Sunday, February 4, 2024

கண்டன பேரணி....!

A massive march condemning the ongoing Israeli aggression in Gaza takes place in Frankfurt, Germany.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜெர்மனியில் மக்கள் கண்டன பேரணி...!



Saturday, February 3, 2024

மனிதநேயம்....!

இதுதான் எங்கள் இந்தியா....!

ஜம்முவில் முஸ்லிம் ஒருவர் வீதியில் தொழுது கொண்டிருக்கும்போது திடீரென மழை பெய்யத் தொடங்குகிறது.. உடனே காருக்குள் இருந்த சீக்கியர் குடையை எடுத்துக்கொண்டு விரைகிறார்.. பார்க்கவே அழகா இருக்கிறது.



உங்களால் முடியும்...!

நம்புங்கள்....!  உங்களால் முடியும்...!!


காலம் மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வேகமான கால ஓட்டத்தின் காரணமாக, இளமையும் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்கிறது. நாம் நினைக்கும் எண்ணங்கள், செயல்கள், திட்டங்கள், தீர்மானங்கள், ஆசைகள் இவை யாரும் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக நம்மில் பலர் கவலை அடைந்து விடுகிறார்கள். தங்களுடைய ஆசைகள் நிறைவேறவில்லையே, தங்களுடைய கனவுகள் பலிக்கவில்லையே என கவலை அடைந்து விடுகிறார்கள். இந்த கவலை, அவர்களை வீட்டிலேயே முடங்கி வைத்து விடுகிறது. மேலும், உற்சாகமாக பணியாற்ற வைப்பதில் இருந்து தடுத்து நிறுத்தி விடுகிறது. நமக்கு வயது ஆகிவிட்டது. இனிமேல் நாம் எதுவும் செய்ய முடியாது. வாழ்க்கையில் சாதிக்க நமக்கு தேம்பு இல்லை. இப்படி பலர் நினைத்துவிடுகிறார்கள். இந்த எண்ணமே அவர்களை திரும்ப திரும்ப ஆட்டிப் படைத்து, உற்சாகமாக செயல்படுவதில் இருந்து தடுத்து விடுகிறது. இதன் காரணமாக, நம்பில் பலர் தங்களுடைய, நல்ல திட்டங்களை, கனவுகளை நிறைவேற்றாமல் முதுமையை கொடூரமாக அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். 

முதுமை ஒரு அழகிய வரம்:  

நாற்பது வயதை தாண்டிவிட்டவர்கள், மனதளவில் முதுமையை உணர ஆரம்பித்து விடுகிறார்கள். பொதுவாக நாற்பது வயதை எட்டியவர்களிடம் பேசினால், அவர்களிடம் ஒருவித தாழ்வு மனப்பான்மை, இயலாமை இருப்பதை நாம் காண முடியும். இந்த பண்புகளே அவர்களை மேலும் செயல்படுவதில் இருந்து தடுத்து நிறுத்தி விடுகிறது. இளமை எப்படி ஒரு அழகிய வரமோ, அதுபோன்று முதுமையும் ஒரு நல்ல அழகிய வரமாகும். இளமை, முதுமை ஆகிய இரண்டையும் நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான், அந்த இரண்டு பருவங்களிலும் நாம் உற்சாகமாக செயல்பட முடியும். மகிழ்ச்சியாக இருக்க முடியும். 

இளமைப் பருவத்தில் சரியான வழிக்காட்டுதல்கள் இல்லாமல், பலர் தங்களது நேரங்களை வீணாக்கிவிடுகிறார்கள் என்பது உண்மையாகும். இளமையில் ஒவ்வொருவருக்கும் நல்ல ஆலோசனைகளுடன் வழிக்காட்டுதல்கள் மிகவும் அவசியமாகும். அப்படி இருந்தால், ஒருவரின் வாழ்க்கையில் அவர் நினைத்தப்படி, சாதனைகளை செய்ய முடியும். அவர் நினைத்த வாழ்க்கையை பெற முடியும். குறிப்பிட்ட துறையில் சாதிக்க முடியும். விஞ்ஞானியாகவோ, பொருளாதார நிபுணராகவோ இப்படி பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த முறையில் பயணிக்க முடியும். ஆனால், இளமையை தவற விட்டவர்கள், முதுமையிலும் சரியான திட்டமிடல் மூலம் தாங்கள் நினைத்த துறையில் நிச்சயம் சாதிக்க முடியும். அதற்கு முதலில் முதுமையை எட்டியவர்கள் அனைவரும், தங்களுக்கு முதுமை வந்துவிட்டதே என்று நினைப்பதை நிறுத்திவிட்டு, முதுமை என்பது ஒரு அழகிய வரம் என நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டும். முதுமை சாபம் இல்லை என்பதை மனதில் உறுதியாக நினைத்து, முதுமையை அனுபவிக்க வேண்டும். இப்படி செயல்பட்டால், நிச்சயம் முதுமையிலும் ஒருவர் சாதிக்க முடியும். 

முதுமையில் சாதித்தவர்கள்:


முதுமையை கண்டு வீட்டில் முடங்கி விடாமல், அதை நன்கு பயன்படுத்தி வாழ்க்கையில் சாதித்தவர்கள் உலகில் நிறைய பேர் இருந்து வருகிறார்கள். இந்தியாவில் கூட, 40 வயதுக்கு மேல், தங்களுடைய வாழ்க்கையை தொடங்கிய பலர், மிகப்பெரிய அளவுக்கு சாதித்து இருக்கிறார்கள். ஔவையாரை நாம் அனைவரும் நன்கு அறிவோம். மக்களை நல்வழிப்படுத்த அவர் அருமையான நூல்களை எழுதி இருக்கிறார். இந்த நூல்கள் அனைத்தும் அவருடைய முதுமைக் காலத்தில் எழுதப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இதேபோன்று, இளமையில் பல்வேறு காரணங்கள், சூழ்நிலைகள் காரணமாக கல்வியை தவற விட்டவர்கள், தங்களுடைய கல்வி ஆர்வத்தை முதுமையில் நிறைவேற்றி இருக்கிறார்கள். அதற்கு ஒரு நல்ல உதாரணம், கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம், செப்பாட் கிராமத்தைச் சேர்ந்த 96 வயது காத்தியாயினி அம்மாளை குறிப்பிடலாம். அனைவருக்கும் கல்வியறிவு என்ற திட்டத்தில் சேர்ந்த காத்தியாயினி அம்மாள், தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்தார். 

கல்வி கற்க வயது தடையில்லை என்பதை நிரூபித்து மாலை நேரக் கல்லூரிகளில் சேர்ந்து படித்தவர்கள், இன்று புகழ்பெற்ற வழக்கறிஞர்களாகவும், சட்ட வல்லுநர்களாகவும், நீதிபதிகளாகவும் உள்ளனர் என்பதை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். 

பெண்களில் கூட முதிய வயதில் சாதித்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. குடும்பத்தைக் கவனத்திக் கொண்டு, தங்களுடைய கனவு திட்டங்களை நிறைவேற்ற அவர்கள், சரியான முறையில் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு எட்டி இருக்கிறார்கள். 

ஆர்வம் மிகவும் அவசியம்:

முதுமையில் சாதிக்க ஒருவரிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம், ஆர்வம் மட்டுமே. அத்துடன், தம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை நிச்சயம் இருக்க வேண்டும். இந்த இரண்டும் இருந்தால், தடைகளை உடைத்து நிச்சயம் முதுமையில் ஒருவர்,  தான் நினைத்தப்படி எதையும் சாதிக்க முடியும். தமிழகத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற முதியவர், தனது 72வது வயதில், இந்தோனேஷியாவில் நடந்த தடகளப் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளார். இளம் வயதில் பல்வேறு சூழ்நிலைகளில் முடியாமல் போன தனது கனவுகளை, ஆசைகளை முதுமையில் அவர் நிறைவேற்றி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.  வாட்டிய முதுமையையும், உடல்நிலை பாதிப்புகளையும் ஓரம்கட்டிவிட்டு, இவர் சாதனை புரிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

நாற்பது வயதை எட்டிவிட்டவர்கள், கலைப்பட்டு, பயம் அடைந்து, சோம்பல்பட்டு, இளமையிலேயே முதுமை அடைந்து விடுகிறார்கள். உண்மையில் முதுமை என்பது வயதில் இல்லை. அது மனதில் தான் உண்டு என்பதை ஏனோ அவர்கள் மறந்துவிடுகிறார்கள். எந்தவொரு துறையிலும் நாம் சாதிக்க வேண்டுமானால், அதற்கு நம்மிடையே நல்ல உயர்ந்த ஆர்வம் இருப்பது மிகவும் அவசியமாகும். அத்துடன், சோம்பல் குணத்தை விட்டுவிட்டு, எப்போதும் உற்சாகமாக செயல்படும் வகையில் நாம் நமது பணிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இப்படி சரியான திட்டமிடலுடன் இயங்கினால் நிச்சயம் வாழ்க்கையில் ஒருவர் சாதிக்க முடியும். 

தன்னம்பிக்கை முக்கியம்:


உலகில் சாதித்தவர்கள், பல்வேறு துறைகளில் வென்று வரலாறு படைத்தவர்களின், வரலாற்றை நாம் படித்தால், அவர்களில் இளமையில் சாதித்ததை விட, முதுமையில் சாதித்தவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள் என்பதை காண முடியும். முதுமையில் சாதிக்க ஒருவக்கு மிகவும் அவசியமான பண்பு மற்றும் குணம், தன்னம்பிக்கையாகும். ஒருவரிடம் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தால், அது அவரை உற்சாகமாக பணியாற்ற வைத்துவிடும். கல்வி, அறிவியல் என எந்த துறையாக இருந்தாலும், அதில் சாதிக்க முழு ஈடுபாடுடன் ஒருவர் செயல்பட வேண்டும். ஏனோ தானோ என்ற வகையில் செயல்பட்டால், நிச்சயம் எதையும் சாதிக்க முடியாது. 


தன்னம்பிக்கையுடன், ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து நமது பணிகளில் இறங்கினால், நிச்சயம் காரியங்கள் வெற்றி பெறும் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்திய முஸ்லிம் அறிஞர்களில் பலர் இன்னும் தங்களது முழுமையை மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் பட்டியலை எழுதினால் அது நீண்ட பட்டியலாக வரும்.  

முதுமையில் சிறப்பாக செயல்பட்டு, சமுதாய நலனுக்காக ஒவ்வொரு நாளும் பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனை இங்கு நாம் குறிப்பிடாமல் இருக்க முடியாது. 80 வயதை நெருங்கிவிட்ட காதர் மொகிதீன், இன்னும் தன்னுடைய மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டு, நேரத்தை சரியான முறையில் திட்டமிட்டு பயன்படுத்திக் கொண்டு, செயல்பட்டு வருவதை கண்டு பல நேரங்களில் நாம் வியப்பு அடைந்து இருக்கிறோம். அவரிடம் பேசும்போது, எப்போதும் நேர்மறையான சிந்தனைகள் மட்டுமே இருக்கும். எதிர்மறையான பேச்சுகளை காண முடியாது. கல்வி, எழுத்து, அரசியல், தத்துவம், வரலாறு என எந்த துறையாக இருந்தாலும், மிகச் சிறந்த அறிவாற்றலுடன் அவர் இருப்பதை காண முடியும்.  இதற்கு முக்கிய காரணம், ஏக இறைவன் தந்த வாழ்க்கையை, முதுமையிலும் மிகச் சரியான முறையில் சிறப்பாக பயன்படுத்தி வாழ வேண்டும் என்ற எண்ணமேயாகும்.  

