அமைதியாக இருப்பவர்கள்
எல்லோரும் விவரம்
தெரியாதவர்கள் இல்லை.
எதற்கும் பயந்தவர்கள் அல்ல.
ஆனால், அனுசரிக்க தெரிந்தவர்கள்.
அமைதி சில நேரங்களில் மட்டுமல்ல
பல சமயங்களிலும் உதவும் குணமாகும்.
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
அமைதியாக இருப்பவர்கள்
எல்லோரும் விவரம்
தெரியாதவர்கள் இல்லை.
எதற்கும் பயந்தவர்கள் அல்ல.
ஆனால், அனுசரிக்க தெரிந்தவர்கள்.
அமைதி சில நேரங்களில் மட்டுமல்ல
பல சமயங்களிலும் உதவும் குணமாகும்.
When a Crow feels sick, it goes to an Ant nest and deliberately disturbs it. The Ants get angry and start climbing on the Crow.
But the Crow doesn't move. It stays still with its wings open. The Ants then spray formic acid on the Crow. This acid helps remove germs and fungi, like a natural medicine.
After this, the crow feels better. So Smart!
இனிய தருணம்...!
வேலூர் ஆடிட்டர் பொன்.தேவதாஸ் அலுவலகத்தில் பம்பரமாக பணியாற்றும் தோழர் சத்தியநாராயணன் சிங்காரம் அவர்களுக்கு, என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' ஆகிய இரண்டு நூல்களை வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.
தோழருக்கு எமது வாழ்த்துகள். Happy greetings bro. Sathyanarayanan Singaram
எந்த இடத்தில் இருந்தாலும்
மகிழ்ச்சியாக இருங்கள்.
சுற்றியுள்ள மற்றவர்களின்
மகிழ்ச்சிக்கு துணை நில்லுங்கள்.
எப்போதும் மற்றவர்களுக்கு
துணையாக இருங்கள்.
அதுவே உங்களுக்கு
மகிழ்ச்சியை தரும்...
" மத வேறுபாடுகளைக் கடந்து மனிதாபிமானம்
வெளிப்பட்ட ஒரு நிகழ்வு "
மத ரீதியான பிளவுகள் குறித்த விவாதங்கள் நாட்டிலி அதிகம் நடைபெறும் சூழலில், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தின் புடான் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமணம், வேறொரு காரணத்திற்காக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முஸ்லிமான பாப்லு சித்திக் மற்றும் அவரது வளர்ப்பு இந்துச் சகோதரி தீபான்ஷி ஆகியோரின் கதை உள்ளூர் அளவிலும் சமூக ஊடகங்களிலும் தற்போது பெரும் வரவேற்றைபெற்று பேசுபொருளாகியுள்ளது. அவர்கள் இருவருக்கும் இடையிலான பிணைப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்துப் பெண்ணுக்கு ஆதரவு :
உஜ்ஹானி நகரில் நடைபெற்ற இத்திருமணத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பே பெற்றோரை இழந்த இந்துப் பெண்ணான தீபான்ஷியின் திருமணப் பொறுப்பை, உள்ளூர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பாப்லு சித்திக் ஏற்றுக்கொண்டார். அவரைத் தனது சொந்தத் தங்கையாகக் கருதி, அவரும் அவரது குடும்பத்தினரும் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்தினர்.
குடும்பத்தினரின் தகவல்படி, தீபான்ஷி பாப்லு வசித்த அதே பகுதியில்தான் வளர்ந்தார். இரு குடும்பங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாகப் பழக்கம் இருந்த நிலையில், காலப்போக்கில் அவர்களுக்கிடையே நெருக்கமான சகோதர-சகோதரி உறவு மலர்ந்தது. தீபான்ஷியின் பெற்றோர் மறைவுக்குப் பிறகும், பாப்லுவும் அவரது குடும்பத்தினரும் அவருக்குத் தொடர்ந்து ஆதரவளித்து, அவரது வாழ்க்கையில் நெருக்கமாகத் துணையாக நின்றனர்.
