Friday, June 19, 2026

வார்த்தையும் நடத்தையும்...!

 யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள்,

 விலகுவார்கள் என்பதை காலம் முடிவு

 செய்வதில்லை. அவர்களின் வார்த்தைகளும்

 நடத்தையும் தான் முடிவு செய்கிறது.

 வாழ்க்கையில் உறவுகள் நீடிக்க

 வார்த்தைகளிலும்  நடத்தையிலும்

கவனமாக இருக்க வேண்டும்.



வீராங்கனை...!

 துணிச்சல் & தைரியம்....

வீராங்கனை....

இப்படி இருக்க வேண்டும்...!



Thursday, June 18, 2026

மனித வாழ்வில் இயற்கைக் காட்சிகள்....!

" மனித வாழ்வில் ஆன்மாவின் ஆழத்தை எட்டும் இயற்கைக் காட்சிகள் "

உலகம் தோன்றியது முதல், தொன்றுதொட்டு மனிதனும் இயற்கையும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. மனிதன் இயற்கையின் ஒரு பகுதி. இயற்கைக் காட்சிகள் மனிதனுக்குள் அமைதி, சமநிலை, நம்பிக்கை, நன்றியுணர்வு, நல்வாழ்வு மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்குகின்றன. நவீன கால பரபரப்பு, இயந்திரமயமான வாழ்க்கை, திரை நேரம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை மனிதனை இயற்கையிலிருந்து தூரப்படுத்தியுள்ளன. இருப்பினும், மனிதனின் உடல், மனம், ஆன்மீகம், கல்வி மற்றும் ஒழுக்க வளர்ச்சிக்கு இயற்கைச் சூழலுடன் நேரத்தைச் செலவிடுவது அடிப்படையான முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தத் தூரத்தின் விளைவாக, உடல், மனம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.

இயற்கைக் காட்சிகள் மனித வாழ்வில் வெறும் கவர்ச்சியின் ஊற்று மட்டுமல்ல. அவை வேறு எந்த வழியிலும் கிடைக்காத, ஆன்மாவின் ஆழத்தை எட்டும் ஒரு நுட்பமான தாக்கத்தை  கொண்டுள்ளன. இயற்கையுடன் நெருக்கமாக இருப்பது மனிதனுக்குள் ஒரு கலைநய உணர்வை உருவாக்கி, சிந்தனைக்கு புதிய பரிமாணங்களை அளிக்கிறது. 

மன ஆரோக்கியத்திற்கு இயற்கையின் முக்கியத்துவம் :

மலைகளின் உயரங்கள், ஆறுகளின் ஓட்டம், காடுகளின் குளிர்ந்த காற்று மற்றும் பாலைவனத்தின் அமைதியான பரந்தவெளிகள் ஆகியவை மனிதனை அவனது மூலத்துடன் இணைக்கின்றன. இந்த நிலப்பரப்புகள், வாழ்க்கையின் குழப்பமான இரைச்சலில் ஒரு இடைவெளியை உருவாக்குகின்றன. இது மன ஆரோக்கியத்திற்கும் அறிவுசார் ஒருமைப்பாட்டிற்கும் இன்றியமையாததாகும். இயற்கையின் அருகாமை மனிதனிடம் ஒரு அழகியல் உணர்வை உருவாக்கி, சிந்தனைக்கு புதிய பரிமாணங்களை அளிக்கிறது. இதனால்தான் ஒவ்வொரு நாகரிக சமூகமும் இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதை தனது கலாச்சார மற்றும் தார்மீகப் பொறுப்பாகக் கருதுகிறது.

இயற்கை நிலப்பரப்புகளின் மற்றொரு அம்சம். பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமானது. உலகெங்கிலும் உள்ள பெரிய நாடுகள், தங்களின் இயற்கை மூலதனமான காடுகள், ஆறுகள், மேய்ச்சல் நிலங்கள், கடற்கரைகள் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தை வளர்ச்சியின் முக்கியத் தூண்களாகக் கருதுகின்றன. இந்த இயற்கை வளங்கள் பருவங்களின் சமநிலையையும், சுத்தமான நீர், வளமான மண், ஆக்ஸிஜன், மழைப்பொழிவு மற்றும் வடிகால் அமைப்புகளின் விநியோகத்தையும் பராமரிக்கின்றன. இயற்கையின் இந்த வரங்கள் இழக்கப்பட்டால், நகரங்களின் பிரகாசம் அர்த்தமற்றதாகி, அனைத்து தொழில்நுட்பமும் பயனற்றதாகிவிடும். எனவே, இயற்கையைப் பாதுகாப்பது என்பது உண்மையில் மனிதனின் சொந்த வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் உயிர்வாழ்விற்கான ஒரு உத்தரவாதமாகும்.

