Tuesday, September 1, 2026

நேபாளம் பேரிடர் சோகம்....!

 " நேபாளம் பேரிடர் சோகம் - கண்களை குளமாகும் துயரங்கள் "

- எஸ்.ஏ.ஏ. -

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26, 2026 ஆம் தேதியன்று ஏற்பட்ட பனிமலைச் சரிவு மற்றும் திடீர் பெருவெள்ளப் பேரிடர் காரணமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெளிநாட்டுப் பயணிகள் உட்பட 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இமயமலையின் 'லாங்டாங் லிரங்' பகுதியில் ஏற்பட்ட பிரம்மாண்ட பனிப்பாறைச் சரிவு இந்த கோரத் தாக்குதலுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. புவி வெப்பமயமாதல் மற்றும் பனிப்பாறைகள் உருகுவது போன்ற இயற்கை மாற்றங்களே இதுபோன்ற தொடர் விபத்துகளுக்குக் காரணமாக இருப்பதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்

திடீர் பேரிடர் சோகம் :

இமயமலையில் சுமார் 7 ஆயிரம் மீட்டர் உயரத்தில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறைச் சரிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக திரிசூலி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேபாள-சீன எல்லைப் பகுதியான ரசுவா, நுவாகோட், தாதிங், கோர்க்கா மற்றும் சித்வன் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக நிலைகுலைந்துள்ளன. நேபாளத்தின் 6 முக்கிய நீர்மின் திட்டங்களின் சுரங்கப் பாதைகளுக்குள் சுமார் 900-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் ராணுவத்தின் உதவியுடன் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அத்துடன் எல்லையை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள், 19 பாலங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேற்று வெள்ளத்தில் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

ஆன்மிகச் சுற்றுலா சென்ற தமிழர்கள் :

ஆன்மிகச் சுற்றுலா மற்றும் கைலாச யாத்திரைக்காகத் தமிழகத்தில் இருந்து பல்வேறு குழுக்களாக 319 பேர் நேபாளம் சென்றிருந்தனர். அவர்களில் முதற்கட்டமாக மயிலாடுதுறை மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த 219 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு டெல்லி வழியாகச் சென்னை திரும்பியுள்ளனர். எஞ்சிய சுமார் 100 தமிழர்களைக் கண்டறியும் பணிகள் தொடர்ந்து முடுக்கிவிடப்பட்டுள்ளன. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இதற்காகப் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை  அமைக்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் நடக்கின்றன. .

இதுஒருபுறம் இருக்க, நேபாளத்தின் சித்வான் பகுதியில் உள்ள நாராயணி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட உடல்களை  நேபாள ராணுவத்தினர் மீட்டனர். நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில், காணாமல் போன தங்கள் உறவினர்கள் குறித்த செய்திக்காக ராணுவ முகாம் ஒன்றின் வெளியே சுன்மாயா தமாங் போன்றோர் காத்திருருக்கும் நிலைமை இருந்து வருகிறது. காணாமல் போன உறவினர்கள் குறித்த செய்திக்காக ஏங்கும் துயருற்ற குடும்பங்கள், இறந்தவர்களை அடையாளம் காணும் முயற்சியாக சமூக மையங்களில் உள்ள திரைகளில் உடல்களின் படங்களைப் பார்க்கின்றனர். காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில், காணாமல் போன உறவினர்கள் பற்றிய தகவல்களைத் துயருற்ற குடும்பங்கள் தேடும் நிலையில், திடீர் வெள்ளத்திற்குப் பிறகு காணாமல் போனவர்களின் புகைப்படங்களை ஒட்டப்பட்டுள்ளன.  பிணக்கிடங்குகள் இறந்தவர்களால் நிரம்பி வழியும் நிலையில், மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான உடல்களில் சிலவற்றை, அவற்றின் டி.என்.ஏ மாதிரிகளை எடுத்த பிறகு, நேபாளம் அடக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் குடும்பத்தினர் பின்னர் அவற்றை எடுத்துச் செல்ல முடியும். 

புள்ளிவிவரங்கள் தரும் தகவல்கள் :

நேபாளம்-சீனா எல்லைப் பகுதி வெள்ளத்தில் சுமார் ஆயிரம் பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போனதால்,பல குடும்பங்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளன. நேபாளம்-சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளத்தில் குறைந்தது 939 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

திபெத் பகுதியில் மேலும் 16 பேர் உயிரிழந்ததை சீனாவின் அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது; இதன் மூலம் இப்பகுதியில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 955-ஆக உயர்ந்துள்ளது. மேலும், எல்லைப் பகுதியின் இருபுறமும் மொத்தம் 4 ஆயிரத்து 471 பேர் காணாமல் போயுள்ளனர். நேபாளத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் 3 ஆயிரத்து 925 பேர் காணாமல் போயுள்ளனர்; இதில் 592 வெளிநாட்டினரும் அடங்குவர். காணாமல் போனவர்களில் பலர் நீர்மின் திட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஆவர். வெள்ளத்தின் முழுத் தாக்கத்தையும் இத்திட்டப் பகுதிகள் எதிர்கொண்டன. இருப்பினும், நீர்மின் திட்டப் பணியாளர்களில் விவரம் தெரியாதவர்களின் எண்ணிக்கை 639-ஆகக் குறைந்துள்ளது.

================

"நேபாளம்-சீனா எல்லைப் பகுதி வெள்ளத்தில் சுமார் ஆயிரம் பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போனதால்,பல குடும்பங்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளன"

================

3 ஆயிரத்து 333 நேபாளக் குடிமக்கள் காணாமல் போயுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறுகிறது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நுவாகோட் மாவட்டத்தில் ஆயிரத்து 158 பேரும்  மற்றும் அண்டை மாவட்டமான ரசுவாவில் 865 பேரும் மாயமாகியுள்ளனர். காணாமல் போனவர்களில் 45 ராணுவ வீரர்கள், 38 காவலர்கள் மற்றும் 18 சுங்க மற்றும் குடியேற்றத் துறை அதிகாரிகளும் அடங்குவர்.

அண்டை நாடான இந்தியாவில், உத்தரப் பிரதேச மாநில அதிகாரிகள், நேபாளத்திலிருந்து பாய்ந்து வரும் ஆறுகளில் இருந்து 17 உடல்களை மீட்டெடுத்துள்ளனர். இவர்கள் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களாகக் கருதப்பட்டாலும், அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையில் இவர்கள் இன்னும் சேர்க்கப்படவில்லை. 

கண்களை குளமாகும் துயரங்கள் :

நேபாளம்-சீனா எல்லைப் பகுதி வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோல் உயிரிழ்ந்த சோகம் உலக மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உண்மையான இதயம் கொண்ட மக்கள் நேபாளத்தின் சோகத்தை சமூக வலைத்தளங்களில் காணும்போது அவர்களை அறியாமல் கண்ணீர் விட்டு அழுகின்றனர். இதுபோன்ற திடீர் துயரங்கள் யாருக்கும் ஏற்படக் கூடாது என்று பிரார்த்தனை செய்கின்றனர். 

நேபாளம் கண்ட திடீர் துயரம், இஸ்லாமியர்களின் மனங்களையும் பாதிப்பு அடையச் செய்துள்ளது. சுற்றுலாச் சென்ற பல இஸ்லாமிய இளைஞர்கள் மாயமாகியுள்ளதால், அவர்களை தேடும் முயற்சிகளில் அவர்களது குடும்பத்தினர் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். விஞ்ஞான ரீதியாக உலகம் வேகமாக முன்னேறி, வளர்ச்சியை நோக்கிச் சென்றுக் கொண்டு இருந்தாலும், இயற்கையை வெல்லவே முடியாது என்பதற்கு நேபாளம் வெள்ளமே சாட்சியாக இருந்து வருகிறது. மனிதன் தன்னுடைய நிலையை திருத்திக் கொள்ளாதவரை ஏக இறைவனும் தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்ள மாட்டான் என்பதற்கு நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் திடீர் பேரிடர்கள் உதாரணமாக இருந்து வருகின்றன. 

திடீர் மழை, திடீர் வெள்ளம், திடீர் சூறாவளி என பல திடீர் பேரிடர்கள் மூலம் மனித சமுதாயத்திற்கு ஏக இறைவன் அவ்வப்போது, படிப்பினை சொல்லிக் கொண்டே இருக்கிறான். மனிதன் தன்னுடைய நிலையை திருத்திக் கொண்டு, இயற்கையோடு ஒத்துழைத்து வாழ முன்வர வேண்டும். அப்போது தான், இயற்கையும் மனிதனோடு ஒத்துழைக்கும். இதுவே நேபாளம் வெள்ளம் தரும் படிப்பினையாகும். 

================================