம், தன்னுடைய எண்ணங்களையும், செயல்களையும் நல்லவிதமாக அமைத்துக் கொள்ளாததே ஆகும். ஒவ்வொரு நாளும் நல்ல எண்ணங்களை நினைத்து, நல்ல செயல்களை செய்து வந்தால், அதனால் உள்ளம் தூய்மை அடைந்து, வாழ்க்கை நம்மை ஒளியின் பக்கம் நிச்சயம் அழைத்துச் செல்லும். 

திருக்குர்ஆனை நாம் திரும்ப, திரும்ப படித்தால், அதில் பிறர் நலன் குறித்து நமக்கு ஏராளமான அறிவுரைகள் சொல்லப்பட்டு இருப்பதை தெரிந்துகொள்ளலாம். மனிதன் தனக்காக மட்டுமே வாழ வேண்டிய பிறவி இல்லை. அதற்காக மட்டுமே மனிதனை இறைவன் படைக்கவில்லை. தானும் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து, பிறரின் நல்வாழ்விற்காகவும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும். 

திருக்குர்ஆனின் 103வது அத்தியாயத்தை நாம் கொஞ்சம் கவனத்துடன் படித்து பார்த்தால், நஷ்டத்தில் இருப்பவர்கள் யார்? பயனுள்ள வாழ்க்கையை வாழ்பவர்கள் யார்? என்பதை அறிந்துகொள்ளலாம். அந்த அத்தியாத்தில் ஏக இறைவன் இப்படி கூறுகிறான்: "காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால், எவர்கள் இறை நம்பிக்கையை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும் மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும், பொறுமையைக் கடைப்பிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர!"

ஆக, மனிதன் இறை நம்பிக்கையையுடன் வாழ்வதுடன், நற்செயல்களையும் செய்து வர வேண்டும். பிறருக்கும் சத்தியத்தை எடுத்துரைத்து, பொறுமையாக செயல்பட வேண்டும். ஆனால், தற்போது அமைதி இழந்து வாழ்வதற்கு முக்கிய காரணம், இறை நம்பிக்கை மனிதனுக்கு இருந்தாலும், அவனிடம் நல்ல செயல்கள் இருப்பது இல்லை. பொறுமை என்ற அழகிய குணம் இருப்பது இல்லை. பிறர் நலனில் சிறிதும் அவன் அக்கறை செலுத்துவதில்லை. சத்தியத்தின்படி, தனது வாழ்க்கையை அவன் அமைத்துக் கொள்வதில்லை. பிறகு சத்தியத்தை எடுத்துரைப்பதில்லை. இதன் காரணமாக மனிதன் ஒவ்வொரு நொடியும் அமைதி இல்லாமல் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன. 

செயல்படுத்தி பாருங்கள்:


உங்கள் வாழ்க்கையில் இனி ஒவ்வொரு நாளும் நல்ல செயல்களை மேற்கொள்வது என உறுதியாக முடிவு எடுத்துக் கொண்டு அதற்கு ஏற்ப உங்கள் பணிகளை அமைத்துக் கொண்டு செயல்படுங்கள். அதன்மூலம் உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை கிடைக்கும். இதனை நீங்கள் அனுபவப்பூர்வமாக உணர் முடியும். 

நம்மை சுற்றி உள்ள அனைவர் மீதும் அன்பு செலுத்துதல், அவர்களிடம் அழகிய சொற்களை பேசுதல், அவர்களின் நலனில் எப்போதும் அக்கறையுடன் இருத்தல், அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் உதவிகளை செய்தல்,  நமது உற்றார் உறவினர்கள் மீதும் அன்பு செலுத்தி, அவர்களின் நலனை நாம் பேணி வந்தால், நம்மை அனைவரும் நேசிப்பார்கள். இதற்காக நமக்கு செல்வ செழிப்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. நல்ல எண்ணங்கள் மூலம் நல்ல செயல்களை அமைத்துக் கொண்டு செயல்பட்டாலே, நம்மை அனைவரும் நேசிப்பார்கள். அன்பு செலுத்துவார்கள். 

ஒளியின் பக்கம் செல்வதன் மூலம் மட்டுமே, நமது வாழ்க்கை சிறப்பான வாழ்க்கையாக அமையும் என்பதை நாம் உறுதி நம்பி, இனி வரும் நாட்களில், நமது செயல்களை சீர்படுத்திக் கொண்டு, நல்ல அமல்களை செய்து வந்தால், வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல, உலக மக்களும் நம்மை நேசிப்பார்கள். இதன்மூலம் நமது வாழ்க்கையில் அமைதி, நிம்மதி, ஆனந்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட ஒளிகள் கிடைக்கும். என்ன ஒளியின் பக்கம் பயணிக்க உங்களுக்கு விருப்பம் தானே? அப்படியெனில் இன்றுமுதல் உங்கள் வாழ்க்கையில் ஒளி கிடைத்துக் கொண்டு இருக்கும். அந்த ஒளியின் மூலம் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக வாழ்க்கையாக நிச்சயம் மாறும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

தேனீ....!

A single bee can produce 1 tablespoon of honey in its lifetime. 

683 bees fly roughly 32,550 miles to gather 5.93 lbs of nectar from about 1,185,000 flowers in order to make one 9.5 oz. jar of honey.



மனிதநேயம்....!

 மனிதநேயம் என்பது.....!