அரிய தகவல்....!
பயனுள்ள தகவல்....!!
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
இறுதி வரை போராடுங்கள்.
வாழ்க்கையில் வெற்றி
கிடைக்க வேண்டுமானால்,
தோல்வியின் விளிம்பில் நின்றாலும்
உறுதியுடன் போராட வேண்டும்.
உறுதியான மனநிலையுடன்
போராடினால் மட்டுமே
வெற்றி கைக்கூடும்.
வாழ்க்கையில் வெற்றி
எப்போதுமே எளிதாக கிடைக்காது.
அப்படி கிடைத்தால் அது நிலைக்காது.
தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :
தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்கும் பாபநாசம், வாணியம்பாடி தொகுதிகள்....!
வாக்காளர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்த ஏணி சின்னம்...!!
பிரகாசிக்கும் வெற்றிவாய்ப்பு....!!!
2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் இ.யூ.முஸ்லிம் லீகின் வேட்பாளர்களாக முறையே ஏ.எம்.ஷாஜஹான், எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் ஆகியோர் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 11 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பிரச்சாரம் வரும் 21ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவுபெறுகிறது. இதனால், சுட்டெரிக்கும் கடும் வெயிலையும் பொருட்படுத்தால், வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு வேட்டை நடத்தி வருகிறார்கள்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற 9 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால், தற்போது வாக்குசேகரிப்பில் அனல் பறக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் தமிழக மக்களின் கவனத்தை இரண்டு தொகுதிகள் ஈர்த்துள்ளன. இ.யூ.முஸ்லிம் லீக் போட்டியிடும் பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளின் வாக்காளர்கள் மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களும், ஏணி ஏற்றம்பெற வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்கு தகுந்த வகையில் திமுக தலைமையிலான கூட்டணியின் பிரச்சாரம் இருந்து வருகிறது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இந்த இரண்டு தொகுதிகளிலும் தனிக் கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள். இதன் காரணமாக இந்த இரண்டு தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் உள்ளங்களில் ஏணி சின்னம் ஆழமாக பதிந்துவிட்டது. இதனால் இரண்டு தொகுதிகளின் வெற்றி உறுதியாகிவிட்டது என்றே கூறலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இரண்டு தொகுதிகள் குறித்த பல சுவையான தகவல்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
பாபநாசம் தொகுதி :
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 652 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 23 ஆயிரத்து 838 பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 30 ஆயிரத்து 791 பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பேரும் ஆக மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 652 வாக்காளர்கள் உள்ளனர்.இந்த தொகுதியில் தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம்கள், படையாச்சி, மூப்பனார், உடையார், கள்ளர், கிறிஸ்தவர்கள் என அனைத்து ஜாதியினரும் உள்ளனர். இந்த தொகுதியின் எண்ணாக 172 உள்ளது.
