Tuesday, March 10, 2026

Monday, March 9, 2026

இளம் சாதனையாளர்கள்....!

இளம் சாதனையாளர்களை அறிந்துகொள்வோம்....!

உலகின் மிகக் கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று சாதனை புரிந்து வருகிறார்கள். அண்மையில் வெளியிடப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்ற முஸ்லிம் இளைஞர்களின் முழு விவரங்கள் தொடர்பான கட்டுரை மணிச்சுடர் நாளிதழில் 09.03.2026 திங்கட்கிழமையன்று வெளியானது. 

இன்றைய கட்டுரையில் ஒருசில இளம் சாதனையார்கள் குறித்த விவரங்களையும் சுவையான தகவல்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதன்மூலம் சிவில் சர்வீசஸ் தேர்வில் நம்முடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்ள வாய்ப்புகள் உருவாகும். அத்துடன் கல்வியில் ஆர்வம் கொண்டு, துடிப்புடன் செயல்படும் முஸ்லிம் இளைஞர்களை அவர்களது பெற்றோர்கள் மட்டுமல்லாமல், மற்றவர்களும் ஊக்குவிக்க வாய்ப்புகள் ஏற்படும். 

இந்திய நிர்வாக சேவை (ஐ.ஏ.எஸ்.), இந்திய வெளியுறவு சேவை (ஐ.எப்.எஸ்.), இந்திய காவல் சேவை (ஐ.பி.எஸ்.), குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகிய மத்திய சேவைகள் பணிக்காக இந்தாண்டு வெளியான தேர்வு முடிவுகளின்படி மொத்தம்  958 பேர் தேர்வாகியுள்ளனர். அவர்களின் முஸ்லிம்களின் எண்ணிக்கை 53 ஆகும். 

இஃப்ரா ஷம்ஸ் அன்சாரி :

அகில இந்திய அளவில் வெளியான பட்டியலில், முஸ்லிம் பெண் இஃப்ரா ஷம்ஸ் அன்சாரி, 24வது இடத்தைப் பிடித்து மிகப்பெரிய அளவுக்கு சாதனை புரிந்துள்ளார். ஆர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் இந்த சாதனையை அவர் எட்டியதாக இஃப்ரா ஷம்ஸ் அன்சாரி குறிப்பிட்டுள்ளார். 

நபியா பர்வேஸ் :

இதேபோன்று, வெற்றி பெற்றவர்களில் நபியா பர்வேஸ், அகில இந்திய அளவில் 29வது இடத்தைப் பிடித்துள்ளார்.  உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள தரியாபூர் ஜகா கிராமத்தைச் சேர்ந்தவர் நபியா. புது தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் கட்டிடக்கலை இளங்கலை பட்டம் பெற்றவர். பின்னர் அவர் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் உள்ள ரெசிடென்ஷியல் கோச்சிங் அகாடமியின் மாணவியாகவும் இருந்தார். இது சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது.

நபியா பர்வேஸ் அகில இந்திய அளவில் 29வது இடத்தைப் பிடித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்று, நாட்டின் முதல் 30 சாதனையார்களின் ஒருவராக இடம்பிடித்தார்.

முஹம்மது ஸ்வாலா :

கேரள மாநிலத்தைச் சேர்ந்த டி.ஏ. முஹம்மது ஸ்வாலா சிவிஸ் சர்வீசஸ் தேர்வில் 429வது ரேங்க்கில் தேர்வாகியுள்ளார். தற்போது இவர், கடந்த 2024 ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் 711வது ரேங்க் பெற்று ஐஆர்டிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பொறிறியல் படிப்பை 2016ஆம் ஆண்டு முடிந்த முஹம்மது ஸ்வாலா, டீச் ஃபார் இந்தியா பெல்லோஷிப்பின் கீழ் 2016-2018 வரை சென்னையில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

                                                    ====================

"மிகவும் கடினமான தேர்வாக கருதப்படும் ஒரு தேர்வில் இந்திய முஸ்லிம் இளைஞர்கள் மிகப்பெரிய அளவுக்கு ஆர்வத்துடன் கலந்துகொள்ள முன்வர வேண்டும். கடின உழைப்பு, ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையில் நிச்சயம் சாதிக்க முடியும்"

                                                    ====================

பின்னர் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் உதவித்தொகையுடன் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாரானார். மேலும் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள என்லைட்ஐஏஎஸ் நிறுவனத்தில் விருப்பத் தேர்வில் தத்துவத்தில் தேர்ச்சி பெற்றார்.  முஹம்மது ஸ்வாலாவின் தந்தை அப்துல் நசீர் ஒரு தொழில் அதிபராக இருந்து வருகிறார். தாய் சபீனா நசீர் இல்லத்தரசியாக இருந்து குடும்பத்தை அழகிய முறையில் கவனித்து வருகிறார். இவருக்கு அமீனா என்ற ஒரு சகோதரி உண்டு.  வணிக பட்டதாரியான அவர் திருமணமானவர். முஹம்மது ஸ்வாலாவின் பூர்வீகம் கேரளாவின் கோட்டயம் மாவட்த்தில் உள்ள வைக்கம் என்பது குறிப்பிடத்தது. 

சாதிக்க வாருங்கள் :

மிகவும் கடினமான தேர்வாக கருதப்படும் ஒரு தேர்வில் இந்திய முஸ்லிம் இளைஞர்கள் மிகப்பெரிய அளவுக்கு சாதித்து வருவது மகிழ்ச்சியான ஒன்றாகும். அதேநேரத்தில் இன்னும் நிறைய இளைஞர்கள் இதுபோன்ற போட்டித் தேர்வுகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்ள முன்வர வேண்டும். கடின உழைப்பு, ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையில் நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு மேற்கண்ட இளைஞர்கள் நமக்கு மிகச் சிறந்து எடுத்துக்காட்டு என்பதை நம்முடைய சமுதாய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே எந்தவித தயக்கமும் இல்லாமல் சாதிக்க உடனே புறப்படுங்கள். அதன்மூலம் உங்களுக்கும், வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ந்துகொள்ளுங்கள். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

தமிழ்நாடு உர்தூ அகாடமிக்கு நிதி ஒதுக்கீடு...!

தமிழ்நாடு உர்தூ அகாடமியின் நிர்வாக மற்றும் செயல்பாட்டு செலவினங்களுக்காக ரூ.44 லட்சம் நிதி ஒதுக்கீடு....!!

 அரசாணை வெளியிட்டு தமிழ்நாடு அரசு அறிவிப்பு...!!

சென்னை, மார்ச்.10- தமிழ்நாடு உர்தூ அகாடமியின் நிர்வாக மற்றும் செயல்பாட்டு செலவினங்களுக்காக 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு உர்தூ அகாடமியின் துணைத் தலைவர் முஹம்மது நயீமுர் ரஹ்மானின் கோரிக்கையை ஏற்று அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இ.யூ.முஸ்லிம் லீக் கோரிக்கை :

தமிழ்நாடு உர்தூ அகாடமியின் மேம்பாட்டிற்காக அரசு முக்கியத்துவம் கொடுத்து உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு கிளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள உர்தூ ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் அண்மையில் நடைபெற்ற கும்பகோணம் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் உர்தூ ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், உர்தூ மொழியின் மேம்பாட்டிற்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்து இருந்தார். 

நிதி ஒதுக்கீடுசெய்து அரசாணை வெளியீடு :

இந்நிலையில், தமிழக அரசின் உயர்கல்வித்துறை 9.03.2026 திங்கட்கிழமையன்று அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், தமிழ்நாடு உர்தூ அகாடமியின் நிர்வாக மற்றும் செயல்பாட்டு செலவினங்களுக்காக 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒருமுறை மானியமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு உர்தூ அகாடமி செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அரசு, அகாடமியின் துணைத் தலைவர் முஹம்மது நயீமுர் ரஹ்மானின் கோரிக்கையின் அடிப்படையில், இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மேற்கண்ட நிதி, தமிழ்நாடு உர்தூ அகாடமிக்கு நிரந்தர அலுவலக ஊழியர்களுக்கான சம்பளம், அலுவலக பராமரிப்பு, டாக்டர் கலைஞர் நூற்றாண்டு உர்தூ நூலகம் அமைத்தல், மாநிலத்தில் உர்தூ மொழியை மேம்படுத்தி, அதன் கலாச்சார பாரிம்பரியத்தை பாதுகாத்தல், புகழ்பெற்ற உர்தூ இலக்கியவாதிகளை கௌரவித்தல், கருத்தரங்கங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், உர்தூ கவியரங்குகள் ஆகியவற்றை நடத்துதல், முக்கிய தேசிய நாட்களில் கட்டுரை, மற்றும் இலக்கிய போட்டிகளை நடத்துதல், மாநிலத்தில் திறன் மேம்பாட்டு மற்றும் பயிற்சி மையங்களை அமைத்தல், மாநிலத்தில் உர்தூ மொழியை மேம்படுத்த சிறப்பு மையம் அமைத்தல், உர்தூ மொழியில் மாத இதழ் நடத்துதல், உர்தூ மொழியில் சான்றிதழ் மற்றும் டிப்ளாமா படிப்புகளை தொடங்குதல், பெண்களுக்கான பயிற்சி மையங்களை அமைத்தல் ஆகியவற்றிக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

உர்தூ மொழி வளர்ச்சிக்கு உதவும் :

தமிழ்நாடு உர்தூ அகாடமிக்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ள 44 லட்சத்து 50 ஆயிரம் நிதியின் மூலம், அகாடமி புதிய உற்சாகத்துடன் செயல்பட வாய்ப்பு உருவாகியுள்ளது. இதன்மூலம் உர்தூ மொழி பேசும் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் உர்தூ மொழியின் சிறப்பு கொண்டு சேர்க்க வாய்ப்பு உருவாகியுள்ளது.அத்துடன் உர்தூ மொழி குறித்த ஒரு விழிப்புணர்வு மக்கள் மத்தியில் உருவாகும் என்றும் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உர்தூ அகாடமிக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டதற்கு உர்தூ மொழி ஆர்வலர்கள் வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளனர். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


சிந்தனை...!

 You cannot control 

the behavior of others. 

But you can always choose 

how you respond to it.




Quran...!

A man discovers a noble tiny little copy of 

the Qur’an dating back to the Ottoman era, 

written with golden ink that reflects

 the splendor and precision of

 Islamic art at that time.



வையுங்கள்...!

 மனதை நிலையாக வையுங்கள். 

ஆசையை கொஞ்சமாக வையுங்கள். 

உள்ளத்தை உறுதியாக வையுங்கள். 

பாசத்தை உண்மையாக வையுங்கள். 

ஆனால், 

நட்பை மட்டும் 

உயிராக வையுங்கள்....



Press...!

 LoP Rahul Gandhi Press Meet.



Sunday, March 8, 2026

நூல் அறிமுகம்...!

 எனது 

'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி"

 நூல் அறிமுகம்...!

தோழர்கள் அமோக வரவேற்பு...!






உரை...!

தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற  இஸ்லாமிய உம்மத்தின் தலைவர் தியாகி ஆயத்துல்லா அலி காமெனி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரை...!



Nothing....!

 You learn nothing

 from life 

if  you think 

you're right all the time.




தீர்மானம்....!

 எதுவும் இல்லாதபோது 

சமாளிக்கும் திறமையும், 

எல்லாம் இருக்கும்போது 

நடந்து கொள்ளும் முறையே 

நல்ல வெற்றியை தீர்மானிக்கிறது.



நூல் அறிமுகம்...!

 எனது 

'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி" 

நூல் அறிமுகம்...!

தோழர்கள் அமோக வரவேற்பு...!



Saturday, March 7, 2026

மகளிர் தினம்....!

சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்.....!

தாயாக

சகோதரியாக

தோழியாக

மனைவியாக

பிள்ளையாக

அண்ணியாக

அத்தையாக

மாமியாராக

இப்படி

பல உறவுகளில்

வலம் வந்து

ஆண்களின்

வளர்ச்சிக்கு

மகிழ்ச்சிக்கு 

முக்கிய 

காரணகர்த்தாவாக

இருக்கும்

எம் பெண்களுக்கு

மகளிர் தின வாழ்த்துகள்.



சிவில் சர்வீஸ் தேர்வில் வரலாறு படைத்த முஸ்லிம் இளைஞர்கள்....!

" சிவில் சர்வீஸ் தேர்வில் வரலாறு படைத்த முஸ்லிம் இளைஞர்கள் "

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற  யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் அண்மையில் (மார்ச் 06, 2026 ) அறிவிக்கப்பட்டன.  2025 ஆகஸ்ட்டில் நடைபெற்ற முதல் கட்ட தேர்வு மற்றும் டிசம்பரில் நடைபெற்ற இறுதிக்கட்ட  முதன்மை தேர்வு ஆகியவற்றுக்குப் பிறகு, பிப்ரவரி 2026 இல் நடைபெற்ற ஆளுமைத் தேர்வுக்கான நேர்காணல்களின் அடிப்படையில் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை யு.பி.எஸ்.சி. அறிவித்தது. 

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் 2025 தேர்வு முடிவுகளில் முதலிடம் பிடித்த 958 இளைஞர்களின் பட்டியலில், 53 முஸ்லிம் இளைஞர்கள் இடம் பெற்றுள்ளனர். ஏ ஆர் ராஜா மொஹைதீன், இஃப்ரா ஷம்ஸ் அன்சாரி, நபியா பர்வேஸ் மற்றும் ஹசன் கான் ஆகிய நான்கு முஸ்லிம்கள் முதல் 100 பேர் பட்டியலில் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.  அத்துடன், கடந்த ஆண்டை விட, சிவில் சர்வீசஸ் 2025 தேர்வுகளில்  முஸ்லிம்களின் தேர்வு எண்ணிக்கை சற்று மேம்படுத்தப்பட்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதிப் பட்டியலில் 26 முஸ்லிம்கள் மட்டுமே இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது 53 பேர் தேர்வாகியுள்ளனர். 

தேர்வு பெற்ற முஸ்லிம்களின் பட்டியல் :

சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களின் முழுப் பட்டியலை அவர்கள் பெற்ற ரேங்க் அடிப்படையில் வரிசையாக  இங்கே தரப்பட்டிருக்கிறது. அதன்படி ஏ.ஆர். ராஜா மொஹைதீன், இஃப்ரா ஷம்ஸ் அன்சாரி, நபியா பர்வேஸ், ஹசன் கான், அர்ஃபா உஸ்மானி, கான் சைமா செராஜ் அகமது, வாசிம் உர் ரஹ்மான், சோபியா சித்திக், தௌசீஃப் அஹ்மத் கனை, மந்தாஷா, அசாத் அகீல், முஹம்மது இஷ்தேயாகு ரஹ்மான்,  முகமது அஷ்மில் ஷா, ஷாஹிதா பேகம் எஸ்.,  ஷதாப் அலி கான்,  முஹம்மது ஸ்வாலா டி.ஏ.,  ஷோயாப்,  நாஜியா பர்வீன்,  ஷேக் மொஹமட் ஹபிசுதீன் எஸ்.,  ஷேக் மொஹமட் நிஷாத் எம்.,  மின்ஹாஜ் ஷகீல்,  குல்பிசா,  ஹாஷ்மி முகமது உமர், ஷாருக் கான்,  அஸ்னா அன்வர்,  முனீப் அப்சல் பர்ரா,  அஸீம் அஹ்மத்,  சைஸ்டா பர்வின்,  நூர் ஆலம், முகமட் இர்பான் கயம்கானி,  மொஹ்சினா பானோ, குலாம் மாயா தின்,  டேனிஷ் ரப்பானி கான், முஹம்மது நயாப் அஞ்சும், முகமது அபுசார் அன்சாரி,  இன்சா கான்,  அப்துல் சுபியான் கே., ஃபைரூஸ் பாத்திமா எம்., மொஹமட் ஹாஷிம் கே.,  முஹம்மது சுஹைல், தௌசிப் உல்லா கான்,  கோ இ சஃபா, சனா அஸ்மி, ரேஷ்மா எம்., யாசர் அகமது பாட்டி,  குலாம் ஹைதர், முகமது ஷெசின் சி.பி., முகமது அஜாஸ் உல் ரஹ்மான், அசார் ஆசிப் கான்,  முகமது சர்ஃப்ராஸ் சவுத்ரி, அப்துல்லா அஃப்ரித் ஏ., முகமது ஷாஹித் ரசா கான், இர்பான் அகமது லோன் ஆகிய 53 முஸ்லிம் இளைஞர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 

வரலாறு படைத்த ஜாமியா மில்லியா :

சிவில் சர்வீஸ் தேர்வுக்காக மிகச் சிறந்த முறையில் முஸ்லிம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் தலைநகர் டெல்லியில் உள்ள  ஜாமியா மில்லியா இஸ்லாமியா குடியிருப்பு பயிற்சி அகாடமி இருந்து வருகிறது. இந்த அகாடமியில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத்த ஆர்வம் கொண்டவர்களுக்கு மிகச் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் இந்த அகாடமியில் இருந்து தேர்வாகும் இளைஞர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதி வெற்றி பெற்ற 53 முஸ்லிம் இளைஞர்களில், ஜாமியாவின் பயிற்சி அகாடமியைச் சேர்ந்த 38 மாணவர்கள் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றனர். இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், ஆர். ராஜா மொஹியுதீன் அகில இந்திய அளவில் 7வது இடத்தைப் பிடித்தார். இது ஜாமியா நிறுவனத்திற்கு பெருமை சேர்த்தது. அத்துடன் தேர்வில் முதல் 10 இடங்களுக்குள் ஒரு ஜாமியா மாணவரைப் பிடித்தது.

சிவில் சர்வீசஸ் துறையில் முஸ்லிம்களின் செயல்திறன் :

2009 முதல் சிவில் சர்வீசஸ் துறையில் முஸ்லிம்களின் செயல்திறனை நாம் கொஞ்சம் அறிந்துகொள்ள வேண்டும். 2009 ஆம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்ற 791 மாணவர்களில் மொத்தம் 31 முஸ்லிம் இளைஞர்கள் இருந்தனர். அதேபோல், 2010 ஆம் ஆண்டில், வெற்றி பெற்ற 875 பேரில், 21 பேர் முஸ்லிம்கள் ஆவார்கள். காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் ஷா பைசல் தேசிய அளவில் தேர்வில் முதலிடம் பிடித்தார். இதேபோல் 2011 ஆம் ஆண்டில், சிவில் சர்வீஸ்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 920 பேரில் 31 முஸ்லிம்களும்  2012 ஆம் ஆண்டில், வெற்றி பெற்றவர்களில்  30 முஸ்லிம்களும் அடங்குவர்.  அதேநேரத்தில் 2012 ஆம் ஆண்டில், தேர்ச்சி பெற்ற  30 முஸ்லிம்களில்  நான்கு பேர் முதல் 100 பேர் பட்டியலில் இடம் பெற்றனர்.

                                            ======================

"சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில் வெற்றிபெற்ற 958 பேரில், 53 முஸ்லிம் இளைஞர்கள் இடம் பெற்றுள்ளனர். ஏ ஆர் ராஜா மொஹைதீன், இஃப்ரா ஷம்ஸ் அன்சாரி, நபியா பர்வேஸ், ஹசன் கான் ஆகிய நான்கு முஸ்லிம்கள் முதல் 100 பேர் பட்டியலில் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.  அத்துடன், 2025 தேர்வுகளில்  முஸ்லிம்களின் தேர்வு எண்ணிக்கை சற்று மேம்படுத்தப்பட்டு அதிகரித்துள்ளது"

                                            ======================

2013 ஆம் ஆண்டில், மொத்தம் 34 முஸ்லிம்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.  அதேநேரத்தில் 2014 ஆம் ஆண்டில் தேர்ச்சிபெற்ற மொத்தம் ஆயிரத்து 236 பேர் பட்டியலில் 38 முஸ்லிம்கள் இருந்தனர். 2015 ஆம் ஆண்டில், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரிந்துரைத்த ஆயிரத்து 78 பேரில் 34 முஸ்லிம்கள் இடம்பெற்று இருந்தனர். 2016 மற்றும் 2017 ஆண்டுகள் முஸ்லிம் இளைஞர்களுக்கு மிகவும் பிரகாசமான காலமாகும். 2016 ஆம் ஆண்டில், வெற்றி பெற்றவர்களின்   பட்டியலில் 52 முஸ்லிம்கள் இடம்பெற்றனர். 2017 ஆம் ஆண்டில் அவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. 2018 இல் 27 முஸ்லிம்கள் மட்டுமே தேர்ச்சிபெற்று தேர்வானார்கள். 2019 ஆம் ஆண்டில், 42 முஸ்லிம்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

அதேநேரத்தில், 2020 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்வு என்றும் அழைக்கப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வில்  மொத்தம் 31 முஸ்லிம்கள் தேர்ச்சி பெற்றனர். 2021 ஆம் ஆண்டில் சிவில் சர்வீசஸ் தகுதிப் பட்டியலில் மொத்தம் 685 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களில் 21 பேர் முஸ்லிம்கள். இது ஒரு தசாப்தத்தில் முஸ்லிம் வேட்பாளர்களின் மோசமான செயல்திறன் ஆகும். 2022 ஆம் ஆண்டில், தேர்ச்சிபெற்ற மொத்தம் 933 பேரில்,  30 பேர் முஸ்லிம்கள். 2023 ஆம் ஆண்டில், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் மொத்தம் ஆயிரத்து 16 இளைஞர்கள் பல்வேறு சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களில் 51 பேர் முஸ்லிம்கள். 2024 ஆம் ஆண்டில், சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதலிடம் பிடித்த ஆயிரத்து 9 பேர்களின் பட்டியலில் மொத்தம் 26 முஸ்லிம்கள் இடம் பெற்றனர்.

தமிழக இளைஞர்கள் சாதனை :

சிவில் சர்வீஸ் தேர்வில் சுமார் பத்து ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர். இந்த ஆண்டு 'நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 56 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 39 பேர் தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையத்தில் தங்கிப் பயின்று, மாதந்தோறும் உதவித்தொகை பெற்று வந்தவர்கள்.

இந்த ஆண்டு தமிழகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 60-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் 2-வது இடத்தை பிடித்த ராஜேஸ்வரி தனது 6-வது முயற்சியிலேயே தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 7-வது இடத்தையும் தமிழக அளவில் 2வது இடத்தையும் பிடித்து சாதனை புரிந்த முஸ்லிம் இளைஞர் ராஜா மொய்தீன்  3வது முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார்.  மேலும், ஷேக் முகமது ஹாபிசுதீன், ஷேக் முகமது நிஷாத் உட்பட பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ள முஸ்லிம் இளைஞர்களில், ராஜா மொஹிதீன், ஷேக் முகமது ஹாபிசுதீன்,ஷேக் முகமது நிஷாத், முகமது ஹாஷிம்,  முகமது ஷெசின், அப்துல்லா அப்ரித் ஆகியோர் அடங்குவர். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Strength...!

 Strength does not come

 from winning. 

Your struggles develop 

your strength.

 When you go through

 hardships and decide 

not to surrender 

that is strength.




நூல்....!

 எனது 

'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி" 

நூல் அறிமுகம்...!

தோழர்கள் அமோக வரவேற்பு...!



நம்பிக்கை...!

 மொத்த உலகமும் முடியாது 

என்று சொல்லும்போது,

'ஒருவேளை முடியலாம்'  

என்று மெல்லிதாக 

உங்களுக்குள் ஒலிக்கும் 

குரலே நம்பிக்கை.



Friday, March 6, 2026

புனித ரமழானில் லகெம்பா சந்தை....!

" புனித ரமழானில் நடைபெறும் பன்முக கலாச்சார லகெம்பா சந்தை "

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் - 

ஊடகவியலாளர்

புனித ரமழான் மாதத்தில் உலகம் முழுவதும் உள்ள சந்தைகள் புத்துயிர் பெற்று மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிடுகின்றன. இஸ்லாமிய நாடுகளில் மட்டுமல்லாமல், முஸ்லிம்கள் சிறுபான்மையின மக்களாக வாழும் நாடுகளிலும், ரமழான் காலத்தில் இஸ்லாமியர்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் போற்றும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அத்துடன் இஸ்லாமியர்களை கண்ணிப்படுத்தும் வகையிலும் சிறப்பு சந்தைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. 

அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியின் மிகவும் பிரபலமான பன்முக கலாச்சார நிகழ்வான ஹால்டன் ஸ்ட்ரீட் லகெம்பா இரவு சந்தை நடைபெற்றது. பிப்ரவரி 19 முதல் மார்ச் 15 வரை ஒவ்வொரு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை துடிப்பான உலகளாவிய உணவு பஜாராக இந்த சந்தை மாறி, மக்களை வரவேற்று மகிழ்வித்தது. இந்த பாரம்பரிய சந்தையில்  60 ஸ்டால்கள் வரை இடம்பெற்றன.   இந்த அற்புதமான வருடாந்திர நிகழ்வு, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுவையான உணவு வகை விருந்துகளை ருசிக்கவும், பல முஸ்லிம்கள் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து நோன்பை முடிக்கவும் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கியது. 

பன்முக சந்தைக்கு மக்கள் வரவேற்பு :

தென்மேற்கு சிட்னியில் புனித ரமழானின் ஒரு மாத காலம் நடைபெறும் இந்த இரவு சந்தைகளுக்கு பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தந்து, அங்கு 'எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதை உணருகிறார்கள். 

சந்தை தொடங்கும் வியாழக்கிழமை இரவு, லகெம்பா மஸ்ஜித்தின் படிகள் திருப்தியான அமைதியுடனும், இனிப்பு ரொட்டி சுடும் வாசனையுடனும் முனகுகின்றன. பள்ளிவாசலுக்கு வரும் அனைவரும் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். சிறுவர்கள் நோன்பு திறப்பத்திற்கு முன்பு கொஞ்ச நேரம் விளையாடி விட்டு, பின்னர் நோன்பு திறக்க மஸ்ஜித்திற்கு சென்று நோன்பை திறந்துவிட்டு, தொழுகையை நிறைவேற்றி விட்டு, ஏக இறைவனின் அருளை பெறுகிறார்கள். பின்னர் நடைபெறும் தாராவிஹ் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் லகெம்பா மஸ்ஜித்தில் குவிந்து தொழுகையை சிறப்பான முறையில் நிறைவேற்றிவிட்டு, லகெம்பா இரவு சந்தைகளுக்குச் செல்கிறார்கள். 

முஸ்லிம்களுக்கான மையம் :

சிட்னிக்கு மேற்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புறநகர்ப் பகுதியான லகெம்பா, ஆஸ்திரேலிய முஸ்லிம்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மையமாகும். ஒவ்வொரு ஆண்டும் ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் என சுமார் 10 லட்சம் மக்கள் லகெம்பா இரவு சந்தைகளில் கலந்து கொள்கிறார்கள்.

                                            ======================

"மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும், அன்பையும் பரப்பும் லகெம்பா போன்ற  ரமழான் சந்தைகள் ரமழான் காலங்களில் மட்டும் அல்லாமல் எப்போதும் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அதன்மூலம், இஸ்லாமிய நெறிமுறைகள் உலக மக்களின் பார்வைக்குக் கொண்டுச் செல்ல வாய்ப்புகள் உருவாகும் என்பது உறுதி”

                                            ======================

லகெம்பா இரவு சந்தைகளில் ஹால்டன் தெருவில் டஜன் கணக்கான பச்சை மற்றும் சிவப்பு கூடாரங்களுக்கு அடியில் இருந்து புகை பறந்து, சுவையான இறைச்சிகள் மற்றும் ரொட்டிகளின் சூடான நறுமணத்தை சுமந்து செல்லும் வகையில் விதவிதமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.  மேலும், வேகவைத்த கபாப்களின் சுவையை சுவைக்க ஏராளமான மக்கள் அந்த கடையின் முன்பு குவிந்துவிடுகிறார்கள். லகெம்பா இரவு சந்தைகள் தங்கள் வழக்கமான ஆற்றலைப் பெருமைப்படுத்திக் கொண்டு, மறுநாள் அதிகாலை வரை தொடரும் என்ற உறுதிமொழியுடன் தொடர்ந்து நடைபெறுகின்றன. 

காபி மற்றும் நபுல்சி நஃபே,  சீஸ், பிஸ்தா, மொறுமொறுப்பான பேஸ்ட்ரி மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றின் அடுக்கு இனிப்பு வகைகளை வழங்கும் கடைகளிலும் கூட்டத்திற்கு குறைவு இருப்பதில்லை. லெபனான் நாட்டைச் சேர்ந்த பிலால் என்பவர்  நடத்தும் இந்த கடையில் இனிப்பின் சுவையை ரசிக்க வாய்ப்பு கிடைக்கிறது. 

சுவையான உணவு வகைகள் :

அனைத்து ஆஸ்திரேலிய மக்களும், சீனர்கள், இந்தியர்கள், இந்த சந்தையை ஆதரிக்கிறார்கள், உண்மையில் அதை விரும்புகிறார்கள். கான்பெர்ரா, மெல்போர்ன் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் ஆஸ்திரேலியர்கள் சந்தையில் விற்கப்படும் சுவையான உணவு வகைகளில் மிகவும் விரும்புகிறார்கள்.

இரவு முழுவதும், பலவிதமான உணவு வகைகளை எடுத்துக்கொள்கிறார்கள். பிரகாசமான பச்சை கொத்தமல்லி கோழி, சுண்ணாம்பு நனைந்த முர்தாபாக், மிகவும் மென்மையான மலேசிய மாட்டிறைச்சி மற்றும் சீஸ் ரோல்ஸ், மேலும் பானம் அல்லது இனிப்பு ஆகியவற்றையும் விரும்பி உண்ணுகிறார்கள். பாரம்பரிய காபி தயாரிக்கும் ஒரு கடை இந்த சந்தையில் மிகவும் புகழ்பெற்றதால்,  அங்கும் கூட்டம் அலை மோதுகிறது.  ஒரு பல்பொருள் அங்காடியின் பச்சை விளக்கின் கீழ் ஒரு பிளாஸ்டிக் மேசையைச் சுற்றி அமர்ந்து கொண்டு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தரும் இஸ்லாமியர்கள் நோன்பு திறந்து மகிழ்ச்சி அடைகிறார்கள். 

ஹால்டன் தெருவில் நடைபெறும் லகெம்பா ரமழான் இரவு சந்தைகளில் பல்வேறு மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் ஆப்பிரிக்க உணவு வகைகளுடன் ,ஒட்டக பர்கர்கள் மற்றும் நஃபே போன்ற தெரு உணவுகளும் கிடைக்கின்றன.  பிரபலமான இந்த துடிப்பான, மது இல்லாத மற்றும் குடும்ப நட்பு நிகழ்வு ஆயிரக்கணக்கானவர்களை நோன்பை முடிக்க ஈர்க்கிறது. 

ஆஸ்திரேலிய பிரதமர் மகிழ்ச்சி :

புகழ்பெற்ற லகெம்பா  ரமழான் இரவு சந்தைக்கு சென்ற ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், சந்தை முழுவதும் சுற்றிபார்த்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், பல தலைமுறைகளாக ஆஸ்திரேலிய முஸ்லிம்கள், ஆஸ்திரேலிய நாட்டிற்கு மிகுந்த பங்களிப்பை அளித்து வருவதாக அவர் பெருமையுடன் கூறி பெருமைப்படுத்தினார். 


 லகெம்பாவில் உள்ள ரமழான் இரவு சந்தைகளில் சமூகத்துடன் கொண்டாடுவது தமக்கு கிடைத்த ஒரு மரியாதை என்றும் பெருமையும்ன கூறியதுடன் அனைவருக்கும் ரமழான் முபாரக் என்றும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்து இருப்பது, முஸ்லிம்கள் மீது அவர் கொண்டுள்ள பாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்தியது. 

மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும், அன்பையும் பரப்பும் இதுபோன்ற சந்தைகள் ரமழான் காலங்களில் மட்டும் அல்லாமல் எப்போதும் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அதன்மூலம், இஸ்லாமிய நெறிமுறைகள் உலக மக்களின் பார்வைக்குக் கொண்டுச் செல்ல வாய்ப்புகள் உருவாகும் என்பது உறுதி. 

===============


சிந்தனை....!

 Be good enough

 to forgive someone, 

but don't be stupid enough 

to trust them again.




நூல்....!

 எனது 

'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி" 

நூல் அறிமுகம்...!

தோழர்கள் அமோக வரவேற்பு...!



நூல் அறிமுகம்...!

எனது 'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி" நூல் அறிமுகம்...!

தோழர்கள் அமோக வரவேற்பு...!

மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் இலக்கியச் சுடர் எஸ்.ஏ. அப்துல் அஜீஸ் எழுதிய ‘உலகில் வீசும் இஸ்லாமிய ஓளி’ என்ற நூலை அதன் ஆசிரியர் இ.யூ. முஸ்லிம் லீக் நெல்லை மாவட்டச் செயலாளர் பாட்டப்பத்து எம். முஹம்மதுஅலி முன்னிலையில் மேலப்பாளையம் நகரச் செயலாளர் முஹம்மது ஜாகிர், மாவட்ட துணைச் செயலாளர் ஹஸன் அலியார் ஆகியோரிடம் சென்னை காயிதே மில்லத் மன்ஸிலில் 6.3.2026 வெள்ளிக்கிழமை காலை வழங்கினார். நெல்லை மாவட்ட பொருளாளர் வீரை ஆதம் இலியாஸ், நெல்லை மண்டல அமைப்புச் செயலாளர் பாட்டப்பத்து எம். நயினார் முஹம்மது கடாபி ஆகியோர் உடனிருந்தனர்.



நூல்...!

 எனது 

'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி" 

நூல் அறிமுகம்...!

தோழர்கள் அமோக வரவேற்பு...!



தகவல்....!

 Buildings in Tel Aviv are 

getting BLASTED.

About 200 israeli

 casualties tonight alone.



Thursday, March 5, 2026

ஈரானின் நெஞ்சுறுதி....!

 " ஈரானின் நெஞ்சுறுதி "

புனித ரமழான் மாத நோன்பின் பத்தாவது நாள்.

அதிகாலை நேரம்....

ஏக இறைக்கட்டளையை நிறைவேற்ற ஈரான் மக்கள் முனைந்திருந்த சமயம்.

உலக ரவுடிகளான, சாத்தான்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து உலகின் மிகவும் வலிமையான இஸ்லாமிய நாடாக கருதப்படும் ஈரான் மீது திடீரென தாக்குதல்களை தொடங்கின.

அணு உலை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டே இருந்த சமயத்தில், வேண்டும் என்றே ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கொடூர தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, சிறுமிகள் படிக்கும் பள்ளிக்கூடத்தின் மீது குண்டுவீசி நடத்திய தாக்குதலில் 168 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டனர்.  அத்துடன், ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினரையும் குறிவைத்து குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உச்சத் தலைவர் அலி கமேனி அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்.

இப்படி ஈரான் மீது போர் வெறிக்கொண்டு இஸ்ரேல், அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் உலக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஈரானில் ஆட்சி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதே தங்களது இலக்கு என கொக்கரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் ராணுவம் சரண் அடைய வேண்டும் என்றும் எச்சரித்தார். 

வீரம் செறிந்த ஈரான்  :

ஆனால், வீரம் செறிந்த ஈரான்  ஒருபோதும் பணியவில்லை. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் தாக்குதல்களுக்கு மத்தியிலும், ஈரான் மக்கள் தங்கள் தேசத்தின் மீதான பற்றாலும், கொடுங்கோன்மைக்கு எதிரான தைரியத்தாலும் வீரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆயுதப்படை மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பிறகும், ஈரான் ராணுவம் தொடர்ந்து சூளுரைத்து, தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் சிதைக்கப்பட்டாலும், ஈரான் ராணுவம் தளராமல் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகக் கூறி தகுந்த பதிலடியும் கொடுத்துக் கொண்டே வருகிறது. 

ஈரானின் மிக உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனிகொல்லப்பட்ட பிறகும், அவரது போராட்டப் பாதையைத் தொடர மக்கள் உறுதியுடன் இருந்து வருகிறார்கள்.  அணு ஆயுதத் தயாரிப்பு அச்சுறுத்தல்களால் சர்வதேச அழுத்தங்களைச் சந்தித்தாலும், ஈரான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. 

2026-ன் தொடக்கத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் எச்சரிக்கைகள், போர் கப்பல்களின் குவிப்பு மற்றும் அணுசக்தி ஒப்பந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஈரான் தனது இறையாண்மை மற்றும் அணுசக்தி திட்டங்களில் சமரசமற்ற நெஞ்சுறுதியுடன் செயல்படுகிறது. அலி கமேனியின் மறைவிற்குப் பிறகும், புதிய தலைவர்கள் அமெரிக்கா மீதான நம்பிக்கையின்மையைத் தெரிவித்து, நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளைத் தவிர்த்து, ராணுவ ரீதியாகத் தற்காத்துக்கொள்ளும் உத்தியைக் கையாண்டு வருகின்றனர். 

அமெரிக்காவின் தடைகள் மற்றும் எச்சரிக்கைகளை மீறி, அணுசக்தி திட்டங்களை ஈரான் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இது உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கர்கள் மீது நம்பிக்கை இல்லை என அறிவித்து, ஈரான் சமரசத்திற்கு உடன்படாமல், நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தைகளுக்கு மட்டுமே தயாராக உள்ளது. மலைப்பாதைகளுக்குள் ராட்சத ஏவுகணைகளை மறைத்து வைத்து, அமெரிக்காவின் போர் கப்பல் குவிப்புக்கு மத்தியிலும் தன் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது. ஈரானின் புதிய தலைமை கமேனியின் கொள்கைகளைத் தொடர்ந்து, முன்னிலும் வலிமையாக அமெரிக்காவின் ராஜதந்திர நடவடிக்கைகளை எதிர்கொள்கிறது. ஈரானின் இந்த போர்க்குணமிக்க அணுகுமுறை, மேற்காசியாவில் தற்போதைய சூழலில், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கு எதிரான ஒரு பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.

ஈரானின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட  நாடுகள் :

ஈரானின் ஏவுகணை தாக்குதல்கள் மூலம் இஸ்ரேல், ராணுவ ரீதியான நேரடித் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது. இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீது நாள்தோறும் ஏவுகணை தாக்குதல்கள் ஈரான் நடத்தி வருவதால், அந்த நகரங்கள் நரகங்களாக மாறிவிட்டன. காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை போன்று, ஈரான் டெல்அவிவ் உள்ளிட்ட முக்கிய இஸ்ரேல் நகரங்கள் மீது தொடந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அந்த நகரங்கள் சுடுகாடாகி மாறவிட்டன. கடந்த முறை நடத்தப்பட்ட 12 நாள் போரின் போது ஏற்பட்ட பாதிப்பை விட, இந்த முறை மிகப்பெரிய பாதிப்பை இஸ்ரேல் சந்தித்துக் கொண்டிருக்கிறது. 

                                                ======================

"வீரம் செறிந்த ஈரான்  ஒருபோதும் பணியவில்லை. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் தாக்குதல்களுக்கு மத்தியிலும், ஈரான் மக்கள் தங்கள் தேசத்தின் மீதான பற்றாலும், கொடுங்கோன்மைக்கு எதிரான தைரியத்தாலும் வீரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆயுதப்படை மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பிறகும், ஈரான் ராணுவம் தொடர்ந்து சூளுரைத்து, தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது"

                                                ======================

இதேபோன்று அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்பட்டு வரும்,  ஐக்கிய அரபு அமீரகம், ஈரானின் தாக்குதல்கள் காரணமாக 165-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் 541-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை எதிர்கொண்டதாக தி குளோப் அண்ட் மெயில்செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. சவூதி அரேபியாவில் ரியாத் மற்றும் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் விமான நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. குவைத் 97 ஏவுகணைகள் மற்றும் 283 ட்ரோன்களால் தாக்குதலுக்கு உள்ளானது.

கத்தாரில் அல் உடைத் விமான தளம் மற்றும் பிற பகுதிகளில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டன. பஹ்ரைனில் அமெரிக்க கடற்படை தலைமையகம் மீதான தாக்குதல் நடத்தப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டது. ஜோர்டானின் முவாஃபக் அல்-சால்டி விமான தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஈராக்கின் ஐன் அல்-அசாத் மற்றும் ஏர்பில் ஆகிய அமெரிக்க ராணுவ தளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.  அஜர்பைஜானின் நக் சிவனில் விமான நிலையம் மற்றும் அருகில் உள்ள இடங்கள் மீது ட்ரோன் தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. சிரியாவின் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஈரானின் தாக்குதல்கள் காரணமாக துருக்கிபிராந்திய பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.  ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான இந்த மோதலால், இப்பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டு, விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன

அமெரிக்காவிற்கு மிகப்பெரிய தலைவலி :

இந்த போர் நடவடிக்கையின் காரணமாக அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள செலவு விவரம் குறித்து அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. முதல் 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 166 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு முன் விமானங்களை மாற்றி நிலைநிறுத்துதல், 12க்கும் மேற்பட்ட கடற்படை கப்பல்களை பணியில் ஈடுபடுத்துதல், பிராந்திய ஆதாரங்களை இயக்குதல் ஆகியவற்றிற்கு கூடுதலாக 5 ஆயிரத்து 796 கோடி செலவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. விமானம்தாங்கி கப்பலான ஜெரால்டு போர்ட்-ஐ இயக்குவதற்காக ஒருநாளுக்கு 60 கோடி ரூபாய் செலவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், ஈரானின் தாக்குதல்கள் காரணமாக அமெரிக்க ராணுவ வீரர்களின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. ஈரான் அமரிக்கா இஸ்ரேல் இடைய நடைபெற்று வரும் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை விண்ணை எட்டி வருகிறது. இதனால் உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

சளைக்காமல் திருப்பி அடிப்பதற்கு காரணங்கள் :


ஈரான், அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், பெரும் தியாகங்களுக்குத் தயாராக நின்று, வீரத்தை நிலைநிறுத்த முயற்சி வருகிறது.  உச்ச தலைவர் உயிரிழப்பு, ராணுவ தளபதிகள் பலி, வான் பாதுகாப்பு அமைப்புகள் முடக்கம் என ஈரான் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகிறது. இத்தனை இழப்புகளை ஏற்படுத்திய பிறகும், ஈரான் சளைக்காமல் திருப்பி அடிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இயற்கையாகவே இருக்கும் புவியியல் அமைப்பு. அதன் மொத்தப் பரப்பளவு சுமார் 16 புள்ளி 5 லட்சம் சதுர கிலோ மீட்டர். பரப்பளவில் ஈரான் உலகின் 17-வது பெரிய நாடு. ஈரானின் பிரம்மாண்டத்தைப் புரிந்துகொள்ள சில ஒப்பீடுகள் அவசியம். ஐரோப்பிய நாடுகளை எடுத்துக்கொண்டால் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நான்கு நாடுகளையும் ஒன்றாகச் சேர்த்தால் எவ்வளவு நிலப்பரப்பு இருக்குமோ, அதைவிட ஈரான் பெரியது. 

ஈராக்கை விட 3 மடங்கும், ஆப்கானிஸ்தானை விட 2 மடங்கும் பெரியது. ஒரு நாடு இவ்வளவு பெரியதாக இருப்பது வெறும் பெருமைக்காக மட்டுமல்ல. அது ஈரானுக்கு மூன்று முக்கியமான இயற்கை பாதுகாப்பு அரண்களை வழங்குகிறது. ஈரானின் பரப்பளவு காரணமாக, அதன் முக்கியமான அணுசக்தி நிலையங்கள், ஏவுகணைத் தளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஒரே இடத்தில் குவிக்கப்படவில்லை. இந்த வசதிகள் பல நூறு மைல்கள் இடைவெளியில், மலைகளுக்கு அடியில் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு தாக்குதல் மூலம் ஈரானை முடக்க முடியாது. ஆயிரக்கணக்கான வான்வழித் தாக்குதல்கள் நடத்தினாலும், ஒரு பெரிய நாட்டை முழுமையாகக் கட்டுப்படுத்துவது எந்த ஒரு நாட்டிற்கும் சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும்.

இப்படி ஒரு வரலாற்று ரீதியான பாரம்பரியம் மிக்க நாடாக இருப்பதால், எந்தவித போரையும் தைரியமாக எதிர்கொள்ளும் நெஞ்சுறுதியுடன் ஈரான் இருந்து வருகிறது. தற்போது போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா மறைமுகமாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும், தேன் கூட்டில்  கை வைத்து கலைத்துவிட்டதால், ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தயாராக இல்லை. நீங்கள் ஆரம்பித்து வைத்த போரை நாங்கள் முடித்து வைப்போம் என்று உறுதியாக கூறி, சாத்தான்களை தைரியாமாக எதிர்கொண்டு வருகிறது. ஏக இறைவனின் துணை, ரமழானின் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் துஆ ஆகியவற்றின் உதவியுடன் இந்த போரில் ஈரான் நிச்சயம் வெற்றி பெறும். வியட்நாம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பில நாடுகளில் படுதோல்வி அடைந்தது போன்று, அமெரிக்கா மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். அமெரிக்கர்கள் கூட இந்த போரை விரும்பவில்லை என்பது அங்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கருத்து தெரிவித்து இருப்பது உறுதியாக தெரிய வருகிறது. ஈரான் மீது போரை திணித்த இஸ்ரேல், அமெரிக்கா வரலாற்றில் மிகப்பெரிய அவமானத்தையும் தோல்வியையும் அடைவார்கள் என்பது தான் உண்மை. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 

=======================

Time...!

 

Give time

 to education. 

Education

 will change 

your time.




வேதனை....!

The Epstein class raped and 

murdered little girls. 

Now, they've started their war against 

Iranians by slaughtering 168 little Iranian girls.



அழகு....!

 அழகோ....அழகு....

அற்புதமான அழகு...

இயற்கையின் ஓர் அதிசயம்...



சிந்தனை...!

 சிந்திக்காத வாழ்க்கை 

என்றும் 

சிகரம் தொடுவதில்லை. 

சந்திக்காத பிரச்சினை 

என்றும் 

நம்மை சிந்திக்க 

வைப்பதில்லை.



ஈரான் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் - இ.யூ.முஸ்லிம் லீக் தீர்மானம்...!

ஈரான்  மீது அமெரிக்கா-இஸ்ரேல்  நடத்தும் தாக்குதலுக்கு கடும் கண்டனம்

வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களை பாதுகாக்க  ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அரசியல் ஆலோசனைக்குழு தீர்மானம்...!!!

புதுடெல்லி, மார்.05- ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து திடீரென தாக்குதல்களை நடத்தி வருவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த மோதல் காரணமாக வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிய செய்ய ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தேசிய அரசியல் ஆலோசனைக்குழு ஆலோசனை :

இந்திய யூனயின் முஸ்லிம் லீகின்  தேசிய அரசியல் ஆலோசனைக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் பனக்காடு சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் தலைமையில் 04.03.2026 புதன்கிழமையன்று நடைபெற்றது. இணையதள காணொளி காட்சி மூலம் நடைபெற்ற  ந்த கூட்டத்தில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பங்கேற்று விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, மத்திய கிழக்கில் வன்முறை அதிகரித்து அமைதி சீர்குலைவது குறித்து கடுமையான கவலையையும் மிகுந்த வேதனையையும்  அவர்தெரிவிதார். 

தாக்குதலுக்கு எதிரான தீர்மானம் :

குறிப்பாக, நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதைக் கடுமையாகக் கண்டிக்கும் தீர்மானத்தை குழு நிறைவேற்றியது. எந்த காரணமும் இல்லாமல் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது திணிக்கப்பட்ட போரின் விளைவாக, அதன் தேசியத் தலைவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் உட்பட ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மனிதாபிமான மதிப்புகள், நெறிமுறைக் கொள்கைகள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச உறவுகளின் நன்கு மதிக்கப்படும் நெறிமுறைகளுக்கு எதிரான இந்த மிருகத்தனமான தாக்குதலை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், வளைகுடா நாடுகள் தலைமையிலான அமைதி முயற்சிகளைப் பாராட்டுகையில், போர் மேலும் தீவிரமடைவதைத் தடுக்க, அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், அண்டை நாடுகளைத் தாக்குவதைத் தவிர்க்கவும் ஈரானை குழு வலியுறுத்தியது. 

ஒன்றிய அரசுக்கு கோரிக்கை :

இந்தப் பிரச்சினை நமது இந்திய நாட்டிற்கும் நமது இந்திய மக்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளில், லட்சக்கணக்கானோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வசிக்கின்றனர். மேலும், சர்வதேச சமூகத்தில் உள்ள நாடுகளின் இருதரப்பு உறவுகளில் அமைதிக்காக வலுவான அர்ப்பணிப்புடன் இந்தியா ஒரு சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

எனவே, இந்தப் பிராந்தியத்தில் உள்ள இந்திய குடிமக்களைப் பாதுகாக்க உடனடி ராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்கவும், நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதிச் சூழலை நிலைநாட்டுவதில் முன்னெச்சரிக்கையான பங்கை வகிக்கவும் இந்திய அரசாங்கத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  வலியுறுத்துகிறது என்றும் தீர்மானத்தில் கேட்டுக் கொண்டுள்ளப்பட்டுள்ளது. 

ஆலோசனைக் கூட்டத்தில்  தேசிய மூத்த தலைவர் எம்.பி.அப்துல் சமத் சம்தானி எம்.பி., தேசிய பொருளாளர் பி.வி.அப்துல் வஹாப் எம்.பி, தேசிய அமைப்புச் செயலாளர் முஹம்மது பஷீர் எம்.பி., தேசிய துணைத் தலைவர்கள் கே.பி.அப்துல்.மஜீத், எம்.அப்துர் ரஹ்மான், சீராஜ் இப்ராஹிம் சேட், நயீம் அக்தர், ஜெய்னுல் ஆபீதின், கவுசர் ஹயாத் கான், தேசிய செயலாளர்கள் குரம் அனிஸ் உமர், கே.நவாஸ் கனி, சி.கே.சுபைஹர், தேசிய துணைச் செயலாளர் ஹஜீப் அன்சாரி, வழக்கறிஞர் பைசல் பாபு, நஜ்முல் அசன் கனி, பாத்திமா முசப்பர், ஜெயந்தி ராஜன், அஞ்சலி குமார் சீனா, எம்.பி.முஹம்மது கோயா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

வரவேற்பு....!

 எனது

 'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி" 

நூல் அறிமுகம்...!

தோழர்கள் அமோக வரவேற்பு...!



Wednesday, March 4, 2026

Behind....!

 People will talk 

behind your back.

 Don't worry 

they are behind 

for a reason.




உதவி...!

 Monkey's Struggle to Save a Baby Goat..!



முடிவு....!

 முடிவு தெரியாத 

நம் வாழ்க்கையில் 

நாம் எடுக்கும் 

ஒவ்வொரு முடிவும் 

நம் வாழ்க்கையை 

மாற்றிக் கொண்டே இருக்கும்.



நல்லிணக்கம்...!

Muslim brethren attached to 

Athar Jamath Mosque at Oppanakara Street

 distributing drinking water bottles to 

Hindu devotees who take part in the

 car procession of Koniamman Temple 

in Coimbatore on Wednesday.



Tuesday, March 3, 2026

மரத்திலான அழகிய மஸ்ஜித்....!

" ரமழானில் ஜொலிக்கும்  மரத்திலான பழமையான அழகிய மஸ்ஜித் "

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள டைமர்கராவில் அந்தி வேளை வரும்போது, ​​வழிபாட்டாளர்கள் 120 ஆண்டுகள் பழமையான பாபா ஜீ மஸ்ஜித்தை நோக்கி விரைகிறார்கள். அங்கு புனித ரமழான் மாதம் தலைமுறைகளாக நிற்கும் அழகாக செதுக்கப்பட்ட மர கூரைகளுக்கு அடியில், இரவு தராவீஹ் தொழுகையைக் கொண்டுவருகிறது.

ரமழானின் போது, ​​இஸ்லாமியர்கள் விடியற்காலை முதல் சூரிய அஸ்தமனம் வரை நோன்பு நோற்று மாலையில் நீட்டிக்கப்பட்ட கூட்டு பிரார்த்தனைகளுக்காக கூடுகிறார்கள். பாபா ஜீ மஸ்ஜித்தில், தொழுகையாளர்களின்  கூட்டங்கள் பெருகி, வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டமைப்பை பிராந்தியத்தின் ஆன்மீக மையப் புள்ளிகளில் ஒன்றாக மாற்றுகின்றன.

பாபா ஜீ மஸ்ஜித்தின் வரலாறு :

1890களில் பாபா ஜீ என்று உள்ளூரில் அழைக்கப்படும் முக்கிய பஷ்டூன் யூசுப்சாய் பழங்குடியினத்தைச் சேர்ந்த மார்க்கப் பிரமுகரான மியான் குல் முஹாயுதீன் என்பவரால் கட்டப்பட்ட இந்த மஸ்ஜித், லோயர் டீர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு நீண்ட காலமாக ஒரு மைய வழிபாட்டுத் தலமாக செயல்பட்டு வருகிறது.

மஸ்ஜித் பாரம்பரியமாக இரண்டு கத்முல் குர்ஆனை அல்லது தாராவீஹ் தொழுகையின் போது குர்ஆனை முழுமையாக ஓதுவதை நடத்தும் நோன்பு மாதத்தில் அதன் முக்கியத்துவம் தீவிரமடைகிறது. "பத்து பராக்கள் ஒவ்வொரு நாளும் இரண்டு ஓதுபவர்கள் ஓதுவார்கள். இரண்டு கதம்களும் ஆறு நாட்களில், தலா மூன்று நாட்களில் முடிக்கப்படுகின்றன. இதனால் மஸ்ஜித் வழிபாட்டாளர்களால் எப்போதும் நிரம்பியிருந்தது" என்று மஸ்ஜித்தின் பாதுகாவலர் 62 வயதான நக்கீப் உல் அப்ரார் கூறுகிறார்.

பல தசாப்தங்களாக, பாபா ஜீ மஸ்ஜித் பரந்த பகுதிக்கான முதன்மையான சபை இடமாக இருந்தது. ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள ஒரு மலைப்பிரதேசத்தில் உள்ள தொலைதூர நகரங்களிலிருந்து வழிபாட்டாளர்களை ஈர்த்தது. கடந்த காலத்தில், மஸ்ஜித்துகள் இப்போது இருப்பது போல் எண்ணிக்கையில் அதிகம் இல்லை. வெள்ளிக்கிழமை மற்றும் ஈத் பெருநாள் தொழுகைக்காக வழங்கப்பட்ட ஒரே மஸ்ஜித் அதுதான்.  அதனால், மேடன், ரபாத், தலாஷ், அராங் மற்றும் டிர் போன்ற தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெள்ளிக்கிழமை மற்றும் ஈத் தொழுகைகளுக்கு வருவார்கள்.

தலைமுறை பாரம்பரியம் :

பல உள்ளூர்வாசிகளுக்கு, ரமழான் மாதத்தில் பாபா ஜீ மஸ்ஜித்துக்குச் செல்வது ஒரு தலைமுறை பாரம்பரியப் பழக்கமாக இருந்து வருகிறது. “நான் கடந்த 35, 40 ஆண்டுகளாக இந்த மஸ்ஜித்துக்கு வந்து செல்கிறேன்,” என்று 59 வயதான புர்ஹான் உதின் கூறுகிறார். “முன்பு, என் தாத்தா இங்கு வந்தார். பின்னர் என் தந்தை வந்தார். இந்த முழு பயணமும் 115, 120 ஆண்டுகளாக தொடர்கிறது. நான் இப்போது தவறாமல் வருகிறேன்.” என்றும் புர்ஹான் உதின் மேலும் தெரிவிக்கிறார். 

அதன் ரமழான் கூட்டத்திற்கு அப்பால், மஸ்ஜித், அதன் குறிப்பிடத்தக்க பாதுகாப்பிற்காக தனித்து நிற்கிறது. வெள்ளை வண்ணம் பூசப்பட்ட மண் பூச்சு சுவர்களால் ஆன இந்த அமைப்பு, அலங்காரமாக செதுக்கப்பட்ட மர தூண்களில் தங்கியிருக்கும் பெரிய மரக் கற்றைகளால் ஆதரிக்கப்படுகிறது. கனமான கதவுகள் ஒரு தனித்துவமான விரிசல் சத்தத்துடன் உள்நோக்கித் திறக்கின்றன. இது அதன் வயதின் நினைவூட்டலாகும்.

கடினமான பணி :

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மஸ்ஜித்தைக் கட்டுவது மலைப்பாங்கான நிலப்பரப்பில், நவீன போக்குவரத்துக்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஒரு கடினமான பணியாக இருந்தது. இந்த மஸ்ஜித் நிறைய போராட்டங்களுடன் கட்டப்பட்டது. அந்த நேரத்தில், போக்குவரத்து இல்லை,. எனவே மரம் பஞ்ச்கூர நதி வழியாக கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் பெரிய மற்றும் பெரிய மரங்களை எல்லாம் டிர்  ஆற்று நீரில் இறக்கி டைமர்காராவில் சேகரிப்பார்கள். பெஷாவரின் தெஹ்கல் பகுதியிலிருந்தும் மர்தானின் லண்ட்க்வாரிலிருந்தும் தங்கள் திறமைகளுக்குப் பெயர் பெற்ற கைவினைஞர்கள் அழைத்து வரப்பட்டு, உட்புறத்தை இன்னும் வரையறுக்கும் விரிவான மரவேலைகளைச் செய்தனர்.

                                            =======================

"பல உள்ளூர்வாசிகளுக்கு, ரமழான் மாதத்தில் பாபா ஜீ மஸ்ஜித்துக்குச் செல்வது ஒரு தலைமுறை பாரம்பரியப் பழக்கமாக இருந்து வருகிறது. மரக் கட்டமைப்பிற்குள் தொழுகை செய்வது ஒரு குறிப்பிட்ட அமைதி உணர்வைத் தருகிறது. மரத்தின் அழகு, மரக் கட்டுமானத்தில், ஆன்மா இங்கே மகிழ்ச்சியாக உணர்கிறது"

                                            =======================

மஸ்ஜித் கட்டடப் பணிகள் முடிக்கப்பட்ட பிறகு, பாபா ஜீ சப் (மியான் குல் முஹாயுதீன்) 12 ஆண்டுகள்  தொடர்ந்து தொழுகை நடத்தினார். மஸ்ஜித்தின் உயரம் 17 அடி (5 மீட்டர்), மற்றும் கல் சுவரின் அகலம் 3 புள்ளி 5 அடியாகும். பிரதான மண்டபம் உள்ளே சுமார் 500 வழிபாட்டாளர்களையும், முற்றத்தில் 800 பேர் வரை வழிபடுபவர்களையும் தங்க வைக்கிறது. சிமென்ட், ஓடுகள் மற்றும் பளிங்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி நவீன நீட்டிப்புகள் விரிவாக்கப்பட்ட கொள்ளளவைக் கொண்டிருந்தாலும், அசல் மர மண்டபம் மஸ்ஜித்தின் கட்டடக்கலை மற்றும் ஆன்மீக இதயமாக உள்ளது.

பழங்கால அழகான வேலை  :

இயந்திரங்களுக்கு முந்தைய கைவினைத்திறனால் உருவாக்கப்பட்ட காரணத்தால், மஸ்ஜித், பல பார்வையாளர்களால் ஈர்க்கப்படுகிறது.. இங்கே மர வேலைகள் விரிவான, கடின உழைப்புடன் செய்யப்பட்டன. அந்த நேரத்தில், கோப்புகள், உளி மற்றும் ஸ்க்ரூடிரைவர்களைப் பயன்படுத்தி கையால் செய்யப்பட்டன. இப்போது இயந்திரங்களின் காலம். அதனால் பணிகள் எல்லாம் வேகமாக செய்யப்படுகிறது. ஆனால் மஸ்ஜித்தின் இந்த வேலைகள் அனைத்தும்  கையால் செய்யப்பட்டது. எவ்வளவு நேரம் எடுத்திருக்கும் என்பதை ஏக இறைவனுக்குத் தான் தெரியும். இது ஒரு வகையான பழங்கால அழகான வேலை. எனவே பலர் இதைப் பார்க்க ஆர்வத்துடன் வருகிறார்கள். மஸ்ஜித்தைச் சுற்றி நவீன வளர்ச்சி இருந்தபோதிலும் அதன் சூழல் மாறாமல் உள்ளது. அதனால் டைமர்கரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து தொழுகைசெய்கிறார்கள்.

மேலும், இஸ்லாமிய மார்க்கப் போதனை பாடங்களும், நீட்டிக்கப்பட்ட குர்ஆன் ஓதுதல்களும் மஸ்ஜித்தின் ரமழான் மரபுகளில் நீண்ட காலமாக எவ்வாறு ஒரு பகுதியாக இருந்து வருகின்றன.  கடந்த காலத்தில், தர்சி குர்ஆனி இருந்தது. இப்போதும் அப்படித்தான். கத்முல்-குர்ஆன் (தராவீஹ்வில்) ரமழானில் செய்யப்படுகிறது. மேலும், மதரஸா மாணவர்கள் உள்ளனர். இதனால் பலர்  இங்கு நீண்ட காலமாக தொழுகை செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள். 

மரக் கட்டமைப்பிற்குள் தொழுகை செய்வது ஒரு குறிப்பிட்ட அமைதி உணர்வைத் தருகிறது. மரத்தின் அழகு, மரக் கட்டுமானத்தில், ஆன்மா இங்கே மகிழ்ச்சியாக உணர்கிறது. அதன் அலங்காரம் அழகாக இருக்கிறது. இதனால் 120 ஆண்டுகள் பழமையான மர மஸ்ஜித்,  ரமழானில் வழிபாட்டாளர்களையும், பார்வையாளர்களையும் ஈர்த்து நிரம்பி வழிகிறது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்