No prompt. No AI. Just authentic 1980s vibe!
Friday, September 11, 2026
80s...!
No prompt. No AI. Just authentic 80s vibe!
Fashion, hairstyles, and trends change with time, but the passion to serve our people remains completely unshakeable.
மிளகாய் பொடி தூவி...!
Maharashtra –
A robber entered an SBI branch in Nagpur. He threw red chili powder on the bank employees and looted away 4.53 lakh rupees. Just a short while later, the robber Suraj Borkar was caught.
Oneday...!
Don't smile at our ruins, O dwellers of the garden...
One day must pass; the apocalypse looms over your heads too..!
அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அழைப்பு....!
டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் 17ஆம் தேதி அமைதி போராட்டம்
அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அழைப்பு
புதுடெல்லி, செப்.11- அரசியலமைப்பு மற்றும் ஷரியத் பாதுகாப்பு, இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைத்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அகில இந்திய உலமா வாரியத்துடன் இணைந்து வரும் செப்டம்பர் 17அன்று புது தில்லி ஜந்தர் மந்தரில் அமைதியான போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது . நீதி, அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் சமூக நலனுக்காக முற்றிலும் அமைதியான மற்றும் ஜனநாயக முறையில் குரல் எழுப்ப வேண்டும் என்பதை முஸ்லிம் அமைப்புகள் இணைந்து விடுத்துள்ள வேண்டுகோள் வலியுறுத்துகிறது. புது தில்லியில் நிலவும் மிகுந்த கண்காணிப்புச் சூழலுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு மதங்களைச் சேர்ந்த அறிஞர்கள், மதத் தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் சமூக, அரசியல் ஆளுமைகள் இந்தக் கூட்டங்களில் உரையாற்றுவார்கள்.
மூன்று மாதங்கள் பிரச்சாரம் :
வரும் செப்டம்பர் 17 அன்று தொடங்கி மூன்று மாதங்கள் நடைபெறவுள்ள இந்தப் பிரச்சாரத்தின் மூலம், பல்வேறு பாஜக மாநிலங்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது சிவில் சட்டம் குறித்த தங்கள் கவலைகளை முன்னிலைப்படுத்த விரும்புவதாக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கூறியுள்ளது. இச்சட்டத்தை முஸ்லிம் அடையாளம் மற்றும் மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மற்றும் இஸ்லாமியச் சட்டம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக நாடு தழுவிய பிரச்சாரத்தை அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அறிவித்துள்ள நிலையில், சட்டத்தை ஒருதலைப்பட்சமாக அமல்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், வீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இடிக்கப்படுகின்றன என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மஸ்ஜித் இடிப்புக்கு கடும் கண்டனம் :
மேலும் உத்தரப் பிரதேசம் சஹாரன்பூர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், இந்த விவகாரத்தில் குழு ஒன்றை அமைத்து, பிரச்சினைக்கு தீர்வு காண சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மஸ்ஜித் இடிக்கப்பட்டது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்., எந்த சட்டத்தின்படி மஸ்ஜித் இடிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்., வரலாற்றுச் சிறப்புமிக்க மஸ்ஜித் பகுதியில் கிடைக்கப்பட்ட ஆதாரங்களை ஆய்வு செய்ய வேண்டும்., இந்த விவகாரத்தில் நீதிக்கு புறம்பாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்ற கோரிக்கைகளையும் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வலியுறுத்தியுள்ளது.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்