பாபநாசம் தொகுதியில், அய்யம்பேட்டை, வீரமாங்குடி, கோவிந்தநாட்டுச்சேரி, உம்பளப்பாடி, பெருமாள் கோவில், சருக்கை, சத்தியமங்கலம், திருவைகாவூர், கொந்தகை, ஓலைப்பாடி, ஆதனூர், அலவந்திபுரம், தியாகசமுத்திரம், கூனஞ்சேரி, துரும்பூர், திருமண்டங்குடி, உமையாள்புரம், ராமானுஜபுரம், கபிஸ்தலம், மேல கபிஸ்தலம்,, உள்ளிக்கடை, கணபதிஅக்ரஹாரம், மணலூர், சோமேஸ்வரபுரம், ஈச்சங்குடி, இலுப்பக்கோரை, பசுபதிகோவில், சூலமங்கலம், சக்கராப்பள்ளி, வழுத்தூர், சரபோஜிராஜபுரம், ரெகுநாதபுரம், பண்டாரவாடை, ராஜகிரி, கோபுராஜபுரம், திருவையாத்துக்குடி, தேவராயன்பேட்டை, வடக்கு மாங்குடி, செருமாக்கநல்லூர், வேம்புகுடி, வையச்சேரி, பெருமாக்கநல்லூர், காவலூர், அகரமாங்குடி, மேலசெம்மங்குடி, சுரைக்காயூர், ஒன்பத்துவேலி, திருக்கருக்காவூர், இடையிருப்பு, விழுதியூர், இரும்புத்தலை, கோவத்தக்குடி, அன்னப்பன்பேட்டை, கொத்தங்குடி, மேலகளக்குடி, ஆலங்குடி, புலவர்நத்தம், நெல்லிதோப்பு, குமிழக்குடி, நல்லவன்னியன்குடிக்காடு, எடவாக்குடி, களஞ்சேரி, பள்ளியூர், சாலியமங்கலம், பூண்டி, ராராமுத்திரக்கோட்டை, கத்திரிநத்தம், அருமலைக்கோட்டை, செண்பகபுரம், திருபுவனம், நெய்குன்னம், மகிமாலை, உக்கடை, நெடுவாசல், கீழக்கோவில்பத்து, வடபாதி, சூழியக்கோட்டை, கம்பயநத்தம், அருந்தவபுரம், புளியக்குடி மற்றும் கருப்பமுதலியார் கோட்டை ஊராட்சிகள் வருகின்றன.
அத்துடன், கும்பகோணம் வட்டத்தில், நாகக்குடி, வலையப்பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தரபெருமாள்கோயில் தென்பாதி, வெள்ளாளபிள்ளையாம்பேட்டை, திருவலஞ்சுழி தட்டிமால், பட்டீஸ்வரம் மற்றும் வாணியக்கரம்பை கிராமங்கள் மற்றும் சுவாமிமலை ஆகிய பேரூராட்சிகள் வருகின்றன,. 1952 முதல் இதுவரை நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் 8 முறை, தமாக 2, அதிமுக 3, மமக 1 என்ற வகையில் வெற்றி பெற்று இருக்கின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான பாபநாசம் காவிரி டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் தொகுதி என்பதால், விவசாயம் மற்றும் கொள்ளிடம் ஆற்றங்கரைப் பகுதிகளை உள்ளடக்கியது. தொகுதியில் வாக்குப்பதிவுக்காக மொத்தம் 300 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
தற்போது 50 ஆண்டுகளுக்குப் பிறகு இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் ஏ.எம்.ஷாஜஹான் போட்டியிடுகிறார். இந்தமுறை முஸ்லிம் லீக் வேட்பாளர் எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்குடன் வாக்காளர்கள் மத்தியில் ஏணி சின்னம் பிரலப்படுத்தும் முயற்சிகள், நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், ஏணி சின்னம் அனைவருக்கும் பரிச்சமான சின்னமாக பாபநாசம் தொகுதியில் மாறிவிட்டது.
வாணியம்பாடி தொகுதி :
வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 47 ஆகும். திருப்பத்தூர், அணைக்கட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. தமிழகத்தில் பாலாறு தொடங்கும் இடத்தில் வாணியம்பாடி தொகுதி உள்ளது. தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியுடன் கூடிய காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையம், ஆண்டியப்பனூர் அணை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, ஜவ்வாதுமலையின் சந்தன மரங்கள் மற்றும் சுவையான பிரியாணிக்கும் வாணியம்பாடி தொகுதி பெயர் பெற்றது. வாணியம்பாடி தொகுதி மக்களின் பிரதான தொழிலாக தோல் பதனிடும் தொழில், தோல் பொருட்கள் தயாரிப்பு, தென்னை, கரும்பு உள்ளிட்ட வேளாண்மை, கோரை பாய் தயாரிப்பு, பீடி சுற்றுதல், ஊதுபத்தி தயாரித்தல் ஆகும்.
வாணியம்பாடி தொகுதியில் இஸ்லாமியர்களும், வன்னியர்களும் ஏறத்தாழ சமநிலையிலும், பட்டியல் இனமக்கள், முதலியார், நாயுடு, யாதவர், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர சமூகத்தினரும் உள்ளனர். இந்த தொகுதியில் வாணியம்பாடி நகராட்சியின் 36 வார்டுகள், ஆலங்காயம், உதயேந்திரம் பேரூராட்சிகள் உள்ளது. இத்தொகுதியில் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பீமகுளம், நாயக்கனூர், நரசிங்கபுரம், நிம்மியம்பட்டு, 102 ரெட்டியூர், வெள்ளக்குட்டை, கொத்தகோட்டை, பெரியகுரும்பதெரு, விஜிலாபுரம், பெத்தவேப்பம்பட்டு, வள்ளிப்பட்டு, கோவிந்தாபுரம், வளையாம்பட்டு, நெக்னாமலை, தேவஸ்தானம், பள்ளிப்பட்டு, ஜாப்ராபாத் ஆகிய 17 ஊராட்சிகள், திருப்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பூங்குளம், மரிமாணி குப்பம், மிட்டூர் பெருமாபட்டு, பள்ளவள்ளி, குரிசிலாப்பட்டு, இருணாப்பட்டு, ஆண்டியப்பனூர் ஆகிய 8 ஊராட்சிகள், நாட்டறம் பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட நாராயணபுரம், அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, புல்லூர், ராமநாயக்கன்பேட்டை, ஆவராங்குப்பம், மல்லகுண்டா, சிக்கனாகுப்பம், அம்பலூர், கொடையாஞ்சி, தும்பேரி, வடக்குபட்டு, தெக்குபட்டு, எக்லாசபுரம், மல்லங்குப்பம், சங்கரபுரம், அழிஞ்சிகுப்பம் ஆகிய 17 ஊராட்சிகள் அடங்கியுள்ளன.
அத்துடன், தும்பேரி, நெக்னாமலை, ஆலங்காயம் (ஆர்.எப்), நிம்மியம்பட்டு, வெள்ளகுடை, கொத்தகொட்டை, வளையாம்பட்டு, வாணியம்பாடி, சிக்கனாங்குப்பம், திம்மாம்பேட்டை, புல்லூர், சீமுகம்பட்டு, அலசந்தாபுரம், வெங்கடராஜசமுத்திரம், நாராயணபுரம், ஜவாதுராமசமுத்திரம், கொள்ளப்பள்ளி, குருவானிகுண்டா, ராமநாயக்கன்பேட்டை, வடக்குப்பட்டு, கனகப்பட்டு, தேவஸ்தானம், அம்பலூர், கோவிந்தபுரம், ஆம்பூர்பேட்டை, வள்ளிப்பட்டு, தெக்குப்பட்டு, மல்லான்குப்பம், மல்லகுண்டா, ரெட்டியூர், நரசிங்கபுரம், மரிமாணிகுப்பம், நாச்சியார்குப்பம், பூங்குளம், நாய்க்கனூர், சத்திரம்,காவலூர், பீமகுளம்,மிட்டூர், ஆண்டியப்பனூர், இருணாப்பட்டு, பெருமாபட்டு மற்றும் குரிசிலாபட்டு கிராமங்கள் இந்த தொகுதியில் உள்ளன. உதயேந்திரம் பேரூராட்சி, ஜாபராபாத் சென்சஸ் டவுன், வாணியம்பாடி நகராட்சி மற்றும் ஆலங்காயம் பேரூராட்சி மற்றும் வேலூரின் முக்கிய சுற்றுலா தலமான காவலூர் இப்பகுதியில் அமைந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடிசட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 262 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. நாராயணபுரம், ஜவாதுராமசமுத்திரம், மோட்டூர் மற்றும் திம்மாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை,தொடக்கப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் வாக்குச்சாவடிகளாகச் செயல்படுகின்றன. இந்த தொகுதியில் முஸ்லிம் லீக் (பிரிக்கப்பட்ட, பிரிக்கப்படதாத நிலையில்) 6 முறையில் வெற்றி பெற்று இருக்கிறது. அதிமுனக 3 மூன்று முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றிவாகை சூடியுள்ளன. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 220 வாக்காளர்கள் உள்ளனர். அவற்றில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 457 பேரும் பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 713 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 50 பேரும் அடங்குவர்.
பிரகாசமான இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்களின் வெற்றி :
வாணியம்பாடி தொகுதியில் கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிவாய்ப்பை இழந்த இ.யூ.முஸ்லிம் லீக், மீண்டும் இந்த பாரம்பரியமான தொகுதியில் தனது தனிச் சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறது. அத்துடன், இ.யூ.முஸ்லிம் லீகின் வேட்பாளராக எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் இந்த தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சமான பாரூக், பழகுவதிலும் அன்பானவர் என்பதால், அவரை இந்தமுறை வாணியம்பாடி தொகுதி வாக்காளர்கள் வெற்றிபெற செய்வார்கள் என்ற நம்பிக்கை தொகுதி முழுவதும் இருந்து வருகிறது. இதன்மூலம் வாணியம்பாடி தொகுதியில் எஸ்.எஸ்.பி.சையத் பாரூகின் வெற்றி உறுதியாகிவிட்டது என்றே கூற வேண்டும்.
இ.யூ.முஸ்லிம் லீக் போட்டியிடும் பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் சமுதாய வேட்பாளர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்பது சிறுபான்மையின மக்களின் விருப்பமாக இருந்து வருகிறது. இதன்மூலம் சமுதாயத்தின் குரல் இனி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் என்பதும் சமுதாயத்தின் ஆசையாக உள்ளது. ஏக இறைவனின் கருணையின் மூலம் பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் சமுதாய வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றிபெறுவார்கள் என்று உறுதியாக நம்பலாம்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
அழகோ.....அழகு.....
அற்புதமான அழகு....
மனதை கொள்ளை கொள்ளும் அழகு....
இதயத்தை மகிழ்ச்சி அடையச் செய்யும் அழகு...!
தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருவெறும்பூர் தொகுதி....!
இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீர் ரஹ்மான் தீவிர பிரச்சாரம்....!!
- தொகுதியின் நிலவரம் குறித்த ஓர் சிறப்பு பார்வை -
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் சார்பில், திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் இ.யூ.முஸ்லிம் லீக் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த வகையில் திருச்சியின் மண்ணின் மைந்தர்கள் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் வெற்றிக்காக இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீர் ரஹ்மான் தலைமையில் நிர்வாகிகள் அனைவரும் இரண்டு தொகுதி முழுவதும் வலம்வந்து வீடுவீடாகச் சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள், சமூக நலத் திட்டங்கள், பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி, மாணவ மாணவர்களின் கல்வியின் முக்கியத்துவத்திற்கு எடுக்கப்பட்டு செயல்திட்டங்கள் குறித்து, இ.யூ.முஸ்லிம் லீகினர், வாக்காளர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் இந்த பிரச்சாரம் தற்போது படுவேகம் எடுத்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்மூலம் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் மத்தியில் கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் மிகப்பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைத்து வருவதை காண முடிகிறது.
திருவெறும்பூர் தொகுதியில் ஒருநாள் :
இத்தகைய சூழ்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடும் திருவெறும்பூர் தொகுதியில், இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீர் ரஹ்மான் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் 10.04.2026 அன்று ஒருநாள் தீவிர பிரச்சாரம் செய்தார்கள். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தாய்ச்சபை முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பச்சிளம் பிறைக் கொடியுடன் திரளாக பங்கேற்று தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்த பிரச்சாரத்தின்போது திருவெறும்பூர் தொகுதியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எந்தளவுக்கு வளம்படுத்தி மிகச் சிறந்த முறையில் வைத்துள்ளார் என்பதை நேரடியாக காணும் வாய்ப்பு முஸ்லிம் லீகர்களுக்கு கிடைத்தது. ஒரு சட்டமன்றத் தொகுதியை எப்படி சிறந்த முறையில் வைத்து, மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதை திருவெறும்பூர் தொகுதி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றே கூறலாம்.
திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் இணைந்து தீவிர பிரச்சாரம் செய்த கே.எம்.கே.ஹபீர் ரஹ்மான், தனது அனுபவங்களை மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸிடம் பகிர்ந்து கொண்டார். அதன் சுவையான தகவல்கள் இதோ உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.
அனைத்து வசதிகளும் கொண்ட தொகுதி :
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்டம் சார்பில் நாங்கள் பிரச்சாரம் செய்தோம். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் இணைந்து தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் அருமையான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. முஸ்லிம் லீகர்கள் தமக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்து இருப்பதை கண்டு அன்பில் மகேஷ் பொய்யாமொழி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அதனை தனது அன்பின் மூலம் எங்களிடம் வெளிப்படுத்தினார். திருவெறும்பூர் தொகுதி முழுவதும் அனைத்து வீதிகளிலும் அனைத்து வார்டுகளிலும் நாங்கள் வாக்குகளை சேகரிக்கச் சென்றோம். எல்லா பகுதிகளிலும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நல்ல ஆதரவு இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அனைத்து பகுதிகளையும் மிகச் சிறந்த முறையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வைத்துள்ளார்.
தொகுதி முழுவதும் மிகச் சிறந்த முறையில் தரமான சாலை வசதிகள் உள்ளன. இதேபோன்று, தெரு விளக்கு, தண்ணீர் வசதி, திருவெறும்பூர் தொகுதி முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் நல்ல முறையில் தூய்மைப் பணிகள் நடைபெற்று, தொகுதி தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது. நியாய விலைக்கடைகளில் நல்ல தரமான பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 80 சதவீதம் அளவுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படு வருவதை காண முடிகிறது. அத்துடன், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப பள்ளிக்கூடங்கள் என அனைத்தும் அருமையான முறையில் தனிக் கவனத்துடன் திருவெறும்பூர் தொகுதியில் இருந்து வருகின்றன.
தொகுதியில் சிறந்த பணிகள் :
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதியில் தம்மால் முடிந்த அளவுக்கு சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். அதனை நாம் நேரில் கண்டு, அவரிடமே, பெருமையுடன் தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தோம். திருவெறும்பூர் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எங்களுக்கு மன திருப்தி ஏற்பட்டதை அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பகிர்ந்துகொண்டோம். இந்த தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியே அமையும். அந்த ஆட்சியில் நீங்கள் மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பணியாற்றும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் என்று நாங்கள் தெரிவித்தோம்.
இ.யூ.முஸ்லிம் லீகர்கள் தமக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதனை மீண்டும் அமையும் திமுக ஆட்சியில் நாங்கள் நிச்சயம் செய்வோம் என்று நம்மிடம் கூறி, தமிழகத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் குறித்து நீண்ட நேரம் தமது எண்ணங்களை எங்களிடம் பகிர்ந்துகொண்டார்.
காலை உணவுத்திட்டத்தின் பலன் :
குறிப்பாக, காலை உணவுத் திட்டம் என்பது மிகவும் அற்புதமான ஒரு திட்டம். இந்த திட்டம் நடைமுறைப்படுத்திய பிறகு, தமிழக பள்ளிகளில் இருந்து படிப்பை விட்டு நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துவிட்டது. தமிழகத்தின் கிராமங்களில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த திட்டத்தின் மூலம் பலன் அடைந்து வருகிறார்கள். இதுபோன்ற திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தினால் தமிழக மக்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியபோது உண்மையில் எங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.
திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் ஏற்பட்ட மிகப்பெரிய மறுமலர்ச்சிக்கு திருவெறும்பூர் தொகுதி ஒரு சாட்சி என்றே கூறலாம். இதன்மூலம் திருவெறும்பூர் தொகுதியில் மட்டுமல்லாமல், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறிவருவது போல, 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
இவ்வாறு இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீர் ரஹ்மான் திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தமது அனுபவங்களையும் எண்ணங்களையும் எங்களிடம் பகிர்ந்துகொண்டார். அவருக்கும் அவருடன் பயணித்த இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகளுக்கும் மணிச்சுடர் சார்பில் வாழ்த்துகளைக் கூறி விடைப்பெற்றோம்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்