அனுபவம் ஒரு நல்ல பள்ளிக்கூடம்.
ஆனால் அதன் கட்டணம் சற்று அதிகம்.
கட்டணம் அதிகம் என்றாலும்
வாழ்க்கைக்கு தேவையான
நல்ல பாடங்கள்
இந்த பள்ளிக்கூடத்தில் கிடைக்கும்.
அதன்மூலம் வாழ்க்கை வளம் பெறும்.
மகிழ்ச்சி கிடைக்கும்.
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
அனுபவம் ஒரு நல்ல பள்ளிக்கூடம்.
ஆனால் அதன் கட்டணம் சற்று அதிகம்.
கட்டணம் அதிகம் என்றாலும்
வாழ்க்கைக்கு தேவையான
நல்ல பாடங்கள்
இந்த பள்ளிக்கூடத்தில் கிடைக்கும்.
அதன்மூலம் வாழ்க்கை வளம் பெறும்.
மகிழ்ச்சி கிடைக்கும்.
தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :
பாபநாசம் தொகுதியில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு
இ.யூ.முஸ்லிம் லீக்
மீண்டும் போட்டி
ஏணி சின்னத்தை வாக்காளர்களிடம் பிரபலபடுத்த
தீவிர பிரச்சாரம்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, , தற்போது படுவேகத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாபநாசம் தொகுதியில் ஏ.எம்.ஷாஜஹானும், வாணிம்பாடி தொகுதியில் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக்கும் களம் காண்கிறார்கள். வாக்குப்பதிவுக்கு இன்னும் 13 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இரண்டு தொகுதிகளிலும் இ.யூ.முஸ்லிம் லீகின் வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையான உழைப்பை தோழமைக் கட்சி நிர்வாகிகள் வழங்கி வருகிறார்கள்.
50 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டி :
இத்தகைய சூழ்நிலையில் பாபநாசம் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போட்டியிடுகிறது. இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தனது தேர்தல் தனிச் சின்னமான 'ஏணி'யை வாக்காளர்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது; குறிப்பாக, கடந்த பல தசாப்தங்களாகத் தான் நேரடியாகப் போட்டியிடாத தொகுதியில் இம்முயற்சி முனைப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாட்டின் பாபநாசம் போன்ற குறிப்பிட்ட தொகுதிகளில், ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு இ.யூ.முஸ்லிம் லீக் முதன்முறையாக நேரடியாகப் போட்டியிடுகிறது. எனவே, திமுக-வின் 'உதயசூரியன்' சின்னத்தைச் சார்ந்திருப்பதை விடுத்து, தனது சொந்தச் சின்னமான 'ஏணி'யை வாக்காளர்களிடம் அறிமுகப்படுத்த வலுவான களப் பிரச்சாரம் மேற்கொள்வது அவசியமாகிறது.
புதிய வாக்காளர்களை இலக்காகக் கொண்டும் இளம் வாக்காளர்கள் மத்தியில் சின்னத்தை அறிமுகம் செய்ய தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஏணி சின்னம் இளம் வாக்காளர்களுக்குப் போதிய அறிமுகம் இல்லாமல் இருக்கலாம். எனவே, இ.யூ.முஸ்லிம் லீக் அடித்தள அளவிலான பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது; இதில் களப்பணிகள் மேற்கொள்வதுடன், கொடிகளிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் 'ஏணி' சின்னத்தை மிகத் தெளிவாகவும் முக்கியத்துவத்துடனும் காட்சிப்படுத்துவதும் அடங்கும். சிறுபான்மைச் சமூகத்தினரும் நலிவடைந்த பிரிவினரும் எளிதாக வளர்ச்சி அடைவதற்கும் முன்னேற்றம் காண்பதற்கும் இ.யூ.முஸ்லிம் லீக் ஆற்றிவரும் பங்கைச் சித்தரிக்கும் ஒரு குறியீடாகவே 'ஏணி' சின்னத்தை இயக்கம் கருதுகிறது.
சில சுவையான தகவல்கள் :
தஞ்சை மண்டத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இருக்கும் 41 சட்டப்பேரவைத் தொகுதிகளில், திமுக 24 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக 28 தொகுதிகளில் களம் காண்கிறது. பாஜக 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ், பாமக தலா ஒரு தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
திமுக கூட்டணியில் இடம்பெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் பாபநாசம் தொகுதியில் தனது தனிச் சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறது. கடந்த 1977 ஆம் ஆண்டு இந்த மண்டலத்தில் உள்ள தொகுதியில் போட்டியிட்ட இ.யூ.முஸ்லிம் லீக் வெற்றி வாய்ப்பு இழந்தது. இத்தகைய சூழ்நிலையில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனிச் சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிடுவதால் பல்வேறு சவால்களை இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் ஏ.எம்.ஷாஜஹான் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறார். தொகுதியில் உள்ள எல்லா கிராமங்களிலும் ஏணி சின்னம் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டிய சூழல் அவருக்கு உள்ளது.
எனினும், ஏணி சின்னம் ஏற்கனவே வாக்களார்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்கப்பட்டு விட்டது. இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் ஏற்கனவே ஏணி சின்னத்தில் நின்று இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உள்ளிட்ட பல தொகுதிகளில் வெற்றி பெற்ற வரலாறு உண்டு. எனவே, சவாலை எதிர்கொள்ளும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாபநாசம் தொகுதியில் கடுமையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஏணி சின்னம் அனைத்து வாக்காளர்கள் மத்தியில் பிரபலம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக, ராஜகிரி, அய்யம்பேட்டை உள்ளிட்ட தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் ஏணி சின்னம் கொண்டு சென்று சேர்க்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இ.யூ.முஸ்லிம் லீக் போட்டியிடுவதால், வெற்றியை இலக்காகக் கொண்டு, திமுக கூட்டணி நிர்வாகிகளின் ஆதரவுடன் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் ஏ.எம்.ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.
வெற்றிவாய்ப்பு பிரகாசம் :
பாபநாசம் தொகுதியில் தனிச் சின்னத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் ஏ.எம்.ஷாஜஹான் போட்டியிட்டு பல சவால்களை எதிர்கொண்டாலும், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் சிறப்பான ஒத்துழைப்புடன் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். தற்போது ஏணி சின்னம் மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்கப்பட்டு விட்டதால், இ.யூ.முஸ்லிம் லீகின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தொகுதியில் உள்ள வாக்காளர்கள் தெரிவிக்கிறார்கள்.
பாபநாசம் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் இந்த முறை நிச்சயம் வெற்றிபெற்று 50 ஆண்டு கால வரலாற்றை மாற்றி அமைத்து, புதிய வரலாறு படைக்கும் என்று உறுதியாக நம்பலாம். அதன்மூலம் இ.யூ.முஸ்லிம் லீகின் குரல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிச்சயம் ஒலிக்கும். அதன்மூலம் சமுதாயத்திற்கும் நலிந்தபிரிவு மக்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அத்துடன் அனைத்துப் பிரிவு மக்களுக்கு ஆதரவாகவும் சட்டப்பேரவையில் இ.யூ.முஸ்லிம் லீக் குரல் இனி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும் என்பது உறுதி.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
வாழ்க்கையில் வலிகளை
அனுபவித்தவர்கள்
காட்டும் வழிகள் எப்போதும்
சிறந்ததாகவே இருக்கும்.
காரணம்,
அனுபவம் நல்ல வழிகளை
பிறருக்கு காட்டும்.
மற்றவர்களின் அனுபவம்
நமக்கு புதிய வழிகளைத் திறக்கும்.
பாதைகளை காண்பிக்கும்.
There are three solutions to every problem.
Accept it, change it or leave it.
If you can't accept it, change it.
If you can't change it leave it.
வாழ்க்கையில் நிம்மதியாக
இருக்க இரண்டே வழிகள் தான் உண்டு.
ஒன்று, நம்முடைய பிரச்சினைகளை
அடுத்தவர்களிடம் சொல்லக் கூடாது.
இரண்டு, அடுத்தவர்களின் தனிப்பட்ட
பிரச்சினைகளில் தலையிடக் கூடாது.
இந்த இரண்டு நியதிகளையும்
கடைப்பிடித்தால் வாழ்க்கையில்
நிம்மதி கிடைக்கும்.
"Removal of a SC judge or CEC requires a presidential order based on a parliamentary address for 'proven misbehaviour', supported by evidence."
- IND MP Kapil Sibal