Sunday, November 24, 2013

ஊடகப் பணியில் நான்....!


ஊடகப் பணியில் ஈடுபட்டு பல்வேறு அலுவலங்களில், தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிபுரிந்தபோது எடுத்தப் புகைப்படங்கள்
இனி நீங்கள் கண்டு ரசிக்கலாம்....



மூத்த பத்திரிகையாளர்கள் சந்தானம், இளம்பரிதியுடன்.....


இளம் பத்திரிகையாளர்களுடன்....


மற்றொரு புகைப்படம்...



செல்வநாயகம் மற்றும் இளம்பரிதியுடன்



சந்தானம் மற்றும் பரிதியுடன் மற்றொரு புகைப்படம்



திருக்குமரன் மற்றும் பரிதியுடன்



பணியில் நான்



மற்றொரு கோணத்தில்.....



 மும்மூரமாக செய்தியை உருவாக்கி கொண்டிருந்தபோது....



ஊடக நண்பர்களுடன் மற்றொரு படம் 


மூத்த பத்திரிகையாளர் மைக்ல் ஜார்ஜ்வுடன்....


இதுவும் மைக்ல் ஜார்ஜ்வுடன் இருக்கும் புகைப்படம்தான்...


மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீதர் மற்றும் அவரது சகோதரர் முரளிதரனுடன்...



மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீதருடன்...




நல்ல அனுபவங்கள், நல்ல நண்பர்கள், நல்ல ஊடக சகோதரர்கள்...

அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் நல்ல மகிழ்ச்சியை தரும்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

குறுஞ்செய்தி......!

" குறுஞ்செய்தி......! (SMS) "


இரவு பணி முடிந்து அலுவலகத்தில் இருந்து வழக்கம் போல, திருவல்லிக்கேணியில் இருக்கும் எனது அறைக்கு திரும்பிய நேரம் அது....

என் செல்பேசி திடீரென சிணுங்கியது...

செல்பேசியை கையில் எடுத்து பார்த்தபோது, நண்பர் கிரிஸ்டோபர் அனுப்பிய குறுஞ்செய்தி இருந்தது...

கிரிஸ்டோபர் அனுப்பிய செய்தி இதுதான்....

" இதுவரை
  நீங்கள்
  எனக்கு
  அனுப்பிய
  86
  குறுஞ்செய்திகளுக்கு
  என் அன்பு நன்றி....
  அவைகளை
  நான்
  சேமித்து
  வைத்துள்ளேன்..
  வாழ்க்கையின்
  பல
  சூழ்நிலைகளில்
  அவை
  எனக்கு
  நண்பனாக
  துணை நின்றது...
  மிக்க நன்றி...
  தொடரட்டும்
  உங்கள்
  பெருந் தொண்டு...."

கிரிஸ்டோபரின் வார்த்தைகளை படிக்கும்போது உண்மையிலேயே மனம் மகிழ்ச்சி அடைந்தது...


என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு நாள்தோறும் ஒரு பொன்மொழி அல்லது வாழ்க்கை தத்துவம் அல்லது, சிரிப்பு மொழி என ஏதாவது ஒரு குறுஞ்செய்தியை (SMS) செல்பேசி வழியாக அனுப்பும் பழக்கம் என்னிடம் உண்டு...

குரூப் எஸ்.எம்.எஸ். என்ற வகையில் அனுப்பாமல், ஒவ்வொரு நண்பருக்கும் தனித்தனியாக அனுப்பி வைப்பேன்...

அதன்மூலம், அந்த நண்பரின் முகம் என் மனத்திரை முன் வந்து செல்லும்...

அந்த நேரத்தில் நண்பர்களை நினைக்கும்போது, உள்ளத்தில் ஒருவித ஆனந்தம் பிறக்கும்...


நான் அனுப்பும் குறுஞ்செய்தியை படிக்கும் நண்பர்கள், என்னையும் ஒரு நிமிடம் நினைத்து பார்க்கும் நிலை உருவாகும்...

இதன்மூலம் நல்ல உறவு, நட்பு தொடரும்...

இது எனது ஆசை....

என்னுடைய ஆசை கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நிறைவேறிக் கொண்டிருக்கிறது...

நான் பல ஊடகங்களில் பணிபுரிந்தாலும், அந்தந்த ஊடகங்களில் பணிபுரியும் நண்பர்களுடன் இப்போதும் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு...


அதற்கு முக்கிய காரணம் நான் அனுப்பும் குறுஞ்செய்தி என்றே கூறலாம்...

பல குறுஞ்செய்திகளை படித்து நண்பர்கள் உடனே என்னை அழைத்து பாராட்டுவது உண்டு...

அது மகிழ்ச்சி அளித்தாலும், அந்த நண்பர் சிறிது நேரம் என்னுடன் பேசும்போது, இருவரிடம் இருக்கும் உறவு, பாசம் மேலும் அதிகரிக்கும்...

இப்படிதான், கிரிஸ்டோபருக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பினேன்... அதனால் மகிழ்ச்சி அடைந்து அவர் எனக்கு அனுப்பிய செய்தி இப்போது என்னை உற்சாகப்படுத்தியுள்ளது...


எனினும்...

குறுஞ்செய்தி அனுப்பும்போது முக்கியமான ஒரு விஷயம் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்...

நான் அதனை கண்டிப்பாக கடைப்பிடித்து வருகிறேன்...

அவசியம் இல்லாமல் அதிகாலை நேரங்களில் குறுஞ்செய்திகளை யாருக்கும் அனுப்புவதில்லை...

சமீபத்தில் திருமணம் முடித்த நண்பர்களுக்கு ஒரு மாதம் வரை குறுஞ்செய்தி அனுப்புவதில்லை... அதனால் அவர்களுக்கு என்னால் எந்த தொல்லையும் இருக்கக் கூடாது என்பதுதான் முக்கிய காரணம்...


துன்ப நேரங்களில் நண்பர்கள் இருந்தால், அந்த நேரத்தில் மகிழ்ச்சியான, சிரிப்பை வரவழைக்கும் சில ஜோக்குகளை கண்டிப்பாக அனுப்பி வைப்பதில்லை...

முடிந்தவரை, அந்த நண்பர்களின் துன்பங்களில் நேரில் பங்கேற்று ஆறுதல் கூற முயற்சி செய்வேன்...

பல நேரங்களில் நண்பர்களிடம் நேரடியாகவே கேட்டு விடுவேன்... என்னுடைய குறுஞ்செய்திகள் உங்களுக்கு தொல்லை கொடுகிறதா...அப்படி இருந்தால் சொல்லுங்கள்... குறுஞ்செய்திகளை அனுப்புவதை நிறுத்தி விடுகிறேன்...

இப்படி, நேரடியாக கேட்பதில் எனக்கு எந்த தயக்கமும் இருப்பது இல்லை...

தோழர்களுக்கு அனுப்பும் ஒருசில குறுஞ்செய்திகளை தோழிகளுக்கு கண்டிப்பாக அனுப்புவதில்லை...


இப்படி பல நெறிமுறைகளை குறுஞ்செய்திகளை அனுப்பும்போது நான் கடைப்பிடிப்பது வழக்கம்...

பல நேரங்களில் தவறி குறுஞ்செய்தி அனுப்பி விட்டால், அந்த தவறுக்காக உடனே மன்னிப்பு கேட்டு விடுவதும் உண்டு...அதை கவுரவக் குறைவாக நினைப்பதே இல்லை...

ஆக, குறுஞ்செய்தி அனுப்பும் பழக்கதால் பல நண்பர்களின் நட்பு இன்னும் தொடர்கிறது...

பலர் பல்வேறு ஊர்களில், பணிகளில் இருக்கிறார்கள்...

ஆனால், எஸ்.எம்.எஸ். என்ற குறுஞ்செய்திகள் எங்களை நாள்தோறும் இணைக்கிறது...


உள்ளங்கள் இணைகின்றன....

பல மதங்கள், பல நிறங்கள், பல மார்க்கங்கள்... பல சிந்தனைகள்.... பல தொழில்கள்...
பல கொள்கைகள்...

ஒவ்வொருவரும் அவரவர் கொள்கைகளில் உறுதியாக இருப்பவர்கள்...

ஆனால், எங்களை, ஒவ்வொரு நாளும் நான் அனுப்பும் எஸ்.எம்.எஸ்... என்ற குறுஞ்செய்தி நிச்சயமாக இணைத்துக் கொண்டிருக்கிறது....


உள்ளங்கள் இணையட்டும்....சகோதரத்துவம் தழைக்கட்டும்....

அதற்கு, எஸ்.எம்.எஸ். என்னும் குறுஞ்செய்தி துணையாக நிற்கட்டும்...


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

====================

செவ்வாழை !

செவ்வாழை 


எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு.

சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

மாலைக்கண்நோய்


கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.


பல்வலி குணமடையும்

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.


சொரி சிறங்கு நீங்கும்

சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

நரம்பு தளர்ச்சி குணமடையும்

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.


குழந்தை பேறு தரும்

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ,ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.


தொற்றுநோய் தடுக்கப்படும்

தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

============================

படித்தது......பயன் உள்ளது.....!

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்.....

Saturday, November 23, 2013

" வாய் மூடி வேடிக்கை பார்க்கும் வினோதம்...!"


பெங்களூருவில் கடந்த செவ்வாய்க்கிழமை (19.11.2013) அன்று காலை ஏ.டி.எம். மையம் ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவம், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இதயங்களை பதை பதைக்க வைத்து விட்டது.

ஆம்,

பெங்களூருவில் ஏ,டி.எம். மையத்தில் வங்கி பெண் அதிகாரியை கொடூரமாக தாக்கி
மர்ம நபர் ஒருவர் பணத்தை கொள்ளையடித்து சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியானபோது, என் மனம் மட்டுமல்ல, அதை பார்த்த நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கானோரின் மனங்களும் பதைத்து போயின..

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர்  ஜோதி உதய். வங்கி பெண் அதிகாரியான இவர் மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர், கதவை மூடி, ஜோதியை துப்பாக்கி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டினார். மேலும் திடீரென ஜோதியின் தலையை  அரிவாளால் வெட்டிய அந்த நபர், ஜோதியிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார்.



சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்கு பிறகு, அந்த வழியாக சென்றவர்கள் ஜோதி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.. மர்ம நபர் கொடூரமாக தாக்கியதால், ஜோதியின் மண்டை ஓட்டில் பிளவு ஏற்பட்டதால் அவரது உடலின் ஒருபக்கம் செயல் இழந்து விட்டது. எனினும் மருத்துவர்கள் ஜோதிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல் தோறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஜோதி பயங்கரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏ.டி.எம். மையத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த காட்சியை செய்தியுடன் வெளியிட்டபோது, மக்கள் கொதித்து போனார்கள்.



இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, கார்நாடகா மாநில அரசு, அம்மாநில போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம்தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார்,, மர்ம நபரை தேடி வருகின்றனர். மர்ம நபர் விற்பனை செய்த செல்பேசியை வாங்கிய நபரை ஆந்திராவில் கைது செய்த போலீசார் அவரிடம் கொள்ளையன் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரி, விஷயத்திற்கு வருவோம்...



பெண் அதிகாரி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இதுவரை எந்த மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவிக்கவில்லை..

நாட்டின் சில பகுதிகளில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் பலாத்காரம் சம்பவங்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி முழக்கமிட்ட பெண் அமைப்புகள், சமூக அமைப்புகள், ஏனோ பெண் அதிகாரி கடுமையாக தாக்கப்பட்டபோது, அதற்கு எதிராக வீதிக்கு வரவில்லை...

சாதாராண கொள்ளையாக இதனை எடுத்துக் கொண்டனர்...

வாய் மூடி வேடிக்கை பாத்துக் கொண்டிருக்கின்றன சில சமூக அமைப்புகள்...


இதுதான் வேதனையான விஷயம்....

பெண் அதிகாரியை தாக்கிய அந்த கொள்ளையனை விரைவில் பிடிக்க வேண்டும்
போலீசார்....

அவனை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்த வேண்டும். பெண் அதிகாரி அனுபவித்த வேதனையை அந்த பாவி அனுபவிக்க வேண்டும்...



போலீசார் கொள்ளையனை அடித்து துன்புறுத்தும்போது, வழக்கம் போன்று சில மனித உரிமை அமைப்புகள் பொங்கி எழுந்தது எதிர்த்து குரல் கொடுக்கும்..

அதுகுறித்து போலீசார் கவலைப்பட கூடாது.

இந்த நேரத்தில் மறைந்த எழுத்தாளார் சுஜாதா எழுதிய சிறுகதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது...

அந்த சிறுகதையில் போலீஸ் நிலையத்தில் கொள்ளையன் ஒருவனை போலீசார் அடிப்பதை கண்டித்து ஒருவர் குரல் கொடுப்பார். போலீஸ் அதிகாரி தரும் விளக்கத்தை, ஆரம்பத்தில் அந்த மனிதர் ஏற்க மறுத்தாலும் பின்னர், உண்மை நிலையை அறிந்து போலீசாரின் நடவடிக்கையில் நியாயம் இருப்பதாக உணர்ந்து கொள்வார். மனதை தொடும்படி இந்த சிறுகதை இருக்கும்...



சில கொள்ளையர்கள் மீது இரக்கம் காட்டவே கூடாது என்பதை உலகத்தில் நிகழும்
பல சம்பவங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன...

பெங்களூருவில் பெண் வங்கி அதிகாரி  மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திலும் இதே நிலையைதான் போலீசார் கடைப்பிடிக்க வேண்டும்...

மேலும் சென்னையில் மட்டும் 40 சதவீத ஏ.டி.எம். மையங்களில் போதிய பாதுகாப்பு இல்லை என தகவல் ஒன்று தெரிவிக்கிறது..


பல ஏ.டி.எம். மையங்களில் வயதான காவலர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்..

சென்னையில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இதே நிலைதான் உள்ளது. ஏ.டி.எம். மையங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இனியாது, நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம். மையங்கள் பாதுகாப்பாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...


கடைசியாக....

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் அதிகாரி விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...



நீங்களும் என்னுடன் இணைந்து பிரார்த்தனை செய்யுங்கள்...


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
===========================================

http://www.youtube.com/watch?v=Vr4fyYEytP8

Thursday, November 21, 2013

அலுவலகத்தில் நான்.....!


லுவலகத்தில் பிஸியாக இருந்தபோது, சக நண்பர்கள், முகநூல் நண்பர்கள் லலித் ஜுட் மற்றும் வினோத் எடுத்த புகைப்படங்கள் இவை....




பிஸியான நேரத்தில்.....



மற்றொரு கோணத்தில்....




மற்றும் ஒரு படம்


இது எப்படி இருக்கு....



இன்னும் சில படங்கள்...



சக நண்பருடன்....



எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


==========================

Wednesday, November 20, 2013

" ஹாட்ஸ் ஆப் விஜய் டி.வி..."


இசையில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு என்பதால், தொலைக்காட்சிகளில் வரும் இசை நிகழ்ச்சிகளை அவ்வப்போது நான் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து மகிழ்வேன்.

குறிப்பாக, அண்மைகாலமாக விஜய் டி.வி.யில் வரும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நேரம் கிடைக்கும்போது பார்ப்பது வழக்கம்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் பெரும்பாலோர், இசையை முறைப்படி கற்று, அதில் தேர்ச்சி பெற்று பாடி அசத்துபவர்கள் என நினைப்பேன்.

அது உண்மையும் கூட...

ஒருமுறை நண்பர் கார்த்திகேயனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, சார் எல்லாம் வேஷம் சார் என்றார்...

பணக்காரர்கள், உயர்ஜாதி மக்கள் மட்டுமே இதுபோன்ற இசைப் போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்....

என்னை போன்ற, உங்களை போன்ற எளிமையான குடும்பத்தில் இருந்து வருபவர்கள் யாரும் இந்த போட்டிகளின் ஆரம்பத்தில் கூட நெருங்க முடியாது.

நடுவர்களாக இருப்பவர்கள் கூட உயர்ஜாதியை சேர்ந்தவர்கள் என தனது ஆதங்கத்தை, குமறலை வெளிப்படுத்தினார் கார்த்திகேயன்...

அது உண்மையோ என நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்...
.


இதேபோன்று, மற்றொரு நண்பர் கிரிஸ்டோபர், தனது அனுபவத்தை கூறி, எல்லாம் மோடி சார் என்றார்...

எனவே, எனக்குள் ஒருவித சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது...

ஆனால், கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜுனியர் போட்டியில் கலந்து கொண்டு, இறுதியில் திருச்சியை சேர்ந்த சிறுவன் ஆஜீத் வெற்றி பெற்றார்.

இசையில் முழுமையான ஆர்வம் இல்லாத எளிய குடும்பத்தில் பிறந்து தனது ஆர்வத்தால், இசையை கற்றுக் கொண்டு, ஆஜீத் வெற்றி பெற்றபோது, நண்பர்களின் வாதம் என் உள்ளத்தில் இருந்து மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது.

தற்போது, சூப்பர் சிங்கர் 4 நிகழ்ச்சி விஜய் டி.வி.யில் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து அவ்வவ்போது பார்த்து வருகிறேன்...

பல அதிசயங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

ஆட்டோ ஓட்டுனர், இசையில் ஆர்வம் கொண்ட பெரியவர் அழகேசன் போன்ற எளிய குடும்பதைத் சேர்ந்த பலர் போட்டியில் கலந்து கொண்டு பாடி அசத்தியது வியப்பில் ஆழ்த்தியது.

அதிலும்கூட கட்டிடத் தொழிலாளியின் ஏழை மகன் திவாகர், வசதி வாய்ப்புகள் எதுவும் இல்லாதபோதும், இசையில் ஆர்வம் கொண்டு அதற்காக தன்னுடைய உழைப்பை அர்ப்பணித்து டாப் 10 வரை வந்து இருப்பது மகிழ்ச்சி அடையச் செய்தது...

அவரது வாழ்க்கை குறித்து, கடந்த வாரத்தில் விஜய் டி.வி. ஒரு சிறிய குறிப்பை வெளியிட்டது.


திவாகர் கடந்த வந்த பாதை, தற்போது அவரது வாழ்க்கை நிலை ஆகியவற்றை விஷுவலாக பார்த்தபோது, என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது...

இரண்டு மூன்று நாட்கள் அதே சிந்தனையில் என் மனம் ஓடியது....

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு ஏழ்மை ஒரு தடைக்கல் அல்ல என்பதை, திவாகர் மற்றவர்களுக்கு உணர்த்தி விட்டார்...

ஆர்வம் இருந்தால், கடின உழைப்பு இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்பதை அழகாக நிருபித்துவிட்டார் திவாகர்...

அந்த நிகழ்ச்சியை பார்த்து அரங்கத்தில் இருந்த மற்ற பாடகர்கள் ஒருநிமிடம் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து போய்விட்டனர்...

திவாகரின் திறமையை, உழைப்பை, ஆர்வத்தை பாராட்டிய பாடகர்கள், மற்ற இளைஞர்களுக்கு அவர் ஒரு ரோல் மாடல் என பாராட்டினர்...

இசையில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கும் திவாகரின் வாழ்க்கையில் நிறைய படிப்பினைகள் உண்டு...

சாதனைகள் எல்லாம், பணக்காரர்களால் மட்டுமே செய்ய முடியும் என்பது அல்ல...

உலகில் பல சாதனைகளை, அற்புதங்களை எழை, எளிய மக்கள்தான் நிகழ்த்தியுள்ளனர்.

இதற்கு பல வரலாற்று சான்றுகள் உண்டு....

இன்றைய இளைஞர்கள், திவாகரின் உழைப்பை கண்டு மலைக்க வேண்டும்.. வியக்க வேண்டும்.....

தாங்கள் விரும்பும் துறையில் ஆர்வத்தை செலுத்தி முயற்சிக்க வேண்டும்...

வெற்றிக்கு ஏழ்மை ஒரு தடைக்கல் என நினைத்து ஓய்ந்துவிடக் கூடாது...



கடின உழைப்புக்கு, அர்ப்பணிப்புக்கு நிச்சயம் உலகில் ஒருநாள் அங்கீகாரம் கிடைத்தே தீரும்...

வாழ்க்கையில் முன்னேற பாதையை நோக்கிச் செல்லும்போது கிடைக்கும் அவமானங்கள், வலிகள், வேதனைகள், சிரமங்கள், பரிகாசங்கள், கேலிகள், கிண்டல்கள் ஆகியவற்றை தாங்கி கொள்ளும் வகையில் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்...

இவற்றை மனத்தில் ஆழமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்...

இதற்கு திவாகர் சான்று....

திவாகர் சந்தித்த வேதனைகள், அவமானங்கள், கேலிகள், கிண்டல்கள் ஆகியவற்றின் பட்டியல் நீளும்..

எனினும் வாழ்க்கையில், தனது லட்சியத்தில் உறுதியாக நின்று திவாகர் வெற்றி கொடியை நாட்டியுள்ளார்...

வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு திவாகர் ஒரு முன்னுதாரணம்....

திவாகர் போன்ற இளைஞர்களை அடையாளம் காட்டிய விஜய் டி.விக்கு
ஒரு ஹாட்ஸ் ஆப்...



எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

http://www.youtube.com/watch?v=N4sdcm9omkw

======================================

Sunday, November 17, 2013

" வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருக்காங்க.....! "


காஞ்சிபுரத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன், இன்று மாலை (17.11.2013) என்னை செல்பேசியில் அழைத்தார்.

இருவரும் பேசி, நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால், நலம் விசாரிப்புகள், தொழில் நிலவரங்கள் என கொஞ்ச நேரம் பேச்சு சென்றது...

திடீரென சார் ஒரு நிமிடம் என சொன்ன வெங்கி (நாங்கள் செல்லமாக அவரை அப்படிதான் அழைப்பது வழக்கம்) பிறகு மீண்டும் பேச ஆரம்பித்தார்..

ஒன்றுமில்லை சார்...நண்பர் ஒருவர் வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருக்காங்க என சொல்லி வந்தார் என சொன்ன வெங்கி, பொதுவா விருந்தாளிங்க வந்தா என்ன செய்வோம் சார், என என்னை கேட்டார்...

பிறகு அவரே தொடர்ந்து பதிலும் சொன்னார்...


கடைக்கு சென்று கோழிக்கறி அல்லது ஆட்டுக்கறி வாங்கி வருவோம்... அல்லது எளிமையான விருந்திற்காக குறிப்பிட்ட சில சமையல் அயிட்டங்களை வாங்கி வருவோம்...

ஆனா, நம்ப நண்பர் எங்கே வந்திருக்கிறார் தெரியுமா... டாஸ்மாக் கடைக்கு வந்து விருந்தினர்களுக்காக மதுபான பாட்டில்களை வாங்கிக் கொண்டிருக்கிறார் சார்...

என்று சொல்லி சிரித்தார் வெங்கி........ எனக்கும் சிரிப்பு வந்தது....

இந்த தொலைபேசி உரையாடலுக்கு பிறகு எனோ என் மனசு அமைதி கொள்ளவில்லை...

நாடு எங்கு சென்றுக் கொண்டிருக்கிறது....

சமூகம் எப்படி மாறிக் கொண்டிருக்கிறது...


ஒரு காலத்தில் மதுவை வெறுத்த சமுதாயம், இன்று அதனை எளிமையாக எடுத்துக் கொண்டிருக்கிறது...

மது அருந்தாதவர்களை பார்த்து, என்ன நிச்சயமாக நீங்கள் மது அருந்துவதில்லையா என ஏளனமாக கேட்கும் நிலை தற்போது இருந்து வருகிறது...

ஏன், கல்லூரி மாணவிகள், அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் கூட, மது பழக்கத்திற்கு அடிமையாகி சிரழிந்து கொண்டிருக்கிறார்கள்...

முகநூல்களில் வரும் சில புகைப்படங்கள் இதற்கு சாட்சி சொல்லிக் கொண்டிருக்கின்றன...


ஒரு காலத்தில் ஹீரோ, வில்லன் நடிகர்கள் மதுக்காட்சிகளில் நடிக்க மறுத்தார்கள்...

ஆனால், மது அருந்தும் காட்சிகள் இடம் பெறாத திரைப்படங்களே இல்லை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

மது அருந்துவது உடலுக்கும், குடும்பத்திற்கும் கேடு விளைவிக்கும் என விளம்பரம் செய்யப்படுகிறது...

ஆனால், டாஸ்மாக் மதுக்கடைகளில் அதிகாலை நேரத்திலேயே கூட்டம் அலை மோதுகிறது...

குடும்பத்திற்கு செலவழிக்க வேண்டிய பணத்தை, மதுக்கடைகளில் செலவழித்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்...

இளைஞர்கள் மத்தியில் மெல்ல மெல்ல மதுப்பழக்கம் அதிகரித்து கொண்டு வருகிறது...

அப்படிதான் ஆய்வுகள் தெரிவிக்கின்றன....


மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதால்  ஏற்படும் விபத்துக்களால், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது...

குடும்ப உறவுகள் சீர்குலைந்து போகின்றன...

கணவன் மனைவி இடையே விவாகரத்து ஏற்பட்ட, மது முக்கிய காரணமாக அமைகிறது...

நீதிமன்றங்களில் வரும் விவாகரத்து வழக்குகளை ஆய்வு செய்து பார்த்தால், மதுவால் பிரச்சினை உருவாகி, கணவன் மனைவி இடையே மன வேறுபாடுகள் பிறந்து, விவாகரத்து வரை கொண்டு சென்று விடுகிறது...

கொலை, கொள்ளை போன்ற கிரிமினல் செயல்களுக்கும் மது மூலக் காரணமாக இருந்து வருகிறது...

மதுவை அருந்திவிட்டு சுயநினைவு இழந்து சாலைகளில் கிடக்கும் தொழிலாளிகள் எத்தனை பேர்....

இப்படி, சமூகத்திற்கு பல கேடுகளை விளைவிக்கும் மதுவை ஒழிக்க பல்வேறு சமூக ஆர்வலர்கள் அடிக்கடி போராட்டஙகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்...


குறிப்பாக, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதுவிற்கு எதிராக பெண்களை திரட்டி அடிக்கடி போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்....

மதுக்கடைகளை மூடக் கோரி நடைப்பயணம் மேற்கொண்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ....


தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என காந்தியவாதி சசிபெருமாள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்....


பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அடிக்கடி மதுவிற்கு எதிராக போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கினறன...

சமூக அமைப்புகள் கூட, மதுக்கடைகளை மூடக் கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன...

தமிழ் உணர்வாளர்கள் மதுவிற்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்...


இப்படி சமூகத்தில் 90 சதவீதம் பேர் மதுவிற்கு எதிராக போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை நடத்தி, எதிர்ப்பை தெரிவிக்கும்போதும், அரசு ஏன் மதுக்கடைகளை மூட முன்வருவதில்லை...

அரசின் கஜானா நிரப்ப வேண்டும் என்பதற்காக மதுக்கடைகளை நடத்தப்படுகின்றன....

மது ஆலை உரிமையாளர்களின் கஜானா நிரப்ப விரும்பும் அரசு, மதுவை தடை செய்ய முன்வருவதில்லை....

இப்படி பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன....

ஆனால், நிலைமையை இப்படியே விட்டுவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் தமிழகம் மிகப் பெரிய சரிவை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்...

சரிவு என்றால், பொருளாதார சரிவு மட்டுமல்ல, மது அருந்தும் பழக்கத்தால், மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் கோடிக்கணக்கான பணத்தை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்...

மருத்துவத் துறைக்காக, அரசுகள் தங்கள் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க வேண்டிய நிலை உருவாகும்...

மனிதர்களிடையே உழைக்கும் சக்தி குறைந்து விடும்...

இளைஞர்கள் தள்ளாடுவார்கள்... உழைக்க முன்வர மாட்டார்கள்...


பணிகள் நடக்காது....சோம்பேறிகள் கூட்டம் உருவாகும்....

இது, நிச்சயம் நடக்கும்....மதுவை உடனே ஒழிக்காவிட்டால்....

சமூகம் விழித்துக் கொள்ள வேண்டும்....அரசும் மக்களின் நலனில் உடனே அக்கறை செலுத்த வேண்டும்...

குறிப்பாக பெண்களின் நலனில் அக்கறை செலுத்த முன்வர வேண்டும்....

குடும்பத்தில் அமைதி பிறக்க, சந்தோஷம் மலர உடனே மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...

அப்படி செய்தால், நிச்சயம் தமிழக அரசை பெண்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயமும் வாழ்த்தும்...

இப்பிரச்சினையில் அனைத்துக்கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுத்து, சமூகத்தில் சீரழிவை ஏற்படுத்தி வரும் மதுவை ஒழிக்க முன்வர வேண்டும்...

விரைவில் நல்லது நடக்கும் என நம்புவோம்.....


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================================