ராகுல் காந்தி ஆய்வு....!
உ.பி. ரேபரேலி ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை அதிகாரிகளுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை.
மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்
ராகுல் காந்தி ஆய்வு....!
உ.பி. ரேபரேலி ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை அதிகாரிகளுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை.
"400 மொழிகளை பேசி அசத்தும் முஸ்லிம் இளைஞர் மஹ்மூத் அக்ரம்"
ஏக இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கு பல அற்புதமான திறமைகளை வாரி வழங்கி இருக்கிறான். அந்த திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தி, வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது மனிதனின் பொறுப்பாகும். இப்படிப்பட்ட திறமைகளை தங்களுக்குள் இருப்பதை அறிந்து, அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்பவர்கள் உலகில் நிறைய பேர் இருந்து வருகிறார்கள். அத்தகைய வரிசையில் ஒருவராக இருப்பவர் தான் மஹமூத் அக்ரம்.
சென்னையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் மஹ்மூத் அக்ரம், தம்முடைய அற்புதமான சாதனையால் உலகில் உள்ள அனைவரின் பார்வையையும், கவனத்தையும், தம்மை நோக்கி திருப்பி வைத்துள்ளார். பலர் சாத்தியமற்றது என்று கருதுவதை, மஹமூத் அக்ரம், தனது கடுமையான உழைப்பால், ஆர்வத்தால் சாதித்துள்ளார். ஆம், 400 மொழிகளில் படிக்கவும், எழுதவும், தட்டச்சு செய்யவும் திறமை கொண்டுள்ள இந்த இளைஞர், 46 மொழிகளை மிகவும் சரளமாகப் பேச முடியும் என்பதை நிரூபித்துள்ளார். மஹ்மூத்தின் இந்த சாதனைகள் மூலம் அவருக்கு உலக சாதனை விருதுகள் கிடைத்தது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள மொழியியலாளர்களின் மத்தியில் மரியாதையைப் பெற்று தந்துள்ளது.
ஒரு மொழியியல் பயணம்:
மஹமூத் அக்ரமின் மொழிகளின் மீதான ஈர்ப்பு இளம் வயதில் ஆரம்பிக்க தொடங்கியது என்றே கூறலாம். தனது மகனின் ஆர்வத்தை கண்ட அவரது தந்தை ஷில்பீ மொழிப்பிரியன், அக்ரமை சரியான முறையில் வழிநடத்திச் சென்றார். தாம் மட்டுமே,16 மொழிகளைப் பேசும் ஷில்பீ மொழிப்பிரியன், "மொழி சார்ந்த வாய்ப்புகளிலிருந்து தன் மகனின் வாய்ப்புகள் பறிக்கப்படுவதை விரும்பவில்லை என்றும், தனது மனைவி அக்ரமுடன் கருத்தரிக்கப்பட்டபோது, குழந்தையின் ஆர்வத்தைத் தூண்ட உதவும் என்ற நம்பிக்கையில் மொழிகளைப் பற்றி தாங்கள் உரையாடியதாகவும், அக்ரமின் விஷயத்தில் அது பலித்ததாகத் தெரிகிறது" என்றும் கூறுகிறார்.
அக்ரமுக்கு மொழிகள் மீதான ஈர்ப்பு 4 வயதிலேயே தொடங்கியது. அவரது பெற்றோர் அவருக்கு தமிழ் மற்றும் ஆங்கிம் கற்பிக்கத் தொடங்கியதுபோது, ஆறு நாட்களில் ஆங்கில எழுத்துக்களில் அவர் தேர்ச்சி பெற்றதைக் கண்டு அவரது பெற்றோர் ஆச்சரியப்பட்டார்கள். அவரது திறமை அத்துடன் நிற்கவில்லை. அவர் மூன்று வாரங்களில் 299 தமிழ் எழுத்துக்களைக் கற்றுக்கொண்டார். இது பொதுவாக பல மாதங்கள் எடுக்கும் பணியாகும். அவரது தந்தையின் வழிகாட்டுதலின் மூலம், அக்ரம் விரைவாகவே வட்டெலுத்து, கிரந்தம் மற்றும் தமிழி போன்ற பண்டைய தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொண்டார். அவற்றில் அக்ரம் விரைவாக தேர்ச்சி பெற்றார்.
சாதனைகள் மற்றும் பதிவுகள்:
ஆறு முதல் எட்டு வயது வரை, அக்ரமின் மொழியியல் தேர்ச்சிக்கான சுயமான தேடல் அவரை 50 மொழிகளைக் கற்றுக்கொள்ள வழிவகுத்தது. இந்தப் பயணம் எட்டு வயதில் இளைய பன்மொழி தட்டச்சு செய்பவர் என்ற அவரது முதல் உலக சாதனைக்கு வழிவகுத்தது. அக்ரம் 70 மொழியியல் நிபுணர்களுடன் போட்டியிட்டு ஜெர்மன் இளம் திறமை விருதை வென்றார். 10 வயதில், அக்ரம் ஒரு மணி நேரத்திற்குள் 20 மொழிகளில் இந்திய தேசிய கீதத்தை எழுதி தனது இரண்டாவது உலக சாதனையை படைத்தார். மொழியியல் சிறப்பிற்கான அவரது பசி தொடர்ந்தது. மேலும் 12 வயதில், அவர் 400 மொழிகளில் படிக்க, எழுத மற்றும் தட்டச்சு செய்ய முடியும் என்பதை நிரூபித்தார். இதன்மூலம், 70 மொழியியல் நிபுணர்களுடன் போட்டியிட்டு ஜெர்மனியில் தனது மூன்றாவது உலக சாதனையைப் பெற்றார்.
அக்ரமின் மொழிகள் மீதான ஆர்வம் வளர்ந்ததால், அது அவரது வழக்கமான கல்விக்கு சவால்களை ஏற்படுத்தியது. அவர் ஐந்தாம் வகுப்பு வரை சென்னையில் படித்தார். ஆனால் அவரது ஆர்வத்திற்கு வேறு அணுகுமுறை தேவை என்பதை விரைவில் உணர்ந்தார். மொழிகளை மட்டுமே மையமாகக் கொண்ட ஒரு பள்ளியில் சேர விரும்பிய அவர், ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை என்பதை உணர்ந்து, இஸ்ரேலில் உள்ள ஒரு பள்ளியில் ஆன்லைன் மூலம், அரபு, ஸ்பானிஷ், பிரஞ்சு மற்றும் ஹீப்ரு போன்ற முக்கிய மொழிகளைக் கற்றுக்கொண்டார். மொழி அறிவில் வெற்றி இருந்தபோதிலும், வாழ்க்கையில் கல்விச் சான்றிதழ்களின் முக்கியத்துவத்தையும், சில சமயங்களில் அவை திறமையை விட எவ்வாறு முக்கியமானவை என்பதையும் தாம் உணர்ந்து கொண்டதாக அக்ரம் ஒப்புக்கொள்கிறார். எனவே தேசிய திறந்தவெளிப் பள்ளி நிறுவனம் மூலம் படிக்க முடிவு செய்து, அந்த வழியில் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெற்றார். அக்ரமின் தந்தை ஷில்பீ மொழிப்பிரியன், அவரது வெற்றிக்கான பயணத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள டானூப் சர்வதேச பள்ளியில் உதவித்தொகையுடன் உயர்நிலைப் பள்ளிப் படிப்பையைத் தொடங்கிய அக்ரம், இது தம்மை தாய்மொழி பேசுபவர்களுடன் உரையாடவும், அவரது மொழியியல் திறன்களை மேம்படுத்தவும் அனுமதித்தது என்கிறார். தனது வகுப்பறையில் மட்டும், 39 தேசிய இனத்தவர்கள் இருந்ததாகவும், தனது வகுப்புத் தோழர்களுடன் உரையாடுவது பல மொழிகளில் சரளமாகப் பேச தமக்கு உதவியது என்றும் கூறுகிறார்.
தமிழ் மொழியே சிறந்தது:
அக்ரம் இன்று பல துறைகளில் கல்வி பயின்று பட்டங்களைப் பெற்றுள்ளார். இங்கிலாந்தின் மில்டன் கீன்ஸில் உள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் மொழியியல், ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் மற்றும் சென்னை அழகப்பா பல்கலைக்கழகத்தில் அனிமேஷனில் அறிவியலில் இளங்கலை பட்டம் என பல பட்டங்களை பெற்றுள்ளார். மொழிகளை சரளமாகப் பேசுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் அக்ரமிற்கு ஆர்வம் உருவானது. அதன் காரணமாக இன்று, அவர் 15 மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவராக மாறியுள்ளார். மற்ற மொழிகளையும் ஒரு தாய்மொழிப் பேச்சாளர் அளவுக்குக் கற்றுக்கொள்கிறார். பல ஆண்டுகளாக அவர் கற்றுக்கொண்ட ஏராளமான மொழிகளுடன் தொடர்பில் இருக்க சமூக ஊடகங்களையும் பொழுதுபோக்கையும் அக்ரம் பயன்படுத்துகிறார்.
அக்ரம் தேர்ச்சி பெற்ற மொழிகளில், தமிழ் அவருக்கு மிகவும் பிடித்தமான மொழியாகும். “தமிழ் தனது தாய்மொழி என்றும், எனவே அது தன் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது" என்று கூறி அவர் மகிழ்ச்சி அடைகிறார். அக்ரமைப் பொறுத்தவரை, அவரது சாதனைகள் ஒரு பெரிய இலக்கின் ஒரு பகுதியாகும். 2016 ஆம் ஆண்டில், அக்ரமின் தந்தை, ஷில்பி சென்னையின் ஷெனாய் நகரில் அக்ரம் குளோபல் லாங்குவேஜஸ் நிறுவனத்தை நிறுவினார். தனது மகனுக்கு மட்டுமே பல மொழிகளைக் கற்றுக் கொள்வது சுயநலம் என்று உணர்ந்ததாலும், மொழிகளின் சக்தியால் மற்றவர்கள் பயனடைய வேண்டும் என்று விரும்பியதாலும், இந்த நிறுவனத்தை தொடங்கியதாக அவர் கூறுகிறார். இந்த நிறுவனம் இந்தியா மற்றும் வளைகுடா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகளை வழங்குகிறது. ஒவ்வொரு மாதமும் குறைந்தது 150 மாணவர்களுக்கு கற்பிக்கிறது. ஷில்பீ மற்றும் அக்ரம் நடத்திய ஆன்லைன் வகுப்புகள் மூலம் இந்தி, பிரஞ்சு, ஸ்போக்கன் இங்கிலீஷ், அமெரிக்க உச்சரிப்பு மற்றும் தெலுங்கு ஆகியவற்றைக் கற்றுக்கொண்டு பலர் தற்போது சாதனை புரிந்து வருகிறார்கள்.
