Sunday, May 3, 2026

கேரளாவில் புதிய அரசு - முக்கிய பங்காற்றும்இந்திய யூனியன் முஸ்லிம் லீக்....!

கேரளாவில் புதிய அரசு அமைப்பதில்  முக்கிய பங்காற்றும்இந்திய யூனியன் முஸ்லிம் லீக்....!

கேரள மாநில தலைவர் பானக்காடு சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் மூத்த நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை...!! 

கோழிக்கோடு, மே.03- கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 04.05.2026 அன்று வெளியாகும் நிலையில், புதிய அரசு அமைப்பது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக் குட்டி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் கேரள மாநில தலைவர் பானக்காடு சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

140 தொகுதிகளை கொண்டு கேரள சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 04.05.2026 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதேபோன்று தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளும் 04.05.2026 அன்று வெளியாக இருப்பதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 

இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர்கள் ஆலோசனை :

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கேரளாவில் புதிய ‘அரசு அமைப்பு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முக்கிய அங்கமாக உள்ள இ.யூ.முஸ்லிம் லீக், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட இ.யூ.முஸ்லிம் லீக், 20 முதல் 22 தொகுதிகளை கைப்பற்றும் என நம்பிக்கையுடன் இருந்து வருகிறது. 

மேலும், நடந்த முடிந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தல் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, கேரளாவில் அரசியல் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்த தேர்தலில் ஐக்கிய ஜனநயாக முன்னணி ஆட்சியை கைப்பற்றினால், மாநிலத்தின் அடுத்த முதல்வர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் யாரை தேர்வு செய்வது என்பது குறித்து இ.யூ.முஸ்லிம் லீக் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல்வர் பதவிக்கு போட்டி :

தேர்தல் முடிவுகள் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு சாதகமாக இருப்பதால், காங்கிரஸ் கட்சியில் பலர் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட ஆர்வத்துடன் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், இ.யூ.முஸ்லிம் லீக் எடுக்கும் முக்கிய முடிவு, கேரளாவில் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை தீர்மானிக்கும். 

எனினும், கேரள மக்களின் எண்ணங்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனைகளை ஏற்றுதான், கேரளாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை இ.யூ.முஸ்லிம் லீக் தீர்மானிக்கும் என தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக் குட்டி தெரிவித்துள்ளார். கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கேரளாவில் அடுத்த காங்கிரஸ் முதலமைச்சர் வி.டி.சதீசன் தேர்வு செய்யப்படுவார் என தெரிவித்து வரும் நிலையில், அதுகுறித்து கருத்து கூறியுள்ள கேரள மாநில இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் பானக்காடு சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள், முதலமைச்சர் தேர்வு விவகாரத்தில் இ.யூ.முஸ்லிம் லீகின் தேசிய தலைமை முக்கிய முடிவு எடுக்கும் என்றும், கேரள மக்களின் விருப்பங்களின்படி முதலமைச்சர் தேர்வு அமையும் என்றும் தெரிவித்துள்ளார். 

இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் நிலையில், ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முக்கிய அங்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எச்சரிக்கையுடன் காத்திருந்து கவனிக்கும் அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது. கூட்டணியின் நிலைத்தன்மைக்கு முஸ்லிம் லீக்கின் மையத்துவத்தை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதால், வரவிருக்கும் நாட்களில் அதன் நிலைப்பாடு முக்கியமானதாகிறது. இதன்மூலம் கேரளாவில்  ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைமைத் தேர்வுகள் மற்றும் கூட்டணியின் நிலைத்தன்மையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் செல்வாக்கு அதன் முக்கியப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுவது உறுதியாக தெரியவருகிறது. 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

முஃப்தி படிப்பில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை....!

முஃப்தி படிப்பில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை....! 

ஆற்காடு ஹஸ்ரத் நவாஸ் ஷெரீப் ஜமாலிக்கு குவியும் பாராட்டுகள்....!!

- ஓர் சிறப்பு நேர்காணல் -

தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு நகரம், வரலாற்று ரீதியாக புகழ்பெற்ற நகரம் மட்டுமல்ல, பிரியாணி உணவுக்கும் மிகவும் பிரபலமானது.  குறிப்பிடத்தக்க அளவுக்கு இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இந்த புகழ்பெற்ற நகரத்தில், மார்க்கக் கல்வியை போதிக்கும் மதரஸாக்கள் ஏராளமாக உள்ளன. அதன்படி ஆற்காடு தாஜ்பூரில் உள்ள தாருல் உலூம் சிப்கத்துல்லாஹ் (Darul Uloom Sibghatullah) என்ற பெயரில் செயல்படும் மதரஸா இஸ்லாமிய மாணவர்களுக்கு சிறப்பான மார்க்கக் கல்வியை போதித்து வருகிறது. இந்த மதரஸாவின் முதல்வராக மிகவும் திறம்பட செயல்பட்டு வரும் ஹஜ்ரத் நவாஸ் ஷெரீப் ஜமாலி, மார்க்கக் கல்வியை பெறுவதில் தேசிய அளவில் புதிய சாதனை புரிந்துள்ளார். 

ஆம், மிகவும் கடினமான முஃப்தி படிப்பில் சேர்ந்து சிறப்பாக தேர்ச்சிபெற்று, தேசிய அவளவில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்த ஹஜ்ரத் நவாஸ் ஷெரீப், 33 வயது இளைஞர் ஆவார். இவருடைய தந்தையார் காசீம் ஷெரீப், ஆற்காடு மக்களால் பாபா ஹஜ்ரத் என்று அன்பாக அழைக்கப்பட்டு வருகிறார். ஒரு சாதாரண, எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, மார்க்கக் கல்வியில் நாட்டம் கொண்டு, தற்போது முஃப்தி படிப்பில் தேர்ச்சிபெற்று பட்டம் பெற்றுள்ள சாதனையாளர் குறித்து மணிச்சுடர் வாசர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என விரும்பினோம். அதன்மூலம், இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் மார்க்கக் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், அந்த கல்வியின் மூலம் கிடைக்கும் பலன்கள், அமைதி, மகிழ்ச்சி ஆகியவை குறித்தும் நமது சமுதாய இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், சாதனை ஹஜ்ரத் நவாஸ் ஷெரீப் ஜமாலியை தொடர்பு கொண்டு சிறப்பு நேர்காணல் ஒன்றை நடத்தினார். அந்த நேர்காணலின் முழு விவரம் இதோ :

தந்தை அளித்த ஊக்கம் :

எனது சொந்த ஊரான ஆற்காட்டில் அரசு பள்ளியில் நான் ஐந்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, வழக்கம் போல மக்தப் மதரஸாவுக்கு நாள்தோறும்  சென்று மார்க்கக் கல்வியை கற்று வந்தேன். அப்போது என்னிடம்  நினைவாற்றல் சக்தி அதிகம் இருப்பதை அறிந்துகொண்ட மக்தப் மதரஸா ஹஜரத் ஜைனுல் ஆபிதீன் அவர்கள், என் தந்தை காசீம் ஷெரீப் அவர்களிடம், உங்கள் மகனுக்கு நினைவாற்றல் சக்தி அதிகமாக இருக்கிறது. எனவே, அவனுக்கு ஹாபிஸ் படிப்பில் சேர்த்துவிடுங்கள். மிகச் சிறந்த ஹாபிஸாக நிச்சயம் வருவார் என்று பரிந்துரை செய்தார். ஹாபிஸ் (Hafiz) என்பது புனித குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்த ஒருவரைக் குறிக்கும். இந்த படிப்பில் சேர்வது என்பது ஒரு நீண்ட, ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் கடினமான பயணமாகும். ஹஜரத் ஜைனுல் ஆபிதீன் அவர்களின் பரிந்துரையை ஏற்று என்னுடைய தந்தை எனக்கு ஹாபிஸ் படிப்பில் சேர்த்துவிட்டு, நல்ல ஊக்கம் அளித்து என்னை உற்சாகப்படுத்தினார். 

