Monday, June 22, 2026

நிதானமாக....!

 நிதானம் ஒரு 

அற்புதமான ஆயுதம். 

அந்த நிதானம் என்ற 

அற்புதமான ஆயுதத்தைப் 

பயன்படுத்துபவர்கள் 

எதையும் சாதிப்பார்கள்.

வாழ்க்கையில் நிதானம் 

மிகமிக அவசியம்.



வாழ்க்கை....!

 இப்படி தான் வாழ்க்கையும்...!



Sunday, June 21, 2026

மனிதநேயம்....!

 Humanity & kindness....!



முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கும் போக்கு அதிகரிப்பு - அசோக் கெலாட் கண்டனம்..!

 ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கும் போக்கு அதிகரிப்பு......!

 காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் கடும் கண்டனம்...!!

ஜெய்ப்பூர், ஜுன்.22-ராஜஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை இடித்த விவகாரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நோக்கம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சருமான அசோக் கெலாட் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பிகானீர் வருகைக்குப் பிறகு, எல்லைப் பகுதிகளில் இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், இது அரசியல் துருவப்படுத்தலை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கை என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.  மேலும், இது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்  அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம் வழிபாட்டுத் தலம் இடிப்பு :

இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 15 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும் பணி நடைபெற்று வரும் நிலையில், பார்மர் மாவட்டத்தின் காத்ரா சாலை பகுதியில் உள்ள மலானா கிராமத்தில் முஸ்லிம் மத வழிபாட்டுத் தலம் இடிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்க்கட்சிகளின் கோபத்தையும் தூண்டியுள்ளது.

எல்லைப் பாதுகாப்பு குறித்து கடந்த மாதம் பிகானீரில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எல்லைப் பகுதியில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, பார்மர் நிர்வாகம் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகள் குறித்த தகவல்களைச் சேகரித்து அறிக்கை ஒன்றை தயாரித்தது.

மேலும், உணர்திறன் மிக்க எல்லைப் பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களைக் கண்டறியவும், கட்டிடங்களுக்கான நிதி ஆதாரங்களை ஆய்வு செய்யவும் இப்பகுதிகளில் ஒரு  சிறப்பு ஆய்வும் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணியின் ஒரு பகுதியாக, மேய்ச்சல் நிலத்தில் கட்டப்பட்டிருந்த முஸ்லிம் வழிபாட்டுதலம், மத்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்க ஜூன் 18 அன்று நிர்வாகம் இடித்தது. இந்த நடவடிக்கையின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அசோக் கெலாட் கண்டனம் :

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள அசோக் கெலாட், பதற்றத்தையும் துருவப்படுத்தலையும் உருவாக்கும் ஒரே நோக்கத்துடன் அரசு செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, இந்த நடவடிக்கைக்கு ஒன்றிய அரசே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், ஒன்றிய அரசு ராஜஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள முஸ்லிம் வழிபாட்டு தலங்களை குறிவைத்து கண்டறிந்து, அவற்றை இடிக்கும் பணிகளை தொடங்கி இருப்பது சரியான செயல் அல்ல என்று கண்டனம் தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு என்ற பொய்யான புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார். 

வரலாற்று சிறப்புமிக்க பழமையான மத வழிபாட்டு தலங்கள் கூட, இந்த இடிப்பில் குறிவைக்கப்பட்டு இடிக்கப்பட்டு இருப்பதாக கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.  ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை ராஜஸ்தான் எல்லைப்பகுதியில் அமைதியாக வாழும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும், அரசியல் ரீதியாக மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் நோக்கிலும் சமூக அமைதியை சீர்குலைக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுத்து வருவதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

உடனடியாக நிறுத்த வேண்டும் :

முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கும் போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ள அசோக் கெலாட், மக்கள் மத்தியில் அமைதியை உருவாக்கும் நோக்கிலும் மத ரீதியாக அனைத்து மக்கள் மத்தியில் சமூக ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையிலும் ஒன்றிய அரசு எடுக்கும் முயற்சிகள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவது ஒன்றிய அரசின் அரசியலமைப்பு சட்டத்தின் கடமை என்றும் அவர் குறிபிட்டுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்தபிறகு, ராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் எப்போதும் அமைதியான சூழல் நிலவி வருவதை சுட்டிக் காட்டியுள்ள அவர், அதனை சீர்குலைக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பகுதியில் வாழும் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழ்ந்து வருவதாகவும், மத ரீதியாக எந்த சம்பவமும் ஏற்படவில்லை என்பது வரலாறு என்றும் கெலாட் குறிப்பிட்டுள்ளார். மத வழிபாட்டுத்தலங்கள் ஒவ்வொரு மத மக்களின் நம்பிக்கையின் அடையாளம் என்றும் அவற்றை இடிப்பது கண்டனத்திற்குரியது என்றும் அசேக் கெலாட் தெரிவித்துள்ளார். 

மேலும், இப்பகுதியில் உள்ள இந்து மற்றும் முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள் உள்ளூர் சமூகங்களால் சமமாக மதிக்கப்படுகின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான 1965 மற்றும் 1971 போர்களின்போது அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் ராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவளித்ததையும் சுட்டிக்காட்டினார். அத்தகைய ஒரு பகுதியில், பதற்றத்தையும் பிளவையும் உருவாக்கும் நோக்கத்துடன் மட்டுமே, ஒன்றிய அரசின் தூண்டுதலின் பேரில் மஸ்ஜித்துகள் மற்றும் மதரஸாக்களை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுப்பது முறையற்றது என்றும் அசோக் கெலாட் கூறியுள்ளார். 

உள்ளூர் மக்கள் கண்டனம் :

ஒன்றிய அரசின் இந்த  இடிப்பு  நடவடிக்கைக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மவுலவி ஹசம் கான் கூறுகையில், அந்த மத வழிபாட்டுத் தலம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்றும், அதே இடத்தில் 2009-ம் ஆண்டு முதல் ஒரு மதரஸா செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மதரஸா கட்டடத்தைக் கட்டுவதற்கு அப்போதைய அமைச்சர் சலே முகமது 15 லட்சம் ரூபாயை அனுமதித்திருந்ததாக கான் தெரிவித்தார். அரசு நிதியைக் கொண்டு மதரஸா மட்டுமே கட்டப்பட்டது. அந்த மத வழிபாட்டுத் தலம் அல்ல என்று அவர் கூறினார். அந்த மத வழிபாட்டுத் தலத்தைக் கட்டுவதற்கு மக்களிடமிருந்து நன்கொடைகள் திரட்டப்பட்டன. மக்களின் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தைக் கொண்டே அது கட்டப்பட்டது என்றும் மவுலவி ஹசம் கான் விளக்கம் அளித்துள்ளார். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Learn the lesson...!

The past is where you learn the lesson. 

The future is where you apply the lesson.



பாருங்க....

 சும்மா பாருங்க....

வியப்பாக இருக்கிறதா...!



Kulfi Falooda .....!

 Kulfi Falooda .....!

சும்மா பாருங்க....

சுவைத்து மகிழுங்கள்...!