Tuesday, March 10, 2026

Monday, March 9, 2026

இளம் சாதனையாளர்கள்....!

இளம் சாதனையாளர்களை அறிந்துகொள்வோம்....!

உலகின் மிகக் கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று சாதனை புரிந்து வருகிறார்கள். அண்மையில் வெளியிடப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்ற முஸ்லிம் இளைஞர்களின் முழு விவரங்கள் தொடர்பான கட்டுரை மணிச்சுடர் நாளிதழில் 09.03.2026 திங்கட்கிழமையன்று வெளியானது. 

இன்றைய கட்டுரையில் ஒருசில இளம் சாதனையார்கள் குறித்த விவரங்களையும் சுவையான தகவல்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதன்மூலம் சிவில் சர்வீசஸ் தேர்வில் நம்முடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்ள வாய்ப்புகள் உருவாகும். அத்துடன் கல்வியில் ஆர்வம் கொண்டு, துடிப்புடன் செயல்படும் முஸ்லிம் இளைஞர்களை அவர்களது பெற்றோர்கள் மட்டுமல்லாமல், மற்றவர்களும் ஊக்குவிக்க வாய்ப்புகள் ஏற்படும். 

இந்திய நிர்வாக சேவை (ஐ.ஏ.எஸ்.), இந்திய வெளியுறவு சேவை (ஐ.எப்.எஸ்.), இந்திய காவல் சேவை (ஐ.பி.எஸ்.), குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகிய மத்திய சேவைகள் பணிக்காக இந்தாண்டு வெளியான தேர்வு முடிவுகளின்படி மொத்தம்  958 பேர் தேர்வாகியுள்ளனர். அவர்களின் முஸ்லிம்களின் எண்ணிக்கை 53 ஆகும். 

இஃப்ரா ஷம்ஸ் அன்சாரி :

அகில இந்திய அளவில் வெளியான பட்டியலில், முஸ்லிம் பெண் இஃப்ரா ஷம்ஸ் அன்சாரி, 24வது இடத்தைப் பிடித்து மிகப்பெரிய அளவுக்கு சாதனை புரிந்துள்ளார். ஆர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் இந்த சாதனையை அவர் எட்டியதாக இஃப்ரா ஷம்ஸ் அன்சாரி குறிப்பிட்டுள்ளார். 

நபியா பர்வேஸ் :

இதேபோன்று, வெற்றி பெற்றவர்களில் நபியா பர்வேஸ், அகில இந்திய அளவில் 29வது இடத்தைப் பிடித்துள்ளார்.  உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள தரியாபூர் ஜகா கிராமத்தைச் சேர்ந்தவர் நபியா. புது தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் கட்டிடக்கலை இளங்கலை பட்டம் பெற்றவர். பின்னர் அவர் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் உள்ள ரெசிடென்ஷியல் கோச்சிங் அகாடமியின் மாணவியாகவும் இருந்தார். இது சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது.

நபியா பர்வேஸ் அகில இந்திய அளவில் 29வது இடத்தைப் பிடித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்று, நாட்டின் முதல் 30 சாதனையார்களின் ஒருவராக இடம்பிடித்தார்.

முஹம்மது ஸ்வாலா :

கேரள மாநிலத்தைச் சேர்ந்த டி.ஏ. முஹம்மது ஸ்வாலா சிவிஸ் சர்வீசஸ் தேர்வில் 429வது ரேங்க்கில் தேர்வாகியுள்ளார். தற்போது இவர், கடந்த 2024 ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் 711வது ரேங்க் பெற்று ஐஆர்டிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பொறிறியல் படிப்பை 2016ஆம் ஆண்டு முடிந்த முஹம்மது ஸ்வாலா, டீச் ஃபார் இந்தியா பெல்லோஷிப்பின் கீழ் 2016-2018 வரை சென்னையில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

                                                    ====================

"மிகவும் கடினமான தேர்வாக கருதப்படும் ஒரு தேர்வில் இந்திய முஸ்லிம் இளைஞர்கள் மிகப்பெரிய அளவுக்கு ஆர்வத்துடன் கலந்துகொள்ள முன்வர வேண்டும். கடின உழைப்பு, ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையில் நிச்சயம் சாதிக்க முடியும்"

                                                    ====================

பின்னர் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் உதவித்தொகையுடன் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாரானார். மேலும் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள என்லைட்ஐஏஎஸ் நிறுவனத்தில் விருப்பத் தேர்வில் தத்துவத்தில் தேர்ச்சி பெற்றார்.  முஹம்மது ஸ்வாலாவின் தந்தை அப்துல் நசீர் ஒரு தொழில் அதிபராக இருந்து வருகிறார். தாய் சபீனா நசீர் இல்லத்தரசியாக இருந்து குடும்பத்தை அழகிய முறையில் கவனித்து வருகிறார். இவருக்கு அமீனா என்ற ஒரு சகோதரி உண்டு.  வணிக பட்டதாரியான அவர் திருமணமானவர். முஹம்மது ஸ்வாலாவின் பூர்வீகம் கேரளாவின் கோட்டயம் மாவட்த்தில் உள்ள வைக்கம் என்பது குறிப்பிடத்தது. 

சாதிக்க வாருங்கள் :

மிகவும் கடினமான தேர்வாக கருதப்படும் ஒரு தேர்வில் இந்திய முஸ்லிம் இளைஞர்கள் மிகப்பெரிய அளவுக்கு சாதித்து வருவது மகிழ்ச்சியான ஒன்றாகும். அதேநேரத்தில் இன்னும் நிறைய இளைஞர்கள் இதுபோன்ற போட்டித் தேர்வுகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்ள முன்வர வேண்டும். கடின உழைப்பு, ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையில் நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு மேற்கண்ட இளைஞர்கள் நமக்கு மிகச் சிறந்து எடுத்துக்காட்டு என்பதை நம்முடைய சமுதாய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே எந்தவித தயக்கமும் இல்லாமல் சாதிக்க உடனே புறப்படுங்கள். அதன்மூலம் உங்களுக்கும், வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ந்துகொள்ளுங்கள். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

தமிழ்நாடு உர்தூ அகாடமிக்கு நிதி ஒதுக்கீடு...!

தமிழ்நாடு உர்தூ அகாடமியின் நிர்வாக மற்றும் செயல்பாட்டு செலவினங்களுக்காக ரூ.44 லட்சம் நிதி ஒதுக்கீடு....!!

 அரசாணை வெளியிட்டு தமிழ்நாடு அரசு அறிவிப்பு...!!

சென்னை, மார்ச்.10- தமிழ்நாடு உர்தூ அகாடமியின் நிர்வாக மற்றும் செயல்பாட்டு செலவினங்களுக்காக 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு உர்தூ அகாடமியின் துணைத் தலைவர் முஹம்மது நயீமுர் ரஹ்மானின் கோரிக்கையை ஏற்று அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இ.யூ.முஸ்லிம் லீக் கோரிக்கை :

தமிழ்நாடு உர்தூ அகாடமியின் மேம்பாட்டிற்காக அரசு முக்கியத்துவம் கொடுத்து உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு கிளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள உர்தூ ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் அண்மையில் நடைபெற்ற கும்பகோணம் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் உர்தூ ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், உர்தூ மொழியின் மேம்பாட்டிற்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்து இருந்தார். 

நிதி ஒதுக்கீடுசெய்து அரசாணை வெளியீடு :

இந்நிலையில், தமிழக அரசின் உயர்கல்வித்துறை 9.03.2026 திங்கட்கிழமையன்று அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், தமிழ்நாடு உர்தூ அகாடமியின் நிர்வாக மற்றும் செயல்பாட்டு செலவினங்களுக்காக 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒருமுறை மானியமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு உர்தூ அகாடமி செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அரசு, அகாடமியின் துணைத் தலைவர் முஹம்மது நயீமுர் ரஹ்மானின் கோரிக்கையின் அடிப்படையில், இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மேற்கண்ட நிதி, தமிழ்நாடு உர்தூ அகாடமிக்கு நிரந்தர அலுவலக ஊழியர்களுக்கான சம்பளம், அலுவலக பராமரிப்பு, டாக்டர் கலைஞர் நூற்றாண்டு உர்தூ நூலகம் அமைத்தல், மாநிலத்தில் உர்தூ மொழியை மேம்படுத்தி, அதன் கலாச்சார பாரிம்பரியத்தை பாதுகாத்தல், புகழ்பெற்ற உர்தூ இலக்கியவாதிகளை கௌரவித்தல், கருத்தரங்கங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், உர்தூ கவியரங்குகள் ஆகியவற்றை நடத்துதல், முக்கிய தேசிய நாட்களில் கட்டுரை, மற்றும் இலக்கிய போட்டிகளை நடத்துதல், மாநிலத்தில் திறன் மேம்பாட்டு மற்றும் பயிற்சி மையங்களை அமைத்தல், மாநிலத்தில் உர்தூ மொழியை மேம்படுத்த சிறப்பு மையம் அமைத்தல், உர்தூ மொழியில் மாத இதழ் நடத்துதல், உர்தூ மொழியில் சான்றிதழ் மற்றும் டிப்ளாமா படிப்புகளை தொடங்குதல், பெண்களுக்கான பயிற்சி மையங்களை அமைத்தல் ஆகியவற்றிக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

உர்தூ மொழி வளர்ச்சிக்கு உதவும் :

தமிழ்நாடு உர்தூ அகாடமிக்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ள 44 லட்சத்து 50 ஆயிரம் நிதியின் மூலம், அகாடமி புதிய உற்சாகத்துடன் செயல்பட வாய்ப்பு உருவாகியுள்ளது. இதன்மூலம் உர்தூ மொழி பேசும் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் உர்தூ மொழியின் சிறப்பு கொண்டு சேர்க்க வாய்ப்பு உருவாகியுள்ளது.அத்துடன் உர்தூ மொழி குறித்த ஒரு விழிப்புணர்வு மக்கள் மத்தியில் உருவாகும் என்றும் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உர்தூ அகாடமிக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டதற்கு உர்தூ மொழி ஆர்வலர்கள் வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளனர். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


சிந்தனை...!

 You cannot control 

the behavior of others. 

But you can always choose 

how you respond to it.




Quran...!

A man discovers a noble tiny little copy of 

the Qur’an dating back to the Ottoman era, 

written with golden ink that reflects

 the splendor and precision of

 Islamic art at that time.



வையுங்கள்...!

 மனதை நிலையாக வையுங்கள். 

ஆசையை கொஞ்சமாக வையுங்கள். 

உள்ளத்தை உறுதியாக வையுங்கள். 

பாசத்தை உண்மையாக வையுங்கள். 

ஆனால், 

நட்பை மட்டும் 

உயிராக வையுங்கள்....



Press...!

 LoP Rahul Gandhi Press Meet.