நானும் ஏக இறைவன் எனக்கு கொடுத்த நினைவாற்றல் என்ற சக்தியை நன்கு பயன்படுத்தி, மூன்று ஆண்டுகள் கடினமாக படித்து புனித குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்து ஹாபிஸ் பட்டம் பெற்றேன். அதைத் தொடர்ந்து ஆலிம் படிப்பு 8 ஆண்டுகள், பாஃசில் படிப்பு இரண்டு ஆண்டுகள், காமில் ஓர் ஆண்டு என என்னுடைய கல்வி வாழ்க்கை முழுவதையும் மார்க்கக் கல்வியிலேயே செலவழித்து இஸ்லாமிய கல்வியை நன்கு பெற்றேன். 

மதரஸாவில் முதல்வர் :

பின்னர் ஆற்காடு தாஜ்பூரில் உள்ள தாருல் உலூம் சிப்கத்துல்லாஹ் (Darul Uloom Sibghatullah) என்ற பெயரில் செயல்படும் மதரஸாவில் முதல்வராக சேர்ந்து, மாணவர்களுக்கு மிகச் சிறந்தமுறையில் மார்க்கக் கல்வியை சொல்லித்தந்துகொண்டிருக்கிறேன். இப்படி, மதரஸாவில் முதல்வராக பணிபுரிந்துகொண்டு இருக்கும்போது, இஸ்லாமிய சட்டம் குறித்தும், மார்க்கத்தில் அவ்வவ்போது எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும், பலர் என்னிடம் அடிக்கடி சந்தேகம் கேட்பார்கள். 

நான் ஆலிம், பாஃசில், காமில் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்று இருந்தாலும், இஸ்லாமிய சட்ட நுணுக்களில் மிகப்பெரிய அளவுக்கு அறிவு ஞானத்தைப் பெறவில்லை. எனவே, இஸ்லாமியர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கும், அவர்கள் எழுப்பும் வினாக்களுக்கு நல்ல விளக்கம் அளிக்க வேண்டும் என்ற ஆர்வம் என் உள்ளத்தில் பிறந்தது. எனவே நான் மதரஸாவில் முதல்வராக பணிபுரிந்துகொண்டே, ஆன்லைன் மூலம், முஃப்தி படிப்பில் சேர முடிவு செய்தேன். இந்த படிப்பு  5 ஆண்டுகள் தொடர்ந்து படிக்க வேண்டிய படிப்பாகும். 

தேசிய அளவில் சிறந்த நிறுவனம் :

அதன்படி தேசிய அளவில் சிறந்த விளங்கும், கல்வி நிறுவனத்தில் சேர முடிவு செய்தேன். தேசிய அளவில் புகழ்பெற்ற நிறுவனம் உத்தரப் பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஹோஜாகஞ்ச் பகுதியில் இருக்கும் மர்கஸ் -இ -தர்பியாத் - இ - இப்தாவில் சேர்ந்தேன்.  முஃப்தி படிப்பில் இங்கு சேர வேண்டுமானால் கட்டாயம் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள். இந்த நுழைவுத் தேர்வு என்பது சாதாரண நுழைவுத் தேர்வு கிடையாது. இஸ்லாமிய அறிவை சோதிக்கும் தேர்வாகும். 

இப்படி தேசிய அளவில் நடைபெற்ற தேர்வில் தமிழகத்தில் இருந்து நான் ஒருவன் மட்டுமே தேர்வு செய்யப்பட்டேன். இதேபோன்று அசாம் மாநிலத்தில் இருந்து ஒருவரும், உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஒருவரும், குஜராத் மாநிலத்தில் இருந்து இரண்டு பேர் என மொத்தம் 7 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். ஆக மொத்தம் ஏழு பேரும், முஃப்தி படிப்பில் சேர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் கல்வி கற்றுவந்தோம். ஒவ்வொரு ஆண்டும், நேரில் சென்று தேர்வு எழுதுவதுடன் மார்க்க அறிஞர்களுடன் கலந்துரையாடல் செய்ய வேண்டும். படிப்பு மிகவும் கடினமாக இருக்கும் காரணத்தினால் இடையில் 2 பேர் படிப்பை நிறுத்திவிட்டனர். எனவே மொத்தம் ஐந்து பேர் தொடர்ந்து படிப்பில் ஆர்வம் செலுத்தி தேர்வு எழுதினோம். நாங்கள் எழுதிய தேர்வில் தேசிய அளவில் நான் முதலிடம் பிடித்து தேர்ச்சி பெற்றேன். 

பத்வாக்கள் குறித்த தேர்வு :

பத்வா என்பது இஸ்லாமியச் சட்டவியலில் (பிக்ஹ்) ஒரு குறிப்பிட்ட மத விவகாரம் அல்லது சட்டச் சிக்கல் குறித்து கேட்கப்படும் கேள்விக்கு, தகுதிவாய்ந்த மார்க்க அறிஞர் முப்தீ வழங்கும் மார்க்கத் தீர்ப்பு ஆகும். இது மார்க்கத்தின் பார்வையில் ஒரு செயலின் நிலை என்ன என்பதை விளக்கும் வழிகாட்டுதலாகும். இது மத அனுசரிப்பு, நிதி பரிவர்த்தனைகள், தனிப்பட்ட நடத்தை போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது. எனவே முஃப்தி படிப்பில் எங்களுக்கு பல்வேறு தலைப்புகளில் பத்வா வழங்குவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. குர்ஆன் மற்றும் சுன்னாவில் அடிப்படையில் தீர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட, பத்வா குறித்த நுணுக்கங்கள் சொல்லி தரப்பட்டன. அதன்படி, என்னுடைய படிப்பு காலத்தில் மொத்தம் 650 பத்வாக்களை நான் எழுதி இருக்கிறேன். 

                                                    ====================

"முஃப்தி படிப்புக்காக தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள். இந்த நுழைவுத் தேர்வு என்பது சாதாரண நுழைவுத் தேர்வு கிடையாது. இஸ்லாமிய அறிவை சோதிக்கும் தேர்வாகும். இதில் தேர்ச்சிபெற்று, கல்வி பயின்று,பின்னர் தேசிய அளவில் நடந்த தேர்வில் முதலிடம் பிடித்து ஹஸ்ரத் நவாஸ் ஷெரீப் ஜமாலி  சாதனை புரிந்துள்ளார்"

                                                    ====================

இந்த பத்வாக்கள் அனைத்தும் இந்தியாவின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர் முஃப்தி அப்ரார் அகமது அம்ஜிதி அவர்கள் ஆய்வு செய்தார். மேலும் மற்றொரு மார்க்க அறிஞர் முஃப்தி நிஜாமுத்தீன் ஹஜரத் அவர்களும் நாங்கள் எழுதிய பத்வாக்களை ஆய்வு செய்து பல்வேறு விளக்கங்களை எங்களுக்குச் சொல்லித் தந்தார்கள். 

நான் எழுதிய பத்வாக்களில் ஒன்றை மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நகைக் கடைகளில் மாதம் தோறும் ஒரு சிறிய தொகையை சேமித்து, அதன்மூலம் நகையை வாங்கலாமா என்ற கேள்வி எங்கள் முன் வைக்கப்பட்டது. இப்படி சேமிக்கும் பணம் வட்டி கணக்கில் வராதா என்ற சந்தேகமும் எழுந்தது. அதற்கு நான் கொடுத்த பத்வா விளக்கம், நாம் சேமிக்கும் பணத்தின் மதிப்பிற்கு மட்டுமே நகை கொடுக்கப்படுகிறது. வட்டியை சேர்த்து நகை நமக்கு கொடுக்கப்படுவதில்லை. மேலும், நாம் சேமிக்கும் பணத்தின் மதிப்பை விட குறைவாகவே நகையின் மதிப்பு நமக்கு கிடைக்கிறது. எனவே மாதம் தோறும் நகைக் கடைகளில் பணத்தை சேமித்து நகை வாங்குவது தப்பு இல்லை என்று நான் விளக்கம் அளித்தேன். என்னுடைய இந்த விளக்கத்தை ஜெய்பூரின் காசி முஃப்தி குப்ரான் அம்ஜதி சாஹிப் உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும் ஏற்றுக் கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. 

கல்வியில் ஆர்வம் :

ஐந்தாவது வகுப்புடன் உலகக் கல்வியை நிறுத்திவிட்டு, மார்க்கக் கல்வியில் சேர்ந்த நான் பின்னர், 10வது வகுப்பு, 12ஆம் வகுப்பு ஆகிய தேர்வுகளை தனியாக படித்து தேர்ச்சி பெற்றேன். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. அரபிக் படிப்பு முடித்தேன். அத்துடன் அஃப்ஜலுல்-உலமா (Afzal-ul-Ulama) உயர்கல்வி பட்டப்படிப்யை நன்கு படித்து தேர்ச்சி பெற்றேன். 

எனக்கு தமிழ், உர்தூ, அரபி, ஆங்கிலம் என பல மொழிகளில் நன்கு புலமை உண்டு. அதன் காரணமாக பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைக்கிறது. அதனை நான் நன்கு பயன்படுத்திக் கொண்டு இஸ்லாமிய நெறிறை சமுதாயம் முன்பு மிகச் சிறந்த முறையில் சமர்ப்பித்து வருகிறேன். 

முஃப்தி படிப்பு தேர்ச்சி பெற்றபிறகு, என்னுள் ஒரு புதிய எழுச்சி உருவாகியுள்ளது. இஸ்லாமிய பார்வை விரிவடைந்துள்ளது. மனம் அமைதியை விரும்புகிறது. இஸ்லாமிய மார்க்கம் குறித்த தெளிவு பிரகாசம் அடைந்துள்ளது. அற்புதமான இஸ்லாமிய நெறிமுறைகளை வாழ்க்கையில் கடைப்பிடித்தால், மிகச் சிறந்த வாழ்க்கை சமுதாயம் பெற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. என்னுடைய இந்த வளர்ச்சி நிலைக்கு ஏக இறைவனுக்கும் என்னுடைய குடும்பத்தாருக்கும் எனக்கு வழிக்காட்டிய மார்க்க அறிஞர்களுக்கும் நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு,ஹஸ்ரத் நவாஸ் ஷெரீப் ஜமாலி தம்முடைய முஃப்தி படிப்பு குறித்தும் தாம் பயணித்த மார்க்கக் கல்வி  பயணம் குறித்தும் விளக்கம் அளித்தார். முஃப்தி படிப்பில் தேசிய அளவில் சாதனை புரிந்து அவருக்கு மணிச்சுடர் சார்பாக நாம் வாழ்த்து கூறினோம். மேலும், மார்க்கப் பணியில் ஹஸ்ரத் நவாஸ் ஷெரீப் ஜமாலி மேன்மேலும் சாதனைகள் புரிய துஆ செய்துவிட்டு விடைப்பெற்றோம்.  

- சந்திப்பு : சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Saturday, May 2, 2026

வீழ்ச்சியை நோக்கி...!

 இன்று உலக பத்திரிகை சுதந்திர நாள்....!

 ஊடக சொந்தங்கள் அனைவருக்கும் உலக பத்திரிகை சுதந்திர நாள் வாழ்த்துகள்.....!

பத்திரிகை சுதந்திரம் உண்டா என கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது..!

வேதனையான ஒரு விஷயம், ஊடகத்துறை தரத்தில் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.



Everyone....!

Everyone may not be nice. 

But there is something nice in everyone. 

Never keep a fixed image for anyone,

 because people act differently 

with different people.




அன்பாய்....!

அன்பாய் இருந்தால் ஏமாளி.

உண்மையாக இருந்தால் முட்டாள். 

நடித்தால் மட்டுமே நல்லவன். 

இது தற்போதைய உலகின்

இயல்பாக மாறிவிட்டது.

அதற்காக யாரிடமும் 

நடிக்க வேண்டாம்.  

எப்போதும் நீங்கள் 

நீங்களாகவே இருங்கள். 

மன அமைதி கிடைக்கும்.



அறிவிப்பு....!

TN Traders union invites CM Stalin for its state conference on May 5, says 'will protest if union govt doesn't roll back LPG price hike'.



Kerela New CM

 "Kerala exit polls suggest VD Satheesan is the most popular Congress CM face; hope party respects public opinion."

- Muslim League Kerala President Syed Sadiq Ali Shihab Thangal