திறமைகளை வளர்த்து,
பொறுமையினை பெருக்கி,
கோபத்தை கட்டுக்குள் வைத்து
வாழ்பவனுக்கு
எங்கும், எதிலும்
வெற்றி் நிச்சயம்.
சிந்தித்து செயல்படுவீர்.
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
திறமைகளை வளர்த்து,
பொறுமையினை பெருக்கி,
கோபத்தை கட்டுக்குள் வைத்து
வாழ்பவனுக்கு
எங்கும், எதிலும்
வெற்றி் நிச்சயம்.
சிந்தித்து செயல்படுவீர்.
காங்கிரஸ் தலைவர்
மல்லிகார்ஜுன காரகே
செய்தியாளர்கள் சந்திப்பு.
நாடாளுமன்றத்தில்
நடந்த நிகழ்வுகள்
குறித்து விளக்கம்.
So what if three women MPs were standing in front of the treasury benches?
There is no question of anybody raising any hands on the Prime Minister or hurt him. It is absolutely wrong for anyone to say that there was any such plan.
If you are going to allow your members to talk nonsense, then the opposition will protest.
The Prime Minister is hiding behind the Speaker.
Yesterday, PM Modi did not have the guts to come to the House because three women were standing in front of his bench. What nonsense is this?
Why don't you ask the government why the LoP isn't allowed to speak? Do they have any basis to stop him from quoting a published source?
priyanka gandhi ji
தனியார் நிலத்தில் அனுமதியின்றி தொழுகை, பிரார்த்தனை நடத்த
அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி....!
கிறிஸ்தவ, முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு.....!!
புதுடெல்லி, பிப்.06- தனியார் நிலத்தில் அனுமதியின் பிரார்த்தனை, தொழுகை ஆகியவற்றை நடத்தலாம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை, பல்வேறு கிறிஸ்தவ, முஸ்லிம் அமைப்புகள் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளன.
தொழுகை நடத்தியவர்கள் கைது :
பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வீடுகளில், தனியார் நிலத்தில் தொழுகை நடத்தும் முஸ்லிம்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம், உத்தரபிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மொராதாபாத்தில் ஒரு தனியார் வளாகத்தில் தொழுகை நடத்தியதற்காக 11 முஸ்லிம் ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற நடவடிக்கைகள் உத்தரப் பிரதேசம் முழுவதும் அடிக்கடி நடத்தப்பட்டு வருகிறது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு :
இத்தகைய சூழ்நிலையில், உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கையை கண்டித்து கடந்த ஜனவரி 27 ஆம் தேதி அன்று, மரநாதா ஃபுல் காஸ்பெல் மினிஸ்ட்ரீஸ் மற்றும் இம்மானுவேல் கிரேஸ் சேரிட்டபிள் டிரஸ்ட் ஆகியோரால் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சட்டப்படி அனுமதிக்கப்பட்டது :
தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களையும் விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், தனியார் வளாகங்களுக்குள் பிரார்த்தனைகளை நடத்துவது சட்டப்படி அனுமதிக்கப்பட்டது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும், பிரார்த்தனைகள் நடத்துவதற்கு முன்கூட்டியே அனுமதி பெறத் தேவையில்லை என்றும் தீர்ப்பளித்தது.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் ஸ்ரீதரன் மற்றும் நீதிபதி சித்தார்த் நந்தன் ஆகியோர் அடங்கிய ஒரு டிவிஷன் பெஞ்ச், "தனியார் சொத்தில் ஒரு மதப் பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்த அனுமதி பெறத் தேவையில்லை" என்று தீர்ப்பளித்து உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவு பிப்ரவரி 2 அன்று பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது.
கிறிஸ்தவ, முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு :
முன்கூட்டியே காவல்துறையின் அனுமதி பெறாமல், தனியார் நிலத்தில் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. இரு அமைப்புகளும் இந்தத் தீர்ப்பை வரவேற்று, இதை "சுரங்கப்பாதையின் முடிவில் ஒரு ஒளி" என்றும், "தன்னிச்சையான காவல்துறை நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு எச்சரிக்கை" என்றும் வர்ணித்துள்ளன.
இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள பிரபல கிறிஸ்தவ மற்றும் மனித உரிமை ஆர்வலரும், அகில இந்திய கிறிஸ்தவ கவுன்சில் தலைவருமான ஜான் தயாள், "உங்கள் வீட்டிற்குள் நீங்கள் என்ன செய்கிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள், எப்படி ஆடை அணிகிறீர்கள் என்பது ஒரு தனிப்பட்ட விஷயம். இதற்கு ஏன் எந்த அனுமதியும் தேவைப்பட வேண்டும்? இந்த அடிப்படை சுதந்திரத்தை மீட்டெடுக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது என்பதே, ஒரு நாடாக நாம் எந்த நிலைக்கு வந்துள்ளோம் என்பதைப் பற்றி நிறைய கூறுகிறது" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு வரவேற்பு :
தீர்ப்பை வரவேற்றுள்ள ஜமியத் உலமா இ ஹிந்த் அமைப்பின் தலைவர் மஹ்மூத் மதானி, இது அரசியலமைப்பின் 25வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மத சுதந்திரத்திற்கான உரிமையை "தெளிவாகவும் உறுதியாகவும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது" என்று விவரித்துள்ளார்.
புனித ரமளான் மாதம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும், இந்தத் தீர்ப்பின் உணர்வை மதித்து நடக்குமாறு மாநில அரசின் நிர்வாகத்தை மதானி கேட்டுக்கொண்டுள்ளார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
" சவூதி அரேபியாவில் ஒட்டக பாஸ்போர்ட் அறிமுகம் "
உலக அளவில் பொதுவாக, ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்லும்போது, பாஸ்போர்ட், விசா ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும். பாஸ்போர்ட், விசா இல்லாமல் வெளிநாடுகளுக்கு யாரும் செல்ல முடியாது. பயணிக்கவும் முடியாது. அப்படி யாராவது செல்கிறார்கள் என்றால், அவர்கள் சட்ட விதிகளுக்கு மாறாக, முறைகேடாக செல்கிறார்கள் என்பது தான் உண்மையாகும்.
இப்படி, உலகம் முழுவதும் ஒரு நிலை இருப்பதால், தற்போது மக்களிடையே வெளிநாடு மோகம் காரணமாக, பாஸ்போர்ட் எடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளுக்குச் செல்கிறார்களோ இல்லையோ, நம்மில் பலர் பாஸ்போர்ட்டை கட்டாயம் எடுத்து வைத்துக் கொள்கிறோம்.
ஒட்டக பாஸ்போர்ட்டை அறிமுகம் :
இதுபோன்ற நிலையில், சவூதி அரேபியாவில் ஒட்டக பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்னது, ஒட்டகத்திற்கு பாஸ்போர்ட்டா என நீங்கள் வியப்பு அடையலாம். ஆச்சரியத்துடன் வினா எழுப்பலாம். ஆனால், அது தான் உண்மையாகும். சவூதி அரேபியாவில் ஒட்டகத் துறையை ஒழுங்குபடுத்தவும், டிஜிட்டல் மயமாக்கவும் அந்நாட்டு அரசு ஒட்டக பாஸ்போர்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒட்டகத் துறையை ஒழுங்குபடுத்துதல், உரிமை மற்றும் அடையாளத்தை ஆவணப்படுத்துதல் மற்றும் சேவை திறன் மற்றும் சந்தை நம்பகத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய ஒழுங்குமுறை மற்றும் டிஜிட்டல் கருவியான ஒட்டக பாஸ்போர்ட் முயற்சியை சவுதி அரேபியா கடந்த 03.02.2026 செவ்வாய்க்கிழமை அன்று அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தை சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண்மை துணை அமைச்சர் மன்சூர் அல்-முஷைதி தொடங்கி வைத்தார். இந்த திட்டம், கால்நடை மற்றும் மீன்வளத் துறையின் வளர்ச்சிக்கான தேசிய திட்டத்தின் கீழ் அமைச்சகத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
முக்கிய அம்சங்கள் :
இந்த ஒட்டக பாஸ்போர்ட்டின் முக்கிய அம்சங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதன்படி, ஒட்டகத் தரவு, உரிமை, இனங்கள் மற்றும் சுகாதார பதிவுகளை ஆவணப்படுத்துவதன் மூலம் ஒட்டகத் துறைக்கான ஒழுங்குமுறை மற்றும் டிஜிட்டல் கட்டமைப்புகளை ஒன்றிணைக்க இந்த முயற்சி முயல்கிறது. மேலும், கால்நடை பதில், சந்தை வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை மேற்பார்வையை ஆதரிக்கும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட குறிப்பை உருவாக்குகிறது.
சவூதி அரசின் கூற்றுப்படி, ஒட்டக பாஸ்போர்ட் ஒரு விரிவான அடையாள ஆவணமாக செயல்படுகிறது. இதில் மைக்ரோசிப் எண், பாஸ்போர்ட் எண், ஒட்டக பெயர், பிறந்த தேதி, இனம், பாலினம், நிறம், பிறந்த இடம், வழங்கப்பட்ட தேதி மற்றும் இடம், அத்துடன் துல்லியமான அடையாள சரிபார்ப்பை உறுதி செய்வதற்காக இரு தரப்பிலிருந்தும் விலங்கின் புகைப்படங்கள் உள்ளன.
=====================
"ஒட்டகத் துறையை ஒழுங்குபடுத்துதல், உரிமை மற்றும் அடையாளத்தை ஆவணப்படுத்துதல், சேவை திறன், சந்தை நம்பகத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய ஒழுங்குமுறை மற்றும் டிஜிட்டல் கருவியான ஒட்டக பாஸ்போர்ட் முயற்சியை சவுதி அரேபியா அறிமுகப்படுத்தியுள்ளது"
=====================
பாஸ்போர்ட்டில் கால்நடை தடுப்பூசிகளை விவரிக்கும் ஒரு பிரத்யேக தடுப்பூசி பதிவேடும் அடங்கும். மேலும் கலந்துகொள்ளும் கால்நடை மருத்துவரின் பெயர், கையொப்பம் மற்றும் முத்திரையுடன் சான்றளிக்கப்பட்டது.
உரிமையாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் :
போக்குவரத்து, உரிமை பரிமாற்றங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை ஒழுங்கமைத்தல், உரிமையாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சந்தை பங்கேற்பாளர்களிடையே நம்பிக்கையை அதிகரிப்பதன் மூலம் விற்பனை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை இந்த ஒட்டக பாஸ்போர்ட் திட்ட முயற்சி ஒழுங்குபடுத்தும் என்று சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.
உள்ளூர் மற்றும் சர்வதேச ஏலங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் அதேவேளையில், சுகாதார நிலை, இனம் மற்றும் பரம்பரை போன்ற துல்லியமான தரவுகளின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வதன் மூலம் ஒட்டகங்களின் சந்தை மதிப்பை மேம்படுத்தவும் இந்த திட்டம் பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டக எண்ணிக்கை குறித்த தரவு :
கூடுதலாக, வயது, பாலினம், இனம் மற்றும் நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒட்டக எண்ணிக்கை குறித்த துல்லியமான தரவை வழங்குவதன் மூலம் மூலோபாய திட்டமிடலை இந்த திட்டம் ஆதரிக்கும். தேசிய கால்நடை விநியோகத்தை வழிநடத்தவும், மரபணு செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் உள்ளூர் இன மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் இனப்பெருக்க செயல்திறனை மேம்படுத்தவும் உதவும் என்று சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.
உங்களிடம் ஒட்டகம் இருந்தால், நீங்களும் ஒட்டக பாஸ்போர்ட் குறித்த தகவல்களை அறிந்துகொள்வது நல்லது. திடீரென சவூதி அரேபியாவிற்கு ஒட்டகம் மூலம் செல்ல நீங்கள் விரும்பினால், ஆசைப்பட்டால், உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்கள் ஒட்டகத்திற்கு பாஸ்போர்ட் கண்டிப்பாக இருக்க வேண்டும். என்ன, நான் சொல்வது சரி தானே!
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
நான் எழுதி தொகுத்த
"உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி"
நூல் அறிமுகம்...!
தோழர்கள் அமோக வரவேற்பு...!