Monday, September 7, 2026

எப்படி....?

 எப்படி....?

சும்மா பாருங்க....!



பழமொழி...!

 ஆப்பிரிக்காவில் ஒரு பழமொழி உண்டு:

ஒவ்வொரு காலையிலும், ஒரு கெசல் மான் (gazelle) விழித்தெழும்போது, ​​சிங்கத்தை விட வேகமாக ஓடாவிட்டால் தான் இறந்துவிடுவோம் என்பதை உணர்ந்தே எழுகிறது.

அதேபோல, ஒவ்வொரு காலையிலும் ஒரு சிங்கம் விழித்தெழும்போது, ​​கூட்டத்தில் உள்ள மிக மெதுவாக ஓடும் மானையாவது முந்திப் பிடிக்காவிட்டால் தான் பட்டினி கிடக்க நேரிடும் என்பதை உணர்ந்தே எழுகிறது.

நீங்கள் சிங்கமாக இருந்தாலும் சரி, அல்லது கெசல் மானாக இருந்தாலும் சரி - அது முக்கியமல்ல.

சூரியன் உதித்ததும், நீங்கள் ஓடத் தொடங்கியாக வேண்டும்.

சும்மா அமர்ந்திருப்பவர்களுக்கு வாழ்க்கை வெற்றியைத் தருவதில்லை. ஒரு கனவை நோக்கி ஓடுவதாக இருந்தாலும் சரி, அல்லது உயிர் பிழைக்கப் போராடுவதாக இருந்தாலும் சரி - இயக்கம் என்பது மிக அவசியமான ஒன்று.

சரியான சூழல் அமையும் வரை காத்திருப்பதை நிறுத்துங்கள். யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்காதீர்கள். சூரியன் உதித்துவிட்டது. ஓடத் தொடங்குங்கள்.




Sunday, September 6, 2026

உதவி....!

 ஒரு அழகிய உதவி....!

மிருக நேயம்....!!



சஹாரன்பூர் மஸ்ஜித் இடிப்பு.....!

 வரலாற்றுச் சிறப்புமிக்க சஹாரன்பூர் மஸ்ஜித் பாஜக அரசால் இடிப்பு

 ஜமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா அர்ஷத் மதானி கடும் கண்டனம்

சஹாரன்பூர், செப்.07- உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மௌலானா அர்ஷத் மதானி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். அனைத்து மத சமூகங்களுக்கும் அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான பாதுகாப்புகள் சமமாக வழங்கப்படுகின்றனவா என்றும அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசியலமைப்பின் மேலாதிக்கம், சட்டத்தின் ஆட்சி, மத சுதந்திரம், குடிமக்களின் சமத்துவம் மற்றும் அரசின் நடுநிலைத்தன்மை ஆகியவை குறித்து இந்த நடவடிக்கை தீவிர கவலைகளை எழுப்புவதாக மௌலானா மதானி வேதனை தெரிவித்துள்ளார். 

வரலாற்றுச் சிறப்புமிக்க மஸ்ஜித் இடிப்பு :

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க மஸ்ஜித்து இருந்து வந்தது. இந்த மஸ்ஜித்தை உத்தரப் பிரதேச பாஜக அரசு இடித்து தள்ளியுள்ளது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் மட்டுமல்லாமல், சமூக ஆர்வலர்கள், இந்துமத தோழர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

===================

"இந்தியா அனைத்து மதத்தினருக்கும் சமமானது. அரசியலமைப்பு குடிமக்களை முதல் தர மற்றும் இரண்டாம் தர குடிமக்களாகப் பிரிப்பதில்லை"

===================

இந்நிலையில், ஜமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா அர்ஷத் மதானி வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதியை நிலைநாட்டும் கருவிகளாக அல்லாமல், பழிவாங்குதல், பாரபட்சம் மற்றும் வெறுப்புணர்வு ஆகியவற்றின் கருவிகளாக புல்டோசர்கள்  அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் ஒரு மஸ்ஜித்துயடன் மட்டும் தொடர்புடையது அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், அரசு நிலங்கள், சாலைகள் அல்லது பொது இடங்களில் பல தசாப்தங்களாக அமைந்துள்ள பிற சமூகங்களின் மத வழிபாட்டுத் தலங்கள் மீதும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். சட்டவிரோத ஆக்கிரமிப்பு அல்லது நிலத்தை ஆக்கிரமித்ததே நடவடிக்கை எடுப்பதற்கான அளவுகோல் என்றால், அதே அளவுகோல் ஒவ்வொரு மதத்திற்கும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

வரலாற்று ஆவணங்கள் :

அந்த மஸ்ஜித் வக்பு வாரியத்தில் பதிவு எண் 451-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பதையும், பழைய நில ஆவணங்களில் யாகூப் கான் மற்றும் வாஹித் கான் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் கட்டப்படுவதற்கு முன்பே அந்த மஸ்ஜித் அங்கு இருந்ததை உறுதிப்படுத்தும் வகையில், 1911-ஆம் ஆண்டு காலத்து ஆவணங்கள், நகராட்சிப் பதிவுகள் மற்றும் வருவாய்த்துறைப் பதிவுகள் ஆகியவற்றை மசூதி நிர்வாகக் குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. இடிக்கப்படுவதற்கு முன்பு இந்த வரலாற்று மற்றும் சட்ட ஆவணங்கள் போதுமான அளவு பரிசீலிக்கப்பட்டனவா என்று மதானி கேள்வி எழுப்பினார். மேலும், 1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தையும், பயன்பாட்டின் அடிப்படையிலான வக்பு தொடர்பான புதிய வக்பு சட்டத்தின் விதிகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியா அனைத்து மதத்தினருக்கும் சமமானது என்பதை வலியுறுத்தியுள்ள மதானி, அரசியலமைப்பு குடிமக்களை முதல் தர மற்றும் இரண்டாம் தர குடிமக்களாகப் பிரிப்பதில்லை என்றும் கூறியுள்ளார். முஸ்லிம்கள் எந்தச் சிறப்புச் சலுகையையும் கோரவில்லை. சமமான நீதியை மட்டுமே கேட்கிறோம் என்று கூறிய அவர், ஒவ்வொரு மத வழிபாட்டுத் தலத்திற்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தின் பாதுகாப்பும் அமலாக்கமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Goals....!

Be stubborn about your goals, 

but flexible about your methods.



ஆபத்து....!

 ஏடிஎம் ஆபத்து.....!

கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தேன். 

அதில் ஆயிரம் ரூபாய் தாள் ஒன்று கிழிந்து இருந்தது. 

எனவே, அருகில் இருந்து ஸ்டேட் வங்கிக்கு சென்று சம்பந்தப்பட்ட அலுவலரை சந்தித்து, சார்உங்கள் ஏடிஎம் மையத்தில் இருந்து பணம் எடுத்தபோது, ஒரு தாள் கிழிந்து இருந்தது. 

தயவு செய்து மாற்றி தாருங்கள் என்றேன். 

அந்த அலுவலர் என்னை மேலும் கீழும் ஆச்சரியமாக பார்த்தார். 

நீங்கள் பணம் எடுத்ததாக கூறும் ஏடிஎம் எந்திரம் கடந்த சில நாட்களாகவே இயங்கவில்லை. 

எப்படி அந்த எந்திரத்தில் இருந்து உங்களால் பணம் எடுக்க முடியும் என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்.  

சார், நான் பணம் எடுத்ததற்கான ஆதாரம் இதே அந்த ஏடிஎம் எந்திரத்தில் இருந்து எனக்கு வந்த ரசீதைப் பாருங்கள் என கூறி, அந்த ரசீதை அலுவலரிடம் காண்பித்தேன். 

அதை வாங்கிப் பார்த்த அவர், எப்படி பணம் எடுக்க முடியும் என்ற  ஒரே கேள்வியை திரும்ப திரும்ப என்னிடம் கேட்டுகொண்டே இருந்தார். 

கிழிந்த நோட்டை வேண்டுமானால் மாற்றி தாருகிறேன். ஆனால், நீங்கள் அந்த மையத்தில் பணம் எடுத்ததாக மட்டும் பொய் கூறாதீர்கள் என்றார்.

அய்யா, நான் ஒரு பொறுப்புள்ள பத்திரிகையாளன். அப்படி பொய் சொல்லி உங்களிடம் கிழிந்த நோட்டை மாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என கூறி என்னுடைய ஐ.டி. கார்டை அவரிடம் காண்பித்தேன். 

அப்போதும், அவர் நம்ப தயாராக இல்லை. 

அந்த ஏடிஎம் எந்திரம் பழுது என்றே சொல்லிகொண்டே இருந்தார். 

பிறகு, கிழிந்த நோட்டை மாற்றி கொடுத்தார். 

இது எனக்கு நேர்ந்த அனுபவம். 

இதேபோன்ற ஒரு அனுபவம் என் நண்பர் ஒருவருக்கும் ஏற்பட்டது. 

ஐதராபாத்தில் சி.ஆர்.பி.எப்.வில் பணியும்  அந்த நண்பர் உயரதிகாரியும் கூட. 

அங்குள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தபோது, நான்கு ஆயிரம் ரூபாய் தாள்கள் போலி தாள்களாக வந்துவிழுந்தது. 

வணிக நிறுவனத்திற்கு சென்றபோதுதான், இந்த விவரம் அவருக்கு தெரிந்தது. 

உடனே, வங்கிக்கு சென்று பணத்தை மாற்றி தரும்படி கேட்டிருக்கிறார் நண்பர். 

அந்த அதிகாரி பணத்தாள்களை வாங்கி, நான்கிலும் பேனாவில் கோடு போட்டு, நண்பரிடமே திருப்பி தந்திருக்கிறார். 

பணத்தாள்களை மாற்றி தரும்படி கேட்டால் இப்படி, கோடு போட்டு மீண்டும் அதை என்னிடமே தருகிறீர்களே என நண்பர் கேள்வி எழுப்ப, உண்மையில் உங்களை போலீசில் பிடித்து தந்திருக்க வேண்டும். 

ஆனால், நான் அப்படி செய்யவில்லை. பிழைத்து போங்கள் என அந்த வங்கி அதிகாரி கூற, நண்பருக்கு கோபம் வந்தது. 

உடனே, போலீசை இப்போதே கூப்பிடுங்கள் என நண்பர் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டார். 

போலீஸ் வரும் வரை நான் இங்கிருந்து நகர மாட்டேன் என கூற, அந்த வங்கி அதிகாரிக்கு உதறல் ஏற்பட்டுவிட்டது. 

மத்திய பாதுகாப்பு படையில் உயரதிகாரியாக இருக்கும் என்னிடமே, இப்படி நீங்கள் நடந்துகொள்கிறீர்கள் என்றால், சாதாராண மக்களிடம் எப்படி நடந்து கொள்வீர்கள் என நண்பர் வாக்குவாதம் செய்ய, பிறகு அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து நான்கு ஆயிரம் ரூபாய் தாள்களை மாற்றி தந்து இருக்கிறார்கள். 

இந்த அனுபவத்தை நண்பர் சொன்னபோது,  அதிர்ச்சியும், சிரிப்பும் ஏற்பட்டது. 

ஏடிஎம் மையங்களில் எப்படி போலி பணத்தாள்கள் வைக்கப்படுகின்றன. 

அதை எடுக்கும் மக்கள் எந்த அளவுக்கு பாதிப்பு அடைகிறார்கள். 

மாற்றி தரும்படி வங்கி அதிகாரிகளை அணுகும்போது, அவர்களே சந்தேகத்திற்கு உள்ளாகி வேதனைகளை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்   என்பது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிய வருகிறது. 

இந்த பிரச்சினைகளுக்கு வங்கி நிர்வாகங்கள் எப்படி தீர்வு காணுமோ என்பதுதான் பொதுமக்களின் கேள்வி. 

அப்படி, தீர்வு காண வங்கி நிர்வாகிகள் எந்த நடவடிக்கைகளையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. 

எனவே, ஏடிஎம் மையங்களில் இதுபோன்ற ஆபத்துகள் தொடரவே செய்யும்.

பொதுமக்கள் பாதிப்பு அடைவது தொடர்கதையாகும். 

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

அவசரம்....!

 அவசரம், 

ஆளை மட்டுமல்ல, 

அலுவலையும் கெடுக்கிறது. 

பொறுமை வாழ்வில் 

நிம்மதியை தரும்.

வேண்டாம் அவசரம்.

வேண்டும் பொறுமை.