ஓட்டு போட்டாச்சு....!
தமிழ்நாட்டில் நல்லாட்சி தொடர வாக்கு செலுத்தி விட்டேன்...!
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
வாழ்க்கை என்பது பிறப்பு மற்றும் இறப்புக்கு இடையிலான ஒரு காலமாகும். இந்த காலத்தில் நீங்களும் மகிழ்ச்சியாக இருந்து உங்களுடைய அழகிய செயல்கள் மூலம் மற்றவர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து அனுபவித்து வாழுங்கள். நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைத்து வாழுங்கள். மகிழ்ச்சி உங்களை தேடி வரும்.
கேளுங்கள்....!
தமிழ்நாட்டில் வளர்ச்சி தொடர திராவிட மாடல் ஆட்சி் மலர வாக்களியுங்கள்...!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்
அவசியம் ஓட்டு போடுங்க.
திராவிட மாடல் வளர்ச்சி வேண்டுமா?
அடிமை ஆட்சி வேண்டுமா?
சினிமா நடிகர் சீரழிவு வேண்டுமா?
என்பதை நன்கு சிந்தித்து
உங்கள் வாக்குரிமையை
பயன்படுத்துங்கள்.
தமிழ்நாட்டின் எதிர்காலம்
உங்களது நல்ல முடிவில் தான்
உள்ளது என்பதை மட்டும்
மறந்து விடாதீர்கள்.
ஓட்டு போடுவதற்கு முன்.....!
வீட்டில் எங்க குழந்தை ஆசைப்படுவதால் நாங்கள் விஜய்க்கு ஓட்டு போடுவோம் என்று சில பெற்றோர்கள் கூறுவதை காண முடிந்தது.
அப்படிப்பட்ட பெற்றோர்களிடம் ஒரு கேள்வி.
உங்கள் குழந்தை விஷம் குடிக்கச் சொன்னால் நீங்கள் குடித்து விடுவீர்களா?
இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தேர்தல். திராவிட இனத்திற்கான தேர்தல்.
டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கும் தன்மான போர்.
எனவே, திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலர துணை நிற்போம். சிந்திப்பீர்.