Tuesday, March 31, 2026

முக கூட்டணி தான் வெல்லும் - பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நம்பிக்கை...!

 தமிழகத்தில் தேர்தல் பெருவிழா:


திமுகவிற்கு முஸ்லிம் சமுதாயம் எப்போதும் துணையாக இருக்கும்...!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தான் வெல்லும். 

மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்....!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நம்பிக்கை...!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி கட்சியில் இடம்பெற்றுள்ள தலைவர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பு, தேநீர் விருந்து அளித்து, தேர்தல் வியூகம் குறித்து கலந்துரையாடல் நடத்தினார். இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், கூட்டணி தலைவர்கள் செல்வபெருந்தகை, கமல்ஹாசன், தொல்.திருமாவளவன், வைகோ கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்று,  தங்கள் கருத்துகளை கூறி, தேர்தலில் எப்படி செயல்பட வேண்டும், பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் நல்ல ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.  அந்த வகையில், இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனும் தனது கருத்துகளையும், ஆலோசனைகளையும், முஸ்லிம் சமுதாயத்தின் நிலைப்பாடு குறித்தும் சிறிய உரை நிகழ்த்தினார். அதன் முழு விவரம் வருமாறு:

இந்தியாவிற்கே வழிகாட்டும் சிறந்த ஆட்சி :

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,  இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய ஒரு நல்ல ஆட்சியை, சிறந்த ஆட்சியை  தமிழகத்தில் தற்போது தந்துக் கொண்டிருக்கிறார். அதுபோன்ற ஒரு நல்ல ஆட்சியை வருங்காலத்திலும் நிச்சயமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தருவார். அப்படி ஒரு சிறந்த ஆட்சியை தருவதற்காக ஏக இறைவன் அவருக்கு அருள் புரிவான் என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக இருக்கிறது. அதற்காக ஏக இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்துகொள்கிறேன். 

அருமையான கருத்து தெரிவித்த கூட்டணி தலைவர்கள் :

இங்கு ஒன்றை மட்டும்  சொல்லி நான் என்னுடைய உரையை  நிறைவு செய்கிறேன். நிகழ்ச்சிக்கு வந்துள்ள அருமை கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும், இங்கு உரையாற்றும்போது அருமையான கருத்துகளை, எண்ணங்களை தெரிவித்தார்கள். மேலும் பல நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.  அவற்றையெல்லாம் நாம் உள்மனதில் வாங்கிக் கொண்டு, அவற்றை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. அந்த பொறுப்பை உணர்ந்து நாம் அனைவரும் செயல்பட வேண்டும். 

மீண்டும் உறுதியாக சொல்கிறேன். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்த மதசார்பற்ற கூட்டணி தான் வெல்லும். இதை நாளைய வரலாறு நிச்சயம் சொல்லும். அதற்கு முக்கிய காரணம், தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் அனைவரும் திமுகவின் பக்கம் இருக்கிறார்கள். திமுகவின் செயல்பாடுகள், பணிகள் மீது அவர்கள் உறுதியாக நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல நல்லத் திட்டங்கள் மூலம் பலன் அடைந்த மக்கள், மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த விருப்பம் தான் திமுகவின் மிகப்பெரிய பலம். அதுதான் திமுக கூட்டணி கட்சிகளுக்கு மிகப்பெரிய வலிமையாகும். 

திமுக மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்தபிறகு உலகத் தமிழ் செம்மொழி மாநாடு சென்னையில் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார்கள். தற்போது மிகச் சிறந்த ஆட்சி மூலம் எப்படி இந்தியாவிற்கே முன்மாதிரி ஆட்சியாக இருக்கிறதோ, அதேபோன்று, உலகத் தமிழ் செம்மொழி நடத்தப்பட்ட பிறகு, உலகம் முழுவதும் தமிழ் மொழி ஆட்சி செய்யும் என்பது உறுதி. அப்படிப்பட்ட மிகப்பெரிய வாய்ப்பு தமிழர்களான நமக்கு கிடைக்கும். 

முஸ்லிம் சமுதாயத்திற்கு நல்ல திட்டங்கள் :

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி தான் மீண்டும் அமையும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.  நீங்கள் (திமுக) தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறீர்கள். அதில் அற்புதமான பல அறிவிப்புகளை, வாக்குறுதிகளை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். 

குறிப்பாக, முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றி, நாங்கள் எதையெல்லாம் சொல்லி வந்தோமோ, அதையெல்லாம் திட்டங்களாக செய்து கொடுத்து இருக்கிறீர்கள். முஸ்லிம் சமுதாய மக்களின் எண்ணங்களை, ஆசைகளை பூர்த்தி செய்துள்ளீர்கள். இனி, வருங்காலத்திலும் செய்து கொடுப்பீர்கள் என்று உறுதி அளித்துள்ளீர்கள். அதற்காக நான் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் நன்றியும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வந்துள்ள முஸ்லிம் சமுதாய தலைவர்கள் சார்பாகவும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த கடமை எனக்கு உள்ளது என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெற்று தமிழக மக்களின் எண்ணங்களை, ஆசைகளை, பூர்த்தி செய்து, தமிழகத்தின் கவுரவத்தை நிச்சயம் காப்பற்றும். அதன்மூலம் தமிழ்நாடு எப்போதும் தலை நிமிர்ந்து நிற்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். 

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரையாற்றினார். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: