”இஸ்ரேல், அமெரிக்காவின்
முகத்தில் ஓங்கி அறைந்த ஈரான்”
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
-
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஜுன் 13ஆம் தேதி தொடங்கிய போர் 12 நாட்கள் நடைபெற்றது. தங்களுடைய நாட்டின் பாதுகாப்பிற்காக எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பணிகள் ஆகியவற்றை செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நாடும் அத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து செய்துக் கொண்டே இருக்கும். அந்த வகையில் ஈரானும், தங்களுடைய பாதுகாப்பிற்காக எடுக்கும் நடவடிக்கைகளை கண்டு அச்சம் கொண்ட, பீதி அடைந்த இஸ்ரேல், அமெரிக்காவின் துணைவுடன் ஈரான் மீது வேண்டும் என்றே தாக்குதல் நடத்தியது.
ஜுன் 13ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தொடங்க, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும், மிகமிக தீவிரமாக இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதலை தொடங்கியது. ஈரானின் ஆயுதப் பலத்தை குறைத்து மதிப்பிட்ட இஸ்ரேல், தன்னுடைய ரௌடித்தனம் மூலம் ஈரானை வீழ்த்திவிடலாம் என நினைத்தது. ஆனால், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளே சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள், இஸ்ரேலை புரட்டி போட்டுவிட்டன. வரலாறு காணாத வகையில் இஸ்ரேலில் சேதங்கள் ஏற்பட்டன.

ஈரானின் வீரியமான தாக்குதல் காரணமாக, டெல் அவீவ் உள்ளிட்ட முக்கிய
நகரங்களை விட்டு யூத மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஓட வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டதால், அந்த நகரங்கள் தற்போது காசாவை போன்று மாறிவிட்டன. காசாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்திய அட்டூழியங்கள் மூலம் அந்த அற்புதமான நகரம் எப்படி சின்னாபின்னமாக மாறிவிட்டதோ, அப்படி இஸ்ரேலிய நகரங்களும் தற்போது மாறிவிட்டன. மிகவும் சொகுசாக வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட இஸ்ரேலிய யூதர்கள், தாங்கள் ஆக்கிரமிப்பு செய்து வாழ்ந்த
பாலஸ்தீன மண்ணை விட்டு ஓட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனால் அச்சம் அடைந்த இஸ்ரேலிய பிரதமர் உலக பயங்கரவாதி பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட்
டிரம்ப்பை கெஞ்சி, அமெரிக்காவையும் போரில் இணைத்துவிட்டார். இதன்மூலம், தங்கள் நாட்டு மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. ஆனால், அமெரிக்கா, ஈரானை தாக்க தொடங்கிய அன்றே, ஈரான் மீண்டும் ஆக்ரோஷ பலத்துடன் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கி நடத்தியது. மிரட்டும் ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
வலிமையான ஆயுத பலம் :
ஈரானின் ஆயுத பலம் என்பது அந்நாட்டின் இராணுவ வலிமையைக் குறிக்கிறது. இதில் ஏவுகணைகள், போர் விமானங்கள், மற்றும் பிற இராணுவத் தொழில்நுட்பங்கள் அடங்கும். ஈரான் தன் பிராந்திய மற்றும் உலகளாவிய செல்வாக்கை நிலைநிறுத்த இந்த ஆயுத பலத்தைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக, பிராந்தியத்தில் உள்ள தனது எதிரிகளுக்கு எதிராக தற்காத்துக் கொள்ளவும், அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் ஈரான் தனது ஆயுத பலத்தை நம்பியுள்ளது. ஈரான், நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகள் உட்பட பல்வேறு வகையான ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது. இவை பிராந்தியத்தில் உள்ள இலக்குகளை தாக்க வல்லவை. ஈரானிடம் போர் விமானங்கள் மற்றும் இராணுவத் தளவாடங்கள் உள்ளன. இவை வான்வழித் தாக்குதல்களை நடத்தப் பயன்படுகின்றன. ஈரான் தனது ஆயுத பலத்தை தற்காப்புக்காகவும், அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காகவும் பயன்படுத்துகிறது. ஈரானின் ஆயுத பலம் சர்வதேச அளவில் கவலைகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பான கவலைகள் உள்ளன.

ஈரான் - ஈராக் போருக்குப் பிறகு, கடந்த 20 ஆண்டுகளில், ஈரான் தனது இராணுவ வலிமையை உலக நாடுகள் யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகமிக வலிமைப்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளை மிரட்டி, பணிய வைத்தது போன்று ஈரானையும் பணிய வைத்துவிடலாம் என்று எதிர்பார்த்த இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, ஈரான் நடத்திய நவீன ஏவுகணை தாக்குதல்களைக் கண்டு மிரட்டுவிட்டன. அதனால்
செய்வது அறியாமல் திகைத்த அந்த இரு ரௌடி நாடுகள், தங்களுடைய அச்சத்தையும் பயத்தையும் வெளியே தெரிந்துவிடக் கூடாது, அப்படி தெரிந்துவிட்டால், தங்களுடைய உலக ரௌடி பட்டம் பறிக்கப்பட்டுவிடும், உலக நாடுகள் இனி தங்களை கண்டு அஞ்சாது என நினைத்த அமெரிக்கா, இஸ்ரேல் மீண்டும் மீண்டும் உதார்விட்டுக் கொண்டு தங்களிடம் மிகப்பெரிய ஆயுத பலம் உள்ளதாக கூறிக் கொண்டே இருந்தன. இதனால், ஈரான் மற்றும் அதனை ஆதரிக்கும் நாடுகள் அஞ்சி சரண் அடைந்துவிடும் என்ற ஆசை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இருந்தது. இந்த மிரட்டல்களைக் கண்டு கொஞ்சமும் அச்சம் அடையாமல், ஈரானின் வரலாறு தெரியாமல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மிரட்டி வருவதாகவும், ஈரான் யாரிடமும் சரண் அடையாது என்றும் எந்தவொரு சவாலையும் மிரட்டிலையும் துணிவுடன் சந்திக்கும் என்றும் ஈரானின் உச்சத் தலைவரான அயதுல்லா அலி ஹெசைனி கமெனி உறுதிப்பட தெரிவித்துவிட்டு, இரண்டு பயங்கரவாத நாடுகளை எதிர்த்து பதில் தாக்குதல்களை நடத்தினார்.

நவீன ஆயுத தொழில்நுட்பங்கள், நவீன ஏவுகணைகள் என அனைத்தும் நவீனமயமாக்கி, ஈரான் தனது இராணுவ பலத்தை வலிமைப்படுத்தியுள்ளது. இந்த நவீன ஆயுதங்கள் எப்படி தயாரிக்கப்பட்டன? என்ற கேள்விகள் தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே எழுந்து அந்த நாடுகள் குழப்பத்தில் இருந்து வருகின்றன. பொருளாதார தடைகள் என பல்வேறு சவால்களை சந்தித்த ஈரான் எப்படி இராணுவ வலிமை பெற்றது ? என்று கேள்விகள் எழுந்துக் கொண்டே இருக்கின்றன.
ஈரானுக்கு உலக மக்களின் ஆதரவு :
இஸ்ரேல், அமெரிக்கா,
ஈரான் இடையே நடந்த இந்த 12 நாள் போரில்,
உலக மக்களின் ஆதரவு ஈரானின்
பக்கமே இருந்தது. உலக மக்கள் நீதியின் பக்கம் நின்றுக் கொண்டு ஈரானுக்கு
ஆதரவு தெரிவித்தார். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரங்களைக் கண்டு வேதனை அடைந்த உலக மக்கள், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியதும், மகிழ்ச்சி அடைந்தனர். உலக ரௌடிகளை அடக்க சரியான வீரியம் மற்றும் துணிச்சல் உள்ள ஒரு நாடு இருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தனர்.

சமூக வலைத்தளங்களை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்தால், இஸ்ரேல் - ஈரான் போர் தொடங்கியது முதல், மக்கள் வெளியிய்டட கருத்துகள், மீம்ஸ்கள் ஆகியவற்றின் மூலம், இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களை உலக மக்கள் வரவேற்றுகொண்டே இருந்தார்கள்
என்பதையும், தற்போது கூட வரவேற்றுக் கொண்டே இருக்கிறார்கள் என்பதையும் காணலாம். காசா மக்களை குறிப்பாக, அப்பாவி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் ஆகியோர் மீது அநியாயமாக தாக்குதல்களை நடத்திய, இன்னும் நடத்திக் கொண்டே இருக்கும் இஸ்ரேல், சரியான முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் உலக மக்களின் எண்ணங்களாக இருந்து வருகிறது. அந்த வகையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் உலக மக்களின்
வரவேற்பை பெற்றன.

போர் மிகவும் கொடூரமானது. அதன் பாதிப்புகள் மிகமிக அதிகம். எங்கும் போர் நடக்கக் கூடாது. உலகம் அமையாக இருக்க வேண்டும். போர் இல்லாத உலகம் இருக்க வேண்டும் என்பது தான் அனைத்து மக்களின் ஆசை, எண்ணங்களாகும். ஆனால் பாலஸ்தீன காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய இன்னும்
நடத்திக் கொண்டு இருக்கிற கொலை தாக்குதல்களை கண்டு, மிகவும் கோபம் அடைந்த உலக மக்கள், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களை பெரிதும் வரவேற்றார்கள்.
சமூக ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள், உலக அமைதி விரும்பிகள் அனைவரும் இஸ்ரேல் மீதும், அமெரிக்கா மீதும் மிகமிக கடுப்புடன் இருந்து வருகிறார்கள். உலக மக்களை எப்போதும் அச்சத்தில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என விரும்பும் இந்த இரு பயங்கரவாத நாடுகளின், கொட்டத்தை அடக்க வேண்டும் என்பது உலக மக்களின் பார்வையாக இருந்து வருகிறது. அதற்கு ஈரான் மூலம் ஒரு புதிய வழி பிறந்து இருப்பதைக்
கண்டு அவர்கள் ஆனந்தம் அடைந்தார்கள்.
ஈரான் நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்றும், தங்களுடைய நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்றும் உலக மக்கள் உறுதியாக நினைத்ததால், ஈரானின் பக்கம், அதாவது நீதியின் பக்கம் உலக மக்கள் நின்றுக் கொண்டு முழு ஆதரவு அளித்தார்கள். போர் நடந்துக் கொண்டு இருந்தபோது,
உலகின் பல நாடுகளில் இஸ்ரேல், மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்றன.. இந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தங்களது
எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
அமெரிக்கா, இஸ்ரேல் அச்சம் :
இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த ஈரானின்
வலிமையை கண்ட அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தலைவர்கள், என்ன செய்து என்று புரியாமல் திகைத்து
நின்றனர். எனவே ஈரானை மீண்டும் அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கில், அந்த நாட்டின் அணு
உலைகள் மீது அமெரிக்கா விமானங்கள் குண்டுகளை வீசின. ஆனால், இந்த மூன்று குண்டுகள் மூலம்
ஈரானின் அணு உலைகள் எந்தவிதத்திலும் சேதம் அடையவில்லை. ஈரான் முன்னெச்சரிக்கையாகவே
அனைத்தையும் வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று அதனை பாதுகாத்துவிட்டது. அமெரிக்கா தங்கள்
நாட்டின் மீது தாக்குதல்களை நடத்தினால் மிகப்பெரிய விபரீதம் ஏற்படும் என எச்சரித்த
ஈரான், அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை
விடுத்து இருந்தது.

அதன்படி, ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு
பதிலடி கொடுக்கும் வகையில், கத்தார், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்காவின்
இராணுவத் தளங்கள் மீது ஈரான் அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல்களில் கத்தார்,
ஈராக் நாட்டு மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக, அமெரிக்க ராணுவ தளங்கள்
சேதம் அடைந்தன. இதனால் போர் பதற்றம் அடைந்த
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு
வந்துவிட்டதாக அறிவித்தார். ஆனால், போர் நிறுத்தப்படவில்லை என்றும், இஸ்ரேலின் அட்டகாசத்தை
அழிக்கும் வரை தாங்கள் ஓயபோவதில்லை என்றும் உறுதிப்பட அறிவித்த ஈரான், இஸ்ரேல் மீது
ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்தியது.
மிரட்டினால் ஈரான் அஞ்சிவிடும், பணிந்துவிடும் என
நினைத்த இஸ்ரேல், அமெரிக்கா நாட்டின் தலைவர்கள், எந்தவித சவால்களையும் எதிர்கொண்டு
சமாளிக்க ஈரான் தயாராக இருப்பதைக் கண்டு பீதி அடைந்தனர். எனவே மறைமுக நடவடிக்கைகள்
மூலம், ஈரானை சமாதானம் செய்து, போரை முடிவுக்குக் கொண்டு வந்தனர். எனினும், தங்கள்
நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க தங்களுக்கு உரிமை உண்டு என அறிவித்த ஈரான், மீண்டும்
தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தினால், மிகப்பெரிய இழப்புகளை
சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும் என எச்சரித்தது.
அமெரிக்கா, இஸ்ரேலின் முகத்தில் ஓங்கி அறை :
ஈரான் மீது அத்துமீறி தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல்,
ஈரானின் பதிலடி தாக்குதல்கள் மூலம் மிகப்பெரிய பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ளது.
சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டில் பல நகரங்கள் ஈரானின் தாக்குதல்கள் காரணமாக சின்னாபின்னமாகி விட்டன. அவற்றை
சீரமைக்க பத்து ஆண்டுகள் ஆகும் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஈரானின் தாக்குதலுக்கு
அஞ்சி, இஸ்ரேலை விட்டு ஓடிவிட்ட யூதர்கள், மீண்டும் நாடு திரும்பினாலும், இனி நிம்மதியுடன்
வாழ முடியாது என்ற நிலை தற்போது ஏற்பட்டுவிட்டது. தங்களை யாரும் தாக்க முடியாது. உலகிலேயே
மிகவும் பாதுகாப்பான நாடு இஸ்ரேல் என்று கூறிக் கொண்டு இருந்தவர்கள், தற்போது ஈரானின்
தாக்குதல்கள் மூலம் அந்த பிம்பத்தை அவர்களே உடைத்துவிட்டார்கள்.
உலக ரௌடிகள் இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடன்
நடைபெற்ற போரில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு,
ஈரான் நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய அந்நாட்டின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி ஹெசைனி கமெனி, இந்த யுத்தத்தின் மூலம் அமெரிக்கா எதனையும்
சாதிக்கவில்லை. ஈரான் வெற்றி பெற்றது. அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது என மகிழ்ச்சியுடன்
தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நகர்ப்புறம் மற்றும் ராணுவ இடங்களை குறிவைத்து
இஸ்ரேல் நடத்திய தாக்குதலையும், அந்நாட்டின் பல முனை பாதுகாப்பைபுயம் ஈரான் ராணுவப்
படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளன. அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
நடத்தினாலும், அந்நாடு எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. இதனால் அமெரிக்க அதிபர்
டிரம்ப் நடிக்க வேண்டியிருந்தது.

அமெரிக்காவின் முகத்தில் ஈரான் அறைந்துள்ளது. அமெரிக்கா
தலையிடாவிட்டால் இஸ்ரேல் அழிந்து இருக்கும். இதனை உணர்ந்ததால் தான் அமரிக்கா இந்த போரில்
தலையிட்டது. ஈரானின் கடுமையான தாக்குதல் காரணமாக கடுமையாக நசுக்கப்பட்டதால் இஸ்ரேல்
சரியும் நிலை ஏற்பட்டது. எதிர்காலத்தில் ஈரானுக்கு எதிராக நடக்கும் எந்த அத்துமீறலுக்கும்,
மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். அமெரிக்க ராணுவத் தளத்தை தாக்கியது மிகப்பெரிய
விஷயமாகும். எதிர்காலத்தில் அத்துமீறல்கள் தொடர்ந்தால், இஸ்ரேல், அமெரிக்கா மீதான தாக்குதல்கள்
தொடரும் என உறுதிப்பட தெரிவித்தார்.

மேலும், ஈரானின் அணு உலைகளை ஆய்வு செய்ய இனி சர்வதேச
அணுசக்தி முகமை அனுமதிக்கப்படாது என்றும் ஈரான் திட்டவிட்டமாக தெரிவித்துவிட்டது. அது
தொடர்பான ஒப்பந்தத்தை திரும்ப பெறுவதாகவும் ஈரான் கூறிவிட்டது. 12 நாட்கள் நடைபெற்ற
இந்த போர், உண்மையில் ஈரானுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றே கூறலாம். ஈரானுக்கு
மட்டுமல்ல, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய இரண்டு ரௌடி நாடுகளை எதிர்க்கும் அனைத்து மக்களுக்கும்
கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும். இஸ்ரேல், அமெரிக்காவுடன் நடந்த போரில் மிகப்பெரிய
வெற்றி கிடைத்ததையடுத்து, ஈரான் நாட்டு மக்கள் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு, பேரணியாக
சென்று வெற்றி முழக்கங்களை எழுப்பினார்கள். அது உலகம் முழுவதும் எதிரொலித்தது. அநீதி செய்யும் மனிதன் நிச்சயம் ஒருநாள் வீழ்ச்சி அடைவான். மிகப்பெரிய தோல்வியை அடைவான் என்பது உலக வரலாறு. தற்போது அந்த வரலாறு ஈரான்
மூலம் மீண்டும் எழுதப்பட்டுள்ளது. இஸ்ரேல்,
அமெரிக்கா மிகப்பெரிய தோல்வியை சந்தித்து மிகவும் கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
======================================