ராகுல் காந்தி ஆய்வு....!
உ.பி. ரேபரேலி ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை அதிகாரிகளுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை.
ராகுல் காந்தி ஆய்வு....!
உ.பி. ரேபரேலி ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை அதிகாரிகளுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை.
"400 மொழிகளை பேசி அசத்தும் முஸ்லிம் இளைஞர் மஹ்மூத் அக்ரம்"
ஏக இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கு பல அற்புதமான திறமைகளை வாரி வழங்கி இருக்கிறான். அந்த திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தி, வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது மனிதனின் பொறுப்பாகும். இப்படிப்பட்ட திறமைகளை தங்களுக்குள் இருப்பதை அறிந்து, அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்பவர்கள் உலகில் நிறைய பேர் இருந்து வருகிறார்கள். அத்தகைய வரிசையில் ஒருவராக இருப்பவர் தான் மஹமூத் அக்ரம்.
சென்னையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் மஹ்மூத் அக்ரம், தம்முடைய அற்புதமான சாதனையால் உலகில் உள்ள அனைவரின் பார்வையையும், கவனத்தையும், தம்மை நோக்கி திருப்பி வைத்துள்ளார். பலர் சாத்தியமற்றது என்று கருதுவதை, மஹமூத் அக்ரம், தனது கடுமையான உழைப்பால், ஆர்வத்தால் சாதித்துள்ளார். ஆம், 400 மொழிகளில் படிக்கவும், எழுதவும், தட்டச்சு செய்யவும் திறமை கொண்டுள்ள இந்த இளைஞர், 46 மொழிகளை மிகவும் சரளமாகப் பேச முடியும் என்பதை நிரூபித்துள்ளார். மஹ்மூத்தின் இந்த சாதனைகள் மூலம் அவருக்கு உலக சாதனை விருதுகள் கிடைத்தது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள மொழியியலாளர்களின் மத்தியில் மரியாதையைப் பெற்று தந்துள்ளது.
ஒரு மொழியியல் பயணம்:
மஹமூத் அக்ரமின் மொழிகளின் மீதான ஈர்ப்பு இளம் வயதில் ஆரம்பிக்க தொடங்கியது என்றே கூறலாம். தனது மகனின் ஆர்வத்தை கண்ட அவரது தந்தை ஷில்பீ மொழிப்பிரியன், அக்ரமை சரியான முறையில் வழிநடத்திச் சென்றார். தாம் மட்டுமே,16 மொழிகளைப் பேசும் ஷில்பீ மொழிப்பிரியன், "மொழி சார்ந்த வாய்ப்புகளிலிருந்து தன் மகனின் வாய்ப்புகள் பறிக்கப்படுவதை விரும்பவில்லை என்றும், தனது மனைவி அக்ரமுடன் கருத்தரிக்கப்பட்டபோது, குழந்தையின் ஆர்வத்தைத் தூண்ட உதவும் என்ற நம்பிக்கையில் மொழிகளைப் பற்றி தாங்கள் உரையாடியதாகவும், அக்ரமின் விஷயத்தில் அது பலித்ததாகத் தெரிகிறது" என்றும் கூறுகிறார்.
அக்ரமுக்கு மொழிகள் மீதான ஈர்ப்பு 4 வயதிலேயே தொடங்கியது. அவரது பெற்றோர் அவருக்கு தமிழ் மற்றும் ஆங்கிம் கற்பிக்கத் தொடங்கியதுபோது, ஆறு நாட்களில் ஆங்கில எழுத்துக்களில் அவர் தேர்ச்சி பெற்றதைக் கண்டு அவரது பெற்றோர் ஆச்சரியப்பட்டார்கள். அவரது திறமை அத்துடன் நிற்கவில்லை. அவர் மூன்று வாரங்களில் 299 தமிழ் எழுத்துக்களைக் கற்றுக்கொண்டார். இது பொதுவாக பல மாதங்கள் எடுக்கும் பணியாகும். அவரது தந்தையின் வழிகாட்டுதலின் மூலம், அக்ரம் விரைவாகவே வட்டெலுத்து, கிரந்தம் மற்றும் தமிழி போன்ற பண்டைய தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொண்டார். அவற்றில் அக்ரம் விரைவாக தேர்ச்சி பெற்றார்.
சாதனைகள் மற்றும் பதிவுகள்:
ஆறு முதல் எட்டு வயது வரை, அக்ரமின் மொழியியல் தேர்ச்சிக்கான சுயமான தேடல் அவரை 50 மொழிகளைக் கற்றுக்கொள்ள வழிவகுத்தது. இந்தப் பயணம் எட்டு வயதில் இளைய பன்மொழி தட்டச்சு செய்பவர் என்ற அவரது முதல் உலக சாதனைக்கு வழிவகுத்தது. அக்ரம் 70 மொழியியல் நிபுணர்களுடன் போட்டியிட்டு ஜெர்மன் இளம் திறமை விருதை வென்றார். 10 வயதில், அக்ரம் ஒரு மணி நேரத்திற்குள் 20 மொழிகளில் இந்திய தேசிய கீதத்தை எழுதி தனது இரண்டாவது உலக சாதனையை படைத்தார். மொழியியல் சிறப்பிற்கான அவரது பசி தொடர்ந்தது. மேலும் 12 வயதில், அவர் 400 மொழிகளில் படிக்க, எழுத மற்றும் தட்டச்சு செய்ய முடியும் என்பதை நிரூபித்தார். இதன்மூலம், 70 மொழியியல் நிபுணர்களுடன் போட்டியிட்டு ஜெர்மனியில் தனது மூன்றாவது உலக சாதனையைப் பெற்றார்.
அக்ரமின் மொழிகள் மீதான ஆர்வம் வளர்ந்ததால், அது அவரது வழக்கமான கல்விக்கு சவால்களை ஏற்படுத்தியது. அவர் ஐந்தாம் வகுப்பு வரை சென்னையில் படித்தார். ஆனால் அவரது ஆர்வத்திற்கு வேறு அணுகுமுறை தேவை என்பதை விரைவில் உணர்ந்தார். மொழிகளை மட்டுமே மையமாகக் கொண்ட ஒரு பள்ளியில் சேர விரும்பிய அவர், ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை என்பதை உணர்ந்து, இஸ்ரேலில் உள்ள ஒரு பள்ளியில் ஆன்லைன் மூலம், அரபு, ஸ்பானிஷ், பிரஞ்சு மற்றும் ஹீப்ரு போன்ற முக்கிய மொழிகளைக் கற்றுக்கொண்டார். மொழி அறிவில் வெற்றி இருந்தபோதிலும், வாழ்க்கையில் கல்விச் சான்றிதழ்களின் முக்கியத்துவத்தையும், சில சமயங்களில் அவை திறமையை விட எவ்வாறு முக்கியமானவை என்பதையும் தாம் உணர்ந்து கொண்டதாக அக்ரம் ஒப்புக்கொள்கிறார். எனவே தேசிய திறந்தவெளிப் பள்ளி நிறுவனம் மூலம் படிக்க முடிவு செய்து, அந்த வழியில் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெற்றார். அக்ரமின் தந்தை ஷில்பீ மொழிப்பிரியன், அவரது வெற்றிக்கான பயணத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள டானூப் சர்வதேச பள்ளியில் உதவித்தொகையுடன் உயர்நிலைப் பள்ளிப் படிப்பையைத் தொடங்கிய அக்ரம், இது தம்மை தாய்மொழி பேசுபவர்களுடன் உரையாடவும், அவரது மொழியியல் திறன்களை மேம்படுத்தவும் அனுமதித்தது என்கிறார். தனது வகுப்பறையில் மட்டும், 39 தேசிய இனத்தவர்கள் இருந்ததாகவும், தனது வகுப்புத் தோழர்களுடன் உரையாடுவது பல மொழிகளில் சரளமாகப் பேச தமக்கு உதவியது என்றும் கூறுகிறார்.
தமிழ் மொழியே சிறந்தது:
அக்ரம் இன்று பல துறைகளில் கல்வி பயின்று பட்டங்களைப் பெற்றுள்ளார். இங்கிலாந்தின் மில்டன் கீன்ஸில் உள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் மொழியியல், ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் மற்றும் சென்னை அழகப்பா பல்கலைக்கழகத்தில் அனிமேஷனில் அறிவியலில் இளங்கலை பட்டம் என பல பட்டங்களை பெற்றுள்ளார். மொழிகளை சரளமாகப் பேசுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் அக்ரமிற்கு ஆர்வம் உருவானது. அதன் காரணமாக இன்று, அவர் 15 மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவராக மாறியுள்ளார். மற்ற மொழிகளையும் ஒரு தாய்மொழிப் பேச்சாளர் அளவுக்குக் கற்றுக்கொள்கிறார். பல ஆண்டுகளாக அவர் கற்றுக்கொண்ட ஏராளமான மொழிகளுடன் தொடர்பில் இருக்க சமூக ஊடகங்களையும் பொழுதுபோக்கையும் அக்ரம் பயன்படுத்துகிறார்.
அக்ரம் தேர்ச்சி பெற்ற மொழிகளில், தமிழ் அவருக்கு மிகவும் பிடித்தமான மொழியாகும். “தமிழ் தனது தாய்மொழி என்றும், எனவே அது தன் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது" என்று கூறி அவர் மகிழ்ச்சி அடைகிறார். அக்ரமைப் பொறுத்தவரை, அவரது சாதனைகள் ஒரு பெரிய இலக்கின் ஒரு பகுதியாகும். 2016 ஆம் ஆண்டில், அக்ரமின் தந்தை, ஷில்பி சென்னையின் ஷெனாய் நகரில் அக்ரம் குளோபல் லாங்குவேஜஸ் நிறுவனத்தை நிறுவினார். தனது மகனுக்கு மட்டுமே பல மொழிகளைக் கற்றுக் கொள்வது சுயநலம் என்று உணர்ந்ததாலும், மொழிகளின் சக்தியால் மற்றவர்கள் பயனடைய வேண்டும் என்று விரும்பியதாலும், இந்த நிறுவனத்தை தொடங்கியதாக அவர் கூறுகிறார். இந்த நிறுவனம் இந்தியா மற்றும் வளைகுடா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகளை வழங்குகிறது. ஒவ்வொரு மாதமும் குறைந்தது 150 மாணவர்களுக்கு கற்பிக்கிறது. ஷில்பீ மற்றும் அக்ரம் நடத்திய ஆன்லைன் வகுப்புகள் மூலம் இந்தி, பிரஞ்சு, ஸ்போக்கன் இங்கிலீஷ், அமெரிக்க உச்சரிப்பு மற்றும் தெலுங்கு ஆகியவற்றைக் கற்றுக்கொண்டு பலர் தற்போது சாதனை புரிந்து வருகிறார்கள்.
பிற மொழிகளில் தமிழ் இலக்கியங்கள்:
திருக்குறள் மற்றும் தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கியப் பொக்கிஷங்களை முடிந்தவரை பல மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதே அக்ரமின் கனவாகும். தற்போது 50 மொழிகளைப் பேசுபவர்கள் மட்டுமே திருக்குறளை அணுக முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. உலகளாவிய பார்வையாளர்கள் தமிழின் வளமான பாரம்பரியத்தை அறிய வேண்டும் என்று விரும்பும் அக்ரம், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் மொழியியலில் பேராசிரியராக வேண்டும் என்பதே அக்ரமின் நோக்கமாக இருந்து வருகிறது. தனது திறமையை வளர்த்ததற்காக தனது பெற்றோரைப் பாராட்டும் அக்ரம், "திறமை தனிநபருக்குள் இருக்கிறது. ஆனால் அதை அங்கீகரித்து ஆதரிப்பது பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்களைப் பொறுத்தது. அவர்களின் ஊக்கம் இல்லையென்றால், தாம் 16 மொழிகளில் நிறுத்தியிருக்கலாம்" என்றும் தெரிவித்து மகிழ்ச்சி அடைகிறார். சென்னையில் எழுத்துக்களைக் கற்கும் ஆர்வமுள்ள நான்கு வயது சிறுவனிலிருந்து உலக சாதனை படைத்த பன்மொழிப் புலமையாளர் வரையிலான மஹ்மூத் அக்ரமின் பயணம், ஆர்வம் மற்றும் விடாமுயற்சியின் தாக்கத்தை நினைவூட்டுவதாகும். தனது பணி மற்றவர்களை மொழியியல் பன்முகத்தன்மையைப் பாராட்ட ஊக்குவிக்கும் என்று நம்பும் அக்ரம், ஒரு மொழியை அறிவது மக்களை வீட்டில் இருப்பது போல் உணர வைக்கும் ஒரு சக்திவாய்ந்த வழியாகும் என்றும் கூறுகிறார். அக்ரமின் இந்த பயணம் உலகெங்கிலும் உள்ள மொழியியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. அர்ப்பணிப்பும் ஆர்வமும் கல்வி மற்றும் கற்றலில் தடைகளை உடைக்கும் என்பதை நிரூபிக்கிறது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
இ.யூ.முஸ்லிம் லீக் தொண்டர்கள் அனைவரும் போர்க்களத்தில் இயங்குவதுபோன்று இனி செயல்பட வேண்டும்.....!
மதுரையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரை....!!
மதுரை, பிப்.15- தமிழகத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும், இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்களை உருவாக்கி, கட்சியை மிகப்பெரிய வலிமையாக சக்தியாக மாற்ற இ.யூ.முஸ்லிம் லீக் தொண்டர்கள் அனைவரும் உழைக்க வேண்டும் என தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வலியுறுத்தியுள்ளார்.
இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டம் 14.02.2025 வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 3.30 மணியளவில் மதுரையில் உள்ள ஜெ.எஃப்.ஏ.லக்கி பேலஸ் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நிறைவுயாற்றினார்.
அப்போது பேசிய அவர், மிகச் சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். பொதுக்குழு கூட்டத்தை மிக நல்ல முறையில் ஏற்பாடு செய்த மாநில செயலாளர் அவ்தா காதர், மாவட்ட துணைத் தலைவர் பொறியாளர் ஜாகிர் ஹுசைன், எம்.எஸ்.எப். மாவட்ட அமைப்பாளர் ஷாருக்கான் மற்றும் மதுரை தெற்கு, மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எமது பாராட்டுதல்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுக்குழு மற்றும் தேசிய கவுன்சில்:
நாம் எதிர்பார்த்ததைவிட மிக அதிகளவு உறுப்பினர்கள் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்து சிறப்பித்து இருக்கிறார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக வந்து கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் இனி பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பார்கள். எனவே அவர்கள் அனைவரும் பொதுக்குழு உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டிய இருநூறு ரூபாயை தலைமை அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட 523 பேரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக கருதப்படுவார்கள். எனவே அவர்கள் முறைப்படி உறுப்பினர் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சேர்த்து 10 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். புதிய பொதுக்குழு கணக்கின்படி 67 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவற்றை இந்த மாத இறுதிக்குள் நாம் செய்தாக வேண்டும். தேசிய தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி 3 பேர் நியமிக்கப்படுவார்கள். ஆக மொத்தம் தமிழகத்தில் இருந்து 70 பேர் தேசிய கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார்கள். தேசிய கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்படும் அனைவரும் 500 ரூபாயை கட்டணமாக செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
அனைத்து வார்டுகளிலும் உறுப்பினர்கள்:
தமிழகத்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்கள் இ.யூ.முஸ்லிம் லீக் தனது நிர்வாக பணிகளுக்காக 52 மாவட்டங்களாக பிரித்து பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் 12, 838 வார்டுகள் உள்ளன. தமிழகத்தில் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள் 36 மாவட்ட ஊராட்சிகள் இவற்றில் ஒரு லட்சத்து அறுபதாயிரத்து நானூற்றி ஐம்பத்து மூன்று (1, 60, 453) வார்டுகள் உள்ளன.
மேற்கண்ட அனைத்து வார்டுகளிலும் இ.யூ.முஸ்லிம் லீகின் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வார்டிலும் முஸ்லிம் லீகின் தலைமை அமைப்போ, அல்லது இணை அமைப்போ அல்லது சார்பு அமைப்போ உருவாக்கிட மாவட்ட முஸ்லிம் லீக்களும் மற்றும் சார்பு அமைப்பின் நிர்வாகிகளும் இணைந்து செயல்பட வேண்டும். இந்த பணிகளை மார்ச் முதல் தேதி தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும்.
போர்க்களத்தில் இயங்குவது போன்று:
இ.யூ.முஸ்லிம் லீக் தொண்டர்கள் இதுவரை எப்படி செயல்பட்டார்கள் என்பது முக்கியம் அல்ல. இனி வரும் நாட்களில் போர்க்களத்தில் நின்று பணியாற்றுவதைப் போன்று மிகவும் வீரியத்துடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இ.யூ.முஸ்லிம் லீக் அமைப்பு இருக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இதை கவனத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், நமது இயக்கம் வலிமை வாய்ந்த இயக்கமாக மாறும். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை அனுப்பி வைக்க முடியும். அத்துடன் நம்முடைய சமுதாயத்திற்கு மட்டுமல்லமால், சகோதர சமுயாத்திற்கும் செயல்படக் கூடிய நல்ல வாய்ப்பு நமக்கு கிடைக்கும். எனவே அனைவரும் அதில் தனிக் கவனம் செலுத்தி செயல்பட உங்கள் அனைவரும் அழைக்கிறோம்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.
சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக மக்களிடையே எந்த பிரச்சினையும் கிடையாது.....!
தமிழகத்தில் நிலவும் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பா.ஜ.க., இந்துத்துவ அமைப்புகள் வேண்டும் என்றே பிரச்சினையை கிளப்புகின்றன....!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி....!
மதுரை, பிப்.15-தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுன் வாழ்ந்து மத நல்லிணக்கத்தை பேணி வரும் நிலையில், அதை சீர்குலைக்கும் வகையில் பா.ஜ.க., இந்துத்துவ அமைப்புகள் வேண்டும் என்றே பிரச்சினையை கிளப்பி வருவதாக இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
காயிதே மில்லத் சென்டர்:
மதுரையில் இ.யூ.முஸ்லிம் லீகின் மாநில பொதுக்குழு கூட்டம் 14.02.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் பேசினார். அதன் முழு விவரம் வருமாறு:
இ.யூ.முஸ்லிம் லீக் கட்சியில் மேற்பட வேண்டிய நிர்வாக சீர்திருத்தங்கள், கட்சியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் ஆகியவறை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது. சென்னையில் உள்ள இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை அலுவலகம் கடந்த 1948ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
தற்போது தலைநகர் டெல்லியில் புதிதாக தலைமை அலுவலகம் ஒன்றை கட்டிக் கொண்டு இருக்கிறோம். இதன் திறப்பு விழா ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும். டெல்லியில் உள்ள இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு காயிதே மில்லத் சென்டர் என பெயரிட்டுள்ளோம். இங்கு தற்போது பராமரத்துப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இங்கு தலைமை அலுவலகம் முழுவீச்சில் செயல்படும்.
இந்தியா முழுமைக்கான திராவிட மாடல்:
தமிழகத்தைப் பொறுத்தவரை, தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் தமிழக அரசு, ஒரு திராவிட மாடல் அரசாகும். இந்த திராவிட மாடல் அரசு தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடைபெற வேண்டும். அதன்மூலம் அனைத்துச் சமுதாய மக்களுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நல்ல மாற்றங்கள், செயல்படுத்தப்படும் சிறப்பான திட்டங்கள் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
திராவிட மாடல் அரசுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் தனது முழு ஆதரவை தமிழகத்தில் அளித்து வருகிறது இதேபோன்று, மற்ற மாநிலங்களில் உள்ள இ.யூ.முஸ்லிம் லீக் ஊழியர்கள் நன்கு செயல்பட்டு, திராவிட மாடல் அரசு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் தமிழகத்தில் நிலவும் மத ஒற்றுமை, சமூக மேம்பாடு, மத நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தும் மற்ற மாநில மக்களும் புரிந்துகொள்ள வாயப்பு உருவாகும். இதற்கு இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்ந்து தனது பங்களிப்பையும், பணிகளையும் செய்யும்.
முக்கிய கோரிக்கைகள்:
இந்த மதுரை பொதுக்குழுவில். நாங்கள் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம். குறிப்பாக தமிழக அரசுக்கு பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். இதேபோன்று, சென்னையில் உள்ள காயிதே மில்லத் மணிமண்டபம் சுற்றியுள்ள நிலப்பகுதியில், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் பெயரில் காயிதே மில்லத் அரபு தமிழ் ஒப்பாய்வு பல்கலைக்கழகம் உருவாக்கி தர வேண்டும். மேலும், இதே பகுதியில், உர்தூ ஆசிரியர் பயிற்சி கல்லூரியையும் அமைத்து தர வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரோல் மிகவும் போற்றப்பட்ட இ.யூ.முஸ்லிம் லீக் முன்னாள தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத் அவர்களின் நூற்றாண்டு விழா வரும் அக்டோபர் 4ஆம் வருவதால் அந்த விழாவை தமிழக அரசின் சார்பில் நடத்த வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு 2025 :
தமிழகத்தை பொறுத்தவரை இ.யூ.முஸ்லிம் லீகின் மாநில அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் கட்சி நிதியாக 25 கோடி ரூபாயை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
தமிழகத்தில் உள்ள மஸ்ஜிதுகளை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மஹல்லா ஜமாஅத்துகளின் ஒருங்கிணைப்பு மாநாட்டை தமிழ்நாடு மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு 2025 என்ற பெயரில் டிசம்பர் இறுதி வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் கேரள மாநில தலைவர் பானக்காடு செய்யது சாதிக் அலி தங்ஙள், இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்சாலிக்குட்டி, தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முகமது பஷீர் எம்.பி., தேசிய பொருளாளர் பி.வி.அப்துல் வகாப் எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா பி.ஏ.காஜா முயினுத்தீன் பாகவி, பொதுச் செயலாளர் மௌலானா டாக்டர் அன்வர் பாதுஷாஹ் உலவி, முஸ்லிம் தனியார் சட்ட வாரிய தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோரையும் அழைக்க திட்டமிட்டுள்ளோம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக சதி:
திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழக மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அனைத்துச் சமுதாய மக்களும், ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அங்குள்ள மக்களிடம் எந்த பிரச்சினையும் இல்லை. அவர்கள் வழக்கம் போல தங்களுடைய வழிப்பாடுகளை செய்து வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் சுமார் 1800க்கும் மேற்பட்ட தர்காகள் உள்ளன. இந்த தர்காகளில் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து சமுதாய மக்களும் சென்று வழிபாடு செய்கிறார்கள். காலம் காலமாக இருக்கும் வழக்கமான நடைமுறையின்படி, ஆடு, கோழி ஆகியவற்றை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வருகிறார்கள். இதேபோன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவிலும் அனைத்து சமுதாய மக்களும் சென்று வழிபாடு செய்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், பா.ஜ.க. மற்றும் இந்துத்துவ அமைப்புகள் தற்போது வேண்டும் என்றே பிரச்சினையை கிளப்பி இருக்கிறார்கள். மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதை சீர்குலைக்கும் வகையிலும், மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் பா.ஜ.க. மற்றும் இந்துத்துவ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கையை எடுத்து, நீதிமன்றத்திலும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் கூட, திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும், வெளியூர்களில் இருந்து வரும் சிலர் மட்டுமே பிரச்சினையை கிளப்புவதாகவும் கூறியுள்ளார். எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதன் மூலம் தற்போது திருப்பரங்குன்றம் பகுதி அமைதியாக இருந்து வருகிறது.
இந்து-முஸ்லிம் மக்களிடையே இருக்கும் ஒற்றுமையை யாரும் கெடுத்துவிடக் கூடாது என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தமிழகம் எப்போதும் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக, அமைதியாக, நிம்தியாக வாழ வேண்டும். இதற்காக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இ.யூ.முஸ்லிம் லீக் தனது ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
சர்வ சமய நல்லிணக்க மாமன்றம்:
தமிழகத்தில் குன்றக்குடி அடிகளார் அவர்கள், திருவருள் பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி சிறப்பாக செயல்பட்டார்கள். அதன்மூலம் நல்ல பலன் கிடைத்தது. தற்போது மத அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வரும் நிலையில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் சர்வ சமய நல்லிணக்க மாமன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக இ.யூ.முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் இருப்பார்கள். இந்த அமைப்பு 11 பேர் கொண்ட அமைப்பாக செயல்படும். மக்கள் மத்தியில் நல்ல புரிதலை உருவாக்கி, நல்லிணக்கத்தை ஏற்படும் வகையில் இந்த சர்வ சமய நல்லிணக்க மாமன்றம் தனது பணிகளை சிறப்பான முறையில் செய்யும்.
திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம்:
திமுகவிற்கும் இ.யூ.முஸ்லிம் லீகிற்கும் உள்ள தொடர்பு கொள்கை ரீதியான தொடர்பாகும். அரசியலுக்காக நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. கொள்கையின் அடிப்படையில் நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையில் திமுக உறுதியாக உள்ளது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என திமுக சொல்கிறது. இதைத் தான் இ.யூ.முஸ்லிம் லீகும் காலம் காலமாக சொல்லிக் கொண்டே இருக்கிறது. எனவே, திமுக-இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்பு என்பது கொள்கையின் அடிப்படையில் உள்ள தொடர்பாகும். தேர்தலில் நின்று சீட்டுகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை.
இதை திமுக தலைமை நன்கு அறிந்து இருக்கிறது. அதன் காரணமாக தான் இ.யூ.முஸ்லிம் லீகுடன் திமுக தொடர்ந்து கூட்டணி வைத்துக் கொள்கிறது. திமுகவுடன் நாங்கள் முன்பும் இருந்தோம். இப்போதும் இருக்கிறோம். எப்போதும் இருப்போம். மற்ற கட்சிகள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை குறித்து உங்கள் கேள்விக்கு என்னுடைய பதில் இதுதான். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நன்மை செய்யலாம். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். பிற யூகமான கேள்விகளுக்கு தற்போது எந்த பதிலும் அளிக்க முடியாது.
ஒன்றிய அரசு பாரபட்சம்:
தமிழக அரசு திராவிட மாடல் ஆட்சியை மிகவும் சிறப்பாக அளித்துவரும் நிலையில், ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களையும், நிதியையும் முறையாக ஒதுக்குவதில்லை. மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பா.ஜ.க. அரசு நடந்துகொள்கிறது. தங்களுக்கு வேண்டிய மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீட்டை அதிகமாக கொடுக்கிறது. நல்ல செய்யும் தமிழநாட்டை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது.
ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆ ட்சிக்கு வந்து மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. வெறும் வெற்று முழக்கங்களை மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்கிறது. இதனை இ.யூ.முஸ்லிம் லீக் கண்டிக்கிறது. தமிழகத்திற்கு தேவையான நிதியையும், நல்ல திட்டங்களையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு அளிக்க வேண்டும். அதன்மூலம் தமிழக மக்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்துவரும் பணிகள் மேலும் சிறப்பாக செய்ய முடியும். நல்ல திட்டங்களை கொண்டுவந்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர முடியும்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகீதின் தெரிவித்தார்.
செய்தியாளர்களின் சந்திப்பின்போது, இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஷாஜஹான், மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், மாநில துணைத் தலைவர் கே.நவாஸ் கனி எம்.பி, மாநில துணைத் தலைவர் டாக்டர் தாவூத் பாஷா, மாநில துணைத் தலைவர் கே.டி.கிஸர் அகமது, மாநில செயலாளர்கள் காயல் மஹபூப், எச்.அப்துல் பாசித், வழக்கறிஞர் வி.ஜீவகிரிதரன், ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான், கே.எம்.நிஜாமுத்தீன், காதர் பாஷா (எ) அவுதா காதர், மாநில துணைச் செயலாளர்கள் ஆப்பனூர் ஜபரூல்லாஹ், எஸ்.எ.இப்ராஹிம் மக்கீ, வி.எம்.பாருக், கே.ஏ.டபுள்யூ அப்துல் காதர் ஷெரீப், பி.எம்.அப்துல் ஜப்பார், ஏ.எஸ்.அப்துர் ரஹ்மான் ரப்பானி, மகளிர் அணி தேசிய தலைவி பாத்திமா முஸப்பர், எம்.எஸ்.எஃப். தேசிய பொதுச் செயலாளர் எஸ்.எச்.முஹம்முது அர்ஷத் உட்பட முன்னணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
"கைரேகைகளும், மனிதமும்"
சில மாதங்களுக்கு முன்பு எங்கள் பிளாட் மிகவும் விலையுயர்ந்த வண்ணப்பூச்சுகளால் அலங்கரிக்கப்பட்டது. நானும் என் மனைவியும், எனது தாயரான என் பாசமிகு அம்மா கழிப்பறைக்குச் சென்று வருவதைப் பார்க்கும்போதெல்லாம், அவர்கள் எழுந்து நிற்கும்போது ஆதரவுக்காக சுவரில் சாய்ந்து கொள்வதை அடிக்கடி கவனிப்போம். இதன் காரணமாக, அவர்களின் உள்ளங்கை மற்றும் கைரேகைகள் சுவரில் தொடர்ந்து தோன்றின. அம்மாவின் இந்த நடத்தை என் மனைவிக்கு மிகவும் விரும்பத்தகாததாக இருந்தது. உண்மையைச் சொன்னால், எனக்கும் இது பிடிக்கவில்லை. அதனால்தான் நான் அவர்களிடம் பலமுறை சொன்னேன். அழுக்கு கைகளால் சுவரைத் தொடுவதன் மூலம், அவர்களின் கைகளின் அடையாளங்கள் சுவரின் அழகிய தோற்றத்தைக் கெடுத்துவிடும் என்று நான் பலமுறை சொன்னேன்.
இதையெல்லாம் மீறி, அம்மா, தனது பழக்கத்தை கைவிடவில்லை. ஒருவேளை அவர்களின் வயதின் காரணமாக, அவர்கள் எனது வழிமுறைகளை மறந்துவிட்டிருக்கலாம். அல்லது இந்த விஷயங்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கலாம். அவர் இளமையில் மிகவும் நுட்பமானவராக இருந்தார் என்பது எனக்குத் தெரியும். ஒரு நாள் நாங்கள் எல்லோரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஒருவேளை அம்மாவுக்கு தலைவலி இருந்திருக்கலாம். அம்மா எழுந்து போய் அலமாரியிலிருந்து வலி நிவாரணி எண்ணெய் பாட்டிலைத் திறந்தார். கையில் சிறிது எண்ணெயை எடுத்து நெற்றியில் தேய்த்துக் கொண்டார். பாட்டிலை மூடிவிட்டு வாஷ்ரூம் நோக்கி நடந்தார். அவர்கள் வெளியேறும்போது, வழக்கம் போல் சுவரில் சாய்ந்து, தங்கள் கைரேகைகளையும் உள்ளங்கை ரேகைகளையும் சுவரில் விட்டுச் சென்றனர். சுவரில் எண்ணெய் படிந்த உள்ளங்கை மற்றும் கைரேகைகள் தெளிவாகத் தெரிந்தன என்பது தெளிவாகத் தெரிந்தது.
இதைப் பார்த்த என் மனைவி கோபத்தில் கொதித்து என்னைத் திட்ட ஆரம்பித்தாள். அப்போதும் கூட, என்னால் என் கோபத்தை அடக்க முடியவில்லை. இனிமேல், அவர் சுவரைத் தொடக்கூட முயற்சிக்கக் கூடாது என்று நான் அம்மாவிடம் கடுமையாகச் சொன்னேன். அவர் ஏக்கக் கண்களால் என்னைப் பார்த்தார். அவர்களின் கண்களில் வெட்கமும் சங்கடமும் தெரிந்தன. இதைப் பார்த்ததும், நானும் மிகவும் வருத்தப்பட்டு, கண்களைத் தாழ்த்திக் கொண்டேன். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் எதுவும் சொல்ல எனக்கு தைரியம் இல்லை. என் அம்மா தலை குனிந்து திரும்பிச் செல்வதை நான் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, அம்மா சுவரில் சாய்வதை நிறுத்தினார். ஆனால் ஒரு நாள், கழிப்பறைக்குச் செல்லும்போது, அவர் சுவரில் விழுந்து பின்னர் படுக்கையில் இருந்து விழுந்தார். இதனால் சில நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார். கடைசி நேரத்தில் அம்மாவிடம் மன்னிப்பு கேட்கக்கூட முடியாதது எனக்கு மனவேதனையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த சில மாதங்களுக்குப் பிறகு, எங்கள் பிளாட்டை வண்ணம் தீட்ட ஒரு நல்ல ஓவியரை அழைத்தேன்.
ஓவியம் வரைந்து கொண்டிருக்கும்போது, குறிக்கப்பட்ட சுவரை சுத்தம் செய்து சுரண்டுவதற்காக அவன் கையை நீட்டியபோது என் மகன் அவனைத் தடுத்தான். அவர், "இந்த அடையாளங்களை அழிக்காதே!" என்றார். இவை என் அன்பான பாட்டியின் அடையாளங்கள் என்று கூறினான். அந்த ஓவியர் தனது வேலையில் நிபுணராகவும், நல்ல கலைஞராகவும் இருந்தார். அவர் எனது மகனுக்கு ஆறுதல் கூறி, கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். இந்தக் குறிகள் கீறப்படவே மாட்டாது. சுவரில் இருந்த இந்தக் குறிகளைச் சுற்றி ஒரு வேலி வரைந்து, அதை அழகான வடிவமைப்புகளாலும், கவர்ச்சிகரமான வண்ணங்களாலும் அலங்கரித்தார். எங்கள் வீட்டிற்கு வந்த அனைவரும் இந்த தலைசிறந்த படைப்பைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
காலப்போக்கில், என் வயதும் மங்கத் தொடங்கியது. எனக்கும் வயதாக ஆரம்பித்து விட்டது. ஒரு நாள், என் வீட்டைச் சுற்றி நடந்து கொண்டிருந்தபோது, நான் தடுமாறிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். எனக்கு கொஞ்சம் ஆதரவு தேவை. ஆனால் நானும், என் மனைவி தனது மாமியாரான என் அம்மாவையும் நடத்திய விதத்தையும் நினைவில் கொண்டு, சுவரில் சாய்வதை நிறுத்தினேன். ஆனால் என் மகன் என் முகத்திலிருந்து என் நிலையை உணர்ந்தான். மேலும், விபத்து ஏற்படாமல் இருக்க, சுவரைப் பிடித்துக் கொண்டு, தயக்கமின்றி நடக்கச் சொல்வார்.
அந்த நேரத்தில், என் மகன் என்னுடன் இருப்பது போன்ற ஒரு இனிமையான உணர்வு எனக்கு ஏற்பட்டது. நான் கவலைப்படுகிறேன். சில காலத்திற்கு முன்பு பலவீனமான என் அம்மாவை நான் எப்படி நடத்தினேன் என்பதை அறிந்திருந்தும் கூட. என் பேத்தியும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் ஓடி வந்து என் கையைப் பிடித்து, தன் சிறிய தோளில் வைத்து, என்னைத் தாங்கி, குளியலறைக்கு அழைத்துச் சென்றாள். அந்த நேரத்தில், என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நான் என் அம்மாவை இப்படி ஆதரித்திருந்தால், ஒருவேளை அவர் இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருப்பார் என்று நினைக்க ஆரம்பித்தேன். அதே மாலையில், தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, என் பேத்தி தனது ஓவியப் புத்தகத்தைக் கொண்டு வந்தாள். மேஜையில் அதைத் திறந்து, எங்கள் வீட்டின் சுவரில் இருந்த ஓவியத்தை அவர் தனது வரைபடப் புத்தகத்தில் நகலெடுத்த பக்கத்தை எனக்குக் காட்டினார். அவருடைய ஓவிய ஆசிரியரும், முதல்வரும் அவரை மிகவும் பாராட்டியதாக அவர் என்னிடம் கூறினார். இதைக் கேட்டதும் எனக்குக் கண்ணீரை அடக்க முடியவில்லை. புத்துணர்ச்சியூட்டும் உணர்வுடன், இதயத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து ஒரு எதிரொலி வந்தது: "நான் விரும்புகிறேன்!" ஒவ்வொரு குழந்தையும் என் பேத்தியைப் போல தங்கள் பெரியவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளட்டும்.
- நன்றி: தி இன்குலாப் உர்தூ நாளிதழ்
- தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
An absolutely brilliant intervention on the budget by Shri PChidambaram.
Pointed, piercing, tears apart cheerleaders and the propagandists with numbers and data
On another note - why doesn’t the FM ever smile?
"மலேசியாவில் நடைபெறும் மூன்றாவது உலக இஸ்லாமிய
சுற்றுலா மற்றும் வர்த்தக விருதுகள் வழங்கும் விழா"
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது உலக இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தக விருதுகள் (WITA) 2025 ஆம் ஆண்டிற்கான பரிந்துரைகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கத்தால் (MATTA) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, உலக அளவில் இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத் துறைகளில் சிறந்து விளங்குவதை முன்னிலைப்படுத்தி கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மலேசியாவின் துடிப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த மதிப்புமிக்க விருது வழங்கும் விழா, உலகளாவிய இஸ்லாமிய பொருளாதாரத்தில் புதுமை, நிலைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பைக் கொண்டாடுவதற்கான ஒரு மைல்கல்லாகும்.
ஒரு முக்கிய நிகழ்வு:
இந்த விருது வழங்கும் விழா வரும் ஆகஸ்ட் 25, 2025 திங்கட்கிழமை, மலேசியாவின் சிலாங்கூரில் உள்ள பந்தர் சன்வேயில் அமைந்துள்ள ஆடம்பரமான சன்வே ரிசார்ட் ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த சிறப்பான நிகழ்வு இரண்டு முக்கிய சர்வதேச நிகழ்வுகளுடன் ஒத்துப்போகிறது. உலக இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தக கண்காட்சி (WITEX) மற்றும் உலக கலாச்சார மற்றும் கலை விழா (WCAF). இந்த நிகழ்வுகள் ஒன்றாக, தலைவர்கள், புதுமைப்பித்தர்கள் மற்றும் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாச்சாரத் தொழில்களில் பங்குதாரர்களுக்கான செயல்பாட்டு மையத்தை உருவாக்கும்.
விருதுகளின் நோக்கங்கள், உலக இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தக விருதுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தில் சிறந்த சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை கௌரவித்தல், இஸ்லாமிய பொருளாதாரத்திற்குள் புதுமை, நிலைத்தன்மை மற்றும் சிறப்பை வளர்ப்பது,பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சார பன்முக புரிதலின் இயக்கிகளாக இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.
பொருளாதார மற்றும் கலாச்சார செழிப்பை மேம்படுத்துவதில் நாட்டின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், ஹலால் சுற்றுலா மற்றும் வர்த்தகத்திற்கான உலகளாவிய மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் மலேசியாவின் பெரிய தொலைநோக்குடன் இந்த நோக்கங்கள் ஒத்துப்போகின்றன.
தொலைநோக்கு பார்வை:
"உலக இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தக விருதுகள் சிறப்பின் அளவுகோலாக மாறியுள்ளன. தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் புதுமை மற்றும் சேவையின் எல்லைகளைத் தாண்ட ஊக்குவிக்கின்றன. இந்த நிகழ்வு சாதனைகளின் கொண்டாட்டம் மட்டுமல்ல, ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான ஒரு தளமாகும்." என்று உலக இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தக விருதுகள் அமைப்பின் தலைவர் டாக்டர் இஸ்யான் டயானா தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத் தொழில்களில் முன்னேற்றத்திற்கு WITA ஒரு ஊக்கியாக இருக்கும். சமூக உணர்வையும் பகிரப்பட்ட நோக்கத்தையும் வளர்ப்பதன் மூலம், விருதுகள் தொழில்துறை நிர்வாகிகளை உலகளாவிய பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றங்களுக்கு புதுமைப்படுத்தவும் பங்களிக்கவும் ஊக்குவிக்கின்றன.
பரிந்துரைகள் மற்றும் தகுதி:
3வது WITA க்கான பரிந்துரைகள் இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை முன்னேற்றுவதில் விதிவிலக்கான செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் முன்முயற்சிகளுக்கு திறந்திருக்கும். தொழில்துறை தலைவர்கள், புதுமைப்பித்தர்கள் மற்றும் பங்குதாரர்கள் பங்கேற்கவும் இந்த துடிப்பான துறையில் தங்கள் பங்களிப்புகளை வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். பரிந்துரைக்கப்பட்டவர்கள் பின்வரும் அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுவார்கள்:
இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தக அனுபவத்தை மேம்படுத்தும் புதிய யோசனைகள், சேவைகள் அல்லது நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல்., சுற்றுச்சூழல் நட்பு மற்றும் கலாச்சார ரீதியாக உணர்திறன் வாய்ந்த நடைமுறைகளுக்கான அர்ப்பணிப்பு., பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சார புரிதலுக்கு அளவிடக்கூடிய பங்களிப்புகள் என மதிப்பீடு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வெற்றியாளர்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
உலகளாவிய ஹலால் பொருளாதாரத்தில் ஒரு தலைவராக மலேசியா தனது நிலையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக WITA விருதுகள் உள்ளன. WITEX மற்றும் WCAF போன்ற நிகழ்வுகள் விருதுகளுடன் நடைபெறுவதால், இந்த நிகழ்வு கலாச்சாரம், வணிகம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் தனித்துவமான ஒருங்கிணைப்பை உறுதி செய்கிறது.
உலக இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தக கண்காட்சி (WITEX) இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தில் வாய்ப்புகளை ஆராய உலகளாவிய பங்குதாரர்களை ஒன்றிணைக்கிறது.. ஹலால் பயண சேவைகள் முதல் இஸ்லாமிய நிதி வரை, WITEX ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான தளத்தை வழங்குகிறது. இஸ்லாமிய கலை மற்றும் கலாச்சாரத்தின் வளமான பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில் உலக கலாச்சார மற்றும் கலை விழா (WCAF) இருக்கும். இஸ்லாமிய உலகம் முழுவதிலுமிருந்து பாரம்பரிய நிகழ்ச்சிகள், சமையல் மகிழ்ச்சிகள் மற்றும் கைவினைஞர் கைவினைகளை அனுபவிக்கும் வாய்ப்பை பங்கேற்பாளர்களுக்கு வழங்குகிறது.
3வது WITA-வை நடத்தும் மலேசியாவின் பங்கு இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத் துறைகளில் அதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஹலால்-நட்பு உள்கட்டமைப்பு, கலாச்சார செழுமை மற்றும் உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் மூலோபாய முயற்சிகள் காரணமாக, முஸ்லிம் பயணிகளுக்கான சிறந்த இடங்களின் பட்டியலில் நாடு தொடர்ந்து இடம்பிடித்துள்ளது. மேலும், ஹலால் பொருளாதாரத்தில் புதுமை மற்றும் சிறந்து விளங்குவதற்கான மையமாக மலேசியா தனது நற்பெயரை தொடர்ந்து வலுப்படுத்துகிறது. இந்த முயற்சிகள் நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் அதன் பரந்த பொருளாதார இலக்குகளுக்கும் பங்களிக்கின்றன.
விருதுகளின் முக்கிய சிறப்பம்சங்கள்:
இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தில் புதிய அளவுகோல்களை அமைத்த முன்னோடிகளை இந்த விருதுகள் கௌரவிக்கும். அத்துடன், ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைகளை வளர்க்கும் வகையில், தொழில்துறைத் தலைவர்களுடன் இணையும் வாய்ப்பு பங்கேற்பாளர்களுக்கு கிடைக்கும். இந்த நிகழ்வு இஸ்லாமிய கலை, இசை மற்றும் உணவு வகைகளின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடும். இது ஒரு துடிப்பான கலாச்சார பரிமாணத்தைச் சேர்க்கும்.
இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதன் மூலம், விருதுகள் இந்தத் துறைகளில் முதலீடு மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டவை.
இதில் பங்கேற்று விருதுகள் பெறும் வெற்றியாளர்கள் சர்வதேச தெரிவுநிலை மற்றும் நம்பகத்தன்மையைப் பெறுகிறார்கள். தொழில்துறையில் உள்ள முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து ஒத்துழைப்பு மேம்படுத்துதல், இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தில் சமீபத்திய போக்குகள் மற்றும் புதுமைகளைப் பற்றி அறிந்துகொள்ளுதல், செழிப்பான உலகளாவிய ஹலால் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் இந்த நிகழ்வு பயன் அளிக்கும்.
இதன்மூலம், 3வது உலக இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தக விருதுகள் 2025, இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தில் சிறப்பைக் கொண்டாடும் மற்றும் புதுமைகளை வளர்க்கும் ஒரு மைல்கல் நிகழ்வாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. மலேசியா மைய நிலைக்கு வரும்போது, இந்த விருதுகள் உலகளாவிய ஹலால் பொருளாதாரத்தில் கலாச்சார மற்றும் பொருளாதார தலைமைத்துவத்திற்கான நாட்டின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன. தொழில்துறைத் தலைவர்களும் புதுமைப்பித்தன்களும் தங்கள் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கவும், இந்த வரலாற்று நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள், இது எதிர்கால தலைமுறைகளுக்கு இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
Speech...!
The income tax cut is the FM's main thrust of this debate.
The House should know that only 3.2 crore persons pay income tax, as per the last figures available. The rest of the file returns, but they pay nil tax.
The FM has raised the threshold from ₹7 lakh to ₹12 lakh, and it applies to all taxpayers right up to the highest taxpayer.
I have looked at the CBDT statistics of the taxpayers (the last available).
My rough calculation is about 80-85 lakh taxpayers will go out from the tax net and 2.5 crore will benefit. This 2.5 crore not only includes the middle class but also:
- 2.27 lakh people who returned the total income of more than ₹1 crore.
- 262 people who returned a total income of over ₹100 crore.
- 23 persons who returned a total income of 500 crore.
So, this is not just benefiting the middle class alone—which is welcome—but also the richest of the rich.
The FM also claims that she has foregone ₹1 lakh crore. Yet, she has claimed that the net tax revenues to the Centre will grow by 11.1% in 2025-26. In 2024-25 also, it grew by 11%, the same number. So, the question is, after foregoing ₹1 lakh crore in this budget, how does she claim that the net tax revenues by the Centre will grow by the same 11%?
This is pure magic, not mathematics.
Secondly, the FM says this ₹1 lakh crore will go into consumption, which will boost the economy. However, in the last few days, even her cheerleaders have become sceptical about it.
I want to ask the Hon'ble FM, will not part of the ₹1 lakh crore go into savings? The SBI chairman has hoped that part of it will come to him and the banking system.
Will not part of the ₹1 lakh crore go into repaying old household debts, travel abroad, education, etc.? If you deduct all this, how does she claim that the money will go into consumption of domestic goods and services?
Let's compare the figure to the size of the GDP, which is ₹324 lakh crore, and ₹1 lakh crore only amounts to 0.3% of it.
So it must be asked if you seriously think that 0.3% will grow the GDP?
My humble advice to the Hon'ble FM would be to not rely on only one engine of growth. There are other engines, such as exports and capex, which must be ramped up.
: Rajya Sabha MP & Former Finance Minister Shri PChidambaram.
"இஸ்லாமியப் பெண் கல்வியை மேம்படுத்த எடுக்கப்படும் முன்முயற்சிகள்"
இஸ்லாத்தில் ஆண், பெண் இருவரும் நல்ல கல்வி பெற வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, இஸ்லாமிய பெண்கள், கல்வியில் அதிக கவனம் செலுத்தி, தங்களுடைய அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மார்க்க அறிஞர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்தியா உட்பட பல நாடுகளில் பெண்கள், குறிப்பாக முஸ்லிம் பெண்கள் கல்வியில் மிகவும் பின்தங்கி இருந்து வருகிறார்கள். எனவே, பெண்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், இஸ்லாமியப் பெண் கல்வியை மேம்படுத்தவும் பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முஸ்லிம் சமூகங்களில் பெண் கல்வியை மேம்படுத்துவதற்காக முஸ்லிம் உலக லீக் அமைப்பு பல முன்முயற்சிகளை எடுத்துவருகிறது. இந்த முன்முயற்சிகள் தற்போது நல்ல பலனைக் கொடுத்து வருகின்றன.
சர்வதேச மாநாடு:
இத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பெண் கல்வி குறித்த சர்வதேச மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள், பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு இஸ்லாமிய பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விரிவாக உரையாற்றினார்கள்.
அப்போது, முஸ்லிம் சமூகங்களில் பெண் கல்வியை மேம்படுத்துவதற்கான, முஸ்லிம் உலக லீக் அமைப்பு எடுத்துவரும் முன்முயற்சிகளையும், உலகளாவிய மாநாட்டின் முடிவுகளையும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) செய்தி நிறுவனங்களின் ஒன்றியம் (UNA) பாராட்டி பெருமை அடைந்தது.
பெண் கல்வி குறித்த பிரகடனம்:
இந்த சர்வதேச மாநாட்டில் “பெண்கள் கல்வி குறித்த இஸ்லாமாபாத் பிரகடனத்தை” ஏற்றுக்கொண்டு, இஸ்லாமிய பெண் கல்விக்கு, இனிவரும் காலங்களில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு, முக்கிய இஸ்லாமிய அறிஞர்கள், நீதித்துறை கவுன்சில்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் உலகளாவிய ஆர்வலர்களிடமிருந்து வரலாற்று ஆதரவைப் பெற்றது. பெண்களின் கல்வி உரிமையை ஆதரிக்கும் இஸ்லாமிய சட்ட நிலைப்பாட்டை இந்த அறிவிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அத்துடன், பெண்களின் கற்றலுக்கான அணுகலைத் தடுக்கும் தடைகளை நீக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகளாவிய கூட்டாண்மைகள்:
மாநாட்டின் முக்கிய சிறப்பம்சமாக, இந்த முன்முயற்சியின் நிர்வாகப் பிரிவாகச் செயல்படும் கூட்டாண்மைகளுக்கான உலகளாவிய தளம் தொடங்கப்பட்டது. மூத்த அறிஞர்கள், இஸ்லாமிய கவுன்சில்களின் தலைவர்கள், ஐ.நா. அமைப்புகள் மற்றும் கல்வித்துறை, ஆராய்ச்சி, ஊடகங்கள் மற்றும் சிவில் நிறுவனங்களின் தலைவர்கள் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் உறுதிமொழிகளில் அவர்கள் கையெழுத்திட்டனர்.
பெண்கள் கல்விக்காக அர்ப்பணிப்பு:
இந்த சர்வதேச மாநாட்டில் பேசிய செய்தி நிறுவனங்களின் ஒன்றியத்தின் (UNA) இயக்குநர் ஜெனரல் முகமது பின் அப்துல் ரப்பா அல்-யாமி, ஊடக முயற்சிகள் மூலம் பெண்களின் கல்வியை முன்னேற்றுவதற்கான யூனியனின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். இஸ்லாமிய உலகில் உள்ள முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், பெண்களின் கல்வி உரிமைகளுக்காக வாதிடுவதிலும் அதன் முக்கிய பங்கிற்காக பொதுச் செயலாளர் ஷேக் டாக்டர் முஹம்மது பின் அப்துல் கரீம் அல்-இசாவின் தலைமையில் இயங்கும் முஸ்லிம் உலக லீக் அமைப்பையும் அவர் பாராட்டினார்.
ஊடகம் மற்றும் கல்வி முயற்சிகளை வலுப்படுத்துதல்:
மாநாட்டின் போது, முஸ்லிம் உலக லீக் அமைப்பு மற்றும் பாகிஸ்தானில் உள்ள மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தங்கள் உட்பட பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் செய்தி நிறுவனங்களின் ஒன்றியம் (UNA) கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தங்கள் பெண்களின் கல்விக்கான ஊடக ஆதரவை மேம்படுத்துவதையும், முஸ்லிம் சமூகங்களில் உள்ள சிறுமிகளுக்கு தொழில்முறை மற்றும் அறிவாற்றல் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த சர்வதே மாநாடு, இஸ்லாமிய உலகில் பெண் குழந்தைகளை கல்வி மூலம் மேம்படுத்துவதிலும், இஸ்லாமிய போதனைகளுக்குள் நீதி, சமத்துவம் மற்றும் வாய்ப்பு ஆகிய கொள்கைகளை வலுப்படுத்துவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து இருப்பதை சுட்டிக் காட்டும் வகையில் அமைந்து இருந்தது என்றே கூறலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
"40 ஆண்டுகளாக பத்து ரூபாய் மட்டுமே கட்டணம் வசூல்"
- டாக்டர் எஜாஸ் அலியின் ஒரு மனிதநேய சேவை -
உலகம் படுவேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நவீன விஞ்ஞான யுகத்தில், மருத்துவத்துறையும், பல்வேறு நவீனங்களை தன்னுள் கொண்டு வந்துகொண்டே இருக்கிறது. இதன் காரணமாக மருத்துவராக வேண்டும் என்ற கனவு பலருக்கு இருந்து வருகிறது. மருத்துவத் தொழில் தற்போது வணிகமாக மாறிவிட்டதால், மருத்துவராகி, மிகப்பெரிய அளவுக்கு வருமானம் ஈட்டலாம் என்ற ஆசை இளைஞர்கள் மத்தியில் இருந்து வருகிறது. மேலும், கார்பரேட் மருத்துவமனைகள் தற்போது உலகின் பல பகுதிகளில் உருவாகி, மிகப்பெரிய அளவுக்கு சாதனை புரிந்துவருகின்றன. அத்துடன், நோயாளிகளிடம் சிகிச்சைக்காக மிகப்பெரிய தொகையும் வசூலிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, மிகப்பெரிய மருத்துவமனைகளில் பணிபுரிவதை இளைஞர்கள் கவுரவமாக கருதுகிறார்கள். மேலும், நல்ல வருவாய் கூட அவர்களுக்கு கிடைத்து வருகிறது. மருத்துவத் தொழில் ஒரு அற்புதமான சேவை செய்யும் வாய்ப்பாக கருதும் எண்ணம் தற்போது மெல்ல மெல்ல குறைந்துகொண்டே செல்கிறது. ஏழை மற்றும் நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் நோய்க்கு ஆளானால், அவர்கள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சைப் பெற முடிகிறது. அங்கு சரியான சிகிக்சை கிடைக்காவிட்டால், தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சைப் பெறும் வாய்ப்பும் வசதியும் அவர்களுக்கு இருப்பதில்லை. இதன் காரணமாக அப்பாவி ஏழை மக்களின் வாழ்வு சீர்குலைந்து போய்விடுகிறது.
மனிதநேய மருத்துவர்:
இத்தகைய சூழ்நிலை இருந்துவந்தாலும், மருத்துவம் என்பது ஒரு சேவை செய்யும் தொழில் என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட நல்ல மருத்துவர்களும் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் விரிந்து பரந்து இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் டாக்டர் எஜாஸ் அலி. இவர் ஒரு மனிதநேயம் கொண்ட மருத்துவர் என்றே கூறலாம். மருத்துவக் கட்டணங்கள் பெரும்பாலும் லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் செல்லும் இந்த உலகில், பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த 40 ஆண்டுகளாக கட்டணம் எதையும் குறைக்காமல், மருத்துவம் பார்த்து வரும், டாக்டர் எஜாஸ் அலி, தன்னுடைய நிலைப்பாட்டில் இன்னும் மாறாமல் இருக்கிறார். ஏழைகளின் மருத்துவர் என்று அழைக்கப்படும் டாக்டர் எஜாஸ் அலி, தன்னிடம் வரும் நோயாளிகளிடம் ஆலோசனைகளுக்கு வெறும் பத்து ரூபாய் மட்டுமே வசூலிக்கிறார். இதனால் தரமான சுகாதாரப் பராமரிப்பு மிகவும் தேவைப்படுபவர்களும், ஏழை, நடுத்தர மக்களும் இவரை எளிதில் அணுகக்கூடியதாக இருந்து வருகிறது.
நாட்டில் உள்ள பல மருத்துவமனைகள் லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளையில், டாக்டர் எஜாஸ் அலி மக்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார். அவரது மலிவு விலை அறுவை சிகிச்சைகள், குறைந்தபட்ச கட்டணங்கள் மற்றும் ஒவ்வொரு நோயாளியையும் ஒரேநாளில் பார்ப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை எல்லோரையும் கவர்ந்து வருகிறது. இதனால் நோயாளிகள் யாரும் பயணம் அல்லது தங்குமிடத்திற்கு கூடுதல் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதில்லை.
திருப்தி அடையும் எஜாஸ் அலி:
தம்முடைய இந்த குறைந்த கட்டண வசூல் குறித்து கருத்து கூறியுள்ள டாக்டர் எஜாஸ் அலி, "சமூகத்திற்கு இதுபோன்ற சேவை செய்வதன் மூலம் நான் திருப்தி அடைகிறேன்," என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவரது மறைந்த மனைவியும் அதே பாதையைப் பின்பற்றினார். இப்போது மருத்துவர்களாக இருக்கும் அவரது மூன்று குழந்தைகளும் தங்கள் தந்தையின் இரக்கத்தின் மரபை முன்னெடுத்துச் செல்கின்றனர். ஒரு மதிப்புமிக்க அமெரிக்க நிறுவனத்தில் பயிற்சி பெற்ற டாக்டரான அவரது மகன் நூறு ரூபாய் மட்டுமே வசூலிக்கிறார். அதேநேரத்தில் அவரது மகள், மகளிர் மருத்துவ நிபுணர் ஐம்பது ரூபாய் வசூலிக்கிறார். பல சந்தர்ப்பங்களில், இந்தக் கட்டணங்கள் கூட தள்ளுபடி செய்யப்படுகின்றன அல்லது தவணைகளில் செலுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு நாளும், தனது எளிய குர்தா-பைஜாமாவில், ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து, டாக்டர் அலி நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். அத்துடன், ஏழு அல்லது எட்டு அறுவை சிகிச்சைகளைச் செய்கிறார். இதன்மூலம் மருத்துவம் என்பது சிகிச்சையைப் பற்றியது மட்டுமல்ல, மனிதநேயத்தைப் பற்றியது என்பதை டாக்டர் எஜாஸ் அலி நிரூபிக்கிறார்.
முஸ்லிம் அல்லாத நோயாளிகள்:
பீகாரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் மருத்துவரான எஜாஸ் அலியிடம் சிகிச்சை பெற வரும் நோயாளிகளில் அதிகபட்ச நோயாளிகள், முஸ்லிம் அல்லாதவர்கள் தான் அதிகம் ஆவர்கள். இப்படி வரும் சகோதரச் சமுதாய மக்களிடம், பத்து ரூபாய் மட்டுமே சிகிச்சை கட்டணம் வசூலிப்பதன் மூலம் தனது மனிதநேயத்தையும், மதநல்லிணக்கத்தையும் டாக்டர் எஜாஸ் அலி, சிறப்பான முறையில் வெளிப்படுத்தி வருகிறார்.
தற்போதைய நவீன யுகத்தில், சாதாரண சூழ்நிலைகளில் சுமார் ஐம்பது ஆயிரம் செலவாகும் அறுவை சிகிச்சைகளுக்கு, டாக்டர் எஜாய் அலி மற்றும் அவரது மூன்று மருத்துவப் பிள்ளைகளும், பத்து ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறார்கள். திமிர்பிடித்தவர்கள், முரட்டுத்தனமானவர்கள், சுயநலவாதிகள் மற்றும் பணம் பறிப்பவர்கள் போன்ற பெரும்பாலான மருத்துவர்களைப் போலல்லாமல், சேவையுடன் மனிதநேயம் கொண்டு மருத்துவம் பார்த்து வரும் டாக்டர் எஜாஸ் அலி, இளம் தலைமுறை மருத்துவர்களுக்கு ஒரு முன்மாதிரி மருத்துவராக இருக்கிறார் என்றே கூறலாம். இதுபோன்ற மருத்துவர்கள் தவறான சிந்தனையுடன் இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு இளம் மருத்துவர்களும், எஜாஸ் அலியை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, மருத்துவம் பார்க்க வேண்டும். மருத்துவத் தொழிலை வருவாய் ஈட்டும் தொழிலாக மட்டுமே கருதாமல், அழகிய முறையில் சேவை செய்ய வேண்டும். இதன்மூலம், அனைத்து தரப்பு மக்களும் அன்பை பெற்று, அழகிய முறையில் எளிதாக சிகிச்சைப் பெற வாய்ப்பு உருவாகும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு....!
What we've found regarding the Maharashtra elections raises several questions for the Election Commission.
Between the 2019 Vidhan Sabha elections and the 2024 Lok Sabha elections, 32 lakh voters were added to Maharashtra's electoral rolls over five years. However, between the 2024 Lok Sabha elections and the 2024 Vidhan Sabha elections, 39 lakh new voters were added in just five months. Why were more voters added after the Lok Sabha elections? Who are these 39 lakh individuals? Notably, 39 lakh voters is equivalent to the entire voter population of Himachal Pradesh, added in a remarkably short period.
Another concern is that there are more registered voters in Maharashtra than the state's actual voting population. According to the government, Maharashtra's adult population is 9.54 crore. Yet, the Election Commission reports more voters in Maharashtra than its adult population. This discrepancy raises questions about how these voters were created.
The number of voters who voted for these three parties has not decreased between the Lok Sabha and Vidhan Sabha elections. A notable example is the Kamthi Vidhan Sabha.
These are fundamental questions. We have been asking the Election Commission for the voters' list of both the Lok Sabha and Vidhan Sabha elections.
Why is the Election Commission not responding to our request?
: LoP Shri @RahulGandhi
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு...!
What we've found regarding the Maharashtra elections raises several questions for the Election Commission.
Between the 2019 Vidhan Sabha elections and the 2024 Lok Sabha elections, 32 lakh voters were added to Maharashtra's electoral rolls over five years. However, between the 2024 Lok Sabha elections and the 2024 Vidhan Sabha elections, 39 lakh new voters were added in just five months. Why were more voters added after the Lok Sabha elections? Who are these 39 lakh individuals? Notably, 39 lakh voters is equivalent to the entire voter population of Himachal Pradesh, added in a remarkably short period.
Another concern is that there are more registered voters in Maharashtra than the state's actual voting population. According to the government, Maharashtra's adult population is 9.54 crore. Yet, the Election Commission reports more voters in Maharashtra than its adult population. This discrepancy raises questions about how these voters were created.
The number of voters who voted for these three parties has not decreased between the Lok Sabha and Vidhan Sabha elections. A notable example is the Kamthi Vidhan Sabha.
These are fundamental questions. We have been asking the Election Commission for the voters' list of both the Lok Sabha and Vidhan Sabha elections.
Why is the Election Commission not responding to our request?
: LoP Shri RahulGandhi
திமுக போராட்டம் - ராகுல் காந்தி பேச்சு..!
The aim of the RSS is the eradication of all other histories, cultures, and traditions. This is what they want to achieve. They intend to impose a single idea, history and language on the country.
The RSS is attempting to do the same to the education systems of various states; it's just another step to push their agenda.
Each state has its unique tradition, history andஏஏ language, which is why India is called a Union of States in the Constitution. We must respect and understand these differences.
The Tamil people have a rich history, culture, and tradition spanning thousands of years. This is an insult to the Tamil people and other states where RSS is trying to impose its ideology. This is an attempt by the RSS to undermine everything we stand for.
: LoP Shri RahulGandhi
பேச்சு..!
பீகார் தலைநகர் பட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அருமையான உரை.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்களித்தார்.
The imports from China are still higher than our exports to China.
The rupee is falling.
Where is the employment?
Do you think we won't be affected by the tariff war? Tariff wars between major economies will impact India.
All southern states are being ignored.
As the Opposition, our role is more crucial than the ruling party's, as we provide suggestions and hold them accountable. We resonate with the public's concerns.
Listen to Renuka C Congress ji's speech in the Rajya Sabha today, where she highlights the challenges facing the country.
"இஸ்லாமிய பாடல்கள் முதல் திராவிட இயக்கத்தின் வளர்ச்சி வரை"
நாகூர் ஹனிஃபாவின் கம்பீரமான குரல் செய்த சாதனை.....!
நாகூர் ஹனிஃபா அவர்களின் இனிய குரலில் மயங்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அற்புதமான குரல் வளம் கொண்ட அவர், இஸ்லாமிய பாடல்களை மட்டும் பாடவில்லை. தமிழ்நாட்டில் தற்போது திராவிட இயக்கம் ஒரு மாபெரும் இயக்கமாக வளர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு நாகூர் ஹனிஃபா அவர்கள், தனது இனிய, வளமான, கம்பீரமான குரல் மூலம் மக்களை தட்டி எழுப்ப பாடிய பாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றே கூறலாம். இத்தகைய அரும்பணிக்கும் கம்பீரமான குரலுக்கும் சொந்தக்காரரான நாகூர் ஹனிஃபா குறித்து தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் (03.02.2025) கோம்பை கே.அன்வர் அவர்கள் அருமையான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். நாகூர் ஹனிஃபா அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், கோம்பை கே.அன்வர் அவர்கள் எழுதிய கட்டுரையை, மணிச்சுடர் வாசர்களும் படித்து நல்ல தகவல்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் எளிமையான தமிழிலில் மொழிபெயர்த்துள்ளதை, இங்கே தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஆன்மாவைத் தொடும் குரல்:
ஆகஸ்ட் 25, 1940 அன்று, திருவாரூரில் ஈ.வி.ஆர். பெரியார் தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 15வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், இளம் ஹனிஃபா தனது கம்பீரமான குரலில் பாட அந்த குரல், ஆன்மாவைத் தொடும் அளவுக்குத் தூய்மையான, உயர்ந்த தொனியில் உயர்ந்து, கூட்டத்தினரை கண்ணீர் மல்க வைத்தது. அவரது நண்பர் கவிஞர் அபிதீன் அவர்கள் எழுதிய 'பரகதி அடைந்தனோயோ பன்னீர்செல்வமே' என்ற பாடல், விமான விபத்தில் இறந்த நீதிக்கட்சித் தலைவர் ஏ.டி.பன்னீர்செல்வத்திற்கு ஒரு அஞ்சலி செலுத்தும் வகையில் இருந்தது. மாநாட்டில் வேறு சில பாடகர்கள் இருந்தபோதிலும், அவர்கள் அருமையாக பாடிய போதிலும், பெரியாரின் கட்டளைப்படி பாடிய ஹனிஃபா, இன்று திராவிட இயக்கம் வளர்ச்சியடையும் போது பிரிக்க முடியாத குரலாக உருவெடுத்தார்.
வாழ்க்கை வரலாறு:
டிசம்பர் 25, 1925 அன்று ராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள வேலிப்பட்டினத்தில் பிறந்த ஹனிஃபா, சூஃபி வழிபாட்டுத் தலத்திற்கும், தமிழ் இலக்கிய மரபுகளுக்கும், இசை பாரம்பரியத்திற்கும் பெயர் பெற்ற நாகூரில் வளர்ந்தார். நடுத்தர வர்க்க தமிழ் முஸ்லிம் வளர்ப்பு மற்றும் முறையான இசைப் பயிற்சி இல்லாத போதிலும், ஹனிஃபா இசையில் ஒரு தனித் திறமையைக் காட்டினார். நாகூரில் உள்ள செட்டியார் பள்ளிக் கூட்டத்தில், இஸ்லாமியப் பாடல்களைப் பாடுவதன் மூலம் ஹனிஃபா அபிதீனின் கவனத்தை ஈர்த்தார். இது பின்னர் கோதியா பைத்துஸ்-சபாவின் அறிமுகத்திற்கு வழிவகுத்தது. அதன் முன்னணி பாடகராக, அவர் திருமணங்கள் மற்றும் சமூக நிகழ்வுகளில் நிகழ்ச்சிகளை நடத்தினார். அவரது தந்தை இஸ்மாயில் முகமது, பியார் கவ்வாலின் பதிவுகள் மற்றும் காரைக்கால் ஏ.எம். தாவூத்தின் தமிழ் இஸ்லாமிய பாடல்களுடன் ஒரு கிராமபோனை வீட்டிற்கு கொண்டு வந்தபோது, அவரது இசை அறிவு மேலும் வளர்ந்தது. நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ. காதிரின் கீழ் ஹனிஃபா கர்நாடக இசையையும் பயின்றார்.
அரசியல் விழிப்புணர்வு:
நாகூர் ஹனிஃபாவின் தந்தை மலேசியாவில் பணிபுரிந்தபோது, பெரியாரின் 'குடி அரசு' மற்றும் தமிழ் இஸ்லாமிய சீர்திருத்தவாதியாகக் கருதப்படும் பா. தாவூத் ஷாவின் 'தாருல் இஸ்லாம்' போன்ற தமிழ் வெளியீடுகளை தமக்கு அனுப்பும்படி கேட்டபோது, ஹனிஃபாவின் அரசியல் விழிப்புணர்வு அன்றுமுதல் தொடங்கியது.இந்தப் படைப்புகளைப் படித்து, ஹனிஃபா சமூக நீதிக்கான திராவிட கொள்கைகளைத் தழுவினார். அதேநேரத்தில், திருவாரூரில், அவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் இளம் முத்துவேல் கருணாநிதி அவர்களைச் சந்தித்தார். இதன்பின்னர், திராவிட இயக்கத்தின் மீதான அவர்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பில் வேரூன்றிய வாழ்நாள் பிணைப்பைத் தூண்டினார்.
ஒரு தீவிர இலட்சியவாதியாக, ஹனிஃபா பெரியாரை நாகூருக்கு அழைத்தார். நாத்திகத்தை எதிர்க்கும் இந்துக்கள் தெருக்களில் முற்றுகையிட்டனர். ஆனால் முஸ்லிம் பெரியவர்கள் தங்கள் ஆதரவை வழங்கினர். மேலும் பெரியாரை அங்குள்ள முக்கிய வீதிகளில் சுற்றி உற்சாகமான வரவேற்புக்காக அழைத்துச் சென்றனர். 1949இல் சி.என். அண்ணாதுரை அவர்கள், திமுகவை உருவாக்கியபோது, பெரியாருடனான அவரது தொடர்பு இருந்தபோதிலும், அவருக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பி தனது ஆதரவை வழங்கிய முதல் நபர் ஹனிஃபா ஆவார். 1953 ஆம் ஆண்டில், ஹனிஃபா அண்ணாவுடன் சேர்ந்து, பாடி, திருச்சியின் தெருக்களில் கைத்தறிகளை விற்றார். கட்சி நாளிதழான 'நம் நாடு'வில் 'அழைக்கிறார், அண்ணா அழைக்கிறார்' (அண்ணா உங்களை அழைக்கிறார்) என்ற பாடல் வரிகளை கருணாநிதி பார்த்தபோது, ஹனிஃபாவுக்கு பாராட்டுதல்களைக் கூறி வாழ்த்துகளை வழங்கினார். இந்தப் பாடல் பொதுமக்கள் அண்ணாவுடன் சேர்ந்து சமூகத்தை மாற்றுவதற்கான ஒரு தெளிவான அழைப்பாக இருந்தது. ஹனிஃபாவின் ஆழ்ந்த, அற்புதமான கம்பீரமான குரல், பாடலை மாயாஜாலமாக்கியது, மக்களையும், தொண்டர்களையும் கவர்ந்தது.
ஹனிஃபாவுக்கு கலைஞர் புகழாரம்:
1993 ஆம் ஆண்டு, மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது வைர விழாவின் போது அவரைப் பாராட்டியபோது, ‘அழைக்கிறார் அண்ணா’ ஹனிஃபாவின் கையெழுத்துப் பாடலை, திருவாவடுதுறை ராஜரத்தினத்தின் தோடி ராகத்திற்கு ஒப்பானது என்று பாராட்டினார். மேலும் கருணாநிதி அவர்கள் அந்த பாடலை தாம் திரைக்கதை எழுதிய திரைப்படத்தில் ஹனிஃபாவை கொண்டு பாட வைத்தார். ஆனால் அந்த பாடலை தணிக்கை குழு ஏற்க மறுத்து படத்தில் இருந்து நீக்கியது. எனினும், ஹனிஃபா அதை கிராமபோன் இசைத்தட்டாக வெளியிட்டார். மேலும் ‘அண்ணா அழைக்கிறார்’ என்ற அந்த பாடல் மாபெரும்வெற்றி பெற்றது. ‘கள்ளக்குடி கொண்ட கருணாநிதி வாழ்வவே’ (கள்ளக்குடி நாயகன் கருணாநிதி நீடூழி வாழ்க) போன்ற பிற பாடல்கள் திமுகவின் செய்தியை, தமிழ்நாடு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரையும் ஈர்த்து திமுகவிற்கு முழு ஆதரவு அளிக்கும் வகையில் பெருக்கின.
ஹனிஃபாவின் இசை, திமுகவிற்குள் ஏற்பட்ட கொந்தளிப்பை படம்பிடித்தது. ஈ.வி.கே. சம்பத் 1961-இல் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் தேசிய கட்சியை உருவாக்கியபோது, ஹனிஃபா கோபத்துடன் ‘வளர்த்த கட மாற்பில் பாய்ந்ததடா’ என்று பாடி பதிலளித்தார். திமுகவின் அரசியல் நெருக்கடிகளின் போது, குறிப்பாக எம்ஜிஆரின் கட்சியிலிருந்து விலகல் உட்பட பல நெருக்கடிகளின்போது, இந்தப் பாடல் திமுகவிற்கு ஒரு பாதுகாப்பு பேரணியாக மாற்றியது.
இந்து மதத் தலைவர்களை கவர்ந்த பாடல்கள் :
ஹனிஃபா அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் பங்கேற்றார். கைது செய்யப்பட்டார். மேலும் திமுகவிற்கு நிதி திரட்டும் நாடகங்களில் நடித்தார். அத்துடன் திமுகவுக்காகத் தேர்தல்களில் போட்டியிட்டார். 1966 ஆம் ஆண்டு, நாகூரில் நடந்த அவரது இல்லத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் அவரை கௌரவித்தார். ஹனிஃபா தனது வீட்டிற்கு அண்ணாவின் பெயரைச் சூட்டினார். பின்னர் அண்ணா அவர்கள், "திமுக, ஹனிஃபாவுக்கு மிகவும் கடன்பட்டுள்ளது" என்று கூறினார். கலைஞர் கருணாநிதி அவர்கள், அவரை எம்எல்சியாகவும் (1972) தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராகவும் (2007) ஆக்கினார். ஹனிஃபா போதுமான அளவு கல்வி கற்கவில்லை என்றும் சமரசம் செய்ய விரும்பவில்லை என்றும் உணர்ந்ததால் பல பதவிகளை மறுத்துவிட்டதாக அவரது மகன் நௌஷாத் அலி கூறியுள்ளார்.
"ஹனிஃபா தமிழ் இஸ்லாமிய பக்திப் பாடலையும் பெருமளவில் பாடினார். இது முன்னர் உள்ளூர் குழுக்களுக்கு மட்டுமே இருந்தது" என்று பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வுகள் துறையின் இணைப் பேராசிரியர் டேவேஷ் சோனேஜி கூறுகிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவன தலைவர் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாஹிப் அவர்கள், ஹனிஃபாவின் அற்புதமான குரலுக்கு ரசிகராக இருந்தார். ஹனிஃபாவின் ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ போன்ற இஸ்லாமிய பக்திப் பாடல்கள், குன்றக்குடி அடிகளார் மற்றும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் போன்ற இந்து மத மடத் தலைவர்கள் உட்பட, மதங்கள் முழுவதும் ரசிகர்களை ஈர்த்தன. சுவாமி ஸ்ரீ விட்டல் மகராஜ் ஹனிஃபாவின் பாடல்களை சபாக்களுக்கும், கான இசைவாணியை கீழ்நிலைக்கும் கொண்டு வந்தார்.
சினிமா இசையிலும் சாதனை:
தமிழ் திரைப்படங்களிலும் நாகூர் ஹனிஃபா அவர்கள் அழகிய பாடல்களை பாடி முத்திரை பதித்துள்ளார். ‘பாவ மன்னிப்பு’ (1961), ‘செம்பருத்தி’ (1992) மற்றும் ‘என்றென்றும் காதல்’ (1999) போன்ற படங்களிலும் ஹனிஃபா பாடினார். இளையராஜா திரைப்படங்களில் முத்திரை பதிப்பதற்கு முன்பு, ஹனிஃபாவின் கிராமபோன் இசைத்தடத்திற்கு இசையமைத்தார். இசை ஹராம் (பாவம்) என்று கருதிய சில பழமைவாத முஸ்லிம் மத குருமார்களிடமிருந்து மட்டுமே ஹனிஃபா எதிர்கொண்ட விமர்சனம் இருந்தது. ரேடியோ சிலோனுக்கு அளித்த பேட்டியில், ஹனிஃபா, "இஸ்லாத்தில் இசை குறித்து உலமாக்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அது ஹராம் என்று அவர்கள் அனைவரும் ஒருமனதாகச் சொல்லும் நாளில், நான் இசையை விட்டுவிடுவேன்" என்று கூறினார்.
ஆறு தசாப்த கால வாழ்க்கையில், (60 ஆண்டுகள்) ஹனிஃபா தமிழ் சமூகத்தை வளப்படுத்திய பாடல்களின் பரந்த தொகுப்பை உருவாக்கினார். 2025 ஆம் ஆண்டு அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், ஒரு முன்னோடி இசைக்கலைஞராகவும் சமூக மாற்றத்திற்கான குரலாகவும் அவரது மரபு இன்னும் குறையாமல் உள்ளது.
- நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா: கோம்பை எஸ்.அன்வர்
- தமிழில் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
As the world stands on the brink of a technological and economic revolution, India needs a new vision for growth, production, and participation—one that directly addresses our two biggest challenges: the job crisis and the lack of opportunity for 90% of Indians.
Jobs come from production, which Make In India has failed to revive. But we have an opportunity with the revolution in energy and mobility - with renewable energy, batteries, electric motors and optics, and AI to bring these together. India must master a central role in this revolution, and boost production to give our youth hope for the future.
Although China is 10 years ahead, we can catch up - with the right vision. An INDIA government would realign education, enlist experts, widely spread finance, and align our trade and foreign policies.
Production is also the foundation of our national security. In a world where wars are not fought between armies but between industrial systems, our dependence on Chinese imports like motors and batteries puts us at risk.
Internally, India is fighting against inequality that is increasing social tensions by excluding the 90%. We must conduct a caste census to understand where Dalits, Adivasis, OBCs and minorities stand today; and with the help of AI understand how best to ensure they have a fair share in the nation’s wealth and opportunities.
It is only these two tracks in parallel - production and participation - which will create a robust growth story for India and a bright future for all our youth.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிரடி உரை.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம்..!
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதிரடி உரை.
கேள்வியோ....கேள்வி...!
டெல்லி சட்டப்பேரவை தேர்தல். காங்கிரஸ் பொதுச் செயலாளர், வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி பிரச்சாரம்.
பிரதமர் மோடிக்கு கேள்வி.
SP MP Awadhesh Prasad breaks down as he addresses a press conference on the incident of a Dalit woman's murder in Ayodhya.
"குஜராத் கலவர வழக்கில் நீதிக்காக போராடிய ஜாகியா ஜாஃப்ரி காலமானார்"
அகமதாபாத், பிப்.2- -குஜராத் கலவர வழக்கில் நீதிக்காக போராடிய ஜாகியா ஜாஃப்ரி, 01.02.2025 அன்று காலமானார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் வெடித்த கலவரத்தின்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சான் ஜாஃப்ரி உட்பட 69 கொல்லப்பட்டனர். தனது கணவர் கொல்லப்பட்டதற்கு எதிராக ஜாடிகயா ஜாஃப்ரி தன் வாழ்நாள் முழுவதும் சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டே இருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில், அகமதாபாத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்று இருந்தபோது, நேற்று (01.02.2025) தனது குடும்ப உறுப்பினர்களுடன் வழக்கம் போல் பேசிக் கொண்டிருந்தபோது, தமக்கு அசௌகரியமாக இருப்பதாக அவர் கூறினார். இதையடுத்து மருத்துவர் அழைக்கப்பட்டு அவரை பரிசோதனை செய்தபோது, காலை 11:30 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார். என்று அவரது மகன் தன்வீர் ஜாஃப்ரி தெரிவித்தார்.
குஜராத் கலவரம் ஒரு பார்வை:
கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் எரிக்கப்பட்ட மறுநாளே குஜராத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 28, 2002 அன்று அகமதாபாத்தில் உள்ள முஸ்லிம் பகுதியான குல்பர்க் சொசைட்டியில் கொல்லப்பட்ட 69 பேரில் ஜாஃப்ரியின் கணவர் எஹ்சான் ஜாஃப்ரியும் ஒருவர் ஆவார்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பயங்கரமான கலவரத்தைத் தூண்டியது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு நடந்த கலவரங்களுக்கான பெரிய சதித்திட்டத்திற்கு உயர்மட்ட அரசியல் தலைவர்களை பொறுப்பேற்க வைக்க உச்சநீதிமன்றம் வரை சட்டப் போராட்டம் நடத்தியதன் மூலம் ஜாகியா ஜாஃப்ரி தேசிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
ஜாகியா ஜாஃப்ரியின் சட்டப் போராட்டம்:
2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, 2006 ஜுன் 8ஆம் தேதி ஜாகியா ஜாஃப்ரி 119 பக்கங்கள் கொண்டு புகார் மனு ஒன்றை மாநில டி.ஜி.பி.யுடம் நேரில் வழங்கினார். ஆனால் எந்த வழக்கும் பதிவு செய்யப்படாததால், அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வன்முறையில் ஈடுபட்ட 62 பேர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா 2007ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தார். இதைத் தொடர்ந்து 2008 மார்ச் 3ம் தேதி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து உச்சநீதிமன்றம் குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் 2009 ஏப்ரல் 27ஆம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக்குழு மே 14ஆம் தேதி மோடியிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தி, உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது.
பின்னர் ராஜு ராமசந்திரன் தாக்கல் செய்த 10 பக்க அறிக்கையின் அடிப்படையில் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அறிக்கையில் உள்ள குறைப்பாடுகள் குறித்து ராஜு ராமசந்திரன் முறையிட்டபோது, அதுகுறித்து சாட்சியாளர்களிடம் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில் 2011 ஜுலை 25ஆம் தேதி அவர் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். பின்னர் 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி கீழமை நீதிமன்றத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அப்போது சிறப்பு புலனாய்வுக்குழு பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் மோடி உள்ளிட்டோர் பரிசுத்தமானவர்கள் என்ற அறிக்கையை தாக்கல் செய்தது. இதற்கு எதிரா ஜாகியா ஜாஃப்ரி, மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால், பெருநகர குற்றவியல் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து 2014 மார்ச் 18ல் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். எனினும் 2017 அக்டோபர் 5ஆம் தேதி இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக 2018 செப்டம்பர் 12ஆம் தேதி ஜாகியா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 2022 ஜுன் 24ஆம் தேதி, சிறப்பு புலனாய்வுக்குழு மோடி உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் இல்லை என கூறியதை ஏற்றுக் கொண்டு, அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இப்படி நீதிக்காக தொடர்ந்து ஜாகியா ஜாஃபரி தனது வாழ்வின் இறுதிநாள் வரை போராடிக் கொண்டே இருந்தார். இந்நிலையில் "மனித உரிமை சமூகத்தின் இரக்கமுள்ள தலைவரான ஜக்கியா முன்பு காலமானார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட இருப்பை நாட்டின் குடும்ப நண்பர்கள் மற்றும் உலகத்திற்கு பெரும் இழப்பாகும்" என்று உச்சநீதிமன்றத்தில் ஜாஃப்ரியின் எதிர்ப்பு மனுவில் இணைப் புகார்தாரராக இருந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
"மத்திய பட்ஜெட் - ஓர் பார்வை"
- ஜாவீத் -
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 11வது ஆண்டு நடந்துகொண்டு இருக்கும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி ஒன்றாம் தேதி மக்களவையில் தனது எட்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் நான்கு ஆண்டுகளில் குறைந்த பொருளாதார வளர்ச்சிக்கு எதிராக அமைக்கப்பட்ட மோடி அரசாங்கத்தின் மூன்றாவது முழு ஆண்டு பட்ஜெட்டை ஆகும்.
எளிமையாகச் சொல்ல வேண்டுனால், பட்ஜெட் என்பது ஒரு செயல்முறை அல்லது அதன் மூலம் அரசாங்கம் அதன் நிதிநிலையைப் பற்றி நாடாளுமன்றத்திற்கும் மற்றும் முழு நாட்டிற்கும் தெரிவிக்கிறது. பட்ஜெட்டில் மூன்று முக்கிய பகுதிகள் பற்றிய வெளிப்படைத்தன்மை எதிர்பார்க்கப்படுகிறது. அவை வருமானம், செலவு மற்றும் கடன் ஆகியவை ஆகும். இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தின் சுமையை குறைக்க வருமான வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதன்மூலம் பயன் அடைபவர்கள் மிகவும் குறைந்தவர்கள் மட்டுமே என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பீகார் வாக்காளர்களை கவரும் பட்ஜெட்:
பீகார் மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதை கருத்தில் கொண்டு, 2025-26 பட்ஜெட்டில் பாஜக அரசு, வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினரையும், பீகார் வாக்காளர்களையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அறிவிப்புகளை பீகாரில் உள்ள 6 கோடியே 65 லட்சம் வாக்காளர்களும், நாடு முழுவதும் வருமான வரி செலுத்தும் 3 கோடியே 20 லட்சம் பேர் வரவேற்பார்கள். ஆனால், இந்தியாவின் பிற பகுதிகளுக்கு, பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஆறுதலான வார்த்தைகளை மட்டுமே கூறினார்.
முக்கிய துறைகளில் செலவினம் குறைப்பு:
பட்ஜெட்டில், செலவுகளைப் பொறுத்தவரை, மொத்த செலவினம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 25 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மூலதனச் செலவு 92 ஆயிரத்து 682 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைப்பு காரணமாக பாதிக்கப்பட்ட துறைகள் மற்றும் குறைக்கப்பட்ட தொகைகள் குறித்து நாம் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். சுகாதாரம் ஆயிரத்து 255 கோடி ரூபாய், கல்வி, 11 ஆயிரத்து 584 கோடி ரூபாய், சமூக நலன், 10 ஆயிரத்து 19 கோடி ரூபாய், விவசாயம் 10 ஆயிரத்து 992 கோடி ரூபாய், கிராமப்புற மேம்பாடு, 75 ஆயிரத்து 133 கோடி ரூபாய், நகர்ப்புற மேம்பாடு 18 ஆயிரத்து 907 கோடி ரூபாய், வடகிழக்கு மேம்பாடு ஆயிரத்து 894 கோடி ரூபாய் என குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கல்விக்கான நிதி ஒதுக்கீடு, 2 புள்ளி ஐந்து மூன்று சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு 10 புள்ளி எட்டு மூன்று சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஐ.டி. மற்றும் டெலிகாம் துறைக்கான நிதி ஒதுக்கீடு ஒன்று புள்ளி எட்டு எட்டு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், முந்தைய பட்ஜெட் உரைகளில் ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்ட இந்த திட்டங்களில் அரசாங்கம் நம்பிக்கையை இழந்துவிட்டது. மேலும் அரசாங்கத்தின் திறன் கணிசமாகக் குறைந்துள்ளது. உதாரணமாக போஷன், ஜல் ஜீவன் மிஷன், என்.எஸ்.ஏ.பி., (NSAP) பி.எம்.ஜி.எஸ்.ஒய்., (PMGSY) பயிர் காப்பீட்டுத் திட்டம், யூரியா மானியம் மற்றும் பி.எம். கரிப் கல்யாண் அன்ன யோஜனா ஆகியவை அடங்கும்.
நாட்டில் ரயில்வேகள் குறைக்கப்பட்டுள்ளன. ரயில்வே துறை பெரும்பான்மையான மக்களுக்கு சேவை செய்கிறது. ஆனால், 2025-26 ஆம் ஆண்டில் 766 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரித்திருப்பது பணவீக்கத்தைக் கூடக் கணக்கிடாது. இந்த ஒதுக்கீடு கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விடக் குறைவாக இருக்கும். மேலும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதியளிக்கப்பட்ட, பெரிதும் பாராட்டப்பட்ட பி.எல்.ஐ. திட்டங்கள் மற்றும் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் மற்றும் திறன் இந்தியா திட்டத்தில், இந்த நாட்டின் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டு இருப்பதை நாம் வரவேற்க வேண்டும்.
130 கோடி மக்கள் பாதிப்பு:
கெட்டிக்காரத்தனமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக பாஜகவினர் நினைக்கிறார்கள். பீகார் வாக்காளர்களுக்கு கெட்டிக்காரத்தனமாக பல சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்து இருக்கிறார்கள். அதேபோன்று வரிச் செலுத்தக்கூடிய வருமான வரி சலுகை தந்து இருக்கிறார்கள். ஆனால் பீகார் வாக்காளர்கள் 7 கோடியே 60 லட்சம் பேர் தான். நாடு முழுவதும் வருமான வரி செலுத்துபவர்கள், 3 கோடியே 20 லட்சம். 10 கோடி பேருக்கு சலுகைகள் கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் எஞ்சியுள்ள 130 கோடி மக்களுக்கு என்ன சலுகைகள் அறிவித்து இருக்கிறார்கள்.
நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கூலியை உயர்த்தி இருந்தால் பல கோடி பேர் பயன் அடைந்து இருப்பார்கள். ஜி.எஸ்.டி. வரியை குறைத்து இருந்தால், நாட்டில் உள்ள அனைவருக்கும் பயன் கிடைத்து இருக்கும். குறைந்தபட்ச ஊதியத்தை சட்டப்பூர்வமாக உயர்த்தி இருந்தால், பல கோடி பேர் பயன் அடைந்து இருப்பார்கள். அதையெல்லாம் செய்யாமல், பீகார் வாக்காளர்கள், வருமான வரி வாக்காளர்கள், அவர்களுக்கு மட்டுமே சலுகை கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் மற்றவர்களுக்கு என்ன சலுகைகளை அறிவித்தார்கள். பட்ஜெட்டில் இல்லை என்ற பட்டியலை போட்டால், நீளமான பட்டியல் வரும். செய்யாததை, பட்டியல் போட்டால் அதுவும் நீளமாக வரும்.
இந்த பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
மக்களுக்கான பட்ஜெட் இல்லை:
பிரதமர் நரேந்திர மோடி கூறியபடி, இது நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கான பட்ஜெட் இல்லை. கிராமப்புறங்களில், ஊரகப்பகுதிகளில், ஒரு தனி நபர் மாதச் செலவு, நான்கு ஆயிரத்து 120 ரூபாய் என மத்திய அரசு எடுத்த ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அப்படி என்றால், ஒரு தனி நபர் ஒருநாளைக்கு 130 ரூபாய் செலவழிக்கிறார். நகர்புறங்களில் 7 ஆயிரம் ரூபாய் மாதச் செலவு. அப்படியெனில், ஒரு நாளைக்கு 230 ரூபாய் செலவு செய்கிறார். 230 ரூபாய் செலவு செய்து எப்படி வீடு, உணவு, கல்வி, சுகாதாரம், மின்சாரம், மற்ற இதரச் செலவுகளை எப்படி செய்ய முடியும். இந்தியாவில் 50 சதவீதற்கும் அதிகமான மக்கள் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களும் ஜி.எஸ்.டி. செலுத்துகிறார்கள். வருமான வரி கட்டுபவர்கள் மட்டுமே, வரி செலுத்கிறார்கள் என நினைக்கக் கூடாது. ஜி.எஸ்.டி.யை ஏழைகள், நடுத்தர மக்கள், பணக்காரர்கள் என அனைவரும் செலுத்துகிறோம்.
எனவே ஜி.எஸ்.டி.யை குறைத்து இருந்தால், எல்லோருக்கும் பயன் கிடைத்து இருக்கும். நாட்டில் உள்ள எல்லோரும் பெட்ரோல், டீசல் போடுகிறார்கள். பெட்ரோல், டீசல் விலை காரணமாக தான் பேருந்து, வாடகை கார் உள்ளிட்டவைகளின் கட்டணம் கூடிக் கொண்டே செல்கிறது. எனவே எல்லோருக்கும் சலுகை கிடைக்க வேண்டுமானால், பெட்ரோல், டீசல் வரிச் சுமையை குறைக்க வேண்டும். ஜி.எஸ்டி.யை குறைத்து இருக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி இருக்க வேண்டும். நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் நாள் கூலியை உயர்த்தி இருக்க வேண்டும். இவற்றை செய்து இருந்தால் பெரும்பாலான மக்களுக்கு சலுகை கிடைத்து இருக்கும்.
நடுத்தர மக்கள் என்றால் யார்? :
நடுத்தர மக்களுக்கு சில சலுகைகளை தந்து இருக்கிறார்கள். நடுத்தர மக்கள் என்றால் யார்? இந்தியாவில் நடுத்தர மக்கள் என எடுத்துக் கொண்டால் 30 சதவீதம் அளவுக்கு தான் இருப்பார்கள். மற்ற 70 சதவீதம் நடுத்தர மக்கள் கணக்கில் வர மாட்டார்கள். 30 சதவீதம் இருக்கும் நடுத்தர மக்களில் வருமான வரிச் செலுத்துபவர்களுக்கு மட்டுமே சலுகையை அறிவித்து இருக்கிறார்கள். அதாவது சுமார் 3 கோடி பேருக்கு மட்டுமே சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள நடுத்தர மக்களுக்கு சலுகையை கிடையாது. நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் சலுகை கொடுக்க வேண்டுமானால், ஜி.எஸ்.,டி.யை குறைத்துஇருக்க வேண்டும். கேன்சர் மையங்கள் அமைக்கப்படும் என்ற திட்டத்தை எந்த ஆண்டு நிறைவேற்றுவார்கள் என்ற தெளிவு இல்லை.
விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கப்படும் என்று சொன்னார்கள். விவசாயி கடன் வாங்கும் அளவு உயர்த்தி வசதி செய்யப்படும் என சொல்லி இருக்கிறார்கள். ஏற்கனவே விவசாயி கடன் சுமையை இருக்கிறார்கள். இன்னும் கடன் வாங்கினால் நிலைமை என்னவாகும். விவசாயப் பொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. உரங்களின் விலை குறைப்பு குறித்து எதுவும் அறிவிப்பு இல்லை. பயிர் காப்பீடு குறித்த புதிய அறிவிப்பு எதுவும் இல்லை.
தமிழ்நாடு புறக்கணிப்பு:
பட்ஜெட்டில் பீகாரை 4 முறை குறிப்பிட்டதைப் போல மற்ற மாநிலங்களையும் நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு இருக்கலாம். ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் புறக்கணிப்பட்டு இருக்கின்றன. தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. புதிய ரயில்வே திட்டங்கள் எதுவும் இல்லை. இது தமிழக மக்களுக்கு எமாற்றமே என்று கூறலாம்.
இதேபோன்று, புதிய வேலைவாய்ப்புகள், பணவீக்கம் குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. நாட்டில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம் சிறுபான்மையின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த செய்யப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் எந்த அம்சமும் பட்ஜெட்டில் இல்லை. இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள், பா.ஜ.க. அரசு இன்னும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறது, நடத்திக் கொண்டு இருக்கிறது.
பட்ஜெட் தயாரிக்கும்போது வருமானத்தை கருத்தில் கொள்ள வேண்டும். செலவினங்களை கருத்தில் கொள்ள வேண்டும். முதலீடுகளை கருத்தில் கொள்ள வேண்டும். கடன் சுமையை கருத்தில் கொள்ள வேண்டும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தான் பட்ஜெட் தயாரிக்க வேண்டும். ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. பட்ஜெட்டைப் பார்க்கும்போது, நிதியமைச்சரோ அல்லது பிரதமரோ தலைமைப் பொருளாதார ஆலோசகரின் ஆலோசனையைப் பொருட்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. தனது பொருளாதார ஆய்வறிக்கையில் அவர் விவேகமான ஆலோசனையை வழங்கினார். "வழியை விட்டு வெளியேறு" என்பது அரசாங்கத்திற்கு அவர் விடுத்த அழைப்பு. மாறாக, பட்ஜெட் புதிய திட்டங்கள் மற்றும் திட்டங்களால் நிறைந்துள்ளது, அவற்றில் பல இந்த அரசாங்கத்தின் திறனுக்கு அப்பாற்பட்டவை. முடிவாக, பொருளாதாரம் மீண்டும் பழைய பாதையில் செல்லும், 2025-26 ஆம் நிதியாண்டில், வழக்கமான 6 அல்லது 6 புள்ளி 5 சதவீத வளர்ச்சியை விட அதிகமாக வளர்ச்சியை வழங்காது என்று பொருளாதார வல்லுநர்கள், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து கூறியுள்ள விமர்சனக் கருத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
=====================