ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் எதிரொலி:
வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,,,,!
ஒன்றிய அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி.க்கள் வலியுறுத்தல்....!!!
புதுடெல்லி, மார்ச்.12-ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நீடித்து வரும் போர் காரணமாக, வளைகுடா நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.
அமைச்சருடன் நேரில் சந்திப்பு :
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் தற்போது போர் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்த இ.யூ.முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இ.டி.முஹம்மது பஷீர், எம்.பி. அப்துஸ் ஸமத் சமதானி, பி.வி. அப்துல் வஹாப், வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் ஆகியோர் புதுடெல்லியில் 11.03.2026 அன்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து பேசினர். அப்போது, அதிகரித்து வரும் அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மத்தியில் அவசரமாக இராஜதந்திர முறையில் இந்திய அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்தி மனு ஒன்றை அவர்கள் வழங்கினார்கள். மேலும், வளைகுடாவில் உள்ள கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, தேவைப்பட்டால் அவர்கள் அனைவரையும் இந்திய அழைத்துவர அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசை இ.யூ.முஸ்லிம் லீக் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
================================

No comments:
Post a Comment