26 சட்டப்பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை
வரும் டிசம்பர் 6ஆம் தேதி கிளாட் 2027 நுழைவுத் தேர்வு
விண்ணப்பிக்க ஆக்டோபர் 31 தேதி நாள்
சென்னை, செப்.15- வருகிற 2027ம் ஆண்டு இந்தியாவில் உள்ள 26 சட்டப் பல்கலைக்கழகங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் சேருவதற்கான தேசிய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி மற்றும் இந்திய அளவில் புகழ்பெற்ற பெங்களூரு ,ஹைதராபாத், கொல்கத்தா, ஜோத்பூர், இராஜஸ்தான், காந்திநகர், குஜராத். போபால்,
ராய்ப்பூர், லக்னோ, பாட்டியாலா, பாட்னா, கொச்சி,ஒடிசா, ராஞ்சி, விசாகப்பட்டினம், திருச்சி, மும்பை, நாக்பூர் மற்றும் அவுரங்காபாத், சிம்லா, ஜபல்பூர்,சோனிபட், காம்ரூப்,திரிபுரா, பிரயாகராஜ், கோவா,மற்றும் மேகாலயா என 26 சட்டப் பல்கலைக்கழகங்களில் 2027 ஆம் ஆண்டு இளங்கலை சட்டம் சேருவதற்கு தற்பொழுது விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
விண்ணப்பிக்க தகுதி :
பன்னிரண்டாம் வகுப்பு ( பிளஸ்-2) படித்துக் கொண்டிருக்கிற மாணவர்களும் விண்ணப்பம் செய்யலாம். 6.12.2026 அன்று நுழைவுத் தேர்வு நடைபெறும். கடந்த 3.8.2026 முதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்டுவருகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2026 ஆகும் 6.12.2026 அன்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நுழைவுத் தேர்வு நடைபெறும்.
BA, LLB., BBA, LLB சேர்வதற்கு 12 ஆம் வகுப்பில் OC/OBC மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 45 சதவீதமும் SC, ST பிரிவு மாணவர்களுக்கு 40% மதிப்பெண்கள் தேவை. தற்பொழுது பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் தேர்வு எழுதலாம். விண்ணப்பிக்க கட்டணம் OC, IBC மாணவர்களுக்கு ரூ. 4,000/- SC, ST மாணவர்களுக்கு ரூ. 3500 /-பழைய வினாத்தாள் பெற விரும்பினால் கூடுதல் கட்டணம் ரூ.500/-செலுத்த வேண்டும்
தேர்வு முறை :
தேர்வில் மொத்தம் 120 கேள்விகள் கேட்கப்படும், கால அளவு இரண்டு மணி நேரம். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு மதிப்பெண். தவறான பதிலுக்கு 0.25 எதிர்மறை மதிப்பெண் (Negative Mark) உண்டு . விண்ணப்பிக்க விரும்புபவர்கள் clat@consortiumofnlus.ac.in என்ற இணையதள முகவரியில் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண்ணை பதிவு செய்து அதில் கேட்கும் விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
- தகவல் : நீதிபதி அ. முகமது ஜியாவுதீன், மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி, முழுநேர உறுப்பினர், மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம், தமிழ்நாடு.


No comments:
Post a Comment