Tuesday, April 28, 2026

உலக புகழ்பெற்ற தாயிஃப் ரோஜா...!

 உலக புகழ்பெற்ற தாயிஃப் ரோஜா: 

100 ஆண்டுகால பாரம்பரிய தொழிலின் ஒரு சுவையான கதை...!

சவூதி அரேபியாவின் தாயிஃப்  நகரம், அதன் புகழ்பெற்ற வாசனையுள்ள ரோஜாக்களுக்கு உலகப் புகழ்பெற்றது. ஆண்டுக்கு 500 மில்லியனுக்கும் அதிகமான ரோஜாக்கள், குறிப்பாக டமாஸ்க் வகை ரோஜாக்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ரோஜாக்கள் விலைமதிப்பற்ற நறுமண எண்ணெய்  தயாரிக்கப் பயன்படுகின்றன. அதன் காரணமாக, அழகு மற்றும் நளினத்தின் சின்னமான தாயிஃப் ரோஜா, சவூதி அரேபியாவின் வரலாற்றிலும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதன் துடிப்பான இளஞ்சிவப்பு நிறங்களும் இனிமையான நறுமணமும் சர்வதேசப் பயணிகளைக் கவர்கின்றன. இந்த புகழ்பெற்ற மலர், தாயிஃப் மாகாணத்தில் முதல் ரோஜா தொழிற்சாலையை நிறுவ உதவ ஒரு இந்திய யாத்ரீகருக்கு உத்வேகம் அளித்தது என்பது ஆச்சரியம் அளிக்கும் சுவையான தகவலாகும். 

தாயிஃப் ரோஜாக்கள், ரோசா டமாசெனா மற்றும் ரோசா சென்டிஃபோலியாவகைகளைச் சேர்ந்தவை. ரோஜா எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. இங்கிருந்து ரோஜா நீர் மற்றும் வாசனை திரவியங்கள்  முக்கியமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக,  சவூதி அரேபியாவின் தாயிஃப் பகுதியில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. சவூதி அரேபியாவில், ஆண்டுக்கு 500 மில்லியனுக்கும் அதிகமான ரோஜாக்கள், குறிப்பாக தாயிஃப் பகுதியில் விளைகின்றன. உலகளாவிய தேவை அதிகரிப்பு காரணமாக, இந்த பகுதியில் ரோஜா உற்பத்தி ஆண்டுக்கு 15 சதவீதத்கும் மேலாக உயர்ந்துள்ளது.  தாயிஃப் ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், மிகவும் சுத்தமானதாகவும், வாசனையானதாகவும் கருதப்படுகிறது.

பழமையான ரோஜா தொழிற்சாலை :

தாயிஃபின் நூற்றாண்டு பழமையான ரோஜா தொழிற்சாலை மற்றும் அதன் ரோஜா வடித்தல் முறைகளின் கதை, இந்த பாரம்பரியப் பொருளின் அடையாளத்தை வடிவமைத்த இரகசியங்களைப் பாதுகாத்து, தலைமுறை தலைமுறையாக பாதுகாப்புடன் பின்பற்றப்பட்டு வருகிறது.

தாயிஃபைப் பூர்வீகமாகக் கொண்ட அப்துல்ரஹ்மான் பின் ஹுமைத் அல்-குராஷி, இந்தக் கதை தனது தாத்தாவிடமிருந்து தொடங்கியது என்று விவரிக்கிறார். அவர் யாத்ரீகர்களுக்கு தாயிஃப் ரோஜாக்களை விற்று வந்தார். அப்போது, இந்தியாவிலிருந்து வந்த யாத்ரீகர்களில் ஒருவரின் கவனத்தை அதன் தரம் ஈர்த்தது. அவர், அடுத்த பருவத்தில் ரோஜாக்களை வடிப்பதற்காக ஒரு சிறப்பு செப்புப் பானையைக் கொண்டு வருவதாக உறுதியளித்தார்.

