Sunday, August 23, 2026

கலெக்டர்....!

 திருநெல்வேலி கலெக்டர் ஆனந்த் மோகன் ஐஏஎஸ் அதிகாரியின் சமீபத்திய பேச்சு ரசிக்க மட்டும் அல்ல... அந்த மனிதரை மதிக்கவும் வைத்தது... அதன் சிறு தொகுப்பு...

நான் ஸ்கூல் டாப் ஸ்டூடென்ட் கிடையாது..நான் நார்மல் ஸ்டூடென்ட், பட் படிப்பேன்..

வீட்ல என்ஜினீயர் or டாக்டர் படிக்க சொன்னாங்க..நான் என்ஜினீயர் சூஸ் பண்ணினேன்... 

படிக்கும் போது, Orphan ஹோம்ல போயி கிளாஸ் எடுப்பேன்... 

அங்க உள்ள ஒரு குழந்தையோட பிடித்தமான ஆசை... என்னோட வாழ்க்கைய டோட்டலா மாத்திடுச்சு..

என்ஜினீயர் முடிச்சு கேம்பஸ் இன்டர்வியூ, அதுல இன்டர்வியூ பண்றவர் கேட்டாரு... சம்பாதிச்சு என்ன பண்ண போறீங்க..? உங்க நெக்ஸ்ட் 5 இயர் பிளான் என்னன்னு கேட்டாரு?... நான் சொன்னேன் சொசைட்டி, மக்களுக்கு நன்மை செய்ய போறேன்னு சொன்னேன்... (Orphan ஹோம் குழந்தையோட ஆசை என் மனசுல)

அதுக்கு அவரு சிரிச்சுகிட்டே நீ எங்க கம்பெனிக்கு லாயக்கப்பட மாட்ட, அதுக்கு நீ கலெக்டர் ஆகலாம்னு பொசுக்குன்னு சொல்லிட்டாரு...

ஆனா அதுதான் என்னை கலெக்டர் ஆக்குச்சு..என்னோட கடுமையான முயற்சி, அதோட என்னோட பேஷன், சமூகத்துக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சது என்னை கலெக்டர் ஆக்கிடுச்சு என்று  கலெக்டர் ஆனந்த் மோகன் தனியார் ஸ்கூல் ஃபங்ஷன்ல பேசினார். 

அவரது பேச்சை கேட்டு அனைவரும்  அசந்துபோயிட்டனர்

தங்கமான மனுஷன் யா, சின்ன வயசுல என்ன ஒரு பெரிய சிந்தனை...



No comments: