Sunday, April 6, 2025

Speech....!

Standing on Tamil soil, the Prime Minister must give a clear guarantee : "Tamil Nadu and other states that have successfully controlled population growth will not be penalised in the impending delimitation exercise. Their share of parliamentary seats in percentage terms will remain untouched."

Hon'ble PM @NarendraModi should make this promise publicly, allay the fears in the minds of the people of Tamil Nadu, and follow it up with a constitutional amendment in Parliament. This is the only way to ensure a FairDelimitation. I sincerely hope he will act.



பேட்டி....!

 தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் கே.நவாஸ் கனி பேட்டி...!



Saturday, April 5, 2025

மஸ்ஜித்துகளில் மணிச்சுடர்....!

 "தமிழக மஸ்ஜித்துகளில் மணிச்சுடர்"

- ஒரு சிறப்பு ரிப்போர்ட் -

மணிச்சுடர் நாளிதழ் கடந்த 40 ஆண்டுகளாக தனது பயணத்தைச் சிறப்பாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில், தமிழகம் முழுவதும் மணிச்சுடரை கொண்டு சேர்க்கும் பணி நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள மஸ்ஜித்துகளில் மணிச்சுடர் தவழ வேண்டும் என்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் விருப்பம் மற்றும் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து மஸ்ஜித்துகளுக்கு மணிச்சுடர் அனுப்பப்பட்டு வருகிறது. 

மஸ்ஜித்துக்களுக்கு அனுப்பப்படும் மணிச்சுடர் நாளிதழ் மூலம், பள்ளிவாசல்களுக்கு வரும் தொழுகையாளிகள், அதைப் படித்து, சமுதாயச் செய்திகளை மட்டுமல்லாமல், உலக  முஸ்லிம்களின் நிலைமை, இந்திய முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள், திருக்குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் ஒளியை நன்கு அறிந்துகொள்ள முடிகிறது. மற்ற பத்திரிகைகளைப் போல இல்லாமல், மணிச்சுடர் சமுதாயத்திற்கு தேவைப்படும் செய்திகளை மட்டுமே சிறப்பாக வழங்கி வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே, மணிச்சுடர் படிப்பதன் மூலம், முஸ்லிம்களுக்கு அறிவொளி நிச்சயம் பிரகாசிக்கும் என உறுதியாக கூறலாம். 

இப்படி மஸ்ஜித்துகளுக்கு அனுப்பப்படும் மணிச்சுடர் நாளிதழ் எப்படி பயன்படுத்தப்படுகிறது. மஸ்ஜித்துகளுக்கு வரும் முஸ்லிம்கள் அதைப் படித்து பயன் அடைகிறார்களா என்பதை அறிய ஆவல் கொண்டோம். அந்த வகையில், வேலூர் மாநகரில் உள்ள மஸ்ஜித்துகளுக்கு அனுப்பப்படும் மணிச்சுடர் நாளிதழின் பயன்பாடு குறித்து நமது சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், வாசகர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார். அதுகுறித்து ஒரு சிறப்பு ரிப்போர்ட் இதே உங்கள் பார்வைக்கு:

வேலூர் மஸ்ஜித்துகளின் சங்கம்:

நாட்டின் விடுதலைக்கு முதல்முதலாக விதை விதைத்த, வேலூர் மாநகரில், தற்போது 100க்கும் மேற்பட்ட மஸ்ஜித்துகள் உள்ளன. இந்த மஸ்ஜித்துகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து 'வேலூர் மஸ்ஜித்துகளின் சங்கம்' (Vellore Masjid's Association) என்ற பெயரில் ஒரு அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் மூலம் பல நல்ல பணிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வப்போது எழும் பிரச்சினைகளுக்கு நல்ல ஆலோசனைகளுக்குப் பிறகு, தீர்வும் காணப்பட்டு வருகிறது. இதன்மூலம், மஹல்லா ஜமாஅத் மஸ்ஜித்துகள் எந்தவித பிரச்சினைக்கும் ஆளாகாமல், சிறப்பான முறையில் இயங்க வாய்ப்பு உருவாகியுள்ளது. அப்படியும் பிரச்சினைகள் எழுந்தால், 'வேலூர் மஸ்ஜித்துகளின் சங்கம்'  அதற்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுத்து விடுகிறது. 

இப்படி சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் 'வேலூர் மஸ்ஜித்துகளின் சங்கத்தில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து மஸ்ஜித்துக்களுக்கும் மணிச்சுடர் நாளிதழ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுப்பபட்டு வருகிறது. இதற்கு மஸ்ஜித் முத்தவல்லிகள், நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்து ஆதரவு வழங்கி வருகின்றனர். சமுதாயத்தின் நாளிதழ் என்பதால், எந்தவித மன உளைச்சலுக்கும் ஆளாகாமல், மணிச்சுடரை அவர்கள் தைரியமாக படித்து, நாட்டு நடப்புகளை அறிந்துகொள்கிறார்கள். 

தொழுகையாளிகளை கவர்ந்த மணிச்சுடர்:

மஸ்ஜித்துக்களுக்கு வரும் தொழுகையாளிகள், மணிச்சுடர் நாளிதழை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை நாம் நேரில் சென்று பார்த்தபோது, உண்மையிலேயே மகிழ்ச்சி ஏற்பட்டது. வேலூர் இன்பென்டரி சாலையில் உள்ள 'மஸ்ஜிதே முஹம்மதியா'வின் முத்தவல்லி முஹம்மது இப்ராஹிம் மற்றும் அந்த மஸ்ஜித்தின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து மணிச்சுடர் நாளிதோறும் வருகிறதா என்று கேட்டபோது, அவர்கள் மகிழ்ச்சியுடன் "நாள்தோறும் வரும் மணிச்சுடரை நாங்கள் தினமும் படித்து பல்வேறு தகவல்களை அறிந்துகொள்கிறோம்" என்றார்கள். அத்துடன் "ஐந்து வேளை தொழுகைக்கு வரும் தொழுகையாளிகள் கூட, மணிச்சுடரை நாளிதழை, ஆர்வத்துடன் படித்து, பயன் அடைகிறார்கள்" என்றும் தெரிவித்தனர். 

"குறிப்பாக, முஸ்லிம் உலகம், இந்திய முஸ்லிம்களின் நிலைமை, பா.ஜ.க. ஆட்சியில் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சினைகள், வக்பு சட்ட மசோதா என பல்வேறு பிரச்சினைகள் குறித்து மணிச்சுடர்  மிகச் சிறந்த முறையில் செய்திகளையும், தகவல்களையும், சிறப்பு கட்டுரைகளையும் வழங்கி வருகிறது. அதனால், குறைந்த அளவுக்கு படித்த எங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கிறது. உண்மையிலேயே மணிச்சுடரின் பணியை நாங்கள் பாராட்டியே ஆக வேண்டும்" என்று  மஸ்ஜிதே முஹம்மதியா'வின் முத்தவல்லி முஹம்மது இப்ராஹிம் தெரிவித்தார். 

நடுத்தர வயது முஸ்லிம்களை மட்டுமல்லால், இளைஞர்கள் மத்தியிலும் மணிச்சுடர் தற்போது கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மஸ்ஜிதே முஹம்மதியாவிற்கு வரும் இளைஞர்கள் கூட மணிச்சுடர் நாளிதழை ஆர்வத்துடன் படிப்பதை நாம் நேரில் காண முடிந்தது. மஸ்ஜித்துக்கள் கற்றல் மையங்களாக மாற வேண்டும் என்பது சமுதாயத்தின் நோக்கமாக இருந்து வருகிறது. அதற்கு ஒரு நல்ல வழியை மணிச்சுடர் நாளிதழ் உருவாக்கி தந்துக் கொண்டு இருக்கிறது. இதை மஸ்ஜிதே முஹம்மதியா உள்ளிட்ட வேலூர் மஸ்ஜித்துக்களின் சங்கத்தில் இணைந்துள்ள மஸ்ஜித்துகளில் நேரில் பார்க்கும்போது, மணிச்சுடர் நல்ல வாசகர்களை உருவாக்கி இருக்கிறது என்பதை அறிந்து மனம் மகிழ்ச்சி அடைந்தது. 

தமிழக மஸ்ஜித்துக்களில் மணிச்சுடர்:

வேலூர் மஸ்ஜித்துக்களின் சங்கத்தில் இணைந்துள்ள மஸ்ஜித்துகளில் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து மஹல்லா ஜமாஅத் மஸ்ஜித்துகளிலும் மணிச்சுடர் நாளிதழ் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். மாநிலத்தின் பல மஸ்ஜித்துகளில் மணிச்சுடரை கொண்டு சேர்க்கும் வகையில், சமுதாய நலனில் அக்கறை கொண்ட நல்ல உள்ளங்கள், ஓராண்டு சந்தா ஆகியவற்றை செலுத்தி ஊக்கம் அளித்து வருகிறார்கள். இந்த பணி மேலும் விரிவு அடைய வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து மஸ்ஜித்துகளிலும் மணிச்சுடர் வாசிக்கப்பட வேண்டும். 

எந்தவித சமரசத்திற்கும் ஆளாகாமல், சமுதாய நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, நடத்தப்படும் மணிச்சுடர் நாளிதழ் ஒரு அறிவுப் பெட்டகம் என்று கூற வேண்டும். இந்த அறிவுப் பெட்டகத்தை அனைவரும் திறந்துபார்க்க வேண்டும். படித்து பயன்பெற வேண்டும். அதன்மூலம், முஸ்லிம் சமுதாயம் தற்போது எத்தகையை நிலையில் இருந்து வருகிறது? இஸ்லாம் எப்படி உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது? முஸ்லிம்களின் கல்வி நிலைமை என்ன? முஸ்லிம் இளைஞர்களின் சாதனைகள் என்ன? ஏழ்மையிலும் படித்து உயர்ந்த இளைஞர்கள் யார்? இஸ்லாமிய பெண்மணிகளின் சாதனைகள் என்ன? உள்ளிட்ட பல அரிய தகவல்களை முஸ்லிம்கள் அறிந்துகொள்ள முடியும். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மஸ்ஜித்துக்களில் மணிச்சுடர் நாளிதழை கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயம் என்பதை சமுதாயம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


நல்ல செயல்...!

Do you remember that little girl who was running with her books where her house was bulldozed? 

Must watch and spread

Akhilesh Yadav met that kid today in Samajwadi office and assured that he will fund her education for rest of the life.

This is the kind of leader you want to lead the state and nation, not someone who utters poison all the on religious divide to polarize the society.



உணவுக்கு மரியாதை....!

 விருந்தில் உணவுக்கு மரியாதை....!

பெண்கள் வீட்டின் தூண்கள். அவர்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கிறார்கள். அவர்கள் குடும்ப விவகாரங்களை நடத்துகிறார்கள். அத்துடன் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஒரு பெண் உணவுக்கு மரியாதை செலுத்துவதை தனது நடத்தையின் ஒரு பகுதியாக மாற்றினால், அது முழு குடும்பத்தையும் பிரதிபலலிக்கும். விருந்துகளில் பெண்களின் நடத்தை பெரும்பாலும் குழந்தைகளுக்கும் பிற பெண்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைகிறது.

உணவை வீணாக்க வேண்டாம்:

ஒரு விருந்தின் போது, ​​பெண்கள் உணவை வீணாக்க வேண்டாம் என்று விருந்தினர்களுக்கு மென்மையாகவும் அன்பாகவும் நினைவூட்ட வேண்டும்.  உணவு என்பது அல்லாஹ் வழங்கிய மிகப்பெரிய அருட்கொடைகளில் ஒன்றாகும். மேலும் அதை மதிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். நமது அன்றாட வாழ்வில் ஒழுக்கம் மற்றும் சமூக விழுமியங்களுடன் தொடர்புடைய விஷயங்களை நாம் பெரும்பாலும் கருத்தில் கொள்வதில்லை. ஆனால் இந்த சிறிய விஷயங்கள் நம் ஆளுமையிலும் சமூகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

குறிப்பாக விருந்துகளில் உணவை வீணாக்குவது ஒரு பொதுவான மற்றும் வருந்தத்தக்க பழக்கமாகிவிட்டது. ஒரு தந்தை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க இரவும் பகலும் உழைப்பதை கற்பனை செய்து பாருங்கள். தனது தேவைகளைக் குறைத்து, ஆசைகளைத் தியாகம் செய்வதன் மூலம், தனது மகளின் சிறப்பு நாளில் ஒவ்வொரு விருந்தினரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற கனவை மட்டுமே நிறைவேற்ற முயற்சிக்கிறார். அவர் சிறந்த உணவு, சிறந்த ஏற்பாடுகள் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை வழங்குவதில் மிகவும் கவனமாக இருக்கிறார். 

ஆனால் திருமணத்தின் முடிவில், உணவின் பெரும்பகுதி சாக்கடையில் வீசப்பட்டிருப்பதைக் காணும்போது, ​​அவரது கண்களில் கண்ணீர் வருகிறது. இந்த மனப்பான்மை ஒருவரின் கடின உழைப்புக்கு அவமரியாதை என்று நாம் எப்போதாவது நினைத்திருக்கிறோமா? நமது அன்றாட வாழ்வில் நமது சம்பாத்தியத்தில் எவ்வளவு கவனமாக இருக்கிறோம் என்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? பானி பூரி சாப்பிடும்போது, ​​தட்டில் இருந்து கடைசி சொட்டையும் குடிக்கிறார்கள். ஐஸ்கிரீம் சாப்பிடும்போது, ​​அவர்கள் மூடியை நக்கி, வேர்க்கடலை ஓடுகளில் கடைசி விதையைத் தேடுகிறார்கள்.

 ஆனால் அவர்கள் ஒரு திருமணத்திற்கோ அல்லது விருந்துக்கோ செல்லும்போது, ​​தங்கள் தட்டுகளை நிரப்பி, உணவில் பாதிக்கும் மேற்பட்டவற்றை அங்கேயே விட்டுவிடுகிறார்கள். அது ஏன்? இது நமது ஒழுக்க தரங்களின் பலவீனம் இல்லையா?

பெண்கள் கவனம் செலுத்த வேண்டும்:

ஒருவரின் நடத்தை, விருந்தோம்பியின் கடின உழைப்புக்கு அவமரியாதை மட்டுமல்ல. நமது சமூக அலட்சியத்தின் வெளிப்பாடாகும். குறிப்பாக பெண்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் அவர்கள் தங்கள் குடும்பங்களையும் குழந்தைகளையும் வளர்க்கிறார்கள், மேலும் அவர்களின் நடத்தை புதிய தலைமுறையின் பழக்கவழக்கங்களை வடிவமைக்கிறது.

பெண்கள் வீட்டின் முக்கிய தூண்கள் மற்றும் குழந்தைகளை வளர்க்கிறார்கள். அவர் குடும்ப விவகாரங்களை நடத்துகிறார் மற்றும் விருந்தினர்களை வரவேற்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். ஒரு பெண் உணவுக்கு மரியாதை செலுத்துவதை தனது நடத்தையின் ஒரு பகுதியாக மாற்றினால், அது முழு குடும்பத்தையும் பாதிக்கிறது. விருந்துகளில் பெண்களின் நடத்தை பெரும்பாலும் குழந்தைகளுக்கும் பிற பெண்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைகிறது. அவர்களே தங்கள் தட்டுகளில் அதிக உணவைக் குவித்து வைக்காமல், மற்றவர்களை மிதமாக சாப்பிட ஊக்குவிப்பதன் மூலம், உணவு வீணாவதைக் குறைப்பதில் அது மிகவும் உதவியாக இருக்கும்.

குழந்தைகளுக்கு உணவுப் பழக்கம்:

விருந்துகளில் பெரும்பாலும் உணவை வீணாக்குவது குழந்தைகள்தான். குழந்தைகள் பெரும்பாலும் தங்களுக்குத் தேவையானதை விட அதிகமான உணவைத் தட்டுகளில் வைத்து, பின்னர் அதைச் சாப்பிடுவதற்குப் பதிலாகத் தூக்கி எறிவதைக் காணலாம். இந்த நேரத்தில் குழந்தைகளின் நடத்தை மாறக்கூடும். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவை வீணாக்குவது தார்மீக ரீதியாக தவறு மட்டுமல்ல, ஒருவரின் கடின உழைப்பை அவமதிப்பதும் கூட என்று ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். அப்படி கற்பிக்கும்போது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் நடத்தை மனிதாபிமானமற்றது மட்டுமல்ல, நமது ஒழுக்கச் சீரழிவையும் பிரதிபலிக்கிறது என்பதை விளக்க வேண்டும்.

ஒரு விருந்தில் உணவுக்கு மரியாதை அளிப்பதை உறுதி செய்வதில் பெண்களின் பங்கு முக்கியமானது. அவர்கள் தங்கள் நடத்தையால் மற்றவர்களை பாதிக்க முடியும் என்பது மட்டுமல்லாமல், குடும்பத்திலும் சமூகத்திலும் உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் சக்தியையும் கொண்டுள்ளனர். எனவே, பெண்கள் தங்கள் சொந்த தட்டில் அதிக உணவை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அவர்களின் செயல் மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மற்றும் உணவு வீணாவதைக் குறைக்கும்.

விருந்தினர்களை ஊக்குவிக்க வேண்டும்:

ஒரு விருந்தின் போது, ​​ உணவை வீணாக்க வேண்டாம் என்று விருந்தினர்களுக்கு மென்மையாகவும் அன்பாகவும் பெண்கள் நினைவூட்ட வேண்டும். முதலில் கொஞ்சம் கொஞ்சமாக உணவை எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள். தேவைப்பட்டால் அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். பெண்கள் விருந்துக்கு இரவு உணவைத் தயாரிக்கும்போது, ​​விருந்தினர்களின் எண்ணிக்கை மற்றும் விருப்பங்களைக் கருத்தில் கொள்ளுங்கள். வீணாவதைக் குறைக்க கூடுதல் உணவு தயாரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

விருந்தினர்கள் ஒரே நேரத்தில் குறைவான உணவைத் தட்டில் வைக்கும் வகையில், உணவு அமைப்புகளிலும் ஏற்பாடுகளிலும் பெண்கள் சிறிய தட்டுகளை வழங்க வேண்டும். பெண்கள் விருந்துக்கு முன்பாகவோ அல்லது அதற்குப் பின்னரோ உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் கழிவுப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும். இது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு பயனுள்ள வழியாக இருக்கலாம். பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் உணவை மதிப்பது ஒரு தார்மீக பொறுப்பு மட்டுமல்ல, மத போதனைகளின் ஒரு பகுதியும் என்பதை கற்பிக்க வேண்டும்.

கடைசியாக, உலகில் கோடிக்கணக்கான மக்கள் இன்னும் ஒருவேளை உணவு கிடைக்காமல் பசியோடும், பட்டினியோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காசாவில் பாலஸ்தீன மக்கள், குறிப்பாக குழந்தைகள், பெண்கள், உணவுக்காக தவிக்கும் நிலையை பார்க்கும்போது  இயல்பாகவே கண்ணீர்வந்துவிடுகிறது. எனவே, விருந்தில் மட்டுமல்ல, எப்போதும் உணவை நாம் வீணடிக்கக் கூடாது. ஏக இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், பயத்தில் உணவை நாம் உண்டால், நிச்சயம் உணவை வீணடிக்கும் பழக்கம் நம்மிடம் இருக்காது. பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும், உணவு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். கவனத்துடன் உணவை உண்டு, மற்றவர்களுக்கும் அதை கொடுக்க முன்வர வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Thursday, April 3, 2025

உரை....!

 வக்பு மசோதா...!

மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. டாக்டர் ஏ.எம்.சிங்வி உரை.



எதிர்ப்பு....!

 வக்பு மசோதா....!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரை...!



உரை...!

 வக்பு மசோதா - 

காங்கிரஸ் எம்.பி. இம்ரான் அதிரடி உரை.



தியாகம்....!

 இந்திய முஸ்லிம்களின் தியாகம்...!



குற்றச்சாட்டு....!

 சீனா ஆக்கிரமிப்பு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

It's a known fact that China is occupying 4,000 Sq km of our territory.

I was shocked sometime back to see our Foreign Secretary cutting a cake with the Chinese Ambassador. The question is, what exactly is happening to this territory?

चीन ने हमारी 4,000 Sq km जमीन ले ली है और हमारे विदेश सचिव उनके राजदूत के साथ केक काट रहे हैं। 20 जवान शहीद हुए और हम उनके साथ केक काट रहे हैं।

हम Normalcy के खिलाफ नहीं हैं, लेकिन उससे पहले हमारी जमीन हमें वापस मिलनी चाहिए।

We should get our land back. It has also come to my notice that the PM and the President have written to the Chinese. It is the Chinese Ambassador who is informing us about this, not our own people.

Foreign policy is about managing external relations; you have given China 4,000 Sq km of land. On the other hand, our ally has suddenly decided to impose a 26% tariff, which will devastate our economy. Our auto industry, pharmaceutical industry, and agriculture are all in line.

Someone once asked India Gandhi ji in the matter of foreign policy that does she lean left or right? She answered that she is an Indian and she stands straight.

The BJP and RSS have a different philosophy; when asked to lean right or left, they say they bow their heads to every foreigner that comes. This is part of their culture and history.

However, we would like an answer from the Government of India: what are you doing about our land, and what will you do about the tariff our ally has imposed on us?

: LoP Shri @RahulGandhi in Lok Sabha



அமெரிக்கா வரி...!

 அமெரிக்கா 26% வரி....!

 காங்கிரஸ் விமர்சனம்.....!!



Wednesday, April 2, 2025

Speech.....!

Amarinder singh Raja speech.

Hon HMOIndia , AmitShah Ji accused the opposition including the INCIndia of misleading the Muslim brothers about Waqf Bill and creating fear among them. 

It is a classic case of pot calling the kettle black. Who has created fear among the Muslims and other minorities in the country is too well known to be repeated here. 

Repudiated all such misleading information on Waqf Bill with facts. 

Congress party stands for everyone including the minorities and would do everything to protect their rights. 

India was, is and will always remain SECULAR and Congress will ENSURE that. 

Waqf Amendment Bill



உரை....!

 Waqf bill - Asaduddin Owaisi speech.



Speech....!

 Waqf Amendment Bill

Reject Waqf Bill 

Iqra Hasan M.P. speech.



உரை....!

 ET Mohammed Basheer Slams Waqf Amendment Bill

IUML MP ET Mohammed Basheer criticized the Waqf Amendment Bill, calling it regressive and an attempt to undermine Waqf institutions.

He accused the BJP government of weakening democratic bodies and centralizing power, warning it could erode Waqf board autonomy.

“This is an attack on identity and democracy,” Basheer said, urging opposition resistance against the bill.



Speech....!

 Kalyan Banerjee speech.

Today, I vehemently opposed the Waqf (Amendment) Bill, 2025, in the Lok Sabha, stating that it poses a serious threat to the fundamental principles of the Constitution. I strongly condemned the proposed removal of Section 40 from the Waqf Act of 1995, emphasizing that this change would strip the Waqf Board of its authority and render it powerless.

"If Section 40 is abolished, the Waqf Board will be reduced to a mere puppet, devoid of any real power," I asserted. I also accused the central government of attempting to seize control of Waqf properties through these amendments—an action that is both unjustified and detrimental to the rights of the community.

I firmly believe that this bill undermines the very institution responsible for protecting Waqf properties, ultimately jeopardizing the welfare of those who rely on them.



ஆ.ராசா உரை...!

 “ஒட்டுமொத்த வஃக்ப் சொத்துகளையும் அபகரிக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது”

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மக்களவையில் கொந்தளித்த திமுக எம்.பி. ஆ.ராசா



எதிர்ப்பு....!

 வக்பு மசோதா - காங்கிரஸ் எதிர்ப்பு.



வக்பு மசோதா....!

 The allegations made by Minister Anurag Thakur against Congress President Mallikarjun Kharge ji, a top leader of this country, are unacceptable.

Kharge ji rose from the grassroots level, faced immense hardship, and gained a lot of experience in public life. The misleading data about him is unacceptable and was deliberately used to malign his reputation. They consistently attack Kharge ji for narrow political gains.

 They  (BJP & RSS) want to divide our own Bharat Mata in the name of religion. Today, they are targeting Muslims; tomorrow, it will be some other minority.

The government's target is to establish the Sangh Parivar (RSS) agenda to destroy every minority community. They are trying to divide the country for political gains.

: General Secretary (Organisation), AICC kcvenugopalmp ji in Lok Sabha



முஸ்லிம்களின் தியாகம்...!

 'History of Muslims in India' 

- Gaurav Gogoi



Tuesday, April 1, 2025

கண்டன உரை....!

 Maulana Khalid Saifullah Rahmani, President AIMPLB Official address at Maha Dharna against Waqf Amendment Bill by AIMPLB at Vijayawada, Andhra Pradesh.



Sunday, March 30, 2025

பேச்சு....!

 கனிமொழி எம்.பி. பேச்சு...!

"உழைப்பவன் கூலியை வியர்வை உலர்வதற்கு முன்பு கொடுத்துவிடு” எனச் சொல்கிறது ஒரு நபி மொழி.

ஆனால், எளியவன் உழைத்தாலும் கூலியைக் கொடுக்காமல் வயிற்றில் அடி என்கிறது ஒன்றிய அரசின் புதுமொழி. 100 நாள் வேலைத் திட்டத்திற்கான சம்பளப் பாக்கி 4,034 கோடி ரூபாயை நிறுத்தி வைத்து கொடுங்கோல் ஆட்சியாகவே மாறிவிட்டது ஒன்றிய அரசு. வறுமையின் காரணமாக 100 நாள் வேலையில் இணைந்து உழைப்பவர்கள் அனைவரையும் ஊழல்வாதிகள் போலச் சித்தரித்து ஊதியப் பணத்தைக் கொடுக்க மாட்டோம் என்பது கொடுங்கோல் ஆட்சியில் கூட நடக்காதது. ஏழைகள் உழைப்பிற்குக் கூலி கொடுக்க மனமில்லாத ஒன்றிய பாஜக அரசு, உழைக்கும் மக்களையே ஊழல்வாதிகள் என முத்திரை  குத்த தமிழ்நாடு பாஜகவினர் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். 

100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கச் சொல்லி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதி வலியுறுத்தினார்; நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி  உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள். பைசா கூட ஒதுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுக போராட்டம் நடத்தியது. மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறது கமலாலயம்!

தமிழ்நாட்டின் ஏழைகள் ஊதியமின்றி தெருவில் நிற்கும் போது ஒன்றிய அரசிடம் போராடி பணத்தைப் பெற்றுத் தருவதுதானே தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களின் கடமையாக இருக்க வேண்டும்?

கல்வி நிதி, பேரிடர் நிதியை எல்லாம் தராத ஒன்றிய அரசு, இப்போது 100 நாள் வேலை பணியாளர்களின் ஊதியத்தை நிறுத்தி அவர்களைப் பட்டினி போடுகிறது. உழைப்பை உறிஞ்சிக்கொண்டு ஊதியத்தைக் கேட்பவர்களையே கொச்சைப்படுத்தும் பாஜகவினருக்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்.



Saturday, March 29, 2025

ஈதுல் பித்ர் தொழுகை...!

 Eid Al Fitr 1446/2025 Prayers in Masjid Al Haram led by President Sheikh Sudais


பெருநாள்....!

 ஈகைத் திருநாள் ஆரம்பம்...

இறைவனை வணங்கி, ஏழைகளுக்கு கொடுத்து அனைவர் மீதும் அன்பு செலுத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பெருநாள், ஈகைத் திருநாள்.



ரமழானின் கடைசி நாள்..!

 Mataaf this morning! (29.03.2025)

Probably last day of Ramadan 2025.



எச்சரிக்கை....!

 மியான்மர் நிலநடுக்கம்...



மக்கா....!

மக்கா மஸ்ஜிதுல் ஹராம் ஷெரீப்...!



Friday, March 28, 2025

இஸ்லாம்....!

 Islam is a perfect religion.



கண்டன பேரணி....!

 Former Irish MEP Clare Daly is marching today in Sana'a on Quds Day.



கண்டன உரை...!

 Tejaswi Yadav, Leader of opposition, Bihar Assembly address at Maha Dharna against Waqf Amendment Bill by AIMPLB at Patna, Bihar.

IndiaAgainstWaqfBill 

SayNoToWaqfBill RejectWaqfBill



உரை....!

 வக்பு சட்ட மசோதா எதிர்ப்பு.



Beauty...!

 அழகோ.....அழகு....!



கடைசி வெள்ளி...!

 Huge crowds of tawafeen flock to Masjid Al Haram on the last Friday of Ramadan 2025.



அமைதியான முறையில் எதிர்ப்பு...!

 A silent black-band Protest to oppose Waqf Amendment bill during Jumu'atul-Wida. 

 All India Muslim Personal Law Board had urged Muslims across the country to wear black armbands on Jumu'atul-Wida (Alvid Jumma), the last Friday of Ramzan, to protest against the Waqf Amendment Bill 2024.



Thursday, March 27, 2025

லைலத்துல் கதர்...!

 "உலக முழுவதும் லைலத்துல் கதர்"

புனித ரமளான் மாதத்தின் 27வது இரவு 'லைலத்துல் கதர்' இரவாக இருந்து வருகிறது. ஏக இறைவன், முதன் முதலாக, திருக்குர்ஆன் வசனங்களை இறக்கியது இந்த புனிதமான இரவில் தான். இந்த இரவு கண்ணியமான இரவு மட்டுமல்லாமல், ஆயிரம் மாதங்களை விட மேன்மையான இரவு என்ற சிறப்பையும் கொண்டது. அதன் காரணமாக ரமளான் பிறை 21, 23, 25, 27 மற்றும் 29 ஆகிய இரவுகளில் லைலத்துல் கதர் வரும் என்று உறுதியாக நம்பிக்கை கொள்ளும் முஸ்லிம்கள், இந்த 5 இரவுகளில் அதிகப்படியான இறை வணக்கங்களில் ஈடுபட்டு, பாவ மன்னிப்பு கோரி, உலக அமைதிக்காக ஏக இறைவனிடம் மனம் உருகி, கண்ணீர் விட்டு அழுது துஆ கேட்கிறார்கள். பிரார்த்தனை செய்கிறார்கள்.

உலகம் முழுவதும் லைலத்துல் கதர்:

இந்தாண்டு புனித ரமளானில் வழக்கம் போல, லைலத்துல் கதர் இரவு, உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு இறை வணக்கம், பிற மதங்களில் நாம் காண முடியாது. இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டுமே இத்தகைய இபாதத்தை காண முடியும். வழக்கம் போல, பிறை கணக்கின் அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளிலும் லைலத்துல் கதர் இரவின் தேதி மாறுபட்டு இருந்தது. வளைகுடா நாடுகளில் மார்ச் 26ஆம் தேதியும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மார்ச் 27ஆம் தேதியும் லைலத்துல் கதர் கடைப்பிடிக்கப்பட்டது.

புனிதமான இந்த இரவில் மகிழ்ச்சி பொங்க மஸ்ஜித்துகளில் குவிந்த முஸ்லிம்கள், தராவீஹ் என்ற சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டு, ஏக  இறைவனை வணங்கி, உலக அமைதிக்காக துஆ கேட்டனர். அத்துடன், தங்களுடைய பிரச்சினைகள் தீர வேண்டும் என்றும் இறைவனிடம் மன்றாடி பிரார்த்தனை செய்தனர்.  துஆக்கள் தோற்பதில்லை என்ற நம்பிக்கை முஸ்லிம்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருவதால் இந்த புனித இரவில் அவர்கள் கேட்கும் துஆக்களும் தோற்பதில்லை.

இத்தகைய லைலத்துல் கதர் இரவு இந்தாண்டும், உலக முஸ்லிம்களால் மிகவும் புனிதமான முறையில் கடைப்பிடிக்கப்பட்டது.

மக்கா, மதீனாவில் குவிந்த இறை நம்பிக்கையாளர்கள்:

ரமழான் மாதத்தில் புனித உம்ரா பயணம் செல்வது ஹஜ் செய்வது போலாகும் என்ற நம்பிக்கை முஸ்லிம்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன் காரணமாக, உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவின் மக்காவிற்கு சென்று புனித உம்ராவை நிறைவேற்றி வருகிறார்கள். அதன்படி இந்தாண்டும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் புனித உம்ரா கடமையை நிறைவேற்றினார்கள். குறிப்பாக, மக்காவில் உள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற  தராவீஹ் தொழுகையில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

இதே போல், மதீனாவில் உள்ள மஸ்ஜிதுல் நபவி பள்ளிவாசலில் இறை நம்பிக்கையாளரின் எண்ணிக்கை இந்தாண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகமிக அதிகமாக இருந்தது.

குறிப்பாக, லைலத்துல் கதர் இரவின்போது, மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜிதுல் நபவியில் தொழுகைக்காக திரண்ட இறை நம்பிக்கையாளர் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருந்தது. மஸ்ஜிதுல் ஹராமில் 27வது இரவான லைலத்துல் கதர் இரவில் இறை வழிபாட்டிற்காக சுமார் 42  லட்சம் முஸ்லிம்கள் வந்ததாக சவுதி அரேபியாவின் அரசு புள்ளிவிவரங்களை தந்துள்ளது. இதே நிலைமை மஸ்ஜிதுல் நபவி பள்ளிவாசலிலும் இருந்தது.

ஒரேநேரத்தில் லட்சக்கணக்கான இறை நம்பிக்கையாளர்கள் திரண்டதால், மிகப்பெரிய அளவில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால்,மக்கா, மதீனா வீதிகள் தொழுகை நடக்கும் மையங்களாக மாறின. இந்த அற்புதமான, அழகிய காட்சிகளை நேரடி நிகழ்ச்சி மூலம் ஒளிபரப்பில் காணும்போது உள்ளம் பரவசம் அடைந்தது. ஓர் இறைக் கொள்கை, நிறம், மொழி, உள்ளிட்ட அனைத்தையும் ஒதுக்கிவிட்டு எந்தளவுக்கு மனிதர்களை இணைக்கிறது காண முடிகிறது. எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே.

பாலஸ்தீன மக்களுக்காக துஆ:

இந்த புனிதமான லைலத்துல் கதர் இரவில், உலக முஸ்லிம்கள் அனைவரும் பாலஸ்தீன மக்களின் நல்வாழ்விற்காக, அமைதிக்காக, பாதுகாப்பிற்காக, மனம் உருகி ஏக இறைவனிடம் மன்றாடி கையேந்தினார்கள். குறிப்பாக, காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் கொடூர தாக்குதல்கள் நிற்க வேண்டும். அங்கு மக்கள் படும் துன்பங்கள் , துயரங்கள் நீங்க வேண்டும். குழந்தைகள், பெண்கள் இனப்படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட்டு மீண்டும் அங்கு இயல்பான நிலை திரும்ப வேண்டும். காசா மக்களின் வாழ்வில் நிம்மதி ஒளி பிறக்க வேண்டும் என புனிதமான லைலத்துல் கதர் இரவில், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் துஆ கேட்டு, அவர்களின் நல்வாழ்விற்காக பிரார்த்தனை செய்தது கூடுதல் சிறப்பாகும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்.

Wednesday, March 26, 2025

துஆ....!

 மக்கா ஹரம் ஷெரீப்.....!

லைலத்துல் கதர் இரவு.....!!



அழகான அற்புதம்...!

 மக்கா ஹரம் ஷெரீப்....!

லைலத்துல் கதர் இரவு....!!



மக்கா...!

 Makkah...!



For middle class....!

 𝐈𝐌𝐏𝐎𝐑𝐓𝐀𝐍𝐓 𝐈𝐍𝐅𝐎 𝐎𝐍 𝐌𝐈𝐃𝐃𝐋𝐄 𝐂𝐋𝐀𝐒𝐒 

𝐌𝐨𝐝𝐢 𝐡𝐚𝐬 𝐝𝐨𝐧𝐞, 𝐰𝐡𝐚𝐭 𝟏𝟑 𝐏𝐌𝐬 𝐛𝐞𝐟𝐨𝐫𝐞 𝐡𝐢𝐦 𝐜𝐨𝐮𝐥𝐝𝐧’𝐭 

▪️PM Modi has taken us back to the pre-British Raj 

• Average middle class income as a base is ₹2.6 lakh per year or ₹22,000 per month

• Which makes share of India’s middle class in national income at levels of 1820, even before the colonial rule began 

• The rich are today richer than in 1820

• The poor have drowned deeper into poverty

▪️India has one of the lowest wages in the world - skilled & unskilled

• ILO data shows average hourly wage of an Indian worker 5th lowest in the world 

• Even someone with an advanced degree and doing a skilled job paid world’s seventh lowest wages 

▪️What is Middle Class spending on?

• A decade ago largest share of urban non-food expense was education 

• Now it’s transportation, which is just going to places 

▪️Middle Class India saving less, borrowing more 

• Indian households savings in 2011-12 used to be 8X of their debt 

• Now, Indian households savings 4X of their debt 

▪️How long would it take to pay for a home?

Average Middle Class income as a base ₹22,000 per month 

Home

• Average price of a house in Delhi ₹10,000 sq ft

• Basic 1000 sq ft house to cost ₹1 crore

• That’s about 38 years of salary 

▪️How long would it take to pay for a car? An iPhone?

Car

• Average car price ₹13 lakh 

• 5 years’ salary to pay for 

iPhone 

• Cheapest iPhone ₹60,000 

• 3 months’ salary

Source: Times of India



Speech....!

 Sonia Gandhi spoke in parliament today 

So much elegance, so much class, no shouting, no hate, this is soothing to hear.

Madame spoke on Food security and budget cut for Pregnant women. 

Compare this speech with BJP women leaders like Smriti Irani.



Questions...!


“Whenever I rise to speak, they don’t let me. In the last 8-10 days, they have never allowed me to speak.”

— LoP @RahulGandhi Ji

If the Leader of Opposition isn’t allowed to speak, then what’s the point of convening a Parliament session?



எதிர்ப்பு போராட்டம்...!

 Palestinians protesting now in Gaza raising the slogans of “we want to live, we are a peaceful nation!” 

Stop the genocide—the massacres continue.

Marches in Beit Lahia call for an end to the war and the genocide.



Tuesday, March 25, 2025

உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்...!

"வீடுகள் இடிப்புகள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் மகாராஷ்டிரா அரசு"

உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களின் வீடுகள் மட்டுமே குறிவைக்கப்பட்டு, ஏதாவது ஒரு காரணம் காட்டி, இடிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய இடிப்பு நடவடிக்களை மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. எனினும், அந்த தீர்ப்பை காலில் போட்டு மிதித்துவிட்டு, தங்களுடைய வழக்கமான நடவடிக்கைகளை பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் தொடர்ந்து செய்து வருகின்றன,. 

அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடந்த வன்முறையை காரணம் காட்டி, முஸ்லிம் ஒருவரின் வீட்டை நாக்பூர் நகராட்சி கடந்த திங்கட்கிழமை மார்ச் 24 அன்று இடித்து தள்ளியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில் 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' ஆங்கில நாளிதழ் 25.03.2025 அன்று "உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் மகாராஷ்டிரா அரசு - உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்று எழுதியுள்ளது. அதன் தமிழாக்கத்தை மணிச்சுடர் நாளிதழ் வாசகர்களுக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். 

தீர்ப்பை மீறும் மகாராஷ்டிரா அரசு:

கடந்த மார்ச் 17 அன்று நாக்பூர் நகரத்தை உலுக்கிய வகுப்புவாத வன்முறையில் முக்கிய குற்றவாளி என குற்றம்சாட்டி, அவரது வீட்டை நாக்பூர் நகராட்சி திங்கட்கிழமை (24.03.2025) இடித்தது. மார்ச் 20 அன்று, சர்வேயர்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் வளாகத்தை சட்டவிரோதமானது என்று அறிவித்தனர். மார்ச் 24 அன்று புல்டோசர்கள் அதை இடித்தன.  இது உச்ச நீதிமன்றத்தின் நவம்பர் 2024 உத்தரவை முற்றிலும் மீறும் செயலாகும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் உட்பட கட்டடங்களை இடிக்க, இந்தியா முழுவதும் பொருந்தும். அந்த உச்சநீதிமன்ற உத்தரவில், தெளிவற்ற வாசகங்கள் எதுவும் இல்லை. மிகமிக தெளிவாக தீர்ப்பில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, "உள்ளூர் நகராட்சி சட்டங்களால் வழங்கப்பட்ட நேரத்திற்கு ஏற்பவோ அல்லது அத்தகைய அறிவிப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள், எது பின்னர் வருகிறதோ அதுவரை முன் காரணம் காட்டும் அறிவிப்பு இல்லாமல் எந்த இடிப்பும் மேற்கொள்ளப்படக்கூடாது."  என்று உச்சநீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது. 

ஆனால் நாக்பூர் வன்முறை நடந்து ஒரு வாரம்தான் ஆகிறது. சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட நான்கு நாட்களுக்குள் கட்டிடம் இடிக்கப்பட்டது. பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் திங்கள்கிழமை பிற்பகுதியில் மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்தை இடிப்பதை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. அத்துடன், அதிகாரியின் நடவடிக்கையை "அதிகப்படியான செயல்" என்றும் கண்டனம் தெரிவித்தது. ஆனால்,  இரண்டு மாடி கட்டடம் இடிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு பிறகு, இந்த உத்தரவு மிகவும் தாமதமானதால் கட்டடம் இடிக்கப்பட்டுவிட்டது. 

மகாராஷ்டிரா நகராட்சி நிர்வாகத்திற்கு நோட்டீஸ்:

தங்களது நவம்பர் 2024 உத்தரவை, மகாராஷ்டிரா நகராட்சி நிர்வாகம் மீறியதாக, மால்வன் நகராட்சி அதிகாரிகளுக்கு  திங்களன்று (24.03.2025) உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. பிப்ரவரி 23 அன்று சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆதரித்ததற்காக உள்ளூர்வாசிகள் அவரது மகன் மற்றும் குடும்பத்தினரை துன்புறுத்தியதை அடுத்து மால்வன் ஸ்கிராப் வியாபாரியின் கடை இடிப்பு நடந்தது. நோட்டீஸ் தொடர்பாக பதிலளிக்க மால்வன் நகராட்சிக்கு உச்சநீதிமன்றம்  நான்கு வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது. நான்கு வாரங்கள் என்பது மிகவும் அதிகமான கால அவசாகம் என்று வாதிடலாம். ஏனெனில், உ.பி., மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அசாம், குஜராத், ஜார்கண்ட் மற்றும் டெல்லியில் காணப்பட்ட கட்டமைப்புகளை இடிக்கும் தன்னிச்சையான மாநில நடவடிக்கைக்கான வேண்டுகோள்களுக்கு பதிலளிக்கும் விதமாக, நவம்பர் உத்தரவில் இத்தகைய உடனடி நீதியின் "சட்டவிரோதத்தை" உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. 

மேலும், "ஒரு கட்டிடத்தை புல்டோசர் இடிக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சி... சரியான இடத்தில் ஒரு சட்டமற்ற நிலையை நினைவூட்டுகிறது." என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.  அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் அதன் அசாதாரண அதிகாரங்களைப் பயன்படுத்தி, தனது 95 பக்க தீர்ப்பில் உச்சநீதிமன்றம்,  பொது அதிகாரிகளின் பொறுப்புணர்வை நிர்ணயித்தது. உள்ளூர் அதிகாரிகளின் நடவடிக்கையை சவால் செய்ய உரிமையாளர்கள், குடியிருப்பாளர்களுக்கு இந்த உத்தரவுகள் அவகாசம் அளித்தன.

நீதிமன்றங்களுக்கு அரசு இயந்திரங்கள் பயப்படவில்லை:

உச்சநீதிமன்றத்தின் முக்கியமான உத்தரவு மற்றும் கடுமையான வார்த்தைகளுக்குப் பிறகு,  நான்கு மாதங்களுக்குள் இரண்டு வழக்குகள், உள்ளூர் அரசாங்கங்கள் புல்டோசர் நடவடிக்கையில் இருந்து தப்பித்துவிடுவோம் என்று தொடர்ந்து நம்புகின்றன என்பதைக் காட்டுகின்றன. பொறுப்பான அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை மற்றும் அவர்கள் மீது வழக்குத் தொடருவது உள்ளிட்ட உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு அரசு இயந்திரங்கள் பயப்படவில்லை என்பது தெளிவாகிறது. இடிக்கப்பட்ட சொத்தை மீட்டெடுப்பதற்கு அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பாவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.   எனவே, திங்களன்று நடைபெற்ற நாக்பூர் மீறல் குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடுமையான நடவடிக்கைகள் மூலம், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறியதற்கு பொறுப்பானவர்களை மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக மாற்ற வேண்டும்.  சாதாரண மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இந்தியர்களின் உரிமைகளை உள்ளூர் அரசாங்கங்களால், மண் அள்ளும் இயந்திரங்களின் மூலம், இவ்வளவு சாதாரணமாக நசுக்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ்

தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


விமர்சனம்....!

  ஒன்றிய அரசால் "இந்தியர்கள் மிக மோசமான வரி பயங்கரவாதத்திற்கு பலியாகியுள்ளனர்"

- ஒன்றிய பாஜகவின் வரி திருட்டை கடுமையாக விமர்சித்த மஹுவா மொய்த்ரா எம்.பி.



Monday, March 24, 2025

தனித்துவமான குழந்தைகள் சந்தை....!

"புனித ரமழானில் குழந்தைகள் நடத்தும் தனித்துவமான சந்தை"

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் தான் மாலேகான். இங்கு புனித ரமளானில் காலத்தில், குழந்தைகள் மட்டும் நடத்தும் தனித்துவமான சந்தை, மிகவும் பிரபலமானது.  இந்த சந்தையில் கடைக்காரர்களும், வாங்குபவர்களும் குழந்தைகளே.  மாலேகானில் ரமளான் மாதத்தில், குழந்தைகள் சந்தை என்று அழைக்கப்படும், ஒரு சிறப்பு மற்றும் தனித்துவமான சந்தை அமைக்கப்படுகிறது. 

ஹலால் வாழ்வாதாரத்தைப் பின்தொடர்வதை ஊக்குவிக்கும், தொழில் முனைவோர் காரணிகளை ஊக்குவிக்கும், மற்றும் வணிகத் திறன்களை எடுத்துக்காட்டும் இந்த சந்தை, குழந்தைகளால் மற்றும் குழந்தைகளுக்காக நடத்தப்படுகிறது. இதன் கடைக்காரர்கள், வர்த்தகர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களில் ஐந்து முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அடங்குவர். இந்த சந்தையில், தங்கள் குழந்தைப் பருவ நினைவுகளை அனுபவிக்க வரும் கடைக்காரர்களில் பெரியவர்களையும் காணலாம்.

மாலேகான் கட்டன்பா காந்தா, காந்தி சந்தை, சரஃப் பஜார், பாரி பஜார், ராஜே பகதூர் கே பரா கி பஜார், மீன் பஜார், இக்பால் டாபி சந்தை, லஷ்கர் வாலா ஏலம் ஆகியவை ஆண்டு முழுவதும் திறந்திருக்கும். ஆனால் குழந்தைகள் பஜார் ஒரு மாதம் மட்டுமே நீடிக்கும். அதாவது ரமளான். ஈத் பண்டிகை இரவில், குழந்தைகள் தங்கள் கடைகளை மூடிவிட்டு, அடுத்த ஆண்டு ரமழானை எதிர்நோக்குவார்கள்.

சந்தையின் வரலாற்று பின்னணி:

மாலேகானின் வரலாறு குறித்து எழுதப்பட்ட புத்தகங்களில் இந்த சந்தையைப் பற்றிய எந்த வரலாற்று பாரம்பரியமும் காணப்படவில்லை. ஆற்றின் கரையில் நடைபெறும் நகரத்தின்  வாராந்திர வெள்ளிக்கிழமை சந்தை வரலாற்று ரீதியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வாராந்திர சந்தை வாரத்திற்கு ஒரு முறை நடத்தப்படுவதற்குப் பதிலாக தினமும் நடத்தத் தொடங்கியபோது அது பெரிய சந்தை என்று அழைக்கப்பட்டது. பெரிய சந்தை இன்னும் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. குழந்தைகள் சந்தைகள் கிழக்குப் பகுதியான மாலேகானின் சிறப்பு அம்சமாகும். இந்த சந்தையை கிழக்கு மாலேகானின் கிட்டத்தட்ட ஒவ்வொரு பகுதியிலும் காணலாம். இதில் மோதிபோரா, கிலா, இஸ்லாமாபாத், இஸ்லாம்புரா, நயாபுரா, எம்ஹெச்பி காலனி, ஆசாத் நகர் மற்றும் பல முஸ்லிம் பகுதிகள் அடங்கும்.

இது தொடங்கப்பட்ட தேதி அல்லது ஆண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால்  முஹம்மது அயூப், அஷ்ரஃபி ஃபரிதா பானோ ஆகியோர் தங்கள் குழந்தை பருவத்திலிருந்தே இந்த சந்தையைப் பார்த்து வருகின்றனர். இவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த மரபின் பின்னணியில், ரமளான் குழந்தைகள் பஜார் தொடங்கி அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது என்பது தெளிவாகிறது. 

சந்தையின் அமைப்பு மற்றும் பண்புகள்:

இந்த சந்தைக்கு பெரிய இடம் தேவையில்லை. இந்த தற்காலிக சந்தை இப்தாருக்குப் பிறகு இஷா தொழுகை வரை இயங்கும். இது முஸ்லிம் சுற்றுப்புறத்தின் சதுக்கங்கள், பிரதான சாலைகள், அகலமான தெருக்கள் மற்றும் சந்துகளில் காணப்படுகிறது. அட்டைப் பெட்டிகள், பர்லாப் பைகள், பிளாஸ்டிக் அல்லது மரப் பெட்டிகள் இங்குள்ள கடைக்காரர்களுக்கு தற்காலிகக் கடைகளாக மாறிவிடுகின்றன. கடைகள் வரிசையாக வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. கடைக்காரர்கள் மிகவும் கரிசனையுள்ளவர்கள்.  ஒருவருக்கொருவர் இடம் கொடுப்பதில் தாராள மனப்பான்மையைக் காட்டுகிறார்கள். இந்த வழியில், இந்த சந்தை ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. முக்கியமான விஷயம் என்னவென்றால், இங்கு கடைகள் அமைப்பவர்கள் வாடகை செலுத்த வேண்டியதில்லை.

சந்தையில் என்ன கிடைக்கும்?

குழந்தைப் பருவம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் இங்கே காணலாம். உருளைக்கிழங்கு மற்றும் அரிசி பப்படங்கள், இனிப்பு மற்றும் புளிப்பு புளி சட்னி, காலிஃபிளவர் மற்றும் பெருஞ்சீரகம் கொண்ட பான், பிளாஸ்டிக் பைகளில் சிறிய வண்ணமயமான முட்டைகள், கொண்டைக்கடலை மசாலா, வண்ணமயமான பலூன்கள் மற்றும் பல பொருட்கள் இந்த குழந்தைகள் சந்தையில் கிடைக்கும். 

திப்பு சுல்தான் சவுக் செல்லும் சாலையில் பலூன் விற்பனையாளரான ஏழு வயதான முகமது முதசர் உசேன், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சந்தையில் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். அவர் தண்ணீர் நிரப்பப்பட்ட வண்ணமயமான பலூன்களை விற்பனை செய்கிறார். ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பப்பட்ட இருபது பலூன்கள் ஒரு மணி நேரத்தில் விற்கப்படுகின்றன. பலூனின் நிறம் மற்றும் அளவைப் பொறுத்து விலைகள் ஒரு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை இருக்கும். இதேபோன்று பான் விற்பனை செய்யும் சிறுவன் ஒருவன் இந்த மாதம் முழுவதும் பான் விற்பதன் மூலம் தனது பெற்றோர், உடன்பிறந்தவர்கள் மற்றும் தமக்கும் ஈத் பண்டிகையன்று புதிய ஆடைகளை வாங்க போதுமான பணம் சம்பாதிப்பதாகக் கூறுகிறார்.

சிறப்பு அம்சங்கள்:

புனித ரமளான் மாதத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நகரங்கள் பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன. குழந்தைகள் சந்தைகள் கிராமங்களுக்கு மட்டுமே உரிய சிறப்பு. வயதானவர்கள் தங்கள் இளம் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுப்பது என்ற போலிக்காரணத்தின் கீழ் இந்த சந்தைக்கு வருகிறார்கள். உண்மையில், அவர்கள் தங்கள் குழந்தைப் பருவ நினைவுகளை மீண்டும் அனுபவிக்கிறார்கள். இப்தார் முடிந்தவுடன், குழந்தைகள் தங்கள் சந்தையை நோக்கித் திரும்புவார்கள். அவர்கள் சந்தைக்கு ஓடி வந்து சத்தம் போடுகிறார்கள். 

இன்னொரு சிறப்பு என்னவென்றால், பெற்றோர்கள், தாத்தா பாட்டி அல்லது பிற பெரியவர்கள் வீட்டில் உள்ள சிறு குழந்தைகளிடம், நீங்கள் நோன்பு இருந்தால், நோன்பு துறந்ததும்,  உருளைக்கிழங்கு சாட், இனிப்பு பான் மற்றும் கிராம் மசாலா வாங்கித் தருவதாக கூறுவார்கள். ஒரு வகையில், இந்த ரமளான் பஜார் குழந்தைகள் நோன்பைக் கடைப்பிடிக்க ஊக்கமளிக்கும் ஒரு மூலமாகவும் இருக்கிறது. இங்கிருந்து ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்களும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

வணிக திறமைகள் மேம்பட வாய்ப்பு:

குழந்தைகள் சந்தை  என்ற விஷயம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் ரமளான் மாதத்தில், குழந்தைகள் நடத்தும் இந்த சந்தை, அவர்களின் வணிக திறமைகள் மேம்படுத்த ஒரு வாய்ப்பாக அமைகிறது என்றே கூறலாம். பொருட்களின் தரம், வியாபார நுணுக்கங்கள், வாடிக்கையாளர்களை கவர மேற்கொள்ளப்படும் உத்திகள், பொருட்களுக்கான விலைகளை நிர்ணம் செய்தல், அவற்றை கொள்முதல் செய்தல், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று அந்த பொருட்களை விற்பனை செய்வது என பல்வேறு அம்சங்களை இந்த குழந்தைகள் நடத்தும் சந்தையின் மூலம் அவர்கள் அறிந்துகொள்ள முடிகிறது. எதிர்காலத்தில் திறமையான வியாபாரிகளை உருவாக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக மாலேகான் குழந்தைகள் சந்தை விளங்குகிறது. இதுபோன்ற, குழந்தைகள் நடத்தும் சந்தைகளை அனைவரும் ஊக்குவித்தால், குழந்தைகளின் திறமைகள் மேம்படும் என உறுதியாக கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


இ.யூ.முஸ்லிம் லீக் கோரிக்கை....!!

உன்னாவ் வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட ஷெரீப் கானின் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும்...!

இ.யூ.முஸ்லிம் லீக் கோரிக்கை....!!

உன்னாவ், மார்ச்.25- உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் இந்துத்துவ கும்பலால் கடந்த 15ஆம் தேதி (மார்ச் 15, 2025) படுகொலை செய்யப்பட்ட ஷெரீப் கானின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. 

மாவட்ட நீதிபதியிடம் மனு:

உத்தப் பிரதேச மாநில இ.யூ.முஸ்லிம் லீக் டாக்டர் முகமது மதீன் கான் தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஒன்று, மாவட்ட நீதிபதியை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. அத்துடன், ஷெரீப் கானை படுகொலை செய்தவர்கள் மீது  சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஷெரீப் கானின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தனர். 

ஷெரீப் கான் குடும்பத்தினருக்கு ஆறுதல்:

மேலும், உன்னாவ் சென்ற இ.யூ.முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் குழு, வன்முறை கும்பலால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஷெரீப் கானின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொண்டது. மேலும், மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ள ஷெரீப் கானின் குடும்பத்திற்கு இ.யூ.முஸ்லிம் லீக் துணையாக இருக்கும் என்றும், அவர்களுக்கு நீதி கிடைக்க அனைத்து வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தது. 

இந்தக் குழுவில் இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முகமது சாத், கான்பூர் மாவட்டத் தலைவர் அதீக் அகமது, எம்.எஸ்.எஃப். சோஹ்ராப் கான், மாநிலச் செயலாளர் மற்றும் மாவட்டத் தலைவர் முகமது அகமது ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

=============================

இஃப்தார்....!

 சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

இஸ்லாமிய மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை மேம்படுத்தும் எண்ணற்ற திட்டங்களைக் கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றிய பெருமிதம் பொங்க, உள்ளார்ந்த அன்போடு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்!

சிறுபான்மையின மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் தி.மு.க. உறுதியாக எதிர்க்கும்! உங்களுக்கு என்றும் துணைநிற்கும்!



Demand....!

 Allahababd High Court Bar Association urges CJI Sanjiv Khanna to immediately recommend impeachment proceedings against Justice Yashwant Varma. 

“…continuance of Justice Yashwant Varma any further is dangerous for the democracy as it eroded 'Public Faith' which is the only power available with judicial system,” Bar Association head Anil Tiwari.



உலகின் சிறந்த முஸ்லிம்கள் இந்திய முஸ்லிம்கள்....!

 "உலகின் சிறந்த முஸ்லிம்களாக விளங்கும் இந்திய முஸ்லிம்கள்"

ஏக இறைவன் மீது ஈமான் கொண்டு, முழு நம்பிக்கையுடன் செயல்படும் முஸ்லிம்கள் அனைவரும் சிறந்த முஸ்லிம்கள் தான். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, ஓர் இறைக் கொள்கையில் உறுதியுடன் இருந்து, அதற்காக பல்வேறு சவால்களை, துன்பங்களை சந்திக்கும் போதும், துளியும் மனம் தளராமல், ஒழுக்கப் பண்புகளை கைவிடாமல், இஸ்லாமிய நெறிமுறைகளை உறுதியாக பின்பற்றும் அனைத்து முஸ்லிம்களும் நல்ல முஸ்லிம்கள் என்றே கூற வேண்டும். 

குறிப்பாக, கடந்த 75 ஆண்டுகளாக, பாலஸ்தீன மக்கள் படும் துன்பங்கள், துயரங்கள் ஏராளம், தங்களுடைய சொந்த பூமிக்காக அவர்கள் செய்யும் தியாகங்கள் குறித்து சொல்ல வார்த்தைகளே இல்லை என்றே கூறலாம். குறிப்பாக, காசா பூமியை தங்களுடன் இணைத்துகொள்ள இஸ்ரேல் துடித்துக் கொண்டு இருக்கிறது. இத்தனைய சூழ்நிலையில், ஹமாஸ் போராளிகள், ஏக இறைவன் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து நடத்தும் போரின் மூலம் அவர்கள் எப்படிப்பட்ட தியாகிகள் என்பதையும் எப்படிப்பட்ட சிறந்த முஸ்லிம்கள் என்பதையும் நாம் நன்கு உணர்ந்துகொள்ளலாம். கடந்த ஓராண்டில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காசா மக்களை கோழை இஸ்ரேல் இனப்படுகொலை செய்துவிட்டு, மீண்டும் தாக்குதல் அட்டூழியம் செய்து வருகிறது. அத்துடன், மருத்துவமனைகள் மீது தாக்குதல், குழந்தைகள், பெண்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அவர்களின் உயிரிகளை பறித்து வருகிறது. இப்படி, இஸ்ரேலின் தாக்குதலைகளை, சவால்களை முறியடிக்க காசா மக்கள் செய்யும் ஒவ்வொரு தியாகமும், செயலும் அவர்கள் ஒரு சிறந்த முஸ்லிம்கள் என்பதை உறுதிப்பட உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 

இந்திய முஸ்லிம்கள்:

இப்படி, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் முஸ்லிம்கள், ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன,. உலகின் இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள், தங்கள் தாய் நாட்டை உயிருக்கு உயிராக நேசித்து வாழ்ந்துவரும் நிலையில் கூட, அவர்களின் அமைதியான வாழ்க்கையை சீர்குலைக்க பஜ்ரங்தள், விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து சதி வேலைகளில் இறங்கி, முஸ்லிம்கள் எப்போதும் ஒருவித பயம், பதற்றத்துடன் இருக்கும் வகையில், தொடர்ந்து தொல்லைகளை அளித்துக் கொண்டே இருக்கின்றன. 

இப்படி, இந்திய முஸ்லிம்கள் நாள்தோறும் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அவர்கள், சிறந்த முஸ்லிம்களாக தங்களுடைய அழகிய செயல்பாட்டின் மூலம் நிரூபித்து வருகிறார்கள்.  இந்திய முஸ்லிம்கள் உலகின் உறுதியான மற்றும் கடின உழைப்பாளி சமூகங்களில் ஒன்றாகும். பொருளாதார மற்றும் சமூக சவால்களை எதிர்கொண்ட போதிலும், அவர்கள் தேவையற்ற அங்கீகாரத்தை நாடாமல், அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கின்றனர்.

கல்வி, அறிவியல், பொருளாதாரம், வணிகம், தொழில் என முக்கிய துறைகளில் இந்திய முஸ்லிம்களின் பங்களிப்பு ஏராளமாக இருந்து வருகிறது. 25 கோடி முஸ்லிம்களில் பெரும்பாலான முஸ்லிம்கள், தேநீர் விடுதி உள்ளிட்ட சிறிய வணிக நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று, கல்வியில் மிகப்பெரிய முன்னேற்றம் முஸ்லிம் சமூகத்தில் இல்லை. எனினும், குறைந்த அளவு பெரிய தொழில் அதிபர்களாக இருக்கும், முஸ்லிம்களில் சிலர் கூட, நாட்டின் வளமான கட்டமைப்புக்காக மிகச் சிறந்த முறையில் தங்களது பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். இதேபோன்று, கல்வி, அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த முஸ்லிம் வல்லுநர்கள், அந்த துறைகளில் ஆற்றிவரும் சேவை மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இத்தகைய சேவை நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது. 

முஸ்லிம்களை மட்டுமே குறிவைக்கும் கும்பல்:

இப்படி, நாட்டின் முன்னேற்றத்திற்காக முஸ்லிம்கள் நல்ல சேவை ஆற்றிவந்தாலும், குறிப்பிட்ட ஒரு கும்பல், முஸ்லிம்களை தேச விரோதிகளைப் போல சித்தரித்து அடிக்கடி அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதற்கு தற்போதைய சிறந்த உதாரணம், நாக்பூரில் நடைபெற்ற வன்முறை  மற்றும் கலவரமாகும். அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என வீண் பிடிவாதம் பிடித்து, 300 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துபோன, ஒரு மன்னனின்  பேரில், முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களை தூண்ட பஜ்ரங்தள், விஸ்வ இந்து பரிஷத் அமைப்புகள் முயற்சிகளில் ஈடுபட்டு, அதில் ஓரளவுக்கு அரசியல் லாபத்தையும் அடைந்து வருகின்றன. 

எனினும், முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களை பெரும்பாலான இந்துக்கள் விரும்புவதில்லை. முஸ்லிம்கள் இந்திய நாட்டின் சொந்த குடிமகன்கள் என்பதையும், மதசார்பற்ற நாட்டில், அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு என்றும், சமூகத்தில் உண்மையாக அக்கறை கொண்ட, சகோதர சமுதாய மக்கள் உறுதிப்பட கூறி வருகிறார்கள். குறிப்பாக முஸ்லிம்கள் நல்ல கல்வியறிவு பெற்று அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என உண்மையான இந்து ஒருவர் விரும்பவே செய்கிறார். முஸ்லிம் இளைஞர்களின் கல்விக்காக உதவி செய்யும் ஏராளமான இந்து தோழர்களை நாம் பார்க்க முடிகிறது. இதேபோன்று, முஸ்லிம்களின் பண்டிகை காலங்களில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் இந்து மக்களும் நாட்டில் இருந்து வருகிறார்கள். 

இஃப்தார் நிகழ்ச்சி நடத்தும் ராதா குப்தா:

முஸ்லிம்களின் துயரங்கள் ஒருபுறம் தொடர்ந்துகொண்டே இருந்தாலும் ராதா குப்தா போன்ற இந்து பெண்மணிகளால், இந்த நாட்டில் இன்னும் மனிதநேயம் நடமாடி தழைத்தோங்கிக் கொண்டே இருக்கிறது. வட நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் துவேஷம் பரப்பட்டு வரும் நிலையில், வட நாட்டைச் சேர்ந்த ராதா குப்தா, கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து புனித ரமளான் காலத்தில் 30 நாட்களும், நோன்பு வைக்கும் இஸ்லாமியர்களை தம்முடைய இல்லத்திற்கு நேரில் அழைத்து, இஃப்தார் நிகழ்ச்சியை நடத்து வருகிறார். 

தாய் ராதா குப்தாவின் இந்த அற்புதமான, அழகான செயலுக்கு, அவரது மகன்கள், ராகுல் குப்தா, ரோஹித் குப்தா ஆகியோர் உதவியாக இருந்து வருகிறார்கள். இஃப்தார் நிகழ்ச்சிக்கு வரும் முஸ்லிம்கள் தொழுகை நடத்த தனி இடம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இஃப்தார் நிகழ்ச்சிக்கு இந்து தோழர்களும் அழைக்கப்படுகிறார்கள். பெண்கள், குழந்தைகள் அனைவரும் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். அவரவர்கள், தங்களுடைய கொள்கையில் உறுதியாக இருந்தபோதும், முஸ்லிம்களுடன் இணைந்து இஃப்தார் விருந்தில் கலந்துகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். தம்முடைய உயிர் பிரியும் வரை, தாம் இந்த மண்ணை விட்டுமறையும் வரை இஃப்தார்  நிகழ்ச்சி நடத்தி, முஸ்லிம்களுக்கு விருந்து அளிப்பேன் என்று கூறும் ராதா குப்தா, உண்மையிலேயே ஒரு மனிதநேய, சகோதரத்துவம் கொண்டு வீர பெண்மணி என்றே கூறலாம். 

இதேபோன்று, தமிழகத்தின் ஈரோட்டில் உள்ள ஒரு கோவில் நிர்வாகம், அப்பகுதியில் உள்ள முஸ்லிம் நோன்பாளிகளை இஃப்தார் விருந்துக்கு அழைத்து நன்கு பாசத்துடன் உபசரித்த நிகழ்ச்சி மனதிற்கு ஆறுதல் அளித்தது. இந்துத்துவ சக்திகள், மக்களிடையே பிரச்சினையை உருவாக்கி, பிரித்தாள தொடர் முயற்சிகளை செய்தாலும், அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், முஸ்லிம்களிடம் சகோதர பாசத்துடன் நடந்துகொள்ளும் ராதா குப்தா போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை, இந்திய முஸ்லிம்களை சகோதர சமுதாய மக்களிடம் இருந்து யாரும் பிரித்துவிட முடியாது. 

துன்பங்களுக்கு மத்தியில் இன்பம்:

மனித வாழ்க்கையில் இன்பம், துன்பம் மாறி மாறி வரும் என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒன்றாகும். அந்த வகையில், இந்திய முஸ்லிம்களும்  தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களை ஒரு பக்கம்  இந்துத்துவ அமைப்புகளின் மூலம் துன்பம் மிரட்டிக் கொண்டு இருக்கிறது. அதேநேரத்தில் ராதா குப்தா போன்ற நல்ல உள்ளம் கொண்ட பெண்மணிகளின் அழகிய மனிதநேய செயல்கள் மூலம் ஆறுதலான இன்பம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. 

ஒரு தேசத்தின் பொறுப்பு, முஸ்லிம்களை இழிவுபடுத்துவதோ அல்லது திருப்திப்படுத்துவதோ அல்ல. மாறாக அனைவருக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதாகும். அனைத்து மதம் மற்றும் சாதியைச் சேர்ந்த மக்களும் ஒன்றாக வளர்ந்து, ஒற்றுமை, உள்ளடக்கம் மற்றும் கூட்டு முன்னேற்றத்தை வளர்க்கும்போது மட்டுமே நாடு உண்மையான வளர்ச்சியை அடைய முடியும் என்பதை உறுதியாக நம்பும் நாட்டில் உள்ள பெரும்பாலான சகோதர சமுதாய மக்கள், முஸ்லிம்களை நேசிக்கவே செய்கிறார்கள். இது இந்திய முஸ்லிம்களுக்கு கிடைத்த பெரும் பரிசாகும். எனவே தான், உலகிலேயே சிறந்த முஸ்லிம்கள், இந்திய முஸ்லிம்கள் தான் என நாம்  உறுதியாக கூறலாம். 

-  எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Sunday, March 23, 2025

ஆப்பிரிக்காவில் இஸ்லாம்....!

"ஆப்பிரிக்காவின் குக்கிராமங்களில் ஒளிவீசும் இஸ்லாம்"

ஆப்பிரிக்கா இயற்கை அழகை தன்னுள் கொண்டு, மனிதர்களை ஈர்க்கும் ஒரு அற்புதமான பூமி. இந்த ஆப்பிரிக்க பூமியின் குக்கிராமங்களில், இயற்கையோடு இணைந்து எளிமையான வாழ்க்கையை மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஏராளமான மலைகள் சூழ்ந்த இந்த குக்கிராமங்களில், வாழும் மக்கள் இதயங்களில் இஸ்லாம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைகள் இந்த மக்களை வெகுவாக கவர்ந்து, அவர்களின் ஈமானை வலுப்படுத்திக் கொண்டே செல்கிறது.

குக்கிராமங்களில் மிகப்பெரிய அளவுக்கு வசதிகள் எதுவும். இல்லை. இயற்கையோடு இணைந்து வாழ வேண்டிய கட்டாயம் என்பதால், பிரமாண்ட மஸ்ஜித்துகள் இங்கு இல்லை. மினராக்கள் இல்லை. குடிசைகளே மஸ்ஜித்துகளாக இருந்து வருகின்றன. குடிசைகளே மதரஸாக்களாக இயங்கி வருகின்றன. இந்த குடிசை மஸ்ஜித்துகளில் அதான் மனதை கவரும் வகையில் ஒலிக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவில் இஸ்லாம் மக்களின் மனங்களை கவர்ந்துவிட்டது. பாங்கு ஒலி, ஆப்பிரிக்க மக்களின் இதயங்களை கவர்ந்து அவர்களை மேன்மக்களாக மாற்றி வருகிறது. குடிசை மஸ்ஜித்துகள் தொழுகை நடத்தும் இடங்களாக மட்டுமல்லாமல், ஆப்பிரிக்க மக்களின் ஆன்மாவாக இருந்து வருகின்றன.

கல்வி என்பது இஸ்லாத்தின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. இதனை நன்கு உணர்ந்துகொண்ட, ஆப்பிரிக்க குக்கிராமங்களில் வாழும் முஸ்லிம்கள், தங்கள் ஆன்மாவை மேம்படுத்தும் இஸ்லாமிய கல்வியை நன்கு கற்று வருகிறார்கள். குழந்தைகளுக்கும் இஸ்லாமிய போதனைகளை மிகவும் சிறப்பாக சொல்லித் தரப்படுகிறது. ரமளான் மாதத்தில் இங்குள்ள மக்கள் வறுமையிலும் கூட, ஈமானுடன் நோன்பு நோற்று, இறை வணக்கங்களில் ஈடுபடுகிறார்கள். இஃப்தார் நேரங்களில் ஒன்றாக அமர்ந்து நோன்பு துறக்கும் அவர்கள், தங்களுடைய வறுமையை நீக்க வேண்டும் என ஏக இறைவனிடம் துஆ கேட்கிறார்கள்.

ரமளான் காலத்தில் பல தொண்டு நிறுவனங்கள் ஆப்பிரிக்க குக்கிராமங்களுக்குச் சென்று மனிதநேய உதவிகளை வழங்கி வருகிறார்கள். இஸ்லாம் ஒரு மதச் சடங்காக இல்லாமல், வாழ்க்கை நெறியாக ஆப்பிரிக்க மக்களின் இதயங்களில் குடிபுகுந்துவிட்டதால், அங்கு இஸ்லாமிய கொள்கை நெறிமுறைகள் மக்கள் மத்தியில் வேகமாக கவரப்பட்டு வருகிறது. இதனால், இஸ்லாம் ஆப்பிரிக்காவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.   

ஆப்பிரிக்காவில் இஸ்லாம்:

ஆப்பிரிக்காவில் இஸ்லாம் இரண்டாவது மிகப்பெரிய மார்க்கமாக இருந்து வருகிறது. கி.பி 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மத்திய கிழக்கிலிருந்து இஸ்லாம் பரவிய முதல் கண்டம் ஆப்பிரிக்காவாகும்.  உலகின் முஸ்லிம் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஆப்பிரிக்காவில் வசிக்கின்றனர்.  ஹிஜ்ராவின் போது இன்றைய எரித்திரியா மற்றும் எத்தியோப்பியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் தற்போதைய ஜிபூட்டி மற்றும் சோமாலியாவைக் கடந்து அக்சம் என்ற கிறிஸ்தவ இராச்சியத்திற்குச் சென்றனர்.

உலகில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம்களைப் போலவே, ஆப்பிரிக்காவில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்களும் சுன்னி முஸ்லிம்கள் ஆவார்கள்.  ஆப்பிரிக்காவில் இஸ்லாத்தின் நெறி பல ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள பல்வேறு சிந்தனைப் பள்ளிகள், மரபுகள் மற்றும் குரல்களில் வெளிப்படுகிறது. பல ஆப்பிரிக்க இனக்குழுக்கள், பெரும்பாலும் கண்டத்தின் வடக்குப் பகுதியில், இஸ்லாத்தை தங்கள் பாரம்பரிய மார்க்கமாகக் கருதுகின்றனர்.  பொதுவாக ஆப்பிரிக்காவில் இஸ்லாம் பெரும்பாலும் ஆப்பிரிக்க கலாச்சார சூழல்கள் மற்றும் ஆப்பிரிக்காவின் சொந்த மரபுகளை உருவாக்கும் நம்பிக்கை அமைப்புகளுக்கு ஏற்றவாறு இருந்து வருகிறது 2014 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்காவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவர்கள்  முஸ்லிம்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

9 ஆம் நூற்றாண்டில், ஆப்பிரிக்காவின் கொம்பில் முஸ்லிம் சுல்தானகங்கள் நிறுவத் தொடங்கின. மேலும் 12 ஆம் நூற்றாண்டில், கில்வா சுல்தானகம் மொசாம்பிக் வரை தெற்கே பரவியது. 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் சான்சிபார் சுல்தானகத்தின் கீழ் இஸ்லாம் மலாவி மற்றும் காங்கோவிற்குள் ஆழமாகச் சென்றது. பின்னர் ஆங்கிலேயர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில முஸ்லிம்-இந்திய நாட்டினர் உட்பட, தங்கள் தொழிலாளர்களை இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவில் உள்ள தங்கள் காலனிகளுக்கு அழைத்து வந்தனர்.சோமாலியாவின் மொகடிஷுவில் உள்ள இஸ்லாமிய ஒற்றுமை மசூதி ஆப்பிரிக்காவின் கொம்பில் உள்ள மிகப்பெரிய மஸ்ஜித்தாகும்.

ஹிஜ்ராவுக்குப் பிறகு, அரேபிய  ஜெய்லாவின் இரண்டு மிஹ்ராப் மஸ்ஜித் அல்-கிப்லாடைன் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மேலும் இது நகரத்தின் மிகப் பழமையான மஸ்ஜித்தாகும். ஆப்பிரிக்காவில் இஸ்லாத்தின் விரிவாக்கம் ஆப்பிரிக்காவில் புதிய சமூகங்களை உருவாக்க வழிவகுத்தது மட்டுமல்லாமல், ஏற்கனவே உள்ள ஆப்பிரிக்க சமூகங்கள் மற்றும் பேரரசுகளை இஸ்லாமிய மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டதாக மறுகட்டமைத்தது.

உண்மையில், 11 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், சூடானில் செல்வாக்கு செலுத்திய கனெம் பேரரசு, இஸ்லாத்திற்கு மாறியது. அதேநேரத்தில், மேற்கு ஆப்பிரிக்காவை நோக்கி, போர்னு பேரரசின் ஆட்சியாளர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். இந்த ராஜ்ஜியங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால், அதன் குடிமக்கள் அதன் வழியைப் பின்பற்றினர்.  பின்னர் 18 ஆம் நூற்றாண்டில், உஸ்மான் டான் ஃபோடியோ தலைமையிலான நைஜீரியாவை தளமாகக் கொண்ட சோகோட்டோ கலிபா, ஃபுலானி ஜிஹாத்தில் இஸ்லாத்தைப் பரப்புவதில் கணிசமான முயற்சியை மேற்கொண்டது. இன்று, இஸ்லாம் ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியின் பிரதான மார்க்கமாகும், அரேபிய தீபகற்பத்தில் தோன்றியதிலிருந்து, ஆப்பிரிக்காவில் இஸ்லாம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

உள்ளூர் , உலகளாவிய பரிமாணங்கள்:

ஆப்பிரிக்காவில் இஸ்லாம் உள்ளூர் மற்றும் உலகளாவிய பரிமாணங்களைக் கொண்டுள்ளது. உள்ளூர் மட்டத்தில், முஸ்லிம்கள் கணிசமான சுயாட்சியுடன் செயல்படுகிறார்கள் என்றும் அவர்களின் மத நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் ஒரு சர்வதேச அமைப்பு அவர்களிடம் இல்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த உண்மை ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் இஸ்லாமிய நடைமுறைகளில் உள்ள வேறுபாடுகள் மற்றும் வகைகளுக்குக் காரணம். உலக அளவில், ஆப்பிரிக்காவில் உள்ள முஸ்லிம்களும் உம்மாவின் (உலகளவில் உள்ள இஸ்லாமிய சமூகம்) ஒரு பகுதியாக உள்ளனர், மேலும் முஸ்லிம் உலகைப் பாதிக்கும் உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் தற்போதைய நிகழ்வுகளை மிகுந்த ஆர்வத்துடன் பின்பற்றுகிறார்கள். உலகமயமாக்கல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் புதிய முயற்சிகள் மூலம், ஆப்பிரிக்காவில் உள்ள முஸ்லிம்கள் பரந்த முஸ்லிம் உலகத்துடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்து பராமரித்து வருகின்றனர்.

ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள மற்ற முஸ்லிம்களைப் போலவே ஆப்பிரிக்காவில் உள்ள முஸ்லிம்களும் இஸ்லாத்தின் எதிர்கால திசையைப் பற்றிய தீவிரமான சிந்தனையில் உள்ளனர். அதன்படி முஸ்லிம்கள் தங்கள் நம்பிக்கையை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றிய கேள்விகள் உள்ளன. பெரும்பான்மையானவர்கள் இஸ்லாம் வரலாற்று ரீதியாகப் பின்பற்றி வரும் மிதமான, சகிப்புத்தன்மை கொண்ட பாதையில் இருக்க விரும்புவதாகத் தெரிகிறது.

ஆப்பிரிக்காவில், பெரும்பாலான மாநிலங்கள் திருமணம், விவாகரத்து, பரம்பரை மற்றும் குழந்தைக் காவல் போன்ற பிரச்சினைகளுக்கு ஷரியாவின் பயன்பாட்டை "தனிப்பட்ட-நிலைச் சட்டம்" என்று மட்டுப்படுத்துகின்றன. மேற்கு ஆப்பிரிக்காவில் வடக்கு நைஜீரியாவைத் தவிர, புதிய இஸ்லாமிய மறுமலர்ச்சி முஸ்லிம் மக்கள்தொகையின் பிரிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், ஆப்பிரிக்காவில் மதச்சார்பின்மை எந்தவொரு கடுமையான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை. முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையிலான சகவாழ்வு அல்லது சகவாழ்வு பெரும்பாலும் அமைதியானதாகவே உள்ளது.

நைஜீரியாவில் முஸ்லிம்கள்:

நைஜீரியா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. 1999 ஆம் ஆண்டில், நைஜீரியாவின் வடக்கு மாநிலங்கள் ஷரியா தண்டனைச் சட்டத்தை ஏற்றுக்கொண்டன ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய முஸ்லிம் நாடுகளில் ஒன்றான எகிப்து, ஷரியாவை அதன் சட்டத்தின் முக்கிய ஆதாரமாகக் கூறுகிறது, இருப்பினும் அதன் தண்டனை மற்றும் சிவில் குறியீடுகள் பெரும்பாலும் பிரெஞ்சு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. பியூ நடத்திய கணக்கெடுப்பின்படி, ஆப்பிரிக்காவில் பதின்மூன்று நாடுகள் உள்ளன, அவற்றில் குறைந்தது இருபது சதவீத முஸ்லிம் மக்கள் மதப்பிரிவு அல்லாத இஸ்லாத்தைப் பின்பற்றுகிறார்கள்.

சமீபத்தில், உலக முஸ்லிம் லீக், முஸ்லிம் இளைஞர்களுக்கான உலக சபை மற்றும் பாரசீக வளைகுடாவின் அரபு நாடுகளில் சலாபி அரசாங்கங்களால் முதன்மையாக நிதியளிக்கப்படும் மாப் மற்றும் இஸ்லாமிய பள்ளிகளின் கூட்டமைப்பு போன்ற பல முஸ்லிம் அரசு சாரா அமைப்புகள் (என்ஜிஓக்கள்) காரணமாக ஆப்பிரிக்காவில் சலாபிசம் பரவத் தொடங்கியுள்ளது. பெரும்பாலும் சவுதி அரேபியாவை தளமாகக் கொண்ட இந்த சலாபிஸ்ட் அமைப்புகள், ஒரு வகையான பழமைவாத சீர்திருத்தவாதத்தை ஊக்குவிக்கின்றன இத்தகைய அரசு சாரா நிறுவனங்கள் ஆப்பிரிக்காவில் சலாபி ஆதிக்கம் செலுத்தும் மஸ்ஜித்துகள் மற்றும் இஸ்லாமிய மையங்களைக் கட்டியுள்ளன. மேலும் பலவற்றில் மத்திய கிழக்கில் பயிற்சி பெற்ற தூய்மையான ஆப்பிரிக்க முஸ்லிம்கள் பணியாற்றுகின்றனர். மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான கல்வி உதவித்தொகைகளும் சலாபிசத்தை மேலும் மேம்படுத்துவதற்காக வழங்கப்படுகின்றன. ஆப்பிரிக்க அறிஞர்கள் சலாபி இலட்சியங்களின் பிரபலத்தை உள்ளூர் கலாச்சார காரணிகள் மற்றும் முக்கிய ஆப்பிரிக்க சலாபி அறிஞர்கள், சீர்திருத்தவாதிகள், அமைப்புகள், அறிவுஜீவிகளின் சமூக முயற்சிகள் மற்றும் முஸ்லிம் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களுடனான அவர்களின் மத உறவுகள் ஆகியவற்றுடன் இணைக்கின்றனர்.

ஆப்பிரிக்க மக்களின் இதயங்களில் ஆழமாக வேரூன்றிவிட்டு பிரகாசிக்கும் இஸ்லாமிய ஒளி, இனி வரும் நாட்களில் மேலும் சூடர்விட்டு, அனைத்து குக்கிராமங்களிலும் வீசும் என்பது உண்மையாகும்,. ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் இஸ்லாமிய ஒளி, அங்குள்ள மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்