                                                ====================

"அழகு மற்றும் நளினத்தின் சின்னமான தாயிஃப் ரோஜா, சவூதி அரேபியாவின் வரலாற்றிலும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதன் துடிப்பான இளஞ்சிவப்பு நிறங்களும் இனிமையான நறுமணமும் சர்வதேசப் பயணிகளைக் கவர்கின்றன"

                                            ====================

“அந்த இந்திய யாத்ரீகர் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, அந்தச் செப்புப் பானையைக் கொண்டு வந்தார். அது இன்றும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நம்மிடம் உள்ளது,” என்று குறிப்பிட்ட அல்-குராஷி, தனது தாத்தா முதலில் அதைப் பயன்படுத்தி ரோஜாக்களைக் காய்ச்சி ரோஜா நீரை மட்டும் எடுக்கத் தொடங்கினார் என்றும், பின்னர் ஒரு கண்டுபிடிப்பு அந்த வேலையின் போக்கையே மாற்றியது என்றும், அதன் மூலம் அவர் முதன்முறையாக ரோஜா எண்ணெயைப் பிரித்தெடுக்க முடிந்தது என்றும் குறிப்பிடுகிறார்.

சில பருவங்களில் தனது தாத்தா பயிர் சேதத்தால் அவதிப்பட்டதாகவும், ஆனால் செப்புப் பானையின் பயன்பாடு ரோஜாப் பொருட்களின் வளர்ச்சிக்கு பங்களித்ததாகவும் அவர் மேலும் கூறுகிறார். இது ரோஜா நீருடன் தொடங்கி, பின்னர் அதிக விலையுள்ள ரோஜா எண்ணெயை உற்பத்தி செய்யும் அளவுக்கு பரிணமித்தது. அல்-ஹதா மலைகளுக்கு இடையேயான பசுமைப் பள்ளத்தாக்கில் தனது தாத்தா அப்துல்லா அவ்வாறு செய்த முதல் நபர்களில் ஒருவராக இருந்ததால், ரோஜாக்களை சமைக்கும் பழக்கத்தை மேற்கொண்ட முதல் குடும்பமாக தங்கள் குடும்பம் கருதப்படுகிறது என்று அல்-குராஷி குறிப்பிட்டார்.

பொருளாதார மதிப்பு அதிகரிப்பு :

அக்காலத்தில் ரோஜா நீரின் விலை சுமார் 1 புள்ளி 5 ரியால்களாக இருந்தது என்று அல்-குராஷி சுட்டிக்காட்டினார். இந்தத் தொழில் வளர வளர, அது அதிக பொருளாதார மதிப்பைப் பெற்றது. மேலும் அதன் அரிதான தன்மை மற்றும் உயர் தரம் காரணமாக முதல் தோலா ரோஜா எண்ணெய் அதிக விலைக்கு விற்கப்பட்டது.

இந்தத் தொழிலின் விவரங்கள் குறித்து விளக்கும் அல்-குராஷி, இது விடியற்காலையின் முதல் ஒளியில் தொடங்குகிறது என்றும், அப்போது ரோஜாக்கள் அவற்றின் நறுமண எண்ணெய்களைப் பாதுகாப்பதற்காக கவனமாகப் பறிக்கப்பட்டு, பின்னர் பாரம்பரிய பட்டறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, வரலாற்றின் வாசனையை இன்னும் தக்கவைத்துக் கொண்டிருக்கும் செப்புப் "பானைகளுக்குள்" வைக்கப்படுகின்றன என்றும் கூறுகிறார். .

 உலகளவில் புகழ்பெற்ற ரோஜாப் பண்ணைகள் :

விவசாயிகளின் அனுபவங்களின்படி, உயர்தர ரோஜாக்களை உற்பத்தி செய்வதற்கு உகந்த சூழல்களை வழங்குவதால், அல்-ஹதா மற்றும் அல்-ஷஃபாவில் உள்ள ரோஜாப் பண்ணைகள் உலகளவில் மிகவும் புகழ்பெற்றவை என்றும் அவர் பெருமையுடன் மகிழ்ச்சி அடைகிறார். 

மேலும், பல தசாப்தங்களாக தாயிஃப் ரோஜாக்களைத் தனித்துவப்படுத்திய பாரம்பரியத்தைப் பாதுகாத்துக்கொண்டே, விவசாயிகள் தங்கள் முறைகளைத் தொடர்ந்து செம்மைப்படுத்தி, அவற்றை பல்வேறு உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தைகளில் விற்கப்படும் ஒரு பொருளாக மாற்றி வருவதாகவும் அல்-குராஷி  குறிப்பிட்டார்.

சவூதி அரேபியாவின் தாயிஃப் நகரத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால், அங்கு நடந்த இஸ்லாமிய வரலாற்று சம்பவங்களை உங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, மகிழ்ச்சியும் பரவசமும் அடையும் அதேவேளையில், உலக அளவில் புகழ்பெற்ற தாயிஃப் ரோஜாக்களின் அழகையும் கண்டு மகிழ்ச்சி அடையுங்கள். அத்துடன், இயற்கையின் அற்புதங்களை பார்த்து வியப்பு அடைந்து ஏக இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


வேதனை....!

A man in Odisha dug up his deceased sister’s grave and brought her skeleton to the bank Just to prove she had died.

He had been trying to withdraw ₹20,000 from her account, but bank officials kept insisting he bring the account holder in person. Despite repeatedly telling them she had passed away, they didn’t listen.

Frustrated and unaware of the legal process, he took this extreme step.

This incident shows not just a lack of awareness, but also a failure of basic human understanding in the system.



Monday, April 27, 2026

நூல்கள் அறிமுகம்...!

இனிய தருணம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை, பல்வேறு துறை தோழர்களுக்கு  வழங்கி மகிழ்ச்சி அடைந்த  இனிமையான தருணம்.





மக்காவில் தயார் நிலை....!

ஹஜ் பெருவிழாவிற்காக மக்காவில் தயார் நிலையில் இருக்கும் வசதிகள்

ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். உடல்நலம் மற்றும் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த ஆண்டு ஹஜ் பெருவிழா மே 24 முதல் 29 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஏற்கனவே சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ளனர்.

குறிப்பாக, இந்தியா, இந்தோனேஷியா, வங்கதேசம் என உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் இந்தாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு இஸ்லாமியர்கள் வந்தவண்ணம் உள்ளனர். போர் பதற்றத்திற்கு மத்தியில் கூட, ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள், தங்களது ஐந்தாவது கடமையை நிறைவேற்ற திங்கட்கிழமையன்று (27.04.2026) மதீனா வந்து சேர்ந்தபோது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

விருந்தோம்பலுக்குப் புகழ்பெற்ற மதீனா நகரம், அங்கு வாழும் மதீனாவாசிகளின் பாரம்பரிய விருந்தோம்பல் குணத்தை எப்போதும் கடைப்பிடித்து வருகிறது. தற்போது ஹஜ் பெருவிழா காலம் தொடங்கியுள்ள நிலையில், மதீனாவாசிகள், தங்களுடைய விருந்தோம்பல் குணத்தை மேலும் தீவிரமாக வெளிப்படுத்தி, ஹஜ் பயணிகளின் இதயங்களை கவர்ந்து வருகிறார்கள். 

தயார் நிலையில் இருக்கும் வசதிகள் :

இதுஒருபுறம் இருக்க, இந்தாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்திரீகர்கள் தங்குவதற்காக பிரமாண்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,  புதிய உரிமம் வழங்கும் சேவை மூலம், மக்காவில் ஹஜ் பயணிகள் தங்க 5 லட்சத்து 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள வருடாந்திர ஹஜ் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, சவூதி அரேபியாவின் சுற்றுலாத் துறை அமைச்சர் அகமது அல்-கதீப், திங்களன்று (27.04.2026) மக்காவில் ஹஜ் பயணிகள் தங்கும் வசதிகளை  நேரில் ஆய்வு செய்தார்.

ஹஜ் யாத்திரீகர்களுக்கு வழங்கப்படவுள்ள சேவைகளை ஆய்வு செய்ததுடன், சுற்றுலாத் துறை ஊழியர்களையும் அமைச்சர் அகமது அல்-கதீப் சந்தித்துப் பேசினார். இவர்களில் சிலர் அமைச்சகத்தின் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்று சிறப்பான பயிற்சி பெற்றவர்கள். இந்த பயிற்சி மூலம், ஹஜ் பயணிகளுக்கு இவர்கள் நல்ல சேவையை ஆற்ற முடியும் என அமைச்சர் அகமது அல்-கதீப் நம்பிக்கை தெரிவித்தார். 

===================
"காசியாபாத் வீட்டு வசதி சங்கத்தில், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக சவூதி அரேபியா சென்ற முஸ்லிம் அண்டை வீட்டாருக்கு, இந்து குடியிருப்பாளர்கள் மலர் மாலைகள் அணிவித்து, ஆரத்தழுவி வழியனுப்பி வைத்தனர். இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் காணொளியாக சமூக ஊடகங்களில் வெளியாகி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது"
===================

இதனிடையே, கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட புதிய தற்காலிகத் தங்கும் இடங்களுக்கான உரிமம் வழங்கும் சேவை மூலம், மக்காவில் ஹஜ் யாத்திரீகர்களுக்கான தங்கும் வசதித் துறையில் கூடுதலாக 5 லட்சத்து 66 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட படுக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்தாண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றவரும் ஹஜ் பயணிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாது என்று சவூதி அரேபிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

சிறப்பான பாதுகாப்பான ஏற்பாடுகள் :

சவூதி அரேபியா அரசின் பொதுப் புள்ளியியல் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு 16 லட்சத்து 73 ஆயிரத்து 230 யாத்திரீகர்கள் புனித ஹஜ் கடமையை மேற்கொண்டனர். இவர்களில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 654 பேர் சவூதி குடிமக்களாகவோ அல்லது அங்கு வசிப்பவர்களாகவோ இருந்தனர். எஞ்சியோர் சவூதி அரேபியாவிற்கு வெளியிலிருந்து வருகை தந்தவர்களாவர்.

தற்போது ஹஜ் பெருவிழா காலம் தொடங்கியுள்ளதால், சவூதி அரேபியாவில் மட்டுமல்லாமல், இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் கூட, ஹஜ் கடமையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு முஸ்லிம்கள் மத்தியில் அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் அவர்களின் உள்ளத்தில், ஹஜ்ஜின் விதை விதைக்கப்பட்டு, வாழ்நாளில் எப்படியாவது ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவல் வளர்க்கப்பட்டு வருகிறது. 

இத்தகைய அருமையான சூழ்நிலையில், புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக நாட்டின் பல இடங்களில் வழியனுப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சகோதரத்துவம் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சில இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த இந்து சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு, இஸ்லாமியர்களை வழியனுப்பி வைத்தது, அனைவரின் இதயங்களை கவர்ந்தது. 

பரிவு மற்றும் சமூக நல்லிணக்கம் :

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்காக, அவர்களின் இந்து அண்டை வீட்டாரால் நடத்தப்பட்ட வழியனுப்பு விழா, சமூக நல்லிணக்கத்தின் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.  காசியாபாத் வீட்டு வசதி சங்கத்தில், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக சவூதி அரேபியா சென்ற முஸ்லிம் அண்டை வீட்டாருக்கு, இந்து குடியிருப்பாளர்கள் மலர் மாலைகள் அணிவித்து, ஆரத்தழுவி வழியனுப்பி வைத்தனர். ஏப்ரல் 21, 2026 அன்று, இரண்டாவது குழுவினர் புறப்படும்போது, இந்த அன்பான வழியனுப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் காணொளியாக சமூக ஊடகங்களில் வெளியாகி, பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இது இந்தியாவில் நிலவும் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வை, மதங்களுக்கு அப்பாற்பட்ட, அண்டை வீட்டாரின் இயற்கையான கடமை மற்றும் நீண்ட கால நட்பின் அடையாளமாக அப்பகுதி மக்கள் விவரித்தனர். மேலும், இந்தச் சம்பவம், சமூகங்களுக்கு இடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Relationship....!

A relationship with a nice person is like a sugarcane. You break it, crush it, squeeze it, even beat or grind it, still you will get only sweetness. 



எண்ணங்களில்....!

 எண்ணங்களில் 

நீங்கள் எப்போதும் 

அழகாக இருங்கள். 

தோற்றம் எப்படி இருந்தாலும் 

கவலை கொள்ளாதீர்கள்.

எண்ணமே வாழ்வு என்பதை 

உறுதியாக நம்புங்கள். 

அந்த நம்பிக்கை உங்களை 

எப்போதும் அழகாக வைத்திருக்கும்



நூல்கள் அறிமுகம்....!

 இனிய தருணம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை, கல்லூரி தோழர் குமரேஸ்வரன் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த  இனிமையான தருணம்.