Tuesday, February 3, 2026

கருப்பு தினம்...!

 வர்த்தக ஒப்பந்தம்.

கருப்பு தினம்.

ஆம் ஆத்மி எம்.பி. 

சஞ்சய் சிங் விமர்சனம்.



விமர்சனம்....!

 வர்த்தக ஒப்பந்தம்...!

காங்கிரஸ் விமர்சனம்...!!



நிச்சயம்...!

 வாழ்க்கையில் எது நடந்தாலும் 

உடைந்து போகாதீர்கள். 

உங்களை உடைப்பதற்கு 

ஒரு தருணம் உண்டென்றால், 

உங்களை உருவாக்குவதற்கும் 

பல தருணங்கள் 

நிச்சயம் காத்திருக்கும்.



Press.

 PM Modi is Compromised.

PM is too afraid to let me speak in Parliament about Naravane, Epstein Files and how he has surrendered on Tariffs.

LoP Rahul Gandhi...!


Press Meet.

 எதிர்கட்சிகள் என்ன பேச வேண்டும் என்பதை ஆளுங்கட்சி தீர்மானிக்க முடியாது. 

இது எங்களுக்கு அரசியல் சாசனம் கொடுத்திருக்கிற உரிமை. மக்களுக்காக நாங்கள் ஆற்ற வேண்டிய கடமை.

அவர்கள் பதில் சொல்ல எல்லையற்ற வாய்ப்பிருந்தும் எங்களை பேசவிடாமல் தடுப்பதற்கு காரணம், உண்மையை கண்டு அவர்கள் பயந்துபோய் இருக்கிறார்கள்.

manickamtagore 



Monday, February 2, 2026

மத்திய பட்ஜெட் - ஓர் பார்வை....!


" மத்திய பட்ஜெட்  - ஓர் பார்வை " 

- ஜாவீத் -


உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் நாடாகவும் இந்தியா இருந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒவ்வொரு ஆண்டும், நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்கள், செலவினங்கள் குறித்த தகவல்கள் வெளியிட,ப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2026-27 நிதியாண்டிற்கான  மத்திய பட்ஜெட்டை, நாடாளுமன்ற மக்களவையில் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்த 9வது நிதிநிலை அறிக்கையாகும். அந்த வகையில் பாஜக.வின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாதனை புரிந்துள்ளார் என்றே கூற வேண்டும்.

27 ஆண்டுகளுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 3 முக்கிய கடமைகளை மனதில் வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன், அனைவருக்கும் அனைத்தும், இளைஞர் நலன் மனதில் வைத்து பட்ஜெட் உருவாக்கம் செய்யப்பட்டு இருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் சில முக்கிய தகவல்கள் :

