Tuesday, September 9, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (93)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

 நாள் - 93

குடிப்பழக்கம் வாழ்க்கை தரத்தை உயர்த்தாது.....! 

பீகார் முதலமைச்சர் ஜிதன்ராம் மஞ்சி பேச்சு....

பீகார் மாநிலம் பாட்னா அருகே ரூபாஸ்பூரில் மகாதலித் மாநாடு ஒன்று நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்று அம்மாநில முதலமைச்சர் ஜிதன்ராம் மஞ்சி பேசினார்.

அப்போது, மக்கள் குடிப்பழக்கம் கொள்வது தப்பில்லை அதேநேரத்தில் அது அளவோடு இருந்தால் நல்லது என்றும் இரவு தூங்க போகும் முன்னர் ஒரு குவார்ட்டர் குடித்து விட்டு செல்வதால் தப்பு எதுவுமில்லை என்றார் அவர்.



தலித் மக்கள் குடியை நிறுத்த முடியவில்லை என்றால், கொஞ்சம் அளவோடு , மருந்தாக குடித்து கொள்ளுங்கள் என்று மஞ்சி யோசனை தெரிவித்தார்.

ஒரு மனிதன் வேலையை முடித்து விட்டு மாலையில் வீட்டுக்கு வந்ததும் நன்றாக சாப்பிட வேண்டும். பின்னர் ஒரு ப்புவா (குவார்ட்டர்) குடிக்கலாம். பின்னர் அவர்கள் தூங்க போகலாம். இதில் தவறு ஒன்றுமில்லை. இவ்வாறு செய்வதை தவறாக நான் கருதவில்லை என்றும் அவர் கூறினார்.

தனது தந்தை தன்னை பள்ளிக்கு அனுப்ப விரும்பியதாகவும், அப்போது தான் தனது தந்தையிடம், நீங்கள் குடிக்க மாட்டேன் என்று உறுதி அளித்தால்தான், நான் பள்ளிக்கு செல்வேன். அப்போதுதான் நான் கல்வி அறிவு பெற்றவனாக வர முடியும் என்று கூறியதாகவும் மஞ்சி தெரிவித்தார்.



ஒருவர் குடிக்கு அடிமையாகும்போது, அவர்களின் குழந்தைகள் முன்னேற்றம் பாதிக்கும் என்றார் மஞ்சி. அத்துடன் குடிப்பவர்களின வாழ்க்கை தரம் உயராது என்று குறிப்பிட்ட பீகார் முதலமைச்சர், குடித்துதான் ஆக வேண்டுமென்றால் அளவோடு மருந்தாக குடியுங்கள் என்றும் யோசனை தெரிவித்தார்.

தனது 70 வயது ஆண்டு கால வாழ்க்கையில் தான் குடித்ததே இல்லை என்றும், இந்த சமூகத்தில் தலித் மக்கள் முன்னேற வேண்டுமானால் குடியை நிறுத்த வேண்டும் என்றும் ஜிதன்ராம் மஞ்சி கேட்டுக் கொண்டார்.

குடியை நிறுத்திவிட்டு தலித் மக்கள்கல்வி அறிவு பெற வேண்டும் என்றும், ஆண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெண் குழந்தைகளுக்கும், கல்வி அறிவை ஊட்ட வேண்டும் என்றும், பீகார் முதலமைச்சர் ஜிதன்ராம் மஞ்சி வலியுறுத்தினார்.

குடிக்கு அடிமையாகும் ஒருவரால் அவரது குடும்பம் பாதிப்பு அடையும், வாழ்க்கை தரம் உயராது.


ஜிதன்ராம் மஞ்சியின் வார்த்தைகளில் உண்மை உள்ளது.

அதேநேரத்தில் அளவோடு குடித்தால் தப்பு இல்லை என்ற அவரது வாதம் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த கருத்தை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே நமது ஆசை...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Thursday, September 4, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (92)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"

நாள் - 92



நாடு முழுவதும் பூரண மது விலக்குச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு...

காந்தியவாதி சசிபெருமாள் அறிவிப்பு...


நாடு முழுவதும் பூரண மது விலக்குச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் விரைவில் பொது நல வழக்கு தொடரப்படும் என்று தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், காந்தியவாதியுமான சசிபெருமாள் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாள்களாக சசிபெருமாள் இருந்து வந்த உண்ணாவிரதத்தை, ஒடிஸா மாநிலங்களவை உறுப்பினர் ஏ.வி. சுவாமி பழரசம் கொடுத்து 4.9.14 அன்று முடித்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து சசிபெருமாள் பேசினார். அப்போது, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும்,  அப்போது, பூரண மது விலக்கு சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவது மாநிலங்கள் தொடர்பான விவகாரம் என்றும் அவர் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் கேரள அரசைப் போல நடவடிக்கை மேற்கொண்டால் பரவாயில்லை என்றும்,  இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாகவும், தம்மை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அழைத்துச் சென்று இதுதொடப்பாக பேசுவதாகவும், உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டதாகவும் சசிபெருமாள் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் உண்ணாவிரதத்தை கைவிட முடிவு செய்ததாக கூறிய சசிபெருமாள், இந்திய அரசமைப்புச் சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டு நாடு முழுவதும் பூரண மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தக் கோரியும், போதைப் பொருள்களுக்குத் தடை விதிக்கக் கோரியும் தேசிய மக்கள் கூட்டமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய ஏ.வி. சுவாமி, காந்தியவாதி என்ற முறையில் ஆதரவு தெரிவித்து, உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வந்தாகவும்,இந்த விவ காரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப இருப்பதாகவும் தெரிவித்தார்.

டெல்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் பேசும்போது, நாடு முழுவதும் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி போராடி வரும் காந்தியவாதி சசிபெருமாள், மத்திய, மாநில அரசுகளைத் தொடர்பு கொள்வதற்கும், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதிடவும் அனைத்து உதவிகளையும் செய்ய இருப்பதாகவும் கூறினார்.

மதுவுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதி சசிபெருமாளின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================

Sunday, August 31, 2014

சென்னையில் நான்......(12)

சென்னையில் நான்......(12)



சென்னை ஒரு அருமையான மாநகரம்....

அமைதியான மாநகரம்...

இப்படியெல்லாம் சொல்ல எனக்கு ஆசைதான்.

ஆனால்,

சென்னையில் எனக்கு நேர்ந்த ஒருசில அனுபவங்களால், அப்படி என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை.

சென்னையில் பல ஊடக ஜாம்பவான்களை, இளம் செய்தியாளர்களை, இளம் பத்திரிகையாளர்களை, சமூக ஆர்வலர்கள், இஸ்லாமிய அறிஞர்களை நான் சந்தித்து இருக்கிறேன்.

அவர்களில் பலர் என்னுடன் நெருங்கி பழகி இருக்கிறார்கள்.

சகோதர அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்...

குறிப்பாக,

ஜோ.ஸ்டாலின் (மக்கள் டி.வி. தற்போது ஜுனியர் விகடன்)

மகாலிங்கம் (சன் டி.வி. தற்போது, புதிய தலைமுறை டி.வி.)

மணிகண்டன், (மக்கள் டி.வி. தற்போது புதிய தலைமுறை டி.வி.)

மெய்யருள் (மக்கள் டி.வி. தற்போது வேறு நிறுவனம்)

திருமலை (ஜி. டி.வி. தற்போது வேந்தர் டி.வி.)

சீனிவாசன் (ஜி.டி.வி. தற்போது புதிய தலைமுறை டி.வி.)

கப்பார் (ஜி, டி.வி. தற்போது புதிய தலைமுறை டி.வி.)

ஜாகீர் (புதிய தலைமுறை டி.வி.)

செல்வநாயகம் (மக்கள் டி.வி. தற்போது ஜெயா டி.வி.)

அன்பரசன் (சன் டி.வி. தற்போது மக்கள் டி.வி.)

பிரசன்னா (ஜி டி.வி. தற்போது தந்தி டி.வி.)

மோசஸ் (ஜி டி.வி. தற்போது சன் டி.வி.)

ராஜசேகர் (சன் டி.வி. தற்போது வேறு நிறுவனம்)

பரணி (விஷுவல் எடிட்டர், புதிய தலைமுறை டி.வி.)

பிரம்மா (மக்கள் டி.வி. தற்போது வேறு நிறுவனம்)

பாலாஜி (மக்கள் டி.வி. தற்போது பாலிமர் டி.வி.)

பூபதி (மக்கள் டி.வி. தற்போது வேறு நிறுவனம்)

அருணாசலம் (மக்கள் டி.வி)

முரளி (மக்கள் டி.வி. தற்போது கேப்டன் டி.வி.)

ஆனந்த்பாபு (மக்கள் டி.வி. தற்போது தந்தி டி.வி)

ஞானம் (சன் டி.வி. தற்போது வேறு நிறுவனம்)

விஜய்தேவ் (மக்கள் டி.வி. தற்போது வேறு நிறுவனம்)

கதிர் சரவணன் (மக்கள் டி.வி. தற்போது சன் டி.வி.)

சங்கரபாண்டி (மக்கள் டி.வி. தற்போது கலைஞர் டி.வி)

பாண்டியன் (ஜி டி.வி. தற்போது வேறு நிறுவனம்)

கிளிண்டன் (ஜி.டி.வி. தற்போது வேறு நிறுவனம்)

முருகப்பெருமாள் (மக்கள் டி.வி. தற்போது புதிய தலைமுறை டி.வி.)

சிராஜுல் ஹசன் (பொறுப்பாசிரியர் சமரசம் இதழ்)

பேராசிரியர் சேமுமு முஹம்மத் அலி

சகோதரர் அப்துர் ரகீப் (இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம்)

சகோதரர் சிக்கந்தர் (இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம்)

சகோதரி பாத்திமா முஸப்பர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

இப்படி, பல அருமையான நல்ல உள்ளங்களை, இதயங்களை, நான் சந்திக்க வாய்ப்பு அளித்தது இந்த சென்னை மாநகரம்தான்.

அவர்கள் மூலம் பல நல்ல அனுபவங்கள், வாழ்க்கை நெறிமுறைகள் ஆகியவற்றை கற்றுக் கொண்டது இந்த சென்னையில்தான்.

அதேநேரத்தில்,

ஒருசில நாதாரிகளை நான் சந்தித்ததும் இந்த சென்னையில்தான்.

அந்த நாதாரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கி, ஊடகத்துறையில் பல அருமையான வாய்ப்புகளை இழந்ததும் இந்த சென்னையில்தான்.

அந்த நாதாரிகளின் முகங்கள் என் கண் முன்னே, வந்து செல்லும்போதெல்லாம், சென்னையை நினைத்து நான் வேதனை அடைவது உண்டு...

இப்படிப்பட்ட ஏராளமான நாதாரிகளின் புகலிடம் சென்னையாக இருக்கிறதே என மன வேதனை அடைந்தது உண்டு.

ஆனால், இவையெல்லாம் எனக்கு பாடங்கள்.

இப்படி, பல வாழ்க்கை பாடங்களை சொல்லி தந்த சென்னையை நான் எப்படி மறக்க முடியும்...

(அனுபவங்கள் தொடரும்)

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Thursday, August 28, 2014

சென்னையில் நான்......! (11)

சென்னையில் நான்......! (11)


சென்னையில் ஊடகத்துறை நண்பர்கள், பத்திரிகையாளர்கள் என பல சகோதரர்களை  சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிட்டியது.

அப்போது, அவர்களுடன் சேர்ந்து  நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு  இதோ உங்கள் பார்வைக்கு,....



சகோதரர் காத்திக்கின் வீட்டில்...


அலுவலகத்தில் ரொம்ப பிஸியான நேரத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ்...


சகோதரர் அய்யன் பெருமாளுடன்...


மற்றொரு புகைப்படம்...


சகோதரர் அய்யப்பனுடன்...


அலுவலகத்தில் பணியின்போது...


மற்றொரு புகைப்படம்...


தோழி சரஸ்வதியுடன்...


மற்றொரு புகைப்படம்...


தோழி புவனாவுடன்...


வித்தியாசமான கோணத்தில் மற்றொரு புகைப்படம்..


சகோதரர்கள் ஹரிகிருஷ்ணன் மற்றும் முரளியுடன்...


மற்றொரு புகைப்படம்


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

சென்னையில் நான்......! (10)

சென்னையில் நான்......! (10)

சென்னையில் ஊடகத்துறை நண்பர்கள், பத்திரிகையாளர்கள் என பல சகோதரர்களை  நான் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிட்யது. 

அப்போது, அவர்களுடன் சேர்ந்து நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு,....




மூத்த பத்திரிகையாளர் மீரானுடன்...


பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் பேராசிரியர் சேமுமுமுடன்...


சென்னையில் நடைபெற்ற ஈத்மிலன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது...


இளம் விஷுவல் எடிட்டர் குணாவுடன்...


ஜி டி.வியின் சக பணியாளர்களுடன்...


தந்தி டி.வி. திருக்குமரனுடன் பின்பக்கத்தில் மூத்த பத்திரிகையாளர் ஜெகதீஷ்....



மூத்த பத்திரிகையாளர் செல்வநாயகம் மற்றும் இளம்பரிதியுடன்...


மற்றொரு புகைப்படம்...


ஜி.டி.வி. தொலைக்காட்சியில் சம்பள பிரச்சினையின்போது ஆலோசனைக் கூட்டம்...


மற்றொரு புகைப்படம் (மூத்த பத்திரிகையாளர் ராமசந்திரபாபு மற்றும் பலர் உள்ளனர்)


ராஜ் டி.வி. இளம் பததிரிகையாளர் சீதாபதியுடன்...


மற்றொரு புகைப்படம்...


மக்கள் தொலைக்காட்சி கார்த்திக்குடன்...


மற்றொரு புகைப்படம்...


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

சென்னையில் நான்......! (9)

சென்னையில் நான்......! (9)



சென்னையில் ஊடகத்துறை நண்பர்கள், பத்திரிகையாளர்கள், என பல சகோதரர்களை நான் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிட்டியது.

அப்போது, அவர்களுடன் சேர்ந்து நான்  எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு,....


தந்தி டி.வி. இளம்பரிதியுடன்....


அலுவலகத்திற்கு செல்ல புறநகர் ரயிலில் பயணம்....


தந்தி டி.வி. திருக்குமரனுடன்....


தொழில் நுட்ப வல்லுநர் கிளின்டனுடன்...


தம்பி சீனுவுடன்.....


ஜி டி.வி. அலுவலக சக பணியாளர்களுடன் பணியில் மும்முரம்....


மற்றொரு புகைப்படம்...


மூத்த பத்திரிகையாளர்களுடன்...


திருக்குமரன் மற்றும் இளம் பரிதியுடன்..


ஜி டி.வி. அலுவலகத்தில் ரொம்ப பிஸி...


மற்றொரு புகைப்படம்...


இளம் செய்தியாளர் பாபுவுடன்...


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுடன்..


பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் பேராசிரியர் சேமுமுமுவுடன்...


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================  

Wednesday, August 27, 2014

சென்னையில் நான்......! (8)

சென்னையில் நான்......! (8)



சென்னையில் ஊடகத்துறை நண்பர்களை, சகோதரர்களை  சந்தித்தபோது, அவர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு,....



செய்தி வாசிப்பு அறையில்...



தம்பி சீனுவுடன்... (புதிய தலைமுறை தொலைக்காட்சி)


தோழி சாந்திவுடன் (தந்தி டி.வி.)


தம்பி திவ்யவிக்னேஷ்வுடன் (ஜெயா டி.வி.)


சகோதரர் கண்ணனுடன்...




செய்தி வாசிப்பு அறையில்...


செய்தி வாசிப்பு அறையில்...


செய்தி தயாரிப்பு அறையில் தம்பி சீனி, சகோதரர் ராஜேந்திரன், ஆகியோருடன்..(ஜி டி.வி.)


சகோதரர் ஆனந்த்துடன் (ராஜ் டி.வி.)


சகோதரர் ஆனந்த்துடன் ( மற்றொரு படம்  ( ராஜ் டி.வி.)


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================