Sunday, August 2, 2015

பாபநாசம்...!

கொஞ்சம் லேட்டுதான்....!


பாபநாசம் படத்தை கொஞ்சம் லேட்டாகதான் பார்க்க முடிந்தது.

குப்பையாக திரைப்படங்களை எடுக்கும் இந்த காலத்தில், ஒரு சிறிய கதை கருவை வைத்துக் கொண்டு என்னமாய் படத்தை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர் ஜீது ஜோசப்.

படத்தில் மது அருந்தும் காட்சிகள் இல்லை.

புகை பிடிக்கும் காட்சிகள் இல்லை.

ஆபாச காட்சிகள் நடனங்கள் இல்லை.

இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை.

மச்சி ஜொச்சி போன்ற வசனங்கள் இல்லை.

இருந்தும் படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

கிரைம் படம் என்றாலும் இயற்கை எழில்கொஞ்சம் இடங்களில் அழகாக காட்சிகளை படமாக்கி இருக்கிறார் இயக்குநர்.

குடும்பத்துடன் சேர்த்து கண்டிப்பாக இந்த படத்தை தைரியமாக பார்க்கலாம்.

அப்படி எடுக்கப்பட்டு இருக்கிறது பாபநாசம்.

உலக நாயகன் கமல் ஹாசன், என்னமாய் நடித்து ஜமாய்த்து இருக்கிறார்.

நடிப்பு என்பது தெரியாமல், அந்த கதாபாத்திரமாகவே மாறி கலக்கி இருக்கிறார் கமல்.


கௌதமி, ஆஷா சரத், எம்.எஸ்.பாஸ்கர், நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் உட்பட படத்தில் நடித்த அத்தனை பேரும் அற்புதமாக வாழ்ந்துள்ளனர்.

ரசிகர்களின் கவனத்தை அந்த பக்கம் இந்த பக்கம் திருப்ப விடாமல், கதையிலேயே ஒன்றி இருக்கும்படி இயக்குநர் செய்து இருப்பதே படத்தின் வெற்றிக்கு காரணம் என கூறலாம்.

அழகிய குடும்பம். அதை நேசிக்கும் அதன் தலைவன், குடும்பத்தில் ஏற்படும் ஒரு பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண முயற்சி செய்கிறான். குடும்பத்தின் மகிழ்ச்சியை சிதைக்க விடாமல் இருக்க என்ன வழிகளை பின்பற்றுகிறான் என்பதை இதைவிட அழகாக சுவையாக யாராலும் சொல்ல முடியாது.

ஆபாச கலப்படம் இல்லாமல் பாபநாசம் திரைப்படத்தை எடுத்த இயக்குநர் ஜீது ஜோசப்பை நிச்சயமாக பாராட்டிதான் ஆக வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments:

Post a Comment