Saturday, March 28, 2026

சிந்தனை....!

ஆசைகளை வளர்த்துக் 

கொள்ளுங்கள். தவறில்லை. 

ஆசைகளுடன் திறமைகளையும் 

வளர்த்துக் கொண்டால் 

வாழ்க்கை இனிமையாக ஜொலிக்கும். 

மேலும் உங்களை நீங்களே சரி 

செய்துகொள்ள முயலுங்கள். 

அதைவிட சிறந்த மாற்றம் 

வேறொன்றும் இல்லை.



பாராட்டு....!

என்னுடைய 

மதீனாவில் உயர்ந்த 

வாழ்க்கைத் தரம் கட்டுரைக்கு 

வாசகரின் பாராட்டு கடிதம்....!



கட்டுரை....!

முதுகுளத்தூர். காம் 

இணையதள ரமழான் சிறப்பு மலரில், 

நான் எழுதிய 

"புனித ரமழானில் நடைபெறும் 

பன்முக கலாச்சார சந்தை" 

கட்டுரை வெளிடப்பட்டுள்ளது.



Friday, March 27, 2026

நூல்கள்....!

எனது 

' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி" 

மற்றும்

 'இந்திய முஸ்லிம்கள் - பாகம் 1' 

ஆகிய இரண்டு நூல்களை, 

ஆற்காடு இளவரசர் நவாப் முஹம்மது அலி,

வழக்கறிஞர் முஹம்மது வசீயுத்தீன் தாத்னி சாஹிப் ஆகியோருக்கு வழங்கி,

அன்பையும் வாழ்த்தையும் பெற்ற இனிய தருணம்.

நூலுக்கு தோழர்கள் அமோக வரவேற்பு...!



ஒரு விருந்தோம்பல் மூலம் உலக மக்களை வியக்க வைத்த மஸ்ஜிதுன் நபவி​....!

"ஒரு விருந்தோம்பல் மூலம் உலக மக்களை வியக்க வைத்த மஸ்ஜிதுன் நபவி​ "

புனித ரமழான் மாதம் விடைப்பெற்று சென்று விட்ட நிலையில் கூட, அந்த மாதத்தின் தாக்கம் இன்னும் இஸ்லாமியர்கள் மத்தியில் இருந்து வருகிறது.  நோன்பு காலத்தில் கிடைத்த ஆன்மீக அனுபவங்கள் முஸ்லிம்களை மிகச் சிறந்த மனிதர்களாக மாற்றிக் கொண்டே இருக்கிறது. ஓர் இறைக் கொள்கையில் எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்ற திருக்குர்ஆனின் கட்டளைப்படி, முஸ்லிம்கள் ஈமானில் மிகமிக கொள்கை உறுதியுடன் இருந்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் சாத்தான் மனதை குழப்பினாலும், ரமழான் மாதத்தில் கிடைத்த அற்புதமான ஆன்மீக நெறிமுறைகள், அனுபவங்கள் மூலம் சாத்தனை விரட்டிவிட்டு, புனித பாதையில் இஸ்லாமியர்கள் நடைபோட்டுக் கொண்டே  இருக்கிறார்கள். 

புனித ரமழான் மாதத்தில் உலகில் உள்ள அனைத்து மஸ்ஜித்துகளிலும் இஃப்தார் விருந்தோம்பல் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். பிரமாண்ட மஸ்ஜித்துகள் முதல் மிகமிக சிறிய மஸ்ஜித்துகள் வரை அனைத்திலும் நோன்பாளிகளுக்கு அழகிய முறையில் இஃப்தார் விருந்து அளிக்கப்படுகிறது. இந்த இஃப்தார் விருந்தில் அனைவரும் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் எதுவும் இல்லாமல், ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி, இஃப்தார் விருந்தை உண்டு மகிழ்ச்சி அடையும் அற்புதமான சம்பவங்கள் ரமழான் முழுவதும் நடைபெறுவதை நாம் காணலாம். இஃப்தார் விருந்து அளிப்பது தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று பணக்காரர்கள் மட்டுமல்ல, ஏழைகளும் நினைக்கிறார்கள். அதன் காரணமாக  தங்கள் வசதிக்கு ஏற்ப, இஃப்தார் விருந்துகளை நடத்தி, ஆனந்தம் அடைகிறார்கள். 

இத்தகைய சூழ்நிலையில் புனித மக்காவில் உள்ள மக்கா ஹரம் ஷரீபில் நடைபெறும்  இஃப்தார்  விருந்து நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இதேபோன்று, சவூதி அரேபியாவின் மதினா நகரில் உள்ள மஸ்ஜித்துன் நபவியில் நடைபெறும் இஃப்தார் விருந்தோம்பல் இஸ்லாமியர்களின் மகிழ்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது என்றே கூறலாம். இந்த இரண்டு புனித மஸ்ஜித்துகளில் நடைபெறும் இஃப்தார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை இஸ்லாமியர்கள் தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்றே கருதுகிறார்கள். அதன் காரணமாக புனித ரமழானில் உம்ரா பயணம் மேற்கொள்வதை உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் மிகவும் விரும்புகிறார்கள். அதன்படி உம்ரா பயணம் செய்கிறார்கள். 

சாதனை படைத்த இஃப்தார் விருந்து  :

இப்படி உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள், ரமழான் காலத்தில் மக்கா, மதீனா நகரங்களுக்கு ஆர்வத்துடன் வருவதால், அந்த நகரங்கள் களைகட்டி, மிகப்பெரிய அளவுக்கு மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அந்த வகையில் மதீனாவில் உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் உள்ள மஸ்ஜித்துன் நபவியில், இந்த ரமழானில் மிகப்பெரிய அளவுக்கு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.  மஸ்ஜித்துன் நபவியில் ரமழான் மாதம் முழுவதும் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட இஃப்தார் உணவுகள் நோன்பாளிகளுக்கு வினியோகிக்கம் செய்யப்பட்டு சாதனை நிகழ்த்த்தப்பட்டுள்ளது. 

                                                =======================

"புனித ரமழான் மாதத்தில் மதீனாவில் உள்ள மஸ்ஜித்துன் நபவியில், சுமார் ஒரு கோடி இஃப்தார் உணவுகள் வினியோகம் செய்யப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மதீனா மாநகரம், ஏக இறைவனின் அன்பை பெற்று மேலும் ஒரு புனித நகரமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது"

                                                =======================

மஸ்ஜித்துன் நபவி  மற்றும் அதன் முற்றங்களில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சேவை அமைப்பின் மூலம் இந்த உணவுகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.  இது, ரமழான் மாதத்தில் யாத்ரீகர்கள் மீது காட்டப்படும் அக்கறையைப் பிரதிபலிக்கும் வகையில், இஃப்தார் உணவுகள் மிக உயர்ந்த தரம் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளின்படி பரிமாறப்படுவதை உறுதி செய்கிறது.

மனிதாபிமான சேவை :

ஒற்றுமை மற்றும் மனிதாபிமான சேவையின் விழுமியங்களை மேம்படுத்துவதற்கும், யாத்ரீகர்கள் தங்கள் மார்க்கக் கடமைகளை ஒரு பாதுகாப்பான மற்றும் ஆன்மீகச் சூழலில் நிறைவேற்றுவதற்கு வழிவகுப்பதற்கும் இந்த இஃப்தார் விருந்தோபல் அற்புதமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது என்றே கூற வேண்டும்.  இத்தகைய  முயற்சிகள் மதீனாவில் உள்ள பல்வேறு தொடர்புடைய அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. மதீனாவில் உள்ள பொது ஆணையத்தின் புள்ளி விவரங்களின்படி, மொத்தம்  மொத்தம் 90 லட்சத்து 15 ஆயிரத்து 322 இஃப்தார் உணவுகளை விநியோகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதீனா மக்களிடையே இயற்கையிலேயே விருந்தோம்பல் பண்பு இருந்து வருவதால், அவர்கள், எப்போதும் மதீனாவிற்கு வரும் இஸ்லாமியர்களை அன்புடன் வரவேற்று உபசரிப்பு செய்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். அந்த வகையில் புனித ரமழானில் மிகப்பெரிய அளவுக்கு இஃப்தார் உணவுகள் வினியோகம் செய்யப்பட்டு, உலக மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்றே கூற வேண்டும். 

இந்த இஃப்தார் விருந்தோம்பல் அனைத்தும்,  ஏக இறைவனின் அன்பை பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் செய்யப்படும் ஒரு அழகிய செயலாகும். அந்த வகையில், ரமழான் மாத்தில் நபிகள் நாயகம் (ஸல்) மஸ்ஜித்தில் சுமார் ஒரு கோடி அளவுக்கு இஃப்தார் உணவுகள் நோன்பாளிகளுக்கு அளிக்கப்பட்டு, மதீனா மாநகரம், ஏக இறைவனின் அன்பை பெற்று மேலும் ஒரு புனித நகரமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Never....!

Never

 forget a person 

who came to you 

with a torch

 in the dark.




மன்னிப்பு...!

சண்டைக்குப் பின் 

மன்னிப்பு கேட்பவர்கள் 

எல்லோரும் தவறு 

செய்தவர்கள் அல்ல. 

நேசித்த உறவை 

இழக்க மனமில்லாமல் தான் 

மன்னிப்பு கேட்க 

விரும்புகிறார்கள்...!