தண்ணீரால்....!
தண்ணீர்
விவகாரத்தில்
தமிழர்கள்
மீது
அப்படி என்ன
உங்களுக்கு
ஓர் வெறுப்பு...
தேடி தேடி
உதைக்கிறீர்கள்....
ஓடி ஓடி
கொளுத்துகிறீர்கள்...
என்ன
பாவம்
செய்தார்கள்
கர்நாடக
தமிழர்கள்.....
அவர்களும்
உங்கள்
உடன்பிறப்புகள் தானே...
தண்ணீர்
தர மறுத்து
கோர தாண்டவம்
ஆடும்
நீங்கள்
தண்ணீரால்
அழிவீர்கள்...
உலக
வரலாறு
மனித
வாழ்வு
இந்த
இயற்கை
நியதியைதான்
நமக்கு
சொல்கிறது...
போதிக்கிறது....
படிப்பினை
தருகிறது...
தண்ணீரால்...
வேண்டாம்
உங்கள்
வெறியாட்டம்....
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments:
Post a Comment