தமிழக தேர்தல் பெருவிழா:
பெரும்பான்மை சமுதாய மக்களின் ஆதரவுடன் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெறும்...!
இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித் நம்பிக்கை....!!
புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் ஜனநாயகத் திருவிழா 2026 என்ற தலைப்பில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதியில் மோதும் கட்சிகள் கணிக்கும் வாக்காளர்கள் என்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் தேசிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எச்.அப்துல் பாசித் கலந்துகொண்டார். விவாத நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
வாணியம்பாடி தொகுதி மக்களின் வாக்கு யாருக்கு :
விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், வாணியம்பாடி தொகுதியில் பல்வேறு வசதிகள் அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் வாணியம்பாடி உள்ளிட்ட எந்த தொகுதியிலும் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று புகார் தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த அப்துல் பாசித், செந்தில் குமார் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து கூறினார்கள். நான் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவன். அப்போது எனக்கு பெரும் ஆதரவாக இருந்தவர் செந்தில்குமார் அவர்களின் தந்தை கோபால் அவர்கள். அப்போது வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் நகரங்கள் வாணியம்பாடி நகரங்களில் மருத்துவமனைகளுக்கு தேவையான நிதியுதவி பெற்று தரப்பட்டது. தரைப்பாலம் மற்றும் மேம்பாலம் குறித்து பேசினார்கள். ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். வாணியம்பாடி பகுதியில் உள்ள 55 கிராமங்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றால் தான் வரும்.
மத்திய அரசே காரணம் :
எனவே மேம்பாலம் தேவை என்பதை உணர்ந்து மத்தியில் பாமகவின் ரயில்வே அமைச்சராக இருந்த திரு வேலு அவர்களை வாணியம்பாடிக்கு அழைத்து மனு கொடுத்ததுவுடன் பின்னர் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சராக இருந்த இ.அஹமது அவர்களிடம் கோரிக்கை வைத்து 2012ஆம் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் சில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார்கள். அன்றுமுதல் இன்று வரை அந்த வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. ஆனால் 2014ஆம் ஆண்டு முதல் ஒன்றியதில் அதிமுகவின் தோழமை கட்சி ஆட்சியில் உள்ளது. முக்கிய திட்டங்கள் குறித்து நிறைவேற்றும்போது கருத்து வேறுபாடுகளை மறந்து மக்கள் நலனில் முக்கியத்துவம் கொடுத்த செயல்பட வேண்டும். நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தாலும், சிலர் வேண்டும் என்றே வழக்குப்பதிவு செய்து தடை உத்தரவு வாங்குகிறார்கள். நீங்கள் நாட்டின் எந்த பகுதிக்குச் சென்றாலும் நிலங்களை கையகப்படுத்தும் விவாகரத்தை எளிமையாக செய்ய முடியாது. அதற்கு மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் எங்களை பொருத்தவைர மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களது விருப்பமாக உள்ளது. ஒருசில குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் உள்ளன. ஜனநாயகத்தில் சட்டம் ஒரு பக்கமும், மரபு ஒரு பக்கமும் இருக்கும். நீர்தேக்கம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இறுதி வடிவம் பெற்றுவிட்டன. வாணியம்பாடி மக்களின் குடிநீர் தேவை யூர்த்தி செய்ய ஆலங்காயம் பகுதியில் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தனியார் கல்விச் சங்கங்கள் ஆர்வம் :
திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் அரசு பள்ளிகள், கல்லூரிகள் குறைவாக இருக்க முக்கிய காரணம்,திருப்பத்தூரில் கிறித்துவ அமைப்பு சார்பில் கல்லூரி உள்ளது வாணிணியம்பாடியில் இஸ்லாமிய கல்விச் சங்கம், இந்து கல்விச் சங்கம் உள்ளது. இதேபோன்று ஆம்பூரில் இந்து கல்விச் சங்கம், முஸ்லிம் கல்விச் சங்கம், கிறிஸ்துவ கல்விச் சங்கம் உள்ளன. 1836 ஆம் ஆண்டில் இருந்தே வாணியம்பாடியில் இந்து, முஸ்லிம் கல்விச் சங்கள் இணைந்து பள்ளிக்கூடம் நடத்திய வரலாறு உள்ளது. நாங்கள் அரசின் தயவை எதிர்த்துபார்த்து கல்வி பணிகளை செய்யவில்லை. நாங்கள் மேடையில் நாங்கள் காரச்சாரமாக பேசிக் கொள்வோம். ஆனால் மேடையை விட்டு கீழே இறங்கியதும் தோழமை உணர்வுடன் கைகோர்த்துச் செல்வோம்.
வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தபோது தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்மூலம் கிராமப்பகுதிகளில் தண்ணீர் பிரசசினைக்கு தீர்வு காணப்பட்டது. ஒருசில கிராமங்களுக்கு தண்ணீர் வசதி கிடைக்கவில்லை என்றாலும் அதற்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நமது பகுதிகளில் வாழும் இளைஞர்கள் அனைவரும் நன்கு படித்துவிட்டு, ஐ.டி. நிறுவனங்களில் சேர்நது விட்டார்கள். விவசாயம் செய்ய விரும்பவில்லை. அதுதான் கரும்பு சாகுபடி குறைவுக்கு முக்கிய காரணமாகும். ஆனால் விவசாயத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கும் உண்டு நமக்கும் உண்டு. எனவே தான், விவசாயிகளுக்கான சிறப்பு திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.
கிராமப்புறங்களில் 22 நீர் தேக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 48 நாட்கள் தண்ணீர் பிரச்சினை வரும். இது புதிது அல்ல. கடந்த 50 ஆண்டுகளாக உள்ளது. எனவே தான் காவேரி குடிநீர் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தியது. வாணியம்பாடி பகுதியில் தொழில் நிறுவனங்கள் தொடங்க மக்கள் ஆர்வம் இல்லாதற்கு காரணம் மத்திய அரசு சரியான சலுகைகளை வழங்குவதில்லை. தற்போது உலக அளவில் பொருளாதார நெருக்கடி மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதால், தொழில் நிறுவனங்கள் நலிந்துவிட்டன. இந்த பிரச்சினையை தீர்க்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். புதிய சிப்காட் அதாவது தொழில் பேட்டை உருவாக்க மத்திய மானியம் தருவதில்லை.
திமுக கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் :
சட்டம் ஒழுங்கு பிரச்சினை சரியில்லை என்பது வீண் குற்றச்சாட்டாகும். திமுக அரசு கடுமையாக நடவடிக்கைகள் மூலம் குற்றங்களை தடுத்து வருகிறது. கஞ்சா என்பது சமூகத்தில் உள்ள ஒரு தீமை, அதை ஒழிக்க சமூகத்தில் ஒரு விழிப்புணர் ஏற்படுத்த வேண்டும். சமூகத்தில் இணைந்து செயல்பட்டால் தான் தீமைகளை ஒழிக்க முடியும்.
திமுக அணி வாணியம்பாடி உட்பட திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறும். எங்களை பொருத்தவரை கொள்கை தான் முக்கியம். இந்து முஸ்லிம் என்ற பாகுபாடு கிடையாது. வாணியம்பாடி தொகுதியில் முஸ்லிம் வேட்பாளர்கள் நின்றபோது கூட, வாணியம்பாடி மக்கள் கொள்கையின் அடிப்பைடையில் அவர்களை தோல்வி அடையச் செய்தார்கள். சாதி, மதம் ஆகியவற்றை நாங்கள் பார்ப்பது இல்லை. அதிமுகவைச் சேர்ந்த அண்ணன் வடிவேலை நாங்கள் ஆதரவு அளித்து ஜெயித்து வைத்தோம். நாங்கள் இந்த முறை பெரும்பான்மை சமுதாயத்தின் ஆதரவுடன் வெற்றி பெறுவோம். மதத்தை வைத்து ஜெயிக்க மாட்டோம். மனதை கவர்ந்து ஜெயிப்போம். இறைவனை வணங்கி வாழ்வோம். எளியோருக்கு வழங்கி வாழ்வோம். எல்லோருடன் இணைங்கி வாழ்வோம். இதுதான் எங்கள் கொள்கை. இந்த கொள்கை மூலம் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு எச்.அப்துல் பாசித் பேசினார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments:
Post a Comment