Wednesday, March 11, 2026

புதிய பொலிவுடன் வாலாஜா பெரிய மஸ்ஜித்....!

 " புதிய பொலிவுடன் ஜொலிக்கும் வாலாஜா பெரிய மஸ்ஜித் "

தமிழகத்தின், ஏன் இந்தியாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய மஸ்ஜித் இருந்து வருகிறது. குறிப்பாக, சென்னையின் இதயப் பகுதியில் அமைந்துள்ள இந்த வாலாஜா பெரிய மஸ்ஜித், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசலாகும். இந்த மஸ்ஜித் முதலில் 1795 ஆம் ஆண்டு கர்நாடக நவாப் ஆற்காடு இளவரசரின் மூதாதையரான முகமது அலி கான் வாலாஜாவால் கட்டப்பட்டது.

இந்த பள்ளிவாசல் திருவல்லிக்கேணி பெரிய மஸ்ஜித் என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான மஸ்ஜித்துகளில் வாலாஜா பெரிய மஸ்ஜித்திற்கு எப்போதும் தனி சிறப்பு இருந்து வருகிறது. சிறப்புமிக்க இந்த மஸ்ஜித்தில் பல வகையான கட்டடக்கலைகள் இணைக்கப்பட்டுள்ளதால், மஸ்ஜித் பின்பற்றும் ஒரு குறிப்பிட்ட வகை கட்டடக்கலையை சுட்டிக்காட்டுவது மிகவும் கடினம். இந்த மஸ்ஜித் மரம் அல்லது எஃகு பயன்படுத்தப்படாமல் கட்டப்பட்டதாகும். 

சுவையான தகவல்கள் :

சென்னையின் மையப்பகுதியில், பரபரப்பான நகர வாழ்க்கையின் மத்தியில், அமைதியான நம்பிக்கையின் சோலையாக வாலாஜா மஸ்ஜித் அமைந்துள்ளது. வாலாஜா மஸ்ஜித் நகரத்தின் வளமான பன்முக கலாச்சார பாரம்பரியத்திற்கு சான்றாக விளங்குகிறது.  18 ஆம் நூற்றாண்டில் கர்நாடக நவாப் வாலாஜா முகமது அலி கானால் கட்டப்பட்ட இந்த மஸ்ஜித், இப்பகுதியில் பல்வேறு மதங்களின் இணக்கமான சகவாழ்வின் அடையாளமாக நிற்கிறது. முகலாய மற்றும் இந்தோ-சாராசெனிக் பாணிகளின் கலவையான மஸ்ஜித்தின் கட்டடக்கலை வசீகரிக்கும். அதன் உயரமான மினாரெட்டுகள் வானத்தைத் துளைக்கின்றன. அமைதியின் புகலிடமான மஸ்ஜித்தின் முற்றத்தில், இஸ்லாமியர்கள்  தொழுகைக்காக கூடுகிறார்கள். அவர்களின் குரல்கள் ஒற்றுமையாக எதிரொலிக்கின்றன, ஆன்மீகத்தின் சிம்பொனியை உருவாக்குகின்றன.

மஸ்ஜித்திற்குள் நுழைந்தால், காற்றில் பரவும் அமைதியின் உணர்வால் அனைவரும் வியப்படைகிறார்கள். பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வருகிறார்கள். மஸ்ஜித்தின் உட்புறம் அழகிய இஸ்லாமிய கையெழுத்துப் பிரதிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, குர்ஆனின் வசனங்கள் மிகுந்த கவனத்துடன் பொறிக்கப்பட்டுள்ளன. சிக்கலான விவரங்கள் மற்றும் நுட்பமான கைவினைத்திறன் அதன் உருவாக்கத்தில் இருந்த பக்தி மற்றும் கலைத்திறனைப் பற்றி நிறையப் பேசுகின்றன. 

                                                ====================

"உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையிலும், கண்களுக்கு விருந்த அளிக்கும் வகையிலும் புதுப்பிக்கப்பட்டுள்ள வாலாஜா பெரிய மஸ்ஜித், அதன் பழமையான பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை விட்டுகொடுக்காத வகையில், புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.  அதன் காரணமாக மீண்டும் சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய அடையாளமாக மஸ்ஜித் திகழும் என்பது உறுதி"

                                                ====================


வாலாஜா மஸ்ஜித் ஒரு வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, ஒரு கலாச்சார மையமாகவும் உள்ளது. அதன் கதவுகள் அனைவருக்கும் திறந்திருக்கும்.  அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வரவேற்கிறது அத்துடன் பல்வேறு நம்பிக்கைகளுக்கான புரிதலையும் பாராட்டையும் வளர்க்கிறது. ஒரு சுறுசுறுப்பான வழிபாட்டுத் தலமாக இருப்பதால், இந்த மஸ்ஜித் ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்களை தங்க வைக்கிறது. பக்ரீத் மற்றும் ரமழான் பண்டிகைகளின் போது இங்கு அதிகமான இஸ்லாமியர்கள் வருகை தருவதற்கு இதுவே முக்கிய காரணம் என கூறலாம்..  ஏனெனில் ஆன்மீக ஆறுதலைத் தேடும் தெய்வீக பிரார்த்தனைகளில் கலந்துகொள்ளும் முஸ்லிம்கள்  தொடர்ந்து இங்கு வருகை தருகிறார்கள். வாலாஜா பெரிய மஸ்ஜித்  இன்று, சென்னையில் நம்பிக்கை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையின் ஒரு கலங்கரை விளக்கமாக நிற்கிறது. இது நகரத்தின் வளமான வரலாற்றையும், பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் மரபுகளைத் தழுவும் திறனையும் நினைவூட்டுகிறது. ஆறுதல், அறிவு அல்லது கடந்த காலத்தின் ஒரு பார்வையைத் தேடினாலும், வாலாஜா மஸ்ஜித் ஒரு வளமான மற்றும் பலனளிக்கும் அனுபவத்தை வழங்குகிறது. நம்பிக்கையின் நீடித்த மனப்பான்மைக்கும் அதன் ஒன்றிணைக்கும் சக்திக்கும் ஒரு சான்றாகும்.

புதுப்பித்தலுக்குப் பிறகு திறப்பு :

இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த வாலாஜா பெரிய மஸ்ஜித், ஆற்காடு இளவரசர் அறக்கட்டளையால் பல மாதங்களாகப் புதுப்பிக்கப்பட்டு வந்தது. உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையிலும், கண்களுக்கு விருந்த அளிக்கும் வகையிலும் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த மஸ்ஜித் கடந்த 10.03.2026 செவ்வாய்கிழமையன்று மீண்டும் திறக்கப்பட்டது. 

மஸ்ஜித் புதுப்பிக்கப்பட்டு இருந்தாலும், அதன் பழமையான பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை விட்டுகொடுக்காத வகையில், புனரமைப்புச் செய்யப்பட்டு இருப்பதாக ஆற்காடு இளவரசர் முஹம்மது அப்துல் அலி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக மீண்டும் சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய அடையாளமாக மஸ்ஜித் திகழும் என்றும் அவர் கூறியுள்ளார். 

மஸ்ஜித்தின் முற்றம் கண்ணை கவரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால், அமைதியான உணர்வுடன் தொழுகையை நடத்த தொழுகையாளிகளுக்கு நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது.  மஸ்ஜித் முழுவதும் 60  ஏர் கண்டிஷனிங் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன், அலங்கார விளக்குகள், கம்பளங்கள் மற்றும் பிற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இப்படி அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பொலிவுடன் விளங்கும் இந்த மஸ்ஜித் ரமழான் மாதத்தின் 21வது நாளான லைலத்துல் கதர் இரவு அன்று மீண்டும் திறக்கப்பட்டது மகிழ்ச்சியான தருணம் என்று கூறி  இளவரசர் முஹம்மது அப்துல் அலி மேலும் பெருமை அடைகிறார். 

இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த வாலாஜா பெரிய மஸ்ஜித்திற்கு, ரமழான் இப்தார் நோன்பு திறக்க நாள்தோறும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வருகை தருகிறார்கள். என்று ஆற்காடு இளவசரின் இரண்டாவது மகனான நவாப் ஷாதா முஹம்மது நாசர் அலி, கூறி மகிழ்ச்சி அடைகிறார். நோன்பு திறக்க வரும் இஸ்லாமியர்களுக்கு, சிந்தி சமுதாயம் மக்கள் உட்பட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களும் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் உணவுப் பொருட்கள் மற்றும் பிற உதவிகளை செய்து மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றும் அவர் கூறும்போது, உண்மையான சகோரத்துவத்தின் அடையாளமாக வாலாஜா பெரிய மஸ்ஜித் இருப்பது உறுதியாகிறது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: