Monday, August 31, 2026

For daughters....!

 To pay her daughters' fees, the mother started running barefoot…

47-year-old Ramabai Ranveer from Beed, Maharashtra, won a marathon barefoot without training and claimed a Rs.3,000 prize.

After her husband's passing, she has been cooking food to cover the education expenses of her two daughters.

"I run every day for my children's future… today I ran for myself."

She had no slippers, but she had the resolve to fulfill her daughters' dreams. 



Six....!

 Six laws of maturity...!



நூல்கள் அறிமுகம்...!

 இனிய தருணம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை  மூத்த ஊடகவியலாளர் தோழர் மாரியப்பன் (நியூஸ் ஜெ தொலைக்காட்சி) அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்...!



இஸ்லாமிய நாடுகள் திரும்புமா...?

 அமெரிக்கா - இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் திரும்புமா...?

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -

உலக நாட்டாமையாக தம்மை தாமே அடையாளப்படுத்திக் கொண்டு, அமெரிக்கா  இஸ்ரேலுடன் இணைந்து இஸ்லாமிய நாடுகள் மீது நடத்திவரும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வண்ணமே உள்ளன. குறிப்பாக பாலஸ்தீனம் மீது குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் அநியாய மற்றும் கொடுமையான தாக்குதல்கள் இன்னும் நின்றுவிடவில்லை. உலக நாடுகள் அனைத்தும் எச்சரித்தும், சர்வதேச சட்ட நெறிகளையும் மீறி இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா மீது தொடர்ந்து தாக்குதல்களை அவ்வவ்போது நடத்திக் கொண்டே இருக்கிறது. லெபனான், சிரியா ஆகிய நாடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் முழு ஆதரவுடன் இந்த தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய கொடூரங்களுக்கு எதிராக உலகின் பல்வேறு நாடுகள் எதிர்ப்பு பேரணிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. எனினும் நாட்டாமை அமெரிக்கா மற்றும் சாத்தான் இஸ்ரேல் அடங்கவில்லை. 

தற்போது ஈரான் மீது குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடிக்கடி தமது தோல்விகளை மறைக்க, ஈரானை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஈரான் தோல்வி அடைந்துவிட்டது என்று ஒருநாள் சொல்லும் அவர், மறுநாளே, ஈரான் மீதான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று தமது தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறார். எந்தவித மிரட்டல்களுக்கும் அஞ்சாமல், ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நீண்ட நெடிய வரலாறு மற்றும் பாரம்பரியம் கொண்ட ஈரானை யாரும் தோற்கடிக்க முடியாது என்பது தான் உண்மையான வரலாறாகும். பல நாடுகள் முயற்சி செய்தும் தோல்வியை தழுவியுள்ளன. சுமார் 200 ஆண்டுகள் மட்டுமே வரலாறு கொண்டு அமெரிக்காவால், எப்படி ஈரானை வீழ்த்த முடியும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் உறுதியாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கமேனியின் தந்தை மற்றும் பிற மூத்த தலைவர்கள் கொல்லப்பட்ட அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும், ஈரானின் அதிபர் கமேனி இன்னும் பொதுவெளியில் காணப்படவில்லை.  அண்டை வளைகுடா அரபு நாடுகளில் உள்ள இலக்குகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாலும், ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தியதாலும், முஸ்லிம் உலகில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இப்பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தின் இருப்பை தெஹ்ரான் எதிர்த்து வருகிறது. ஈரான் மீது வரையறுக்கப்பட்ட, துல்லியமான நடவடிக்கை' மேற்கொண்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் போரில் நிலவிய தற்காலிக அமைதி நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், மீண்டும் அமெரிக்கப் படைகள் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இருந்த ஈரானிய ஏவுகணை ஏவுதளங்களைத் தாக்கின. முன்னதாகப் பதிலடி கொடுப்பதாக உறுதியளித்திருந்த ஈரான், ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவியதாகத் தெரிவித்தது.

அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகக் கூறப்படும் காட்சிகளை ஈரானிய அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. மத்திய கிழக்கில் உள்ள தங்கள் வான்பரப்பிற்குள் நுழைந்த எட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக ஜோர்டான் ஆயுதப் படைகள் தெரிவித்தன.

ஈரான் அதிபர் அழைப்பு :

இத்தகைய சூழ்நிலையில், “அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைவது அவசியம்”  என்று ஈரான் உச்ச தலைவர்  மொஜ்தபா காமேனி  அழைப்பு விடுத்துள்ளார். “இஸ்லாமிய நாடுகள் தங்கள் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதுகுறித்து மொஜ்தபா காமேனி வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில்,  “இஸ்லாத்தின் எதிரியாக இருப்பவர்கள் இன, கலாச்சார, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் புவியியல் ரீதியான வேறுபாடுகளைப் பயன்படுத்தி முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தவும், அவர்களின் வலிமையைக் குறைக்கவும் முயற்சிக்கிறார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், "எந்தவொரு பதவியில் இருப்பவரும், தெரிந்தோ தெரியாமலோ, வேண்டுமென்றே அல்லது தற்செயலாகவோ, முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தும் அல்லது இஸ்லாமிய சமூகத்திற்குள் மோதலை உருவாக்கும் செயலைச் செய்தால், அவர் இஸ்லாம் எதிர்ப்பு நோக்கங்களையே முன்னெடுத்துச் செல்கிறார் என்று அர்த்தம். இஸ்லாமியர்கள் உறுதியான மனவுறுதியுடன் கையை இறுக்கிப் பிடித்திருக்கும் ஒரே அணியாக இருந்திருந்தால், பாலஸ்தீன தேசம் இவ்வளவு பாதுகாப்பற்ற நிலையில் விடப்பட்டிருக்குமா?. மேலும் ஆக்கிரமிப்பாளர்களின் ஒடுக்குமுறைக்கும் குற்றங்களுக்கும் ஆளாக்கப்பட்டிருக்குமா?. பாரசீக வளைகுடா பகுதிகளில் உள்ள இஸ்லாமிய நாடுகள் ஒற்றுமையாக இருந்திருந்தால், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்துகொண்டு ஊழல்வாதிகளும், கொள்கையற்ற அயோக்கியர்களும் நமது நிலங்களையும் செல்வத்தையும் அபகரிக்கத் துணிந்திருப்பார்களா?. இஸ்லாமிய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாக மேற்கு ஆசியப் பகுதி மற்றும் பாரசீக வளைகுடாப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுவது இதுதான்: உங்களின் உண்மையான எதிரி யார் என்பதை நீங்கள் அறிய வேண்டும். அவர்களின் சதித்திட்டங்களைப் புரிந்துகொள்ள வேண்டும், மேலும் அவர்களை எதிர்கொள்ள வேண்டும்"  என்று ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார். 

இஸ்லாமிய நாடுகளின் எதிரிகள் :

"இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமைக்கும், நட்புக்கும் அமெரிக்காவும், இஸ்ரேலும் தான் எதிரிகள். அமெரிக்காவின் ஆட்சியாளர்களும், இஸ்ரேலும் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின் மீதும் பகைமை கொண்டுள்ளன. உலகளாவிய ஆணவ சக்திகளின்’ தலைவர்கள் இஸ்லாமிய நாடுகளின் சில தலைவர்களை நோக்கி வெளிப்படுத்திய அப்பட்டமான அவமரியாதை மற்றும் இழிவான கருத்துகள் எங்கள் நினைவில் இன்னும் உள்ளது” என்றும் ஈரான் அதிபர் குறிப்பிட்டுள்ளார். 

ஈரான் நாட்டின் பொருளாதார உத்தியை விளக்கியுள்ள மொஜ்தபா காமேனி, “உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதும், முக்கிய பரிவர்த்தனைகளில் அமெரிக்க டாலர் மீதான சார்பைக் குறைப்பதும், சுயசார்பு கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அவசியமானவை. பொருளாதார மீள்திறனை வெறும் கொள்கை முடிவாக மட்டும் பார்க்காமல், வெளிப்புற நிதி அழுத்தங்களை எதிர்கொள்வதற்கும் நீண்டகால ஸ்திரத்தன்மையை அடைவதற்கும் அவசியமான ஒரு தேசிய கட்டமைப்பாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

இஸ்லாமிய நாடுகள் செவி சாய்க்குமா ?

'உண்மையான எதிரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக வளைகுடா நாடுகளும், முஸ்லிம் நாடுகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்' என்று ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் வேண்டுகோளை, அழைப்பை இஸ்லாமிய நாடுகள் கவனத்தில் கொள்வது மிகமிக அவசியமாகும்.  முஸ்லிம்களுக்கு இடையேயான பிளவு, எதிரிகளின் நலன்களுக்கே சாதகமாக அமையும். வளைகுடா பிராந்திய அரசுகளும், மக்களும் இஸ்லாமிய கோட்பாட்டின் கீழ் ஒன்றிணைந்திருந்தால், நம் உடமைகளையும், நிலங்களையும் எதிரிகளால் அபகரிக்க முடியாது என்பதை இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே மேற்காசியா மற்றும் வளைகுடா இஸ்லாமிய ஆட்சியாளர்கள், உண்மையான எதிரியை அடையாளம் கண்டு, அவர்களின் திட்டத்தை முறிடியக்க வர வேண்டும். 

=====================

"எந்தவொரு பதவியில் இருப்பவரும், தெரிந்தோ தெரியாமலோ, வேண்டுமென்றே அல்லது தற்செயலாகவோ, முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தும் அல்லது இஸ்லாமிய சமூகத்திற்குள் மோதலை உருவாக்கும் செயலைச் செய்தால், அவர் இஸ்லாம் எதிர்ப்பு நோக்கங்களையே முன்னெடுத்துச் செல்கிறார் என்று அர்த்தம்"

=====================

ஓமன், பாகிஸ்தான் மற்றும் கத்தார் போன்ற முஸ்லிம் நாடுகளுடன் பிராந்திய பேச்சை ஈரானிய துாதரக அதிகாரிகள் மேற்கொண்டு வரும் வேளையில் கமேனியின் அழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வேண்டுகோளாக இருந்து வருகிறது.  ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள  ஹார்முஸ் நீரிணையில் உள்ள ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,  ஈரான், ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவியது. இத்தகைய சூழ்நிலையில் இஸ்லாமியர்களின் உண்மையான எதிரியை அறிந்துகொண்டு, அதன் திட்டங்களைப் புரிந்துகொண்டு   அதை எதிர்த்து இஸ்லாமிய நாடுகள் நிற்க வேண்டும். இஸ்லாமிய நாடுகள் ஒற்றுமை என்ற கயிற்றை உறுதியாக பிடித்துகொண்டால் மட்டுமே, இஸ்லாமிய நாடுகளில் அமைதி திரும்பும். எதிரிகள் இஸ்லாமிய நாடுகளின் பலத்தை கண்டு அஞ்சுவார்கள். ஈரானின் அழைப்புக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 

===============================


Purpose...!

Our prime purpose in this life is to help others 

and if you can't help them, 

at least don't hurt them.



சிலரிடம்....!

 பிரச்சினைகள் 

வராமல் இருக்க, 

சிலரிடம் கேள்வி 

கேட்ட கூடாது. 

சிலரிடம் பதில் 

சொல்ல கூடாது. 

சிலரிடம் பேசவே கூடாது. 

வாழ்க்கையில் கேள்வி, பதில், பேச்சு 

மிக முக்கியம்...



Turkish sweet...!

 Turkish tiramisu isn't just sweet, it's ordinary—nah, this is indulgence at its finest.

Coffee and cream and cocoa, and every bite is saying "that's it, I don't want anything else"



நூல்கள்....!

 இனிய தருணம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை  சிறந்த ஊடகவியலாளர் தோழர் பிரகாஷ் (நியூஸ் ஜெ தொலைக்காட்சி) அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்...!



Rare eyes...!

 Yemeni child Yemeni tops the trend because of the rare color of his eyes.

Mashallah, blessed be Allah.



Afgan grapes...!

One of Afghanistan's important export items, grapes, are dried naturally in structures called "kişmişhane." Afghans produce two types of dried grapes. Of these, the thin, long, and greener "mamiz" is the most preferred and considered luxurious.



நூல்கள் அறிமுகம்...!

 இனிய தருணம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை  நோபல் வெல்ஃபர் இந்தியா ஃபவுண்டேஷன் துணைத் தலைவர் குலாம் முஹம்மது அலி (எ) ஷாஹித்திற்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்...



Fish... !

 Give a man a fish, and you feed him for a day. Teach a man to fish, and you feed him for a lifetime.



Sunday, August 30, 2026

நோபல் வெல்ஃபேர் இந்தியா ஃபவுண்டேஷன்...!

 மாணவர்கள் மத்தியில் கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் 

'நோபல் வெல்ஃபேர் இந்தியா ஃபவுண்டேஷன்'

ஓர் சிறப்பு ரிப்போர்ட் 

நவீன அறிவியல் காலத்தில் மாணவர்களின் கவனம் பல்வேறு திசைகளில் சென்றுக் கொண்டிருக்கும் ஒரு ஆபத்து தற்போது உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சமூக ஊடகங்களில் முழு நேரத்தை மாணவ சமுதாயம் செலவழிக்கும் மோசமான ஒரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் கவனம் கல்வி மீது செல்வது குறைந்து வருகிறது. படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், சென்னையில் 'நோபல் வெல்ஃபேர் இந்தியா ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பு உருவாகி, மாணவர்களின் கல்வியில் ஆர்வம் செலுத்தி, அவர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்து வருகிறது. 

அந்த வகையில், சென்னை திருவல்லிக்கேணி முஹம்மதன் பொது நூலக வளாகத்தில் கல்வி மற்றும் பராமரிப்பு குறித்த எஜுகேர் (Educare) என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி 30.08.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை சிறந்த கல்வியாளர்கள் முன்னிலையில்  நடைபெற்றது. நிகழ்ச்சியை ஹாபிஸ் முஹம்மது உமர் ஹாபிசுல்லா திருக்குர்ஆன் வசனங்களை ஓதி  தொடங்கி வைத்தார். விழாவிற்கு வந்தவர்களை அமைப்பின் துணைத் தலைவர் குலாம் முஹம்மது அலி வரவேற்றார். அமைப்பின் இணை அமைப்பாளர் அல்தாப் அஹமத் கையாஸ் தலைமையுரை ஆற்ற, தலைமை ஆசிரியர் டாக்டர் ஷாகுல் ஹமீது சிறப்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கல்வியாளரும் அரபி மொழி வல்லுநருமான ஷாமீமுல் இஸ்லாம், கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். விழாவில் பங்கேற்ற மூத்த கல்வியாளர் நாராணய பாபு, கல்வியால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். 2025-2026 கல்வி ஆண்டில் பன்னிராடாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்ற முஹம்மது அர்ஷத் உள்ளிட்ட மூன்று மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இறுதியில், துணைத் தலைவர் நஜீம் உசேன் நன்றி கூற, துஆவுடன் விழா நிறைவுபெற்றது.  

சிறப்பு நேர்காணல் :

இந்த விழாவில் நோபல் வெல்ஃபேர் இந்தியா ஃபவுண்டேஷன்'-இன் துணைத் தலைவர், ஆற்காடு நவாப் நான்காம் இளவரர் முஹம்மது முனவ்வர் கான் பகதூரின் கொள்ளுப் பேரன் குலாம் முஹம்மது அலி என்னும் ஷாஹித்தை சந்தித்து, அமைப்பின் நோக்கங்கள் குறித்து மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் நேர்காணல் நடத்தினார். அதன் விவரங்கள் வருமாறு:

கடந்த 2025ஆம் ஆண்டு இந்த அமைப்பை நாங்கள் ஒரு குழுவை அமைத்து உருவாக்கினோம். ஏழை, மற்றும் நடுத்தர மாணவர்கள் பள்ளி படிப்பை இடையில் நிறுத்துவதை தவிர்க்கவும், அவர்கள் தேர்வுகளில் சிறந்து முறையில் தங்கள் பங்களிப்பை வழங்கி தேர்ச்சி பெற வேண்டும் என்றும் நோக்கமுடன் அவர்களுக்கு சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தலா 15 வீதம் மொத்தம் 30 மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாலை 6 மணி முதல் 8 மணி வரை மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன. 6  ஆசிரியர்கள் சிறந்த முறையில் பாடங்களை சொல்லித் தந்து மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் 60 முதல் 80ஆக உயர்ந்த முடிவு செய்துள்ளோம். நமது முயற்சிக்கு பெற்றோர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விரைவில் மாணவிகளுக்கும் தனியாக ஒரு பிரிவுயை உருவாக்கி அவர்களுக்கும் கல்வி குறித்து தேர்வில் எப்படி தேர்ச்சி பெறுவது என்பது குறித்தும் பயிற்சி அளிக்க முடிவு செய்து இருக்கிறோம். எந்தவித சுய லாப நோக்கம் இல்லாமல் நடத்தப்படும் நோபல் வெல்ஃபேர் இந்தியா ஃபவுண்டேஷன்'-ன் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம். 

இவ்வாறு குலாம் முஹம்மது அலி தெரிவித்தார். இந்த அமைப்பின் நோக்கங்கள் வெற்றிபெற வாழ்த்தி விடைப்பெற்றோம். 

- சந்திப்பு : சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

மனிதர்....!

 மனிதனுக்கு மரியாதை - மனிதர்...!



Mindset....!

A positive mindset doesn't mean ignoring the bad,

 it means focusing on the good.



நியதி....!

 உலகில் உயர்ந்து விடுகின்ற எந்தப்

 பொருளாயினும் நிச்சயமாக ஒருநாள்

 அதனை கீழே கொண்டு வருவதே

 இறைவனின் நியதியாகும். 

உயரே பறந்தாலும் 

கீழே வந்துதான் 

ஆக வேண்டும். 

இதுதான் நியதி...!



Good information...!

 Make this drink a habit and see the changes in your body....!



Silence....!

A silence is the best answer to all the unnecessary arguments we face every day. You are a fool if you try to convince a fool and involve yourself and waste your energy and time. Behave like a lion who never answers the bark of dogs. 



இந்து மத நூல்களைப் பாதுகாத்து மீட்டெடுக்கும் முஸ்லிம் நூலகம்...!

இந்து மத நூல்களைப் பாதுகாத்து மீட்டெடுக்கும்மும்பை அஞ்சுமன்-இ-இஸ்லாம் கரிமி நூலகம்

டிஜிட்டல் முறையில் நூல்கள் புதுப்பிக்கும் பணித் தொடக்கம்

மகாராஷ்டிராக மாநிலம் தெற்கு மும்பையின் பரபரப்பான வீதிகளை நோக்கியவாறு அமைந்துள்ள ஒரு நூற்றாண்டு பழமையான கட்டடத்திற்குள், இந்திய மத நூல்களின் அரிய பாரசீக மற்றும் உர்தூ மொழிபெயர்ப்புகளைப் பாதுகாப்பதற்கான அமைதியான முயற்சி ஒன்று நடைபெற்று வருகிறது. நாட்டின் பன்முக கலாச்சாரம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கடந்த காலத்தின் எஞ்சிய சான்றுகளாக இவை திகழ்கின்றன.

இந்து நூல்களை மீட்டெடுக்கும் பணி :

152 ஆண்டுகள் பழமையான 'அஞ்சுமன்-இ-இஸ்லாம்' (Anjuman-I-Islam) நிறுவனத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள 'கரிமி நூலகம்' (Karimi Library), 1867 மற்றும் 1896-க்கு இடைப்பட்ட காலத்தில் அச்சிடப்பட்ட மகாபாரதம், ராமாயணம், பகவத் கீதை மற்றும் சிவ புராணம் உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட புனித இந்து நூல்களை மீட்டெடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.

புகழ்பெற்ற சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்திற்கு (CSMT) அருகில் அமைந்துள்ள இந்தக் கட்டடத்தில், சமஸ்கிருதம், ஆங்கிலம், உர்தூ, பாரசீகம், மராத்தி, பஷ்தூ மற்றும் அரபு மொழிகளில் உள்ள புத்தகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. வரலாறு, தத்துவம், இறையியல், இலக்கியம், புவியியல் மற்றும் பல்வேறு தலைப்புகளில் உள்ள இப்புத்தகங்களில் சில 150 ஆண்டுகளுக்கு முன்பே அச்சிடப்பட்டவை ஆகும்.

கரிமி நூலகத்தின் சுவையான வரலாறு :

 வர்த்தகர் காசி அப்துல் கரிமி போர்பந்தரி 4 ஆயிரத்து 500 மதிப்புமிக்க நூல்களை நன்கொடையாக வழங்கியதைத் தொடர்ந்து 1898-ல் இந்த நூலகம் நிறுவப்பட்டு, அவரது பெயரே நூலகத்திற்கு, சூட்டப்பட்டதாக 1874-ல் பத்ருதீன் தியாப்ஜியால் நிறுவப்பட்ட 'அஞ்சுமன்-இ-இஸ்லாம்' அமைப்பின் தலைவரான பத்மஸ்ரீ டாக்டர் ஜாஹிர் காசி தெரிவித்தார்.

மத நூல்கள் மற்றும் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் அரச ஆணைகள் தவிர, 1875-ஆம் ஆண்டைச் சேர்ந்த அரிய செய்தித்தாள்களும் (எ.கா: ஜெய்ப்பூர் கெஜட், அம்பாலா கெஜட் மற்றும் கெய்ரோவின் 'அல் கைரா') இங்கு உள்ளன. இவை இந்தியாவின் ஆரம்பகால சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய பார்வையை வழங்குகின்றன.

டிஜிட்டல் மயமாக்கல் பணி :

"புத்தகங்கள் பழமையானவையாகிவிட்டன. அவற்றின் பக்கங்கள் எளிதில் உடையக்கூடிய நிலையில் உள்ளன. பூஞ்சை மற்றும் பூச்சிகளை அகற்ற சிறப்பு ரசாயனங்கள் மூலம் அவை சுத்திகரிக்கப்பட வேண்டும். நல்ல நிலையில் இல்லாத புத்தகங்கள் பாதுகாப்பிற்காக சிறப்புத் தாள்கள் கொண்டு ஒட்டப்பட்டு சரிசெய்யப்படுகின்றன" என்று அஞ்சுமன்-இ-இஸ்லாம்' அமைப்பின் தலைவர் ஜாஹிர் காசி தெரிவித்தார்.

தற்போது நடைபெற்று வரும் டிஜிட்டல் மயமாக்கல் பணிக்காக நிபுணர்கள் குழு ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது. புத்தகப் பக்கங்கள் 'அஞ்சுமன்-இ-இஸ்லாம்' அமைப்பின் 'கிளவுட்' (cloud) கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. "இப்புத்தகங்கள் மிகுந்த சகிப்புத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. நாட்டின் பாரம்பரியம் இந்த நூலகத்தில் பெருமளவில் பொதிந்துள்ளது என்பது இந்தியர்களுக்கு ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஷயமாகும்," என்றும்  ஜாஹிர் காசி கூறினார்.

====================

"152 ஆண்டுகள் பழமையான மும்பை அஞ்சுமன்-இ-இஸ்லாம் நிறுவனத்திற்குள் அமைந்துள்ள கரிமி நூலகம், 32-க்கும் மேற்பட்ட  இந்து மத நூல்களைப் பாதுகாத்து மீட்டெடுக்கும் வகையில் ஒரு புதுப்பிப்புப் பணியைத் தொடங்கியுள்ளது. இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ்வதும் பணியாற்றுவதுமே இந்தியாவின் பாரம்பரியம் என்பதை இந்த பணி உறுதி செய்கிறது"

====================

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகப் பக்கங்களும், 70 ஆயிரம் செய்தித்தாள் மற்றும் இதழ் பக்கங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், ஆவணப்படுத்தும் பணியை முழுமையாக முடிக்க இன்னும் 2 ஆயிரத்து 250 பக்கங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் நூலகப் பொறுப்பாளர் முகமது காலிப் முல்லா உறுதிப்படுத்தினார்.

"இந்தச் செய்தித்தாள்கள் சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக்கால நிகழ்வுகள், அக்காலகட்டத்தின் சமூக மற்றும் அரசியல் சூழல், அத்துடன் பிரிட்டிஷ் ஆதரவு மற்றும் எதிர்ப்பு எனப் பத்திரிகைத்துறை எவ்வாறு செயல்பட்டது என்பது குறித்த விவரங்களை வழங்குகின்றன," என்று முகமது காலிப் முல்லா கூறினார்.

இச்செய்தித்தாள்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது பெரும்பாலும் தெரியவில்லை. இருப்பினும், 'அஞ்சுமன்-இ-இஸ்லாம்' (Anjuman-I-Islam) நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே ஒரு முக்கியக் கல்வி மையமாகத் திகழ்ந்து வருவதாலும், அது அத்தகைய வெளியீடுகளுக்குச் சந்தா செலுத்தியிருக்கக்கூடும் என்பதாலும், இந்தச் செய்தித்தாள்களும் இதழ்களும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவையாகவே இருக்க வேண்டும் என்று முகமது காலிப் முல்லா குறிப்பிட்டார்.

கரிமி நூலகம் புதுப்பிக்கும் பணி :

'அஞ்சுமன்-இ-இஸ்லாம்' நிறுவனத்தின் பாரம்பரியக் கட்டிடத்தின் ஒரு பகுதியாகத் திகழும் கரிமி நூலகம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது; அதேவேளையில், அதன் பழமையான தோற்றமும் தனித்துவமான சூழலும் மாறாமல் பாதுகாக்கப்படுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் 'அஞ்சுமன்-இ-இஸ்லாம்' நிர்வாகத்தில் அங்கம் வகித்ததாகவும், அவர்களின் பல முக்கியக் கூட்டங்களுக்கு இந்த நூலகம் சான்றாகத் திகழ்ந்ததாகவும் அஞ்சுமன்-இ-இஸ்லாம்' அமைப்பின் தலைவர் ஜாஹிர் காசி சுட்டிக்காட்டினார். "பணிகள் நிறைவடைவதைப் பொறுத்து, புதுப்பிக்கப்பட்ட இந்த நூலகத்தை அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் மீண்டும் திறக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், இந்த நூலகத்தில் பல தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளை நடத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்," என்று  ஜாஹிர் காசி தெரிவித்தார்.

நாட்டில் மத ரீதியாக மக்களை பிரித்து அதன்மூலம் அரசியல் லாபம் அடைய ஒரு கூட்டம் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்கும் நிலையில், ஒரு இஸ்லாமிய நூலகம்,  இந்து மத நூல்களின் அரிய உர்தூ மொழிபெயர்ப்புகளைப் புதுப்பிக்கிறது என்பது எவ்வளவு போற்றத்தக்க விஷயமாகும். நாட்டில் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாக வாழ விரும்புகிறார்கள் என்பதற்கு மும்பை கரிமி நூலகத்தின் பணியே ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று கூறலாம். மேலும், இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ்வதும் பணியாற்றுவதுமே இந்தியாவின் பாரம்பரியம் என்பதை இந்த பணி உறுதி செய்கிறது என்பதை மறுக்க முடியாது.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


திருக்குர்ஆனின் ஒரு தனித்துவமான பிரதி - சர்வதேச கையெழுத்துக் கலைப் போட்டி....!

 புனித திருக்குர்ஆனின் ஒரு தனித்துவமான பிரதியை 

உருவாக்குவதற்கான சர்வதேச கையெழுத்துக் கலைப் போட்டி 

உஸ்பெகிஸ்தான்  இஸ்லாமிய நாகரிக மையம் அறிவிப்பு

உஸ்பெகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய நாகரிக மையம், புனித குர்ஆனின் ஒரு தனித்துவமான பிரதியை உருவாக்குவதற்கான சர்வதேச கையெழுத்துக் கலைப் போட்டி (calligraphy competition) ஒன்றை ஆகஸ்ட் 26 அன்று அறிவித்துள்ளது. உஸ்பெக் தலைநகரான தாஷ்கண்டில் நடைபெற்ற "இஸ்லாமிய நாகரிகம்: ஒரு புதிய கண்ணோட்டம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள்" என்ற கருப்பொருளைக் கொண்ட சர்வதேச ஊடக மன்றத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புனித குர்ஆனின் ஒரு தனித்துவமான பிரதி :

இப்போட்டியானது "குர்ஆனின் உலகம்: அரபு கையெழுத்துக் கலை மரபுகள் முதல் எதிர்காலத்தின் பாரம்பரியம் வரை" என்ற திட்டத்தின் கீழ் வருகிறது. பல்வேறு நாடுகள் மற்றும் கையெழுத்துக் கலைப் பள்ளிகளின் தனித்துவமான பாணிகளை உள்ளடக்கி, இஸ்லாமிய கையெழுத்துக் கலையின் சிறப்பான மரபுகளை வெளிப்படுத்தும் வகையில் புனித குர்ஆனின் ஒரு தனித்துவமான பிரதியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இத்திட்டம் இக்கலையின் செழுமை, அதன் பல்வேறு பாணிகள் மற்றும் அதன் நாகரிகப் பரவல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் அமையும்.

கையெழுத்துக் கலைஞர்களுக்கு அழைப்பு :

இஸ்லாமிய கையெழுத்துக் கலையின் பல்வேறு பாணிகள் மற்றும் மரபுகளை ஒரே கலை மற்றும் கலாச்சாரப் படைப்பாக ஒன்றிணைத்து, புனித குர்ஆனை எழுதுவதில் பங்கேற்குமாறு உலகெங்கிலும் உள்ள கையெழுத்துக் கலைஞர்களுக்கு இத்திட்டம் அழைப்பு விடுக்கிறது. இது அரபு கையெழுத்துக் கலையின் வரலாற்று முக்கியத்துவத்தையும், காலங்காலமாக புனித குர்ஆனை எழுதுவதில் அதற்குள்ள தொடர்பையும் முன்னிலைப்படுத்த உதவும். இஸ்லாமிய நாகரிக மையத்தின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல் மற்றும் நவீன வழிகளில் காட்சிப்படுத்துதல் ஆகிய முயற்சிகளின் ஒரு பகுதியாக, புனித குர்ஆன், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் இஸ்லாமிய பாரம்பரியம் தொடர்பான பல்வேறு கலாச்சார மற்றும் அறிவியல் திட்டங்களை ஆய்வு செய்த மன்றத்தின் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவே இப்போட்டி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கையெழுத்துக் கலைப் பள்ளிகள் பங்கேற்பு :


இத்திட்டத்தை, இஸ்லாமிய நாகரிக மையத்தின் கையெழுத்துக் கலைப் பள்ளியின் இயக்குநரும் கையெழுத்துக் கலைஞருமான ஹபிபுல்லோ சோலிஹ் முறைப்படி அறிவித்தார். "நூற்றாண்டுகளை இணைக்கும் பாரம்பரியம்: இஸ்லாமிய நாகரிகத்தின் ஆன்மீக அர்த்தங்கள்" என்ற தலைப்பிலான ஊடக மன்றத்தின் முழு அமர்வின் போது இப்போட்டி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் பல்வேறு நாடுகள் மற்றும் கையெழுத்துக் கலைப் பள்ளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய கையெழுத்துக் கலையின் மிகச்சிறந்த மரபுகளை ஒன்றிணைக்கும் வகையில் இந்தக் குர்ஆன் பிரதி உருவாக்கப்படவுள்ளது.

=========================

"பல்வேறு நாடுகள் மற்றும் கையெழுத்துக் கலைப் பள்ளிகளின் தனித்துவமான பாணிகளை உள்ளடக்கி, இஸ்லாமிய கையெழுத்துக் கலையின் சிறப்பான மரபுகளை வெளிப்படுத்தும் வகையில் புனித குர்ஆனின் ஒரு தனித்துவமான பிரதியை உருவாக்குவதே திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் கையெழுத்துக்கலையின் செழுமை, அதன் பல்வேறு பாணிகள் மற்றும் அதன் நாகரிகப் பரவல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் அமையும்"

=========================

முன்முடிவுகள் (stereotypes) மற்றும் இஸ்லாமிய வெறுப்புணர்வை (Islamophobia) முறியடிப்பதில் ஊடகங்களின் பங்கு குறித்த சர்வதேச விவாதமும் இந்த அமர்வில் இடம்பெற்றது.. இதில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்  பிரதிநிதிகள் மற்றும் அல்ஜீரியா, ஓமன், பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஈராக், மாலி மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரசு நிறுவனங்கள் மற்றும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். குர்ஆன் மற்றும் கையெழுத்துப் பிரதி பாரம்பரியம் சார்ந்த பல திட்டங்களும் இந்த நிகழ்ச்சியில் அடங்கும். இவற்றில் "செயற்கை நுண்ணறிவு, பண்டைய கையெழுத்துப் பிரதிகளை வாசிப்பதற்கான டிஜிட்டல் திறவுகோல்" ஆகியவை அடங்கும்.

கையெழுத்துக் கலை மரபுகள் மீட்பு : 

உஸ்பெகிஸ்தான் தற்போது தனது கையெழுத்துக் கலை மரபுகளை நிறுவன ரீதியாக மீட்டெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவின் முயற்சியால் உஸ்பெகிஸ்தானின் இஸ்லாமிய நாகரிக மையத்தில் நிறுவப்பட்ட கையெழுத்துக் கலைப் பள்ளி தற்போது செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி துலுத்,  நஸ்க், நஸ்தாலிக், ருகா, திவானி மற்றும் கூஃபி போன்ற பாரம்பரிய கையெழுத்துக் கலை வடிவங்களைக் கற்பிக்கத் திட்டமிட்டுள்ளது. சமர்கண்ட் பிராந்தியத்தில் உள்ள புதிய இமாம் புகாரி வளாகத்திலும் கையெழுத்துக் கலைக்கு ஒரு சிறப்பான இடம் உள்ளது. இத்தொகுப்பின் 'இவான்'  எனப்படும் வளைவு முகப்புகளும் சுவர்களும், "சஹீஹ் புகாரி" நூலிலிருந்து எடுக்கப்பட்ட ஹதீஸ்களைக் கொண்ட கல்வெட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இமாம் புகாரி சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் ஹதீஸ் ஆய்வுகளுக்கான பள்ளி ஆகியவையும் இத்தொகுப்பிற்குள்ளேயே செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Saturday, August 29, 2026

புதிய எல்லைகளைத் திறக்கும் தாயிஃப் மலைகள்....!

 "இயற்கையை ஆராய்வதற்கான புதிய எல்லைகளைத் திறக்கும் தாயிஃப் மலைகள்"

இஸ்லாமிய வரலாற்றில் தாயிஃப் நகருக்கு எப்போதும் ஒரு முக்கியத்துவம் இருந்து வருகிறது.  ஏக இறைவனின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் கடுமையான துயரங்களைச் சந்தித்த துக்க ஆண்டில் (நபித்துவத்தின் 10-ஆம் ஆண்டு, கி.பி. 619), இஸ்லாமியப் பிரசாரத்திற்காக மக்காவிலிருந்து சுமார் 60 முதல் 70 மைல் தொலைவில் உள்ள தாயிஃப் நகருக்குப் பயணம் மேற்கொண்டார். தாயிஃப் நகரின் தலைவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் அதனை மறுத்ததுடன், கேலி செய்து ஊரை விட்டுத் துரத்தினர். நகரின் சிறுவர்களையும் குண்டர்களையும் ஏவிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கல் எறிந்து விரட்டினர். இதில் நபிகளாரின் உடல் காயமடைந்து இரத்தம் கசிந்தது.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காயங்களுடன் ஒரு திராட்சைத் தோட்டத்திற்குள் தஞ்சம் புகுந்தார். அங்கே இறைவனிடம் மிகவும் உருக்கமாகப் பிரார்த்தனை செய்தார்.  

அப்போது, மலைகளுக்குப் பொறுப்பான மலக்கு (வானவர்), தாயிஃப் நகரை இரண்டு மலைகளுக்கு இடையில் நசுக்கி அழித்துவிடுவதாகக் அனுமதி கேட்டார். அதனை மறுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "வேண்டாம். இவர்களின் சந்ததியிலிருந்து ஏக இறைவனை வணங்குபவர்கள் வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்று கூறிப் பொறுமையைக் கடைப்பிடித்தார். அந்தத் தோட்டத்தின் உரிமையாளர்கள் அனுப்பிய 'அத்தாஸ்' என்ற கிறிஸ்தவ ஊழியர் நபிகளாருக்குத் திராட்சைப் பழம் வழங்கினார். நபிகளார் "பிஸ்மில்லாஹ்" என்று கூறியதைக் கேட்டு வியந்த அத்தாஸ், நபிகளாருடன் உரையாடி இஸ்லாத்தைத் தழுவினார்.இந்தப் பயணம் கடுமையான சோதனைகளைக் கொண்டிருந்தாலும், நபியவர்களின் எல்லையற்ற பொறுமை, மன்னிக்கும் குணம் மற்றும் இறைநம்பிக்கையை உலகிற்குப் பறைசாற்றிய வரலாற்று நிகழ்வாக அமைந்தது. இப்படி வரலாற்று சிறப்புமிக்க தாயிஃப் நகரம் தற்போது உலக சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அங்க ஆய்வுகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஆய்வு ஆர்வலர்களுக்கு ஒரு திறந்த களம் :

உள்ளூர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகள், தாயிஃப் மலைகளுக்கு அப்பகுதியின் இதமான வானிலை மற்றும் ரம்மியமான காட்சிகளுக்காக மட்டும் வருவதில்லை. சிகரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் முதல் காடுகள் மற்றும் பாறை அமைப்புகள் வரை பரந்து விரிந்த நிலப்பரப்பின் காரணமாக, இந்த மலைகள் சாகசம் மற்றும் ஆய்வு ஆர்வலர்களுக்கு ஒரு திறந்த களமாக மாறியுள்ளன. உள்நாட்டு சுற்றுலாவின் வளர்ச்சி மற்றும் வெளிப்புற அனுபவங்களில் அதிகரித்து வரும் ஆர்வத்தால், இந்த ஆளுநரகம் சாகசம், இயற்கை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு இடமாக உருவெடுத்து வருகிறது.

தாயிஃப் இராச்சியத்தின் மிக முக்கியமான சாகச இடங்களில் ஒன்றாகத் திகழச் செய்யும் அசாதாரணமான குணங்களைக் கொண்டுள்ளதாக ஃபஜ்ர் மலையேற்றக் குழுவின் தலைவர் காலித் அல்-ஷரீஃப் கூறி மகிழ்ச்சி அடைகிறார்.  அதன் இயற்கை பன்முகத்தன்மை, பல்வேறு நிலைகளில் உள்ள பார்வையாளர்களுக்கு ஏற்ற அனுபவங்களை வழங்குகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.  அல்-ஷஃபா அதன் உயர்நிலங்கள், இயற்கைக் காடுகள் மற்றும் பரந்த காட்சிகளால் தனித்து நிற்கிறது என்றும், அதே சமயம் அல்-ஹதா மலைப்பாங்கான நிலப்பரப்பு, சரிவுகள் மற்றும் பரந்த நிலப்பரப்புகளை ஒருங்கிணைக்கிறது என்றும் அல்-ஷரீஃப் வியப்பு அடைகிறார். 

தனித்துவமான அனுபவம் :

பாறை அமைப்புகள், தாவரப் பன்வகைமை மற்றும் அமைதியுடன் கூடிய அல்-மகாதா பள்ளத்தாக்கு, அர்தா பள்ளத்தாக்கு மற்றும் தி கசல் பள்ளத்தாக்குடன் சேர்ந்து, ஆய்வு ஆர்வலர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை அளிக்கிறது. மேலும், டாக்கா மலை அதன் உயரம், குளிர்ச்சியான காலநிலை மற்றும் ரம்மியமான காட்சிகளுடன் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது. இதன் காரணமாக இந்த ஆளுநரகம், சாகசம், இயற்கை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு சுற்றுலாத் தலமாக உருவாகி வருகிறது.

==================

"சுற்றுலாப் பயணிகள் தாயிஃப் மலைகளுக்கு அப்பகுதியின் இதமான வானிலை மற்றும் ரம்மியமான காட்சிகளுக்காக மட்டும் வருவதில்லை. சிகரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் முதல் காடுகள் மற்றும் பாறை அமைப்புகள் வரை பரந்து விரிந்த நிலப்பரப்பின் காரணமாக, இந்த மலைகள் சாகசம் மற்றும் ஆய்வு ஆர்வலர்களுக்கு ஒரு திறந்த களமாக மாறியுள்ளன"

==================

சாகசம் என்பது மிகவும் கடினமான பாதைகளில் செல்வது அல்ல. மாறாக ஒருவரின் உடல் திறன்களுக்கு மிகவும் பொருத்தமான அனுபவத்தைத் தேர்ந்தெடுத்து, நன்கு தயாராக இருப்பதே ஆகும். சவூதி விஷன் 2030-இன் இலக்குகளுடன், உள்நாட்டு சுற்றுலாவில் அதிகரித்து வரும் ஆர்வமும் வெளிப்புறச் செயல்பாட்டுக் கலாச்சாரத்தின் பரவலுக்குப் பங்களித்துள்ளது. எனவே தான், சாகச விளையாட்டுகளின் ஆர்வலரான சவூத் மக்ராபி, தாயிஃப் சாகசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுற்றுலாத் தயாரிப்பை உருவாக்க ஒரு சிறந்த வாய்ப்பைக் கொண்டுள்ளது என்று உறுதியாக நம்புகிறார். குறிப்பாக, பல சுற்றுலாப் பயணிகள் இப்போது வெறுமனே சுற்றிப் பார்ப்பதை விட, அனுபவங்களைத் தேடுகிறார்கள்.

எனவே, பாதைகளை மேம்படுத்துதல், அவற்றின் சிரம நிலைகள் குறித்த தெளிவான தகவல்களைக் காட்சிப்படுத்துதல், வழிகாட்டிகளைத் தகுதிப்படுத்துதல், மற்றும் அந்த இடங்களுக்கு அருகில் போக்குவரத்து, உபகரண வாடகை, விருந்தோம்பல், சிற்றுண்டிச்சாலைகள் போன்ற துணைச் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றில் உள்ளூர் சுற்றுலா வழங்குநர்கள் கவனம் செலுத்த வேண்டும் என மக்ராபி ஆலோசனை தெரிவிக்கிறார். 

சாகசச் சுற்றுலா மூலம் அனுபவம் :

சாகசச் சுற்றுலா என்பது கட்டாயம் அதிக ஆபத்து நிறைந்த செயல்பாடுகளைக் குறிப்பதல்ல. குடும்பங்கள், இளைஞர்கள், ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் மற்றும் தொழில்முறை வல்லுநர்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் அனுபவங்களை வடிவமைக்க முடியும். இது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, உள்ளூர் முதலீட்டிற்கான வாய்ப்புகளையும் பெருக்குகிறது.

எந்தவொரு சாகச அனுபவத்திற்கும் பாதுகாப்பே அடிப்படை. இதற்காக, சுற்றுலாப் பயணிகள் தங்கள் திறனுக்கு ஏற்ற பாதையைத் தேர்ந்தெடுப்பது, வழிகாட்டி அல்லது அனுபவம் வாய்ந்த குழுவின் உதவியை நாடுவது, பொருத்தமான காலணிகள் மற்றும் ஆடைகளை அணிவது, தண்ணீர், சிற்றுண்டி மற்றும் முதலுதவிப் பெட்டியை எடுத்துச் செல்வது, வானிலை நிலவரத்தைக் கவனிப்பது, தாங்கள் செல்லும் பாதையை மற்றவர்களுக்குத் தெரிவிப்பது மற்றும் கைபேசியில் போதுமான அளவு சார்ஜ் இருப்பதை உறுதி செய்வது போன்றவற்றைச் செய்ய  வேண்டும். 

குறிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே பயணிப்பது, குப்பைகளை விட்டுச் செல்லாமல் இருப்பது மற்றும் தாவரங்கள் அல்லது வனவிலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அனுபவசாலிகள் வலியுறுத்துகிறார்கள். இப்பகுதியில் குப்பைகளை வீசுதல், அதிகப்படியான மரங்களை வெட்டுதல், அனுமதியற்ற இடங்களில் தீ மூட்டுதல் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் பொறுப்பற்ற முறையில் வாகனங்களை ஓட்டுதல் ஆகியவை முக்கியப் பிரச்சினைகளாக உள்ளன. அதேவேளையில், "நீங்கள் வந்தபோது இருந்ததை விட அந்த இடத்தை இன்னும் சிறப்பாக விட்டுச் செல்லுங்கள்" என்ற கலாச்சாரத்தைப் பரப்புவதன் மூலமும், இடங்களைச் சுத்தம் செய்வதற்கான தன்னார்வ முயற்சிகளில் பங்கேற்பதன் மூலமும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் இந்தப் பிரச்சினைக்கான தீர்வின் ஒரு பகுதியாக இருக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் ஆலோசனை தருகிறார்கள். 

சாகசச் செயல்பாடுகளால் ஏற்படும் வளர்ந்து வரும் பொருளாதாரத் தாக்கத்தையும் ஃபஜ்ர் மலையேற்றக் குழுவின் தலைவர் காலித் அல்-ஷரீஃப் சுட்டிக்காட்டினார். உள்ளூர் கைவினைஞர்களுக்குப் பயனளிப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுலா வழிகாட்டுதல், விருந்தோம்பல், கிராமப்புற தங்கும் விடுதிகள், போக்குவரத்து மற்றும் உபகரணங்கள் வாடகைக்கு விடுதல் போன்ற துறைகளையும் இவை ஆதரிக்கின்றன.  உடல் செயல்பாடுகளுடன் நாட்டின் சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கும் முயற்சியை இணைக்கவும், ஆரோக்கியமான மற்றும் பொறுப்பான முறையில் அந்த இடங்களைச் சுற்றிப் பார்க்கச் சமூகத்தை ஊக்குவிக்கவும் 'ஃபஜ்ர் ஹைகிங் குழு' இந்தச் சுற்றுலா மற்றும் மலையேற்ற முன்னெடுப்பைத் தொடங்கியதாக ஃபஜ்ர் மலையேற்றக் குழுவின் தலைவர் காலித் அல்-ஷரீஃப்  கூறி மகிழ்ச்சி அடைகிறார்.  இத்துறையில் 'தாயிஃப்' நகரின் வெற்றியானது, அப்பகுதியின் இயற்கை அழகிற்குப் பொருத்தமான வகையில் "முறையான மற்றும் நிலையான அனுபவங்களை" உருவாக்குவதிலேயே தங்கியுள்ளது என்று மலையேற்றக்குழுவினர் நம்புகின்றனர். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Blessing...!

Not all blessings are in the form of money and material things. Sometimes having people in our lives who truly care for us is a greater blessing.



அடிமை....!

 இணையதள அடிமை.....!

கோடி நன்மைகளை வாரி வழங்கும் இணையதளங்களுக்கு எளிதில் அடிமையாகும் போக்கு இளைஞர்களிடையே தற்போது அதிகரித்துள்ளது. 

இணையதளங்களில் மூழ்கி கிடக்கும் இளைஞர்களால், குடும்ப உறவுகள் சீர்குலைந்து,  மன நோய்க்கும். ஆளாகும் நிலை உருவாகிறது.  

வீட்டில் இருந்தபடியே பயணச்சீட்டு பதிவு! வெளிநாட்டு  நண்பர்களுடன் உரையாடல்!! கை நுனியில் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள்!!! 

