அழகு....
அற்புதமான அழகு....
உள்ளதைக் கவரும் அழகு...
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா:
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி எதிரொலி:
தமிழகம் முழுவதும் மக்களிடையே உருவாகியுள்ள புதிய எழுச்சி....!
திமுக கூட்டணிக்கு ஆதரவாக வீசும் வெற்றி அலை....!!
தமிழகத்தில் சமீபகாலமாக நிலவும் அரசியல், சமூக மற்றும் பண்பாட்டுச் சூழலில் மக்கள் மத்தியில் பல்வேறு எழுச்சிகள் காணப்படுகின்றன. 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, முக்கியமாக அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த 15 நாட்களாக தமிழகம் முழுவதும் அரசியல் தலைவர்களின் எழுச்சிமிகு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, தொகுதி மறுவரையறை தொடர்பான ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு எதிராக, அது தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் "சதி" என்று கருதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்புக் கொடி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தார். திமுக தலைவரின் இந்த அழைப்பை ஏற்று தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்பட்டு, ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தென்னிந்திய மாநிலங்களின், குறிப்பாகத் தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி :
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற தமிழக மக்களவை உறுப்பினர்கள் அனைவரும், மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதங்களை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவிற்கு மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்கவில்லை. மசோதாவிற்கு ஆதரவாக 278 பேரும் எதிராக 211 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதா வெற்றி பெற மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள், அதாவது 326 வாக்குகள் தேவை என்ற நிலையில், பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காததால், மசோதா தோல்வி அடைந்தது. இது மோடி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வியாகும்.
தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி :
நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி அடைந்த செய்தியைக் கேட்டதும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அடைந்த மகிழ்ச்சி அளவே இல்லை என்று கூறலாம். பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் அவர் தம்முடைய ஆனந்தத்தை வெளிப்படுத்தினார். இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த முதல் வெற்றி என்று மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். இந்த வெற்றி 100 ஆண்டுகள் ஆனாலும், வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்றும் அவர் உறுதிப்பட கூறினார். தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் நடக்கும் போரில், முதல்கட்டமாக தமிழ்நாடு தற்போது வெற்றி பெற்று இருக்கிறது. வரும் 23ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மிகப்பெரிய வெற்றியை திமுக கூட்டணி பெறும், தமிழ்நாட்டின் இரண்டாவது வெற்றியை மீண்டும் பதிவு செய்யும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அத்துடன் நிற்காமல், மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அது தோல்வி அடையச் செய்த காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார். அத்துடன் சமூக நீதியை காப்பாற்ற திமுக தொடர்ந்து போராடும் என்றும் மாநிலங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் அவர் உறுதிப்பட கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் எழுச்சி :
இத்தகைய சூழ்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்ததையடுத்து, தமிழ்நாடு முழுவதும் மக்களிடையே ஒரு புதிய எழுச்சி உருவாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், இந்த மக்கள் எழுச்சி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக மாறிவிட்டது என்றே கூறலாம்.
தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது என்று திமுக கூட்டணித் தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது, தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க வகைசெய்யும் மசோதா தோல்வி அடைந்ததால், அது திமுக அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறிவிட்டது. தவெக,., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவாக இருந்த மக்கள் கூட, தற்போது திமுக அணியின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர். இதன் காரணமாக, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்த வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியை தமிழக மக்கள் தருவார்கள் என அரசியல் நோக்கர்கள் கருகிறார்கள்.
சரியான திசையில் திமுக அணி :
இத்தகைய அரசியல் சூழ்நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைவர்கள், தமிழ்நாடு முழுவதும் உருவாக்கியுள்ள மக்கள் எழுச்சியை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள தீவிரம் காட்டி வருகின்றனர். வாக்குப்பதிவு நாள் வரை இந்த எழுச்சி மக்கள் மத்தியில் இருக்கும் வகையில், சரியான திட்டமிடலுடன் திமுக அணி தங்களது பிரச்சாரங்கள் செய்துவருவதாகவே தெரிகிறது. இதன்மூலம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் வரலாற்று வெற்றி கிடைக்கும் என உறுதியாக கூறலாம்.
இதுஒருபுறம் இருக்க, தமிழ்நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகிகள், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதர்ச்சார்ப்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு இஸ்லாமியர்கள் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். வெள்ளி மேடையிலும் தேர்தல் குறித்து இஸ்லாமியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசங்கம் செய்யப்பட்டது. இதன்மூலம் அனைத்து இஸ்லாமியர்களின் வாக்குகள் திமுக அணிக்கு கிடைக்கும் என்று உறுதிப்பட கூறலாம். இதேபோன்று, கிறிஸ்துவ பெருமக்கள் கூட, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவான நிலையை எடுத்து இருக்கிறார்கள். மேலும், தமிழ்நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மையின மக்களின் ஒரே தேர்வாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இருந்து வருகிறது.
எனவே, தற்போது தமிழ்நாட்டில் மக்களிடையே உருவாகியுள்ள புதிய எழுச்சி, தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடர வழிவகை செய்து, ஒன்றியத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற உறுதியுடன் போராடும் ஒரு நல்ல ஆட்சியை அமைக்க துணை நிற்கும் என்று உறுதியாக கூறலாம்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா:
" ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் "
தமிழ்நாடு முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முழக்கம்.....!
தமிழக வாக்காளர்களை கவர்ந்த அரசியல் முழக்கம்....!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, களம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் வரும் 21ஆம் தேதி நிறைவுபெற்று, 23ஆம் தேதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் ஒரு முழக்கம் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த முழக்கம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்று சேர்ந்திருக்கிறது.
"ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்பது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுகவால் முன்வைக்கப்பட்ட முக்கிய முழக்கமாகும். 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இந்த முழக்கம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முழக்கத்தை மையமாக வைத்து "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற அதிகாரப்பூர்வ பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
"வெல்வோம் 200" அதாவது 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை நோக்கி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும் என்பதை இந்த முழக்கம் குறிக்கின்றது. ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் திமுகவின் சார்பில் பல்வேறு மாநாடுகள், பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் சமூக ஊடக பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முழக்கத்தின் கீழ், கல்வி, சமூக நீதி, மற்றும் மாநில உரிமைகள் போன்ற பிரச்சனைகளை முன்னிறுத்தி, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசைக் கடுமையாக விமர்சித்து, "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற பிரச்சாரத்தையும் திமுக முன்னெடுத்து வருகிறது. சுருக்கமாகச் சொன்னால், "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்பது 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை வலியுறுத்தும் ஒரு முக்கிய அரசியல் முழக்கமாகும்.
தமிழ்நாடு முழுவதும் ஒலிக்கும் முழக்கம் :
"ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற இந்த முழக்கத்தின் முக்கிய அம்சங்களாக திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மகளிர் நலன், மாணவ மாணவியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவை இருந்து வருகின்றன.
சரி, "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற முழக்கம் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இதுகுறித்து பெண்கள், மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரை நாம் நேரில் சந்தித்து கருத்துகளை சேகரித்தோம். அவர்களில் பெரும்பாலானவர்கள், தற்போதைய திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டில் தொடர வேண்டும் என தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்., தமிழ்ப்புதல்வன் உதவித் தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும்., மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆயிரத்து 500-இல் இருந்து 2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படும்., நலவாரியங்கள் ஓய்வூதியம் ஆயிரத்து 200 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்ற திமுகவின் அறிவிப்புகள் ஏழை, மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
இதேபோன்று, கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் ஆயிரத்து 200 ரூபாயில் இருந்து, 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்., புதுமைப்பெண் திட்டம் நிதியுதவி ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும்., முதியோர் உதவித்தொகை ஆயிரத்து 200 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்., நெல்கொள்முதல் 2 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகள் தமிழக வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன என்றே கூற வேண்டும். இதன் காரணமாக "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற முழக்கம் தமிழ்நாடு முழுவதும் தற்போது ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
வாக்காளர்களின் கருத்து :
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்காளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்தோம். அதற்காக, மக்கள் அதிகம் கூடும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், தேநீர் விடுதிகள், ஓட்டல்கள் நடைபாதைகள் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும்போது, அங்கு மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை காதுகொடுத்து கொஞ்சம் கேட்டோம். அப்போது அவர்களின் விருப்பமாக திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் தொடர வேண்டும் என்பதாக இருந்தது.
* இந்த தேர்தலில் நிச்சயம் திமுக தான் ஜெயிக்கும்.,
* மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார்.
* நாங்கள் அனைவரும் திமுக கூட்டணிக்கு தான் வாக்கு போடுவோம்.
* திமுக கூட்டணி தான் வலிமையான கூட்டணியாக உள்ளது.
* தமிழ்நாட்டின் நலனில் உண்மையான அக்கறை கொண்டு கூட்டணியாக திமுக கூட்டணி உள்ளது.
* தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும்.
* அதிமுக தற்போது மறைந்த அம்மையார் ஜெயலலிதா காலத்தில் இருந்த அதிமுகவாக இல்லை. பாஜகவின் அடிமைக்கட்சியாக அதிமுக மாறிவிட்டது.
* வடநாட்டில் ஏற்பட்டுள்ள நிலையை போன்று தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது.
* வட நாட்டில் பல கட்சிகளை ஒன்றும் இல்லாத கட்சிகளாக பாஜக மாற்றிவிட்டது. அதேபோன்ற ஒரு நிலைமைய அதிமுகவிற்கு நிச்சயம் வரும்.
* தமிழ்நாட்டில் நிலவும் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க சதி நடைபெறுகிறது. அதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
* திமுக குறித்து ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டின் நலன், தமிழர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நாம் திமுகவிற்கு தான் வாக்களிக்க வேண்டும்.
இப்படி சாதாரண தொழிலாளி முதல் அனைத்துத் தரப்பு மக்களும் பேசிக் கொள்வது நமது காதுகளில் விழுந்தது.
ஒருசிலர் மட்டுமே, திமுக கூட்டணியை விமர்சனம் செய்தனர். பெரும்பாலானவர்கள், திமுக கூட்டணி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்று புகழாரம் சூட்டினார்கள்.
மக்களின் எண்ணங்கள் வாக்குகளாக மாறும் :
இதன்மூலம், தமிழக வாக்காளர்களில் பெரும்பாலானோர் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை விரும்புகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக தெரியவருகிறது. தமிழக மக்களின் உள்ளங்களில் ஓங்கி ஒலிக்கும் "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற முழக்கம் தேர்தல் நாளான ஏப்ரல் 23ஆம் தேதி திமுக கூட்டணிக்கு ஆதரவான வாக்குகளாக மாறும் என்பது உறுதி. கடந்த பல தேர்தல்களில் ஆளும் கட்சிக்கு எதிரான ஒரு மனநிலை மக்கள் மத்தியில் இருப்பதை காண முடிந்தது. ஆனால், 2026ஆம் நடக்கும் இந்த தேர்தலில் அப்படியொரு மனநிலை மக்கள் மத்தியில் இல்லை.
அதுவே, கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியின் மிகப்பெரிய பலமாகும். திமுக ஆட்சியின் சாதனையாகும். பல்வேறு சவால்களை சந்தித்து தமிழக மக்களின் உரிமைக்காக போராடும் திமுக, தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலிலும் சவால்களை முறியடித்து, மிகப்பெரிய வரலாற்று வெற்றியை நிச்சயம் பெறும் என்று உறுதியாக கூறலாம். மே 4ஆம் தேதி அன்று வெளியாகும் தேர்தல் முடிவுகள், திமுக கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்யும். அதன்மூலம் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், இந்திய அரசியலுக்கும் புதிய அரசியல் நெறிகளை உருவாக்கி அரசியல் ஆர்வலர்களை வியக்க வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட தங்க சாலை பகுதியில் துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேகர் பாபு , பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தார்.
பகுதியில் இளைஞர்களுடன் அவர் கேரம் விளையாடி நூதன முறையில் வாக்குகளை சேகரித்தது குறிப்பிடத்தக்கது.
பயணம் இன்றி
வாழ்க்கையும் இல்லை.
பணம் இன்றி
உறவுகளும் இல்லை.
உறவுகளுக்காக
பணத்தை செலவழிப்பது
ஒருவகையில் முதலீடாகும்.
முதலீடு செய்ய ஒருபோதும்
தயங்காதீர்கள். அதன்மூலம்
உறவுகளை நல்ல முறையில்
பேணுங்கள்.