நிதியமைச்சர் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்த அம்சங்களை அறிந்துகொள்வோம். அதன்படி,  விமான உதிரி பாகங்களுக்கான கச்சாப்பொருட்களுக்கு வரியேதுமில்லை. கார்கோ கிளியன்ஸ் நடைமுறை சீரமைக்கப்படும். சரக்கு இறக்குமதி நடைமுறைகளில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும். 17 புற்றுநோய் மருந்துகளுக்கு இறக்குமதியில் இருந்து வரி விலக்கு. மைக்ரோவேவ் ஒவன் பாகங்களின் இறக்குமதிக்கு வரிச்சலுகை நீட்டிப்பு, 2035 வரை அணுமின் திட்டங்களுக்கான இறக்குமதிக்கு வரிச்சலுகை நீட்டிப்பு, லித்தியம்-அயான் மின்கல உற்பத்திக்கு இறக்குமதி வரிச்சலுகை,தோல் பொருட்களுக்கான இலவச இறக்குமதி வரிச்சலுகை நீட்டிப்பு, மாநிலங்களுக்கான நிதி பகிர்வு விகிதம் 41 சதவீதமாக தொடரும், தரவு மையங்களுக்கு 2047 வரை முழு வரிவிலக்கு, இந்தியாவில் தரவு மையங்களை அமைக்க ஊக்கம் அளிக்கப்படும், வெளிநாடுவாழ் இந்தியர்கள் சொத்து விற்பனைக்கான வரி பிடித்தம் குறைப்பு, வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கான வரி பிடித்தம் 2 சதவீதமாக குறைப்பு, வருமான வரி சட்டப்படி விசாரணை நடைமுறையை சீர்திருத்த நடவடிக்கை வருமான வரி அறிக்கையில் வருவாயை குறைவாக காண்பித்தால் 100 சதவீதம் கூடுதல் வரி, விபத்து காப்பீட்டு இழப்பீட்டுத் தொகைக்கு வருமான வரி விலக்கு, வெளிநாட்டுச் சுற்றுலா, மருத்துவம், கல்விக்கு வரி குறைப்பு,வருமான வரி தாக்கல் நடைமுறை எளிதாக்கப்படும், ஏப்ரல் 1 முதல் வருமான வரிச் சட்டம் 2025 அமல்படுத்தப்படும், நாட்டின் மொத்த செலவினம் திருத்திய மதிப்பின்படி ரூ.49.6 லட்சம் கோடியாகும், 2026-27 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 4 புள்ளி 3 சதவீதமாக இருக்கும், நிதிக்குழு மானியமாக மாநிலங்களுக்கு ரூ. 1 புள்ளி 4 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு, ஒடிஷா, கேரளா, ஆந்திராவில் அரிய வகை தாது தொழில் தடங்கள், அனிமேஷன், காமிக்ஸ், ஆன்லைன் விளையாட்டுத் துறைகளை ஊக்குவிக்க திட்டம், வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள், செயற்கை பாதங்கள் உற்பத்தி அமைப்புகளுக்கு உதவி, பெண் தொழில் முனைவோருக்கு ஷீ என்ற பெயரில் புதிய திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கு கண்ணியமிக்க வாழ்வை உறுதி செய்ய திட்டம், நாட்டில் உள்ள 5 ஆயிரம் நீர்த்தேக்கங்களை மேம்படுத்த திட்டம், முந்திரி உற்பத்தியில் தன்னிறைவுக்கு திட்டம், தேங்காய் உற்பத்திக்கு சிறப்பு ஊக்குவிப்பு திட்டம்,‘ பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலா ஊக்குவிக்கப்படும், உயர் மதிப்புள்ள வேளாண் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும், பொதிகைமலை உள்ளிட்ட இடங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்றத் திட்டங்கள், அடுத்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையை மேம்படுத்த கேலோ இந்தியா இயக்கம், கல்வித் துறையை மேம்படுத்த அதிகாரமளிக்கப்பட்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படும், வங்கித் துறையை சீர்திருத்த குழு அமைக்கப்படும்,20 சுற்றுலா மையங்களில் 10 ஆயிரம் வழிகாட்டிகளுக்கு திறன் மேம்பாடு,ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும், முக்கிய தொழில் வழித்தடங்களில் 5 பல்கலைக்கழங்கள் அமைக்கப்படும், ஆயுர்வேதத்திற்கு 3 அகில இந்திய நிறுவனங்கள் அமைக்கப்படும், நாட்டில் மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய அரசின் நடவடிக்கைகளால் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு, 10 சதவீதமாக உள்ள முதலீடு வரம்பு 24 சதவீதமாக அதிகரிப்பு, அன்னிய முதலீட்டாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அனுமதி, நாட்டின் அனைத்து பிராந்திய துறைமுகங்களை இணைக்க 20 ஆயிரம் கோடியில் புதிய திட்டம், நாடு முழுவதும் 7 நகரங்களில் அதிவேக ரயில் தடம் அமைக்கப்படும், சென்னையில் இருந்து ஐதராபாத், பெங்களுருவுக்கு அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும், 5 ஆண்டுகளில் 20 தேசிய நீர்வழிப் பாதை திட்டங்கள், பொது கட்டமைப்புக்கு மூலதன நிதியாக ரூ.12 புள்ளி 2 லட்சம் கோடி ஒதுக்கீடு, சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க மும்முனை திட்டம் செயல்படுத்தப்படும், விளையாட்டு சாதனங்கள் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் உருவாக்கப்படும், புதிய மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும், இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சியில் பயணிக்கிறது, கவர்ச்சித் திட்டங்களைவிட மக்கள் நலனே முக்கியம் என்று அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. எளிய முறையில் ஜிஎஸ்டி உள்ளிட்ட 350 சீர்திருத்தங்களை கொண்டுவரப்பட்டுள்ளது.  பெண்கள், இளைஞர் நலனை மனதில் கொண்டு பட்ஜெட் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பாஜக கூட்டணி கட்சிகள் வரவேற்பு :

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டை வழக்கம் போல ஆளும் பாஜக மற்றம் அதன் கூட்டணி கட்சிகள் வரவேற்றுள்ளன. மத்திய பட்ஜெட் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேபோன்று, பாஜக அரசின் சீரிய நடவடிக்கை காரணமாக பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளதை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பாஜகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

மத்திய நிதிநிலை அறிக்கை மூலும், தமிழகத்தின் நலன் பாதுகாக்கப்பட்டு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோன்று, ஜி.கே.வாசன், தமிழிசை சௌந்திரராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி தலைவர்களும், மத்திய பட்ஜெட்டிற்கு புகழாரம் சூட்டி, வரவேற்றுள்ளனர்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம் :