இப்படி, கோடி நன்மைகளை வாரி வழங்குகின்றன நவீன இணையதளங்கள். இது மட்டுமல்லாமல், கணினி விளையாட்டு முதல், புதிய தொழில்நுட்பம் வரை,  பல தகவல்கள் இணையதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. 

இதனால், மாணவர்கள்,  இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் தன்வசமாக்கியுள்ளது இணையதளம். 

வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி பெட்டிகள் என்ற நிலை மாறி தற்போது இணையதளங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன. 

மடிக்கணினி, கைப்பேசியில் இணையதளம்  என்ற நவீன  தொழில் நுட்ப வளர்ச்சி, இளைஞர்களை சுண்டி இழுத்து பல மணி நேரம் இணையதளத்திலேயே மூழ்கச் செய்கிறது.  

இதனால், குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பு குறைந்து, உறவுகள் சீர்குலைந்து போக இணையதளம் முக்கிய காரணியாக அமைந்து விடுகிறது.

இணையதளங்களின் வசதியால் கவரப்பட்ட இளைஞர்கள், தற்போது அதற்கு அடிமையாகி வருகின்றனர். 

பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் ஒருவர், அண்மையில் நடத்திய ஆய்வில், உலக அளவில் 20 விழுக்காட்டினர் இணையதளங்களுக்கு அடிமையாகிய இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நீடித்தால் மிகப் பெரிய விபரீதங்களை ஏற்படும் என மனநல வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். 

அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து என்ற பொனமொழியை மனதில் ஏற்றிக் கொண்டு இணையதளங்களை பயன்படுத்த வேண்டும். 

இதன்மூலம் மட்டுமே, இணையதள பலன்களை அனுபவித்து, மிகப் பெரிய ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

எல்லாமே....!

 நடக்கும் முன்னே நல்லதே நடக்கும் 

என நினைத்துக் கொள்வோம். 

நடந்து பின்னே, நடந்ததும் நல்லதற்கே 

என நினைத்துக் கொள்வோம். 

எல்லாமே நல்லது என 

நினைத்துக் கொண்டால் 

பிரச்சினைகள் எதுவுமே இல்லை.



Syrup....!

 No amount of syrup will make that sour woman sweet!



Moral....!

 The Moral of This Story? 

NEVER Trust the Dead...!!



பயில்வான்.....!

 பயில்வான்....

ஹா.....ஹா.....ஹா.....

ஹி.....ஹி......ஹி....



Cat....!

 When the cat started jumping over the concrete, everyone was shocked....

Cat.....cat.....cat.....cat....



சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை - ஓர் பார்வை....!

 " தமிழக வரலாற்றில் முதல்முறையாக இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் தாக்கல் செய்த சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை "

சமுதாயம் பயன்பெறும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிபொறுப்பை ஏற்று 100 நாட்கள் கடந்துவிட்டன. கடந்த ஆகஸ்ட் 5ஆம் த.வெ.க. அரசின் முதல் நிதிநிலை அறிக்கையும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பல்வேறு துறைகளின் சார்பில் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. விதி 110-இன் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய், பல்வேறு அறிவிப்புகளையும் நடந்துமுடிந்த பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்தார். 

சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை :

இப்படி ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஒரு முக்கிய நாளாக அமைந்து இருந்தது. ஆம், அன்றைய தினம், கூட்டணி ஆட்சியில் பங்கேற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக திறம்பட பணியாற்றிவரும் ஏ.எம்.ஷாஜஹான், ஆகஸ்ட் 27ஆம் தேதி பேரவையில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று, 20க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

தமிழக அரசியல் வரலாற்றில் இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஒருவர் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று சமுதாயம் வியக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டது இதுவே முதல்முறையாகும். கடந்த காலங்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை தொடர்ந்து முஸ்லிம் அமைச்சர்கள் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த அறிவிப்புகளுக்கும், தற்போது இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வெளியிட்ட அறிவிப்புகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஒரே சமயத்தில் 20க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகள் முந்தைய காலங்களில் வெளியாகவில்லை என்பது தான் வரலாறாக இருந்தது. ஆனால், அந்த வரலாற்றை தற்போது இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் தனது அறிவிப்புகள் மூலம் உடைத்துள்ளார். 

அறிவிப்புகளில் முக்கிய அம்சங்கள் :

சரி, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வெளியிட்ட அறிவிப்புகள் குறித்த முக்கிய அம்சங்கள் நாம் அறிந்துகொள்வோம். சிறுபான்மையின மக்கள் சிறுதொழில்கள் தொடங்கும் வகையில் ஆண்டுக்கு 2 ஆயிரத்து 500 பேருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு நவீன காலத்திற்கு ஏற்ப திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்., சிறுபான்மையின மக்கள் அதிகமாக வாழும் கடலூர், மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடங்கள் கட்டப்படும்., அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவியருக்கு ஆண்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் கல்விஉதவித்தொகை வழங்கப்படும், இதற்காக 8 கோடியே 28 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்., இஸ்லாமிய மாணவியர் உயர்கல்வியைத் தொடர, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் இளங்கலை பட்டப்படிப்பிற்கு கல்விக் கட்டணத் தொகையை அரசே வழங்கும். , சிறுபான்மையின மக்கள் அதிகமாக வாழும் 10 மாவட்டங்களில்  4கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும் போன்று முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. 

மேலும், முஸ்லிம் வக்பு சொத்துகளையும், கிறித்துவ வழிபாட்டுத் தலங்களின் சொத்துகளையும் பாதுகாக்கவும்  மேம்படுத்தவும், கட்டங்களைக் கட்ட வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை அலுவலகத்திற்கு 40 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்., தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மூலம் சென்னையில் சிறுபான்மையினர் மகளிர் கல்லூரி ஒன்று புதிதாக உருவாக்கப்படும்., தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு வழங்கப்படும் நிர்வாக மானியம் 5 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்., உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகள், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹானால் பேரவையில் வெளியிடப்பட்டன. 

அறிவிப்புகளால் என்ன பலன் கிடைக்கும் ? :

தமிழக பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வெளியிட்ட அறிவிப்புகளால், சமுதாயத்திற்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்ற வினா நம்மில் பலருக்கு எழுந்துள்ளது. அது நியாயம் கூட. ஏன் எனில், ஒவ்வொரு ஆண்டும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதனால் சமுதாயதத்திற்கு மிகப்பெரிய அளவுக்கு பலன் கிடைத்து இருக்கிறதா என்பது ஒரு கேள்வியாகவே இருந்து வருகிறது. ஆனால், த.வெ.க. கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வெளியிட்டுள்ள ஒவ்வொரு அறிவிப்புகளும் முத்தான அறிவிப்புகள் ஆகும். மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும், சிறுபான்மை சமுதாயத்தை கைத்தூக்கிவிடும் வகையில் அமைந்துள்ளன என்று உறுதியாக கூறலாம். 

========================

"த.வெ.க. கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஏ.ஏம்.ஷாஜஹான்  சிறுபான்மையினர் நலத்துறைக்கு தனது மானியக் கோரிக்கையில் முதல் முறையாக 201 கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவித்து இருப்பது குறித்து தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய சமுதாயம் முன்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம் மாணவ மாணவியர், இளைஞர்கள் மத்தியில் அரசின் திட்டங்களை கொண்டு சென்று சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."

========================

குறிப்பாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவியருக்கு ஆண்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் கல்விஉதவித்தொகை வழங்கப்படும், இளநிலை படிப்புகளில் சேரும் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்விக் கட்டண தொகையை அரசு வழங்கும் போன்ற அறிவிப்புகளின் மூலம், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகளின் கல்வி இனி தடைப்படாமல், இடையில் நின்றுவிடாமல் தொடரும் என்ற நல்ல சூழல் உருவாகியுள்ளது. இதன்மூலம், உயர்கல்வியில் முஸ்லிம் மாணவிகளின் கவனம் சென்று அவர்கள், நல்ல உயர்கல்வியைப் பெற்று வாழ்க்கையில் சாதிக்க வழி கிடைக்கும். முஸ்லிம் சமுதாயம் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள சமுதாயமாக இருந்து வரும் நிலையில், இனி, முஸ்லிம் சமுதாயம் நல்ல கல்வி பெற வேண்டும்., உயர்கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்விக் கட்டண தொகையை அரசே வழங்கும் என்ற அறிவிப்பை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும். 

இதேபோன்று, சிறுபான்மையின மக்கள் சிறுதொழில்கள் தொடங்கும் வகையில் ஆண்டுக்கு 2 ஆயிரத்து 500 பேருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு நவீன காலத்திற்கு ஏற்ப திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் சமுதாயத்திற்கு மிகப்பெரிய அளவுக்கு பலனை தரும் என்று உறுதியாக கூறலாம். தமிழக  சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் இந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மூலம், திறமையான இளம் இஸ்லாமிய இளைஞர்கள் உருவாகி, சிறுதொழில்கள் தொடங்க புதிய முயற்சியில் தன்னம்பிக்கையுடன் இறங்குவார்கள். அதன்மூலம் அவர்களின் வாழ்க்கை வளமான வாழ்க்கையாக அமையும்.  

மேலும், சிறுபான்மையின மக்கள் அதிகமாக வாழும் 10 மாவட்டங்களில்  4கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் சமுதாய இளைஞர்கள் அந்த பணிகளில் சேர புதிய ஆர்வம் பிறக்கும், அதன்மூலம் அவர்களின் குடும்ப சூழல் மாறி, ஒரு புதிய வாழ்க்கைப் பயணம் தொடங்கும்.  தமிழக சட்டமன்ற வரலாற்றில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு முதல் முறையாக 201 கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவித்து அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் சாதனை படைத்துள்ளார். 

விழிப்புணர்வை அவசியம் தேவை :

த.வெ.க. கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக் அமைச்சர் ஏ.ஏம்.ஷாஜஹான்  சிறுபான்மையினர் நலத்துறைக்கு தனது மானியக் கோரிக்கையில் முதல் முறையாக 201 கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவித்து இருப்பது குறித்து தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய சமுதாயம் முன்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம் மாணவ மாணவியர், இளைஞர்கள் மத்தியில் அரசின் திட்டங்களை கொண்டு சென்று சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள ஆர்வத்தை உருவாக்க வேண்டும். இத்தகைய விழிப்புணர்வு பிரச்சாரத்தை இ.யூ.முஸ்லிம் லீக் மட்டுமல்லாமல் பிற முஸ்லிம் இயக்கங்களும் சேர்ந்து செய்ய வேண்டும். அதன்மூலம் மட்டுமே, சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்த திட்டங்கள் மூலம் சமுதாயத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். இனி வரும் காலங்களில் முஸ்லிம் மாணவியர்கள் யாரும் உயர்கல்வி பெறவில்லை என்ற அவல நிலை ஒருபோதும் இருக்கக் கூடாது. கல்வி தான் வாழ்க்கையை வசப்படுத்திதரும் என்பதை மனத்தில் உள்வாங்கிக் கொண்டு, கல்வி தொடர்பாக அரசு அறிவித்துள்ள அனைத்து அறிவிப்புகளையும் சமுதாயம் பயன்டுத்திக் கொள்ள முன்வர வேண்டும். 

===========================

பண்டைய மனிதக் குடியிருப்பை வெளிப்படுத்தும் நஜ்ரான்....!

  " பண்டைய மனிதக் குடியிருப்பை வெளிப்படுத்தும் நஜ்ரான் "

ஏக இறைவன் உருவாக்கிய பிரபஞ்சம் குறித்து முழுமையாக விவரங்களை தேடி மனித இனம் அலைந்துகொண்டே இருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. உலகம் எப்படி தோன்றியது? மனித இனம் உலகில் எப்படி தோன்றி வேகமாக பரவியது? இப்படி பல கேள்விகளுக்கு இன்னும் சரியான விடைகள் கிடைக்கவில்லை. தற்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள முடிவுகள் அனைத்தும், சொற்பம் என்றே கூற வேண்டும். 

அந்த வகையில் ஏக இறைவனின் படைப்பு இருந்து வருகிறது. உலகில் உள்ள பல நாடுகள் தங்களது ஆய்வு குழுக்கள் மூலம் அந்தந்தப் பகுதிகளில் மனித நாகரீகம் எப்படி தோன்றியது என்பது குறித்து ஆய்வு செய்துகொண்டே இருக்கின்றன. இதற்கு சவூதி அரேபியாவும் விதிவிலக்கல்ல. அந்த நாடும் மனித பாரம்பரியம், குடியேற்றம் ஆகியவை குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்திக் கொண்டே இருக்கிறது. 

நஜ்ரான் பகுதியில் ஆய்வு :

சவூதி அரசின் பாரம்பரிய ஆணையம், நஜ்ரான் பகுதியில் உள்ள ஷோயப் தஹ்தா தொல்பொருள் தளத்தை ஆய்வு மேற்கெசாண்டு ஒரு முக்கிய தகவலை கண்டுபிடித்துள்ளது.  மேலும், தெற்கு அரேபியாவில் ஆரம்பகால மனிதக் குடியேற்றம் மற்றும் இடம்பெயர்வுக்கான முக்கிய சான்றாக முன்னிலைப்படுத்தியுள்ளது. இங்கு 1 புள்ளி 2 முதல் 1 புள்ளி 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழ் பழங்கற்கால கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பள்ளத்தாக்கை நோக்கிய உயரமான சரளைக் கற்கள் நிறைந்த மேட்டு நிலங்களில் 1980-ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தளத்தில், கடினமான, வளைக்கக்கூடிய குவார்ட்சைட் கல்லால் செய்யப்பட்ட 34 ஓல்டோவன் கற்கருவிகளின் முறையான மாதிரி கிடைத்தது.

இந்தக் கலைப்பொருட்களில், இறைச்சியை வெட்டுவதற்கும், எலும்புகளை உடைப்பதற்கும், தோல்களை உரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட கூழாங்கல் வெட்டிகள், பலகோண வடிவக் கருவிகள், சுரண்டிகள், கத்திகள் மற்றும் சுத்தியல்கள் ஆகியவை அடங்கும்.

ஆரம்பகால மனிதர்களின் இருப்பு :

சவூதி பாரம்பரிய ஆணையத்தின் தொல்பொருள் துறையின் தலைமை இயக்குநர் அஜாப் அல்-ஒதைபி, இந்தத் தளம் அரேபிய தீபகற்பத்தில் ஆரம்பகால மனிதர்களின் இருப்பு குறித்த காலவரிசை பற்றிய முக்கியமான அறிவியல் நுண்ணறிவுகளை வழங்குகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், வரலாற்றுக்கு முந்தைய தளங்களை ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும், ஆய்வு செய்யவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். 

====================

"தெற்கு அரேபியாவில் ஆரம்பகால மனிதக் குடியேற்றம் மற்றும் இடம்பெயர்வுக்கான முக்கிய சான்றாக ஆய்வு முன்னிலைப்படுத்தியுள்ளது. இங்கு 1 புள்ளி 2 முதல் 1 புள்ளி 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழ் பழங்கற்கால கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன"

====================

சரவத் மலைகளின் கிழக்குச் சரிவுகளில் உள்ள வாடி நஜ்ரானுடன் இணைக்கப்பட்டிருந்த இந்த இடம், ஈரமான, நதியால் ஊட்டப்பட்ட ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தில் நீர், கருவி செய்யும் பொருட்கள் மற்றும் செழிப்பான தாவர, விலங்கினங்களை வழங்கியது. 

இப்படி பல சுவையான மற்றும் ஆச்சரியம் அளிக்கும் தகவல்கள் நஜ்ரான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகள் மேலும் பல அற்புதமான தகவல்களை உலகத்தின் வெளிச்சத்திற்கு கொண்டு வரும். அதன்மூலம் ஏக இறைவனின் வியப்பு மிகுந்த படைப்புகள் குறித்து பல அரிய தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனித இனத்திற்கு தெரியவரும். எனினும், ஏக இறைவனின் படைப்புகள் குறித்து முழு ஞானமும் அவனுக்கு மட்டுமே தெரியும் என்பதால், மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும், முழுமையாக தகவல்கள், உண்மைகள் அவனால் கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் உண்மையாகும். அதை யாராலும் மறக்கவும் முடியாது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Friday, August 28, 2026

Nalini 60...!

Nalini 60 years to 60 sarees...

For Nalini's birthday, her brother... surprise .

How happy she is....



Hard times...!

Waves are inspiring. Not because they rise and fall. But because they never fail to rise again. So be positive. Hard times will go soon.



சும்மா தமாஷ்...!

 தமாஷ்!

இது கொஞ்சம் வித்தியாசமான விஷயம். 

வாழ்க்கையில், உங்களுக்குகூட ஏற்பட்டு இருக்கலாம். 

கல்லூரியில் படித்தபோது, நண்பருடன் சேர்ந்து ஒருநாள் சென்னைக்கு வந்திருந்தேன். 

இந்தி படங்கள் பார்க்கும் ஆர்வம் காரணமாக,  விடுமுறை நாட்களில் நாங்கள் இரண்டு பேரும்  இப்படி, சென்னைக்கு வந்து செல்வது வழக்கம். 

வீட்டில் கல்லூரியில் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு என பொய் சொல்லிவிட்டு சென்னைக்கு வந்து விடுவோம். 

புதிதாக ரில¦ஸ் ஆன இந்தி பாடத்தை பார்த்துவிட்டு திரும்பவும் ஊருக்கு கிளம்பி விடுவோம். 

இப்படிதான், ஒருநாள் சென்னைக்கு நண்பருடன் வந்திருந்தேன். 

இரண்டு பேரும் பாரீஸ் கார்னர் சென்றோம். 

பூக்கடை போலிஸ் ஸ்டேஷன் அருகே இருக்கும் பூக்கடை மார்க்கெட்டிற்கு நண்பர் என்னை அழைத்துச் சென்றார். 

அவருக்கு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என ஆசை ஏற்பட்டது. 

அந்த மார்க்கெட்டில் இருந்த ஒரு கடையில், பளபளப்பான ஆப்பிள்களை கூடையில் அடுக்கி வைத்திருந்தார் வியாபாரி ஒருவர். 

ஐந்து ஆப்பிள்களை கொண்ட ஒரு குவியல் என 10 குவியல்களை அடுக்கி வைத்திருந்த அந்த ஆப்பிள் வியாபாரி, ஒன்று பத்து ரூபாய், ஒன்று பத்து ரூபாய் என ஒரு குவியலை காட்டி கத்திக் கொண்டிருந்தார். 

நண்பருக்கு ஆர்வம் அதிகமானது. 

ஐந்து ஆப்பிள்கள். 10 ரூபாய்க்கு கிடைக்கிறது. 

வாங்கி ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டு, ஆப்பிள் வியாபாரியிடம் சென்றார். 

என்னப்பா ஆப்பிள் என்ன விலை என ஒரு குவியலை பார்த்து கேட்டார். 

10 ரூபாய் சார் என்றார் ஆப்பிள் வியாபாரி.

ஆப்பிள் நல்ல இருக்குமில்லே என திரும்ப கேட்டார் நண்பர். 

மிகச் சுவையாக இருக்கும் சார். இப்படிப்பட்ட ஆப்பிளை இதற்கு முன்பு நீங்கள் சாப்பிட்டு இருக்க முடியாது. 

இது ஆப்பிள் வியாபாரியின் பதில். 

நண்பர் ஐந்து குவியல்களை எடுத்து தன்னுடைய பையில் போட ஆரம்பித்தார். 

ஐந்து குவியல்களில் 25 ஆப்பிள்கள் இருந்தன. 

ஆப்பிள் வியாபாரியிடம் 50 ரூபாயை நீட்டினார் நண்பர். 

என்ன சார் 50 ரூபாய் கொடுக்கிறீங்க. 250 ரூபாய் கொடுங்க சார் என்றார் ஆப்பிள் வியாபாரி. 

நண்பருக்கு உடனே அதிர்ச்சி ஏற்பட்டது. 

என்னப்பா அநியாயம். ஒரு குவியல் 10 ரூபான்னா, 50 ரூபாதானப்பா கொடுக்கனும்.

ஒரு ஆப்பிள்தான் சார் 10 ரூபா. ஒரு குவியல் இல்லை என விளக்கம் சொல்ல ஆரம்பித்தார் ஆப்பிள் வியாபாரி. 

இதனால், நண்பருக்கும், ஆப்பிள் வியாபாரிக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் நடைபெற்றது. 

கடைசியாக 5 ஆப்பிள்களை நண்பரின் பையில் வலுக்கட்டாயமாக திணத்தார் அந்த ஆப்பிள் வியாபாரி. 

அதனை வாங்கிக் கொண்ட நண்பர், 50 ரூபாயை ஆப்பிள் வியாபாரிடம் கொடுத்து கோபத்துடன் என்னை நோக்கி வந்தார். 

எனக்கு உள்ளுக்குள் சிரிப்பு ஏற்பட்டது. 

அதை அடக்க முடியாமல் நண்பரிடம் வெளிப்படுத்தினேன். 

ஒரு குவியல் ஆப்பிளை வைத்துக் கொண்டு, 10 ரூபாய் என சொல்லி மக்களை மடையர்களாக மாற்றி, வணிகம் செய்யும் சென்னை வியாபாரிகள் குறித்து, நண்பருக்கு அப்போதுதான் கொஞ்சம், கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. 

இருந்தாலும், அந்த ஆப்பிள் வியாபாரியின் சதூரியமான வணிக நுணுக்கத்தை கண்டு இரண்டு பேரும் நீண்ட நேரம்  பேசி சிரித்தோம்.

இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கும் வாழ்க்கையில், குறிப்பாக சென்னையில் ஏற்பட்டிருக்கும் இல்லையா!

அனுபவம் எல்லாம் தமாஷ்தான். சிரியுங்கள். 

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

நட்பு...!

ஒவ்வொருவரின் வாழ்வில் 

மூன்று வகையான 

நண்பர்கள் உண்டு.  

காரணத்திற்காக நட்பு. 

காலத்திற்கேற்ப நட்பு. 

காலம் முழுவதும் நட்பு.

காலம் முழுவதுமான நட்பே 

சிறந்த நட்பு.



Brushing....!

 In Turkey, an elderly man who shines shoes for a living is visited each morning by a cat that comes for its daily brushing....



யாரையும்....!

 யாரையும், யாரையும், யாரையும் 

வாழ்க்கையில் நம்பாதீர்கள். 

எப்பொழுது யார் கவிழ்ப்பார்கள் 

என்று சொல்லவே முடியாது.

- இயக்குநர் செல்வராகவன்



Happy....!

On Raksha Bandhan, 

Samajwadi Party chief Akhilesh Yadav 

distributed envelopes containing 

Rs.1001  to several sisters.


Heartfelt wishes on Raksha Bandhan.



Nepal News...!

 Good News,

Dear citizens of world,

All those were praying and worried about what happened to people in the Green House during the catastrophic Nepal Floods

The family and house survived the ordeal.



Thursday, August 27, 2026

சுதந்திர போராட்ட வீரர் மௌலவி சையத் முர்துசாவின் அடக்கஸ்தலம்....!

திருச்சியில்  சிதிலமடைந்த நிலையில் இருக்கும் சுதந்திர போராட்ட வீரர்  மௌலவி சையத் முர்துசாவின் அடக்கஸ்தலம்

சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கவலை

சுதந்திரப் போராட்ட வீரரும், கல்வியாளருமான மௌலவி சையத் முர்துசா சாஹிப்பின் திருச்சியில் உள்ள அடக்கஸ்தலம் (சமாதி) சிதிலமடைந்த நிலையில் இருப்பது அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஜாஃபர் ஷா தெருவில் உள்ள ஷம்ஸ் பீரன் மஸ்ஜித்துக்கு  எதிரே, மகாத்மா காந்தியின் 1921-ஆம் ஆண்டு திருச்சி வருகையை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்காற்றிய தீவிர தேசபக்தரான மௌலவி சையத் முர்துசா சாஹிப்பின் இறுதி ஓய்விடம் ஒரு ஃபிளக்ஸ் பலகை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஒரு ஆஸ்பெஸ்டாஸ் தகடு, மௌலவி சையத் முர்துசா சாஹிப்பின் சமாதியை சமூக விரோத சக்திகளிடம் இருந்து பாதுகாத்துக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக, அந்த பகுதியில் இருக்கும் வணிக நிறுவனங்கள் தங்களது வணிகத்தை வழக்கம்போல் செய்துகொண்டே இருக்கின்றன. இதனால் சாலையோரக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்துள்ள இடமாக அந்த பகுதி காட்சி அளிக்கிறது. 

தியாக வரலாறு :

சுதந்திரப் போராட்ட வீரரும், கல்வியாளருமான மௌலவி சையத் முர்துசா சாஹிப்பின்  தியாக வரலாற்றை நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். சென்னை மாகாணத்தின் (மேலவை உறுப்பினராக) எம்.எல்.சி. ஆக 1912 இருந்த அவர், பின்னர் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டு 24 ஆண்டுகள் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளார். இதுபோன்ற பல தகவல்கள் மஸ்ஹர் அருகே வைக்கப்பட்டுள்ள பலகையில் வழிப்போக்கர்களின் தகவலுக்காக விவரமாக பட்டியலிடப்பட்டுள்ளன.

அன்றைய பிரிட்டிஷ் அரசு 1919ஆம் ஆண்டு கொண்டு வந்த ரௌலட் சட்டத்திற்கு எதிராக திருச்சியில் மிகப்பெரிய அளவுக்கு போராட்டம் நடத்திய பெருமை மௌலவி சையத் முர்துசா சாஹிப்பிற்கு உண்டு. பின்னர் இந்த போராட்டம் தேசிய இயக்கமாக மாற வழி வகுத்தது என்பது வரலாறாகும். 

கிலாபத் இயக்கத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்ட பெருமையும் சையத் முர்துசா சாஹிப்பிற்கு உண்டு. 1938ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட முஸ்லிம் லீகின் தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். 

அத்துடன், அகில இந்திய வானொலி தெற்கு இந்திய ரயில்வே ஆகியவற்றின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் மௌலவி சையத் முர்துசா சாஹிப் சிறப்பாக சேவை ஆற்றியுள்ளார். 

அரபு  மற்றும் பார்ஸி கலை வல்லுநர் :

நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட சையத் முர்துசா சாஹிப் அவர்கள், அரபு மற்றும் பார்ஸி மொழிகளில் நன்கு புலமைப் பெற்று திகழ்ந்து இருந்தார். மேலும், இஸ்லாமியர்கள் மத்தியில் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டதுடன், திருச்சியில் அரசு இஸ்லாமிய உயர்நிலைப் பள்ளி உருவாக்க முக்கிய காரணமாகவும் இருந்துள்ளார்.

========================

"கிலாபத் இயக்கத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்ட பெருமையும் சையத் முர்துசா சாஹிப்பிற்கு உண்டு. 1938ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட முஸ்லிம் லீகின் தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்"

========================

இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்டு, நாட்டின் விடுதலைக்காகவும், முஸ்லிம்களின் கல்விக்காகவும் அயராது பாடுபட்ட மௌலவி சையத் முர்துசா சாஹிப், மஸ்ஜித்தில் தொழுகையில் ஈடுபட்டபோது திடீரென இடுப்பு எலும்பு இடப்பெயர்ச்சி ஏற்பட்டதால் கீழே விழுந்து பாதிக்கப்பட்டு, பின்னர்  தனது 99வது வயதில் 1949ஆம் ஆண்டு, நவம்பர் 6ஆம் தேதி காலமானார். 

மஸ்ஹர் பராமரிப்பு :

மௌலவி சையத் முர்துசா சாஹிப்பின் மஸ்ஹரை (அடக்கஸ்தலத்தை) அவரது குடும்ப வம்சாவளியினர் பராமரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மௌலவியின் மஸ்ஹர் இருக்கும் நிலப்பகுதி அவரது குடும்ப வம்சாவளியினருக்கு சொந்தமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி அவர்களது கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. 

இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடிய திருச்சி முஸ்லிம்களில் மௌலவி சையத் முர்துசா சாஹிப், மிகவும் முன்னணி வீரர் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதன்மூலம் சுதந்திர போராட்ட வரலாற்றில் அவர் முக்கிய இடத்தை பிடித்து இன்றும் நின்றுகொண்டிருக்கிறார். எனவே, தமிழ்நாடு அரசு மௌலவி சையத் முர்துசா சாஹிப்பின் சமாதியை பாதுகாத்து சரியான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் இலக்கிய சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.சையத் ஜபார் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நன்றி : தி இந்து ஆங்கில நாளிதழ்

தமிழில் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்