தமிழ் மக்களுடைய இதயங்களில் இடம்பிடித்த நல்ல தலைவர் நல்லகண்ணு.....!
சிறந்த பண்புகளால் மக்களுடைய நினைவுகளில் என்றென்றும் நிலைத்து நிற்பார்....!!
இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இரங்கல்...!!!
சென்னை, பிப்.26-தமிழகத்தின் முதுபெரும் தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களுயை மறைவு நம் அனைவருக்கும் மிகப் பெரிய ஒரு துன்பத்தை கொடுத்திருக்கிறது. துக்கத்தைக் கொடுத்திருக்கிறது. நீண்ட காலம் வாழ்ந்தாலும், மக்களுடைய நினைவுகளில் என்றென்றும் நிலைத்து இருக்கும் தலைவராக அவர் இருந்திருக்கிறார் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமது இரங்கலில் புகழாரம் சூட்டியுள்ளார்.
இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் மரியாதை :
உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணு 25.02.2026 புதன்கிழமையன்று காலமானார். சென்னை தியாகராய நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நல்லகண்ணு உடலுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தமிழ்நாடு பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் ஷாஜஹான், முதன்மை துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், நல்லகண்ணுவின் குடும்பத்தினரையும் சந்திதித்து ஆறுதல் தெரிவித்தனர்.
பேராசிரியர் கே.எம்.கே. புகழாரம் :
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழகத்தின் முதுபெரும் தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களுயை மறைவு நம் அனைவருக்கும் மிகப் பெரிய ஒரு துன்பத்தை கொடுத்திருக்கிறது. துக்கத்தைக் கொடுத்திருக்கிறது. நீண்ட காலம் வாழ்ந்தாலும், மக்களுடைய நினைவுகளில் என்றென்றும் நிலைத்து இருக்கும் தலைவராக அவர் இருந்திருக்கிறார்
அவரோடு பல்வேறு மாநாடுகளிலும் நிகழ்ச்சிகளிலும் நானும் கலந்துகொண்ட நினைவுகள் எல்லாம் என்க்கு வருகிறது. நல்லகண்ணு அய்யா அவர்கள், தமிழ் மக்களுடைய இதயங்களில் எப்போதும் இடம்பிடித்து இருக்கும் நல்லவராகவே திகழ்ந்திருக்கிறார்.
அவரை யாரும் குறைச் சொல்லி நான் கேட்டதில்லை. பயணங்கள் போகும் நேரங்களில் கூட, மாநாடுகளில் பங்கேற்கும் நேரங்களில் கூட, அந்த பெரிய மனிதரைப் பார்க்கும்போது, ஏதோ ஆன்மீகவாதிகளாக உள்ளவர்கள் எப்படி இறைப்பக்தியில் மூழ்வார்களோ, அப்படி அவரை பார்த்தவுடனே இதயங்கள் எல்லாம் பூரிக்கும் வகையில் தான் அவரது பேச்சும் இருந்தது.அவரது நடவடிக்கைகளும் இருந்தன. அவருடைய எல்லா நினைவுகளும் இருந்தன.
சிறந்த தமிழரை இழந்திருக்கிறோம் :
அப்படிப்பட்ட ஒரு நல்ல உயர்ந்த சிறந்த தகைசால் தமிழரை நாம் இழந்திருக்கிறோம். அவரது இழப்பால் வாடும் எனது அருமை கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும், தெரிவித்துக் கொள்கிறோம். அவரை பின்பற்றி, அவர் எப்படி எல்லா மக்களுக்கும் நல்லவராக இருந்தாரோ, அப்படி நாம் அனைவரும் இருக்க முயல வேண்டும். அது தான் தமிழ்நாட்டின் பண்பு, அதுதான் பாரம்பரியம், பண்பாடு மற்றும் தமிழ் நெறியாகும். அவை தொடர்ந்து நீடிக்க எல்லாம் வல்ல இறைவனிடம் நான் பிராத்திக்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளார் ஷாஜஹான், மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments:
Post a Comment