திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
அளித்த தேநீர் விருந்தில்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
தலைவர் செல்வபெருந்தகை உரை...!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
அளித்த தேநீர் விருந்தில்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
தலைவர் செல்வபெருந்தகை உரை...!
தேநீர் விருந்தில் உரை...!
மதச்சார்பற்ற கூட்டணியில் மாபெரும் கூட்டணி அமைத்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடைபெறும் தேர்தலுக்கு அமைக்கப்பட்டுள்ள கூட்டணி புதிதாக அமைக்க அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல.
தொடர்ந்து இரண்டு நாடாளுமன்றம் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் , உள்ளாட்சி அமைப்பு தேர்தல் மாபெரும் கூட்டணி அமைத்து, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய அளவில் இல்லாத வகையில் இவ்வளவு ஆண்டு காலம் தொடர் இருக்கக் கூடிய மதச்சார்பற்ற கூட்டணி அமைந்திருக்கிறது.
இது உள்ளபடியே பாராட்டிற்குரியது மகிழ்ச்சிக்குரியது.
அப்படிப்பட்ட மதச்சார்பற்ற கூட்டணியை 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்கிறது.
எப்படி களம் காண இருக்கிறோம், கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது குறித்து கலந்து பேசி முடிவு எட்டியவுடன் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
எல்லாவற்றையும் கடந்து இந்த கூட்டணியை அமைத்திருக்கிறோம். ஏற்கனவே இருந்த கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இந்த கூட்டணியை வெற்றிகரமாக அமைத்திருக்கிறோம்.
என்னுடைய அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி.
மனு தாக்கல்...!
த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
எவரையும் திருத்த நினைக்காதீர்கள்.
மீறி அதற்காக முயற்சி செய்தால்
தோற்றுவிடுவீர்கள்.
காலம் அவர்களை திருத்திவிடும்.
இல்லையேல், நிச்சயம் காலம்
அவர்களுக்கு உணர்த்திவிடும்.
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத்
தேர்தலில், இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பாபநாசம் தொகுதி வேட்பாளர் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான், வாணியம்பாடி வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் ஆகியோருக்கு நான் எழுதிய 'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும் 'இந்திய முஸ்லிம்கள்-பாகம் 1' ஆகிய நூல்களை வழங்கி வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சி அடைந்த இனிய தருணம்...!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் :
களம் காணும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இரண்டு வைரங்கள்....!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பாகவே படுவேகத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்க இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், அந்த வெயிலுக்கு நிகராக தற்போதே அரசியல் களம் சூடுபிடித்து விறுவிறுப்பு அடைந்துள்ளது. திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.
அதன்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கமும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் தனிச் சின்னத்தில், அதாவது தங்களது சின்னமான ஏணிச் சின்னத்தில் போட்டியிடுகிறது. தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர்களின் நேர்காணலுக்குப் பிறகு இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
முன்னணி தலைவர்களின் தியாகம் :
இ.யூ.முஸ்லிம் லீகின் வேட்பாளர்கள் தேர்வில் ஒரு சிறப்பு அம்சம் என்னெவென்றால், இயக்கத்தின் முன்னணி தலைவர்கள் யாரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. தலைவர் பேராசிரியர், பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் யாரும் தேர்தலில் போட்டியிடாமல், புதியவர்களுக்கு வாய்ப்பு அளித்து இருக்கிறார்கள். உண்மையிலேயே இதுஒரு மிகப்பெரிய தியாகம் என்றே கூற வேண்டும். பிற இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் பட்டியலை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், தலைவர், பொதுச் செயலாளர் என மூத்த தலைவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தில், சமுதாய நோக்கம் மட்டுமே கருத்தில் கொண்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு நிலை பிற இயக்கங்களில் நாம் காண முடியவில்லை. இதன்மூலம் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் இயங்கும் இ.யூ.முஸ்லிம் லீக் இயக்கம், எப்போதும் சமுதாயம் உயர வேண்டும் என்ற நோக்கத்தில் சுய விருப்பங்களை ஒதுக்கிவிட்டு, ஆசைகளை புறந்தள்ளிவிட்டு, வேட்பாளர்களை தேர்வு செய்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சில நேரங்களில் சில தியாகங்களை நாம் செய்துதான் ஆக வேண்டும். அப்போது தான், சமுதாயத்திற்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். அந்த வகையில், இ.யூ.முஸ்லிம் லீக் இயக்கத்தின் முன்னணி தலைவர்களின் தியாகங்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும். அந்த தலைவர்களின் நினைத்து நாம் பெருமை அடைய வேண்டும்.
ஆடுதுறை ஏ.எம் ஷாஜஹான் :
இதுஒருபுறம் இருக்க, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த இரண்டு வேட்பாளர்களும் உண்மையிலேயே இரண்டு வைரங்கள் என்றே கூற வேண்டும்.
அந்த வகையில், பாபநாசம் தொகுதியில் போட்டியிடும் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளர் ஆவார். இவருடைய சொந்த ஊர் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை. 1968ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் முகமது யாசின் (ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்), தாயார் பெயர் ஜெகபர்நிஷா.
இவரது துணைவியார் பெயர் ஷமிம் நிஷா, ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சி மன்ற 10வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் (1986 - 1989) பி.எஸ்சி பட்டம் பெற்றவர். கணினி அறிவியலில் பட்டயப் படிப்பை முடித்துள்ளார். சிறு வயது முதலே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிலே பணியாற்றி வருபவர்.
மேலும், தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ள திருமங்கலக்குடியில் அஸ்-ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவன செயலாளராக கல்வி சேவையாற்றி வருகிறார். தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் உரையாடும் ஆற்றல் பெற்றவர். தஞ்சை மாவட்டம், ஆடுதுறை முஹையத்தீன் ஆண்டவர் பள்ளிவாசலில் தொடர்ந்து 15 ஆண்டுகள் செயலாளராக சேவையாற்றியவர். திருவிடைமருதூர் வட்டாரத்திற்கு உட்பட்ட 30 மஹல்லா ஜமாஅத்தினுடைய கூட்டமைப்பிற்கு தலைவராக சேவையாற்றி வருகிறார்.
====================
"2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு வேட்பாளர்களும் நிச்சயம் சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டியவர்கள். அதற்கு முழு தகுதிப் பெற்றவர்கள்.தமிழகச் சட்டப்பேரவையில் சமுதாயத்தின் குரல் ஒலிக்க வேண்டும். அதற்கு ஆடுதுறை ஏ.எம் ஷாஜஹான், வாணியம்பாடி எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் ஆகிய இரண்டு பேரும் முறையே பாபநாசம், வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும்"
====================
அத்துடன், உளுந்தூர்பேட்டை அருகே உருவாகி வரும் ஸாலிஹீன் மருத்துவ கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறுவன அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினராக பொறுப்பேற்று சேவையாற்றி வருகிறார். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனங்களில் பங்குதாரராக இருக்கிறார். சவூதி அரேபியா, அமீரகம், குவைத், பஹ்ரைன், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்.
கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டினை வரவேற்பு குழு தலைவராக பொறுப்பேற்று பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சிறப்புரையோடு தமிழகமே வியக்கத்தக்க வகையில் சிறப்பாக நடத்தி காட்டினார். 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டவர்.
எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் :
இதேபோன்று, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதியில் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாபநாசம் தொகுதி வேட்பாளர் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான் எப்படி இ.யூ.முஸ்லிம் லீகில் தம்மை இணைத்துக் கொண்டு, சமுதாய நோக்கத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறாரோ, அதேபோன்று, எஸ்.எஸ்.பி.சையத் பாரூக்கும், பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்து, இ.யூ.முஸ்லிம் லீகிற்காக தம்முடைய வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டு, தொடர்ந்து இயக்கத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார்.
இ.யூ.முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் உறுப்பினர், மாநில பொதுக்குழு உறுப்பினர் என இயக்கத்தில் பல பொறுப்புகளில் உள்ள சையத் பாரூக், வாணிம்பாடி, நகராட்சியின் முன்னாள் நகர் மன்றத் துணைத் தலைவராக சிறப்பாக பணியாற்றி மக்களின் மனங்களை வென்றவர் ஆவார். வாணியம்பாடியில் உள்ள எஸ்.எஸ்.பி.குரூப் தொழில் நிறுவனங்களின் சேர்மனாக இருக்கும் சையத் பாரூக், பல்வேறு சமுதாயப் பணிகளிலும் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.
பாரம்பரியமான வாணிம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் ஏற்கனவே 2016 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட இவர், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு இழந்தார். தற்போது இ.யூ.முஸ்லிம் லீகின் வேட்பாளராக தேர்தலில் மீண்டும் களம் இறங்கியுள்ளார். வரும் தேர்தலில் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் நிச்சயம் வெற்றிபெற்று வாணியம்பாடியில் புதிய வரலாறு படைப்பார். அதன்மூலம் வாணியம்பாடி தொகுதி குறித்து இருந்த தவறான எண்ணங்களை, சிந்தனைகளை அவர் நிச்சயம் வீழ்த்துவார்.
இரண்டு வைரங்களின் வெற்றி உறுதி :
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு வேட்பாளர்களும் நிச்சயம் சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டியவர்கள். அதற்கு முழு தகுதிப் பெற்றவர்கள். இரண்டு வேட்பாளர்கள் குறித்து நாம் மேலே குறிப்பிட்ட தகவல்கள் மூலம், இரண்டு பேரும் உண்மையிலே வைரங்கள் என்றே நீங்கள் உணர்ந்துகொள்ளலாம். அப்படி தான் நாம் கூற வேண்டும். தமிழகச் சட்டப்பேரவையில் சமுதாயத்தின் குரல் ஒலிக்க வேண்டும். அதற்கு ஆடுதுறை ஏ.எம் ஷாஜஹான், வாணியம்பாடி எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் ஆகிய இரண்டு பேரும் முறையே பாபநாசம், வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும்.
இந்த இரண்டு பேரின் வெற்றி என்பது அவர்களின் தனிப்பட்ட வெற்றியாக சமுதாயம் கருதக் கூடாது. சமுதாயத்தின் வெற்றியாக கருதி, அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். ஏக இறைவனிடம் நாள்தோறும் துஆ கேட்க வேண்டும். ஏக இறைவன் விரும்பிவிட்டால், இரண்டு பேரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இன்ஷா அல்லாஹ், நிச்சயம் ஏக இறைவன், ஆடுதுறை ஏ.எம் ஷாஜஹான், வாணியம்பாடி எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் ஆகியோருக்கும் வெற்றிக் கனியை கண்டிப்பாக வழங்குவான் என்று உறுதியாக நம்புவோம். அந்த நம்பிக்கையுடன் தேர்தல் களத்தில் இருவரின் வெற்றிக்காக கடுமையான உழைப்பை நல்க முன்வருவோம். அப்படி நாம் உறுதியாக நம்பிக்கைக் கொண்டு செயல்பட்டால், கடுமையாக உழைத்தால், தேர்தல் களத்தில் நடக்கும் சதிகளை முறியடித்தால், இந்த இரண்டு வைரங்களின் வெற்றி உறுதி என்று இப்போதே அடித்துக் கூறலாம். இன்ஷா அல்லாஹ், தமிழக சட்டப்பேரவையில் நிச்சயம் இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர்களின் குரல் இனி நிச்சயம் ஒலிக்கும். அதன்மூலம் சமுதாயத்திற்கு புதிய விடியல் பிறக்கும்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
We always work
for a better tomorrow.
But when tomorrow comes,
instead of enjoying it,
we again think of a
better tomorrow.
Let's have a better day.
ஆசைகளை வளர்த்துக்
கொள்ளுங்கள். தவறில்லை.
ஆசைகளுடன் திறமைகளையும்
வளர்த்துக் கொண்டால்
வாழ்க்கை இனிமையாக ஜொலிக்கும்.
மேலும் உங்களை நீங்களே சரி
செய்துகொள்ள முயலுங்கள்.
அதைவிட சிறந்த மாற்றம்
வேறொன்றும் இல்லை.
முதுகுளத்தூர். காம்
இணையதள ரமழான் சிறப்பு மலரில்,
நான் எழுதிய
"புனித ரமழானில் நடைபெறும்
பன்முக கலாச்சார சந்தை"
கட்டுரை வெளிடப்பட்டுள்ளது.
எனது
' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி"
மற்றும்
'இந்திய முஸ்லிம்கள் - பாகம் 1'
ஆகிய இரண்டு நூல்களை,
ஆற்காடு இளவரசர் நவாப் முஹம்மது அலி,
வழக்கறிஞர் முஹம்மது வசீயுத்தீன் தாத்னி சாஹிப் ஆகியோருக்கு வழங்கி,
அன்பையும் வாழ்த்தையும் பெற்ற இனிய தருணம்.
நூலுக்கு தோழர்கள் அமோக வரவேற்பு...!
"ஒரு விருந்தோம்பல் மூலம் உலக மக்களை வியக்க வைத்த மஸ்ஜிதுன் நபவி "
புனித ரமழான் மாதம் விடைப்பெற்று சென்று விட்ட நிலையில் கூட, அந்த மாதத்தின் தாக்கம் இன்னும் இஸ்லாமியர்கள் மத்தியில் இருந்து வருகிறது. நோன்பு காலத்தில் கிடைத்த ஆன்மீக அனுபவங்கள் முஸ்லிம்களை மிகச் சிறந்த மனிதர்களாக மாற்றிக் கொண்டே இருக்கிறது. ஓர் இறைக் கொள்கையில் எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்ற திருக்குர்ஆனின் கட்டளைப்படி, முஸ்லிம்கள் ஈமானில் மிகமிக கொள்கை உறுதியுடன் இருந்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் சாத்தான் மனதை குழப்பினாலும், ரமழான் மாதத்தில் கிடைத்த அற்புதமான ஆன்மீக நெறிமுறைகள், அனுபவங்கள் மூலம் சாத்தனை விரட்டிவிட்டு, புனித பாதையில் இஸ்லாமியர்கள் நடைபோட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
புனித ரமழான் மாதத்தில் உலகில் உள்ள அனைத்து மஸ்ஜித்துகளிலும் இஃப்தார் விருந்தோம்பல் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். பிரமாண்ட மஸ்ஜித்துகள் முதல் மிகமிக சிறிய மஸ்ஜித்துகள் வரை அனைத்திலும் நோன்பாளிகளுக்கு அழகிய முறையில் இஃப்தார் விருந்து அளிக்கப்படுகிறது. இந்த இஃப்தார் விருந்தில் அனைவரும் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் எதுவும் இல்லாமல், ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி, இஃப்தார் விருந்தை உண்டு மகிழ்ச்சி அடையும் அற்புதமான சம்பவங்கள் ரமழான் முழுவதும் நடைபெறுவதை நாம் காணலாம். இஃப்தார் விருந்து அளிப்பது தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று பணக்காரர்கள் மட்டுமல்ல, ஏழைகளும் நினைக்கிறார்கள். அதன் காரணமாக தங்கள் வசதிக்கு ஏற்ப, இஃப்தார் விருந்துகளை நடத்தி, ஆனந்தம் அடைகிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் புனித மக்காவில் உள்ள மக்கா ஹரம் ஷரீபில் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இதேபோன்று, சவூதி அரேபியாவின் மதினா நகரில் உள்ள மஸ்ஜித்துன் நபவியில் நடைபெறும் இஃப்தார் விருந்தோம்பல் இஸ்லாமியர்களின் மகிழ்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது என்றே கூறலாம். இந்த இரண்டு புனித மஸ்ஜித்துகளில் நடைபெறும் இஃப்தார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை இஸ்லாமியர்கள் தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்றே கருதுகிறார்கள். அதன் காரணமாக புனித ரமழானில் உம்ரா பயணம் மேற்கொள்வதை உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் மிகவும் விரும்புகிறார்கள். அதன்படி உம்ரா பயணம் செய்கிறார்கள்.
சாதனை படைத்த இஃப்தார் விருந்து :
இப்படி உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள், ரமழான் காலத்தில் மக்கா, மதீனா நகரங்களுக்கு ஆர்வத்துடன் வருவதால், அந்த நகரங்கள் களைகட்டி, மிகப்பெரிய அளவுக்கு மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அந்த வகையில் மதீனாவில் உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் உள்ள மஸ்ஜித்துன் நபவியில், இந்த ரமழானில் மிகப்பெரிய அளவுக்கு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மஸ்ஜித்துன் நபவியில் ரமழான் மாதம் முழுவதும் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட இஃப்தார் உணவுகள் நோன்பாளிகளுக்கு வினியோகிக்கம் செய்யப்பட்டு சாதனை நிகழ்த்த்தப்பட்டுள்ளது.
=======================
"புனித ரமழான் மாதத்தில் மதீனாவில் உள்ள மஸ்ஜித்துன் நபவியில், சுமார் ஒரு கோடி இஃப்தார் உணவுகள் வினியோகம் செய்யப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மதீனா மாநகரம், ஏக இறைவனின் அன்பை பெற்று மேலும் ஒரு புனித நகரமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது"
=======================
மஸ்ஜித்துன் நபவி மற்றும் அதன் முற்றங்களில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சேவை அமைப்பின் மூலம் இந்த உணவுகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன. இது, ரமழான் மாதத்தில் யாத்ரீகர்கள் மீது காட்டப்படும் அக்கறையைப் பிரதிபலிக்கும் வகையில், இஃப்தார் உணவுகள் மிக உயர்ந்த தரம் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளின்படி பரிமாறப்படுவதை உறுதி செய்கிறது.
மனிதாபிமான சேவை :
ஒற்றுமை மற்றும் மனிதாபிமான சேவையின் விழுமியங்களை மேம்படுத்துவதற்கும், யாத்ரீகர்கள் தங்கள் மார்க்கக் கடமைகளை ஒரு பாதுகாப்பான மற்றும் ஆன்மீகச் சூழலில் நிறைவேற்றுவதற்கு வழிவகுப்பதற்கும் இந்த இஃப்தார் விருந்தோபல் அற்புதமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது என்றே கூற வேண்டும். இத்தகைய முயற்சிகள் மதீனாவில் உள்ள பல்வேறு தொடர்புடைய அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. மதீனாவில் உள்ள பொது ஆணையத்தின் புள்ளி விவரங்களின்படி, மொத்தம் மொத்தம் 90 லட்சத்து 15 ஆயிரத்து 322 இஃப்தார் உணவுகளை விநியோகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதீனா மக்களிடையே இயற்கையிலேயே விருந்தோம்பல் பண்பு இருந்து வருவதால், அவர்கள், எப்போதும் மதீனாவிற்கு வரும் இஸ்லாமியர்களை அன்புடன் வரவேற்று உபசரிப்பு செய்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். அந்த வகையில் புனித ரமழானில் மிகப்பெரிய அளவுக்கு இஃப்தார் உணவுகள் வினியோகம் செய்யப்பட்டு, உலக மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்றே கூற வேண்டும்.
இந்த இஃப்தார் விருந்தோம்பல் அனைத்தும், ஏக இறைவனின் அன்பை பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் செய்யப்படும் ஒரு அழகிய செயலாகும். அந்த வகையில், ரமழான் மாத்தில் நபிகள் நாயகம் (ஸல்) மஸ்ஜித்தில் சுமார் ஒரு கோடி அளவுக்கு இஃப்தார் உணவுகள் நோன்பாளிகளுக்கு அளிக்கப்பட்டு, மதீனா மாநகரம், ஏக இறைவனின் அன்பை பெற்று மேலும் ஒரு புனித நகரமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
சண்டைக்குப் பின்
மன்னிப்பு கேட்பவர்கள்
எல்லோரும் தவறு
செய்தவர்கள் அல்ல.
நேசித்த உறவை
இழக்க மனமில்லாமல் தான்
மன்னிப்பு கேட்க
விரும்புகிறார்கள்...!
என்னுடைய
'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி'
மற்றும்
' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'
ஆகிய இரண்டு நூல்களை,
தோழர்களுக்கு வழங்கி
மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.
தோழர்கள் அமோக வரவேற்பு...!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழத்தின் வருகையால் சிறுபான்மையின மக்களின் வாக்குகளில் எந்தப் பிளவும் ஏற்படாது...!
இ.யூ.முஸ்லிம் லீக் மட்டுமே முஸ்லிம்களின் ஒரே பாரம்பரியமான இயக்கம்...!!
தி இந்து ஆங்கில நாளிதழக்கு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்பு நேர்காணல்....!!!
சென்னை, மார்ச்.27- நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக போட்டிடுவதால், சிறுபான்மையின மக்களின் வாக்குகளில் எந்தப் பிளவும் ஏற்படாது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக வெற்றிக்கழகம் இன்னும் தேர்தலில் தனது வலிமையை நிரூபிக்கவில்லை என்றும் விஜய் சினிமா கவர்ச்சியை அடிப்படையாக கொண்டு, தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்றும் எனவே சட்டப்பேரவைத் தேர்தலில் அவரால் மிகப்பெரிய அளவுக்கு தாக்கம் ஏற்படுத்த முடியாது என்றும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி,இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தி இந்து ஆங்கில நாளிதழில் செய்தியாளர் எஸ்.கணேசனுக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதன் முழு விவரம் வருமாறு:
கேள்வி : திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையே நடக்கும் தேர்தல் என குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஊழல் மற்றும் குடும்ப ஆட்சியை தமிழ்நாட்டில் இருந்து வீழ்த்தப்பட வேண்டும் என கூறியுள்ளார். இத்தகைய சூழ்நிலையில் இந்த தேர்தல் உங்களுடைய பார்வையில் எந்தளவுக்கு முக்கியத்துவமாக நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில் : ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளில் நடக்கும் அனைத்து தேர்தல்களும் மிகவும் முக்கியமானதாகவே நாங்கள் கருதுகிறோம். தற்போது நடக்கும் தேர்தலைப் பொருத்தவரை, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, மற்ற அணிகளை விட மிகவும் வலிமையாக இருப்பதாகவே நாங்கள் உறுதியாக நினைக்கிறோம்.
திமுகவின் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் பலன் அடையும் வகையில் நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள், தொழிலாளர்கள், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அனைவரும் திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான பலன்களை பெற்றுள்ளார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொதுவாக ஒவ்வொரு தேர்தலின்போதும், ஆளும் கட்சிக்கு எதிராக ஒரு மனநிலை மக்கள் மத்தியில் இருக்கும். ஆனால், முதலமைச்சரின் சிறப்பான நிர்வாகம், திட்டங்கள் நிறைவேற்றம் ஆகியவற்றால், திமுக அரசுக்கு எதிராக எந்த எதிர்ப்பு அலையும் வீசவில்லை. மாறாக ஆதரவான நிலைதான் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
கேள்வி : திமுக அரசு மீது ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறதே?
பதில் : சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பது ஒவ்வொரு தேர்தலின்போதும் எழுப்பட்டு வருவது வாடிக்கையாகவே இருக்கிறது. இந்த விவகாரத்தில் திமுக அரசு சரியான உறுதியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழலைப் பொருத்தவரை, நாடு முழுவதும் இதுபோன்ற போக்கும் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன.
கேள்வி : இ.யூ.முஸ்லிம் லீக் இயக்கம் திமுகவுடன் நீண்ட காலமாக நல்ல தொடர்புள்ள இயக்கம். கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும் இயக்கம். அப்படி இருந்தும் உங்களுக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஐந்து தொகுதிகளை கேட்ட நிலையில், 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், உங்களுடைய இயக்கத் தொண்டர்கள் இதனை ஏற்றுக் கொண்டார்களா?
பதில் : தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து நாங்கள் திமுகவுடன் நல்ல உறவுகளை பேணி வருகிறோம். இதற்கு முக்கிய காரணம் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கையில் அவர்கள் எப்போதும் உறுதியாக இருந்து வருகிறார்கள். திருமூலரும் இதைத் தான் சொல்லி இருக்கிறார். திருக்குர்ஆன் கூட, ஓர் இறைக்கொள்கையை மிகவும் உறுதியாக சொல்லி உள்ளது. இதன் காரணமாக நாங்கள் உயர்ந்த கொள்கையுடன் கூடிய திமுகவுடன் தொடர்ந்து உணர்ச்சிபூர்வமாக உறவுகளை வைத்து அதை உறுதியாக பேணி வருகிறோம்.
தொகுதி ஒதுக்கீடு பொருத்தவரை, திமுகவில் முன்பு இ.யூ.முஸ்லிம் லீக் மட்டுமே கூட்டணி வைத்து இருந்தது. அதன் காரணமாக எங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கீடு செய்தார்கள். தற்போது, முஸ்லிம் இயக்கங்களைச் சேர்ந்த பல கட்சிகள் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளன. குறிப்பாக நான்கு ஐந்து கட்சிகள் இணைந்துள்ளன. முன்பு திமுக கூட்டணியில் நான்கு ஐந்து கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இடம்பெற்று இருக்கும். ஆனால் தற்போது 20க்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன. எனவே கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஓதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதால், மற்ற கட்சிகள் தியாகம் செய்ய வேண்டும். தொகுதிகளை தானம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.
கேள்வி : திமுகவின் இந்த நிலைப்பாட்டால் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தொண்டர்கள் அதிருப்தி அடைவார்கள் அல்லவா?
பதில் : அதில் சந்தேகமே இல்லை. நிச்சயம் அதிருப்தி இருக்கும். எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள். அதிருப்தியுடன் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் சமுதாய மக்களிடம் உண்மை நிலையை எடுத்துக் கூறி இருக்கிறோம். அதனை அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
கேள்வி : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரசியலில் இறங்கியுள்ளது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள் ?
பதில் : தமிழக வெற்றிக் கழகம் இன்னும் தனது வலிமையை நிரூபிக்கவில்லை. நடிகர் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது. சினிமா கவர்ச்சியால், பெண்கள், இளைஞர்கள் ஆகியோர் நடிகர் விஜய்யின் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள்.
கேள்வி : ஆனால், நடிகர் விஜய் தனது கட்சியால், சிறுபான்மையின மக்களின் வாக்குகள் பிளவுப்படும் என்ற சந்தேகம் இருந்து வருகிறதே?
பதில் : அதுபோன்ற ஒரு பிளவு நிச்சயம் ஏற்படாது. தமிழக வெற்றிக் கழகத்திற்கும் மற்ற கட்சிகளைப் போல ஒருசில முஸ்லிம்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த சமுதாயமே விஜய்க்கு ஆதரவாக இல்லை. இதன் காரணமாக திமுக தலைமையிலான அணிக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாது. இந்திய முஸ்லிம்களின் ஒரே பாரம்பரியமான இயக்கமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்து வருகிறது. எனவே முஸ்லிம் வாக்குகள் நிச்சயம் விஜய் கட்சிக்கு கிடைக்காது.
கேள்வி : திமுக தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் அடிப்படையாக கொண்டு, தேர்தலை சந்தித்து வருவதாக ஒரு விமர்சனம் இருந்து வருகிறதே. இதன்மூலம் மற்ற பிச்சினைகளை மறைக்க திமுக முயற்சி செய்வதாக கூறப்படுகிறதே?
பதில் : திமுக தமிழ் மொழிக்காக தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறது. தமிழ் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்க பல காலமாக குரல் கொடுத்து வருகிறது. எனவே இதுபோன்ற விமர்சனங்கள் அனைத்தையும் புறம்தள்ளிவிட வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டுமே தமிழ் மொழிக்காக திமுக குரல் கொடுக்கவில்லை. தொடர்ந்து குரல் எழுப்பி போராடிக் கொண்டே இருக்கிறது.
கேள்வி : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இ.யூ.முஸ்லிம் லீகின் நிலைப்பாடு என்ன?
பதில் : திருப்பரங்குன்றத்தில் தர்ஹா மற்றும் கோவில் இடையே நீண்ட காலமாக எந்தவித பிரச்சினையும் இல்லை. எங்களைப் பொருத்தவரை, தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை நாங்கள் மதிப்போம்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
- நன்றி : தி இந்து ஆங்கில நாளிதழ் 27.03.2026
- தமிழில் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
சந்தோஷம் என்பது
பிரச்சினைகள் இல்லாத
வாழ்க்கையை
வாழ்வதில் இல்லை.
எவ்வளவு பிரச்சினைகள்
வந்தாலும் அதை
சமாளித்து
வாழ்வதில்தான் உள்ளது.
என்னுடைய
'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி'
மற்றும்
' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'
ஆகிய இரண்டு நூல்களை,
இ.யூ.முஸ்லிம் லீக் மூத்த முன்னோடிகள்
வாணியம்பாடி எஸ்.டி.நிஸார் அகமது,
நரி முஹம்மது நயீம் ஆகியோரிடம் வழங்கி,
வாழ்த்து பெற்று மகிழ்ச்சி
அடைந்த இனிமையான தருணம்.
தோழர்கள் அமோக வரவேற்பு...!
என்னுடைய
'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி'
மற்றும்
' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'
ஆகிய இரண்டு நூல்களை,
என்னுடைய மூத்த சகோதரர்
ஜனாப் காஜா மொய்தீன் அவர்களிடம்
வழங்கி, வாழ்த்து பெற்று மகிழ்ச்சி
அடைந்த இனிமையான தருணம்.
தோழர்கள் அமோக வரவேற்பு...!
" மதீனாவில் உயர்ந்த வாழ்க்கைத் தரம் "
உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள், தங்களுடைய வாழ்நாளில் கண்டிப்பாக காண வேண்டும் என ஆசை கொள்ளும், கனவுக் காணும் நகரங்கள் இரண்டாகும். அதன்படி, ஒன்று மக்கா மற்றொன்று மதீனா ஆகியவை முக்கியமானவையாகும். இதன் காரணமாக இந்த புனித நகரங்களுங்களுக்கு வரும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. புனித உம்ரா பயணத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையுடனும், புனித ஹஜ் பயணத்தை தங்களது வாழ்நாளில் நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவலுடனும் ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு படையெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், மக்கா மற்றும் மதீனாவில் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறது? மக்களின் வாழ்த்தைத் தரத்தை மேம்படுத்த சவூதி அரேபிய அரசு எடுத்துவரும் பணிகள் என்ன? என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். உலகிலேயே மிக உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நகரமாக மதீனா இருந்து வருகிறது. அதற்காக தொடர்ந்து, சவூதி அரசு தொடர் முயற்சிகளையும் நடவடிக்கைகயும் எடுத்துக் கொண்டே இருக்கிறது.
மதீனாவில் வாழ்க்கைத் தரம் :
மதீனாவில் உயர்த்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதீனா பிராந்திய மேம்பாட்டு ஆணையம், இயக்கம் மற்றும் உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் பாதைகள் மற்றும் பொது இடங்களை உருவாக்குவதன் மூலம் புனித நகரத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. மதீனா குடியிருப்பாளர்களிடையே ஆரோக்கியமான, மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதே இந்த முயற்சிகளின் நோக்கமாகும்.
திட்டங்களில் நன்கு பராமரிக்கப்படும் பாதசாரி பாதைகள், பாதுகாப்பான மிதிவண்டி பாதைகள், பிரத்யேக மிதிவண்டி நிலையங்கள் மற்றும் வெறுங்காலுடன் நடந்து செல்லும் பகுதிகள் ஆகியவை அடங்கும்.
பொது சுகாதாரம் மேம்பாடு :
இந்த அம்சங்கள் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு தினசரி உடற்பயிற்சிக்கான பல்வேறு விருப்பங்களை வழங்குகின்றன. அத்துடன், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை தொடர்பான நோய்களைத் தடுப்பதற்கும் அதிகாரசபையின் உத்தியின் ஒரு பகுதியாகும்.
======================
"மதீனாவில் உள்ள கிப்லாத்தான் மஸ்ஜித் மற்றும் கலாச்சார மையத்திற்கு கடந்த ஆண்டில்
மட்டும் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்
சென்று வந்துள்ளனர். இது நகர்ப்புற, கலாச்சார மற்றும் சுற்றுலா தலமாக நகரத்தின் வளர்ந்து
வரும் அந்தஸ்தைப் பிரதிபலிக்கிறது"
======================
சுற்றுலாவை மேம்படுத்துதல், பார்வையாளர் தங்குமிடங்களை நீட்டித்தல் மற்றும் வாகனங்களை நம்பியிருப்பதைக் குறைத்தல் ஆகியவற்றில் அதிகாரசபை கவனம் செலுத்துகிறது. இந்த முயற்சிகள் நகரங்களை நவீனமயமாக்குவதற்கான பரந்த நகர்ப்புற மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இந்த அணுகுமுறை பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான இயக்கம் விருப்பங்களை ஊக்குவிக்கிறது.
