Monday, March 30, 2026

Speech...!

தேநீர் விருந்தில் உரை...!

மதச்சார்பற்ற கூட்டணியில் மாபெரும் கூட்டணி அமைத்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நடைபெறும் தேர்தலுக்கு அமைக்கப்பட்டுள்ள கூட்டணி புதிதாக அமைக்க அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல.

தொடர்ந்து இரண்டு நாடாளுமன்றம் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் , உள்ளாட்சி அமைப்பு தேர்தல் மாபெரும் கூட்டணி அமைத்து, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய அளவில் இல்லாத வகையில் இவ்வளவு ஆண்டு காலம் தொடர் இருக்கக் கூடிய மதச்சார்பற்ற கூட்டணி அமைந்திருக்கிறது. 

இது உள்ளபடியே பாராட்டிற்குரியது மகிழ்ச்சிக்குரியது. 

அப்படிப்பட்ட மதச்சார்பற்ற கூட்டணியை 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்கிறது.

எப்படி களம் காண இருக்கிறோம், கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது குறித்து கலந்து பேசி முடிவு எட்டியவுடன் இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

எல்லாவற்றையும் கடந்து இந்த கூட்டணியை அமைத்திருக்கிறோம். ஏற்கனவே இருந்த கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இந்த கூட்டணியை வெற்றிகரமாக அமைத்திருக்கிறோம். 

என்னுடைய அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி.



No comments: