SP MP Awadhesh Prasad breaks down as he addresses a press conference on the incident of a Dalit woman's murder in Ayodhya.
Sunday, February 2, 2025
ஜாகியா ஜாஃப்ரி மரணம்...!
"குஜராத் கலவர வழக்கில் நீதிக்காக போராடிய ஜாகியா ஜாஃப்ரி காலமானார்"
அகமதாபாத், பிப்.2- -குஜராத் கலவர வழக்கில் நீதிக்காக போராடிய ஜாகியா ஜாஃப்ரி, 01.02.2025 அன்று காலமானார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் வெடித்த கலவரத்தின்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சான் ஜாஃப்ரி உட்பட 69 கொல்லப்பட்டனர். தனது கணவர் கொல்லப்பட்டதற்கு எதிராக ஜாடிகயா ஜாஃப்ரி தன் வாழ்நாள் முழுவதும் சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டே இருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில், அகமதாபாத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்று இருந்தபோது, நேற்று (01.02.2025) தனது குடும்ப உறுப்பினர்களுடன் வழக்கம் போல் பேசிக் கொண்டிருந்தபோது, தமக்கு அசௌகரியமாக இருப்பதாக அவர் கூறினார். இதையடுத்து மருத்துவர் அழைக்கப்பட்டு அவரை பரிசோதனை செய்தபோது, காலை 11:30 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார். என்று அவரது மகன் தன்வீர் ஜாஃப்ரி தெரிவித்தார்.
குஜராத் கலவரம் ஒரு பார்வை:
கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் எரிக்கப்பட்ட மறுநாளே குஜராத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 28, 2002 அன்று அகமதாபாத்தில் உள்ள முஸ்லிம் பகுதியான குல்பர்க் சொசைட்டியில் கொல்லப்பட்ட 69 பேரில் ஜாஃப்ரியின் கணவர் எஹ்சான் ஜாஃப்ரியும் ஒருவர் ஆவார்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பயங்கரமான கலவரத்தைத் தூண்டியது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு நடந்த கலவரங்களுக்கான பெரிய சதித்திட்டத்திற்கு உயர்மட்ட அரசியல் தலைவர்களை பொறுப்பேற்க வைக்க உச்சநீதிமன்றம் வரை சட்டப் போராட்டம் நடத்தியதன் மூலம் ஜாகியா ஜாஃப்ரி தேசிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
ஜாகியா ஜாஃப்ரியின் சட்டப் போராட்டம்:
2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, 2006 ஜுன் 8ஆம் தேதி ஜாகியா ஜாஃப்ரி 119 பக்கங்கள் கொண்டு புகார் மனு ஒன்றை மாநில டி.ஜி.பி.யுடம் நேரில் வழங்கினார். ஆனால் எந்த வழக்கும் பதிவு செய்யப்படாததால், அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வன்முறையில் ஈடுபட்ட 62 பேர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா 2007ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தார். இதைத் தொடர்ந்து 2008 மார்ச் 3ம் தேதி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து உச்சநீதிமன்றம் குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் 2009 ஏப்ரல் 27ஆம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக்குழு மே 14ஆம் தேதி மோடியிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தி, உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது.
பின்னர் ராஜு ராமசந்திரன் தாக்கல் செய்த 10 பக்க அறிக்கையின் அடிப்படையில் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அறிக்கையில் உள்ள குறைப்பாடுகள் குறித்து ராஜு ராமசந்திரன் முறையிட்டபோது, அதுகுறித்து சாட்சியாளர்களிடம் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில் 2011 ஜுலை 25ஆம் தேதி அவர் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். பின்னர் 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி கீழமை நீதிமன்றத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அப்போது சிறப்பு புலனாய்வுக்குழு பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் மோடி உள்ளிட்டோர் பரிசுத்தமானவர்கள் என்ற அறிக்கையை தாக்கல் செய்தது. இதற்கு எதிரா ஜாகியா ஜாஃப்ரி, மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால், பெருநகர குற்றவியல் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து 2014 மார்ச் 18ல் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். எனினும் 2017 அக்டோபர் 5ஆம் தேதி இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக 2018 செப்டம்பர் 12ஆம் தேதி ஜாகியா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 2022 ஜுன் 24ஆம் தேதி, சிறப்பு புலனாய்வுக்குழு மோடி உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் இல்லை என கூறியதை ஏற்றுக் கொண்டு, அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இப்படி நீதிக்காக தொடர்ந்து ஜாகியா ஜாஃபரி தனது வாழ்வின் இறுதிநாள் வரை போராடிக் கொண்டே இருந்தார். இந்நிலையில் "மனித உரிமை சமூகத்தின் இரக்கமுள்ள தலைவரான ஜக்கியா முன்பு காலமானார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட இருப்பை நாட்டின் குடும்ப நண்பர்கள் மற்றும் உலகத்திற்கு பெரும் இழப்பாகும்" என்று உச்சநீதிமன்றத்தில் ஜாஃப்ரியின் எதிர்ப்பு மனுவில் இணைப் புகார்தாரராக இருந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
Saturday, February 1, 2025
மத்திய பட்ஜெட்.....!
"மத்திய பட்ஜெட் - ஓர் பார்வை"
- ஜாவீத் -
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 11வது ஆண்டு நடந்துகொண்டு இருக்கும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி ஒன்றாம் தேதி மக்களவையில் தனது எட்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் நான்கு ஆண்டுகளில் குறைந்த பொருளாதார வளர்ச்சிக்கு எதிராக அமைக்கப்பட்ட மோடி அரசாங்கத்தின் மூன்றாவது முழு ஆண்டு பட்ஜெட்டை ஆகும்.
எளிமையாகச் சொல்ல வேண்டுனால், பட்ஜெட் என்பது ஒரு செயல்முறை அல்லது அதன் மூலம் அரசாங்கம் அதன் நிதிநிலையைப் பற்றி நாடாளுமன்றத்திற்கும் மற்றும் முழு நாட்டிற்கும் தெரிவிக்கிறது. பட்ஜெட்டில் மூன்று முக்கிய பகுதிகள் பற்றிய வெளிப்படைத்தன்மை எதிர்பார்க்கப்படுகிறது. அவை வருமானம், செலவு மற்றும் கடன் ஆகியவை ஆகும். இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தின் சுமையை குறைக்க வருமான வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதன்மூலம் பயன் அடைபவர்கள் மிகவும் குறைந்தவர்கள் மட்டுமே என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பீகார் வாக்காளர்களை கவரும் பட்ஜெட்:
பீகார் மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதை கருத்தில் கொண்டு, 2025-26 பட்ஜெட்டில் பாஜக அரசு, வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினரையும், பீகார் வாக்காளர்களையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அறிவிப்புகளை பீகாரில் உள்ள 6 கோடியே 65 லட்சம் வாக்காளர்களும், நாடு முழுவதும் வருமான வரி செலுத்தும் 3 கோடியே 20 லட்சம் பேர் வரவேற்பார்கள். ஆனால், இந்தியாவின் பிற பகுதிகளுக்கு, பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஆறுதலான வார்த்தைகளை மட்டுமே கூறினார்.
முக்கிய துறைகளில் செலவினம் குறைப்பு:
பட்ஜெட்டில், செலவுகளைப் பொறுத்தவரை, மொத்த செலவினம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 25 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மூலதனச் செலவு 92 ஆயிரத்து 682 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைப்பு காரணமாக பாதிக்கப்பட்ட துறைகள் மற்றும் குறைக்கப்பட்ட தொகைகள் குறித்து நாம் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். சுகாதாரம் ஆயிரத்து 255 கோடி ரூபாய், கல்வி, 11 ஆயிரத்து 584 கோடி ரூபாய், சமூக நலன், 10 ஆயிரத்து 19 கோடி ரூபாய், விவசாயம் 10 ஆயிரத்து 992 கோடி ரூபாய், கிராமப்புற மேம்பாடு, 75 ஆயிரத்து 133 கோடி ரூபாய், நகர்ப்புற மேம்பாடு 18 ஆயிரத்து 907 கோடி ரூபாய், வடகிழக்கு மேம்பாடு ஆயிரத்து 894 கோடி ரூபாய் என குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கல்விக்கான நிதி ஒதுக்கீடு, 2 புள்ளி ஐந்து மூன்று சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு 10 புள்ளி எட்டு மூன்று சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஐ.டி. மற்றும் டெலிகாம் துறைக்கான நிதி ஒதுக்கீடு ஒன்று புள்ளி எட்டு எட்டு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், முந்தைய பட்ஜெட் உரைகளில் ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்ட இந்த திட்டங்களில் அரசாங்கம் நம்பிக்கையை இழந்துவிட்டது. மேலும் அரசாங்கத்தின் திறன் கணிசமாகக் குறைந்துள்ளது. உதாரணமாக போஷன், ஜல் ஜீவன் மிஷன், என்.எஸ்.ஏ.பி., (NSAP) பி.எம்.ஜி.எஸ்.ஒய்., (PMGSY) பயிர் காப்பீட்டுத் திட்டம், யூரியா மானியம் மற்றும் பி.எம். கரிப் கல்யாண் அன்ன யோஜனா ஆகியவை அடங்கும்.
நாட்டில் ரயில்வேகள் குறைக்கப்பட்டுள்ளன. ரயில்வே துறை பெரும்பான்மையான மக்களுக்கு சேவை செய்கிறது. ஆனால், 2025-26 ஆம் ஆண்டில் 766 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரித்திருப்பது பணவீக்கத்தைக் கூடக் கணக்கிடாது. இந்த ஒதுக்கீடு கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விடக் குறைவாக இருக்கும். மேலும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதியளிக்கப்பட்ட, பெரிதும் பாராட்டப்பட்ட பி.எல்.ஐ. திட்டங்கள் மற்றும் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் மற்றும் திறன் இந்தியா திட்டத்தில், இந்த நாட்டின் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டு இருப்பதை நாம் வரவேற்க வேண்டும்.
130 கோடி மக்கள் பாதிப்பு:
கெட்டிக்காரத்தனமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக பாஜகவினர் நினைக்கிறார்கள். பீகார் வாக்காளர்களுக்கு கெட்டிக்காரத்தனமாக பல சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்து இருக்கிறார்கள். அதேபோன்று வரிச் செலுத்தக்கூடிய வருமான வரி சலுகை தந்து இருக்கிறார்கள். ஆனால் பீகார் வாக்காளர்கள் 7 கோடியே 60 லட்சம் பேர் தான். நாடு முழுவதும் வருமான வரி செலுத்துபவர்கள், 3 கோடியே 20 லட்சம். 10 கோடி பேருக்கு சலுகைகள் கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் எஞ்சியுள்ள 130 கோடி மக்களுக்கு என்ன சலுகைகள் அறிவித்து இருக்கிறார்கள்.
நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கூலியை உயர்த்தி இருந்தால் பல கோடி பேர் பயன் அடைந்து இருப்பார்கள். ஜி.எஸ்.டி. வரியை குறைத்து இருந்தால், நாட்டில் உள்ள அனைவருக்கும் பயன் கிடைத்து இருக்கும். குறைந்தபட்ச ஊதியத்தை சட்டப்பூர்வமாக உயர்த்தி இருந்தால், பல கோடி பேர் பயன் அடைந்து இருப்பார்கள். அதையெல்லாம் செய்யாமல், பீகார் வாக்காளர்கள், வருமான வரி வாக்காளர்கள், அவர்களுக்கு மட்டுமே சலுகை கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் மற்றவர்களுக்கு என்ன சலுகைகளை அறிவித்தார்கள். பட்ஜெட்டில் இல்லை என்ற பட்டியலை போட்டால், நீளமான பட்டியல் வரும். செய்யாததை, பட்டியல் போட்டால் அதுவும் நீளமாக வரும்.
இந்த பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
மக்களுக்கான பட்ஜெட் இல்லை:
பிரதமர் நரேந்திர மோடி கூறியபடி, இது நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கான பட்ஜெட் இல்லை. கிராமப்புறங்களில், ஊரகப்பகுதிகளில், ஒரு தனி நபர் மாதச் செலவு, நான்கு ஆயிரத்து 120 ரூபாய் என மத்திய அரசு எடுத்த ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அப்படி என்றால், ஒரு தனி நபர் ஒருநாளைக்கு 130 ரூபாய் செலவழிக்கிறார். நகர்புறங்களில் 7 ஆயிரம் ரூபாய் மாதச் செலவு. அப்படியெனில், ஒரு நாளைக்கு 230 ரூபாய் செலவு செய்கிறார். 230 ரூபாய் செலவு செய்து எப்படி வீடு, உணவு, கல்வி, சுகாதாரம், மின்சாரம், மற்ற இதரச் செலவுகளை எப்படி செய்ய முடியும். இந்தியாவில் 50 சதவீதற்கும் அதிகமான மக்கள் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களும் ஜி.எஸ்.டி. செலுத்துகிறார்கள். வருமான வரி கட்டுபவர்கள் மட்டுமே, வரி செலுத்கிறார்கள் என நினைக்கக் கூடாது. ஜி.எஸ்.டி.யை ஏழைகள், நடுத்தர மக்கள், பணக்காரர்கள் என அனைவரும் செலுத்துகிறோம்.
எனவே ஜி.எஸ்.டி.யை குறைத்து இருந்தால், எல்லோருக்கும் பயன் கிடைத்து இருக்கும். நாட்டில் உள்ள எல்லோரும் பெட்ரோல், டீசல் போடுகிறார்கள். பெட்ரோல், டீசல் விலை காரணமாக தான் பேருந்து, வாடகை கார் உள்ளிட்டவைகளின் கட்டணம் கூடிக் கொண்டே செல்கிறது. எனவே எல்லோருக்கும் சலுகை கிடைக்க வேண்டுமானால், பெட்ரோல், டீசல் வரிச் சுமையை குறைக்க வேண்டும். ஜி.எஸ்டி.யை குறைத்து இருக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி இருக்க வேண்டும். நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் நாள் கூலியை உயர்த்தி இருக்க வேண்டும். இவற்றை செய்து இருந்தால் பெரும்பாலான மக்களுக்கு சலுகை கிடைத்து இருக்கும்.
நடுத்தர மக்கள் என்றால் யார்? :
நடுத்தர மக்களுக்கு சில சலுகைகளை தந்து இருக்கிறார்கள். நடுத்தர மக்கள் என்றால் யார்? இந்தியாவில் நடுத்தர மக்கள் என எடுத்துக் கொண்டால் 30 சதவீதம் அளவுக்கு தான் இருப்பார்கள். மற்ற 70 சதவீதம் நடுத்தர மக்கள் கணக்கில் வர மாட்டார்கள். 30 சதவீதம் இருக்கும் நடுத்தர மக்களில் வருமான வரிச் செலுத்துபவர்களுக்கு மட்டுமே சலுகையை அறிவித்து இருக்கிறார்கள். அதாவது சுமார் 3 கோடி பேருக்கு மட்டுமே சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள நடுத்தர மக்களுக்கு சலுகையை கிடையாது. நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் சலுகை கொடுக்க வேண்டுமானால், ஜி.எஸ்.,டி.யை குறைத்துஇருக்க வேண்டும். கேன்சர் மையங்கள் அமைக்கப்படும் என்ற திட்டத்தை எந்த ஆண்டு நிறைவேற்றுவார்கள் என்ற தெளிவு இல்லை.
விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கப்படும் என்று சொன்னார்கள். விவசாயி கடன் வாங்கும் அளவு உயர்த்தி வசதி செய்யப்படும் என சொல்லி இருக்கிறார்கள். ஏற்கனவே விவசாயி கடன் சுமையை இருக்கிறார்கள். இன்னும் கடன் வாங்கினால் நிலைமை என்னவாகும். விவசாயப் பொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. உரங்களின் விலை குறைப்பு குறித்து எதுவும் அறிவிப்பு இல்லை. பயிர் காப்பீடு குறித்த புதிய அறிவிப்பு எதுவும் இல்லை.
தமிழ்நாடு புறக்கணிப்பு:
பட்ஜெட்டில் பீகாரை 4 முறை குறிப்பிட்டதைப் போல மற்ற மாநிலங்களையும் நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு இருக்கலாம். ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் புறக்கணிப்பட்டு இருக்கின்றன. தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. புதிய ரயில்வே திட்டங்கள் எதுவும் இல்லை. இது தமிழக மக்களுக்கு எமாற்றமே என்று கூறலாம்.
இதேபோன்று, புதிய வேலைவாய்ப்புகள், பணவீக்கம் குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. நாட்டில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம் சிறுபான்மையின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த செய்யப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் எந்த அம்சமும் பட்ஜெட்டில் இல்லை. இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள், பா.ஜ.க. அரசு இன்னும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறது, நடத்திக் கொண்டு இருக்கிறது.
பட்ஜெட் தயாரிக்கும்போது வருமானத்தை கருத்தில் கொள்ள வேண்டும். செலவினங்களை கருத்தில் கொள்ள வேண்டும். முதலீடுகளை கருத்தில் கொள்ள வேண்டும். கடன் சுமையை கருத்தில் கொள்ள வேண்டும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தான் பட்ஜெட் தயாரிக்க வேண்டும். ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. பட்ஜெட்டைப் பார்க்கும்போது, நிதியமைச்சரோ அல்லது பிரதமரோ தலைமைப் பொருளாதார ஆலோசகரின் ஆலோசனையைப் பொருட்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. தனது பொருளாதார ஆய்வறிக்கையில் அவர் விவேகமான ஆலோசனையை வழங்கினார். "வழியை விட்டு வெளியேறு" என்பது அரசாங்கத்திற்கு அவர் விடுத்த அழைப்பு. மாறாக, பட்ஜெட் புதிய திட்டங்கள் மற்றும் திட்டங்களால் நிறைந்துள்ளது, அவற்றில் பல இந்த அரசாங்கத்தின் திறனுக்கு அப்பாற்பட்டவை. முடிவாக, பொருளாதாரம் மீண்டும் பழைய பாதையில் செல்லும், 2025-26 ஆம் நிதியாண்டில், வழக்கமான 6 அல்லது 6 புள்ளி 5 சதவீத வளர்ச்சியை விட அதிகமாக வளர்ச்சியை வழங்காது என்று பொருளாதார வல்லுநர்கள், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து கூறியுள்ள விமர்சனக் கருத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
=====================
பட்ஜெட் விமர்சனம்...!
The take away from Budget 2025-26 is that the BJP is wooing the tax paying middle class and the Bihar electorate. These announcements will be welcomed by the 3.2 crore tax paying middle class and the 7.65 crore voters of Bihar. For the rest of India, the Hon’ble Finance Minister had no more than soothing words, punctuated by the applause of BJP members led by the Hon’ble Prime Minister.
Let me first look at the financial performance in the current year, 2024-25.
• Revised revenue receipts are lower by Rs 41,240 crore. Revised net tax receipts are lower by Rs 26,439 crore.
• On the expenditure side, total expenditure has been cut by Rs 1,04,025 crore and capital expenditure has been cut by Rs 92,682 crore. Of this cut, the sectors that have suffered and the amounts cut are:
Health: ₹1,255 crore
Education: ₹11,584 crore
Social Welfare: ₹10,019 crore
Agriculture: ₹10,992 crore
Rural Development: ₹75,133 crore
Urban Development: ₹18,907 crore
Development of NE: ₹1,894 crore
: Rajya Sabha MP and Former Finance Minister Shri PChidambaram
Budget...!
Without burdening you with numbers, I urge you look at the Budget Estimates and Revised Estimates for 2024-25 and the proposed Budget Estimates for 2025-26 for the following programmes/schemes. They clearly indicate that
(i) the government has lost faith in these programmes announced with fanfare in the previous Budget speeches.
(ii) the government’s capacity has significantly diminished.
Examples are POSHAN, Jal Jeevan Mission, NSAP, PMGSY, Crop Insurance Scheme, Urea Subsidy, and PM Garib Kalyan Anna Yojana.
The Railways have been shortchanged. If you examine the Railway specific heads of expenditure, you will find that
BE 2024-25 was Rs 2,06,961 crore
RE 2024-25 is Rs 2,12,786 crore
BE 2025-26 is Rs 2,13,552 crore
Railways serve the overwhelming majority of the population. The increase of a paltry Rs 766 crore in 2025-26 will not even account for the inflation. The allocation will be less than last year’s allocation.
On the much-vaunted PLI schemes plus New Employment Generation Scheme plus Skill India programme that were promised to create thousands of jobs, the youth of this country have been deceived.
Against a BE 2024-25 of Rs 26,018 crore, the actual expenditure will be only Rs 15,286 crore.
Finally, it is evident that neither the FM nor the PM care for the advice of the Chief Economic Adviser. He gave sensible advice in the Economic Survey. “Get out of the way” was his call to the government. On the contrary, the Budget is full of new schemes and programmes, many of which are beyond the capacity of this government.
I counted at least 15 new Schemes or programmes and 4 new Funds. The FM is walking on the worn-out path. She is not willing to break free as we did in 1991 and 2004. She is not willing to de-regulate. She is not willing to get out of the way of the people, especially the entrepreneurs and the MSMEs and the start-ups. The bureaucracy will be happy with this Budget.
In closing, I would like to say that the economy will trudge along on the old path and deliver no more than the usual 6 or 6.5 per cent growth in 2025-26.
That, in our view, is a government with no new ideas and no will to reach beyond its grasp.
: Rajya Sabha MP and Former Finance Minister Shri PChidambaram
Gaza.. !
I am back, I am at home.. it's burnt, my room for 20 years vanished, and it's severely damaged, but it is still standing and despite everything. Gaza.
கிரிக்கெட்டும் இப்ராஹிம் பாயும்.!
கிரிக்கெட்டும் இப்ராஹிம் பாயும்....!
கிரிக்கெட்டும், இப்ராஹிம் பாயும் என்ற இந்த தலைப்பே உங்களுக்கு கொஞ்சம் வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம். இப்ராஹிம் பாய்க்கு கிரிக்கெட் தேவையா என்ற கேள்வி கூட நம்மில் சிலருக்கு பிறக்கலாம். ஆனால், ஓர் உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாம் விளையாட்டுகளை ஒருபோதும் வெறுக்கவில்லை. உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் தரும் நல்ல விளையாட்டுகளை இஸ்லாமிய மார்க்கம் ஆதரிக்கிறது. நன்கு ஊக்குவிக்கிறது.
இதன் காரணமாக தான், சவுதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் கால்பந்து உள்ளிட்ட சில விளையாட்டுகள் புகழ்பெற்று விளங்குகின்றன. சவுதி அரேபியாவில், சவுதி புரோ லீக் என்பது நாட்டின் மிக உயர்ந்த அளவிலான போட்டியாகும். 1970கள் வரை, சவுதி அரேபியா முழுவதும் ஒரு பிராந்திய அடிப்படையில் கால்பந்து ஏற்பாடு செய்யப்பட்டது. 1976 சவூதி புரொபஷனல் லீக் சீசனில், போக்குவரத்து இணைப்புகள் மற்றும் உள்ளூர் கால்பந்து மேம்படுத்தப்பட்டதன் மூலம், லீக் தேசிய அடிப்படையில் தொடங்கப்பட்டது. வரலாற்றில் முதல்முறையாக வரும் 2034ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடர் சவுதி அரேபியாவில் நடத்தப்பட உள்ளது. இப்படி பல்வேறு விளையாட்டு போட்டிகளில், முஸ்லிம்கள் கலந்துகொள்ள ஆர்வமும் ஊக்கமும் ஊட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் பிரபலமாக உள்ள கிரிக்கெட் விளையாட்டுகளிலும் முஸ்லிம்கள் ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். முஸ்லிம் இளைஞர்களில் முகமது ஷமி உள்ளிட்ட சிலர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு, நாட்டுக்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள். பலர் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடாவிட்டாலும், சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளை மிகவும் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதை காண முடிகிறது. இப்படி முஸ்லிம் இளைஞர்களும், முதியவர்களும் ஏன் பெண்களும் கூட வழக்கமாக கொண்டு வருகிறார்கள். தற்போது நவீன காலத்தில் விளையாட்டு போட்டிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படுவதால், வீட்டில் இருந்தே அதனை கண்டு ரசிக்கும் வாய்ப்பு ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கிடைத்து விடுகிறது.
இப்ராஹிம் பாயின் ஆர்வம்:
அப்படி தான் இப்ராஹிம் பாயும் கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறார். பள்ளி, கல்லூரி நாட்களில் இருந்தே, இப்ராஹிம் பாய்க்கு கிரிக்கெட் என்றால் அப்படி ஒரு ஆர்வம். அப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் போட்டிகள் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட மாட்டாது. எனவே, வானொலி மூலம் மட்டுமே வர்ணனை கேட்க முடியும். எனவே, இப்ராஹிம் பாய் தனது இளமை காலத்தில், கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனையை வானொலி மூலம் ஆர்வத்துடன் கேட்டு ரசிப்பார். இப்படி கேட்பது அவருக்கு தனி சுகம் என்றே கூறலாம்.
நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இப்ராஹிம் பாய், கிரிக்கெட் போட்டிகளை நேரில் சென்று பார்க்க ஒருபோதும் விரும்பியதே இல்லை. எப்போது வானொலி மூலம் மட்டுமே கேட்டு ரசிப்பார். அத்துடன், கிரிக்கெட் நுணுக்கங்களை பலரும் வியக்கும் வகையில் எடுத்துக் கூறி, எல்லோரையும் வியப்பு அடையச் செய்வார். நவீன காலத்தில் தொலைக்காட்சி யுகம் தொடங்கியபிறகு, கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும், தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இப்படி நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படும் போட்டிகளை வீட்டில் அமர்ந்து ரசிப்பது இப்ராஹிம் பாயின் வழக்கம். பெரும் செல்வந்தராக இருந்தாலும், போட்டிகள் நடைபெறும் கிரிக்கெட் அரங்கங்களுக்கு அவர் ஒருபோதும் செல்லவே மாட்டார். இது, அவருடைய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுக்கு மிகவும் வியப்பாக இருக்கும். ஏன் சில சமயங்களில் இப்ராஹிம் பாய் ஒரு கஞ்சர் என்று கூட சிலர் வெளிப்படையாக கூறாமல், மனத்திற்குள் சொல்லிக் கொள்வார்கள்.
காரணம் என்ன?
சர்வதேச அளவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுக்குச் சென்று பார்க்க வேண்டுமானால், மிகப்பெரிய அளவுக்கு தொகையை செலவழிக்க வேண்டும். சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் சர்வதேச போட்டிகளுக்கான டிக்கெட் ஒன்றின் அதிகப்பட்ச விலை 25 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. ஐபிஎல் தொடரில் ஒரு போட்டிக்கான டிக்கெட் விலை அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. வசதி வாய்ப்பு உள்ளவர்கள் இந்த பெரும் தொகையை செலவழித்து கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்த்து ரசித்து வருகிறார்கள்.
ஆனால், பெரும் செல்வந்தரான இப்ராஹிம் பாய், தமக்கு செல்வம் இருக்கும்போதும், அப்படி ஒருபோதும், ஒரு பெரும் தொகையை செலவழித்து கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்த்ததே இல்லை. இதற்கு என்ன காரணம் என அறிய பலருக்கு ஆவல் ஏற்பட்டது. அப்போது தான் ஓர் உண்மை தெரியவந்தது.
இப்ராஹிம் பாய் குடும்பத்தில் மொத்தம் 6 பேர். இவர்கள் 6 பேருக்கும் டிக்கெட் எடுத்துக் கொண்டு கிரிக்கெட் போட்டியை காண வேண்டுமானால் மொத்தம் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும். இப்ராஹிம் பாயை பொறுத்தவரை, மூன்று லட்சம் என்பது மிகவும் சாதாரண தொகை தான். எனினும், அதை செலவழிக்க அவருக்கு ஒருபோதும் மனம் வராது. கிரிக்கெட் போட்டிக்காக செலவழிக்கும் மூன்று லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை அவர் என்ன செய்வார் என அறிந்தபோது மிகவும் வியப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது.
ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி:
சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடரை நேரில் சென்று பார்க்க செலவாகும் ஒரு பெரும் தொகையை இப்ராஹிம் பாய், ஏழை, எளிய மாணவ மாணவிகளின் கல்விக்காக செலவழித்து வருவதை அறிந்தபோது, உண்மையில் ஏக இறைவனுக்கு நன்றி செல்ல மனம் துடித்தது. இதுகுறித்து ஒருமுறை இப்ராஹிம் பாயிடம் பேசியபோது, அவர் இப்படி கூறினார்.
"பாய், அல்லாஹ் எனக்கு நல்ல செல்வத்தை வாரி வழங்கி இருக்கிறான். வசதியையும் கொடுத்துள்ளான். கார், பங்களா என அனைத்தும் என்னிடம் உள்ளது. மேலும், கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வத்தையும் கொடுத்துள்ளான். எனக்கு கிரிக்கெட் என்றால், உயிர். மற்ற விளையாட்டு போட்டிகளை விட, கிரிக்கெட்டை நான் மிகவும் விரும்பி பார்ப்பேன். ரசிப்பேன். அதேநேரத்தில் எனக்கு மனதில் ஒரு வருத்தம் இருந்துகொண்டே இருந்தது. கிரிக்கெட் போட்டியை காண நாம் செலவழிக்கும் தொகையை, ஏன் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளின் கல்விச் செலவுக்காக செலவழிக்கக் கூடாது? என்று என் மனம் அடிக்கடி என்னை கேள்விக் கேட்டுக் கொண்டே இருந்தது. நான்கு மணி நேரம் பொழுதுபோக்கிற்காக மூன்று லட்சத்திற்கும் அதிகமான தொகையை செலவழித்து ஏன் வீண் விரயம் செய்ய வேண்டும்? என என்னை நானே அடிக்கடி கேட்டுக் கொண்டேன். இப்படி அடிக்கடி கேள்வி கேட்டதால், அந்த தொகையை ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கல்விக்கு செலவழிக்கலாம் என்ற எண்ணம் பிறந்தது. அன்று முதல் இதை கடைப்பிடித்து வருகிறேன்.
சென்னையில் உள்ள சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் எந்த போட்டியானாலும், அந்த போட்டிக்காக என் குடும்பத்தில் உள்ள மொத்தம் 6 பேருக்கான டிக்கெட் தொகையை தனியாக எடுத்து வைத்துகொள்வேன். இப்படி, ஓர் ஆண்டில் பல போட்டிகள் நடந்தால், அந்த அனைத்து போட்டிகளின் டிக்கெட் தொகையையும் தனியாக எடுத்துவைத்துக் கொண்டு, அந்த தொகையை, நம் பகுதியில் உள்ள ஏழை, மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த கல்வியில் ஆர்வம் உள்ள மாணவ மாணவிகளின் படிப்புக்காக கொடுத்துவிட்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவிடுவேன். பள்ளி, கல்லூரி படிப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம், புத்தகச் செலவு, சீருடை செலவு, என என்னால் முடிந்த அளவுக்கு கொடுத்துவிடுவேன். கிரிக்கெட் போட்டியை காண செலவழிக்கும் பெரும்தொகையை, ஏழை, எளிய மாணவ மாணவிகளின் படிப்புச் செலவுக்காக கொடுக்கும்போது, மனதில் மகிழ்ச்சி பிறக்கும். உடலில் ஆனந்தம் உருவாகும். அத்தோடு, ஒரு ஏழை இளைஞன், வாழ்க்கையில் உயர நாமும் ஒரு சிறிய உதவி செய்தோம் என்ற மன திருப்தி கிடைக்கும். இப்படி செய்யும்போது, என் குடும்பத்திலும் எப்போதும் மகிழ்ச்சி இருந்துகொண்டே இருக்கும்.
உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், வெகு சீக்கிரத்திலேயே நலம் பெற்றுவிட்டு, மீண்டும் உற்சாகத்துடன் செயல்பட வாய்ப்பு உருவாகிவிடும். ஒருவரின் கல்விக்காக நாம் செய்யும் செலவு, அந்த குடும்பத்தை மட்டுமல்லாமல், சமுதாயத்தையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். எனவே தான் ஒவ்வொரு கிரிக்கெட் போட்டி தொடரின்போதும், நான் வழக்கமாக செலவழிக்கும் தொகையை தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, அதை நானே நேரில் சென்று மாணவர்களின் கல்விச் செலவுக்காக கொடுத்து வருகிறேன். இதுதான் கிரிக்கெட் போட்டிகளை நான் நேரில் பார்க்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம்"
இப்ராஹிம் பாய் இப்படி கூறியதை கேட்டபோது, உண்மையிலேயே மனதில் ஒரு இனம்புரியாத ஆனந்தம் ஏற்பட்டது. கிரிக்கெட் போட்டியை காண பல லட்சம் ரூபாயை செலவழிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருந்துவரும் நிலையில், அந்த தொகையை நல்ல காரியத்திற்கு, நல்ல எண்ணத்துடன் செலவழிக்கும் இப்ராஹிம் பாய்க்கு ஏக இறைவன் இன்னும் நிறைய கொடுக்க வேண்டும். அதன்மூலம் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர் உயர்கல்விப் பெற்று வாழ்க்கையில் உயர வேண்டும் என மனம் துஆ செய்தது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
.jpeg)
.jpeg)
.jpeg)











