Saturday, April 4, 2026

கிடைக்கும்.....!

விழிகளைத் திறந்தால் ஒளி கிடைக்கும். 

எழுந்து நடந்தால் வழி கிடைக்கும். 

தேடிப் பார்த்தால் வேண்டியது கிடைக்கும். 

முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். 

நம்பிக்கை கொண்டால் 

வாழ்க்கை கிடைக்கும். 

தன்னம்பிக்கை வாழ்வில் 

மகிழ்ச்சியை கொடுக்கும்....!



பேராசிரியர் சேமுமு முகமதலி பேட்டி...!

தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :

சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு  வரலாற்று வெற்றி  நிச்சயம் கிடைக்கும்....!! 

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கப் பொதுச் செயலாளர்  பேராசிரியர் சேமுமு முகமதலி பேட்டி.....!!!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு, தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் ஆதரவு வழங்க தீர்மானம் நிறைவேற்றி இருப்பதுடன், தேர்தல் களப்பணியிலும் இறங்கி தீவிரம் காட்டி வருகிறது. இயக்கத்தின் மாநிலத் தலைவர் கே.ஏ.மன்சூர், மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சேமுமு முகமதலி, மாநில பொருளாளர் எல்.எம்.ஹபீப் முஹம்மது உட்பட தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தில் இணைந்துள்ள அனைவரும் தமிழகத்தின் நலன் மற்றும் அமைதியை கருத்தில் கொண்டு, முஸ்லிம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். 

இத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சேமுமு முகமதலியை, மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் நேரில் சந்தித்து, வரும் 23ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் எத்தகைய முறையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு திரட்டி, பணிகளை மேற்கொள்ளும் என்பதை அறிய விரும்பி நேர்காணல் ஒன்றை  நடத்தினார். அந்த நேர்காணலின் முழு விவரம் வருமாறு:

அனைவரும் இணைந்த இயக்கம் :

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் கடந்த 27 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறது. எந்தவித அரசியல் சார்பு இல்லாமல், சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து சமுதாய மக்களிடைய கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நல்ல பணிகளை இயக்கம் செய்து வருகிறது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது, ஏழை மாணவர்களின் கல்வி தேவையை பூர்த்திச் செய்வது, பேரிடர் காலங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவது, நிதியுதவி அளிப்பது என பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த இயக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் உறுப்பினர்களும் அங்கத்தினர்களாக உள்ளனர். 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை, சமுதாய மக்கள் மத்தியில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இயக்கம் முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இயக்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் மாநிலம் முழுவதும் உள்ள தங்களது பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களுக்குச் சென்று,  சட்டப்பேரவைத் தேர்தலின் முக்கியத்துவம், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு அவசியம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். நூறு சதவீத வாக்கு பதிவுசெய்யப்பட வேண்டிய அவசியம் குறித்தும் நாங்கள் மிகத் தெளிவாக மக்கள் மத்தியில் விளக்கம் அளித்து வருகிறோம். 

திமுக அணிக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் :

மேலும், இஸ்லாமிய சமுதாயத்திற்கு யார் உறுதுணையாக இருப்பார்கள்? தற்போது யார் உறுதுணையாக இருந்து வருகிறார்கள்? என்பது குறித்தும் புள்ளிவிவரங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன், இயக்கத்தின் தார்மீக பொறுப்பை நன்கு உணர்ந்து நாங்கள் தேர்தல் பணிகளைச் செய்து வருகிறோம். 

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் என்பது, மதத்தின் பெயரால் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி, பாஜக உள்ளிட்ட பாசிச சக்திகள், தமிழ்நாட்டில் அரசியல் இலாபம் அடைய விரும்புகின்றன. வட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட சதிகளை போன்று தமிழ்நாட்டிலும் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளையும் சதிகளையும் முறியடிக்க வேண்டியது சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு இயக்கத்தின் பொறுப்பு மற்றும் கடமையாகும். அதை உணர்ந்து தான் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் தேர்தல் களப்பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. 

தமிழ்நாட்டின் பாரம்பரியம், மரபு, பண்பாடு, மனிதநேயம், ஒற்றுமை, அமைதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை சீர்குலைக்க நடக்கும் சதிகளை நாம் முறியடிக்க வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் செயலாற்றி வருகிறது. ஆதிக்க தீயச் சக்திகளிடம் இருந்து தமிழ்நாடு பாதுகாக்கப்பட வேண்டியது மக்களின் பொறுப்பாகும். அதற்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை நாம் உறுதி செய்ய வேண்டும். அது ஒவ்வொரு இஸ்லாமியர்களின் கடமை மட்டுமல்ல. ஒவ்வொரு தமிழர்களின் பொறுப்பாகும். 

தவெகவின் திட்டம் நிச்சயம் நிறைவேறாது :

சினிமா கவர்ச்சியை வைத்து தமிழகத்தில் வெற்றி பெறலாம் என தமிழக வெற்றிக் கழகம் நினைக்கிறது. அந்த முயற்சி, எண்ணம் நிச்சயம் நிறைவேறாது. மக்கள் தற்போது மிகத் தெளிவாக இருந்து வருகிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணிக்கு வரும் வாக்குகளை பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், பாசிச சக்திகள்  நடிகர் விஜய்யை களத்தில் இறக்கியுள்ளன.  இதை நாம் மக்களிடையே எடுத்துக் கூற வேண்டும். குறிப்பாக, இஸ்லாமியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அந்த பணிகளை தான் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் செய்து வருகிறது. 

234 தொகுதிகளிலும் நமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், பணியாற்றி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு தமிழ்நாடு மக்கள் அனைவரும் துணையாக இருக்க வேண்டும் என பிரச்சாரம் செய்து வருகிறார்கள். சிறுபான்மையின மக்களின் அரணாக திமுக எப்போதும் இருந்து வருகிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், முஸ்லிம்களின் நலனில் திமுக அக்கறை கொள்கிறது. இதை உணர்ந்து தான் திமுக அணிக்கு கிடைக்க வேண்டிய இஸ்லாமியர்களின் வாக்குகளை பிரிக்க சதி நடந்து வருகிறது. அதை நாம் முறியடித்து வருகிறோம். 

திமுக கூட்டணிக்கு வரலாற்று வெற்றி கிடைக்கும் :

மக்களிடையே குறிப்பாக, முஸ்லிம் மத்தியில் நமது இயக்கம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். தவெகவிற்கு அளிக்கும் வாக்கு பாஜகவிற்கு அளிக்கும் வாக்காகும் என்பதை மக்கள் மத்தியில் விளக்கமாக கூறி வருகிறோம். இதன்மூலம் தவெகவால் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய அளவுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படாது. இஸ்லாமிய சமுதாயத்தின் பாதுகாப்பை உணர்ந்து இஸ்லாமியர்கள் அனைவரும் திமுக அணிக்கு ஒற்றுமையாக வாக்களிக்க முடிவு செய்துவிட்டார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வரலாற்று வெற்றியை நிச்சயம் பதிவு செய்யும் என்று  நாங்கள் உறுதியாக நம்புகிறோம். 

இவவாறு பேராசிரியர் சேமுமு முகமதலி தெரிவித்தார். அவரது விருப்பம் நிறைவேற வாழ்த்துக் கூறி நாம் விடைப்பெற்றோம். 

- சந்திப்பு : சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

2026 சட்டமன்றத் தேர்தலும், திமுக தேர்தல் அறிக்கையும்....!

  " 2026 சட்டமன்றத் தேர்தலும், திமுக தேர்தல் அறிக்கையும் "

- ஜாவீத் -

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வரும் 23ஆம் தேதி மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் 23க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எனவே இதுஒரு மெகா கூட்டணியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, ஏற்கனவே கூட்டணியில் நீண்ட காலமாக இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட சில இயக்கங்கள் பல்வேறு தியாகங்களை செய்ய வேண்டிய கட்டாய சூழல் உருவானது. அதன்படி கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை விட தற்போது குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை ஏற்றுக் கொண்டு, தமிழ்நாட்டின் நலன் தான் மிகவும் முக்கியம் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இ.யூ.முஸ்லிம் லீக் பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. 

திமுக தேர்தல் அறிக்கை :

இத்தகைய சூழ்நிலையில், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களின்போது, திமுகவின் தேர்தல் அறிக்கை எப்போதும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. அதன்படி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும், திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெளியிட்டார். அதில் பல முக்கிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. வளர்ச்சித் திட்டங்களுக்கான வாக்குறுதிகள், அறிவிப்புகளோடு, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை கவரும் வகையிலான வாக்குறுதிகளும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

குறிப்பாக, வாஷிங்மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க இல்லததரசிகளுக்கு 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும்., அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்., புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், 50 புதிய செம்மொழிப் பூங்காக்கள் உருவாக்கப்படும்., நெல் கரும்பு கொள்முதல் விலை உயர்வு என்பன உள்ளிட்ட 525 அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

சிறுபான்மையின மக்களுக்கான வாக்குறுதிகள் :

வழக்கம் போல, தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்த பல்வேறு அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றன. திமுக தேர்தல் அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் வாழும் மதவழி மற்றும் மொழிவழி சிறுபான்மையினரின்  உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தை 1989-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அமைத்தார்கள். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 2010-ஆம் ஆண்டு  நிறைவேற்றினார்கள். 

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக  சென்னை நங்கநல்லூரில், 65 கோடிரூபாய்  மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு ஆண்டு நிர்வாக  மானியமாக 80 இலட்சம் ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஹஜ் பயனாளி  ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் ஹஜ் மானியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 11 ஆயிரத்து 364 ஹஜ் பயனாளிகள் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்காக அரசு 24 கோடியே 56 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கியுள்ளது. 

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 31 ஆயிரத்து 625 பயனாளிகளுக்கு 207 கோடி ரூபாய் மதிப்பில் கடன்கள்  வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நலத் திட்டங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில்  405 கோடி ரூபாய் அளவில் அரசு நிதி தரப்பட்டுள்ளது என கடந்த காலங்களில் மட்டுமல்லாமல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் சில தகவல்கள் தரப்பட்டுள்ளன. 

திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கான வாக்குறுதிகள் :

இதன் தொடர்ச்சியாக,  திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நிறைவேற்றப்பட இருக்கும் பணிகள், திட்டங்கள் குறித்தும் திமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த முக்கிய அறிவிப்புகள் குறித்து நாம் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். 

1. சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில், திறன் மேம்பாட்டு மையங்கள்  அமைக்கப்படும்.

2. சிறுபான்மை சமூகத்தினர் வணிகம் மற்றும் தொழில் தொடங்க கடன் பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.

3. சிறுபான்மை இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோருக்கு சிறப்புத் திறன் பயிற்சி  வகுப்புகள் துவக்கப்படும். ஆண்டுக்கு 25,000 இளைஞர்களுக்கு இப்பயிற்சி  வழங்கப்படும்.

4. இசுலாமிய மக்களின் அடக்கத் தலங்களுக்கு இயன்ற இடங்களில் இடம் ஒதுக்கப்படும்.

5. சிறுபான்மை பள்ளிகளில் காலியாக உள்ள அரபி ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

6. இசுலாமியப் பெண்களின் கல்வியை ஊக்குவிக்க வக்ஃபு வாரியத்தின் வாயிலாக  கூடுதல் கல்லூரிகள் திறக்கப்படும்.

7. சிறுபான்மையினர் அயலக பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்ய ஒரு சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும். அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு சிறுபான்மையினருக்கும் ஒரு புதிய திட்டம்  உருவாக்கப்படும்.

8. சிறுபான்மையினர் தொழில் தொடங்க TAMCO மூலம் கடன்பெறும் உச்சவரம்பின் அளவு  30 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

9. பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களில் விரிவாக்கம், பராமரித்தல் அல்லது புதுப்பித்துக்  கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற 07.03.2024 அன்று  வெளியிடப்பட்ட நிலையான இயக்க முறை (SOP), முறையாகவும், விரைவாகவும்  செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.

10. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள உருது ஆசிரியர்  பணியிடங்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விரைந்து நிரப்பப்படும். 

மனதை கவரும் அறிவிப்புகள் :

இப்படி, இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரின் மனதை கவரும் பத்து அறிவிப்புகளை 2026 திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பத்து அறிவிப்புகள், வாக்குறுதிகள் அடுத்துவரும் திமுக ஆட்சியில் நிச்சயம் நிறைவப்படும் என்று இஸ்லாமிய சமுதாயம் உறுதியாக நம்புகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் வெளியாகியுள்ள பத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்பட்டால், உண்மையில் இஸ்லாமிய சமுதாயம் ஆனந்தம் அடையும். இஸ்லாமிய சமுதாயத்தின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் உருவாகும். 

எனவே திமுகவின் தேர்தல் அறிக்கையில் இஸ்லாமிய சமுதாயத்திற்காக வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் மற்றும் அறிவிப்புகள் அனைத்தையும் முஸ்லிம் சமுதாயம் நன்கு உள்வாங்கிக் கொண்டு, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிப்பதை தங்களது ஜனநாயகக் கடமையாக கருத வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று முதல் பணியாக வாக்கு அளிக்க வாக்குச்சவாடிகளுக்குச் செல்ல வேண்டும். 234 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நிற்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தங்களது வாக்குகளைச் செலுத்த வேண்டும். அதன்மூலம் தமிழ்நாட்டின் பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாப்பதுடன், ஜனநாயக நெறிமுறைகள் சிறந்த முறையில் அமைய இஸ்லாமிய சமுதாயம் முழு ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும். 

=======================================


மகிழ்ச்சி....!

என்னுடைய ' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  நூலை ,இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களிடம் இருந்து, இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் பேராசிரியர் சேமுமு முஹம்மது அலி பெற்றுக் கொண்டு வாழ்த்தியபோது மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.

நூல்களுக்கு தோழர்கள் அமோக வரவேற்பு.!



Friday, April 3, 2026

திமுக கூட்டணிக்கு ஒட்டுமொத்த இஸ்லாமிய இயக்கங்களும் ஆதரவு....!

தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு 

தமிழகத்தின் ஒட்டுமொத்த இஸ்லாமிய இயக்கங்களும் ஆதரவு....! 

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம், மிகமிக வித்தியாசமான ஒரு களமாக இருந்து வருகிறது. ஐந்து  ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒவ்வொரு தேர்தல் திருவிழாவிலும், இஸ்லாமிய இயக்கங்கள் தங்களுக்கு விருப்பமான அணிக்கு அல்லது கட்சிக்கு ஆதரவாக களம் இறங்கி, தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தும். ஆனால், இந்த முறை, முதல்முறையாக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாக தங்களது ஆதரவை வழங்கியுள்ளன. இஸ்லாமிய இயக்கங்கள் மட்டுமல்லாமல், சமூக பணிகளில் ஈடுபட்டுள்ள பிற முஸ்லிம் அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் கூட, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றன.

களப்பணி ஆற்ற முடிவு :

திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது. இதேபோன்று, தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் உள்ளிட்ட பல இயக்கங்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை உள்ளிட்ட மார்க்க அறிஞர்களின் அமைப்புகளும் திமுக அணிக்கே ஆதரவு வழங்கியுள்ளன. இதனால் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள முஸ்லிம் இயக்கங்களில் பட்டியல் ஒரு மிகப்பெரிய நீண்ட பட்டியலாக இருந்து வருகிறது.  இப்படி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது மட்டுமல்லாமல், 234 தொகுதிகளிலும் களப்பணி ஆற்றுவது என்றும் இஸ்லாமிய அமைப்புகள் தீர்மானம் செய்துள்ளன.  தீர்மானம் செய்ததோடு நிற்காமல், களப்பணி ஆற்றவும் செயலில் இறங்கி மிகமிக உறுதியோடு தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றன. 

திமுக கூட்டணிக்கு ஆதரவு ஏன் ?

தமிழகத்தின் ஒட்டுமொத்த இஸ்லாமிய அமைப்புகளும் திமுக கூட்டணிக்கு ஆதரவு வழங்க ஏன் முன்வந்து இருக்கின்றன? அதற்கு என்ன காரணம்? என்ற பல கேள்விகளை எழுப்பினால், அதற்கு முக்கிய விளக்கங்கள் கிடைக்கின்றன. அதாவது, தமிழ்நாட்டில் தற்போது  இருக்கும் மதநல்லிணக்கம், அமைதி ஒருபோதும் சீர்குலைந்து போய்விடக் கூடாது என்று அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் விரும்புகின்றன. அதனால் தான், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறலாம். வட மாநிலங்களில் சில பாசிச அமைப்புகள் சிறுபான்மையின மக்கள் மீது விரோதம் கொண்டு, வெறுப்பு பிரச்சாரம் செய்து, மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களின் வாழ்க்கை மிகவும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அதுபோன்ற ஒரு நிலைமை தமிழகத்தில் வரவேக் கூடாது என்று அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் நினைக்கின்றன. அமைதியை விரும்புகின்றன.  மேலும் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில் திமுக சிறுபான்மையினரின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது. 

குறிப்பாக, இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்தது. தமிழ்நாடு உர்தூ அகாடமியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும், திட்டங்களையும் திமுக அரசு வழங்கியது. நிதியுதவி செய்தது. வக்பு திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். இதேபோன்று, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் முஸ்லிம்களை குறிவைத்து கொண்டு வந்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் கட்சியாக திமுக இருந்தது. அதுதொடர்பான போராட்டங்களிலும் திமுக தலைமை ஏற்று நடத்தியது. 

மேலும், தமிழ்நாட்டில் மஸ்ஜித்துகள் கட்ட உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி உத்தரவிட்டது. முஸ்லிம்களுக்கான கபரஸ்தானுக்கு தேவையான நிலத்தை வழங்க நடவடிக்கை என பல்வேறு திட்டங்களை திமுக அரசு எடுத்தது. அதைவிட முக்கியமான விஷயம், தமிழகத்தில் மத மோதல்கள் நடக்க ஒருபோதும் திமுக அரசு அனுமதிக்கவில்லை. மாநிலத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் அண்ணன் தம்பிகளாக அமைதியாக, சகோதர பாசத்துடன் வாழ திமுக அரசு பணிகளை ஆற்றியது. மேலும், முஸ்லிம் இளைஞர்கள் வெளிநாடுகளில் சென்று கல்விப் பயில கல்வித் உதவித் தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அருமையான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியது. 

இப்படி நிறைய பணிகளை திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த காரணத்தினால் தான், அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் திமுகவிற்கு ஆதரவாக தற்போது தேர்தலில் களம் இறங்கியுள்ளன. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியே தொடர வேண்டும் என்று அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் விரும்பி, அதற்கு துணையாக நின்று உழைக்க முன்வந்துள்ளன. அரசியல் ரீதியாக பல்வேறு குறைகள் இருந்தாலும், மாநிலத்தில் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை திமுக அரசு உறுதி செய்துள்ளது. தொடர்ந்து செய்து வருகிறது. அதில் சமரசம் செய்துகொள்ளாமல் எப்போதும் உறுதியாக இருந்து வருகிறது. 

இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால், உடனே வந்து நின்று குரல் கொடுக்கும் கட்சியாக திமுக உள்ளது. எனவே தான் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளன என்று கூறலாம். 

பிற முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு :

சமூக நீதி, சமத்துவம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை முன்னெடுக்கும் நோக்கில் இத்தகைய முடிவை தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் எடுத்து இருக்கின்றன. அத்துடன், முஸ்லிம் பெயரில் இயங்கும் சிறிய சிறிய கட்சிகள் கூட, இந்த முறை திமுக தலைமையிலான கூட்டணிக்கே ஆதரவு வழங்க முன்வந்து இருப்பது, திமுக ஆட்சியின் செயல்பாடுகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றே கூறலாம். திராவிட மாடல் ஆட்சியில் நிறைய முன்னேற்றங்கள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளன. பெண்கள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது. கல்வியில் ஆர்வம் செலுத்தும் பெண்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். விளையாட்டுத்துறையில் முஸ்லிம் இளைஞர்கள் சாதிக்க முன்வந்தால், அவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்மூலம் உலக அரங்கில் இஸ்லாமிய இளைஞர்கள் சாதிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இதன் காரணமாக தான், இஸ்லாமிய இயக்கங்கள் மட்டுமல்லாமல், முஸ்லிம் பெயரில் இயங்கும் சிறிய சிறிய கட்சிகள் கூட, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன. 

தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இயக்கங்கள் செயல்பட்டு வந்தாலும் அவற்றில் ஒருசில அமைப்புகளை தவிர மற்ற அமைப்புகள், பெயரளவில் மட்டுமே இயங்குகின்றன என்று கூறலாம். இப்படி பெயரளவில் இயங்கும் அமைப்புகள் கூட, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே ஆதரவு தெரிவித்து இருப்பது, திமுக அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு என்றே கூற வேண்டும். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில்  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வரலாற்று வெற்றியை நிச்சயம் பெறும் என்று கூறலாம். இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மையின அமைப்புகள் கூட திமுக கூட்டணிக்கே ஆதரவு தெரிவித்துள்ளன. இது திமுக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்கிறது. 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

திமுக கூட்டணிக்கு ஒட்டுமொத்த இஸ்லாமிய இயக்கங்களும் ஆதரவு....!

 தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு

தமிழகத்தின் ஒட்டுமொத்த இஸ்லாமிய இயக்கங்களும் ஆதரவு

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம், மிகமிக வித்தியாசமான ஒரு களமாக இருந்து வருகிறது. ஐந்து  ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒவ்வொரு தேர்தல் திருவிழாவிலும், இஸ்லாமிய இயக்கங்கள் தங்களுக்கு விருப்பமான அணிக்கு அல்லது கட்சிக்கு ஆதரவாக களம் இறங்கி, தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தும். ஆனால், இந்த முறை, முதல்முறையாக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாக தங்களது ஆதரவை வழங்கியுள்ளன. இஸ்லாமிய இயக்கங்கள் மட்டுமல்லாமல், சமூக பணிகளில் ஈடுபட்டுள்ள பிற முஸ்லிம் அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் கூட, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றன.

களப்பணி ஆற்ற முடிவு :

திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது. இதேபோன்று, தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் உள்ளிட்ட பல இயக்கங்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை உள்ளிட்ட மார்க்க அறிஞர்களின் அமைப்புகளும் திமுக அணிக்கே ஆதரவு வழங்கியுள்ளன. இதனால் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள முஸ்லிம் இயக்கங்களில் பட்டியல் ஒரு மிகப்பெரிய நீண்ட பட்டியலாக இருந்து வருகிறது.  இப்படி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது மட்டுமல்லாமல், 234 தொகுதிகளிலும் களப்பணி ஆற்றுவது என்றும் இஸ்லாமிய அமைப்புகள் தீர்மானம் செய்துள்ளன.  தீர்மானம் செய்ததோடு நிற்காமல், களப்பணி ஆற்றவும் செயலில் இறங்கி மிகமிக உறுதியோடு தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றன.

திமுக கூட்டணிக்கு ஆதரவு ஏன் ?

தமிழகத்தின் ஒட்டுமொத்த இஸ்லாமிய அமைப்புகளும் திமுக கூட்டணிக்கு ஆதரவு வழங்க ஏன் முன்வந்து இருக்கின்றன? அதற்கு என்ன காரணம்? என்ற பல கேள்விகளை எழுப்பினால், அதற்கு முக்கிய விளக்கங்கள் கிடைக்கின்றன. அதாவது, தமிழ்நாட்டில் தற்போது  இருக்கும் மதநல்லிணக்கம், அமைதி ஒருபோதும் சீர்குலைந்து போய்விடக் கூடாது என்று அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் விரும்புகின்றன. அதனால் தான், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறலாம். வட மாநிலங்களில் சில பாசிச அமைப்புகள் சிறுபான்மையின மக்கள் மீது விரோதம் கொண்டு, வெறுப்பு பிரச்சாரம் செய்து, மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களின் வாழ்க்கை மிகவும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அதுபோன்ற ஒரு நிலைமை தமிழகத்தில் வரவேக் கூடாது என்று அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் நினைக்கின்றன. அமைதியை விரும்புகின்றன.  மேலும் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில் திமுக சிறுபான்மையினரின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது.

குறிப்பாக, இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்தது. தமிழ்நாடு உர்தூ அகாடமியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும், திட்டங்களையும் திமுக அரசு வழங்கியது. நிதியுதவி செய்தது. வக்பு திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். இதேபோன்று, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் முஸ்லிம்களை குறிவைத்து கொண்டு வந்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் கட்சியாக திமுக இருந்தது. அதுதொடர்பான போராட்டங்களிலும் திமுக தலைமை ஏற்று நடத்தியது.


மேலும், தமிழ்நாட்டில் மஸ்ஜித்துகள் கட்ட உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி உத்தரவிட்டது. முஸ்லிம்களுக்கான கபரஸ்தானுக்கு தேவையான நிலத்தை வழங்க நடவடிக்கை என பல்வேறு திட்டங்களை திமுக அரசு எடுத்தது. அதைவிட முக்கியமான விஷயம், தமிழகத்தில் மத மோதல்கள் நடக்க ஒருபோதும் திமுக அரசு அனுமதிக்கவில்லை. மாநிலத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் அண்ணன் தம்பிகளாக அமைதியாக, சகோதர பாசத்துடன் வாழ திமுக அரசு பணிகளை ஆற்றியது. மேலும், முஸ்லிம் இளைஞர்கள் வெளிநாடுகளில் சென்று கல்விப் பயில கல்வித் உதவித் தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அருமையான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியது.

இப்படி நிறைய பணிகளை திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த காரணத்தினால் தான், அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் திமுகவிற்கு ஆதரவாக தற்போது தேர்தலில் களம் இறங்கியுள்ளன. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியே தொடர வேண்டும் என்று அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் விரும்பி, அதற்கு துணையாக நின்று உழைக்க முன்வந்துள்ளன. அரசியல் ரீதியாக பல்வேறு குறைகள் இருந்தாலும், மாநிலத்தில் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை திமுக அரசு உறுதி செய்துள்ளது. தொடர்ந்து செய்து வருகிறது. அதில் சமரசம் செய்துகொள்ளாமல் எப்போதும் உறுதியாக இருந்து வருகிறது.

இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால், உடனே வந்து நின்று குரல் கொடுக்கும் கட்சியாக திமுக உள்ளது. எனவே தான் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளன என்று கூறலாம்.

பிற முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு :

சமூக நீதி, சமத்துவம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை முன்னெடுக்கும் நோக்கில் இத்தகைய முடிவை தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் எடுத்து இருக்கின்றன. அத்துடன், முஸ்லிம் பெயரில் இயங்கும் சிறிய சிறிய கட்சிகள் கூட, இந்த முறை திமுக தலைமையிலான கூட்டணிக்கே ஆதரவு வழங்க முன்வந்து இருப்பது, திமுக ஆட்சியின் செயல்பாடுகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றே கூறலாம். திராவிட மாடல் ஆட்சியில் நிறைய முன்னேற்றங்கள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளன. பெண்கள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது. கல்வியில் ஆர்வம் செலுத்தும் பெண்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். விளையாட்டுத்துறையில் முஸ்லிம் இளைஞர்கள் சாதிக்க முன்வந்தால், அவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்மூலம் உலக அரங்கில் இஸ்லாமிய இளைஞர்கள் சாதிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இதன் காரணமாக தான், இஸ்லாமிய இயக்கங்கள் மட்டுமல்லாமல், முஸ்லிம் பெயரில் இயங்கும் சிறிய சிறிய கட்சிகள் கூட, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.

தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இயக்கங்கள் செயல்பட்டு வந்தாலும் அவற்றில் ஒருசில அமைப்புகளை தவிர மற்ற அமைப்புகள், பெயரளவில் மட்டுமே இயங்குகின்றன என்று கூறலாம். இப்படி பெயரளவில் இயங்கும் அமைப்புகள் கூட, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே ஆதரவு தெரிவித்து இருப்பது, திமுக அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு என்றே கூற வேண்டும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில்  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வரலாற்று வெற்றியை நிச்சயம் பெறும் என்று கூறலாம். இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மையின அமைப்புகள் கூட திமுக கூட்டணிக்கே ஆதரவு தெரிவித்துள்ளன. இது திமுக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்கிறது.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்..அப்துல் அஜீஸ்