கிப்லாத்தான் மஸ்ஜித் :
இதுஒருபுறம் இருக்க மதீனாவில் உள்ள கிப்லாத்தான் மஸ்ஜித் மற்றும் கலாச்சார மையம், கடந்த 2025 ஆம் ஆண்டில் 80 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்து ஈர்த்துள்ளது. அதன்படி, மதீனாவில் உள்ள கிப்லாத்தான் மஸ்ஜித் மற்றும் கலாச்சார மையத்திற்கு கடந்த ஆண்டில் மட்டும் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சென்று வந்துள்ளனர். இது நகர்ப்புற, கலாச்சார மற்றும் சுற்றுலா தலமாக நகரத்தின் வளர்ந்து வரும் அந்தஸ்தைப் பிரதிபலிக்கிறது.
சவூதி விஷன் 2030 இன் கீழ் மதீனா பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் தலைமையிலான வளர்ச்சி முயற்சிகளை வாக்குப்பதிவு பிரதிபலிக்கிறது. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், கலாச்சார மையங்களின் ஈர்ப்பை மேம்படுத்துதல் மற்றும் பார்வையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான சேவை செயல்திறனை அதிகரிப்பதே இந்த பணியின் நோக்கமாகும்.
பார்வையாளர் அனுபவத்தை வளப்படுத்த மதீனாவின் முக்கிய திட்டங்களில் இந்த மையம் ஒன்றாகும். இது நகர்ப்புற நிலப்பரப்பை மேம்படுத்தியுள்ளது. அத்துடன், நவீன சேவைகளுடன் ஆன்மீக பரிமாணத்தை இணைக்கும் ஒருங்கிணைந்த அமைப்பை வழங்குகிறது. இது நகரத்தின் மத மற்றும் வரலாற்று நிலையை பிரதிபலிக்கிறது.
இவை அங்கீகரிக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களின் வெற்றியை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மேலும் சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தும். அத்துடன், தேசிய வளர்ச்சி வரைபடத்தில் மதீனாவின் இடத்தை வலுப்படுத்தும் நிலையான நகர்ப்புற முயற்சிகள் மற்றும் திட்டங்களில் தொடர்ச்சியான பணிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு முஸ்லிமும் தங்களது வாழ்நாளில் நிச்சயம் இந்த புனித நகரங்களை காண ஆசைக் கொள்ள வேண்டும். அதற்காக கனவு காண வேண்டும். ஏக இறைவனிடம் நாள்தோறும் துஆ கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். புனித மதீனா நகரின் வளர்ச்சியை கண்டு வியப்பு அடைய வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
A door is much smaller
when compared to a house.
A lock is much smaller
when compared to a door.
A key is the smallest of all,
yet it can open the big house.
Similarly thoughtful solutions
can solve major problems.
என்னுடைய
'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி'
மற்றும்
' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'
ஆகிய இரண்டு நூல்களை,
சமூக ஆர்வலர் ஆடிட்டர்
திரு.பொன்.தேவதாஸ் அவர்களிடம்
வழங்கி மகிழ்ச்சி அடைந்த
இனிமையான தருணம்.
தோழர்கள் அமோக வரவேற்பு...!
தைரியம் என்ற
ஒற்றை மந்திரம்
உள்ளத்தில் இருக்கும் வரை
வாழ்க்கைப் பயணத்தில்
பயமும் இல்லை.
பாரமும் இல்லை...!
என்னுடைய
'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி'
மற்றும்
' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'
ஆகிய இரண்டு நூல்களை,
சமுதாய உணர்வுள்ள தோழர்களுக்கு
வழங்கி மகிழ்ச்சி அடைந்த
இனிமையான தருணம்.
நூல்களுக்கு தோழர்கள் அமோக வரவேற்பு...
Never think hard about the past.
It brings tears.
Don't think more about the future.
It brings fears.
Live this movement with a smile.
It brings cheers.
Iran's conditions....!
Reported Iranian ceasefire conditions — described as extremely serious:
•Hand over Benjamin Netanyahu to the International Criminal Court
•Withdrawal to pre–October 7 lines
•Cancel Trump’s Gaza plan
•Lift all sanctions and release frozen assets
•Recognize Iran’s nuclear rights
•Withdraw from Lebanon, Syria, and Yemen
•Remove all U.S. bases from Arab countries
•Donald Trump must issue a public apology to Ali Khamenei
•Compensate Iran for all sanctions imposed
They concluded: “This is not a great matter before God.”
கடவுள் இருக்கிறாரா இல்லையா
என்பது சிலருக்கு சந்தேகமாக இருந்தாலும்,
கஷ்டம் வந்தவுடன்
கடவுளே என்று தான் சொல்கிறது மனது.
ஏக இறைவனிடம் வேண்டிக் கொள்கிறது.
கஷ்டத்தை மனிதனிடம் சொல்வதை விட
கடவுள் இருக்கிறார் என்று நம்பி அவரிடம்
சொல்வதே சிறந்தது. அது தான் நல்லது.
எனது
' இந்திய முஸ்லிம்கள் - பாகம் 1' நூலை ஆற்காடு இளவரசர் நவாப் முஹம்மது அலி ஆர்வத்துடன் படித்து மகிழ்ச்சி அடைந்த இனிய தருணம்.
ஆற்காடு நவாப் குடும்பத்தினரிடம் எனது நூலை அறிமுகம் செய்துவைத்த வழக்கறிஞர் முஹம்மது வசீயுத்தீன் தாத்னி சாஹிப் அவர்களுக்கு எமது பாராட்டுகள்.
நூலுக்கு தோழர்கள் அமோக வரவேற்பு...!
நல்ல கவுரவம்...!
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய மஸஜித்தில் கடந்த 40 ஆண்டுகளாக ரமழான் மாதம் முழுவதும் நோன்பாளிகளுக்கு சகோதர நேசத்துடன் அனைத்து வகைகளில் உதவிக்கரம் நீட்டி மகிழ்ச்சியோடு பணிவிடை செய்து அன்பை வெளிப்படுத்தி வரும் சிந்தி சமுதாய மக்களின் சூஃபிதார் இயக்கம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
அந்த வகையில் ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அலி சாஹிப் அவர்கள் சூஃபிதார் இயக்கத் தோழர்கள் அசோக் குப்சாந்தினி (Ashok khubchandani of Sufidar Trust) ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். அப்போது வழக்கறிஞர் முஹம்மது வசீயுத்தீன் தாத்னி ( Md.Wasiuddin Dadni), இமாம் சாஹிப் (Imam Sahib of Walajah Masjid) ஆகியோர் உடனிருந்தனர்.
துயரமான நேரத்தில் துணை நின்று
ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி..
என்னுடைய மூத்த சகோதரர் எஸ்.ஏ.அப்துல் கரீம் அவர்கள் 23.03.2026 அன்று காலமான செய்தியை அறிந்து, எனக்கு நேரிலும், செல்பேசி, வாட்ஸ் ஆப், முகநூல், எக்ஸ் வலைத்தளம், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமும் ஆறுதல் கூறி, சகோதரரின் மறுமைக்காக பிரார்த்தனை மற்றும் துஆ செய்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள் பல.
உங்களுடைய அன்பு, ஆறுதல் எனக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் நிச்சயமாக மன ரீதியாக நிம்மதியை தந்தது. மிக்க நன்றி.
எதிரிகளை பந்தாடும் ஈரான்....!
ஈரானின் எதிரிகளை துவம்சம் செய்யப்போகும் Project Reaper.
ஈரான் தற்போது 'புராஜெக்ட் ரீப்பர்' (Project Reaper) திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது, அதன் விளைவு என்ன என்பதை உலகம் விரைவில் உணரப்போகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் நடந்த, யாரும் கவனிக்காத சில விஷயங்களை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
ஈரான் தனது நிலத்தடி ஏவுகணை நகரத்தை (Missile City) வெளிப்படுத்தியுள்ளது.
ஏவுகணைகள், நடமாடும் ஏவுகணை ஏவுதளங்கள், ராக்கெட் அமைப்புகள் என அனைத்தும் ஒரு பிரம்மாண்டமான, மறைக்கப்பட்ட, மற்றும் சிதைக்கப்படாத நிலையில் காட்சியளிக்கின்றன.
அமெரிக்கா தனது வெற்றியைப் பறைசாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் இது நடந்துள்ளது.
'புராஜெக்ட் ரீப்பர்' (Project Reaper) என்பது உண்மையில் என்ன:
இது ஒரு இரு-கட்ட செயற்கைக்கோள் ஏவுதள ஏவுகணை அமைப்பு — செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தப் பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பம்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரிட்டன்-அமெரிக்க தளமான டியேகோ கார்சியாவை (Diego Garcia) தாக்க ஈரான் இதைப் பயன்படுத்தியது.
முன்னாள் ஐடிஎஃப் (IDF) வான் பாதுகாப்புத் தளபதி, இது "ஒரே இரவில் ஈரானின் செயல்திறனை இருமடங்காக மாற்றியுள்ளது" என்று கூறியுள்ளார்.
நேற்று வரை எட்டாத தூரம், இன்று எட்டும் தூரத்தில் உள்ளது. வெறும் ஒரே இரவில்!
புதிய எல்லை: 4,000+ கிலோமீட்டர்கள் — பாரிஸ், ரோம், பெர்லின் ஆகிய நகரங்கள் இப்போது ஈரானின் தாக்குதல் எல்லைக்குள் உள்ளன.
'ஃபத்தாஹ்' (Fattah) என்ற அதிவேக ஹைப்பர்சோனிக் ஏவுகணை, இந்த ரீப்பர் திட்டத்தின் மேல் அமர்ந்து பயணிக்கிறது.
இதை இடைமறிக்கவே முடியாது என்று ஈரானின் ஐஆர்ஜிசி (IRGC) உரிமை கோருகிறது.
இஸ்ரேலின் அயன் டோம் (Iron Dome), ஆரோ (Arrow), டேவிட்ஸ் ஸ்லிங் (David’s Sling) ஆகிய பாதுகாப்பு அமைப்புகள் காலியாகி வருகின்றன.
2,00,000 டாலர் மதிப்பிலான ஏவுகணையைத் தடுக்க 30,00,000 டாலர் மதிப்பிலான தடுப்பு ஏவுகணை பயன்படுத்தப்படுகிறது — முதலில் யாருடைய இருப்பு தீர்ந்துபோகும்?
இதன் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா?
கடந்த 24 மணிநேரத்தில் ஈரான் தொடர்ந்து 8 ஏவுகணை அலைகளைத் தொடுத்துள்ளது.
இது ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 4-ன் (Operation True Promise 4) 73-வது அலையாகும்.
73 அலைகள். எழுபத்து மூன்று!
ஒவ்வொரு அலையும் இஸ்ரேலின் தடுப்பு ஏவுகணைகளை மிக வேகமாகத் தீர்க்கின்றன.
கணக்கீடுகள் தலைகீழாகியுள்ளன, இது ஈரானுக்கும் தெரியும்.
ரஷ்யா ஈரானுக்கு செயற்கைக்கோள் படங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ட்ரோன் தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது (WSJ உறுதிப்படுத்தியுள்ளது).
ஈரானில் உள்ள சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தோல்வியடைந்தன — ஆனால் புராஜெக்ட் ரீப்பருக்கு அவை தேவையில்லை.
அவர்கள் ஈரானை ஒரு "தோல்வியுற்ற வல்லரசு" என்று அழைத்தார்கள்.
'தி சன்' (The Sun) பத்திரிகை எழுதியது: "ஈரான் ஒரு தோல்வியுற்ற வல்லரசு. ஆனால் அது ஒரு வல்லரசுக்குரிய ஆயுதங்களை உருவாக்கியுள்ளது."
அவர்கள் சொன்னது தவறு இல்லை.
கேள்வி இப்போது ஈரான் போரிடுமா என்பது அல்ல.
கேள்வி இதுதான்: அமெரிக்காவாலும் இஸ்ரேலாலும் இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த முடியும்?
ஏனென்றால், ஒரு தாக்குதலைத் தடுக்க 30,00,000 டாலர் செலவாகும் நிலையில், ஒரு நாளைக்கு 8 அலைகள் வீசப்பட்டால், நிதி மற்றும் இருப்பு தீர்ந்துவிடும்.
அவை தீரும்போது, புராஜெக்ட் ரீப்பர் ஏவுகணைகள் தயார் நிலையில் காத்திருக்கும்.
அதற்கேற்பத் தயாராக இருங்கள்.
- எக்ஸ் வலைத்தளப் பதிவில் இருந்து....
ஈரான் என்ற சிங்கம்...!
டேய் டொனால்டு வாயில வடை சுடுறதுக்கும், வார் (War) பண்றதுக்கும் வித்தியாசம் இருக்குடா!
நேத்து வரைக்கும் ஈரானை விடமாட்டேன் பொளந்துருவேன்னு ஓவரா சீன் காட்டிட்டு இருந்தியே..
இப்போ என்னடான்னா அஞ்சு நாளைக்கு லீவு விடுறேன்னு பல்டியடிக்கிற
ஈரான்காரன் காட்டுன ஒரு சின்ன ட்ரைலர்லயே உன் பேண்ட் நனைஞ்சு போச்சா
ஈரான் சிங்கத்தை சீண்டிப் பாக்கலாம்னு நினைச்ச பாரு அங்கதான் நீ தோத்துட்ட
அவனுங்க கெத்து முன்னாடி நீ எல்லாம் வெறும் பொம்மை டிரம்ப் தான். 5 நாள் நிறுத்தி வைக்கிறேன்னு நீ சொல்றது என்னை அடிச்சிராதீங்கப்பானு நீ கேக்குற பிச்சைடா!
ஈரான் மிரட்டலுக்கு அமெரிக்காவே ஆடிப் போயிருக்கு!
டிரம்பை ஓரமா உட்கார வச்சு ஈரான் இப்ப செமையா கபடி விளையாடிட்டு இருக்கு.
மாஸ் காட்றது எப்படின்னு ஈரானைப் பாத்து கத்துக்கோடா டொனால்டு கஞ்சாப்பயலே..
- எக்ஸ் வலைதளப் பதிவில் இருந்து...!
ஈரான் திட்டவட்டமான முடிவு....!
போர்நிறுத்தம் மட்டும் போரை முடிவுக்குக் கொண்டு வராது - ஈரான்
ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi), இந்த மோதல் தெஹ்ரானால் உருவாக்கப்பட்டதல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
"எங்கள் செய்தி எளிமையானது — இது எங்கள் போர் அல்ல. இது எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது," என்று கூறிய அவர், பதற்றத்தை அதிகரித்ததற்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது குற்றம் சாட்டினார்.
— தி நியூ அரப் (The New Arab)
ஒரு சாதாரண போர்நிறுத்தத்தை தீர்வாக ஈரான் ஏற்காது என்று அரக்ச்சி வலியுறுத்தினார். அதற்குப் பதிலாக, இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் ஒருபோதும் நடக்காது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, ஒரு தற்காலிக இடைநிறுத்தம் மட்டும் போதாது; முழுமையான மற்றும் நிலையான தீர்வு மட்டுமே பிராந்தியத்தில் உண்மையான அமைதியைக் கொண்டுவர முடியும.
சர்வதேச விவகாரங்களில் 'Ceasefire' என்பது தற்காலிகப் போர்நிறுத்தத்தைக் குறிக்கும், ஆனால் 'Resolution' என்பது ஒரு சிக்கலுக்கான நிரந்தரத் தீர்வை உணர்த்துகிறது.
- எக்ஸ் வலைத்தள பதிவில்...!
எல்லாவற்றையும்
வெற்றி தோல்வியால்
தீர்மானிக்க முடியாது.
பிறரிடம் பெற்றுக் கொண்டதையும்
கற்றுக் கொண்டதையும்
மற்றவருக்காக விட்டுச் செல்வதே
வாழ்க்கை. விட்டுக் கொடுப்பவர்
கெட்டுப் போவதில்லை.
என்னுடைய
'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி'
மற்றும்
' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'
ஆகிய இரண்டு நூல்கள் அறிமுகம் செய்து
மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.
தோழர்கள் அமோக வரவேற்பு...!
என்னுடைய
'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி'
மற்றும்
' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'
ஆகிய இரண்டு நூல்கள்
அறிமுகம் செய்து மகிழ்ச்சி
அடைந்த இனிமையான தருணம்.
தோழர்கள் அமோக வரவேற்பு...!
ஒரு நிமிடம் தோன்றும்
கோபத்தையும்
உணர்ச்சிகளையும்
அடக்கி ஆளத்
தெரிந்துவிட்டால்
வாழ்க்கையை
வென்று விடலாம்.
என்னுடைய
'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி'
மற்றும்
' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'
ஆகிய இரண்டு நூல்கள் அறிமுகம்
செய்து மகிழ்ச்சி அடைந்த
இனிமையான தருணம்.
தோழர்கள் அமோக வரவேற்பு...!
என்னுடைய
'உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி'
மற்றும் '
இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'
ஆகிய இரண்டு நூல்களை
வேலூர் வேங்கை முஹம்மது ரஃபி
அவர்களிடம் வழங்கி
மகிழ்ச்சி அடைந்த
இனிமையான தருணம்.
தோழர்கள் அமோக வரவேற்பு...!
ஈகைத் திருநாள் வாழ்த்துகள்...!
புனித ரமழானில், ஏக இறைவனின் கட்டளைப்படி நோன்பு வைத்து உடலையும் உள்ளதையும் தூய்மைப்படுத்தி, அந்த மகிழ்ச்சியில் ஏக இறைவனுக்கு நன்றி செலுத்தி, ஈகைத் திருநாளை நாம் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறோம்.
உலகில் சகோதரத்துவ மாண்புகள் வளர்ந்து, மத நல்லிணக்கம் தழைத்தோங்க ஒரு அற்புதமான செய்தியை ரமழான் மாதமும், ஈத் பெருநாளும் உலகிற்கு சொல்லிக் கொண்டு இருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு அற்புதமான ஈகைத் திருநாளில் தோழமை அனைவருக்கும் எமது வாழ்த்துகள்.
ஈகைத் திருநாள் வாழ்த்துகள்.
Happy Ramadan Greetings...!
Happy Eid MUBARAK...!!
THE ISLAMIC REPUBLIC OF IRAN🇮🇷 is Fighting The Two Confirmed Biggest and Deadliest Terrorist Nations in The World! The US & Isreal.
The Crimes of Those Two Nations Are Endless and Humongous!
Genocide, Illegal Occupation of Palestine, Lebanon & Syrian Land.
The Reckless Violation of International Laws.
The Destruction of Libya, Iraq, Afghanistan, Yemeni etc.
The Looting and Plundering of Wealth of Nations.
The Assasinations Resisting Leaders and Kidnapping of Nicolas Maduro and Many Others.
The Illegal Economic Blockade of Cuba and Many Others.
The Killing of over 38milllion via Sanctions for 50years and 4.5million due to Wars Since 2000.
Supporting The Islamic Republic of Iran🇮🇷 is Just The Humane Thing to Do!
Every Day Iran🇮🇷 is Still Standing and Fighting Back, Humanity is Standing and Fighting Back!
- From X Post...
கத்தாரின் ராஜதந்திர வெளியேற்ற அறிவிப்பு:
"தயவுசெய்து வெளியேறுங்கள்"
— மத்திய கிழக்கு வரலாற்றிலேயே மிகவும் கண்ணியமான "வெளியே போ"
ஒரு பிராந்தியத்தில் மிகப்பெரிய அமெரிக்கத் தளத்தை வைத்திருக்கும் நாடு, உபசரிப்புக்கு ஒரு எல்லை உண்டு என்பதை திடீரென நினைவுகூர்கிறது. அழைப்பு விடுக்கப்பட்ட காலத்தையும் தாண்டி தங்கியிருந்த விருந்தினர்கள், ஏவுகணைகள் பறந்து கொண்டிருக்கும் வேளையில் தங்கள் பைகளை மூட்டைக் கட்டிக்கொண்டு கிளம்புமாறு இப்போது கேட்கப்படுகிறார்கள்.
முக்கியச் செய்தி: கத்தார் உத்தியோகபூர்வமாக அமெரிக்காவை அதன் தளம் அமைக்கும் உத்திகளை "மறுபரிசீலனை" செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் நிஜமான அர்த்தம்: "தயவுசெய்து வெளியேறுங்கள். நாங்கள் மீண்டும் கேட்கப் போவதில்லை. உங்கள் THAAD ஏவுகணைகள், F-35 விமானங்கள், மற்றும் $1.1 பில்லியன் மதிப்புள்ள ரேடார் குப்பைகளையும் எடுத்துக்கொண்டு கிளம்புங்கள்."
அல் உதித் (Al Udeid) நிலைமை
அல் உதித் விமானத் தளத்தைப் பற்றி பேசுவோம். மத்திய கிழக்கிலேயே மிகப்பெரிய அமெரிக்க ராணுவத் தளம் இது. 8,000 முதல் 10,000 அமெரிக்க வீரர்கள் இங்கு உள்ளனர்.
அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (US Central Command) வான்வழித் தாக்குதல்களின் மூளையாகச் செயல்படும் கூட்டு வான் செயல்பாட்டு மையம் இங்குதான் உள்ளது. 12,000 அடி நீளமுள்ள இரண்டு ஓடுதளங்கள். 1996 முதல் $5 பில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இப்போது, இது ஒரு மிகவும் விலையுயர்ந்த "வெள்ளை யானையாக" (பயனற்ற சொத்து) மாறியுள்ளது. இதை கத்தார் மீண்டும் அதன் உரிமையாளரிடமே திருப்பித் தர விரும்புகிறது.
நேரம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது
இந்த வேண்டுகோள் பின்வரும் நிகழ்வுகளுக்குப் பிறகு வந்துள்ளது:
⭕️ ஈரானிய ஏவுகணைகள் அல் உதித் தளத்தை (பலமுறை) தாக்கின.
⭕️ $1.1 பில்லியன் மதிப்பிலான ரேடார் இப்போது $0 மதிப்புள்ள இரும்புத் துண்டுகளாக மாறியுள்ளது.
⭕️ பஹ்ரைனில் உள்ள ஐந்தாவது கடற்படை தலைமையகம் அழிக்கப்பட்டது.
⭕️ அமெரிக்க வீரர்கள் வளைகுடா நாடுகளில் உள்ள ஹோட்டல்களில் ஒளிந்து கொள்ளத் தொடங்கினர்.
⭕️ அமெரிக்க போர்க்கப்பல்கள் திறந்த கடலை நோக்கித் தப்பி ஓடத் தொடங்கின.
⭕️ "தோற்கடிக்க முடியாத" அமெரிக்க ராணுவம், மிகவும் எளிதாகத் தோற்கடிக்கப்படக் கூடிய ஒன்றாகத் தெரியத் தொடங்கியது.
இந்தச் சூழலைக் கவனித்த கத்தாரிகள் சிந்தித்தார்கள்:
"உலகிலேயே மிகப்பெரிய இலக்கை (Target) நம் நாட்டில் வைத்திருப்பது, அதிக எரிவாயு வளம் கொண்ட ஒரு சிறிய நாட்டுக்குச் சிறந்த உத்தி அல்ல."
ராஜதந்திர மொழி
"தள உத்திகளை மறுபரிசீலனை செய்யுங்கள்" (Reconsider basing strategies) என்ற வார்த்தைகளுக்குப் பின்னால் பெரிய அர்த்தம் உள்ளது. சாதாரண மொழியில்ச் சொன்னால்:
"நாங்கள் இதைப் பற்றிப் பேசிவிட்டோம்."
"நாங்கள் இதைப் பற்றி யோசித்துவிட்டோம்."
"நாங்கள் ஒரு முடிவெடுத்துவிட்டோம்."
"தயவுசெய்து கிளம்புங்கள்."
இது வீட்டின் சாவியைத் தொலைத்துவிட்டது போல நடித்துவிட்டு, ரகசியமாகப் பூட்டை மாற்றுவதற்குச் சமமான ஒரு ராஜதந்திரச் செயல்.
மற்ற விருந்தினர்களும் வெளியேறுகிறார்கள்
இந்த உண்மையை உணர்ந்தது கத்தார் மட்டுமல்ல. மற்ற நாடுகளின் நிலைமையைப் பாருங்கள்:
சவுதி அரேபியா: அத்தியாவசியமற்ற அமெரிக்கப் பணியாளர்களை வெளியேற்றுகிறது.
யுஏஇ (UAE): பகிரங்கமாகத் தங்களைத் தள்ளி வைத்துக் கொள்கிறது. "இது எங்கள் போர் அல்ல" என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர்களின் விமான நிலையங்கள் எரிகின்றன.
குவைத்: கூடுதல் பாதுகாப்பு அமைப்புகளை வைக்க "தயக்கம்" காட்டுகிறது. அதன் அர்த்தம்: "எங்களுக்கு ஏற்கனவே போதுமான பிரச்சனைகள் உள்ளன, நன்றி."
பஹ்ரைன்: ஐந்தாவது கடற்படை தலைமையகம்? அழிக்கப்பட்டுவிட்டது. வரவேற்பு விரிப்பே இப்போது எரிந்து கொண்டிருக்கிறது.
ஓமன்: தாக்குதலுக்கு உள்ளானது. நடுநிலைமை என்பது ஒரு கேடயம் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
விருந்து முடிந்துவிட்டது. விருந்தினர்கள் வெளியேறுகிறார்கள். உடைந்த கண்ணாடித் துண்டுகளைப் பெருக்கிக்கொண்டே, "ஏன் இந்த விருந்தை நடத்தினோம்?" என்று வீட்டின் உரிமையாளர் யோசித்துக் கொண்டிருக்கிறார்.
"பாதுகாப்பான புகலிடம்" என்ற கட்டுக்கதை
அமெரிக்கர்களைத் தங்க வைப்பதன் மூலம் பாதுகாப்பு கிடைக்கும், பாதுகாப்பாக இருக்கலாம் என்று கத்தார் நினைத்தது. ஆனால், "பாதுகாப்பு" என்பது "இலக்கு" (Target) என்பதன் இன்னொரு பெயர் என்பது இப்போது புரிகிறது.
ஈரான் தாக்கத் தொடங்கியபோது, பாதுகாப்பு அவர்களைக் காப்பாற்றவில்லை—மாறாகத் தாக்குதலை ஈர்த்தது.
$1.1 பில்லியன் ரேடார் எதையும் பாதுகாக்கவில்லை. அது ஒரு விலையுயர்ந்த பள்ளத்தை மட்டுமே உருவாக்கியது.
F-35 விமானங்கள் எதையும் பாதுகாக்கவில்லை. அவை இப்போது தரையிறக்கப்பட்டுள்ளன, அவற்றின் விமானிகள் ஒளிந்து கொண்டுள்ளனர்.
THAAD அமைப்புகள் எதையும் பாதுகாக்கவில்லை. அவற்றில் இரண்டு இப்போது இரும்புத் துண்டுகள்.
அமெரிக்கப் படை அங்கு இருந்த ஒரே பலன்:
ஒரு பேரரசுக்கு (Empire) இடம் கொடுத்தால் எந்த இடமும் பாதுகாப்பானது அல்ல என்பதை ஈரான் நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததுதான்.
பொருளாதார யதார்த்தம்
கத்தாரிடம் எரிவாயு உள்ளது. அதுவும் மிக அதிக அளவில். ஆனால் இப்போது அந்த எரிவாயு விநியோகம் நடக்கவில்லை. திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ராஸ் லஃபான் தொழில் நகரம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய எரிவாயு விலைகள் 50% அதிகரித்துள்ளன.
முழு கத்தார் பொருளாதாரமும் "ஸ்திரத்தன்மை இருந்தால் மட்டுமே எரிசக்தி விநியோகம் நடக்கும்" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்போது அந்த ஸ்திரத்தன்மை ஒரு கனவாகிவிட்டது. அமெரிக்கர்கள் போரைக் கொண்டு வந்தார்கள். ஈரானியர்கள் நெருப்பைக் கொண்டு வந்தார்கள். கத்தார் எதைக் கொண்டு வந்தது?
"மறுபரிசீலனை" உத்தி
"மறுபரிசீலனை" என்பது நடைமுறையில் என்ன அர்த்தம்? சில வாய்ப்புகளைப் பார்ப்போம்:
வாய்ப்பு 1: அமெரிக்கா தானாகவே வெளியேறுகிறது. கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்கிறது. அது தங்களுடைய முடிவு என்பது போல நடிக்கிறது.
வாய்ப்பு 2: அமெரிக்கா வெளியேற மறுக்கிறது. ஈரான் தொடர்ந்து தாக்குகிறது. அதிக இடிபாடுகள், அதிக புகை. கத்தாரின் உட்கட்டமைப்புகள் மேலும் அழிக்கப்படுகின்றன.
வாய்ப்பு 3: அமெரிக்கா நெருக்கடிக்கு உள்ளாகி வெளியேறுகிறது. இது அவர்களைப் பலவீனமாகக் காட்டும். எதிரிகளைத் தூண்டும். ஆனால் குறைந்தபட்சம் ஏவுகணைத் தாக்குதலாவது நிற்கும்.
தற்போது வாய்ப்பு 3 தான் மிகவும் ஈர்க்கக்கூடியதாகத் தெரிகிறது.
மற்ற கோரிக்கைகள்
கத்தாரின் இந்த "வேண்டுகோள்" ஏற்கனவே உள்ள நீண்ட பட்டியலில் இணைகிறது:
ஈராக்: "தயவுசெய்து வெளியேறுங்கள்" (பலமுறை).
ஆப்கானிஸ்தான்: "தயவுசெய்து வெளியேறுங்கள்" (இறுதியில் அவர்கள் வெளியேறினர்).
சிரியா: "தயவுசெய்து வெளியேறுங்கள்" (இன்னும் அங்கேயே இருந்து பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள்).
சவுதி அரேபியா: "அத்தியாவசியமற்றவர்களை வெளியேற்றுங்கள்" (முதல் படி).
மத்திய கிழக்கு நாடுகள் மெதுவாகவும், கண்ணியமாகவும் அமெரிக்காவை மூட்டையைக் கட்டச் சொல்கின்றன. தங்களுக்குச் செல்ல வேறு இடமில்லை என்பதை அமெரிக்கா மெதுவாக, தயக்கத்துடன் உணர்ந்து வருகிறது.
உபசரிப்பு உவமை
நீங்கள் ஒரு விருந்து வைக்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் அழைத்த ஒரு விருந்தினர் தனது 50 நண்பர்களைக் கூட்டி வருகிறார். அவர்கள் உங்கள் உணவை எல்லாம் சாப்பிடுகிறார்கள். உங்கள் தளபாடங்களை உடைக்கிறார்கள். அண்டை வீட்டாருடன் சண்டையிடுகிறார்கள். பிறகு அவர்கள் செய்த குழப்பத்தை சுத்தம் செய்ய உங்களிடமே உதவி கேட்கிறார்கள்.
எந்தக் கட்டத்தில் நீங்கள் "போதும், நீங்கள் கிளம்ப வேண்டிய நேரம் இது" என்று சொல்வீர்கள்? கத்தார் இப்போது அந்த நிலையை எட்டிவிட்டது.
கிளைமாக்ஸ்
வேடிக்கை என்னவென்றால், அமெரிக்கர்களைத் தங்க வைப்பது பாதுகாப்பு தரும் என்று கத்தார் நம்பியது. அந்தப் "பாதுகாப்பு" தங்களைக் காக்கும் என்று அவர்கள் நம்பியது ஒரு நகைச்சுவை. ஒரு உபசரிப்பாளராக இருப்பது என்பது ஒரு இலக்காக மாறுவதுதான் என்பதை அவர்கள் உணரவில்லை.
அல் உதித் தளத்திலிருந்து எழும் புகையில் அந்த நகைச்சுவைக்கான பதில் உள்ளது. ரேடார் இருந்த இடத்தில் கிடக்கும் இடிபாடுகளில் அது எழுதப்பட்டுள்ளது. தங்கள் நாடு ஏன் எரிகிறது என்று விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒவ்வொரு கத்தார் அதிகாரியும் அதைத்தான் பேசுகிறார்கள்.
விருந்து முடிந்தது. விருந்தினர்கள் வெளியேறுகிறார்கள். உரிமையாளர் சேதத்தை கணக்கிடுகிறார்.
அங்கேயே எங்கோ தெஹ்ரானில் (Tehran) யாரோ ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கலாம்: "நாங்கள் அப்போதே சொன்னோம் இல்லையா?"
- அந்த வீதியைப் பற்றி
- எக்ஸ் வலைத்தளத்தில் ஒரு பதிவு...!