நல்ல கவுரவம்...!
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய மஸஜித்தில் கடந்த 40 ஆண்டுகளாக ரமழான் மாதம் முழுவதும் நோன்பாளிகளுக்கு சகோதர நேசத்துடன் அனைத்து வகைகளில் உதவிக்கரம் நீட்டி மகிழ்ச்சியோடு பணிவிடை செய்து அன்பை வெளிப்படுத்தி வரும் சிந்தி சமுதாய மக்களின் சூஃபிதார் இயக்கம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
அந்த வகையில் ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அலி சாஹிப் அவர்கள் சூஃபிதார் இயக்கத் தோழர்கள் அசோக் குப்சாந்தினி (Ashok khubchandani of Sufidar Trust) ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். அப்போது வழக்கறிஞர் முஹம்மது வசீயுத்தீன் தாத்னி ( Md.Wasiuddin Dadni), இமாம் சாஹிப் (Imam Sahib of Walajah Masjid) ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment