Tuesday, March 24, 2026

நன்றிகள் பல...!

துயரமான நேரத்தில் துணை நின்று 

ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி..

என்னுடைய மூத்த சகோதரர் எஸ்.ஏ.அப்துல் கரீம் அவர்கள் 23.03.2026 அன்று காலமான செய்தியை அறிந்து, எனக்கு நேரிலும், செல்பேசி, வாட்ஸ் ஆப், முகநூல், எக்ஸ் வலைத்தளம், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமும் ஆறுதல் கூறி, சகோதரரின் மறுமைக்காக பிரார்த்தனை மற்றும் துஆ செய்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள் பல.

உங்களுடைய அன்பு, ஆறுதல் எனக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் நிச்சயமாக மன ரீதியாக நிம்மதியை தந்தது. மிக்க நன்றி.

No comments: