மகிழ்ச்சியான தருணம்...!
என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' ஆகிய இரண்டு நூல்களை காட்சி ஊடகத் தோழர் சுரேஷ் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
மகிழ்ச்சியான தருணம்...!
என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' ஆகிய இரண்டு நூல்களை காட்சி ஊடகத் தோழர் சுரேஷ் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.
பத்திரிகை.காம் சேனலுக்கு இன்றைய அரசியல் நிலை குறித்து நான் அளித்த சிறப்பு நேர்காணல்...!
விரைவில்.....!!
இருக்கும் வரை
அன்பாய் இருப்போம்.
ஆறுதல் சொல்வோம்.
இருப்பதை பகிர்ந்து கொள்வோம்.
இன்று நமக்கு நாளை மற்றவர்க்கு
எதுவும் கடந்து போகும்.
கற்றுக்கொள்ளவும்
கற்றுக்கொடுக்கத்தான் பிறந்தோம்.
தவறுகளைச் சொல்லிச் சொல்லியே
காயப்படுத்துதற்கு அல்ல.
மகிழ்ச்சியான தருணம்...!
என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' ஆகிய இரண்டு நூல்களை ஊடகத் தோழர் ஜெயராமன் சுவாமிநாதன் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.
" மக்கா, மதீனாவில் ஹஜ் சேவைகளை மேம்படுத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு செயல்பாட்டு மையம் "
புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உலகம் முழுவதும் மக்கா மற்றும் மதீனாவிற்கு சென்றுள்ள இலட்சக்கணக்கான இஸ்லாமியர்களுக்கு, பல்வேறு வகைகளில், சவூதி அரேபிய அரசு தனது சேவைகளை வழங்கி வருகிறது. பாதுகாப்பான ஹஜ் கடமை என்ற இலக்கை நோக்கி இந்த அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. புனித ஹஜ் கடமைக்கான காலம் நெருங்கி வந்துகொண்டிருக்கும் நிலையில், புனித பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது.
அந்த வகையில் சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் மதீனா நகரங்களை நோக்கி, முஸ்லிம்கள் குவிந்து வருகிறார்கள். இப்படி லட்சக்கணக்கில் வரும் புனித ஹஜ் பயணிகளின் வசதிக்காக சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த ஏற்பாடுகள் அனைத்தும் உலக முஸ்லிம்களால் பாராட்டை பெறும் வகையில் இருந்து வருகின்றன.
ஹஜ் சேவைகளை மேம்படுத்தும் மையம் :
ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக சேவைகளை அறிமுகம் செய்யும் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இந்தாண்டு புதிய சேவை மையம் ஒன்றை உருவாக்கியுள்ளது. மக்கா மற்றும் மதீனாவில் உள்ள ஒருங்கிணைந்த பாதுகாப்பு செயல்பாட்டு மையம், இந்த ஆண்டு புனித ஹஜ் யாத்ரீகர்களுக்காகத் தனது சேவைகளை மேம்படுத்தியுள்ளது. 911 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் தொடர்புகொள்ளக்கூடிய இந்த மையம், அவசரகாலப் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான அழைப்புகளைப் பெற்று, அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இரண்டு வினாடிகளில் பதிலளிக்கிறது.
பல்வேறு மொழிகள் பேசக்கூடிய, தகுதியும் பயிற்சியும் பெற்ற பணியாளர்கள் இந்தச் சேவையை இயக்குகின்றனர். அனைத்து அழைப்புகளும் புகார்களும் இரகசியமாகக் கையாளப்பட்டு, அழைப்பவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இன்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.இந்த 911 எண் கொண்ட சேவை மையம் உண்மையில் லட்சக்கணக்கான ஹஜ் பயணிகளுக்கு மிகப்பெரிய அளவுக்கு பயன் அளிக்கும் வகையில் இருந்து வருகிறது. கணிவான மொழி, சிறப்பான சேவை உள்ளிட்ட அம்சங்களுடன் கொண்ட, இந்த சேவை, உண்மையில் ஹஜ் பயணிகள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.
நவீன குடிநீர் அமைப்பு :
இதுஒருபுறம் இருக்கு மக்கா, மதீனா உள்ளிட்ட புனிதத் தலங்களின் நவீன குடிநீர் அமைப்பு, நிலைத்தன்மையையும் வசதியையும் மேம்படுத்துகிறது. மனிதனை மையமாகக் கொண்ட சேவைகள் மற்றும் ஒருங்கிணைந்த பராமரிப்பு ஆகிய அம்சங்கள் புனிதத் தலங்களில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பிரதிபலிக்கின்றன. இத்திட்டம் ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்களின் அனுபவத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்திட்டம், ஒரு புதுமையான பொறியியல் வடிவமைப்பின்படி, பாதசாரிகள் நடக்கும் வழிகளில் 2 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட நவீன நீர் வழங்கும் இடங்களை வழங்குகிறது. இந்த அமைப்பு, ஹஜ் யாத்ரீகர்களுக்குக் குளிரூட்டப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொடர்ச்சியாகக் கிடைப்பதை உறுதி செய்கிறது.
=================
"மக்கா, மதீனாவில் உள்ள ஒருங்கிணைந்த பாதுகாப்பு செயல்பாட்டு மையம், இந்தாண்டு புனித ஹஜ் பயணிகளுக்காகத் தனது சேவைகளை மேம்படுத்தியுள்ளது. 911 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் தொடர்புகொள்ளக்கூடிய இந்த மையம், அவசரகாலப் பாதுகாப்பு,மனிதாபிமான அழைப்புகளைப் பெற்று, அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இரண்டு வினாடிகளில் பதிலளிக்கிறது"
=================
மக்கா நகரம் மற்றும் மதீனா புனிதத் தலங்களுக்கான சவூதி அரச ஆணையத்தின் நிர்வாகப் பிரிவான கிடானா டெவலப்மென்ட் கோ., இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. இது பாரம்பரிய நீர் விநியோக இடங்களை ஒருங்கிணைந்த நீரேற்று நிலையங்களாக மாற்றியுள்ளது. உயர்ந்த தரம் மற்றும் சுகாதாரத் தரநிலைகளைப் பின்பற்றுவதன் மூலம் இது அடையப்பட்டது. இந்த திட்டம், பாதசாரிகளின் தடையற்ற நடமாட்டத்திற்கு ஆதரவளிக்கவும், அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் நெரிசலைத் தடுக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு மூலோபாய விநியோகத் திட்டத்தை உள்ளடக்கியுள்ளது.
ஹஜ் பயணிகளுக்கு பாதுகாப்பான சூழல் :
இந்த அமைப்பின் தாக்கம் நீர் வழங்குவதையும் தாண்டி விரிவடைகிறது. இது வெப்ப அழுத்தத்தைக் குறைப்பதிலும், புனிதத் தலங்களுக்கு இடையேயான நடமாட்டத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த முயற்சிகள் யாத்ரீகர்களுக்குப் பாதுகாப்பான, வசதியான மற்றும் அமைதியான சூழலை உருவாக்க உதவுகின்றன.
மேம்பட்ட தொழில்நுட்பத் தீர்வுகள் மூலம் சேவை உள்கட்டமைப்பின் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதற்கும், செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்கும் கிடானா கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்தத் திட்டம் பிரதிபலிக்கிறது. இந்த முயற்சிகள் புனித ஹஜ் பயணிகளின் அனுபவத்தை வளப்படுத்த உதவுவதோடு, அவர்களுக்கு வழங்கப்படும் உயர் மட்டப் பராமரிப்பையும் எடுத்துக்காட்டுகின்றன.
இந்தாண்டு புனித ஹஜ் பயணிகளின் நலனுக்காக சவூதி அரேபிய அரசு செய்துள்ள பல்வேறு சேவைகள் உண்மையில் பாராட்டப்பட்டு வருகின்றன. ஒருசில குறைபாடுகள் இருந்தாலும் முறையான வழிகாட்டுதல்களின்படி, புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளுக்கு நிச்சயம் புதிய அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவம், புதிய உற்சாகத்தை ஹஜ் பயணிகளுக்கு நிச்சயம் கொடுக்கும். அதன்மூலம் இலட்சக்கணக்கான ஹஜ் பயணிகள் தங்களது கடமையை பாதுகாப்புடன் மேற்கொண்டு, தாயகம் திரும்ப வழி பிறக்கும் என்று உறுதியாக கூறலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
நூல் மதிப்புரை
நூல் : வணிகத்தால்
பரவிய இஸ்லாம்
பஹ்ரிய்யா - தமிழக முஸ்லிம்கள் - வரலாறு
- வணிகம் - கலாச்சாரம் - அரசியல்
நிகழ்வுகள்
நூலாசிரியர் : புதுமடம் ஹலீம்
வெளியீடு : சாஜிதா
புக் சென்டர்
நெ.85,
அங்கப்ப நாயக்கன் தெரு,
(மஸ்ஜிதே மஃமூர் எதிரில்)
சென்னை - 600 001.
போன்: 98409 77758 /
72996 94049
விலை : ரூ.390/-
அரசியல், எழுத்து, ஊடகம், தன் முனைப்புப் பேச்சு என பன்முகத் தன்மை கொண்ட தமிழகத்தின் புகழ்பெற்ற முஸ்லிம் எழுத்தாளர் புதுமடம் ஹலீம், "வணிகத்தால் பரவிய இஸ்லாம் பஹ்ரிய்யா - தமிழக முஸ்லிம்கள் - வரலாறு - வணிகம் - கலாச்சாரம் - அரசியல் நிகழ்வுகள் " என்ற நூலை கடுமையான உழைப்புடன் எழுதியுள்ளார். இந்த நூலின் மூலம் தமிழகத்தின் சங்ககாலம் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் வெற்றியடைந்த காலம் வரையிலான தமிழக முஸ்லிம்களின் வாழ்வியல், வரலாறு, கலாச்சாரம், அரசியல் ஆகியவற்றின் வரலாற்று நிகழ்வுகளை மிகவும் அழகிய முறையில் எளிமையான எழுத்து நடையில் அவர் வடித்துள்ளார்.
400 பக்கங்களைக் கொண்ட இந்த நூல், வரலாறு, கலாச்சாரம், அரசியல் என மூன்று பாகங்கமாக எழுதப்பட்டுள்ளது. வரலாறு என்ற முதல் பாகத்தில், உள் தேடல், இரண்டாம் நூற்றாண்டு முதல் அரேபிய உறவு, இஸ்லாம் பரவலில் வட இந்தியா வேறு - தென்னிந்தியா வேறு, சமணமும் இஸ்லாமும், தென்இந்தியாவின் முதல் பள்ளிவாசல், சேதுபதிகளின் மதநல்லிணக்கம் என மொத்தம் 15 தலைப்புகளில் பல அற்புதமான வரலாற்று தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இதேபோன்று, கலாச்சாரம் என்ற இரண்டாவது பாகத்தில், தமிழகத்தில் சூஃபியிசம், நவாப்களின் அறப்பணியும் மொழி வளர்ச்சியும், கடல் வணிக பரிமாற்ற மரபு உணவுகள், உடை, நடத்தை, மரபுகள், ஊரும் உறவும், தமிழக முஸ்லிம் கட்டிடக் கலை என மொத்தம் 14 தலைப்புகளில் சுவையான செய்திகள் எழுதப்பட்டுள்ளன.
மூன்றாவது பாகமான அரசியல் பாகத்தில், முதல் அரசியல் நகர்வு, நாயக்கர், மராட்டியர், சேதுபதிகளின் ஆட்சியில் முஸ்லிம் அரசியல், முஸ்லிம்களின் வணிக அரசியல், அரசியர் நிர்ணய சபை, விவாதம், அரசியல் என்ற 13 தலைப்புகளில் அற்புத தகவல்களுடன் ஆக்கங்கள் வரையப்பட்டுள்ளன.
நூலின் நிறைவு பகுதியான ஆய்வின் முடிவுரையில், தமிழகத்தை ஆண்ட மன்னர்கள், முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களுக்கு பல்வேறு கொடைகளை வழங்கி இருப்பதன் மூலம், அக்காலத்திலேயே மத நல்லிணக்கம் இருந்துள்ளதை அறிய முடிகிறது என்பன உள்ளிட்ட பல அரிய தகவல்களுடன், ஜின்னா, பெரியார், அம்பேத்கர் சந்திப்பு, 1937 ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.வாக இருந்த துபாஷ் கே.செய்யது இப்ராஹிம் தொடர்பான புகைப்படங்கள், மேலும், முதன் முதலில் தமிழில் குர்ஆன் மொழியாக்கம் செய்து புரட்சி செய்த மவ்லவி அப்துல் ஹமீது பாகவி, 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மதுரை காஜிமார் தெரு பள்ளிவாசல்,. காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரி, கீழக்கரை பழைய ஜும்மா பள்ளிவாசல், பெரியபட்டினத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரபு மொழி கல்வெட்டு, ஆர்க்காடு நவாப் கோட்டை பள்ளிவாசல், கி.பி.1710ல் கிழவன் சேதுபதி கட்டிய புதுமடம் சத்திரம், தமிழக கடற்கரை கிராம முஸ்லிம் திருமணங்கள், ரமலான் நோன்பு கஞ்சி தயாரிப்பு, திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் கோயிலின் கோபுரத்தில், அரபு நாடுகளில் இருந்து குதிரைகளை ஏற்றி வரும் கப்பல்களும், குதிரைகளுடன் நிற்கும் வீரர்களும் சித்தரிக்கப்பட்டுள்ள அரிய புகைப்படம் என பல அரிய புகைப்படங்கள், வரலாற்று ஆவணங்கள் இடம்பெற்று இந்த நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
'பஹ்ரிய்யா' நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு தகவலும் ஆதாரப்பூர்வமான தகவல்கள் என்பதை நூலாசிரியர் பல்வேறு வரலாற்று மேற்கோள்களுடன் சுட்டிக்காட்டி இருப்பது நூலுக்கு மேலும் வலுச்சேர்க்கும் ஒன்றாக இருக்கிறது. மிகவும் கடின உழைப்புடன் எழுதப்பட்டுள்ள இந்த "வணிகத்தால் பரவிய இஸ்லாம் பஹ்ரிய்யா - தமிழக முஸ்லிம்கள் - வரலாறு - வணிகம் - கலாச்சாரம் - அரசியல் நிகழ்வுகள் " என்ற நூலை சமுதாயம் வரவேற்று படித்து உண்மை வரலாற்றை அறிந்துகொள்ள முன்வர வேண்டும். இதன்மூலம் மட்டுமே, தமிழகச் சமூகம் பரவலாக மறந்துகொண்டிருக்கும் வரலாறு நினைப்படுத்தப்பட்டு இளம் தலைமுறையினரும் அறிந்துகொள்ள வாய்ப்பு உருவாகும்.
அருமையான வரலாற்று பொக்கிஷமான "வணிகத்தால் பரவிய இஸ்லாம் பஹ்ரிய்யா - தமிழக முஸ்லிம்கள் - வரலாறு - வணிகம் - கலாச்சாரம் - அரசியல் நிகழ்வுகள்" என்ற இந்த நூல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் மதரஸா நூலகங்களில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். இதன்மூலம் மாணவச் சமுதாயம் உண்மையான இஸ்லாமிய வரலாற்றை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஒவ்வொரு முஸ்லிம் இல்லங்களிலும் இந்த நூல் இடம்பெற்று வாசிக்கப்பட்டால், முஸ்லிம்கள் குறித்து பொய்யாக பரப்பட்டு வரும் பிரச்சாரங்கள், வதந்திகள் ஆகியவை அனைத்தும் பொய்யானவை என்பதை இளம் தளிர்கள் அறிந்துகொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் நூலகங்களில் "வணிகத்தால் பரவிய இஸ்லாம் பஹ்ரிய்யா - தமிழக முஸ்லிம்கள் - வரலாறு - வணிகம் - கலாச்சாரம் - அரசியல் நிகழ்வுகள்" என்ற நூல் இடம்பெறுவது மட்டுமல்லாமல், திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோர், தங்களுக்கு அன்பானவர்களுக்கு இந்த நூலை பரிசாக அளிக்க ஆர்வத்துடன் முன்வர வேண்டும். அதன்மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த வரலாற்று உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்து நாலா பக்கமும் பரவ வாய்ப்பு உருவாகும்.
- ஜாவீத்