இனிய் திசைகள் செப்டம்பர் மாத இதழில் நான் மியாவ் சிறுகதை:
* உயிரோட்டமுள்ள ஒரு எளிமையான கருவை கதைக்களமாக எடுத்து....மனதில் வலிமையாக.....வலியுடன் இணைத்து எழுதியிருக்கிறீர்கள். ஜெயகாந்தனின் கதைகளை படித்திருக்கிறேன். அவரும் மென்மையான கருத்துக்களை ...படிப்பவர் மனதில் மிக வலிமையாக பதிய வைப்பதில் வெற்றி கண்டவர். உங்கள் கதையும் அப்படித்தான். வாழ்த்துக்கள் சார்.
மியாவ் இறப்பு கிளைமாக்ஸை இன்னும் கொஞ்சம் கடைசியில் வைத்திருக்கலாமோ....என எண்ணத்தோன்றியது...
நாளைய தலைமுறை பிஞ்சுகளுக்கான அருமையான கதை..
- கிறிஸ்டோபர், ஊடகவியலாளர்
*அருமை அஜீஸ். கதை எளிய நடையில் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். முதல் சிறுகதையே சூப்பர். செல்ல மியாவ் எல்லோருக்கும் பிடிக்கும்.
- மைக்கேல் ஜார்ஜ், மூத்த ஊடகவியலாளர்
*மியாவ் மிக அருமை அய்யா - உங்களுக்கு பிறைஒளி அப்துல் அஜீஸ் என்ற பட்டம் சூட்டுகிறேன்.பட்டாம்பூச்சியாய் உங்கள் கருத்துக்கள் தீன் குலத்தின் புகழ் பாடட்டும்.
- வெற்றி, ராஜ் தொலைக்காட்சி
*அருமை உணர்வுபூர்வமாக உள்ளது அதிலும் கடைசி வரிகள் மிக அருமை.
- மோகன் ஆசிரியர், போலீஸ் ஸ்டோரி இதழ்
* சிறப்பு. வாழ்த்துகள் சார்.
- சக்திவேல், கலைஞர் தொலைக்காட்சி
* அருமை சார். சில மனிதர்களை விட நன்றியும் அன்பும் அவைகளுக்குதான் அதிகம்.
- சங்கரலிங்கம், ஜெ தொலைக்காட்சி
* மியாவ் வாவ்...
மியாவ் மியாவ்
பூனை குட்டி
அது மீசை வைச்ச
பூனை குட்டி
காலை சுத்தும்
பூனை குட்டி
எலியை
விரட்டி அடிக்கும்
பூனை குட்டி
மாமிஷம்
உண்னும்
பூனை குட்டி
நம்ம மனசை
வருடும் பூனை
குட்டி
வெளியில்
சென்ற பூனை
குட்டி
சற்று விவரம்
இல்லா
பூனை குட்டி
தீயிக்கு
உணவான
பூனை குட்டி
நமக்கு
தீங்கு செய்யா
பூனை குட்டி
காலமான
பூனை குட்டி
குட்டி கதையும்
ஆன
பூனை குட்டி
ஏட்டு கதை
ஆனாலும்
படிப்போர்
நெஞ்சில்
ஈரம் வைச்ச
பூனை குட்டி
மறுபடியும்
ஜனிக்கும்
பூனை குட்டிக்கு
இரங்கல்
- கவிஞர், வழக்கறிஞர் முரளி
* மிக சிறப்பான சிறு கதை... மிக சிறப்பு சார்.
- சுரேஷ், ஒளிப்பதிவாளர் & படத்தொகுப்பாளர், தொலைக்காட்சி ஊடகம்.
* வணக்கம் சார், தங்களுடைய மியாவ்.. கதையைப் படித்தேன் மிக அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்!
- முருகானந்தம், செய்தி வாசிப்பாளர்
* இனிமையான எளிமையான நன்னெறி கதை சார்.
- கவிஞர் தென்னரசு, ஜனம் தொலைக்காட்சி
* மிகவும் அருமை.. இந்த தலைமுறைக்கு தேவையான கதை.
- மாரியப்பன், ஜெ தொலைக்காட்சி
* அருமையான பதிவு சார்...
- சுப்ரமணி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பி.ஆர்.ஓ. துறை.
* பூனையை சாகடித்து விட்டீர்களே...!
மியாவ் உண்மையிலேயே கண்ணீரை வரவழைக்கிறது. அருமையான படைப்பு சார். தொடரட்டும் உங்கள் படைப்புகள்.
- சுப்ரமணியம், தினமணி நாளிதழ்.
- இளம்பரிதி, மூத்த ஊடகவியலாளர்
* சிறுகதையை படித்தேன். ரொம்ப நல்ல இருக்கு. தெளிந்த ஒரு நடை. சீரான நடை. எந்தவித கூடுதல்கள் இல்லாமல் நன்றாக இருந்தது. அருமை. அருமை. நிறைய எழுதுங்கள்.
- சிவக்குமார், செய்தி வாசிப்பாளர்.
* மிகச்சிறப்பான சிறுகதை- நல்வாழ்த்துக்கள் நண்பர் அஜீஸ்.
- ஷம்மிகுமார், தொழில் அதிபர், வேலூர்.
* சிறுகதை, அருமை. வாழ்த்துகள்.
- சரவணன், மக்கள் தொலைக்தொலைக்காட்சி
* கதை சிறப்பு. வாழ்த்துக்கள் சார்.
- சரவணன், எடிட்டர், புதிய தலைமுறை தொலைக்காட்சி
* கதை நன்றாக உள்ளது.
ஆனால் செய்தியாளரின் வாசனை அவ்வப்போது தெரிகிறது.
- ஸ்ரீதர் சன் தொலைக்காட்சி
* மியாவ் என்ன ஒரு பாசம் அருமை சார்.... அதை போல் மீண்டும் பல ஸ்டோரி எழுதி நிறைய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள் சார்.
- அ.ச.சகாய வளவன், ராஜ் தொலைக்காட்சி
* தெளிவான நீரோடை போன்று அருமையான நடை, மிகச் சுருக்கமாக விஷயத்தை சொல்லிய பாங்கு, ஜீவ காருண்யம், மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்தும் இந்த சிறுகதை என் மனதை தொட்டது. வாழ்த்துக்கள்.
- விஜய் தேவ், மூத்த ஊடகவியலாளர்
* வீடு அமைதியாக இருந்தது டிவி கூட உறங்கிக் கொண்டிருந்தது என்ற வாக்கியங்கள்.. பூனையின் இழப்பை வாசகர்களுக்கு எளிதில் கடத்திச் செல்கிறது... துக்க உணர்வை எழுத்தில் அருமையாக உணரச் செய்துவிட்டீர்கள். அருமை ஸார். வாயில்லா ஐந்தறிவு ஜீவனிடமிருந்தும் நல்ல விஷயங்களை கற்கலாம்.. அதற்கு நம் மனம் தயாராக இருக்க வேண்டும் என்பதையும் கதை படிப்பினை ஆக்கியுள்ளது. வாழ்த்துக்கள் ஸார்.
- முருகானந்தம், ராஜ் தொலைக்காட்சி
இப்படி, நிறைய தோழர்கள், கருத்துகளை தெரிவித்து அன்பை வெளிப்படுத்தினார்கள்.
எல்லோருக்கும் என்னுடைய நன்றி.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




No comments:
Post a Comment