பேசிவிட்டு யோசிப்பதை விட,
யோசித்துவிட்டுப் பேசுங்கள்.
வாழ்க்கையில் ஏற்படும்
அநாவசியமான அத்தனை
பிரச்சினைகளுக்கும்
முற்றுப்புள்ளியாய்
அது அமையும்.
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
பேசிவிட்டு யோசிப்பதை விட,
யோசித்துவிட்டுப் பேசுங்கள்.
வாழ்க்கையில் ஏற்படும்
அநாவசியமான அத்தனை
பிரச்சினைகளுக்கும்
முற்றுப்புள்ளியாய்
அது அமையும்.
எனது
"உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி"
மற்றும்
இந்திய முஸ்லிம்கள் - பாகம் 1,
ஆகிய இரண்டு நூல்கள் அறிமுகம்...!
தோழர்கள் அமோக வரவேற்பு....!!
தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சியே தொடர வேண்டும்..!
திமுக கூட்டணிக்கு பெண்கள் உட்பட 80 சதவீத மக்கள் ஆதரவு...!!
இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி....!!!
சென்னை, மார்ச்.16- தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சியே தொடர வேண்டும் என மாநிலம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக சிவறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் நடைபெற்ற பேரன்பின் ஈகை பெருவிழா மற்றும் இஃப்தார் ஒற்றுமை பெருவிழாவில் கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அதன் விவரம் வருமாறு:
தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு :
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழநாட்டை பொறுத்தவரை ஒரே கட்டமாக தேர்தல் அறிவித்துள்ளதை நாங்கள் வரவேற்றுகிறோம். பிற மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்து இருப்பதை பாராட்டுகிறோம். ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி சொல்கிறோம்.
ஜனநாயகத்தின் பிறப்பிடம் தமிழகம் :
இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஜனநாயகத்தை நாட்டில் வேரூன்ற செய்த பெருமை தமிழகத்திற்கு உண்டு. அதற்காக தொடர்ந்து பாடுபட்டது தமிழ்நாடு. இந்தியாவில் உள்ள ஜனநாயகம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக முறை அனைத்தும் தமிழ் மண்ணில் இருந்துதான் உலகம் முழுவதும் சென்றது. ஜனநயாக முறை தான் மக்களால் தேர்ந்தெடுக்கும் முறையாகும்.
தமிழகத்தில் ஜனநாயக முறை மிகச் சிறந்த முறையில் இருந்து வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை ஜனநாயகம் மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, தளபதி மு.க.ஸ்டாலின் ஆகிய அனைவரது ஆட்சியில் ஜனநாயகம் மிகச் சிறந்த முறையில் உள்ளது.
திமுகவிற்கு 80 சதவீத மக்கள் ஆதரவு :
தமிழ்நாட்டில் 80 சதவீத மக்களின் உணர்வுகளை பார்க்கும்போதும் பெண்களின் விருப்பம், திமுகவின் தலைமையிலான கூட்டணிக்கு வரவேற்பு அளித்து வருவதை தெளிவாக தெரிகிறது. திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அது தான் இப்தார் நிகழ்ச்சியிலும் வெளிப்பட்டுள்ளது.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்தார்.
முஹம்மது அபூபக்கர் பேட்டி :
இதேபோன்று இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு பொதுச் செயலாளர் கேஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பே இ.யூ.முஸ்லிம் லீக் தேர்தலுக்காக தயாராகி, பல்வேறு பணிகளை செய்து வருகிறது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, தேர்தலை எதிர்கொள்ள எப்போதும் தயாராக உள்ளது. திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் தமிழகத்தில் செயல்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துத் தரப்பு மக்களையும் நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சினைகக்கு தீர்வு கண்டு வருகிறார். அனைத்துச் சமுதாய மக்களுக்கும் நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். பல்வேறு சமுதாய மக்கள் அரசிடம் தங்கள் கோரிக்கைகளை வைக்கும்போது அவற்றை தீவிரமாக பரிசீலனை செய்து தீர்வு கண்டுவருகிறார். தற்போது எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுளள நிலையில் அதற்கும் தீர்வு காணும் வகையில் வணிக நிறுவனங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்துவதில் இருந்து யூனிட்டிற்கு இரண்டு ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மக்களின் ஆதரவுடன் திமுக கூட்டணி வெற்றி பெறும் :
மிகச் சிறந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதால், அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவுடன் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். அதிமுக கூட்டணி குழப்பமான கூட்டணியாகும். கட்டாயப்படுத்தி சில கட்சிகளை கூட்டணியில் இணைக்க அங்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் திமுக கூட்டணி என்பது மக்களின் கூட்டணியாகும். அதனால் நாளுக்கு நாள் கூட்டணி வலிமை அடைந்து வருகிறது. தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 6 தேர்தல்களில் வெற்றிபெற்று சாதனை புரிந்த திமுக கூட்டணி, மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பு ஏற்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இவ்வாறு முஹம்மது அபூபக்கர் தெரிவித்தார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
An arrow can only be shot
by pulling it backward.
So when life is dragging you back
with difficulties,
it means that it's going to
launch you into something great.
கர்வம் குதிரை மீது
கம்பீரமாக சவாரி செய்துக்
கொண்டுதான் போகும்.
ஆனால்
கால்நடையாகத்தான்
திரும்பி வரும்.
வரும் வழி நெடுக
கேவலமாக பிச்சையும் எடுக்கும்.
Kerala polls in a single phase on April 9, 2026. Counting on May 4, 2026.
Assam polls in a single phase on April 9, 2026. Counting on May 4, 2026.
Puducherry polls in a single phase on April 9, 2026. Counting on May 4, 2026.
Tamil Nadu Assembly polls in a single phase on April 23, 2026. Counting on May 4, 2026.
West Bengal polls in two phases - on April 23 and 29, 2026. Counting on May 4, 2026.
May 4, 2026: The date when we shall know who will get to rule Tamil Nadu, Puducherry, West Bengal, Assam and Kerala.