                                                =================

"இயற்கைக் காட்சிகள் மனித வாழ்வில் வெறும் கவர்ச்சியின் ஊற்று மட்டுமல்ல. அவை வேறு எந்த வழியிலும் கிடைக்காத, ஆன்மாவின் ஆழத்தை எட்டும் ஒரு நுட்பமான தாக்கத்தையும் கொண்டுள்ளன"

                                            =================

கட்டுப்பாடற்ற நகரமயமாக்கல், தொழிற்சாலை மாசுபாடு மற்றும் ஈவிரக்கமற்ற காடழிப்பு ஆகியவற்றால் மனிதன் இயற்கையிலிருந்து மேலும் மேலும் விலகிச் செல்லும் இன்றைய காலகட்டத்தில், இயற்கை நிலப்பரப்புகளின் முக்கியத்துவம் இன்னும் அதிகரித்துள்ளது. தங்கள் நகரங்கள், கல்வி நிறுவனங்கள், வீட்டுவசதித் திட்டங்கள் மற்றும் பொது இடங்களில் இயற்கையை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்கும் நாடுகள், மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ்கின்றன என்று நவீன ஆய்வுகள் காட்டுகின்றன. இயற்கை நிலப்பரப்புகளுடன் நேரத்தைச் செலவிடுவது மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது என்பதை பல்வேறு அறிவியல் ஆய்வுகள், மத போதனைகள் மற்றும் அறிவுசார் ஆய்வுகள் ஒப்புக்கொள்கின்றன. இயற்கை, மலைகள், மரங்கள், வானம், பூமி, மேகங்கள், மழை, விலங்குகள் மற்றும் இயற்கையின் அறிகுறிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிந்திக்குமாறு இஸ்லாம் மனிதனுக்கு மீண்டும் மீண்டும் கட்டளையிட்டுள்ளது.

குர்ஆனில் இயற்கையின் முக்கியத்துவம் :

ஏக இறைவனின் திருவாக்கான புனித குர்ஆன், பூமி மற்றும் வானம், மலைகள், மரங்கள், ஆறுகள் மற்றும் பிற இயற்கை நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு சிந்திக்குமாறு மனிதனை மீண்டும் மீண்டும் அழைத்துள்ளது. குர்ஆனில் உள்ள வசனங்களில் இயற்கை, பிரபஞ்சம் மற்றும் இயற்கையின் நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. 

“நிச்சயமாக, வானங்களையும் பூமியையும் படைத்ததிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மனிதர்களுக்கு அத்தாட்சிகள் உள்ளன.” (3: 190)

“வானத்திலிருந்து நீரை இறக்குபவன் அவனே; அதிலிருந்து நீங்கள் பருகுகிறீர்கள், அதிலிருந்து மரங்கள் வளர்கின்றன. அதன் மீது நீங்கள் உங்கள் கால்நடைகளை மேய்க்கிறீர்கள்.” (16:10) 

இயற்கையை ஆழ்ந்து நோக்குவது, மனிதனைப் படைத்தவனை அறிந்துகொள்ளவும், நன்றியுணர்வுடனும், சமநிலையுடனும் இருக்க வழிவகுக்கிறது என்ற உண்மையை இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

“மேலும் அவன் மலைகளை அவற்றின் இடத்தில் உறுதியாக நிலைநிறுத்தியுள்ளான்.” (79:32)

“கூறுங்கள்: (பிரபஞ்சத்தின் வாழ்வைப் பற்றி அறிய) பூமி முழுவதும் பயணம் செய்யுங்கள். அவன் எவ்வாறு (உயிரின்) படைப்பைத் தோற்றுவித்தான் என்பதையும், பின்னர் அதற்குப் பிறகு அவன் எவ்வாறு உயிரை உருவாக்குகிறான் என்பதையும் பாருங்கள் (அதாவது, சிந்தித்து ஆராயுங்கள்).”  (29: 20)

பூமி முழுவதும் பயணம் செய்வது மனிதனிடம் சிந்தனை, அறிவு, அனுபவம் மற்றும் விழிப்புணர்வை உருவாக்குகிறது.

 ஹதீஸ்களில் இயற்கையின் முக்கியத்துவம் :

அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பூமி உங்களுக்கு ஒரு மஸ்ஜிதாகவும், தூய்மைப்படுத்தும் இடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.” (ஸஹீஹ் புகாரி) இந்த ஹதீஸ், பூமியும் இயற்கையும் மனிதனுக்கு வணக்கத்திற்கும் தூய்மைக்கும் உரிய வழி என்பதை காட்டுகிறது.

“மறுமை நாள் வரும்போது, ​​உங்களில் ஒருவரிடம் ஒரு பேரீச்ச மரக்கன்று இருந்தால், அதை நடவு செய்ய அவரால் முடிந்தால், அவர் அதை நடவு செய்ய வேண்டும்.” (முஸ்னத் அஹ்மத்)

இந்த ஹதீஸ் இயற்கையின் மீதான அன்பையும், மரம் நடுதலையும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதையும் ஊக்குவிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “ஓராண்டு வணக்கத்தை விட ஓர் மணிநேர தியானம் சிறந்தது.” (மிஷ்கத் அல்-மஸாபிஹ்)

இந்த ஹதீஸை நடைமுறைப்படுத்துவதற்கான சிறந்த வழி, இயற்கைச் சூழலில் தியானம் செய்வதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் தனிமையைத் தேர்ந்தெடுத்தார்கள். இயற்கையிலேயே செய்யப்படும் வணக்கத்திற்கு இதுவே மிக உயர்ந்த உதாரணமாகும். சுத்தம் செய்தல், பாதுகாத்தல் மற்றும் மரம் நடுதல் ஆகியவை சுன்னாவாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் ஒரு மரத்தை நடுகிறாரோ, அதன் கனி அவருக்கு தர்மமாகும்.”

இயற்கையுடன் இணைந்து வாழ்வோம் :

இயற்கையுடன் நீண்ட தூரம் விலகி சென்றுவிட்டு, தற்போது நாம், ஒரு நவீன உலகில் அமைதியை இழந்து பயணித்துக் கொண்டு இருக்கிறோம். அதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை மனித இனம் சந்திக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதிப்பு, மன நலம் பாதிப்பு, நாள்தோறும் பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினை என மனிதன் சந்திக்கும் தொல்லைகளுக்கு முக்கிய காரணம், அவன் இயற்கையை நேசிக்கவில்லை. அதன் அழகை பார்க்க விரும்பவில்லை. இயற்கையுடன் இணைந்து வாழ விரும்பவில்லை. 

இப்படி இயற்கையை ஒதுக்கிவிட்டு வாழ்வதால், மனிதனுக்கு எப்படி அமைதி கிடைக்கும். நவீன உலகில் இருந்து கொஞ்சம் விலகிவிட்டு, இயற்கையுடன் இணைந்து வாழ நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும். அப்படி செய்தால், உண்மையில் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும். மனித வாழ்வில் புதிய மறுமலர்ச்சி ஏற்படும். மன அமைதி கிடைக்கும் ஆரோக்கியம் உருவாகி, மனிதர்கள் மத்தியில் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்படும். 

நன்றி : இன்குலாப் உர்தூ நாளிதழ்

தமிழில் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Ego & Self Respect...!

 

Ego is not important in life. 

But self respect is most important in life.



அவசியம் இல்லாமல்....!

அவசியம் இல்லாதவர்களிடம் 

உண்மைகளைச் சொல்லாதீர்கள். 

 நம்பிக்கையாளர்களிடம் பொய்களைச்

 சொல்லாதீர்கள். 

இரண்டுமே உங்களை 

காலம் கடந்து காயப்படுத்தும். 

சில நேரங்களில் கவனமாக இருப்பது

 வாழ்க்கைக்கு அவசியம் என்பதை 

நினைவில் கொள்ளுங்கள்.



ஆட்டம்....!

 எப்படி நம்ம ஆட்டம்...!



பசு தேசிய விலங்கு...?

 பசு தேசிய விலங்கு...?

இனிய திசைகள் ஜூன் 2026 மாத இதழில் என்னுடைய சிறப்பு கட்டுரை...!