Monday, April 13, 2026

எதிர்காலம்....!

வாழ்க்கையில் தங்களுடைய 

கனவுகளை, எண்ணங்களாக 

மாற்ற வேண்டும் என்று 

உறுதியாக நம்புகிறவர்களுக்கு தான்

எதிர்காலம் உண்டு. 

நம்பிக்கையுடன் உழைப்பும் 

சேர்ந்துவிட்டால், பிறகு 

வெற்றிக்கனி உங்கள் 

கைகளில் தான்.



இ.யூ.முஸ்லிம் லீக் தகவல் தொழில்நுட்ப அணியின் பிரச்சாரம்....!

தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் :

234 தொகுதிகளிலும் வாக்காளர்களை கவரும் இ.யூ.முஸ்லிம் லீக் தகவல் தொழில்நுட்ப அணியின் பிரச்சாரம்....! 

- ஓர் சிறப்பு நேர்காணல் -

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றன. வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, மக்கள் மத்தியில் குறிப்பாக, இளைஞர்கள், பெண்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விரல் நுனியில் தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் தற்போது தகவல் தொழில்நுட்பம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் தேர்தல் குறித்த விழிப்புணர்வுகள் வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன. 

இத்தகைய சூழ்நிலையில், நாட்டின் பாரம்பரியமான, மிகவும் பழமையான இயக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், நவீன காலத்திற்கு ஏற்ப, விஞ்ஞான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் பணிகளை செய்துவருகிறது. குறிப்பாக, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில தகவல் தொழில்நுட்ப அணி மிகச் சிறந்த முறையில் தனது பணிகளை செய்து வருகிறது. 

இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் எம்.எஸ்.சல்மான் முஹம்மது, மாநில பொதுச் செயலாளர் கோம்பை ஜெ.நிஜாமுதீன், மாநில பொருளாளர் எஸ்.ரஹ்மான் உசேன் மற்றும் அணியில் உள்ள அனைவரும் ஒரு குழுவாக செயல்பட்டு, பாபநாசம் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் ஏ.எம்.ஷாஜஹான், வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் மற்றும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் 13 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

இ.யூ.முஸ்லிம் லீகின் தகவல் தொழில்நுட்ப அணியின் பிரச்சாரம் எப்படி இருக்கிறது? வாக்காளர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு, திமுக அணிக்கு ஆதரவாக தேர்தல் களம் மாறி இருக்கிறதா? என்பது குறித்து அறிய விரும்பினோம். அதன்படி, இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் எம்.எஸ்.சல்மான் முஹம்மதை சந்தித்து, சிறப்பு நேர்காணல் ஒன்றை நடத்தினோம். அப்போது எம்.எஸ்.சல்மான் முஹம்மது தங்களது அணியின் தேர்தல் பணிகள் குறித்து பல சுவையான தகவல்களை மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸிடம் எடுத்துக்கூறி பகிர்ந்துகொண்டார். அந்த நேர்காணலின் முழு விவரம் வருமாறு:

திமுக குழுவுடன் இணைந்து செயல்படுகிறோம் :

இ.யூ.முஸ்லிம் லீகின் தகவல் தொழில்நுட்ப அணி, திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியுடன் இணைந்து தேர்தல் பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறது. குறிப்பாக, வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் குணசேகரனுடன் இணைந்து நாங்கள் பிரச்சாரம் செய்து வருகிறோம். இதேபோன்று, பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அருண்குமாருடன் இணைந்து, மிகச் சிறந்த முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. 

வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீகின் பொறுப்பாளராக கோம்பை ஜெ.நிஜாமுதீனும், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீகின் பொறுப்பாளராக  ரஹ்மான் உசேனும் இருந்துகொண்டு, தகவல் தொழில்நுட்ப பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருகிறார்கள். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து, அவர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெற்று இந்த பணியை நாம் செய்து வருகிறோம். இதன் காரணமாக, இரண்டு தொகுதிகளிலும் நமது அணியின் பணிகள், பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் மிகமிக எளிதாக கொண்டு சென்று சேர்க்கப்பட்டு வருகின்றன. 

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் :

நமது பணிகளில் மிகவும் முக்கியமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை நாம் வாக்காளர்கள் மத்தியில் எடுத்துக் கூறி வருகிறோம். அதுதொடர்பான காணொளிகள், ஒலிக்காட்சிகள், ஆகியவற்றை இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தகவல் தொழில்நுட்ப அணி, உருவாக்கி சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களின் பார்வைக்கு கொண்டு செல்கிறது. இதேபோன்று, திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் நாம் தகவல் தொழில்நுட்பம் மூலம் வாக்காளர்கள் மத்தியில் எடுத்துக்கூறி வருகிறோம். 

குறிப்பாக, மூன்று வகையில் எங்களுடைய பணிகள் இருந்து வருகின்றன. அந்த மூன்று வகையில் முதலாவதாக, வாக்காளர்களை நேரில் சந்தித்து, திமுக அரசின் சாதனைகள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விளக்கம் அளித்து வருகிறோம். இரண்டாவதாக, காணொளிகள் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆடியோ மூலம் எங்களது பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, மகளிர் விடியல் பயணம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திராவிட மாடல் ஆட்சியின் பல நல்ல திட்டங்கள் குறித்து நாம் மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி, அதன்மூலம் நாட்டிலேயே தமிழ்நாடு எப்படி முதன்மை மாநிலமாக மாறிவிட்டது என்பது குறித்து விளக்கம் அளித்து வருகிறோம். 

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்த 30க்கும் மேற்பட்ட காணொளிகளை நாம் உருவாக்கி வாக்காளர்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்த்திருக்கிறோம். கல்வித்துறையில் திமுக அரசின் சாதனைகள், மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக அரசு நிறைவேற்றிய அருமையான திட்டங்கள் ஆகியவை குறித்தும் எங்களுடைய அணி பிரச்சாரம் செய்கிறது. 

கிராமப்புற மாணவர்களுக்கு திமுக அரசு செய்துள்ள பணிகள், உர்தூ மொழியின் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள், உலமா ஓய்வூதியம் திட்டம் உள்ளிட்ட இஸ்லாமிய சிறுபான்மையின மக்களுக்கு திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், திட்டங்கள் குறித்தும் நாம் மிகச் சிறந்தமுறையில் மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி, அவர்களுக்கு விளக்கம் அளித்து பிரச்சாரம் செய்து வருகிறோம். 

வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு :


இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் தேர்தல் பிரச்சாரம் வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. எங்கள் அணி சார்பில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் தொடர்பான காணொளிகள் நல்ல வரவேற்றை பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் மூன்று முறை நாங்கள் காணொளிகளை வெளியிட்டு வருகிறோம். நண்பகல் 12 மணி, மாலை 7 மணி மற்றும் இரவு 10 மணி என்ற வகையில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் மற்றும் திமுக கூட்டணி தலைவர்களின் பிரச்சாரம் ஆகியவை குறித்து நாங்கள் காணொளிகளை வெளியிட்டு வருகிறோம். 

இதேபோன்று, பாபநாசம், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிகள் குறித்த சிறப்பு காணொளிகளையும் எங்கள் அணி சார்பில் வெளியிடப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. குறிப்பாக, இரண்டு தொகுதிகளின்  மேலிடப் பொறுப்பாளர்கள் இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு துணைத் தலைவர் கே.நவாஸ் கனி எம்.பி., இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், முன்னாள் நாடாறமன்ற உறுப்பினர் ஆகியோரின் ஆலோசனைகளை அடிக்கடி பெற்று இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன், வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி, அதன்மூலம் கூட, பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. நாள்தோறும் நடக்கும் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான தகவல்கள், காணொளிகளை நாங்கள் வெளியிட்டு வருகிறோம். அதற்கு வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

தற்போதைய சூழ்நிலையில் எங்களுடைய பணி மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.  பிரச்சாரம் செய்ய இன்னும் குறைந்த நாட்களே வாய்ப்பு உள்ளதால், அதற்கு தகுந்த வகையில் திட்டங்களை வகுத்து, நாங்கள் இ.யூ.முஸ்லிம் லீகின் தகவல் தொழில்நுட்ப அணியை பயன்படுத்தி, சிறந்த முறையில் பிரச்சாரம் செய்வோம். 

நிச்சயம் வெற்றிவாய்ப்பு உறுதி :

திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியுடன் இணைந்து இ.யூ.முஸ்லிம் லீக் தகவல் தொழில்நுட்ப அணி சிறந்த முறையில் பணியாற்றி வருவதால், திமுக கூட்டணி சார்பில் இஸ்லாமிய வேட்பாளர்கள் போட்டியிடும் 13 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு உறுதியாக தெரிகிறது. 13 முஸ்லிம் வேட்பாளர்கள் களத்தில் உள்ள தொகுதிகளில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பொறுப்பாளர்களாக உள்ள அனைவரிடமும் நாங்கள் தினமும் ஆலோசனை செய்து பணிகளை செய்துவருவதால்,  எங்களுக்கு உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய், முஸ்லிம்களின் வாக்குகளை பிரிக்க செய்துவரும் சதி குறித்தும் நாங்கள் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதனால், சிறுபான்மையின மக்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பது உறுதி. அதை மே 4 ஆம் தேதி தமிழக மக்கள் நிச்சயமாக அறிந்துகொள்வார்கள். 

இவ்வாறு இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் எம்.எஸ்.சல்மான் முஹம்மது தெரிவித்தார். அவரது எண்ணங்கள் வெற்றிபெற்று தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய வாழ்த்தி, துஆ செய்துவிட்டு விடைப்பெற்றோம். 

- சந்திப்பு : சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Sunday, April 12, 2026

Afraid....!

Be not afraid 

of going slowly. 

Be afraid 

only of standing still.




திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீகின் களப்பணி.!

தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் எதிரொலிக்கும் ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் முழக்கம்.....! 

அமைச்சர் கே.என்.நேருவுக்கு ஆதரவாக இ.யூ.முஸ்லிம் லீகின் களப்பணி.! 

- ஓர் சிறப்பு ரிப்போர்ட் -

திருச்சி எப்போதும் திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது. குறிப்பாக,  திமுக என்றாலே திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி தான் என சொல்லும் அளவுக்கு அந்த தொகுதியை தம்முடைய சிறப்பான பணிகள் மூலம் திமுகவின் அஞ்சாநெஞ்சன் அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் வளம்படுத்தி சிறப்பாக வைத்துள்ளார். தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும்போது, கே.என்.நேருவின் பணிகள், செயல்பாடுகள் அனைத்தும், வாக்காளர்களின் கண்களுக்கு நன்றாக தெரிகிறது. 

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியின் பிரச்சினைகளை உடனுக்கு உடனே தீர்க்கும் கே.என்.நேரு, தொகுதி மக்கள் அனைவரிடமும் குடும்ப பாசத்துடன் பழகும் பண்பு, அனைத்துச் சமுதாய மக்களையும் வெகுவாக கவர்ந்து ஈர்த்து வருகிறது. அதன் காரணமாக, நேருவின் வெற்றி உறுதி என்றே கூற வேண்டும். 

இ.யூ.முஸ்லிம் லீகின் களப்பணி :

இத்தகைய சூழ்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் அனைத்து முஸ்லிம் லீகர்களும், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களப்பணி எனும் தீவிர பிரச்சாத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், 12.04.2026 ஞாயிற்றுக்கிழமையன்று, காஜாமலை மெயின் ரோடு,  காளியம்மன் கோவில் தெரு, ஐய்யனார்கோவில் தெரு, அண்ணா நகர் ரோடு, லூர்துசாமி பிள்ளை காலனி 2வது தெரு, லூர்துசாமி பிள்ளை காலனி 1வது தெரு, முஸ்லிம் தெரு பள்ளிவாசல், ஈ.பி. காலனி மெயின் தெரு, கோகுலம் காலனி, இந்தியன் பேங்க் காலனி மெயின் ரோடு, இந்தியன் பேங்க் காலனி கோவில், சுந்தர் நகர், அம்மன் நகர் கோவில், எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் கே.என்.நேரு தீவிரப் பிரச்சாரம் செய்தார். 

அப்போது, இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்று, கே.என்.நேருவுக்கு ஆதரவாக வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். இந்த பிரச்சாரத்தின்போது, இஸ்லாமிய சொந்தங்கள் அளித்த அன்பின் ஆரவாரமும், உற்சாக வரவேற்பும் வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேருவை பெரிதும் அக மகிழ செய்தது.

திராவிட மாடல் அரசின் 5 ஆண்டு சாதனைகள் :

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியின் வெற்றியை முன்கூட்டியே முடிவு செய்யும் வகையில் அமைந்த இந்த சந்திப்பின்போது, திராவிட மாடல் அரசின் 5 ஆண்டு சாதனைகளை எடுத்துக் கூறியும், திராவிட மாடல் 2.0 ஆட்சியில் திமுக செய்யப் போகும் சாதனைகளை வாக்குறுதிகளாகவும் விளக்கிக் கூறியும் வீதி வீதியாகச் சென்று திமுக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து இ.யூ.முஸ்லிம் லீகர்கள் வாக்கு சேகரித்தனர். அப்போது ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கம் தொகுதி முழுவதும் எதிரொலித்தது. தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. 

வைகோவுடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு :

திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளர் கே.என்.நேருவை ஆதரித்து, உறையூர் அரசமரத்தடி பகுதியில் திருச்சி மாநகர மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய இ.யூ.முஸ்லிம் லீக்  திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான், திருச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் இ.யூ.முஸ்லிம் லீக் செய்துவரும் பிரச்சாரம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு உறுதியாக வெற்றி பெறுவார் என்றும், அதற்கு முக்கிய காரணம் தொகுதிக்கு அவர் ஆற்றியுள்ள சிறப்பான பணிகள், நிறைவேற்றியுள்ள திட்டங்களே ஆகும் என்றும் ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரவில்லை. மக்களை நேரில் சந்தித்து அவர்களின் ஆதரவோடு தான் ஆட்சிக்கு வந்து இருக்கிறார்கள். தமிழக மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை அவர்கள் தந்து இருக்கிறார்கள். அதன் காரணமாக தற்போது திருச்சி மேற்கு தொகுதியில் ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கம் தொகுதி முழுவதும் எதிரொலித்து வருகிறது. அது தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இந்த முழுக்கம் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் பாசிச ஆட்சியை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். திராவிட மாடல் ஆட்சியை தான் விரும்புகிறார்கள். அதன் காரணமாக ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கம் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கிறது.  தமிழ்நாட்டில் மே 4ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் திராவிட மாடல் ஆட்சி நிச்சயம் அமையும். திருச்சி மேற்கு தொகுதியில் அமோக வெற்றிபெறும் கே.என்.நேரு மீண்டும் அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்பது உறுதி. அமைச்சர் கே.என்.நேருவின் வெற்றிக்கு இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்ந்து கடுமையான உழைப்பை வழங்கும் என்று உறுதியாக கூறிக் கொள்கிறேன். 

இவ்வாறு கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் பேசினார். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்



கேளுங்க....!

 செருப்படி.....!



ஒருபோதும்....!

 கானல் நீர் ஒருபோதும் 

தாகம் தணிப்பதில்லை. 

கவலைகள் ஒருபோதும் 

தீர்வு கொடுப்பதில்லை. 

தாகம் தீர நீரைத் தேடுங்கள். 

கவலை தீர தீர்வைத் தேடுங்கள்.

தப்பு பண்ணினாலும் மீண்டும் 

எழுந்து நடக்க வேண்டும். 

அனைவருக்குமே இறங்கு முகம் வரும்.

அதை பார்த்து பயப்படாமல் 

இருக்க வேண்டும்.




திமுக கூட்டணி தலைவர்களின் பிரச்சாரம் - சில சுவையான தகவல்கள்..!

தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :

" 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் "

திமுக கூட்டணி தலைவர்களின் பிரச்சாரம் - சில சுவையான தகவல்கள்..! 

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரச்சாரம் வரும் 21ஆம் தேதி மாலைவுடன்  நிறைவுபெறுவதால், வேட்பாளர்கள் அனைவரும் வாக்காளர்களை நேரில் சென்று ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் கூட, மக்கள் மத்தியில் தங்களுடைய கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இறுதிக்கட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் தலைவர்கள் கலந்துகொண்டு, மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து வருகிறார்கள். 

இத்தகைய சூழ்நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைவர்களின் பிரச்சாரம் எப்படி உள்ளது? தேர்தல் காலங்களில் அவர்கள் எத்தகைய முறையில் பிரச்சாரம் செய்கிறார்கள்? பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும்போது கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்களா? மக்களை கவரும் வகையில் தங்களுடைய பேச்சில் அழகிய வார்த்தைகளை, சொற்களை உபயோகப்படுத்துகிறார்களா என்பன போன்ற பல வினாக்களை எழுப்பினால், இந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், உண்மையிலேயே திமுக கூட்டணி கூட்டணி தலைவர்களின் பிரச்சாரம் மிகமிக கண்ணியமான முறையில் இருந்து வருகிறது என்று கூற வேண்டும். எதிர்க்கட்சிகளையும் அதன் தலைவர்களையும் விமர்சனம் செய்யும்போது கூட, வார்த்தைகளை அளந்து பேசுகிறார்கள். வரம்பு மீறி வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துவது இல்லை.  ஒருசில நேரங்களில் சிலர், உணர்ச்சிவசப்பட்டு, வார்த்தைகளை உபயோகித்துவிட்டாலும், அது தவறு என்பதை உணர்ந்து வருத்தம் தெரிவித்துக் கொள்கிறார்கள். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் :

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நட்சத்திர பேச்சாளர் யார் என்றால், அது நிச்சயம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்றே கூற வேண்டும். அவருடைய தேர்தல் பிரச்சார பாணியே ஒரு தனிவிதமாக, தனி பாணியாக இருந்து வருகிறது. நாள்தோறும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் அவர், மக்களையும் நேரில் சந்தித்து திராவிட மாடல் ஆட்சியின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைத்து இருக்கிறதா என்று அறிந்துகொள்ள விளக்கம் கேட்கிறார்கள். பெண்கள், கல்லூரி மாணவ மாணவிகள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து கலந்துரையாடும் முதலமைச்சர், அடுத்துவரும் திமுகவின்  2.0 ஆட்சியில் செய்யப்பட வேண்டிய பணிகள், திட்டங்கள் குறித்தும் மக்களின் ஆலோசனைகளையும் பெறுகிறார். 

திமுக கூட்டணி பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், "திராவிட மாடல்" ஆட்சி மீண்டும் தொடர வேண்டும்.  அதிமுக-பாஜக கூட்டணி "துரோக கூட்டணி" என்றும், இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என்றும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியை விமர்சனம் செய்யும்போது வார்த்தைகளை அளந்து பேசுகிறார். தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின், அந்த நடைப்பயிற்சியின்போது கூட, திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குசேகரிக்க மறப்பதில்லை. சமுதாயத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் சந்திக்கும் வாய்ப்பாக இந்த நடைப்பயிற்சி பிரச்சாரத்தை அவர் அமைத்துக் கொண்டு, திராவிட மாடல் ஆட்சி எப்படி மக்கள் மத்தியில் பணிகளை ஆற்றிவருகிறது என்பதை மிக எளிமையாக தனது அழகிய செயல்மூலம் விளக்கம் அளித்து வருகிறார். 

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்ட அவர், மக்களோடு மக்களாக பயணம் செய்து, திராவிட மாடல் ஆட்சியில் ஏற்பட்ட மறுமலர்ச்சி, தமிழகத்தில் ஏற்பட்ட வளர்ச்சி உள்ளிட்ட பல அம்சங்களை அழகிய முறையில் எடுத்துக்கூறுவது, வாக்காளர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றே கூற வேண்டும். மு.க.ஸ்டாலினின் பிரச்சாரம் தமிழக வாக்காளர்கள் மத்தியில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி, மிகப்பெரிய அளவுக்கு விழிப்புணர்வையும் உருவாக்கியுள்ளது. இதன்மூலம் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்கள் என்றே கூற வேண்டும். 

தேர்தல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசும் மு.க.ஸ்டாலின்,  "திராவிட மாடல்" ஆட்சி தொடர, அதிமுகவின் "இருண்ட காலம்" திரும்பாமல் இருக்க வாக்களிக்குமாறு வலியுறுத்துகிறார்.

அத்துடன், திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்திய, பிற மாநிலங்களும் பின்பற்றும் சிறந்த திட்டங்களை முன்வைத்து வாக்கு சேகரிக்கிறார். ஒன்றிய அரசு தமிழகத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படுத்துவதாகவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும், டெல்லிக்கு அடிபணியாத அரசை மீண்டும் தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்துகிறார். 

தனி பாணியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் :

இப்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூட, இளைஞர்கள், பெண்கள் என அனைத்து மக்களையும் தனது தனி பாணி பிரச்சாரம் மூலம் கவர்ந்துள்ளார். திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பட்டியலிடும் அவர், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் திமுக அரசு செய்த மக்கள் நலப்பணிகள் குறித்தும் வாக்காளர்கள் மத்தியில் எடுத்துரைக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மிகப்பெரிய பலம் என்றே கூற வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்யும்போது கூட, மிகமிக கண்ணியமான முறையில் வார்த்தைகளை பயன்படுத்துகிறார். முகம் சுளிக்கும் வகையில் ஒருபோதும் வார்த்தைகள் அவர் வெளிப்படுத்துவதில்லை.

தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில்,  உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு இடையேதான் மிகப்பெரிய அளவுக்கு  வார்த்தை மோதல்கள், கருத்து மோதல்கள் இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தாலும், இளைஞர் உதயநிதி ஸ்டாலின் கோபம் அடையாமல், வார்த்தைகளை அளந்தே பேசுகிறார். இதனால் வாக்காளர்களின் மனங்களை அவர் கவர்ந்து வருகிறார். 

கூட்டணி தலைவர்களின் பிரச்சாரம் :

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மட்டுமல்லாமல், திமுக அமைச்சர்கள், முன்னணி தலைவர்கள் அனைவரும் திமுக அரசின் திட்டங்களையும், தங்களது வாக்குறுதிகளையும் திமுகவின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிக்கின்றன. 

இதேபோன்று திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் உள்ளிட்ட 23க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் கூட, திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து மக்கள் மத்தியில் விளக்கம் அளித்து வாக்கு சேகரிக்கிறார்கள். அத்துடன், தமிழ்நாட்டின் உரிமைகள், தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் பாதுகாப்பு, தமிழக மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், அதை திரும்பபெற வேண்டும், சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, பெண்கள் நலன் உள்ளிட்ட அனைத்திலும், தமிழர்களுக்கு உள்ள உரிமைகள் குறித்து திமுக கூட்டணி தலைவர்கள் தங்களது பிரச்சாரத்தின்போது எடுத்துக் கூறி, மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். 

பாசிச ஆட்சி தமிழ்நாட்டில் ஒருபோதும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் திமுக கூட்டணி தலைவர்கள் அனைவரும்,  அதிமுக என்ற முகமுடியைப் பயன்படுத்தி, பாஜக, தமிழகத்தில் ஆட்சி செய்ய துடிக்கிறது என்பதை மிகமிக தெளிவாக வாக்காளர்கள் மத்தியில் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். மத மோதல்கள் இல்லாமல் இருக்கும், தமிழ்நாட்டில், வட மாநிலங்களில் உள்ள நிலைமையை போன்று உருவாக்க பாஜக சதித்திட்டம் தீட்டிவருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளன் உள்ளிட்ட திமுக கூட்டணி தலைவர்கள் எச்சரிக்கை செய்து வருகிறார்கள். அதிமுகவிற்கு போடும் வாக்கு பாஜகவிற்கு போடும் வாக்கு என்றும் அவர்கள் உறுதிப்பட தெளிவாக எச்சரிக்கை செய்கிறார்கள். எனவே , தமிழக மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் திமுக கூட்டணி தலைவர்கள், திமுகவின் 2021 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதையும் எடுத்துக்கூறி, வீதி வீதியாகவாக்கு சேகரித்து வருகின்றனர்.

திமுக கூட்டணியின் வெற்றி உறுதி :

இப்படி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள 23க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள், கண்ணியமான முறையில் பிரச்சாரம் செய்துவருவதை இந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் கண்டு வருகிறது.  இத்ததைய பிரச்சாரம் தமிழ்நாடு வாக்காளர்கள் மிகவும் கவர்ந்து இருப்பதாக அரசியல் நோக்கர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் குறித்து நாள்தோறும் விவாதிக்கும் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கிறார்கள். தேர்தல் பிரச்சராத்தில் ஒருசில குறைப்பாடுகள் இருந்தாலும், மிகப்பெரிய அளவுக்கு குறைகளை திமுக கூட்டணி தலைவர்களின் பிரச்சாரத்தில் இல்லை என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருந்து வருகிறது. தேர்தல் காலங்களில் வெளியாகும் அறிக்கைகளில் கூட, அழகிய முறையில், கண்ணியமான முறையில் வார்த்தைகளை திமுக கூட்டணி தலைவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர்கள் கூறி மகிழ்ச்சி அடைக்கிறார்கள். 

இதன்மூலம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்பது உறுதியாகிவிட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 234 தொகுதிகளில் திமுக கூட்டணியே வெற்றிபெறும்  என்று தொடர்ந்து கூறிவரும் நிலையில், தற்போதைய தேர்தல் களம் அந்த திசையை நோக்கியே சென்றுக் கொண்டிருக்கிறது என்று கூறலாம். பிரச்சாரம் நிறைவுபெற இன்னும் பத்து நாட்களே எஞ்சியுள்ள நிலையில், நிச்சயம் வாக்காளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்று உறுதியாக நம்பலாம். வரும் மே 4ஆம் தேதி தமிழக மக்கள் விரும்பும் திராவிட மாடல் 2.0 ஆட்சி மலருவதற்கான முடிவுகள் நிச்சயம் வரும். தமிழ்நாடு அமைதியான மாநிலமாக மட்டுமல்லாமல், வளர்ச்சியை நோக்கிச் செல்லும் மாநிலமாக மீண்டும் வீர நடைப்பயணம் மேற்கொள்ளும் என்று மிகமிக உறதியாக கூறலாம். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்