முயற்சியை ஒருபோதும் கைவிடாதீர்கள்.
நீங்கள் அதிசயத்தை நிகழ்த்த போகும் தருணம் இதுவாக கூட,
இப்போது கூட இருக்கலாம்.
கோபம் என்பது வலுவான காற்றைப் போன்றது.
சற்று நேரத்தில் அது தணிந்துவிடும்.
ஆனால் அதற்குள்
பல மரங்களின் கிளைகளை
அது முறித்துவிடும்.
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
முயற்சியை ஒருபோதும் கைவிடாதீர்கள்.
நீங்கள் அதிசயத்தை நிகழ்த்த போகும் தருணம் இதுவாக கூட,
இப்போது கூட இருக்கலாம்.
கோபம் என்பது வலுவான காற்றைப் போன்றது.
சற்று நேரத்தில் அது தணிந்துவிடும்.
ஆனால் அதற்குள்
பல மரங்களின் கிளைகளை
அது முறித்துவிடும்.
மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் நிராகரிப்பு.....!
மாநிலத்தில் சமூகப் பிளவுகளை உருவாக்க எந்தவொரு தரப்பையும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு,அனுமதிக்காது..!!
கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் திட்டவட்டம்....!!!
திருவனந்தபுரம், மே.19- இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் இயக்கம் என வர்ணித்துள்ள கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், லீகிற்கு எதிரான வெறுப்பு பிரச்சாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிராகரித்துள்ளார்.
கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு பதவி ஏற்றுக் கொண்ட நிலையில், அம்மாநில முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் வி.டி.சதீசன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் குறித்து, சில மதவாத சக்திகள் வெறுப்பு பிரச்சாத்தை தொடங்கியுள்ளன. இ.யூ.முஸ்லிம் லீக், மதவாத கட்சி என்று அவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
சதீசன் கண்டனம் :
இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள வி.டி.சதீசன், இ.யூ.முஸ்லிம் லீக் ஒரு மதச்சார்பற்ற இயக்கம் என வர்ணித்து, அதற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முக்கியக் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை குறிவைத்து நடத்தப்படும் வெறுப்புப் பிரச்சாரம் முறியடிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இ.யூ.முஸ்லிம் லீகின் மாநிலத் தலைவர் பனக்காடு சையது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் மற்றும் தேசியப் பொதுச் செயலாளர் பி.கே. குஞ்ஞாலிகுட்டி உள்ளிட்ட லீகின் உயர்மட்டத் தலைவர்களுடன் இணைந்து, சதீசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இ.யூ.முஸ்லிம் லீக் ஒரு மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரான அமைப்பாகச் சித்தரிக்க நடக்கும் முயற்சிகளுக்கு, உடனடியான, வலுவான மற்றும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று சதீசன் திட்டவட்டமாக கூறினார். ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, மாநிலத்தில் சமூகப் பிளவுகளை உருவாக்க எந்தவொரு தரப்பையும் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
கேரளத்தின் மதச்சார்பற்ற அரசியல் சூழலைப் பிளவுபடுத்தும் வகையிலான இத்தகைய சதி முயற்சிகள், எந்தத் தரப்பிலிருந்து வந்தாலும், அவை கடுமையாக எதிர்கொள்ளப்படும். சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, சிறுபான்மையினருக்கு எதிரான பிரச்சாரங்களை நாங்கள் திறம்பட முறியடித்தோம். பிளவுபடுத்தும் அத்தகைய பிரச்சாரங்களைக் கேரள மக்கள் நிராகரித்துவிட்டு, ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பரிசளித்துள்ளனர். கேரளத்தை மதரீதியாகப் பிளவுபடுத்த நடக்கும் எந்தவொரு முயற்சியிலிருந்தும் அதைப் பாதுகாப்பதற்கான மக்கள் ஆணையை, இந்த அரசாங்கம் உறுதியாகக் காத்து நிற்கும் என்று சதீசன் கூறினார்.
இ.யூ.முஸ்லிம் லீகின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்கு :
இ.யூ.முஸ்லிம் லீகை கடுமையாக விமர்சிப்பவர்கள், ஒரு மதச்சார்பற்ற மற்றும் நிலைப்படுத்தும் சக்தியாக லீக் ஆற்றிவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்கை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மதச்சார்பின்மை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துவதில் தங்ஙள் குடும்பத்தினர் ஆற்றிய பங்குதான், 1992-ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது ஏற்பட்ட சமூகப் பின்விளைவுகளின் தீவிரத்தைக் குறைத்து, ஒரு பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். முனம்பம் மற்றும் பள்ளுருத்தி விவகாரங்களில்" மதச்சார்பின்மையைக் காப்பதிலும், பல்வேறு சமூகங்களை ஒன்றிணைப்பதிலும் இ.யூ.முஸ்லிம் லீக் உறுதியுடன் செயல்பட்டதாக சதீசன் பாராட்டு தெரிவித்தார். இ.யூ.முஸ்லிம் லீகை மதச்சார்பின்மைக்கு எதிரானதாகச் சித்தரிக்க முயல்பவர்கள், லீகின் தலைமை மட்டும் இல்லாவிட்டால், எத்தகைய அடிப்படைவாத சக்திகள் தலைதூக்கியிருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் சதீசன் கேட்டுக் கொண்டார்.
முதலமைச்சருக்கு பாராட்டு :
இ.யூ.முஸ்லிம் லீக் குறித்து சதீசனின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய கேரள மாநில இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் பனக்காடு சையது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள், முதலமைச்சருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்ததுடன், இறுதியாக, கேரள மாநிலத்திற்கு அது தகுதியான ஒரு தலைவர் கிடைத்துள்ளார் என்று பாராட்டு தெரிவித்தார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
" கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பிடித்த உஸ்பெகிஸ்தானின் இஸ்லாமிய நாகரிக மையம் "
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் அமைந்துள்ள இஸ்லாமிய நாகரிக மையம், கின்னஸ் உலக சாதனைகளால் "உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாகரிக அருங்காட்சியகம்" என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மையம் 10 ஹெக்டேர் (சுமார் 50,000 சதுர மீட்டர்) பரப்பளவில் அமைந்துள்ளது. 65 மீட்டர் உயரமுள்ள ஒரு பிரம்மாண்டமான மையக் குவிமாடத்தைக் கொண்டுள்ள இந்த மையத்தில், அரிய குர்ஆன்கள் உட்பட ஆயிரக்கணக்கான வரலாற்றுப் பொக்கிஷங்கள் குவிந்துள்ளன. அதேநேரத்தில், இந்த மையம் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கல்வி ஆராய்ச்சியுடன் ஒருங்கிணைக்கிறது.
கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பிடிப்பு :
உஸ்பெகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய நாகரிக மையம், இஸ்லாமிய நாகரிகத்திற்கென அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக கடந்த ஏப்ரல் 13, 2026 அன்று கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தைப் பெற்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை, கின்னஸ் உலக சாதனைகளின் நடுவர் ஷெய்தா சுபாஷி ஜெமிசி உறுதிப்படுத்தினார். திட்டக் கட்டிடக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் மையத்தின் அறிவியல் மன்ற உறுப்பினர்களுடன் அவர் அதற்கான விழாவில் கலந்துகொண்டார். ஒரு விரிவான சரிபார்ப்பு செயல்முறைக்குப் பிறகு இந்த அங்கீகார விருது வழங்கப்பட்டது. உஸ்பெகிஸ்தான் தனது வரலாற்றுப் பதிவை முன்வைப்பதற்கும், அதன் சர்வதேசப் பிம்பத்தை மறுவடிவமைப்பதற்குமான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பெரிய அளவிலான கலாச்சார உள்கட்டமைப்பில் தொடர்ந்து முதலீடு செய்து வரும் வேளையில் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
"ஒரு அதிகாரப்பூர்வ கின்னஸ் உலக சாதனைகளின் நடுவர் என்ற முறையில், அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு மூலையும், ஒவ்வொரு காட்சிப் பொருளும் தனக்கே உரிய தனித்துவத்தையும் கலாச்சார மதிப்பையும் கொண்டுள்ளது என்று என்னால் கூற முடியும்," என்று நடுவர் ஷெய்தா சுபாஷி ஜெமிசி கூறியுள்ளார். "மதிப்பீட்டுச் செயல்முறை நிறுவப்பட்ட நடைமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றியது, ஒவ்வொரு காட்சிப் பொருளும் இஸ்லாமியத் தொல்லியல், கலை மற்றும் அறிவியல் வல்லுநர்களால் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது" என்றும் அவர் தெரிவித்துள்ளார். திட்டத்தின் அளவும் ஆழமும் தன்னிடம் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ள நடுவர் ஷெய்தா சுபாஷி ஜெமிசி, அதனை ஒரு மிகச்சிறந்த சாதனை என்றும், கின்னஸ் சொற்களில் கூறுவதானால், “அதிகாரப்பூர்வமாக அற்புதமானது” என்றும் வர்ணித்துள்ளார்.
சில சுவையான தகவல்கள் :
இந்த இஸ்லாமிய நாகரிக மையம் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவின் தலைமையில் 2017-ல் தொடங்கப்பட்டு, மார்ச் 17, 2026 அன்று கட்டி முடிக்கப்பட்ட ஒரு பெரிய அளவிலான அறிவியல், கல்வி மற்றும் அருங்காட்சியக வளாகமாகும். இஸ்லாமிய நாகரிகத்தின் வரலாறு மற்றும் பங்களிப்புகளை வெளிப்படுத்தும் நோக்கில், ஆராய்ச்சி, கலாச்சார பாரம்பரியம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாக இது வடிவமைக்கப்பட்டது. இந்தத் திட்டம், உஸ்பெகிஸ்தானை இஸ்லாமிய அறிவின் ஒரு வரலாற்று மையமாக மட்டுமல்லாமல், அதன் ஆய்வு மற்றும் விளக்கத்திற்கான ஒரு நவீன தளமாகவும் நிலைநிறுத்தும் அதிபர் மிர்சியோயேவின் பரந்த கொள்கையைப் பிரதிபலிக்கிறது.
===================
"இஸ்லாமிய நாகரிக மையம் மார்ச் 17, 2026 அன்று கட்டி முடிக்கப்பட்ட ஒரு பெரிய அளவிலான அறிவியல், கல்வி மற்றும் அருங்காட்சியக வளாகமாகும். இஸ்லாமிய நாகரிகத்தின் வரலாறு, பங்களிப்புகளை வெளிப்படுத்தும் நோக்கில், ஆராய்ச்சி, கலாச்சார பாரம்பரியம், நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாக இது வடிவமைக்கப்பட்டது. உஸ்பெகிஸ்தானை இஸ்லாமிய அறிவின் ஒரு வரலாற்று மையமாக மட்டுமல்லாமல், அதன் ஆய்வு மற்றும் விளக்கத்திற்கான ஒரு நவீன தளமாகவும் இந்த மையம் நிலைநிறுத்துகிறது"
===================
மையத்தின் தலைமைக் கட்டிடக் கலைஞர் அப்துல்காகோர் துர்டியேவ், இந்தத் திட்டம் உஸ்பெகிஸ்தானின் வரலாற்று மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "இந்த மையத்தின் தனித்துவம், அதன் கட்டிடக்கலை உஸ்பெகிஸ்தானின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதில் உள்ளது" என்றும் அவர் பெருமைப்பட கூறியுள்ளார். மேலும், உலகளாவிய கலாச்சார உரையாடலில் நாடு தன்னை ஒரு தீவிரப் பங்கேற்பாளராக நிலைநிறுத்தி வருவதாகவும் தலைமைக் கட்டிடக் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய ஆசியா முழுவதும், அரசாங்கங்கள் தேசிய அடையாளத்தை வலுப்படுத்தவும் சர்வதேச கவனத்தை ஈர்க்கவும் பெரிய கலாச்சாரத் திட்டங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், உஸ்பெகிஸ்தான் பாரம்பரியத்தை கல்விப்புலத்துடனும் உலகளாவிய ஈடுபாட்டுடனும் இணைப்பதில் குறிப்பாக முக்கியத்துவம் அளித்துள்ளது.
அதிகம் பார்வையிடப்படும் கலாச்சார மையம் :
உலக அளவில் இந்த மைய வளாகம் இப்பகுதியில் அதிகம் பார்வையிடப்படும் கலாச்சாரத் தளங்களில் ஒன்றாக விரைவாக மாறியுள்ளது. உள்ளூர்வாசிகள் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் உட்பட தினமும் 5 ஆயிரம் பார்வையாளர்கள் வரை இங்கு வருகிறார்கள். இந்த அளவு, இந்த மையம் ஒரு அருங்காட்சியகமாக மட்டுமல்லாமல், உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்கள் இப்பகுதியின் அறிவுசார் மற்றும் கலாச்சார வரலாற்றைப் புரிந்துகொள்ளும் விதத்தை வடிவமைக்கும் ஒரு முதன்மை நிறுவனமாகவும் கருதப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
இஸ்லாமிய நாகரிக மையத்தின் இயக்குநர் ஃபிர்தாவ்ஸ் அப்துக்கலிகோவ், இந்த கின்னஸ் அங்கீகாரம் நூற்றுக்கணக்கான நிபுணர்களின் பல ஆண்டுகால உழைப்பிற்கான அங்கீகாரம் என்று விவரித்தார். உஸ்பெகிஸ்தானின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்தும் அதேவேளையில், அறிவியல் மற்றும் கல்வித் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதே இந்த மையத்தின் முதன்மை நோக்கம் என்றும் மையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அதன் சாதனை அளவிலான பிரம்மாண்டத்தைத் தாண்டி, இஸ்லாமிய நாகரிக வரலாற்றில் தனது இடத்தை மீட்டெடுத்து, அதற்குப் புதிய விளக்கம் அளிப்பதற்கான உஸ்பெகிஸ்தானின் பரந்த முயற்சியை இந்த மையம் பிரதிபலிக்கிறது. கல்விப்புல ஆய்வு, அரசின் ஆதரவு மற்றும் பொதுமக்களின் அணுகல் ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம், இது கலாச்சார பாரம்பரியத்தை தேசிய அடையாளத்தின் அடித்தளமாகவும், சர்வதேச ஈடுபாட்டிற்கான ஒரு கருவியாகவும் நிலைநிறுத்துகிறது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
Be strong. Be fearless.
Be beautiful.
And believe that anything is possible
when you have the right people
there to support you.
யார் ஒருவர் நல்ல செயலைச் செய்தாலும்
அவரை மனதார பாராட்டுங்கள்.
உங்கள் பாராட்டுகள் அவரை மேன்மேலும்
நல்ல செயல்களைச் செய்ய வைக்கும்.
நல்ல செயல்கள் வேகமாக பரவி,
நல்ல சூழலை உருவாகும்.
நல்ல சூழல் அமைதியான சமூகத்தை
உருவாக்கி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.