அதேநேரத்தில் காங்கிரஸ், திமுக,. திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்து விமர்சனம் செய்துள்ளன. மத்திய பட்ஜெட்டில், நாட்டில் வாழும் இளைஞர்கள்  தற்போது சந்திக்கும் முக்கிய பிரச்சினையான வேலையின்மை குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதேபோன்று, வேலை வாய்ப்பின்மை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, நாட்டின் முன் எழுந்துள்ள பல சவால்களை மத்திய நிதியமைச்சர் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த எந்த நடவடிக்கையும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை என்றும் முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், முக்கியமான துறைகளுக்கான ஒதுக்கீடு மற்றும் செலவினம் குறைந்துள்ளது. மத்திய அரசின் மூலதனச் செலவு குறைந்துள்ளது. ஜல்ஜீவன் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு .67 ஆயிரம் கோடியில் இருந்து 17 ஆயிரம் கோடிரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு நிலவரங்கள் கவலை அளிப்தாகவே உள்ளன. பொருளாதார வியூகப்படி பார்த்தால் மத்திய பட்ஜெட் மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது. எதிர்பார்ப்புகளுக்கு சற்றும் ஈடுகொடுக்காத மந்மான பட்ஜெட்டாக இருக்கிறது. இதை மந்தமான பட்ஜெட் என்றே சொல்லலாம். என்றும் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

தமிழகம் புறக்கணிப்பு :

மத்திய பட்ஜெட்டில் தமிழகம், கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுஇருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பட்ஜெட் குறித்து கருத்து கூறியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் நலன் முற்றிலும் புறக்கணிப்பட்டு இருக்கிறது., மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிர்வை 50 சதவீதமாக அதிகரிக்காமல், 41 சதவீதமே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது., நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்களிப்பைச் செலுத்திவரும் தமிழ்நாட்டிற்கான நிதிப்பகிரிவு குறைவாகவே அளிக்கப்பட்டுள்ளது., தமிழ்நாட்டிற்கான மத்திய வரிகளின் பங்கு சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவில் குறைக்கப்பட்டுள்ளது., நிதிநிலை அறிக்கையில் திருக்குறளும் இல்லை, தமிழ்நாட்டிற்கான எந்த முக்கியத் திட்டங்களும் இடம்பெறவில்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.

இதேபோன்று, திமுக எம்.பி. கனிமொழி, தமிழகத்தின் அடிப்படை வளங்களை சுரண்டும் பட்ஜெட் என்றும், தமிழக மக்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழகத்துக்கான திட்டங்களும் இல்லை என்றும்,  தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன என்றும் சாடியுள்ளார்.  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, சிறு, குறு தொழில்களுக்கு ஊக்கம் அளிப்பது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை. உருப்படியான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு இல்லாத மக்கள் விரோத பட்ஜெட். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

விவசாயிகள், அடித்தட்டு உழைக்கும் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு, பெருநிறுவனங்களுக்கு சாதகமான பட்ஜெட்டாக ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட், எரியும் பொருளாதார பிரச்னைகள் எதற்குமே தீர்வு காண்பதாக அமையவில்லை. எளிய நடுத்தர மக்களின் நலனுக்கோ, சிறு தொழில்களை நெருக்கடியிலிருந்து மீட்கவோ, கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்கோ இந்த நிதிநிலை அறிக்கை உருப்படியான முன்மொழிவுகள் எதையும் உள் ளடக்கியதாக இல்லை. எந்த வகையிலும் தேசத்தின் நலனுக்கோ, மக்களின் வாழ்வுக்கோ, தமிழகத்தின் உரிமைக்கோ உதவாத பட்ஜெட். கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய அறிவிப்பும் இல்லை. நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடும் இல்லை. தமிழகத்துக்கு எந்தவொரு பெரிய திட்மும் இல்லை. தேர்தலுக்காகக்கூட எந்த அறிவிப்பும் இல்லை. தமிழகத்துக்குள்ளாக எந்த ரயில்வே திட்டமும் இல்லை. நதிகள் இணைப்பு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, தங்கம், வெள்ளி விலையை கட்டுப்படுத்துவதற்கான அறிவிப்போ இல்லை. என்று அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், பொருளாதார வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டை விமர்சனம் செய்துள்ளனர்.

சிறுபான்மையினர் நலன் குறித்த அறிவிப்புகள் இல்லை :

இதுஒருபுறம் இருக்க, நாட்டில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம் சிறுபான்மையின மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் பட்ஜெட்டில் எந்தவித முக்கிய அறிவிப்புகளும் இடம்பெறவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வரும் முஸ்லிம் சிறுபான்மையின மக்கள், தற்போது அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் அச்சத்தை போக்கும் வகையிலும், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறுபான்மையின மக்கள் பயன் அடையும் வகையிலும் பட்ஜெட்டில் எந்தவித முக்கிய அறிவிப்புகள் இல்லை என்பதால், சிறுபான்மையின மக்களுக்கு இது ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என்றே கூற வேண்டும் என பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள் விமர்சனம் செய்துள்ளதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மத்திய பட்ஜெட் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஒரு சடங்காக இல்லாமல், நாட்டில் வாழும் 140 கோடி மக்களுக்கும் பலன் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் நாளே, சிறந்த பட்ஜெட் நாள் என்று கூறலாம்.

===========================

Profit...!

 Respect is the 

most important 

element of  your personality. 

It is like an investment. 

Whatever you give to others, 

it will return you with profit.