பிற மொழிகளில் தமிழ் இலக்கியங்கள்:
திருக்குறள் மற்றும் தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கியப் பொக்கிஷங்களை முடிந்தவரை பல மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதே அக்ரமின் கனவாகும். தற்போது 50 மொழிகளைப் பேசுபவர்கள் மட்டுமே திருக்குறளை அணுக முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. உலகளாவிய பார்வையாளர்கள் தமிழின் வளமான பாரம்பரியத்தை அறிய வேண்டும் என்று விரும்பும் அக்ரம், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் மொழியியலில் பேராசிரியராக வேண்டும் என்பதே அக்ரமின் நோக்கமாக இருந்து வருகிறது. தனது திறமையை வளர்த்ததற்காக தனது பெற்றோரைப் பாராட்டும் அக்ரம், "திறமை தனிநபருக்குள் இருக்கிறது. ஆனால் அதை அங்கீகரித்து ஆதரிப்பது பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்களைப் பொறுத்தது. அவர்களின் ஊக்கம் இல்லையென்றால், தாம் 16 மொழிகளில் நிறுத்தியிருக்கலாம்" என்றும் தெரிவித்து மகிழ்ச்சி அடைகிறார். சென்னையில் எழுத்துக்களைக் கற்கும் ஆர்வமுள்ள நான்கு வயது சிறுவனிலிருந்து உலக சாதனை படைத்த பன்மொழிப் புலமையாளர் வரையிலான மஹ்மூத் அக்ரமின் பயணம், ஆர்வம் மற்றும் விடாமுயற்சியின் தாக்கத்தை நினைவூட்டுவதாகும். தனது பணி மற்றவர்களை மொழியியல் பன்முகத்தன்மையைப் பாராட்ட ஊக்குவிக்கும் என்று நம்பும் அக்ரம், ஒரு மொழியை அறிவது மக்களை வீட்டில் இருப்பது போல் உணர வைக்கும் ஒரு சக்திவாய்ந்த வழியாகும் என்றும் கூறுகிறார். அக்ரமின் இந்த பயணம் உலகெங்கிலும் உள்ள மொழியியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. அர்ப்பணிப்பும் ஆர்வமும் கல்வி மற்றும் கற்றலில் தடைகளை உடைக்கும் என்பதை நிரூபிக்கிறது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
இ.யூ.முஸ்லிம் லீக் தொண்டர்கள் அனைவரும் போர்க்களத்தில் இயங்குவதுபோன்று இனி செயல்பட வேண்டும்.....!
மதுரையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரை....!!
மதுரை, பிப்.15- தமிழகத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும், இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்களை உருவாக்கி, கட்சியை மிகப்பெரிய வலிமையாக சக்தியாக மாற்ற இ.யூ.முஸ்லிம் லீக் தொண்டர்கள் அனைவரும் உழைக்க வேண்டும் என தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வலியுறுத்தியுள்ளார்.
இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்டம் 14.02.2025 வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 3.30 மணியளவில் மதுரையில் உள்ள ஜெ.எஃப்.ஏ.லக்கி பேலஸ் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நிறைவுயாற்றினார்.
அப்போது பேசிய அவர், மிகச் சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். பொதுக்குழு கூட்டத்தை மிக நல்ல முறையில் ஏற்பாடு செய்த மாநில செயலாளர் அவ்தா காதர், மாவட்ட துணைத் தலைவர் பொறியாளர் ஜாகிர் ஹுசைன், எம்.எஸ்.எப். மாவட்ட அமைப்பாளர் ஷாருக்கான் மற்றும் மதுரை தெற்கு, மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எமது பாராட்டுதல்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுக்குழு மற்றும் தேசிய கவுன்சில்:
நாம் எதிர்பார்த்ததைவிட மிக அதிகளவு உறுப்பினர்கள் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்து சிறப்பித்து இருக்கிறார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக வந்து கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் இனி பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பார்கள். எனவே அவர்கள் அனைவரும் பொதுக்குழு உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டிய இருநூறு ரூபாயை தலைமை அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட 523 பேரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக கருதப்படுவார்கள். எனவே அவர்கள் முறைப்படி உறுப்பினர் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சேர்த்து 10 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். புதிய பொதுக்குழு கணக்கின்படி 67 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவற்றை இந்த மாத இறுதிக்குள் நாம் செய்தாக வேண்டும். தேசிய தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி 3 பேர் நியமிக்கப்படுவார்கள். ஆக மொத்தம் தமிழகத்தில் இருந்து 70 பேர் தேசிய கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார்கள். தேசிய கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்படும் அனைவரும் 500 ரூபாயை கட்டணமாக செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
அனைத்து வார்டுகளிலும் உறுப்பினர்கள்:
தமிழகத்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்கள் இ.யூ.முஸ்லிம் லீக் தனது நிர்வாக பணிகளுக்காக 52 மாவட்டங்களாக பிரித்து பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் 12, 838 வார்டுகள் உள்ளன. தமிழகத்தில் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள் 36 மாவட்ட ஊராட்சிகள் இவற்றில் ஒரு லட்சத்து அறுபதாயிரத்து நானூற்றி ஐம்பத்து மூன்று (1, 60, 453) வார்டுகள் உள்ளன.
மேற்கண்ட அனைத்து வார்டுகளிலும் இ.யூ.முஸ்லிம் லீகின் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வார்டிலும் முஸ்லிம் லீகின் தலைமை அமைப்போ, அல்லது இணை அமைப்போ அல்லது சார்பு அமைப்போ உருவாக்கிட மாவட்ட முஸ்லிம் லீக்களும் மற்றும் சார்பு அமைப்பின் நிர்வாகிகளும் இணைந்து செயல்பட வேண்டும். இந்த பணிகளை மார்ச் முதல் தேதி தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும்.
போர்க்களத்தில் இயங்குவது போன்று:
இ.யூ.முஸ்லிம் லீக் தொண்டர்கள் இதுவரை எப்படி செயல்பட்டார்கள் என்பது முக்கியம் அல்ல. இனி வரும் நாட்களில் போர்க்களத்தில் நின்று பணியாற்றுவதைப் போன்று மிகவும் வீரியத்துடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இ.யூ.முஸ்லிம் லீக் அமைப்பு இருக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இதை கவனத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், நமது இயக்கம் வலிமை வாய்ந்த இயக்கமாக மாறும். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை அனுப்பி வைக்க முடியும். அத்துடன் நம்முடைய சமுதாயத்திற்கு மட்டுமல்லமால், சகோதர சமுயாத்திற்கும் செயல்படக் கூடிய நல்ல வாய்ப்பு நமக்கு கிடைக்கும். எனவே அனைவரும் அதில் தனிக் கவனம் செலுத்தி செயல்பட உங்கள் அனைவரும் அழைக்கிறோம்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.
சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக மக்களிடையே எந்த பிரச்சினையும் கிடையாது.....!
தமிழகத்தில் நிலவும் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பா.ஜ.க., இந்துத்துவ அமைப்புகள் வேண்டும் என்றே பிரச்சினையை கிளப்புகின்றன....!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி....!
மதுரை, பிப்.15-தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுன் வாழ்ந்து மத நல்லிணக்கத்தை பேணி வரும் நிலையில், அதை சீர்குலைக்கும் வகையில் பா.ஜ.க., இந்துத்துவ அமைப்புகள் வேண்டும் என்றே பிரச்சினையை கிளப்பி வருவதாக இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
காயிதே மில்லத் சென்டர்:
மதுரையில் இ.யூ.முஸ்லிம் லீகின் மாநில பொதுக்குழு கூட்டம் 14.02.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் பேசினார். அதன் முழு விவரம் வருமாறு:
இ.யூ.முஸ்லிம் லீக் கட்சியில் மேற்பட வேண்டிய நிர்வாக சீர்திருத்தங்கள், கட்சியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் ஆகியவறை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது. சென்னையில் உள்ள இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை அலுவலகம் கடந்த 1948ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
தற்போது தலைநகர் டெல்லியில் புதிதாக தலைமை அலுவலகம் ஒன்றை கட்டிக் கொண்டு இருக்கிறோம். இதன் திறப்பு விழா ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும். டெல்லியில் உள்ள இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு காயிதே மில்லத் சென்டர் என பெயரிட்டுள்ளோம். இங்கு தற்போது பராமரத்துப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இங்கு தலைமை அலுவலகம் முழுவீச்சில் செயல்படும்.
இந்தியா முழுமைக்கான திராவிட மாடல்:
தமிழகத்தைப் பொறுத்தவரை, தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் தமிழக அரசு, ஒரு திராவிட மாடல் அரசாகும். இந்த திராவிட மாடல் அரசு தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடைபெற வேண்டும். அதன்மூலம் அனைத்துச் சமுதாய மக்களுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நல்ல மாற்றங்கள், செயல்படுத்தப்படும் சிறப்பான திட்டங்கள் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
திராவிட மாடல் அரசுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் தனது முழு ஆதரவை தமிழகத்தில் அளித்து வருகிறது இதேபோன்று, மற்ற மாநிலங்களில் உள்ள இ.யூ.முஸ்லிம் லீக் ஊழியர்கள் நன்கு செயல்பட்டு, திராவிட மாடல் அரசு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் தமிழகத்தில் நிலவும் மத ஒற்றுமை, சமூக மேம்பாடு, மத நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தும் மற்ற மாநில மக்களும் புரிந்துகொள்ள வாயப்பு உருவாகும். இதற்கு இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்ந்து தனது பங்களிப்பையும், பணிகளையும் செய்யும்.
முக்கிய கோரிக்கைகள்:
இந்த மதுரை பொதுக்குழுவில். நாங்கள் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம். குறிப்பாக தமிழக அரசுக்கு பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். இதேபோன்று, சென்னையில் உள்ள காயிதே மில்லத் மணிமண்டபம் சுற்றியுள்ள நிலப்பகுதியில், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் பெயரில் காயிதே மில்லத் அரபு தமிழ் ஒப்பாய்வு பல்கலைக்கழகம் உருவாக்கி தர வேண்டும். மேலும், இதே பகுதியில், உர்தூ ஆசிரியர் பயிற்சி கல்லூரியையும் அமைத்து தர வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரோல் மிகவும் போற்றப்பட்ட இ.யூ.முஸ்லிம் லீக் முன்னாள தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத் அவர்களின் நூற்றாண்டு விழா வரும் அக்டோபர் 4ஆம் வருவதால் அந்த விழாவை தமிழக அரசின் சார்பில் நடத்த வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு 2025 :
தமிழகத்தை பொறுத்தவரை இ.யூ.முஸ்லிம் லீகின் மாநில அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் கட்சி நிதியாக 25 கோடி ரூபாயை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
தமிழகத்தில் உள்ள மஸ்ஜிதுகளை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மஹல்லா ஜமாஅத்துகளின் ஒருங்கிணைப்பு மாநாட்டை தமிழ்நாடு மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு 2025 என்ற பெயரில் டிசம்பர் இறுதி வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் கேரள மாநில தலைவர் பானக்காடு செய்யது சாதிக் அலி தங்ஙள், இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்சாலிக்குட்டி, தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முகமது பஷீர் எம்.பி., தேசிய பொருளாளர் பி.வி.அப்துல் வகாப் எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா பி.ஏ.காஜா முயினுத்தீன் பாகவி, பொதுச் செயலாளர் மௌலானா டாக்டர் அன்வர் பாதுஷாஹ் உலவி, முஸ்லிம் தனியார் சட்ட வாரிய தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோரையும் அழைக்க திட்டமிட்டுள்ளோம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக சதி:
திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழக மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அனைத்துச் சமுதாய மக்களும், ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அங்குள்ள மக்களிடம் எந்த பிரச்சினையும் இல்லை. அவர்கள் வழக்கம் போல தங்களுடைய வழிப்பாடுகளை செய்து வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் சுமார் 1800க்கும் மேற்பட்ட தர்காகள் உள்ளன. இந்த தர்காகளில் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து சமுதாய மக்களும் சென்று வழிபாடு செய்கிறார்கள். காலம் காலமாக இருக்கும் வழக்கமான நடைமுறையின்படி, ஆடு, கோழி ஆகியவற்றை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வருகிறார்கள். இதேபோன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவிலும் அனைத்து சமுதாய மக்களும் சென்று வழிபாடு செய்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், பா.ஜ.க. மற்றும் இந்துத்துவ அமைப்புகள் தற்போது வேண்டும் என்றே பிரச்சினையை கிளப்பி இருக்கிறார்கள். மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதை சீர்குலைக்கும் வகையிலும், மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் பா.ஜ.க. மற்றும் இந்துத்துவ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கையை எடுத்து, நீதிமன்றத்திலும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் கூட, திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும், வெளியூர்களில் இருந்து வரும் சிலர் மட்டுமே பிரச்சினையை கிளப்புவதாகவும் கூறியுள்ளார். எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதன் மூலம் தற்போது திருப்பரங்குன்றம் பகுதி அமைதியாக இருந்து வருகிறது.
