"ஔரங்கசீப்பின் மகள் ஜீனத்-உல்-நிசாவால் வளர்க்கப்பட்ட சாம்பாஜி மகாராஜின் மகன் ஷாஹு மகாராஜ்"
முகலாயப் பேரரசர்கள் குறித்து மக்கள் மத்தியில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. உண்மை வரலாறுகள் மறைக்கப்பட்டு, அவர்கள் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்ற ஒரு பொய்யான தோற்றத்தை தற்போது பாசிச அமைப்புகள் உருவாக்கி வருகின்றன. குறிப்பாக, முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் குறித்து பொய்யான தகவல்கள், வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த மாமன்னர் ஔரங்கசீப் மற்றும் அவரது குடும்பத்தினர் எந்தளவுக்கு சகோரச் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மீது அன்பு கொண்டிருந்தார்கள் என்ற உண்மையான வரலாற்றுத் தகவல்களை அறியும்போது, உண்மையிலேயே முகலாயப் பேரரசர்கள் குறித்து பெருமையுடன் புகழ் பாட மனம் ஆவல் கொள்கிறது. அத்தகைய உண்மை வரலாற்றின் ஒரு பகுதி தான், ஔரங்கசீப்பின் மகள் ஜீனத்-உல்-நிசாவால் சாம்பாஜி மகாராஜின் மகன் ஷாஹு மகாராஜ் வளர்க்கப்பட்டார் என்ற தகவலாகும்.
ஔரங்கசீப்பின் மகளால் வளர்க்கப்பட்ட ஷாஹு மகாராஜ்:
சத்ரபதி சம்பாஜி மகாராஜ் குறித்த ‘சாவா’ திரைப்படம் வெளியானதிலிருந்து முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், தற்போது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். சமீபத்தில், ஔரங்கசீப்பை ‘கொடுங்கோலர் ஆட்சியாளர்’ என்று அழைக்காததற்காக சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏ. அபு அசிம் ஆஸ்மி மகாராஷ்டிராக சட்டமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இத்தகைய சூழ்நிலையில், தற்போது, பிரபல மராத்தி நடிகர் கரண் மானேவின் ஒரு பதிவு விவாதத்தில் உள்ளது, அதில் அவர் ஔரங்கசீப்பின் மகள் ஜீனத்-உல்-நிசாவின் தாராள மனப்பான்மையைப் பாராட்டி, ஜீனத்-உல்-நிசா, சத்ரபதி ஷாகு மகாராஜை தனது சொந்த மகனைப் போல வளர்த்ததாக கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், சத்ரபதி ஷாகு சதாராவில் ஜீனத்-உல்-நிசாவின் பெயரில் ஒரு மஸ்ஜித்தைக் கட்டியதாகவும், அதற்கு அவர் பேகம் மஸ்ஜித் என்று பெயரிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கரண் மானேவின் இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரண் மானே தனது பதிவில், "சதாரா நகரில் பேகம் மஸ்ஜித் என்று அழைக்கப்படும் ஒரு மஸ்ஜித் சற்று உயரத்தில் உள்ளது. இந்த மஸ்ஜித்தை யார் கட்டினார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், சத்ரபதி சாம்பாஜியின் மகன் சத்ரபதி ஷாஹு மகாராஜ் தான் அதை கட்டினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடுத்து என்ன நடக்கும்னு நான் சொல்றேன் என்று தெரிவித்த கிரண் மானே, இந்த மஸ்ஜித் யாருடைய பெயரில் கட்டப்பட்டது என்று யூகிக்கவா? என்று கேள்வி எழுப்பி, ஔரங்கசீப்பின் மகள் ஜீனத்-உல்-நிசாவின் நினைவாக ஷாஹு மகாராஜ் இந்த வரலாற்று சிறப்புமிக்க மஸ்ஜித்தைக் கட்டினார் என்றும், சத்ரபதி சம்பாஜி இந்த உலகத்தை விட்டுச் சென்றபோது, ஷாஹு மகாராஜுக்கு 5 வயது என்றும் அவர் எழுதியுள்ளார்.
ஜீனத்-உல்-நிசாவின் பெருந்தன்மை:
பேரரசி யேசுபாய், ஔரங்கசீப்பின் சிறையிருப்பில் இருந்தார். அந்த நேரத்தில், ஜீனத்-உல்-நிசா, ஷாஹு மகாராஜை தனது சொந்த மகனாக வளர்த்தார். அவர் யேசுபாயை தனது சொந்த சகோதரியைப் போல கவனித்துக் கொண்டார். யேசுபாயும் ஷாஹு மகாராஜும் சிறையில் இருந்தனர். ஆனால் அவர்களின் அரச அந்தஸ்து எல்லா வகையிலும் மதிக்கப்பட்டது. எனினும் சத்ரபதி சாம்பாஜியின் கொலையின் பின்னணியில் சில சந்தை வகை வரலாற்றாசிரியர்கள் பொய்யான தகவல்களை பரப்பி இருக்கிறார்கள்.
ஆனால் சதாரா இராச்சியத்தின் நிறுவனர் மற்றும் அவரது மரணத்தின் போது சத்ரபதி சாம்பாஜியின் வாழ்க்கையால் அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு அனைத்தையும் உண்மையான தகவல்களை தேடி அறிய வேண்டும்.. சம்பாஜி ராஜேவின் உண்மையான கொலையாளிகள் யார் என்பதைக் கண்டறிய, இது போன்ற உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் நமது விசாரணையை நாம் அடிப்படையாகக் கொள்ள வேண்டும். உடலில் சொந்த தலைகள் (மூளை) வைத்திருப்பவர்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை.
சரி! இது ஒரு அலங்காரம், என் கருணையுள்ள இதயம். சமூகத்தின் ஏழைகள், மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காக அவர் பாடுபட்டார். அவரது கருணை, ஔரங்கசீப் போன்ற நல்ல இதயம் கொண்ட மன்னரைத் தொட்டது. அவருடைய அழகிய படைப்புகளைக் கருத்தில் கொண்டு, அவர் அவருக்கு 'பாத்ஷாஹி பேகம்' என்ற பட்டத்தை வழங்கினார். ஔரங்கசீப்பின் சிறையிலிருந்து திரும்பிய பிறகு, ஷாஹு மகாராஜால் ஜீனத் பேகத்தை மறக்க முடியவில்லை. அவர் தன்னை ஒரு தாயைப் போல நேசித்தார். அவரது நினைவை என்றென்றும் பாதுகாக்க, அவர் சதாராவில் பேகம் மஸ்ஜித் என்று அழைக்கப்படும் இந்த வரலாற்று சிறப்புமிக்க மஸ்ஜித்தைக் கட்டினார். அது இன்றும் உள்ளது என்று கரண் மானே கூறியுள்ளார். வெறுப்பைப் பரப்புபவர்களுக்கு சமூக ஊடகங்களில் மராத்தி நடிகர் கரண் மானேவின் கடுமையான பதில் உண்மை வரலாற்று வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
ஜீனத்-உல்-நிசா பேகம்:
ஜினத்-உன்-நிசா பேகம் ஒரு முகலாய இளவரசி மற்றும் பேரரசர் ஔரங்கசீப் அவரது மனைவி தில்ராஸ் பானு பேகத்தின் இரண்டாவது மகள் ஆவார். அவரது தந்தை அவருக்கு பாட்ஷா பேகம் என்ற கௌரவப் பட்டத்தை வழங்கினார். பெண்களின் நகை என்று செல்லமாக அழைக்கப்படும் ஜினத்-உன்-நிசா பேகம் அக்டோபர் 5, 1643 அன்று பிறந்தார். அவரது தாயார் பெர்சியாவின் முக்கிய சஃபாவிட் வம்சத்தின் இளவரசி மற்றும் குஜராத்தின் வைஸ்ராயான மிர்சா பாடி-உஸ்-ஜமான் சஃபாவியின் மகள் ஆவார். அவரது தந்தைவழி தாத்தா ஐந்தாவது முகலாய பேரரசர் ஷாஜகானின் ஆட்சிக் காலத்தில் பிறந்தார்.
ஜினத்-உன்-நிசா தனது மூத்த சகோதரி இளவரசி ஜெப்-உன்-நிசா மற்றும் அவரது தங்கை இளவரசி சுப்தத்-உன்-நிசா பேகம் ஆகியோரைப் போலவே இஸ்லாமியக் கோட்பாடுகளைப் பற்றிய ஆழமான அறிவைக் கொண்டிருந்தார். அவர் தனியார் ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்களால் கல்வி கற்றார், மேலும் திருமணம் செய்து கொள்ள மறுத்து, தனது வாழ்நாள் முழுவதும் தனிமையில் இருக்கத் தேர்ந்தெடுத்தார்.
கட்டிடக்கலைக்கு பங்களிப்புகள்:
டெல்லியின் தர்யாகஞ்சில் அமைந்துள்ள ஜீனத்-உன்-நிசாவால் கட்டப்பட்ட ஜீனத்-உன்-நிசா பதினான்கு கேரவன்செராய்களைக் கட்டியதாக அறியப்படுகிறது. முப்பத்தேழு வயதில், அவத்-ஐ வங்காளத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் பல விடுதிகளைக் கட்டும் திட்டத்தை அவர் மேற்கொண்டார். அவரது இந்த முயற்சி அவரது தந்தையின் பாராட்டைப் பெற்றது.மேலும், அவர் சுமார் 1700 ஆம் ஆண்டில் டெல்லியில் உள்ள செங்கோட்டையின் ஆற்றங்கரைச் சுவரில் ஜீனத்-உல்-மசாஜித் தனது செலவில் கட்டினார். மறைவுக்குப் பிறகு அங்கு அவர் அடக்கம் செய்யப்பட்டார். பாரம்பரியத்தின்படி, அவள் தன் தந்தையிடமிருந்து அன்பளிப்பைக் கேட்டு, அதை மஸ்ஜித்தைக் கட்டுவதற்குச் செலவிட்டார் என தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
உண்மை வரலாற்றை அறிய வேண்டும்:
பேரரசர் ஔரங்கசீப் குறித்தும், அவரது மகள் ஜீனத்-உன்-நிசா பேகம் குறித்தும், உண்மையான தகவல்களை நம் சமுதாயம் அறிந்துகொள்ள வேண்டும். தற்போது நாடு முழுவதும் ஒருவித வெறுப்பு விதைக்கப்பட்டு வரும் நிலையில், முகலாயப் பேரரசர்கள் எந்தளவுக்கு அனைத்துச் சமுதாய மக்களுக்கு ஆதரவாக நல்ல ஆட்சியை நடத்தினார்கள் என்பதை அறிந்துகொள்ள ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். பொய்யான வரலாற்றுத் தகவல்களையும் வதந்திகளையும் ஒருபோதும் உடனே நம்பி விடக் கூடாது. ஒவ்வொரு தகவல்களும் உண்மை தானா என கேள்வி கேட்டு ஆராய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வரலாற்று உண்மைகளை தேட வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பு மூலம் முகலாய மன்னர்களின் நல்ல பண்புகளையும், நல்ல ஆட்சி குறித்தும் நாம் நிச்சயம் அறிந்துகொள்ள முடியும். இத்தகைய ஆதாரப்பூர்வான தகவல்களை சகோதரத் சமுதாய மக்களிடம் நாம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். தற்போது, முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு சிறிது முற்றுப்புள்ளி வைக்க இத்த்கைய உண்மை வரலாறுகள் நிச்சயம் பயன் அளிக்கும் என உறுதியாக கூறலாம்.
(குறிப்பு: ‘சாவா’ திரைப்படம் வெளியானப் பிறகு, முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். இந்த செய்திகள் குறித்த உண்மைகளை தேடும்போது கிடைத்த வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது)
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்