இந்து முறைப்படி திருமணம் :
தீபான்ஷி மற்றும் கமல்காந்த் ஆகியோரின் திருமணம் கடந்த ஜூலை 8ஆம் தேதி அன்று உஜ்ஹானியில் உள்ள 'எஸ்.எஸ். கிரீன் பேலஸ்' மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமணம் இந்து முறைப்படியும் பாரம்பரியப்படியும் நடத்தப்பட்டது. மணப்பெண்ணின் குடும்பத்தினர் வழக்கமாகச் செய்யும் 'கன்யாதான்' சடங்கை முஸ்லிமான பாப்லு சித்திக் செய்தபோது, அது மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது.
இந்த உறவு குறித்துப் பேசிய பாப்லு சித்திக், "தீபான்ஷி சிறுவயதிலிருந்தே எனக்குத் தங்கை போன்றவள். எங்கள் குடும்பங்களுக்கு இடையே எப்போதும் நெருக்கமான பிணைப்பு இருந்து வருகிறது. அன்பு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த உறவு, ரத்த உறவுக்குச் சற்றும் குறைவானதல்ல," என்று கூறினார். தனது தங்கையின் திருமணம் கண்ணியத்துடனும் மகிழ்ச்சியுடனும் நடைபெற வேண்டும் என்றும், இத்தகைய முக்கியமான நாளில் அவர் ஒருபோதும் தனிமையை உணரக்கூடாது என்றும் தான் விரும்பியதாக அவர் தெரிவித்தார்.
திருமண ஏற்பாடுகளின் பொறுப்பையும் பாப்லுவே ஏற்றுக்கொண்டார். வெளியாரின் உதவியின்றி நிகழ்வை ஏற்பாடு செய்ததாகவும், அனைத்துத் தயாரிப்புகளையும் முன்கூட்டியே முடித்ததாகவும் அவர் கூறினார். இரு குடும்பத்தினர் மற்றும் திருமணத்தில் பங்கேற்றவர்கள் என சுமார் 800 விருந்தினர்களுக்கு உணவு மற்றும் பிற வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
===============
"பாப்லுவும் அவரது குடும்பத்தினரும் தனது சொந்தப் பெற்றோரைப் போலவே தனக்குத் துணையாக நின்றார்கள். அவர்கள் இல்லாத குறையை ஒருபோதும் உணரவிடவில்லை என்று தீபன்ஷி கூற, அன்பு, நம்பிக்கை மற்றும் அக்கறை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த உறவுகள், ரத்த உறவுகளுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தவை என்று பாப்லு குறிப்பிட்டார்"
===============
"ஒவ்வொரு சகோதரனும் தன் தங்கைக்காக விரும்புவதைப் போலவே, அவளும் மகிழ்ச்சியுடனும் மரியாதையுடனும் தனது புதிய இல்லத்திற்குச் செல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன்," என்று பாப்லு சித்திக் கூறினார். பாப்லுவும் அவரது உறவினர்களும் திருமணத்தின் அனைத்து சடங்குகளிலும் தீவிரமாகப் பங்கேற்று, நிகழ்ச்சி முழுவதும் தீபன்ஷிக்கு உறுதுணையாக இருந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது பெற்றோர் இல்லாத குறையை மறக்கடிக்கும் வகையில், குடும்பத்தினரின் அரவணைப்பில் அவர் இருப்பதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் கூறினர்.
மறக்க முடியாத முஸ்லிம் சகோதரன் :
திருமணச் சடங்கின்போது அந்த நிகழ்வின் உணர்வுபூர்வமான முக்கியத்துவம் வெளிப்பட்டது. தீபன்ஷி பலமுறை உணர்ச்சிவசப்பட்டார். தனது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில் தனக்குத் துணையாக நின்ற பாப்லு மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். "பாப்லு அண்ணாவும் அவரது குடும்பத்தினரும் என் திருமணத்தை, நான் அவர்களின் சொந்த மகளாகவும் சகோதரியாகவும் இருக்கும் வகையிலேயே ஏற்பாடு செய்தனர். என் பெற்றோர் என்னுடன் இல்லை என்ற உணர்வை அவர்கள் எனக்கு ஒருபோதும் ஏற்படவிடவில்லை. ஒவ்வொரு பொறுப்பும் அன்போடும் அக்கறையோடும் நிறைவேற்றப்பட்டது." என்று அவர் கூறினார். அன்பு மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமைந்த உறவுகள், சமூக மற்றும் மத ரீதியான வேறுபாடுகளை எவ்வாறு கடந்து செல்ல முடியும் என்பதை இந்த திருமணம் உணர்த்தியதாக அவர் மேலும் கூறினார்.
திருமணத்தில் கலந்துகொண்ட உள்ளூர்வாசிகள், இது ஒரு மறக்க முடியாத நிகழ்வு என்றும், அப்பகுதி குடும்பங்களுக்கிடையேயான நீண்டகால பிணைப்பை இது பிரதிபலிப்பதாகவும் கூறினர். பாப்லு சித்திக் மற்றும் அவரது குடும்பத்தினரின் முயற்சிகளைப் பல விருந்தினர்கள் பாராட்டினர். கருணை, ஆதரவு மற்றும் சமூக உறவுகளின் முக்கியத்துவத்தை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
பாராட்டைப்பெற்ற அழகிய செயல் :
இந்த திருமணச் செய்தி உஜ்ஹானிக்கு அப்பாலும் கவனத்தை ஈர்த்துள்ளது. பல சமூக ஊடகப் பயனர்கள் பாராட்டுச் செய்திகளைப் பகிர்வதுடன், இந்தத் திருமணத்தை நட்பு, குடும்ப விழுமியங்கள் மற்றும் மனிதநேயத்தின் சிறந்த உதாரணமாகவும் வர்ணித்து வருகின்றனர். இருப்பினும், திருமணத்தில் கலந்துகொண்டவர்களைப் பொறுத்தவரை, இந்த நிகழ்வு பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கானது அல்ல. இது ஒரு சகோதரன் தனது சகோதரிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதையும், அக்கறை, மரியாதை மற்றும் அன்பின் சூழலில் அவள் தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டதாகவே அமைந்தது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
2027ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயணம்:
கடவுச்சீட்டு விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலித்து உடனே வழங்க வேண்டும்.....!
அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும் ஒன்றிய அரசு உத்தரவு.....!!
புதுடெல்லி, ஜுலை.14- 2027ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இந்திய பயணிகள் அனைவருக்கும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மண்டல பார்ஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
2027ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் இந்திய பயணிகள் அனைவரும் இந்த மாதம் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பித்து வருகிறார்கள்.
ஒன்றிய அரசு உத்தரவு :
இதுஒருபுறம் இருக்க, புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய பயணிகளுக்கு விரைந்து கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் துணைச் செயலாளர் சோமிகா ஸ்ரீவஸ்தவா பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இந்திய அரசின் துணைச் செயலாளர் வெளியிட்டுள்ள குறிப்பாணையில், ஒன்றிய அரசின் சிறுபான்மையினர் நலன்துறை அமைச்சகத்தின் குறிப்பின்படி, 2027ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயணத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு விரைவுப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு முடிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசு விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், எனவே புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் அனைத்துப் பயணிகளுக்கும் 31.12.2027 வரையில் செல்லத்தக்க வகையிலான பாஸ்போர்ட் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் :
எனவே, புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில், பாஸ்போர்ட் விண்ணப்பம் அளித்துள்ள அனைத்து பயணிகளின் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனைச் செய்து விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக காவல்துறை விசாரணை உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகளை எளிமையாகவும் விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும்.
மேலும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், கடைசி நேரத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பம் அளிக்கும் நபர்களின் விண்ணப்பங்களுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய நபர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும். இதற்காக தனி சேவை மையங்கள் அமைக்க வேண்டும். அந்த மையங்கள் மூலம் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சிறப்பான பணியில் அனைத்து சரிபார்ப்பு அதிகாரிகள், பாஸ்போர்ட் வினியோகம் செய்யும் அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் தனிக் கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் துணைச் செயலாளர் சோமிகா ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள குறிப்பாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்