மனதை கவர்ந்த இஃப்தார் விருந்து...!
மூத்த ஊடகவியலாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் பங்கேற்று உரை...!
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே ஏழைகளுக்கான உரிமை தொகை அறிவித்த இஸ்லாம்...!
தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் சார்பில் கடந்த 17.03.2026 அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள Controller of Defence Accounts அலுவலகத்தின் கூட்ட அரங்கில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் சார்பில் அவ்வமைப்பின் நிர்வாகி ஷேக் முகம்மது அலி ஏற்பாட்டில் இந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் யூனியனின் மாநில தலைவர் ஆர் சந்திரிகா, செயல் தலைவர் பெ. வஜ்ஜிரவேல் பொதுச்செயலாளர் கதிரவன், சென்னை மாவட்ட தலைவர் வெங்கடேஷ், சுப்பிரமணி சுப்பையா, இமான் வேல், குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயசீலன், பெண் மருத்துவர், வழக்கறிஞர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியை வேந்தர் தொலைக்காட்சியில் பணிபுரியும் தஸ்னீம் பானு மிக அழகிய முறையில் தொகுத்து வழங்கினார். ராஜ் தொலைக்காட்சியின் தூண் வெற்றிசெல்வன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அப்துல் அஜீஸ் உரை:
நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மணிச்சுடர் நாளிதழின் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், ரமழான் மாதம் குறித்தும் நோன்பு, ஜகாத், பித்ரா ஆகியவை குறித்து சிறு விளக்கம் அளித்தார். அப்போது, தற்போது தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறதோ, இதுபோன்று, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே ஏழைகளுக்கான உரிமை தொகை அறிவித்து அமல்படுத்திய மார்க்கம் இஸ்லாம். ஜகாத் என்பது ஏழைகளுக்கான உரிமை தொகையாகும். செல்வந்தர்கள் தங்களுடைய சொத்தில் ஆண்டுக்கு இரண்டரை சதவீதம் ஏழைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும் என்பதே ஜகாத் ஆகும். இதன்மூலம் ஏழைகளின் பொருளாதார நிலை மேம்படும். இதுபோன்று, ஈத் பெருநாள் தொழுகைக்கு முன்பு ஏழைக்கு பித்ரா என்ற உரிமையை கொடுத்து விட்டு தான் தொழுகைக்கு செல்ல வேண்டும். ஈத் பெருநாள் அன்று யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பது தான் பித்ராவின் முக்கிய நோக்கம்.
நோன்பு என்பது உடல், உள்ளம், ஆன்மாவை தூய்மைப்படுத்த வைக்கப்படும் ஒரு அற்புதமான இஸ்லாமிய கடமையாகும். நோன்பு வைப்பதால், பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கின்றன என்பதை நிரூபித்து வருகின்றது. இந்த புனித மாதத்தில் சகோதரத்துவ மண்புகள் மேம்படுகிறது. உதவும் குணம் வளர்கிறது. சிறப்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு நிர்வாகிகள் அனைவருக்கும் எமது பாராட்டுகள்..
இவ்வாறு அப்துல் அஜீஸ் பேசினார்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் எழுதிய உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி மற்றும் இந்திய முஸ்லிம்கள்-பாகம் 1, ஆகிய நூல்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக அனைவருக்கும் சுவையான பிரியாணி பரிமாறப்பட்டது. மக்ரீப் தொழுகைக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது பாராட்டப்பட வேண்டிய அம்சமாகும்.

No comments:
Post a Comment