மாணவர்கள் மத்தியில் கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்
'நோபல் வெல்ஃபேர் இந்தியா ஃபவுண்டேஷன்'
ஓர் சிறப்பு ரிப்போர்ட்
நவீன அறிவியல் காலத்தில் மாணவர்களின் கவனம் பல்வேறு திசைகளில் சென்றுக் கொண்டிருக்கும் ஒரு ஆபத்து தற்போது உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சமூக ஊடகங்களில் முழு நேரத்தை மாணவ சமுதாயம் செலவழிக்கும் மோசமான ஒரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் கவனம் கல்வி மீது செல்வது குறைந்து வருகிறது. படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், சென்னையில் 'நோபல் வெல்ஃபேர் இந்தியா ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பு உருவாகி, மாணவர்களின் கல்வியில் ஆர்வம் செலுத்தி, அவர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்து வருகிறது.
அந்த வகையில், சென்னை திருவல்லிக்கேணி முஹம்மதன் பொது நூலக வளாகத்தில் கல்வி மற்றும் பராமரிப்பு குறித்த எஜுகேர் (Educare) என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி 30.08.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை சிறந்த கல்வியாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை ஹாபிஸ் முஹம்மது உமர் ஹாபிசுல்லா திருக்குர்ஆன் வசனங்களை ஓதி தொடங்கி வைத்தார். விழாவிற்கு வந்தவர்களை அமைப்பின் துணைத் தலைவர் குலாம் முஹம்மது அலி வரவேற்றார். அமைப்பின் இணை அமைப்பாளர் அல்தாப் அஹமத் கையாஸ் தலைமையுரை ஆற்ற, தலைமை ஆசிரியர் டாக்டர் ஷாகுல் ஹமீது சிறப்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கல்வியாளரும் அரபி மொழி வல்லுநருமான ஷாமீமுல் இஸ்லாம், கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். விழாவில் பங்கேற்ற மூத்த கல்வியாளர் நாராணய பாபு, கல்வியால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். 2025-2026 கல்வி ஆண்டில் பன்னிராடாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்ற முஹம்மது அர்ஷத் உள்ளிட்ட மூன்று மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இறுதியில், துணைத் தலைவர் நஜீம் உசேன் நன்றி கூற, துஆவுடன் விழா நிறைவுபெற்றது.
சிறப்பு நேர்காணல் :
இந்த விழாவில் நோபல் வெல்ஃபேர் இந்தியா ஃபவுண்டேஷன்'-இன் துணைத் தலைவர், ஆற்காடு நவாப் நான்காம் இளவரர் முஹம்மது முனவ்வர் கான் பகதூரின் கொள்ளுப் பேரன் குலாம் முஹம்மது அலி என்னும் ஷாஹித்தை சந்தித்து, அமைப்பின் நோக்கங்கள் குறித்து மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் நேர்காணல் நடத்தினார். அதன் விவரங்கள் வருமாறு:
கடந்த 2025ஆம் ஆண்டு இந்த அமைப்பை நாங்கள் ஒரு குழுவை அமைத்து உருவாக்கினோம். ஏழை, மற்றும் நடுத்தர மாணவர்கள் பள்ளி படிப்பை இடையில் நிறுத்துவதை தவிர்க்கவும், அவர்கள் தேர்வுகளில் சிறந்து முறையில் தங்கள் பங்களிப்பை வழங்கி தேர்ச்சி பெற வேண்டும் என்றும் நோக்கமுடன் அவர்களுக்கு சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தலா 15 வீதம் மொத்தம் 30 மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாலை 6 மணி முதல் 8 மணி வரை மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன. 6 ஆசிரியர்கள் சிறந்த முறையில் பாடங்களை சொல்லித் தந்து மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் 60 முதல் 80ஆக உயர்ந்த முடிவு செய்துள்ளோம். நமது முயற்சிக்கு பெற்றோர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விரைவில் மாணவிகளுக்கும் தனியாக ஒரு பிரிவுயை உருவாக்கி அவர்களுக்கும் கல்வி குறித்து தேர்வில் எப்படி தேர்ச்சி பெறுவது என்பது குறித்தும் பயிற்சி அளிக்க முடிவு செய்து இருக்கிறோம். எந்தவித சுய லாப நோக்கம் இல்லாமல் நடத்தப்படும் நோபல் வெல்ஃபேர் இந்தியா ஃபவுண்டேஷன்'-ன் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு குலாம் முஹம்மது அலி தெரிவித்தார். இந்த அமைப்பின் நோக்கங்கள் வெற்றிபெற வாழ்த்தி விடைப்பெற்றோம்.
- சந்திப்பு : சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




No comments:
Post a Comment