Wednesday, June 10, 2026

உண்மையான நட்பு...!

 உண்மையான நண்பனாக இருங்கள். 

அல்லது 

உண்மையான பகைவனாக இருங்கள். 

துரோகியாகவோ,பாதி நம்பிக்கை

 உடையவனாகவோ இருக்காதீர்கள்.

 ஒவ்வொருவரின் வாழ்க்கையில் 

நட்பு புனிதமானது என்பதை 

நினைவில் கொள்ளுங்கள்.



Tuesday, June 9, 2026

ஆட்டோ ஓட்டுநர் அல்தாஃபிற்கு பாராட்டுகள் குவிய காரணம் என்ன ?

ஆட்டோ ஓட்டுநர் அல்தாஃபிற்கு பாராட்டுகள் குவிய காரணம் என்ன ?

உலகில் மனிதநேயம் மிக்க மனிதர்கள் ஏராளமானோர் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள். பணம், பொருளுக்கு ஆசைப்படாமல், அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை மட்டுமே விரும்பும் இத்தகைய மனிதர்கள் வெளிப்படுத்தும் அழகிய செயல்கள் பலரை வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது. அத்தகைய ஒரு அற்புதமான செயல் அண்மையில் மும்பை நகரில் நடந்துள்ளது. மும்பை தொழில் அதிபருடன் ஏழை முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர் அல்தாஃப் நடந்துகொண்ட அழகிய செயல்முறை அந்த தொழில் அதிபருக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற மனிதர்கள் உலகில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்களா என்ற வியப்பும் அந்த தொழில் அதிபருக்கு ஏற்பட்டுள்ளது. 

ஹிங்லிஷ் நிறுவன அதிபரின் அனுபவம் :

'ஹிங்லிஷ்' (Hinglish) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான  சுபம் குனே என்பவர் தமக்கு ஏற்பட்ட அழகிய அனுபவம் குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவத்தை லிங்க்ட்இன் தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ள அவர், தாம் அவசரத்தில் இருந்ததால், தம்முடையத் தவறை கவனிக்காமலேயே பணப் பரிவர்த்தனையை முடித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். 

சர்வதேச வாடிக்கையாளர் ஒருவருடனான முக்கிய சந்திப்பிற்குச் செல்லும் வழியில் ஆட்டோ பயணத்திற்கான கட்டணத்தைச் செலுத்தும்போது, ​​ரூபாய் 156-க்கு பதிலாகத் தவறுதலாக ரூபாய் 15 ஆயிரத்து 682-ஐ அனுப்பிவிட்டதாக கூறியுள்ள அவர்,  பின்னர் தொழில் முறை சந்திப்பிற்குச் சென்றதாகவும், அந்தச் சந்திப்பு அவருக்கு ஏமாற்றமளிப்பதாக அமைந்தது என்றும் சுபம் குனே  தெரிவித்துள்ளார்,. அந்த சந்திப்பு முடிந்த பிறகு, மீண்டும் வந்தபோது, காலையில் தன்னை இறக்கிவிட்ட அல்தாஃப் என்ற ஆட்டோ ஓட்டுநர் அங்கேயே காத்திருப்பதைக் கண்டு அவர் ஆச்சரியம் அடைந்தார். .

அப்போது ஆட்டோ ஓட்டுநர் அல்தாஃப் அவருக்குப் பணப் பரிவர்த்தனையில் நடந்த தவறு குறித்துத் தெரிவித்தார். ஆச்சரியப்படும் விதமாக, உண்மையான கட்டணத்தை மட்டும் வைத்துக்கொண்டு மீதிப் பணத்தை மட்டும் திருப்பித் தருவதற்குப் பதிலாக, அவர் முழுத் தொகையான 15 ஆயிரத்து 682-ஐயும் சுபம் குனேவிடம் திருப்பி அளித்தார். காத்திருந்ததாலும், அதனால் வேறு வாடிக்கையாளர்களை இழந்திருக்கக்கூடும் என்பதாலும், உண்மையான கட்டணமான ரூபாய் 156-ஐயாவது ஏற்றுக்கொள்ளுமாறு சுபம் பலமுறை வற்புறுத்தினார். ஆனால்,  ஓட்டுநர் அல்தாஃப் அதை மறுத்துவிட்டு, "ஐயா, இது நம்மிருவருக்கும் நாளின் தொடக்கம்," என்று கூறியதாக சுபம் தெரிவித்துள்ளார். .

யார் இந்த அல்தாஃப் ? 

தொழில்முனைவோர் சுபம் குனே தவறுதலாக அனுப்பிய 15 ஆயிரத்து 682-ஐத் திருப்பித் தந்த மும்பை ஆட்டோ ஓட்டுநர் அல்தாஃபிற்கு  இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. ரூபாய். 156 பயணக் கட்டணத்தைச் செலுத்த முயன்றபோது குனே தவறுதலாக இந்த அதிகத் தொகையை அனுப்பியிருந்தார். அல்தாஃப் உடனடியாக அந்தப் பணத்தைத் திருப்பித் தந்ததுடன், உண்மையான பயணக் கட்டணத்தைக்கூட வாங்க மறுத்துவிட்டார். நேர்மை, நாணயம் மற்றும் அன்றாட வாழ்வில் வெளிப்படும் கருணைச் செயல்கள் குறித்த பரவலான விவாதத்தை இந்தப் பதிவு தூண்டியுள்ளது.

காலை நேரப் பரபரப்பான பயணத்தின்போது உள்ளூர் தொழில்முனைவோர் ஒருவரால் தவறுதலாக அனுப்பப்பட்ட திருப்பித் தந்த மும்பை ஆட்டோ ஓட்டுநர் அல்தாஃப், சமூக ஊடகங்களில் பரவலான பாராட்டுக்குரியவராக மாறியுள்ளார். கடினமாக அமையவிருந்த ஒரு நாளை, ஒரு சிறிய நேர்மையான செயல் எப்படி மாற்றியது என்பதை விவரிக்கும் வகையில் தொழில்முனைவோர் சுபம் குனே தனது பதிவில் இச்சம்பவத்தைப் பகிர்ந்துகொண்ட பிறகு இது வெளிச்சத்திற்கு வந்தது.

                                                =================

"தமது ஓர் அழகிய செயல் மூலம் முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர் அல்தாஃப், தொழில் அதிபர் சுபம் குனேவின் மனத்தை மட்டும் ஈர்க்கவில்லை. மாறாக, லட்சக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளார். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் அதிகரித்துவரும் நிலையில் அல்தாஃபின் அழகிய செயல்  அதற்கு பதில் அளிக்கும் வகையில் உள்ளது"

                                                =================

ஆட்டோ ஓட்டுநர் அல்தாஃப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அதிகம் பொதுவெளியில் இல்லை என்றாலும், எதிர்பாராத ஒரு வாய்ப்பு கிடைத்தபோது சுயநலத்தை விட நேர்மையைத் தேர்ந்தெடுத்த ஒரு ஓட்டுநராகவே குனே அவரைச் சித்தரிக்கிறார். அந்தத் தொழில்முனைவோரின் கூற்றுப்படி, அல்தாஃப் உடனடியாகத் தவறுதலாகப் பணம் அனுப்பப்பட்டதைச் சுட்டிக்காட்டி, முழுத் தொகையையும் திருப்பித் தந்தார். பயணத்திற்கான கட்டணமான ரூபாய் 156-ஐயாவது வைத்துக்கொள்ளுமாறு குனே வற்புறுத்தியபோதும், அந்த ஓட்டுநர் அதை வாங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 

அல்தாஃபின் ஓர் அழகிய செயல் : 

ஏமாற்றமளித்த அந்தச் சந்திப்பு நடந்து ஏழு நாட்களுக்குப் பிறகு, அந்த சர்வதேச வாடிக்கையாளரிடமிருந்து எதிர்பாராத அழைப்பு ஒன்று தொழில் அதிபர் குனேவுக்கு வந்தது; இறுதியில் அந்த வாடிக்கையாளர் அவருடன் வணிகக் கூட்டாண்மையை மேற்கொள்ள முடிவு செய்திருந்தார்.

இந்த நிகழ்வு அவருக்கு உடனடியாக ஆட்டோ ஓட்டுநர் அல்தாஃப் உடனான சந்திப்பை நினைவூட்டியது. "அந்தச் செய்தி கிடைத்த தருணத்தில், என் மனம் உடனடியாக அன்று காலை 7 மணிக்கு நான் நின்றிருந்த அந்த நடைபாதைக்கே சென்றது," என்று சுபம் குனே தனது பதிவில் எழுதியுள்ளார். ‘. தனது மிக மோசமான காலைப் பொழுதொன்றில் தன்னைச் சந்தித்த அல்தாஃப், பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் உதவ முன்வந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  பாராட்டினைத் தெரிவிக்கும் விதமாக, குனே பின்னர் அல்தாஃபுக்கு 500 ரூபாயை அனுப்பினார். இதில் ஓட்டுநர் ஏற்க மறுத்த அசல் கட்டணமும், நன்றியுணர்வின் அடையாளமாகச் சிறிய தொகையும் அடங்கும்.

தமது ஓர் அழகிய செயல் மூலம் முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர் அல்தாஃப், தொழில் அதிபர் சுபம் குனேவின் மனத்தை மட்டும் ஈர்க்கவில்லை. மாறாக, உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளார். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அல்தாஃப் போன்ற முஸ்லிம் இளைஞர்களின் அழகிய செயல்கள் அதற்கு பதில் அளிக்கும் வகையில் இருந்து வருகின்றன என்று உறுதியாக கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Happy family....!

Family is not about blood. 

It's about who is willing to hold your hand 

when you need it the most.



மனதுக்கு அல்ல....!

 வயது என்பது உடலுக்குதான்....

மனதுக்கு அல்ல. 

மனதை இளமையாக வைத்துக் 

கொண்டால் மரணம் வரை 

மகிழ்ச்சியாக வாழலாம். 

மனதை எப்போதும் மகிழ்ச்சியாக 

வைத்துக் கொண்டு ஒவ்வொரு 

நொடியும் ஆனந்தமாக வாழ்வோம்.



Monday, June 8, 2026

Thinking....!

Change 

your 

thinking, 

change 

your life.



நிறை குறை....!

 குறைகளை நாம் படிப்படியாக குறைக்க

 தொடங்கினாலே போதும், தானாகவே

 நம்முடைய நிறைகள் நிறைந்துக் கொண்டே

 போகும். குறைகளை 

குறைக்க முயற்சி செய்வோம். 

நிறைகளை வளர்த்துக் கொள்வோம்.



சமையல்....!

This is the original way to make steamed rice using the afghan recipe...!