Wednesday, October 9, 2024

உருளைக்கிழங்கு முட்டை பிரியாணி.....!

 "உருளைக்கிழங்கு முட்டை பிரியாணி"

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் பெரிதும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் தற்போது பிரியாணி, மிக முக்கிய உணவாக இருந்து வருகிறது. புலால்  உணவை சாப்பிட விரும்பாதவர்கள் கூட, காய்கறிகள் மூலம் மட்டுமே தயாரிக்கப்படும் சுவையான வெஜ் பிரியாணியை ஒரு பிடி பிடித்து விடுகிறார்கள். பிரியாணியை வயிறு முட்ட சாப்பிட்டு ஆனந்தம் அடைகிறார்கள். அதிகளவு மக்கள் விரும்பி சாப்பிடும் பிரியாணி,  இந்தியாவில் பல்வேறு வகைகளில் இருந்து வருகிறது. 

ஹைதராபாத் பிரியாணி, முகல் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, லக்னோ பிரியாணி, தலசேரி பிரியாணி, பெங்களூர் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, கொல்கத்தா பிரியாணி, சிந்தி பிரியாணி என பல வகைகள் உள்ளன. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, சிக்கன் தம் பிரியாணி, ப்ளைன் பிரியாணி, வான்கோழி பிரியாணி, பாசுமதி பிரியாணி, அஸ்காம் காம்பூரி பிரியாணி, செட்டிநாடு சிக்கன் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி, காஷ்மீர் பிரியாணி, கோழிக்கோடு மாப்பிள்ளை பிரியாணி, மலாய் சிக்கன் டிக்கா பிரியாணி, சிந்தி பிரியாணி, வெஜ் பிரியாணி என 30க்கும் மேற்பட்ட வகை பிரியாணிகள் சமைக்கப்படுகின்றன. 

பெரும்பாலான சகோதர சமுதாய மக்கள், முஸ்லிம் வீடுகளில் சமைக்கப்படும், தயாரிக்கப்படும் பிரியாணியை மிகவும் விரும்பி சாப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல், தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் வட இந்தியாவில் இஸ்லாமிய விஷச நாட்களில், பண்டிகை காலங்களில், சகோதர சமுதாய மக்களை, விருந்தாளிகளாக வீட்டிற்கு அழைப்பதை, முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் ஒரு நல்ல பண்பாக இருந்து வருகிறது. இப்படி, முஸ்லிம் நண்பர்கள் அழைக்கும்போது, பல்வேறு பணிகளுக்கு இடையே கூட, அந்த விருந்து நிகழ்ச்சிக்கு சகோதர சமுதாய மக்கள் கண்டிப்பாக சென்றுவிடுவார்கள். அதற்கு முக்கிய காரணம், சுவையான, சத்தான பிரியாணி சாப்பிடக் கூடிய ஒரு நல்ல வாய்ப்பை தவறவிடக் கூடாது என்பதேயாகும். 

உலக பிரியாணி தினம்:

உலகளவில் பிரியாணிக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகமாக கூடி வரும் நிலையில், பிரியாணியின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே, மேலும் எடுத்துரைக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11ஆம் தேதி உலக பிரியாணி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் பிரியாணி உணவுத் திருவிழா, பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவில் விதவிதமான, சுவையான பிரியாணி தயாரிக்கப்பட்டு, சுடச்சுட பரிமாறப்படுகிறது. எனவே தான், பிரியாணி திருவிழாக்களில் மக்கள் கூட்டம் எப்போதும் அலை மோதும். இப்படி பிரியாணி தினம், பிரியாணி திருவிழா நடத்துவதன் மூலம் பிரியாணி குறித்த பல சுவையான தகவல்கள் அனைத்துத் தரப்பு மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது.

உருளைக்கிழங்கு முட்டை பிரியாணி: 

சரி, பலவகையான பிரியாணி குறித்து நாம் அறிந்துகொண்டாலும், அதை எப்படி தயாரிப்பது? எப்படி சுவையாக  சமைப்பது? எத்தனை வகையான பொருட்களை பிரியாணியில் சேர்க்க வேண்டும்? என்பன போன்ற சந்தேகங்கள், கேள்விகள், பொதுவாக எல்லோர் மனதிலும் இருந்து வருகிறது. ஒவ்வொரு வகையான பிரியாணிக்கும் மூலப் பொருட்கள், அதாவது மசாலா வகைகள் ஒன்றாக இருந்தாலும், சமைப்பவரின் கைப்பக்குவம், மற்றும், பிரியாணி வகைக்கு ஏற்ப சேர்க்கப்படும் உணவுப் பொருட்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருந்து வருகின்றன. 

அந்த வகையில் உருளைக்கிழங்கு முட்டை பிரியாணி எப்படி தயாரிக்கப்படுகிறது? அதில் என்னென்ன பொருட்கள் சேர்க்க வேண்டும்? போன்ற விளக்கங்களை இப்போது பார்க்கலாம். உருளைக்கிழங்கு மற்றும் முட்டை பிரியாணி செய்வதற்கான எளிதான செய்முறையை கொஞ்சம் அறிந்துகொள்வோம். 

தேவையான பொருட்கள்: 

உருளைக்கிழங்கு மற்றும் முட்டை பிரியாணி செய்ய, புழுங்கல் அரிசி, வறுத்த உருளைக்கிழங்கு அரை கிலோ, தயிர் அரை கிலோ, புதினா ஒரு குடி, 4 அவித்த முட்டை, 6 பச்சை மிளகாய், 6 கொத்தமல்லி பூ, வறுத்த வெங்காயம், புக்காரா 50 கிராம் , பிரியாணி எசன்ஸ் சில துளிகள், கருப்பட்டி ஒரு சிறிய ஸ்பூன், கருப்பு மிளகு ஒரு சிறிய ஸ்பூன், கரம் மசாலா ஒரு சிறிய ஸ்பூன், உப்பு ஒரு சிறிய ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு பெரிய ஸ்பூன், மஞ்சள் கரு அரை சிறிய ஸ்பூன், தரையில் சிவப்பு மிளகு இரண்டு தேக்கரண்டி ஆகியவை அவசியம் தேவை. இவற்றின் அளவு,  தேவைப்படும் பிரியாணியின் அளவுக்கு ஏற்ப மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

செய்வது எப்படி: 

உருளைக்கிழங்குடன் தயிர், கருப்பட்டி, கருப்பு மிளகு, அரைத்த கரம் மசாலா, உருளைக்கிழங்கு புக்காரா, நசுக்கிய சிவப்பு மிளகாய், பாடியன் பூக்கள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு மற்றும் சில துளிகள் பிரியாணி எசன்ஸ் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் அரை மணி நேரம் வைக்க வேண்டும்.  உருளைக்கிழங்கு வெந்ததும், வெங்காயம், புதினா, பச்சை மிளகாய், அரிசி, மஞ்சள் கரு மற்றும் முட்டை ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் இருபது நிமிடங்கள் வைக்க வேண்டும். 20 நிமிடங்களுக்குப் பிறகு, சுவையான ஆலு முட்டை பிரியாணி, கமகம வாசனையுடன் தயாராகிவிடும்.  சூடாக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு முட்டை பிரியாணியை உங்கள் விருந்தாளிகளுக்கு பரிமாறி மகிழ்ச்சி அடைவதுடன், நீங்களும் அவர்களுடன் இணைந்து சாப்பிட்டு, அன்பை வெளிப்படுத்தலாம். 

அன்பை வளர்க்கும் பிரியாணி:

இப்படி நாம் பிரியாணியை அடிக்கடி தயாரித்து, சமைத்து, நமது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சகோதர சமுதாய மக்களை அழைத்து விருந்து படைக்கும்போது, உண்மையிலேயே, மனித உறவுகளின் அன்பு வலுப்படும். மேலும், உறவுகளை இணைக்கும் பாலமாக உறுதியுடன் மேம்படும். பிரியாணியை நாம் சாதாரண உணவாக மட்டும் எண்ணிவிடக் கூடாது. அது, ஒரு அன்பை வளர்க்கும், அற்புதமான உணவாகும். பேருந்து, ரயில் மற்றும் விமானங்களில் பயணம் செய்யும்போது, நமது பக்கத்து இருக்கையில் அமரும் நபர், முஸ்லிம் வீட்டு பிரியாணி குறித்தும், அந்த பிரியாணியை சாப்பிட்ட அனுபவம் குறித்தும், மகிழ்ச்சியுடன் கூறுவதை நம்மில் பலர் கேட்டு இருக்கலாம். அது உண்மை தான், பிரியாணி, சுவையாக மட்டும் இருக்காமல், மக்களிடையே, அன்பை, பாசத்தை வளர்க்கும் உணவாக எப்போதும் இருந்து வருகிறது.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: