Monday, August 3, 2026

விடாமுயற்சி....!

 இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் போதும்  எல்லாவற்றையும் கடந்து விடலாம் எனும் ஒரு சந்தர்ப்பம் வரும்போது தான், நாம் மனமின்றி திரும்பி போகிறோம். 

விடா முயற்சியே விஸ்வரூப வெற்றி என்பதை மனதில் கொண்டால், வெற்றியை கொண்டாடலாம்.



Never stop...!

 The more you learn, the stronger, wiser, and more prepared you become for what lies ahead..



Sunday, August 2, 2026

Comparing....!

Comparing is an insult. 

We are called individuals 

because we are totally different.



சவால்கள்....!

 சவால்கள் வரும்போதுதான், 

நீங்கள் நினைத்திராத 

பல திறமைகள் உங்களிடம் 

ஒளிந்திருப்பதை 

நீங்கள் உணர்வீர்கள். 

சவால்களை எதிர்கொள்ளுங்கள். 

திறமைகளை வெளிப்படுத்துங்கள்..



கேக்....கேக்....கேக்....!

 கேக்....கேக்....கேக்....

விதவிதமான கேக்....

சும்மா பாருங்க....




Saturday, August 1, 2026

சர்வதேச பேரீச்சைத் திருவிழா....!

 " சவூதியின் புரைதாவில் நடைபெறும்  சர்வதேச பேரீச்சைத் திருவிழா "

உலகில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் மிகவும் விரும்பி சாப்பிடும் பேரீச்சம் பழங்களில்,  சவூதி அரேபியாவின் பேரீச்சம் பழங்கள் முக்கிய இடம்பெறுகின்றன. அதற்கு காரணம் சவூதி அரேபிய பேரீச்சம் பழங்கள்  சுவை மிகுந்தவையாகும்.  சவூதி அரேபியா ஆண்டுதோறும் 10 லட்சத்து 60 ஆயிரம் டன்களுக்கும் அதிகமான பேரீச்சம்பழங்களை உற்பத்தி செய்யும் உலகளாவிய முன்னணி நாடாகும். இங்கு அஜ்வா, சுக்ரி மற்றும் கலஸ் போன்ற பல வகை பேரீச்சம்பழங்கள் பிரபலமாக உள்ளன.

மதீனாவில் மட்டுமே விளையும் அஜ்வா மிகச்சிறந்த மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கருப்பு நிற பேரீச்சம்பழமாகும். சுக்ரி இயற்கையான கார்மல் சுவை போன்ற அதிக இனிப்புத் தன்மையைக் கொண்ட மிருதுவான பழம். கலஸ் மென்மையான தன்மையும் குறைவான மிதமான இனிப்பும் கொண்ட பரவலாக விரும்பப்படும் வகை. சஃபாவி  கருமை நிறம் மற்றும் நடுத்தர அளவுடன், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. சவூதியில் 3 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான பேரீச்சம்பனை மரங்கள் உள்ளன.  கசீம், மதீனா, ரியாத் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் பேரீச்சம் பயிரிடப்படுகிறது. சவூதி பேரீச்சம் பழங்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் இயற்கைச் சர்க்கரை நிறைந்து உடலுக்கு வலிமை தருகிறது என்பதால் உலக மக்களால் மிகவும் விரும்பி சாப்பிடப்படுகிறது. 

சர்வதேச பேரீச்சைத் திருவிழா :

இப்படி உலக மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படும் சவூதி அரேபிய பேரீச்சம் பழங்களை உலக அளவில் பிரபலப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் புரைதாவில் சர்வதேச பேரீச்சைத் திருவிழா நடத்தப்படுகிறது. அந்த வகையில்  இந்த ஆண்டுக்கான புரைதா சர்வதேச பேரீச்சைத் திருவிழா ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சனிக்கிழமை தொடங்கி வரும் அக்டோபர் 14 வரை மொத்தம் 75 நாட்கள் நடைபெறுகிறது. இந்த வருடாந்திர நிகழ்வு, சவூதி இராச்சியம் முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்களை ஒன்றிணைக்கிறது.

காசிம் பிராந்தியத்தின் பனை :

இந்தத் திருவிழாவில், காசிம் பிராந்தியத்தின் விவசாயப் பாரம்பரியத்தைக் காட்சிப்படுத்தும் ஒரு கிராமப்புறப் பண்ணை உட்பட பல இடங்களில் கலாச்சார, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளும், கிங் காலித் கலாச்சார மையத்தில் கலாச்சார மற்றும் சமூக நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

=====================

"புரைதா சர்வதேச பேரீச்சைத் திருவிழா ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சனிக்கிழமை தொடங்கி வரும் அக்டோபர் 14 வரை மொத்தம் 75 நாட்கள் நடைபெறுகிறது. இந்த வருடாந்திர நிகழ்வு, சவூதி இராச்சியம் முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்களை ஒன்றிணைக்கிறது"

=====================

இந்தத் திருவிழா, காசிம் பிராந்தியத்தின் பனை மற்றும் பேரீச்சைத் துறையின் அளவைப் பிரதிபலிக்கிறது. இப்பகுதியில் 11 மில்லியனுக்கும் அதிகமான பேரீச்சை மரங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் சுமார் 5 லட்சத்து 78 ஆயிரம் டன் பேரீச்சைகளை உற்பத்தி செய்கிறது.

இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 புள்ளி 2 பில்லியன் சவூதி ரியால் (854 மில்லியன் டாலர்) பொருளாதாரச் செயல்பாட்டை உருவாக்குவதோடு, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

உணவு, விவசாயத் துறைகள் ஊக்குவிப்பு :

இந்தத் திருவிழா, உணவு மற்றும் விவசாயத் துறைகள் முழுவதும் முதலீடுகளையும் கூட்டாண்மைகளையும் ஊக்குவிப்பதோடு, பொருளாதாரத்தை மேம்படுத்திப் பன்முகப்படுத்த வேண்டும் என்ற சவூதி விஷன் 2030-இன் இலக்குகளுக்கும் ஆதரவளிக்கிறது. இந்தத் திருவிழாவில் பல இடங்களில் கலாச்சார, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

சவூதியின் புரைதாவில் தொடங்கியுள்ள இந்த சர்வதேச பேரீச்சைத் திருவிழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வணிகர்கள் வருகை தந்தவண்ணம் உள்ளனர். வரும் 75 நாட்கள் புரைதாவில் பேரீச்சைத் திருவிழா களைகட்டி இருக்கும் என்பதால், சுவையான விதவிதமான பேரீச்சம் பழங்களுங்களுக்கு பஞ்சம் இருக்காது என்று உறுதியாக கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Mistakes....!

Mistakes are painful, 

but as time goes by, 

it becomes a collection of experiences 

called lessons.