இந்து-முஸ்லிம் மக்களிடையே இருக்கும் ஒற்றுமையை யாரும் கெடுத்துவிடக் கூடாது என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தமிழகம் எப்போதும் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக, அமைதியாக, நிம்தியாக வாழ வேண்டும். இதற்காக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இ.யூ.முஸ்லிம் லீக் தனது ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
சர்வ சமய நல்லிணக்க மாமன்றம்:
தமிழகத்தில் குன்றக்குடி அடிகளார் அவர்கள், திருவருள் பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி சிறப்பாக செயல்பட்டார்கள். அதன்மூலம் நல்ல பலன் கிடைத்தது. தற்போது மத அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வரும் நிலையில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் சர்வ சமய நல்லிணக்க மாமன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக இ.யூ.முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் இருப்பார்கள். இந்த அமைப்பு 11 பேர் கொண்ட அமைப்பாக செயல்படும். மக்கள் மத்தியில் நல்ல புரிதலை உருவாக்கி, நல்லிணக்கத்தை ஏற்படும் வகையில் இந்த சர்வ சமய நல்லிணக்க மாமன்றம் தனது பணிகளை சிறப்பான முறையில் செய்யும்.
திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம்:
திமுகவிற்கும் இ.யூ.முஸ்லிம் லீகிற்கும் உள்ள தொடர்பு கொள்கை ரீதியான தொடர்பாகும். அரசியலுக்காக நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. கொள்கையின் அடிப்படையில் நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையில் திமுக உறுதியாக உள்ளது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என திமுக சொல்கிறது. இதைத் தான் இ.யூ.முஸ்லிம் லீகும் காலம் காலமாக சொல்லிக் கொண்டே இருக்கிறது. எனவே, திமுக-இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்பு என்பது கொள்கையின் அடிப்படையில் உள்ள தொடர்பாகும். தேர்தலில் நின்று சீட்டுகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை.
இதை திமுக தலைமை நன்கு அறிந்து இருக்கிறது. அதன் காரணமாக தான் இ.யூ.முஸ்லிம் லீகுடன் திமுக தொடர்ந்து கூட்டணி வைத்துக் கொள்கிறது. திமுகவுடன் நாங்கள் முன்பும் இருந்தோம். இப்போதும் இருக்கிறோம். எப்போதும் இருப்போம். மற்ற கட்சிகள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை குறித்து உங்கள் கேள்விக்கு என்னுடைய பதில் இதுதான். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நன்மை செய்யலாம். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். பிற யூகமான கேள்விகளுக்கு தற்போது எந்த பதிலும் அளிக்க முடியாது.
ஒன்றிய அரசு பாரபட்சம்:
தமிழக அரசு திராவிட மாடல் ஆட்சியை மிகவும் சிறப்பாக அளித்துவரும் நிலையில், ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களையும், நிதியையும் முறையாக ஒதுக்குவதில்லை. மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பா.ஜ.க. அரசு நடந்துகொள்கிறது. தங்களுக்கு வேண்டிய மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீட்டை அதிகமாக கொடுக்கிறது. நல்ல செய்யும் தமிழநாட்டை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது.
ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆ ட்சிக்கு வந்து மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. வெறும் வெற்று முழக்கங்களை மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்கிறது. இதனை இ.யூ.முஸ்லிம் லீக் கண்டிக்கிறது. தமிழகத்திற்கு தேவையான நிதியையும், நல்ல திட்டங்களையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு அளிக்க வேண்டும். அதன்மூலம் தமிழக மக்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்துவரும் பணிகள் மேலும் சிறப்பாக செய்ய முடியும். நல்ல திட்டங்களை கொண்டுவந்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர முடியும்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகீதின் தெரிவித்தார்.
செய்தியாளர்களின் சந்திப்பின்போது, இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஷாஜஹான், மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், மாநில துணைத் தலைவர் கே.நவாஸ் கனி எம்.பி, மாநில துணைத் தலைவர் டாக்டர் தாவூத் பாஷா, மாநில துணைத் தலைவர் கே.டி.கிஸர் அகமது, மாநில செயலாளர்கள் காயல் மஹபூப், எச்.அப்துல் பாசித், வழக்கறிஞர் வி.ஜீவகிரிதரன், ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான், கே.எம்.நிஜாமுத்தீன், காதர் பாஷா (எ) அவுதா காதர், மாநில துணைச் செயலாளர்கள் ஆப்பனூர் ஜபரூல்லாஹ், எஸ்.எ.இப்ராஹிம் மக்கீ, வி.எம்.பாருக், கே.ஏ.டபுள்யூ அப்துல் காதர் ஷெரீப், பி.எம்.அப்துல் ஜப்பார், ஏ.எஸ்.அப்துர் ரஹ்மான் ரப்பானி, மகளிர் அணி தேசிய தலைவி பாத்திமா முஸப்பர், எம்.எஸ்.எஃப். தேசிய பொதுச் செயலாளர் எஸ்.எச்.முஹம்முது அர்ஷத் உட்பட முன்னணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
"கைரேகைகளும், மனிதமும்"
சில மாதங்களுக்கு முன்பு எங்கள் பிளாட் மிகவும் விலையுயர்ந்த வண்ணப்பூச்சுகளால் அலங்கரிக்கப்பட்டது. நானும் என் மனைவியும், எனது தாயரான என் பாசமிகு அம்மா கழிப்பறைக்குச் சென்று வருவதைப் பார்க்கும்போதெல்லாம், அவர்கள் எழுந்து நிற்கும்போது ஆதரவுக்காக சுவரில் சாய்ந்து கொள்வதை அடிக்கடி கவனிப்போம். இதன் காரணமாக, அவர்களின் உள்ளங்கை மற்றும் கைரேகைகள் சுவரில் தொடர்ந்து தோன்றின. அம்மாவின் இந்த நடத்தை என் மனைவிக்கு மிகவும் விரும்பத்தகாததாக இருந்தது. உண்மையைச் சொன்னால், எனக்கும் இது பிடிக்கவில்லை. அதனால்தான் நான் அவர்களிடம் பலமுறை சொன்னேன். அழுக்கு கைகளால் சுவரைத் தொடுவதன் மூலம், அவர்களின் கைகளின் அடையாளங்கள் சுவரின் அழகிய தோற்றத்தைக் கெடுத்துவிடும் என்று நான் பலமுறை சொன்னேன்.
இதையெல்லாம் மீறி, அம்மா, தனது பழக்கத்தை கைவிடவில்லை. ஒருவேளை அவர்களின் வயதின் காரணமாக, அவர்கள் எனது வழிமுறைகளை மறந்துவிட்டிருக்கலாம். அல்லது இந்த விஷயங்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கலாம். அவர் இளமையில் மிகவும் நுட்பமானவராக இருந்தார் என்பது எனக்குத் தெரியும். ஒரு நாள் நாங்கள் எல்லோரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஒருவேளை அம்மாவுக்கு தலைவலி இருந்திருக்கலாம். அம்மா எழுந்து போய் அலமாரியிலிருந்து வலி நிவாரணி எண்ணெய் பாட்டிலைத் திறந்தார். கையில் சிறிது எண்ணெயை எடுத்து நெற்றியில் தேய்த்துக் கொண்டார். பாட்டிலை மூடிவிட்டு வாஷ்ரூம் நோக்கி நடந்தார். அவர்கள் வெளியேறும்போது, வழக்கம் போல் சுவரில் சாய்ந்து, தங்கள் கைரேகைகளையும் உள்ளங்கை ரேகைகளையும் சுவரில் விட்டுச் சென்றனர். சுவரில் எண்ணெய் படிந்த உள்ளங்கை மற்றும் கைரேகைகள் தெளிவாகத் தெரிந்தன என்பது தெளிவாகத் தெரிந்தது.
இதைப் பார்த்த என் மனைவி கோபத்தில் கொதித்து என்னைத் திட்ட ஆரம்பித்தாள். அப்போதும் கூட, என்னால் என் கோபத்தை அடக்க முடியவில்லை. இனிமேல், அவர் சுவரைத் தொடக்கூட முயற்சிக்கக் கூடாது என்று நான் அம்மாவிடம் கடுமையாகச் சொன்னேன். அவர் ஏக்கக் கண்களால் என்னைப் பார்த்தார். அவர்களின் கண்களில் வெட்கமும் சங்கடமும் தெரிந்தன. இதைப் பார்த்ததும், நானும் மிகவும் வருத்தப்பட்டு, கண்களைத் தாழ்த்திக் கொண்டேன். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் எதுவும் சொல்ல எனக்கு தைரியம் இல்லை. என் அம்மா தலை குனிந்து திரும்பிச் செல்வதை நான் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, அம்மா சுவரில் சாய்வதை நிறுத்தினார். ஆனால் ஒரு நாள், கழிப்பறைக்குச் செல்லும்போது, அவர் சுவரில் விழுந்து பின்னர் படுக்கையில் இருந்து விழுந்தார். இதனால் சில நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார். கடைசி நேரத்தில் அம்மாவிடம் மன்னிப்பு கேட்கக்கூட முடியாதது எனக்கு மனவேதனையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த சில மாதங்களுக்குப் பிறகு, எங்கள் பிளாட்டை வண்ணம் தீட்ட ஒரு நல்ல ஓவியரை அழைத்தேன்.
ஓவியம் வரைந்து கொண்டிருக்கும்போது, குறிக்கப்பட்ட சுவரை சுத்தம் செய்து சுரண்டுவதற்காக அவன் கையை நீட்டியபோது என் மகன் அவனைத் தடுத்தான். அவர், "இந்த அடையாளங்களை அழிக்காதே!" என்றார். இவை என் அன்பான பாட்டியின் அடையாளங்கள் என்று கூறினான். அந்த ஓவியர் தனது வேலையில் நிபுணராகவும், நல்ல கலைஞராகவும் இருந்தார். அவர் எனது மகனுக்கு ஆறுதல் கூறி, கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். இந்தக் குறிகள் கீறப்படவே மாட்டாது. சுவரில் இருந்த இந்தக் குறிகளைச் சுற்றி ஒரு வேலி வரைந்து, அதை அழகான வடிவமைப்புகளாலும், கவர்ச்சிகரமான வண்ணங்களாலும் அலங்கரித்தார். எங்கள் வீட்டிற்கு வந்த அனைவரும் இந்த தலைசிறந்த படைப்பைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
காலப்போக்கில், என் வயதும் மங்கத் தொடங்கியது. எனக்கும் வயதாக ஆரம்பித்து விட்டது. ஒரு நாள், என் வீட்டைச் சுற்றி நடந்து கொண்டிருந்தபோது, நான் தடுமாறிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். எனக்கு கொஞ்சம் ஆதரவு தேவை. ஆனால் நானும், என் மனைவி தனது மாமியாரான என் அம்மாவையும் நடத்திய விதத்தையும் நினைவில் கொண்டு, சுவரில் சாய்வதை நிறுத்தினேன். ஆனால் என் மகன் என் முகத்திலிருந்து என் நிலையை உணர்ந்தான். மேலும், விபத்து ஏற்படாமல் இருக்க, சுவரைப் பிடித்துக் கொண்டு, தயக்கமின்றி நடக்கச் சொல்வார்.
அந்த நேரத்தில், என் மகன் என்னுடன் இருப்பது போன்ற ஒரு இனிமையான உணர்வு எனக்கு ஏற்பட்டது. நான் கவலைப்படுகிறேன். சில காலத்திற்கு முன்பு பலவீனமான என் அம்மாவை நான் எப்படி நடத்தினேன் என்பதை அறிந்திருந்தும் கூட. என் பேத்தியும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் ஓடி வந்து என் கையைப் பிடித்து, தன் சிறிய தோளில் வைத்து, என்னைத் தாங்கி, குளியலறைக்கு அழைத்துச் சென்றாள். அந்த நேரத்தில், என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நான் என் அம்மாவை இப்படி ஆதரித்திருந்தால், ஒருவேளை அவர் இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருப்பார் என்று நினைக்க ஆரம்பித்தேன். அதே மாலையில், தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, என் பேத்தி தனது ஓவியப் புத்தகத்தைக் கொண்டு வந்தாள். மேஜையில் அதைத் திறந்து, எங்கள் வீட்டின் சுவரில் இருந்த ஓவியத்தை அவர் தனது வரைபடப் புத்தகத்தில் நகலெடுத்த பக்கத்தை எனக்குக் காட்டினார். அவருடைய ஓவிய ஆசிரியரும், முதல்வரும் அவரை மிகவும் பாராட்டியதாக அவர் என்னிடம் கூறினார். இதைக் கேட்டதும் எனக்குக் கண்ணீரை அடக்க முடியவில்லை. புத்துணர்ச்சியூட்டும் உணர்வுடன், இதயத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து ஒரு எதிரொலி வந்தது: "நான் விரும்புகிறேன்!" ஒவ்வொரு குழந்தையும் என் பேத்தியைப் போல தங்கள் பெரியவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளட்டும்.
- நன்றி: தி இன்குலாப் உர்தூ நாளிதழ்
- தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
An absolutely brilliant intervention on the budget by Shri PChidambaram.
Pointed, piercing, tears apart cheerleaders and the propagandists with numbers and data
On another note - why doesn’t the FM ever smile?
"மலேசியாவில் நடைபெறும் மூன்றாவது உலக இஸ்லாமிய
சுற்றுலா மற்றும் வர்த்தக விருதுகள் வழங்கும் விழா"
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது உலக இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தக விருதுகள் (WITA) 2025 ஆம் ஆண்டிற்கான பரிந்துரைகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கத்தால் (MATTA) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, உலக அளவில் இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத் துறைகளில் சிறந்து விளங்குவதை முன்னிலைப்படுத்தி கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மலேசியாவின் துடிப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த மதிப்புமிக்க விருது வழங்கும் விழா, உலகளாவிய இஸ்லாமிய பொருளாதாரத்தில் புதுமை, நிலைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பைக் கொண்டாடுவதற்கான ஒரு மைல்கல்லாகும்.
ஒரு முக்கிய நிகழ்வு:
இந்த விருது வழங்கும் விழா வரும் ஆகஸ்ட் 25, 2025 திங்கட்கிழமை, மலேசியாவின் சிலாங்கூரில் உள்ள பந்தர் சன்வேயில் அமைந்துள்ள ஆடம்பரமான சன்வே ரிசார்ட் ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த சிறப்பான நிகழ்வு இரண்டு முக்கிய சர்வதேச நிகழ்வுகளுடன் ஒத்துப்போகிறது. உலக இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தக கண்காட்சி (WITEX) மற்றும் உலக கலாச்சார மற்றும் கலை விழா (WCAF). இந்த நிகழ்வுகள் ஒன்றாக, தலைவர்கள், புதுமைப்பித்தர்கள் மற்றும் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாச்சாரத் தொழில்களில் பங்குதாரர்களுக்கான செயல்பாட்டு மையத்தை உருவாக்கும்.
விருதுகளின் நோக்கங்கள், உலக இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தக விருதுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தில் சிறந்த சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை கௌரவித்தல், இஸ்லாமிய பொருளாதாரத்திற்குள் புதுமை, நிலைத்தன்மை மற்றும் சிறப்பை வளர்ப்பது,பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சார பன்முக புரிதலின் இயக்கிகளாக இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.
பொருளாதார மற்றும் கலாச்சார செழிப்பை மேம்படுத்துவதில் நாட்டின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், ஹலால் சுற்றுலா மற்றும் வர்த்தகத்திற்கான உலகளாவிய மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் மலேசியாவின் பெரிய தொலைநோக்குடன் இந்த நோக்கங்கள் ஒத்துப்போகின்றன.
தொலைநோக்கு பார்வை:
"உலக இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தக விருதுகள் சிறப்பின் அளவுகோலாக மாறியுள்ளன. தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் புதுமை மற்றும் சேவையின் எல்லைகளைத் தாண்ட ஊக்குவிக்கின்றன. இந்த நிகழ்வு சாதனைகளின் கொண்டாட்டம் மட்டுமல்ல, ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான ஒரு தளமாகும்." என்று உலக இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தக விருதுகள் அமைப்பின் தலைவர் டாக்டர் இஸ்யான் டயானா தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத் தொழில்களில் முன்னேற்றத்திற்கு WITA ஒரு ஊக்கியாக இருக்கும். சமூக உணர்வையும் பகிரப்பட்ட நோக்கத்தையும் வளர்ப்பதன் மூலம், விருதுகள் தொழில்துறை நிர்வாகிகளை உலகளாவிய பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றங்களுக்கு புதுமைப்படுத்தவும் பங்களிக்கவும் ஊக்குவிக்கின்றன.
பரிந்துரைகள் மற்றும் தகுதி:
3வது WITA க்கான பரிந்துரைகள் இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை முன்னேற்றுவதில் விதிவிலக்கான செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் முன்முயற்சிகளுக்கு திறந்திருக்கும். தொழில்துறை தலைவர்கள், புதுமைப்பித்தர்கள் மற்றும் பங்குதாரர்கள் பங்கேற்கவும் இந்த துடிப்பான துறையில் தங்கள் பங்களிப்புகளை வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். பரிந்துரைக்கப்பட்டவர்கள் பின்வரும் அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுவார்கள்:
இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தக அனுபவத்தை மேம்படுத்தும் புதிய யோசனைகள், சேவைகள் அல்லது நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல்., சுற்றுச்சூழல் நட்பு மற்றும் கலாச்சார ரீதியாக உணர்திறன் வாய்ந்த நடைமுறைகளுக்கான அர்ப்பணிப்பு., பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சார புரிதலுக்கு அளவிடக்கூடிய பங்களிப்புகள் என மதிப்பீடு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வெற்றியாளர்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
உலகளாவிய ஹலால் பொருளாதாரத்தில் ஒரு தலைவராக மலேசியா தனது நிலையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக WITA விருதுகள் உள்ளன. WITEX மற்றும் WCAF போன்ற நிகழ்வுகள் விருதுகளுடன் நடைபெறுவதால், இந்த நிகழ்வு கலாச்சாரம், வணிகம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் தனித்துவமான ஒருங்கிணைப்பை உறுதி செய்கிறது.
உலக இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தக கண்காட்சி (WITEX) இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தில் வாய்ப்புகளை ஆராய உலகளாவிய பங்குதாரர்களை ஒன்றிணைக்கிறது.. ஹலால் பயண சேவைகள் முதல் இஸ்லாமிய நிதி வரை, WITEX ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான தளத்தை வழங்குகிறது. இஸ்லாமிய கலை மற்றும் கலாச்சாரத்தின் வளமான பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில் உலக கலாச்சார மற்றும் கலை விழா (WCAF) இருக்கும். இஸ்லாமிய உலகம் முழுவதிலுமிருந்து பாரம்பரிய நிகழ்ச்சிகள், சமையல் மகிழ்ச்சிகள் மற்றும் கைவினைஞர் கைவினைகளை அனுபவிக்கும் வாய்ப்பை பங்கேற்பாளர்களுக்கு வழங்குகிறது.
3வது WITA-வை நடத்தும் மலேசியாவின் பங்கு இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத் துறைகளில் அதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஹலால்-நட்பு உள்கட்டமைப்பு, கலாச்சார செழுமை மற்றும் உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் மூலோபாய முயற்சிகள் காரணமாக, முஸ்லிம் பயணிகளுக்கான சிறந்த இடங்களின் பட்டியலில் நாடு தொடர்ந்து இடம்பிடித்துள்ளது. மேலும், ஹலால் பொருளாதாரத்தில் புதுமை மற்றும் சிறந்து விளங்குவதற்கான மையமாக மலேசியா தனது நற்பெயரை தொடர்ந்து வலுப்படுத்துகிறது. இந்த முயற்சிகள் நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் அதன் பரந்த பொருளாதார இலக்குகளுக்கும் பங்களிக்கின்றன.
விருதுகளின் முக்கிய சிறப்பம்சங்கள்:
இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தில் புதிய அளவுகோல்களை அமைத்த முன்னோடிகளை இந்த விருதுகள் கௌரவிக்கும். அத்துடன், ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைகளை வளர்க்கும் வகையில், தொழில்துறைத் தலைவர்களுடன் இணையும் வாய்ப்பு பங்கேற்பாளர்களுக்கு கிடைக்கும். இந்த நிகழ்வு இஸ்லாமிய கலை, இசை மற்றும் உணவு வகைகளின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடும். இது ஒரு துடிப்பான கலாச்சார பரிமாணத்தைச் சேர்க்கும்.
இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதன் மூலம், விருதுகள் இந்தத் துறைகளில் முதலீடு மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டவை.
இதில் பங்கேற்று விருதுகள் பெறும் வெற்றியாளர்கள் சர்வதேச தெரிவுநிலை மற்றும் நம்பகத்தன்மையைப் பெறுகிறார்கள். தொழில்துறையில் உள்ள முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து ஒத்துழைப்பு மேம்படுத்துதல், இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தில் சமீபத்திய போக்குகள் மற்றும் புதுமைகளைப் பற்றி அறிந்துகொள்ளுதல், செழிப்பான உலகளாவிய ஹலால் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் இந்த நிகழ்வு பயன் அளிக்கும்.
இதன்மூலம், 3வது உலக இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தக விருதுகள் 2025, இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தில் சிறப்பைக் கொண்டாடும் மற்றும் புதுமைகளை வளர்க்கும் ஒரு மைல்கல் நிகழ்வாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. மலேசியா மைய நிலைக்கு வரும்போது, இந்த விருதுகள் உலகளாவிய ஹலால் பொருளாதாரத்தில் கலாச்சார மற்றும் பொருளாதார தலைமைத்துவத்திற்கான நாட்டின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன. தொழில்துறைத் தலைவர்களும் புதுமைப்பித்தன்களும் தங்கள் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கவும், இந்த வரலாற்று நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள், இது எதிர்கால தலைமுறைகளுக்கு இஸ்லாமிய சுற்றுலா மற்றும் வர்த்தகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்