மகிழ்ச்சியான தருணம்...!
கும்பகோணத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் 28.01.2026 அன்று நடைபெற்ற மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில், நான் எழுதி தொகுத்த "உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி" என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை மேனாள் நீதியரசர் அக்பர் அலி அவர்கள் வெளியிட காயிதே மில்லத் பேரவை, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாப் பரக்கத் அலி அவர்கள் பெற்றுக் கொண்டு வாழ்த்தினார்.
நூல் வெளியிட்ட போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் ஷாஜகான், மாநில முதன்மை துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான், துணைத் தலைவர் நவாஸ் கனி, தேசிய செயலாளர் அப்துல் பாசித், தேசிய துணைச் செயலாளர் பாத்திமா முசப்பர், மாநாடு ஒருங்கிணைப்பு தலைவர் ஆடுதுறை ஷாஜகான் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment