Monday, June 8, 2026

நிறை குறை....!

 குறைகளை நாம் படிப்படியாக குறைக்க

 தொடங்கினாலே போதும், தானாகவே

 நம்முடைய நிறைகள் நிறைந்துக் கொண்டே

 போகும். குறைகளை 

குறைக்க முயற்சி செய்வோம். 

நிறைகளை வளர்த்துக் கொள்வோம்.



சமையல்....!

This is the original way to make steamed rice using the afghan recipe...!



Sunday, June 7, 2026

டெல்லி தீ விபத்தின்போது முஸ்லிம்கள் வெளிப்படுத்திய மனிதநேயம்....!

" டெல்லி தீ விபத்தின்போது முஸ்லிம்கள் வெளிப்படுத்திய மனிதநேயம் "

இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக தொலைக்காட்சி ஸ்டுடியோக்கள், பாஜக அமைச்சர்கள் மற்றும் சமூக ஊடக வலதுசாரிகள் தொடர்ந்து மதப் பிரிவினையையும் வெறுப்பையும் பரப்புவதில் மும்முரமாக இருக்கும் வேளையில், டெல்லியில் முஸ்லிம்கள் வெளிப்படுத்திய மனிதநேயம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தாங்கள் உண்மையான இந்தியர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை முஸ்லிம்கள்  நிரூபித்துள்ளனர். டெல்லி ஹோட்டல் கட்டடத்தை தீப்பிழம்புகள் சூழ்ந்தபோது, ​​உள்ளே விரைந்து சென்று தங்கள் உயிரைப் பணயம் வைத்த முதல் நபர்களில் அமீர் கான், முகமது ஷோயப், வசிம் ராஜா, முகமது அஃப்சல் மற்றும் ஹவுஸ் ராணி கிராமத்தைச் சேர்ந்த பலரும் அடங்குவர்.

அவர்கள் தீ விபத்தில் சிக்கிய யாரிடமும் மதத்தைக் கேட்க நிற்கவில்லை. உயிர்களைக் காப்பாற்றுவதற்கு முன்பு அவர்கள் பெயர்களைக் கேட்கவில்லை. உள்ளே சிக்கியிருந்த சக மனிதர்களைப் பார்த்த அவர்கள், மற்றவர்கள் ஆபத்திலிருந்து விலகி ஓடியபோது, ​​ஆபத்தை நோக்கி ஓடினார்கள். மற்றொரு அசாதாரணமான வீரச் செயலாக, ரியாசுதீன் தனது கடைகளைத் திறந்து, உள்ளூர்வாசிகள் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் சுமார் 20 முதல் 22 மெத்தைகளை உயிர் காக்கும் கயிறுகளாக மாற்றி, எரிந்து கொண்டிருந்த கட்டடத்திற்கு வெளியே வைத்தனர். இதனால் மேல் தளங்களிலிருந்து குதித்தவர்களுக்கு உயிர் பிழைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. பேரழிவு ஏற்படும்போது, ​​உயிர்களைக் காப்பாற்றுவது மந்திர் அல்லது மஸ்ஜித் அல்ல. அசாதாரணமான தைரியத்துடன், ஒருவருக்கொருவர் வெறுப்பை மறந்து, ஒன்றுபட்டு, ஒத்துழைப்புடன் செயல்படும் சாதாரண மக்களே உயிர்களைக் காப்பாற்றுகிறார்கள்.

முஸ்லிம்களின் மனிதநேயம் :

தெற்கு டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த புதன்கிழமை 3ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டஜன் கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த கோர விபத்தின் போது, தங்களின் சொந்த உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் எரியும் கட்டடத்திற்குள் புகுந்து பல உயிர்களை 5 முஸ்லிம் இளைஞர்கள் காப்பாற்றியுள்ளனர் 

மால்வியா நகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ சதீஷ் உபாத்யாய், மீட்புப் பணியில் ஈடுபட்ட அந்த 5 இளைஞர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அவர்களின் வீரத்தைப் பாராட்டியுள்ளார். “இந்த மாவீரர்களுக்கு எனது சல்யூட்” என்று குறிப்பிட்டுள்ள அவர், அந்த இளைஞர்களை அஃப்ஸல், முகமது ஷாருக், முகமது அனீஷ், முகமது ஆமிர் மற்றும் முகமது வசீம் என அடையாளம் காட்டியுள்ளார். டெல்லி போலீஸாருடன் இணைந்து, இந்த இளைஞர்கள் எரியும் கட்டடத்திற்குள் பலமுறை சென்று, உள்ளே சிக்கியிருந்தவர்களைப் பத்திரமாக வெளியேற்ற உதவியதாக எம்.எல்.ஏ பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதியவர் ரியாசுதீன் செய்த காரியம் :

தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பே, அப்பகுதி மக்களும் வியாபாரிகளும் உடனடியாக மீட்புப் பணியில் குதித்தனர். ஹோட்டலுக்கு எதிரே மெத்தைக்கடை நடத்தி வரும் 61 வயதான ரியாசுதீன் என்பவர் செய்த காரியம் பலரது நெஞ்சைத் தொட்டுள்ளது. கட்டடத்தில் தீப்பிடித்ததும், மாடியிலிருந்து குதிக்க முயன்றவர்களைக் காப்பாற்ற, தனது கடையிலிருந்த அனைத்து மெத்தைகளையும் இழுத்து வந்து கீழே இருந்த குறுகிய பாதையில் விரித்தார்.

                                                ==================

"துயரமான தீ விபத்தில், சாதி மதங்களைக் கடந்து மனிதநேயத்துடன் செயல்பட்டு பல உயிர்களைக் காத்த முஸ்லிம் இளைஞர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக அமீர் கான், முகமது ஷோயப், வசிம் ராஜா, முகமது அஃப்சல் மற்றும் பலரும் மனிதநேயத்துடன் செயல்பட்டு பல உயிர்களை காப்பற்றியது உலக அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. மெத்தைக்கடை வியாயாரி ரியாசுதீன் செய்த மனிதநேய காரியம் பலரது நெஞ்சைத் தொட்டுள்ளது"

                                            ==================

இதனால் மாடியிலிருந்து குதித்த பலருக்குப் பலத்த காயம் ஏற்படாமல் உயிர் தப்பினர். இந்த மீட்பு நடவடிக்கையில் ரியாசுதீனுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், “பணம் போனால் என்ன, குறைந்தது 10 பேரின் உயிரையாவது என்னால் காப்பாற்ற முடிந்ததே, அதுவே எனக்கு மனநிறைவு” என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அதிகாரி வசீம் ரசாவின் பணி :

ஹோட்டல் கட்டடத்தின் அருகிலுள்ள மேக்ஸ் மருத்துவமனையின் பாதுகாப்பு அதிகாரியான வசீம் ரசா, கட்டிடத்தின் அடித்தளம் முதல் மூன்றாவது மாடி வரை புகைக்கு நடுவே சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். “நான் கட்டடத்திற்குள் மூச்சுத் திணறியபடி இருந்த குறைந்தது 10 பேருக்கு சி.பி.ஆர். (இதய நுரையீரல் புத்துயிரூட்டல்) முதலுதவி சிகிச்சை அளித்துக் காப்பாற்றினேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் தீயணைப்புப் பயிற்சிப் பயிற்சியாளரான முகமது சோயிப்,  மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்பே நிலைமை மோசமடைந்ததால், பயத்தில் சுமார் 9 பேர் மாடியிலிருந்து கீழே குதித்ததாகக் குறிப்பிட்டார். இந்த விபத்தில் மொத்தம் 47 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 21 பேரில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 9 பேர் மற்றும் துர்க்மெனிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 2 பேர் என 11 வெளிநாட்டினரும் அடங்குவர். எஞ்சியவர்கள் இந்தியர்கள் ஆவர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த ஹோட்டல் தீயணைப்புத் துறையின் முறையான அனுமதி  இன்றி இயங்கியது தெரியவந்துள்ளது. மேலும், 6 அறைகளுக்கு மட்டுமே அனுமதி பெற்றுவிட்டு, சட்டவிரோதமாக 20-க்கும் மேற்பட்ட அறைகளை அவர்கள் நடத்தியுள்ளனர். கட்டடத்திற்கு ஒரே ஒரு நுழைவு மற்றும் வெளியேறும் வழி மட்டுமே இருந்ததால், மக்கள் தப்பிக்க முடியாமல் போயுள்ளது.

குவியும் பாராட்டுகள் :

துயரமான இந்த விபத்தில், சாதி மதங்களைக் கடந்து மனிதநேயத்துடன் செயல்பட்டு பல உயிர்களைக் காத்த இந்த உள்ளூர் முஸ்லிம் இளைஞர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக அமீர் கான், முகமது ஷோயப், வசிம் ராஜா, முகமது அஃப்சல் மற்றும் ஹவுஸ் ராணி கிராமத்தைச் சேர்ந்த பலரும் மனிதநேயத்துடன் செயல்பட்டு பல உயிர்களை காப்பற்றியது உலக அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. இந்திய முஸ்லிகள் மீது தொடர்ந்து வெறுப்பு விதைக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை மறந்துவிட்டு, ஆபத்து நேரத்தில் மிகவும் துணிச்சலுடன் முஸ்லிம்கள் செயல்பட்டு, பல உயிர்களை காப்பாற்றியுள்ளனர். 

மெத்தைக்கடை நடத்தி வரும் முதியவர் ரியாசுதீன் செய்த மனிதநேய காரியம் பலரது நெஞ்சைத் தொட்டு அவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவருக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்யும் நோக்கில் பல சமூக தொண்டு நிறுவனங்கள் ரியாசுதீனுக்கு நிதியுதவி செய்துள்ளனர். இதன் காரணமாக பல லட்சம் ரூபாய் இழப்பை சரிசெய்ய ஒரு வழி அவருக்கு கிடைத்துள்ளது. இந்திய முஸ்லிம்கள் எப்போதும் மனிதநேயம் மிக்கவர்கள். ஆபத்து நேரங்களில் சாதி, மதம் பார்க்காமல் உதவிக்கரம் நீட்டுபவர்கள் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து எடுத்துக்காட்டுகளாக இருந்து வருகின்றன. அதற்காக முஸ்லிம்கள் அனைவரும் பெருமைக் கொள்ள வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


மகிழ்ச்சி....மகிழ்ச்சி...!

மகிழ்ச்சியான தருணம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை ஊடகத் தோழர் டி.டி.தமிழ் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் முஹம்மது ரியாசுதீன் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.






Without fear....!

Accept your past without regret. 

Handle your present with confidence. 

And face your future without fear.



விட்டுக் கொடுப்பது....!

 மற்றவர்களுக்காக விட்டுக் 

கொடுத்துப் போவதும் 

அனுசரித்துச் செல்வதும் தவறில்லை. 

ஆனால், இதையே வாடிக்கையாக்கிவிட்டால் 

நமக்கும் உணர்வுகள் இருப்பதையே

 மறந்துவிடுவார்கள். 

இதுதான் மனித இயல்பு. 

விட்டுக் கொடுப்பவர்களுக்கு 

மரியாதை கொடுங்கள்.