Thursday, April 30, 2026

வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் ஊடகத்துறையின் தரம்...!

" வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் ஊடகத்துறையின் தரம் "

- மக்களை மனரீதியாக பாதிக்க வைக்கும் சமூக வலைத்தளங்கள் -

ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக உள்ள ஊடகத்துறை, கடந்த சில ஆண்டுகளாக வலுவிழந்து வீழ்ச்சியை நோக்கிச் சென்றுக் கொண்டு இருக்கிறது. சுதந்திரமாக செயல்பட்டு வந்த ஊடகத்துறை, தற்போது கார்ப்பரேட்டுகளின் கைகளில் சிக்கி. தனது உண்மையான சுதந்திரமான செயல்பட்டை விட்டுவிட்டு, கார்ப்பரேட் முதலாளிகளின் ஊதுகுரலாக மாறிவிட்டது. எனவே வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் ஊடகத்துறையின் தரம் என்பது இன்றைய காலகட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான அம்சமாக மாறியுள்ளது. 

கடந்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு,ஊடகங்கள் மிகவும் சுதந்திரமாக செயல்பட்டு, தங்களது ஜனநாயகக் கடமையை திறம்பட செயலாற்றின. ஆனால், அண்மைக் காலமாக ஊடகங்களின் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைந்துகொண்டே செல்கிறது. அதற்கு முக்கிய காரணம்,  தற்போது பிரபலமான ஊடகங்கள் செய்திகளைத் தருவதை விடுத்து, ஆளும் தரப்பு அல்லது அரசியல் தலைவர்களின் கருத்துக்களை மட்டுமே முன்னிறுத்துகின்றன. இதனால் சமூகப் பொறுப்புணர்வு குறைந்து, உண்மையான செய்திகள் மறைக்கப்படுகின்றன. தற்போதைய சூழலில், பத்திரிகை மற்றும் ஊடகங்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி மற்றும் வர்த்தகக் கொள்கைகள் ஊடகங்களின் தரமான செயல்பாட்டிற்குப் பெரிய தடையாக உள்ளன.

மேலும் நவீன டிஜிட்டல் யுகத்தில், நுகர்வோருக்குத் தேவைப்படும் தகவல்களுக்குப் பதிலாக, ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட, பொழுதுபோக்கு மற்றும் மேம்போக்கான செய்திகள் அதிகமாக வழங்கப்படுகின்றன. ஆழமான களப்பணியுடன் கூடிய புலனாய்வு இதழியல் குறைந்து, பரபரப்புக்காக செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது, சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆய்வுகளைத் தவிர்த்து, வெறும் போட்டிச் செய்திகளாக ஊடகங்களை மாற்றியுள்ளது. சமூகத்தின் தற்போதைய சூழல், மக்களின் வாழ்வாதாரம் போன்றவற்றைப் பற்றி அறியாமல், அரசியல் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காகச் செயல்படும் ஊடகங்களின் போக்கு, இளம் தலைமுறையினரைத் தவறான வழியில் கொண்டு செல்கிறது.  

உண்மை நிலையில் இருந்து விலகல் :

தற்போது, சமூக வலைத்தளங்கள் உலகம் முழுவதும்  அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஊடகங்களின் மீதான பார்வை அல்லது கவனம் மக்கள் மத்தியில் குறைந்துகொண்டே வருகிறது. செய்தி வாசிப்புகள், உலக நடப்புகளை ஆய்வு செய்தல் என ஒரு காலத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த மக்கள், தற்போது தங்களது செல்பேசி மூலம் அனைத்துத் தகவல்களையும் பெற்று விடுகிறார்கள். இப்படி சமூக வலைத்தளங்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் உண்மை என்றும் மக்கள் நம்பி விடுகிறார்கள். 

இதன் காரணமாக, பிரபலமாக ஊடகங்கள் கூட, தங்கள் நிலைப்பாடுகளில் இருந்து விலகி, மக்களுக்கு விருப்பமான செய்திகளை, தகவல்களை தர வேண்டும் என நினைக்க ஆரம்பித்துவிட்டன. மக்கள் விரும்பும் செய்திகளை கொடுப்பதன் மூலம் தங்களது ஊடக வணிகத்தை மேம்படுத்த முடியும் என்றும் ஊடக முதலாளிகள் நம்புகிறார்கள். இதன் காரணமாக, ஊடகங்களில் பணிபுரியும் ஆசிரியர் குழு, சுதந்திரமாக செயல்பட வேண்டிய கட்டாய நிலையில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. 

                                                        ===================

"ஊடகங்கள் தங்களின் வர்த்தக நோக்கங்களை விடுத்து, உண்மையான மற்றும் நடுநிலையான செய்திகளை வழங்குவதன் மூலமே ஊடகத்துறையின் தரத்தை மேம்படுத்த முடியும். இனி வரும் நாட்களில், ஊடகத்துறை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, சிறப்புடன் செயல்பட்டாமல் மட்டுமே,  ஊடகங்கள் மீது மக்களுக்கு மீண்டும்  நம்பிக்கை ஏற்படும்"

                                                        ===================

இதனால், வாசகர்களுக்கு உண்மை தகவல்கள் மறைக்கப்படுகின்றன. மக்கள் மத்தியில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஜனநாயக நெறிமுறைகள் மீறப்படுகின்றன. இதனால் ஊடகத் தர்மம் காணாமல் போய்விடுகிறது. இதற்கு பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். 

ஊடகங்களின் நிலையில் தடுமாற்றம் :

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, பெரும்பாலான ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதை நாம் கடந்த 12 ஆண்டுகளாக கண்டு வருகிறோம். ஆளும் கட்சிக்கு எதிரான தகவல்கள், குற்றச்சாட்டுகள் மறைக்கப்படுகின்றன. நாட்டில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் மூடி மறைக்கப்படுகின்றன. சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் மக்களின் வாழ்க்கை நிலை குறித்த உண்மை நிலவரங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுவதில்லை. புலனாய்வு பத்திரிகைகள் கூட தற்போது, பல உண்மை செய்திகளை மறைத்துவிடுகின்றன. ஆளும் தரப்பு செய்யும் பல ஜனநாயக விரோதச் செயல்களை கூட, இன்றைய ஊடகங்கள் வெளியிடாமல் மூடி மறைத்துவிடுகின்றன. 

இதனால் இந்திய ஊடகங்களின் நிலையில் தடுமாற்றம் இருப்பதை நாம் காணலாம். தேர்தல் காலங்களில், உண்மை தகவல்களை ஊடகங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம், ஒன்றிய பாஜக அரசின் மீது இருக்கும் பயம் தான் முக்கிய காரணம் என சொல்லலாம். எதிர்க்கட்சிகளின் குரல்களை, அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை, அவர்களின் எண்ணங்களை பிரபலமான  ஊடகங்கள் மூடி மறைக்கின்றன. தேர்தலில் வெற்றி வாய்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு இருந்தாலும் கூட, அப்படி ஒரு நிலை இல்லை என்ற வகையில் பிரபலமான ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. 

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, அண்மையில் நடந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் என கூறலாம். பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளும் பாஜக தரப்புக்கு எதிராக மக்களின் கோப அலை இருந்துவந்தாலும், அப்படி ஒரு நிலை இல்லை என்ற வகையிலேயே ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இதேபோன்று, தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள், மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவற்றை சில ஊடகடங்கள் பாராட்டவில்லை. மாறாக, குறைகளை மட்டுமே கண்டன. 

கொள்கை எதுவும் இல்லாத, சினிமா கவர்ச்சியை மட்டுமே கொண்ட ஒரு நடிகரின் கட்சிக்கு சில ஊடகங்கள் ஆதரவு கரம் நீட்டியது மட்டுமல்லாமல், கருத்துக்கணிப்பு என்ற பெயரில், அந்த நடிகர் கட்சிக்கே வாய்ப்புகள் அதிகம் என்று பொய்யான கணிப்புகளையும் கூட வெளியிட்டன. இதேபோன்று, சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் மீது தங்கள் பொய்யான தகவல்களை சில ஊடகங்கள் திணித்தன. இதன்மூலம் மக்கள் மன ரீதியாக பாதிக்கும் வகையில் சமூக வலைத்தங்கள் செயல்பட்டன. 

அதேநேரத்தில், ஒருசில ஊடகவியலாளர்கள், தங்கள் ஊடகப் பணியின் முக்கியத்துவதை நன்கு உணர்ந்துகொண்டு, பொறுப்புடன் செயல்பட்டதை நாம் இந்த தேர்தலில் காண முடிந்தது. திராவிட மாடல் ஆட்சியின் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறிய அவர்கள், திமுக ஆட்சியின் சில குறைகளை விமர்சனம் செய்வதையும் நிறுத்தவில்லை. இதுதான் உண்மையான ஊடகத் தர்மம் ஆகும். ஊடகங்கள் தங்களின் வர்த்தக நோக்கங்களை விடுத்து, உண்மையான மற்றும் நடுநிலையான செய்திகளை வழங்குவதன் மூலமே ஊடகத்துறையின் தரத்தை மேம்படுத்த முடியும். இனி வரும் நாட்களில், ஊடகத்துறை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, சிறப்புடன் செயல்பட்டாமல் மட்டுமே, ஊடகங்கள் மீது மக்களுக்கு மீண்டும்  நம்பிக்கை ஏற்படும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Wednesday, April 29, 2026

ஹஜ் விதிமுறைகளை மீறியவர்கள் கைது.....!

ஹஜ் விதிமுறைகளை மீறியவர்கள் கைது.....!

மக்கா பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.....!! 

ஜித்தா ஏப்.30- ஹஜ் அனுமதிச் சீட்டு இல்லாத நபர்கள் மக்காவிலும் புனிதத் தலங்களிலும் நுழைவதையோ அல்லது தங்குவதையோ தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். விதிகளை மீறுபவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத புனிதப் பயணங்களுக்குத் துணை நிற்பவர்கள் கைது மற்றும் சட்டரீதியான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் பாதுகாப்பு படைகள் எச்சரித்துள்ளன.

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் அனுமதிச் சீட்டு கட்டாயம் பெற வேண்டும் என சவூதி அரேபியா அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, மக்காவில் நுழைய அனுமதிச்  சீட்டு கட்டாயம் என்ற விதி தற்போது கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விதியை மீறுபவர்கள் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மக்கா பாதுகாப்பு அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். 

தொடரும் கைது நடவடிக்கை :

இந்நிலையில், மக்காவிற்குள் நுழைவதற்கான போலி அனுமதிச் சீட்டுகளை வழங்குவதாக சமூக ஊடகங்களில் மோசடியான மற்றும் தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக, யேமன் நாட்டைச் சேர்ந்த ஒருவரை மக்கா காவல்துறை கைது செய்தனர்.  இதேபோன்று, மற்றொரு சம்பவத்தில், ஹஜ் அனுமதிச் சீட்டு பெறாமல் மக்காவிற்குள் நுழைந்து தங்கியதன் மூலம் ஹஜ் விதிமுறைகளை மீறியதற்காக, எகிப்தைச் சேர்ந்த ஐந்து பேரை மக்கா காவல்துறை கைது செய்தது.

மேலும், ஹஜ் அனுமதிச் சீட்டு இல்லாமல் ஐந்து சக நாட்டுக்காரர்களை ஏற்றிச் சென்று மக்காவிற்குள் நுழைய முயன்று ஹஜ் விதிமுறைகளை மீறியதற்காக, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரையும் ஹஜ் பாதுகாப்புப் படைகள் கைது செய்தன.

மற்றொரு சம்பவத்தில், ஒரு சரக்கு வாகனத்தில் மறைக்கப்பட்ட அறைகளில் இரண்டு சக எகிப்தியர்களை ஏற்றிச் சென்று ஹஜ் அனுமதிச் சீட்டு இல்லாமல் மக்காவிற்குள் நுழைய முயன்று ஹஜ் விதிமுறைகளை மீறியதற்காக, எகிப்தைச் சேர்ந்த ஒருவரை பாதுகாப்புப் படைகள் தடுத்து வைத்தன. இதேபோன்று, ஹஜ் விதிமுறைகளை மீறி ஆறு குடியிருப்பாளர்களை மக்காவிற்குள் அழைத்துச் செல்ல முயன்றதற்காக, மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அனைவரும் அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை :

ஹஜ் பருவம் தொடங்குவதற்கு முன்னதாக, பாதுகாப்பான மற்றும் சுமுகமான புனிதப் பயணத்தை உறுதி செய்வதற்காக, அனுமதி விதிமுறைகளை மீறுபவர்களுக்கான தண்டனைகளை சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 18 முதல் மே 31 வரை மக்கா அல்லது புனிதத் தலங்களுக்குள் நுழையும் அல்லது தங்கியிருக்கும் விசிட் விசா வைத்திருப்பவர்கள் உட்பட, அனுமதி இல்லாமல் ஹஜ் செய்பவர்கள் அல்லது முயற்சிப்பவர்களுக்கு 20 ஆயிரம் சவூதி ரியால் வரை அபராதம் விதிக்கப்படும்.

அதே காலகட்டத்தில், அனுமதி இல்லாமல் ஹஜ் செய்பவர்கள் அல்லது முயற்சிப்பவர்கள், அல்லது மக்கா மற்றும் புனிதத் தலங்களுக்குள் நுழைபவர்கள் அல்லது தங்குபவர்களுக்காக விசிட் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு லட்சம் சவூதி ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட விதிமீறல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அபராதம் அதிகரிக்கப்படும்.

இந்தக் காலகட்டத்தில் வருகை விசா வைத்திருப்பவர்களை மக்காவிற்கோ அல்லது புனிதத் தலங்களுக்கோ ஏற்றிச் செல்பவர்கள் அல்லது ஏற்றிச் செல்ல முயற்சிப்பவர்களுக்கும் இதேபோன்ற அபராதம் விதிக்கப்படும்.

வருகை விசா வைத்திருப்பவர்களுக்குத் தங்குமிடம் வழங்குபவர்கள் அல்லது வழங்க முயற்சிப்பவர்கள், அல்லது அவர்களுக்கு உதவுபவர்கள் அல்லது அவர்களை மறைத்து வைப்பவர்களுக்கு ஒரு லட்சம் சவூதி ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். விதிமீறுபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தண்டனைகள் அதிகரிக்கும்.

கடுமையான தண்டனை அறிவிப்பு :

குடியிருப்பாளர்கள் மற்றும் விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்கள் உட்பட ஊடுருவுபவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு இராச்சியத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.

அதே காலகட்டத்தில், வருகை விசா வைத்திருப்பவர்களை மக்காவிற்கும் புனித தலங்களுக்கும் அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், சம்பந்தப்பட்டவர்களுக்குச் சொந்தமானவையாக இருந்தால், அவற்றைப் பறிமுதல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன், மக்கா, ரியாத், மதீனா மற்றும் கிழக்கு மாகாணத்தில் 911 என்ற எண்ணிலும், இராச்சியத்தின் பிற பகுதிகளில் 999 என்ற எண்ணிலும் அழைத்து, ஹஜ் விதிமுறைகளைப் பின்பற்றுமாறும், விதிமீறுபவர்களைப் பற்றித் தெரிவிக்குமாறும் பொதுப் பாதுகாப்புப் பொது இயக்குநரகம் குடிமக்களையும் குடியிருப்பாளர்களையும் வலியுறுத்தியுள்ளது.

எனவே புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள மக்கா, மதீனாவிற்கு செல்லும் பயணிகள் அனைவரும் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, சிறப்பான முறையில் ஹஜ் கடமையை நிறைவேற்ற முன்வர வேண்டும். விதிகளை மீறினால் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Focus....!

When you focus on problems

you will have more problems. 

When you focus on possibilities 

you'll have more opportunities.




நம்பாதீர்கள்....!

 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு...! 

ஒரு மிகப்பெரியமோசடி கணிப்புகள். 

மக்களை மனரீதியாக குழப்பி, அவர்களின் அமைதியை முற்றிலும் சீர்குலைக்கும் கணிப்புகள். 

மக்களே வாழ்க்கையில் 

நிம்மதியாக இருக்க விரும்புகிறீர்களா?

தயவுசெய்து கருத்துக்கணிப்புகளை 

நம்பாதீர்கள். அதன்பக்கம் போகாதீர்கள். 

குறிப்பாக, சமூக வலைதளங்களின் 

பக்கம் தலை வைத்து படுக்காதீர்கள். 



அறிவாளி....!

 தன்னை அறிவாளி 

என்று நினைத்துக் கொள்வது தப்பில்லை.

 ஆனால் 

பிறரை முட்டாளாக நினைப்பது 

மாபெரும் தவறு.

கழுத்தளவு துன்பம் வந்தாலும் 

கதறி அழுது விடுங்கள்.

யாரிடமும் ஆறுதல் தேடாதீர்கள்.



God's Glory....!

 God's Glory is truly unparalleled.

When He gives, He gives in abundance.

ஏக இறைவனின்  அற்புதமான படைப்பு.



Tuesday, April 28, 2026

இந்திய ஹஜ் பயணிகள் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்....!

மத்திய கிழக்கு போர் பதற்றம் எதிரொலியால் விமான கட்டணங்கள் உயர்வு....! 

இந்திய ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரும் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்....!!

இந்திய ஹஜ் குழு சுற்றறிக்கை...!!! 

புதுடெல்லி, ஏப்.29- மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துவிட்டதால், இந்திய ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரும் கூடுலாக தலா 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று ஒன்றிய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது. 

இந்திய ஹஜ் குழு சுற்றறிக்கை :

தற்போது ஹஜ் பெருவிழாவிற்கான காலம் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து புனித ஹஜ் பயணிகள், மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு புறப்பட்ட வண்ணம் உள்ளனர். எனினும், மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக அனைத்து விமான நிறுவனங்களும் தங்களது விமான பயணிகள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன. இதனால், ஹஜ் பயணிகள் பலரும் புதிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஒன்றிய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் குழு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய ஹஜ் குழுவின் தலைமை செயல் அலுவலர் ஷாநவாஸ் வெயிட்டுள்ள அறிக்கையில், தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடி மற்றும் பதற்றம் காரணமாக விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒன்றிய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் குழுவிற்கு, ஹஜ் பயணிகளுக்கான விமான கட்டணம் குறித்து 28.04.2026 அன்று முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூடுதல் விமான கட்டணம் : 

அதன்படி, இந்திய ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரும் தாங்கள் ஏற்கனவே செலுத்திய விமான கட்டணத்துடன் கூடுதலாக 100 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும்.  மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக விமான கட்டணம் 400 அமெரிக்க டாலர் அளவுக்கு  உயர்த்த வேண்டும் என  விமான நிறுவனங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டது. எனினும், ஒவ்வொரு இந்திய ஹஜ் பயணிகளும் குறைந்த பட்சமாக 100 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும் என்பதை இந்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகம்,  விமான நிறுவனங்களிடம் கலந்தாலோசித்து  ஒப்புதல் வழங்கியுள்ளது. 

எனவே, இந்திய ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த தொகையை வழக்கம் போல எஸ்.பி.ஐ., யு.பி.ஐ., வங்கிகள் அல்லது இ.பேமெண்ட் வழியாக செலுத்த வேண்டும். இந்த கூடுதல் கட்டணத்தை வரும் மே 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும், கூடுதல் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுகளை இந்திய ஹஜ் குழுவிற்கு அனுப்ப வேண்டும். மேலும், இதுதொடர்பாக அனைத்து மாநில ஹஜ் குழுக்களும் உரிய நடவடிக்கை எடுத்து, ஹஜ் பயணிகளிட்ம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். செலுத்த கடைசி நாள் 15-05-2026..

இவ்வாறு இந்திய ஹஜ் குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்