சென்னையில் மழை....!
கடும் வெயிலுக்கு மத்தியில் சென்னையில் பரவலாக மழை...!
மழை அழகு...!
அழகோ....அழகு....மழை அழகு....!
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
சென்னையில் மழை....!
கடும் வெயிலுக்கு மத்தியில் சென்னையில் பரவலாக மழை...!
மழை அழகு...!
அழகோ....அழகு....மழை அழகு....!
மகிழ்ச்சியான தருணம்...!
என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' ஆகிய இரண்டு நூல்களை, புகழ்பெற்ற ராஜ் தொலைக்காட்சி செய்திப்பிரிவு குழுவினர், விழினி, முருகானந்தம், மந்திர மூர்த்தி ஆகியோருக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.
கல்வித்துறையில் சாதிக்கும் சவூதி மாணவ மாணவியர்கள் :
அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் பங்கேற்பு....!
இஸ்லாம் ஆண்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கி மிகப்பெரிய அளவுக்கு பெருமைப்படுத்தியுள்ளது. கல்வி பெறும் உரிமை, தொழில் செய்யும் உரிமை, வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் உரிமை என பல்வேறு உரிமைகளை பெண்களுக்கு இஸ்லாம் வழங்கி கவுரவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது இஸ்லாமிய பெண்கள் பல்வேறு துறைகளில் சாதிக்க தொடங்கியுள்ளார்கள்.
அந்த வகையில் இஸ்லாமிய நாடுகளிலும் பெண்களின் வளர்ச்சி உலகம் வியக்கும் வகையில் இருந்து வருகிறது. குறிப்பாக, சவூதி அரேபியா உள்ளிட்ட மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த இஸ்லாமிய நாடுகளில், தற்போது பெண்கள் கல்வி உள்ளிட்ட துறைகளில் அதிக ஆர்வம் செலுத்தி, தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இஸ்லாமிய பெண்களின் திறமைகள் அனைத்தும் மிகவும் வியக்கும் வகையில் இருந்து வருகிறது.
சர்வதேச அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பு :
கல்வி உள்ளிட்ட துறைகளில் சாதிக்கும் இஸ்லாமிய ஆண்கள் பெண்கள், சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளில் கண்காட்சிகளிலும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், அமெரிக்காவில், அரிசோனா மாநிலத்தின் ஃபீனிக்ஸ் நகரில், மே 9 முதல் 15 வரை நடைபெறவுள்ள 'Regeneron சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி 2026' (ISEF 2026) போட்டியில் பங்கேற்பதற்காக, சவூதி அரேபியாவின் தேசிய அறிவியல் மற்றும் பொறியியல் குழு 08.05.2026 வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவிற்குப் புறப்பட்டது.
இப்போட்டியில் சவூதி அரேபிய இராச்சியம், 'கிங் அப்துல்அஜிஸ் மற்றும் அவரது தோழர்கள் அறக்கட்டளை' மற்றும் கல்வி அமைச்சகம் ஆகியவற்றின் வாயிலாகப் பங்கேற்கிறது. பல்கலைக்கழகப் படிப்புக்கு முந்தைய நிலையில் உள்ள மாணவர்களுக்கான உலகின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியாகக் கருதப்படும் இப்போட்டியில், சுமார் 70 நாடுகளிலிருந்து ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
185 விருதுகளை வென்ற சவூதி அரேபியா :
சவூதி அரேபியா 2007-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் இப்போட்டியில் பங்கேற்று வருகிறது. இதுவரை 124 முக்கிய விருதுகள் மற்றும் 61 சிறப்பு விருதுகள் உட்பட மொத்தம் 185 விருதுகளை வென்றுள்ளது. சவூதி தூதுக்குழுவில், பல்வேறு நம்பிக்கைக்குரிய அறிவியல் துறைகளில் புதுமையான திட்டங்களை முன்வைக்கவுள்ள 42 மாணவ, மாணவியர் இடம்பெற்றுள்ளனர். இப்போட்டியாளர்கள், "Ibdaa 2026" எனும் 'தேசிய அறிவியல் படைப்பாற்றல் ஒலிம்பியாட்' போட்டியில் வெற்றி பெற்றவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர்.
இப்போட்டியின் பல்வேறு கட்டங்களில், 22 துறைகளின் கீழ் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் திட்டங்களைச் சமர்ப்பித்த 3 லட்சத்து 57 ஆயிரத்திற்கும் அதிகமான பங்கேற்பாளர்களிலிருந்து, இந்த மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
தேர்ந்தெடுக்கும் செயல்முறை :
இம்மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையானது, ஆறு மதிப்பீட்டுக் கட்டங்கள், 16 மண்டல அளவிலான கண்காட்சிகள், நான்கு மைய அளவிலான கண்காட்சிகள் மற்றும் 'மிஷ்காத் ஊடாடல் மையத்தில்' (Mishkat Interactive Center) நடைபெற்ற தீவிரத் தகுதிப் பயிற்சித் திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.
மேலும், "Ibdaa 2026" போட்டியின் வாயிலாக 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை ஆவணப்படுத்தியதன் மூலம், உலகின் மிகப்பெரிய 'புதுமையான தீர்வுகள் போட்டி' என்ற கின்னஸ் உலக சாதனையை 'Mawhiba' அமைப்பு எட்டியுள்ளது.
===================
"அமெரிக்காவில், அரிசோனா மாநிலத்தின் ஃபீனிக்ஸ் நகரில், மே 9 முதல் 15 வரை நடைபெறவுள்ள சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி 2026 போட்டியில் , சவூதி அரேபியாவின் தேசிய அறிவியல் மற்றும் பொறியியல் குழு பங்கேற்கிறது. சவூதி குழுவில் புதுமையான திட்டங்களை முன்வைக்கவுள்ள 42 மாணவ, மாணவியர் இடம்பெற்றுள்ளனர்"
===================
சவூதி இராச்சியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இம்மாணவர்கள், இந்த சர்வதேசப் போட்டிக்குத் தயாராகும் வகையில், தங்கள் ஆராய்ச்சி, திட்ட விளக்கக்காட்சி மற்றும் அறிவியல் சார்ந்த தகவல் தொடர்புத் திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஓராண்டு காலப் பயிற்சித் திட்டங்களில் ஈடுபட்டனர்.
ISEF போட்டியில் சமர்ப்பிக்கப்படும் திட்டங்கள், உலகின் முன்னணி அறிவியல் அறிஞர்கள் மற்றும் நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இது மாணவர்களுக்குத் தங்கள் புதுமையான சிந்தனைகளையும் அறிவியல் திறன்களையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு உலகளாவிய மேடையை அமைத்துத் தருகிறது.
சாதிக்கும் சவூதி மாணவ மாணவியர்கள் :
சவூதி அரேபியாவின் மாணவ மாணவியர்கள், உள்நாட்டில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் சாதிக்க தொடங்கி இருப்பது, இஸ்லாமிய உலகில் புதிய எழுச்சியை உருவாக்கி வருவதை காட்டுகிறது. குறிப்பாக, உயர்கல்வித்துறையில், இஸ்லாமிய மாணவ மாணவியர்கள், சர்வதேச அளவில் சாதனை புரிந்து விருதுகளை அள்ளி வருவது மிகப்பெரிய அளவுக்கு சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாம் உலகின் நன்மைக்காக கல்வி, கணிதம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல பங்களிப்புகளை அளித்து இருப்பது வரலாறாகும். ஆனால் இந்த வரலாறுகள் தற்போது மறைக்கப்பட்டு வருகின்றன. இஸ்லாம் எதுவும் செய்யவில்லை என்ற பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், சர்வதேச அளவில் நடைபெறும் கண்காட்சி மற்றும் போட்டிகளில் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, சாதனை புரிந்துவருவது இஸ்லாத்திற்கு கிடைத்த பெருமை என்றே கூற வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
தமிழகத்தில் ஆட்சி அமைக்க த.வெ.க.விற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருபோதும் ஆதரவு அளிக்கவில்லை....!
புதியஅரசு அமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் எழுதிய கடிதம் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது...!!
தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி...!!!
சென்னை, மே.09- தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எந்த ஆதரவு கடிதமும் அளிக்கவில்லை என்று தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகதீன் திட்டவட்டமாக உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை 08.05.2026 சனிக்கிழமை இரவு 8 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் தலைமையில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஏ. எம். ஷாஜஹான், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பி. சையது பாரூக், மாநில பொதுச்செயலாளர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர், மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்கிறது என்று அவர்கள் உறுதி அளித்தார்கள்.
பின்னர் இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
திமுகவுடன் உறுதியான கூட்டணி :
கேள்வி : த.வெ.க.விற்கு இ.யூ.முஸ்லிம் லீக் ஆதரவு வழங்கி கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
பதில் : த.வெ.க.விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக நாங்கள் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. கடிதமும் எழுதவில்லை. இந்திய யூனியன்முஸ்லிம் லீகை பொருத்தரவரை ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில்அங்கம் வகித்து வருகிறோம். அதை நாங்கள் தொடர்ந்து என்ன சொல்லி வருகிறோம். அது என்னவென்றால், நேற்று, இன்று, நாளை எப்போதும் திமுக கூட்டணியில் இ.யூ.முஸ்லிம் லீக் இடம்பெறும் என்று வலிமையாக நாங்கள் சொல்லி வருகிறோம்.
அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் :
தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றிபெற்று எந்த கட்சி பெரும்பான்மை பலத்துடன் வருகிறதோ, அந்த கட்சியை அழைத்து அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இதுதான் தமிழ்நாட்டின் வரலாறு. அப்படி தான் பாரம்பரியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே, அந்த பராம்பரியத்தையும், ஜனநாயக நெறிமுறைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். மாநில ஆளுநர் அந்த கடமையை செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்லி இருக்கிறோம். சட்டத்தை மதித்தும், ஜனநாயகத்தை மதித்தும், இந்திய அரசிலமைப்பு சாசனத்தை மதித்தும் மற்றும் வரம்பு, விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். அந்த கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் ஆளுநருக்கு நாங்கள் கடிதமும் எழுதினோம்.
த.வெ.க.விற்கு ஆதரவு இல்லை :
ஆனால் அந்த கடிதத்தை சரியாக படிக்காமல், அல்லது அதை தவறாக புரிந்துகொண்டு, த.வெ.க.விற்கு இ.யூ.முஸ்லிம் லீக் ஆதரவு அளிப்பதாக ஊடகங்களில் பரபரப்பு செய்தியை சிலர் வெளியிட்டுள்ளார்கள். நாங்கள் மிகமிகத் தெளிவாகவே சொல்லி இருக்கிறோம். எங்களை த.வெ.க. நிர்வாகிகள் பலர் நேரில் சந்தித்து ஆதரவு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அவர்கள் அனைவரிடமும் நாங்கள் என்ன சொல்லி இருக்கிறோம் என்றால், நடந்து முடிந்த தேர்தலில் மட்டுமல்லாமல், எல்லா தேர்தலிலும், இ.யூ.முஸ்லிம் லீகை பொருத்தவரை, நாங்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நேற்றும் இருந்தோம். இன்றும் இருக்கிறோம். நாளையும் இருப்போம்.
அரசியலில் எந்த மாற்றம், திருத்தம் வந்தாலும், திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் முடிவை அறிந்து, அதற்கு ஏற்ப நாங்கள் செயல்படுவோம். இங்கு இ.யூ.முஸ்லிம் லீகின் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் வந்து இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் திமுக தலைவர் சந்தித்து, வாழ்த்து பெற்றதுடன், இ.யூ.முஸ்லிம் லீகின் அரசியல் நிலைப்பாட்டை நாங்கள் உறுதியாக தெரிவித்து வந்தோம். எங்கள் அரசியல் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று உறுதியாக கூறிக் கொள்கிறோம்.
இவ்வாறு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இ.யூ.முஸ்லிம் லீகின் அரசியல் நிலைப்பாடு குறித்து மிகத் தெளிவாக செய்தியாளர்களிடம் எடுத்துக்கூறினார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
Patience and silence are two powerful energies.
Patience makes you mentally strong.
Silence makes you emotionally strong.
வானவில்
தோன்றும் போது
வானம் அழகாகிறது.
நம்பிக்கை
தோன்றும் போது
வாழ்க்கை அழகாகிறது.
அழகான வாழ்க்கைக்கு
நம்பிக்கை மிகமிக அவசியம்.
நம்பிக்கை இருந்தால்
வானம் வசப்படும்..
அரபு மொழியை மேம்படுத்த புதிய முயற்சி :
கிங் சல்மான் உலகளாவிய அரபு மொழி அகாடமி, முஸ்லிம் உலக லீக் இடையே ஒப்பந்தம்....!
உலகம் முழுவதும் அரபு மொழியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த சவூதி அரேபியாவின் கிங் சல்மான் உலகளாவிய அரபு மொழி அகாடமி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அரபு மொழியை உலக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதன் மூலம், திருக்குர்ஆனை அரபி மொழியில் எளிமையாக படித்து புரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல், சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கும் கிடைக்கும். எனவே, கிங் சல்மான் உலகளாவிய அரபு மொழி அகாடமி , அரபு மொழியை பிரபலப்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
அந்த பணிகளில் ஒன்றாக தற்போது கல்வி, கற்பித்தல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அரபு மொழியை வலுப்படுத்துவதற்காக, கிங் சல்மான் உலகளாவிய அரபு மொழி அகாடமியும், முஸ்லிம் உலக லீக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில், அகாடமியின் சார்பில் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் இப்ராஹிம் பின் முகமது அபான்மியும், லீக்கின் சார்பில் உதவிப் பொதுச்செயலாளர் அப்துல்வஹாப் பின் முகமது அல்-ஷெஹ்ரியும் கையெழுத்திட்டனர்.
உலகெங்கிலும் அரபு மொழிக்கு சேவை :
இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முஸ்லிம் உலக லீக்கின் பொதுச்செயலாளரும், முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பின் தலைவருமான ஷேக் டாக்டர் முகமது பின் அப்துல்கரீம் அல்-இஸ்ஸா, இந்த கூட்டாண்மையில் பெருமிதம் தெரிவித்ததோடு, உலகெங்கிலும் அரபு மொழிக்கு சேவை செய்வதில் அகாடமியின் பரந்த அளவிலான பணிகளைப் பாராட்டினார்.
இதேபோன்று, கிங் சல்மான் உலகளாவிய அரபு மொழிஅகாடமியின் பொதுச்செயலாளர் டாக்டர் அப்துல்லா பின் சலே அல்-வாஷ்மியும் புதிய ஒப்பந்தம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முஸ்லிம் உலக லீக்குடனான இந்த ஒத்துழைப்பு, கூட்டுப் பணிகளை விரிவுபடுத்தவும், அரபு மொழிக் கற்பித்தலை ஆதரிக்கும் மற்றும் கல்வி மற்றும் தொழில்நுட்பச் சூழல்களில் அதன் பயன்பாட்டை எளிதாக்கும் தாக்கமிக்க மொழியியல் முயற்சிகளை உருவாக்கவும் ஒரு வாய்ப்பாகும் என்று அவர் பெருமைப்பட குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரமான திட்டங்கள் முன்னெடுப்பு :
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், நிபுணத்துவப் பரிமாற்றத்தை ஆதரித்து, உயர்தரமான திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் கூட்டுப் பணிக்கான ஒரு கட்டமைக்கப்பட்ட சட்டகத்தை நிறுவுவதன் மூலம், அரபு மொழிக்கான சேவையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதையும், கல்வி மற்றும் அறிவியல் சூழல்களில் அதன் இருப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
==================
"கல்வி, கற்பித்தல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அரபு மொழியை வலுப்படுத்துவதற்காக, கிங் சல்மான் உலகளாவிய அரபு மொழி அகாடமி. முஸ்லிம் உலக லீக் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மொழியியல் உள்ளடக்கத்தின் வளர்ச்சியை ஆதரிப்பதோடு, பல்வேறு துறைகளில் அரபு மொழியின் நிலையை வலுப்படுத்துகிறது"
==================
ஒத்துழைப்புக்கான பகுதிகள் பல முக்கியத் துறைகளை உள்ளடக்கியுள்ளன. குறிப்பாக, அரபு மொழியைக் கணினிமயமாக்குதல், எண்ணிம அகராதிகள் மற்றும் மொழியியல் தொகுப்புகளை உருவாக்குதல், தாய்மொழி அல்லாதவர்களுக்கு அரபு மொழியைக் கற்பித்தல், மொழித் திறனறித் தேர்வுகளை நடத்துதல், மற்றும் மொழியியல் சேவைகள் மற்றும் ஆலோசனைகளைப் பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கல்விக்கழகம் தனது சர்வதேச இருப்பை வலுப்படுத்தவும், அளவிடக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனக் கூட்டாண்மைகளைச் செயல்படுத்தவும் மேற்கொள்ளும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இது மொழியியல் உள்ளடக்கத்தின் வளர்ச்சியை ஆதரிப்பதோடு, பல்வேறு துறைகளில் அரபு மொழியின் நிலையை வலுப்படுத்துகிறது.
மகிழ்ச்சியான தருணம் :
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்ட நிகழ்வின்போது, ஷேக் டாக்டர் அல்-இஸ்ஸா, டாக்டர் அல்-வாஷ்மியைச் சந்தித்தார். அப்போது இருவரும் தங்களுக்குள் பரஸ்பர ஆர்வம் கொண்ட பல விடயங்கள் குறித்து விவாதித்தனர். அகாடமியின் சார்பில் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் இப்ராஹிம் பின் முகமது அபான்மியும், லீக்கின் சார்பில் உதவிப் பொதுச்செயலாளர் அப்துல்வஹாப் பின் முகமது அல்-ஷெஹ்ரியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போது முஸ்லிம் உலக லீக்கின் பொதுச்செயலாளரும், முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பின் தலைவருமான ஷேக் டாக்டர் முகமது பின் அப்துல்கரீம் அல்-இஸ்ஸா, இந்தக் கூட்டாண்மை குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்