Tuesday, April 28, 2026

வேதனை....!

A man in Odisha dug up his deceased sister’s grave and brought her skeleton to the bank Just to prove she had died.

He had been trying to withdraw ₹20,000 from her account, but bank officials kept insisting he bring the account holder in person. Despite repeatedly telling them she had passed away, they didn’t listen.

Frustrated and unaware of the legal process, he took this extreme step.

This incident shows not just a lack of awareness, but also a failure of basic human understanding in the system.



Monday, April 27, 2026

நூல்கள் அறிமுகம்...!

இனிய தருணம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை, பல்வேறு துறை தோழர்களுக்கு  வழங்கி மகிழ்ச்சி அடைந்த  இனிமையான தருணம்.





மக்காவில் தயார் நிலை....!

ஹஜ் பெருவிழாவிற்காக மக்காவில் தயார் நிலையில் இருக்கும் வசதிகள்

ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். உடல்நலம் மற்றும் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த ஆண்டு ஹஜ் பெருவிழா மே 24 முதல் 29 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஏற்கனவே சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ளனர்.

குறிப்பாக, இந்தியா, இந்தோனேஷியா, வங்கதேசம் என உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் இந்தாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு இஸ்லாமியர்கள் வந்தவண்ணம் உள்ளனர். போர் பதற்றத்திற்கு மத்தியில் கூட, ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள், தங்களது ஐந்தாவது கடமையை நிறைவேற்ற திங்கட்கிழமையன்று (27.04.2026) மதீனா வந்து சேர்ந்தபோது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

விருந்தோம்பலுக்குப் புகழ்பெற்ற மதீனா நகரம், அங்கு வாழும் மதீனாவாசிகளின் பாரம்பரிய விருந்தோம்பல் குணத்தை எப்போதும் கடைப்பிடித்து வருகிறது. தற்போது ஹஜ் பெருவிழா காலம் தொடங்கியுள்ள நிலையில், மதீனாவாசிகள், தங்களுடைய விருந்தோம்பல் குணத்தை மேலும் தீவிரமாக வெளிப்படுத்தி, ஹஜ் பயணிகளின் இதயங்களை கவர்ந்து வருகிறார்கள். 

தயார் நிலையில் இருக்கும் வசதிகள் :

இதுஒருபுறம் இருக்க, இந்தாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்திரீகர்கள் தங்குவதற்காக பிரமாண்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,  புதிய உரிமம் வழங்கும் சேவை மூலம், மக்காவில் ஹஜ் பயணிகள் தங்க 5 லட்சத்து 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள வருடாந்திர ஹஜ் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, சவூதி அரேபியாவின் சுற்றுலாத் துறை அமைச்சர் அகமது அல்-கதீப், திங்களன்று (27.04.2026) மக்காவில் ஹஜ் பயணிகள் தங்கும் வசதிகளை  நேரில் ஆய்வு செய்தார்.

ஹஜ் யாத்திரீகர்களுக்கு வழங்கப்படவுள்ள சேவைகளை ஆய்வு செய்ததுடன், சுற்றுலாத் துறை ஊழியர்களையும் அமைச்சர் அகமது அல்-கதீப் சந்தித்துப் பேசினார். இவர்களில் சிலர் அமைச்சகத்தின் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்று சிறப்பான பயிற்சி பெற்றவர்கள். இந்த பயிற்சி மூலம், ஹஜ் பயணிகளுக்கு இவர்கள் நல்ல சேவையை ஆற்ற முடியும் என அமைச்சர் அகமது அல்-கதீப் நம்பிக்கை தெரிவித்தார். 

===================
"காசியாபாத் வீட்டு வசதி சங்கத்தில், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக சவூதி அரேபியா சென்ற முஸ்லிம் அண்டை வீட்டாருக்கு, இந்து குடியிருப்பாளர்கள் மலர் மாலைகள் அணிவித்து, ஆரத்தழுவி வழியனுப்பி வைத்தனர். இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் காணொளியாக சமூக ஊடகங்களில் வெளியாகி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது"
===================

இதனிடையே, கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட புதிய தற்காலிகத் தங்கும் இடங்களுக்கான உரிமம் வழங்கும் சேவை மூலம், மக்காவில் ஹஜ் யாத்திரீகர்களுக்கான தங்கும் வசதித் துறையில் கூடுதலாக 5 லட்சத்து 66 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட படுக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்தாண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றவரும் ஹஜ் பயணிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாது என்று சவூதி அரேபிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

சிறப்பான பாதுகாப்பான ஏற்பாடுகள் :

சவூதி அரேபியா அரசின் பொதுப் புள்ளியியல் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு 16 லட்சத்து 73 ஆயிரத்து 230 யாத்திரீகர்கள் புனித ஹஜ் கடமையை மேற்கொண்டனர். இவர்களில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 654 பேர் சவூதி குடிமக்களாகவோ அல்லது அங்கு வசிப்பவர்களாகவோ இருந்தனர். எஞ்சியோர் சவூதி அரேபியாவிற்கு வெளியிலிருந்து வருகை தந்தவர்களாவர்.

தற்போது ஹஜ் பெருவிழா காலம் தொடங்கியுள்ளதால், சவூதி அரேபியாவில் மட்டுமல்லாமல், இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் கூட, ஹஜ் கடமையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு முஸ்லிம்கள் மத்தியில் அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் அவர்களின் உள்ளத்தில், ஹஜ்ஜின் விதை விதைக்கப்பட்டு, வாழ்நாளில் எப்படியாவது ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவல் வளர்க்கப்பட்டு வருகிறது. 

இத்தகைய அருமையான சூழ்நிலையில், புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக நாட்டின் பல இடங்களில் வழியனுப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சகோதரத்துவம் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சில இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த இந்து சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு, இஸ்லாமியர்களை வழியனுப்பி வைத்தது, அனைவரின் இதயங்களை கவர்ந்தது. 

பரிவு மற்றும் சமூக நல்லிணக்கம் :

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்காக, அவர்களின் இந்து அண்டை வீட்டாரால் நடத்தப்பட்ட வழியனுப்பு விழா, சமூக நல்லிணக்கத்தின் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.  காசியாபாத் வீட்டு வசதி சங்கத்தில், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக சவூதி அரேபியா சென்ற முஸ்லிம் அண்டை வீட்டாருக்கு, இந்து குடியிருப்பாளர்கள் மலர் மாலைகள் அணிவித்து, ஆரத்தழுவி வழியனுப்பி வைத்தனர். ஏப்ரல் 21, 2026 அன்று, இரண்டாவது குழுவினர் புறப்படும்போது, இந்த அன்பான வழியனுப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் காணொளியாக சமூக ஊடகங்களில் வெளியாகி, பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இது இந்தியாவில் நிலவும் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வை, மதங்களுக்கு அப்பாற்பட்ட, அண்டை வீட்டாரின் இயற்கையான கடமை மற்றும் நீண்ட கால நட்பின் அடையாளமாக அப்பகுதி மக்கள் விவரித்தனர். மேலும், இந்தச் சம்பவம், சமூகங்களுக்கு இடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Relationship....!

A relationship with a nice person is like a sugarcane. You break it, crush it, squeeze it, even beat or grind it, still you will get only sweetness. 



எண்ணங்களில்....!

 எண்ணங்களில் 

நீங்கள் எப்போதும் 

அழகாக இருங்கள். 

தோற்றம் எப்படி இருந்தாலும் 

கவலை கொள்ளாதீர்கள்.

எண்ணமே வாழ்வு என்பதை 

உறுதியாக நம்புங்கள். 

அந்த நம்பிக்கை உங்களை 

எப்போதும் அழகாக வைத்திருக்கும்



நூல்கள் அறிமுகம்....!

 இனிய தருணம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை, கல்லூரி தோழர் குமரேஸ்வரன் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த  இனிமையான தருணம்.



ஹாஃபிஸ் சையத் ஜைத் சாதிக் சாதனை....!

ஜே.இ.இ. மெயின் தேர்வு :

ஹாஃபிஸ் சையத் ஜைத் சாதிக் 99 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை....!

நாசிக், ஏப்.27- நாசிக்கைச் சேர்ந்த 15 வயது ஹாஃபிஸ், குர்ஆனை மனப்பாடம் செய்துகொண்டே ஜே.இ.இ. மெயின் தேர்வில் 99 புள்ளி 927 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார்.  கட்டுப்பாடு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழும் வகையில், நாசிக்கைச் சேர்ந்த  ஹாஃபிஸ்' சையத் ஜைத் சாதிக், JEE Main 2026 (இரண்டாம் அமர்வு) தேர்வில் 99 புள்ளி 927 சதவீத மதிப்பெண் பெற்று, நாசிக் நகரத்திலேயே அதிக மதிப்பெண் பெற்ற மாணவராக உருவெடுத்துள்ளார்.

இதன்மூலம், அசோகா கல்லூரியின் மாணவரான சையத் ஜைத் சாதிக், தீவிரமான கல்விப் பயிற்சியையும் ஆழ்ந்த மத ஈடுபாட்டையும் சமநிலையில் கையாண்டு, மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

15 வது வயதில் ஹாஃபிஸ் :

மேலும், சையத் ஜைத் சாதிக் தனது 15-வது வயதிற்குள்ளேயே முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்து முடிக்கும் அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். தனது ஆரம்பகால மதக் கல்வியை மதரஸாக்கள் மூலம் பயின்ற அவர், பள்ளிப் படிப்பு காரணமாக ஏற்பட்ட நேர நெருக்கடியால், 9-ம் வகுப்பில் பயிலும்போது ஒரு ஆசிரியரின் வழிகாட்டுதலிலும் தனது தாயாரின் மேற்பார்வையிலும் வீட்டிலிருந்தபடியே குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்து முடித்தார்.

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 95 சதவீத மதிப்பெண் பெற்றபோதே அவரது கல்வித் திறமை வெளிப்பட்டது. அதே சீரான செயல்திறனைத் தொடர்ந்து கடைப்பிடித்த ஜைத், ஜே.இ.இ.  மெயின்  தேர்வின் இரண்டு அமர்வுகளிலும் 99 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.  அவரது தந்தை சையத் சாதிக் மற்றும் தாயார் சையத் ஜௌக்கியா ஆகியோரின் ஆதரவுடன், பல மாதங்களாக அவர் மேற்கொண்ட தீவிரமான மற்றும் ஒருமுகப்படுத்தப்பட்ட பயிற்சியே, கல்விக்கும் மதக் கல்விக்கும் இடையே ஒரு சரியான சமநிலையைப் பேண அவருக்கு உதவியது.

கல்விப் பின்னணி கொண்ட குடும்பம் :


கல்விப் பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த,சையத் ஜைத் சாதிக், மறைந்த சையத் சத்தார் அலி ரோஷன் என்பவரின் பேரனாவார். சையத் சத்தார் அலி ரோஷன் ஒரு மதிப்பிற்குரிய முன்னாள் நகராட்சிப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர்.

சையத் ஜைத் சாதிகின் நேர மேலாண்மைத் திறனைப் பாராட்டிப் பேசிய அசோகா கல்லூரியைச் சேர்ந்த ஒரு ஆசிரியர், "முறையான கால அட்டவணை மற்றும் முழுமையான கவனத்துடன் செயல்பட்டால், மாணவர்கள் கல்வி மற்றும் மதக் கல்வி ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்க முடியும் என்பதை ஜைத் நிரூபித்துக் காட்டியுள்ளார்" என்று பெருமையுடன் கூறியுள்ளார். 

ஒரு புகழ்பெற்ற இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி.) இடம் பிடிக்கும் கனவுடன், சையத் ஜைத் சாதிக்,  தற்போது JEE Advanced தேர்வுக்கான தீவிரத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவரது இந்த வெற்றிக்கு, நாசிக் நகரம் முழுவதிலுமிருந்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

===========================