நிச்சயம்..உங்களால் முடியும்:

முதுமை, முதுமை என கூறிக் கொண்டே இனி வீட்டில் முடங்கி கிடக்காமல், நிச்சயம் சாதிக்க முடியும் என நினைத்து இனி உங்கள் பணிகளை அமைத்துக் கொள்ளுங்கள். சரியான திட்டமிட்டு, உங்கள் ஆசைகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்க ஆரம்பிங்கள். உங்கள் உடல்நிலை ஒத்துழைக்கும் வகையில் பணிகளை அமைத்துகொள்ளுங்கள். அரபி, உர்தூ, தமிழ், ஆங்கிலம் என ஒவ்வொரு மொழிகளையும் கற்றுக் கொள்ள உங்கள் நேரத்தை ஒதுக்குங்கள். மொழிகளை கற்க முதுமை ஒரு தடையாக இருக்காது. அதற்கு முடியும் என்ற தன்னம்பிக்கை உங்களிடம் இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை இருந்தால், நிச்சயம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு அழகிய மொழியை நாம் கற்றுக் கொள்ள முடியும். உங்கள் குடும்பதை நேசியுங்கள். மனித சமுதாயத்தின் மீது அன்பு செலுத்துங்கள். கடைசியாக, நம்புங்கள்., நிச்சயம் உங்களால் முடியும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 


Friday, February 2, 2024

இணையதளத்திற்கு அடிமை - அதிகரிக்கும் பாதிப்புகள்..!

 

இணையதளத்திற்கு அடிமையாகும் இளைஞர் சமுதாயம் – அதிகரிக்கும் பாதிப்புகள்..!

 


ஏக இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள ஏராளமான அருட்கொடைகள் மூலம், நவீன உலகில் நாள்தோறும் புதிய புதிய விஞ்ஞான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த புதிய தொழில்நுட்பங்களை சரியான முறையில் பயன்படுத்தினால், மனித சமுதாயத்திற்கு மிகச் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதை, தவறான முறையில் கையாண்டால், மிகப்பெரிய அளவுக்கு பாதிப்புகளை மனித சமுதாயம் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்த வகையில் தற்போது இணையதளம் மற்றும் செல்பேசிகள் மனித இனத்தை ஆட்டிப் படைத்து வருகிறது.

உலக நாடுகள் அனைத்திலும், இணையதளம் இல்லாத அலுவலகங்கள், வீடுகள் இல்லை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இணையதளம் மற்றும் செல்பேசிகள், மனித சமுதாயத்தை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு கருவியாக இருந்து வருகிறது என்பது உண்மையாகும். அதேநேரத்தில், இந்த நவீன விஞ்ஞான கருவிகளை நாம் சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால், மிகப்பெரிய அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இளைஞர்களின் இணைய அடிமைத்தனம்:

இணையதளம் மற்றும் செல்பேசி பயன்பாடு குறித்து இந்தியாவில் அண்மையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பிற இளைஞர்களில் பெரும்பாலோர் நீண்ட நேரம் இணையத்தில் தங்களது நேரத்தை செலவழித்து வருகிறார்கள். இதன் காரணமாக, படிப்பு மற்றும் பணிகளில் இடையூறுகள் ஏற்படுகின்றன என்று சுகாதார ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாட்டின் 19 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட 50 ஆய்வுகளில், ஒரு தொழில்நுட்ப மதிப்பாய்வு, கல்லூரி மாணவர்களில் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் பேர் இணையதளத்திற்கு அடிமையாகும் அபாயத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.  குழந்தைப் பருவத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பாதகமான அனுபவங்களைப் பெற்ற இளைஞர்கள், இணையதள அடிமைகளாக மாறுவதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம் என்று இந்தியாவின் முதல் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. குழந்தைகளாக இருந்தபோது பல அதிர்ச்சிகரமான அனுபவங்களுக்கு ஆளாகியிருந்தால், இளைஞர்கள் இணையத்திற்கு அடிமையாகும் அபாயம் அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு வழி வகுக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு எச்சரிக்கை செய்கிறது.

ஆய்வில் தகவல்கள்:

டெல்லி பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியை நவ சரஸ்வதி தலைமையில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில், இணைய அடிமைத்தனம், குழந்தைப் பருவத்தில் மது துஷ்பிரயோகம், போதைப்பொருள் துஷ்பிரயோகம், வன்முறை, மனநோய், கொடுமைப்படுத்துதல், பெற்றோரின் மரணம் அல்லது மண முறிவு, பாலியல் துஷ்பிரயோகம் போன்ற துன்பகரமான நிகழ்வுகளுக்கு இடையே உள்ள சாத்தியமான தொடர்புகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, மேலே குறிப்பிட்ட இதுபோன்ற அனுபவங்களை வெளிப்படுத்தாத இளைஞர்களிடையே 52 சதவிகிதம் இணைய அடிமைத்தனம் இருப்பதாகவும், ஒன்று முதல் மூன்று அனுபவங்களுக்கு ஆளானவர்களில் 61 சதவிகிதம் என்றும், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பாதகமான அனுபவங்களைக் கொண்டவர்களில் 80 சதவிகிதம் என்றும் தெரியவந்துள்ளது.

மருத்துவம், அறுவை சிகிச்சை மற்றும் பொது சுகாதார இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு குறித்த தகவல்களில், துன்பகரமான நிகழ்வுகளுக்கு அதிக வெளிப்பாடு, இணையத்திற்கு அடிமையாகும் அபாயம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் போக்கு:

18 முதல் 25 வயதுக்குட்பட்ட 285 பேர் மத்தியில், இணைய பயன்பாட்டுப் பழக்கம் மற்றும் குழந்தைப் பருவ அனுபவங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், இந்த ஆய்வில், 80 பேருக்கு குழந்தைப் பருவத்தில் பாதகமான அனுபவங்கள் இல்லை என்றும் 169 பேருக்கு ஒன்று முதல் மூன்று பாதகமான அனுபவங்கள் இருந்தன என்றும் தெரியவந்துள்ளது. 36 பேருக்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பாதகமான அனுபவங்கள் இருந்தன. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பாதகமான அனுபவங்களை குழந்தை பருவத்தில் வெளிப்படுத்தும் இளைஞர்கள், அத்தகைய பாதகமான வெளிப்பாடு இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, 3 புள்ளி 8 மடங்கு அதிகமான இணைய அடிமையாதல் அபாயத்தைக் கொண்டிருப்பதாக ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்ட அனுபவத்தைத் தவிர, ஒற்றை அனுபவங்களின் வெளிப்பாடு ஆபத்தை அதிகரிக்கவில்லை என்றும்,  குழந்தை பருவத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான இளைஞர்கள் இணையத்திற்கு அடிமையாகும் அபாயம் 1 புள்ள 9 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சீர்குலைக்கும் படிப்பு:

"இன்டர்நெட் தளங்களுக்கு அடிமையாதல் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே மிகவும் பரவலாக உள்ளது  என்றும்  இது, படிப்பு அல்லது பணிகளை  சீர்குலைப்பதை தாங்கள் கண்டதாக  கூறியுள்ள ஆய்வாளர்கள், மேலும் இது சமூக தனிமைப்படுத்தலுக்கு பங்களிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். சிலருக்கு, இன்டர்நெட் அவர்களின் நிஜ உலக கவலைகளில் இருந்து தப்பிக்க உதவுகிறது என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், ஆனால் சமூக கவலை அல்லது குறைந்த சுயமரியாதை உள்ள பலர் இணையத்தில் அதிக நேரம் அடிமையாக வாய்ப்பு உண்டு என்றும் தெரிவித்துள்ளனர்.

பிற நாடுகளில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள், இணைய அடிமைத்தனம் மரபணு முன்கணிப்பு முதல் சமூக மற்றும் கலாச்சார சூழ்நிலைகள் வரையிலான காரணிகளின் விளைவாக மக்களை இணைய தளங்களுக்குத் தூண்டுகிறது என தெரியவந்துள்ளது.

கவனத்தில் கொள்ள வேண்டும்:

ஒரு மனிதனின் குழந்தைப் பருவம் மிகச் சரியான முறையில் அமைந்தால், அவனுடைய கவனம் சிதறாமல், சரியான திசையில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில், உயர்ந்த நிலைக்கு செல்ல முயற்சிகள் மேற்கொள்ள ஆர்வம் பிறக்கும். எனவேதான், குழந்தைகளை சரியான முறையில் பெற்றோர்கள் பராமரித்து வளர்க்க வேண்டும் என மனநல மருத்துவர்கள் ஆலோசனை தருகிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும், பெற்றோர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், அதன்மூலம் குழந்தைகளின் வளர்ப்பு சரியான திசையை நோக்கிச் செல்லும் என்றும் மனநல வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். எனவே, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இணையதளத்தில் அடிமையாகும் போக்கை தடுக்க நினைக்கும் பெற்றோர்கள் ஒவ்வொருவரும், அவர்களின் வளர்ப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.

 

-             எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

கலந்துரையாடல்....!

இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மேற்கு வங்கத்தில் கிராம மக்களிடையே கலந்துரையாடினார்.



Thursday, February 1, 2024

சிந்தனைகள்....!

 வாழ்க்கைக்கு தேவைப்படும் அழகிய சிந்தனைகள்....!


If it doesn't challenge you, it won't change you.

=========================

Success doesn't come to you, you go to it.

=========================

எப்போதுமே நீங்கள் முறையீடு செய்து கொண்டிருந்தால்..

திருப்தியின்மை, துக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தால்..

மக்கள் உங்களை நீண்டகாலம் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

======================

Our aim for tomorrow should always be higher than the achievement of today.

===================

முன்னேறி செல்லும்போது காதுகளை மூடிக் கொள்ளுங்கள். இல்லையெனில், உங்கள் காதுகளில் விழும் வார்த்தைகளாலேயே நீங்கள் வீழ்ந்து விடுவீர்கள்.

======================

தனித்து விடப்படும் போது தான், ஒருவரின் பலமும், பலவீனமும் அவருக்கு தெரிய வருகிறது.

====================

The purpose of pain is to move us into action. It's not to make us suffer.

=====================

அன்பும் பாசமும் விலை பொருள் அல்ல. மனதிற்கு பிடித்தவர்கள் மீது வரும் ஒரு அழகான உணர்வு.

=====================

உங்களுக்கு மதிப்பில்லை என்று நீங்கள் உணரும் இடங்களில் மவுனமாக இருக்க பழகுங்கள். காலப்போக்கில் உங்கள் மவுனம் அதற்கான மதிப்பை தரும்.

==========================

நீங்கள் அழும் போது உங்கள் கண்ணீரை துடைக்க யாரும் வருவதில்லை. நீங்கள் கவலைப்படும் போது சிரிக்க வைக்க யாரும் இருப்பதில்லை. ஆனால், நீங்கள் ஒரு தவறு செய்தால் போதும், உங்களை விமர்சனம் செய்ய இந்த உலகமே கூடி வரும்.

======================

முயற்சிகள் தோல்வி அடைகிறதா, தளர்ந்து விடாதீர்கள். கொஞ்சம் வருந்திவிட்டு மீண்டும் நம்பிக்கையோடு கடந்து வாருங்கள். விதை கூட, விழுந்துதான் எழுகிறது. தோல்விகள் கூட ஒருநாள் தோற்றுப் போகும், உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்.

========================

பிடிவாதமும் வரட்டு கவுரவம் இருக்கும் வரை, எந்த உறவும் உண்மையாக இருக்காது. இருந்தாலும் நிலைக்காது.

=====================

Overthinking kills your happiness. Don't do it.

=====================

சோகமான தினமாக இருக்கும்…!

 

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின்

சிறுபான்மை அந்தஸ்து நீக்கினால்,

அது சோகமான தினமாக இருக்கும்…!

 

உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்


 

புதுடெல்லி,பிப்02-உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உலக புகழ்பெற்ற அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை நீக்கி கடந்த 1967ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 8 மனுக்கள் மீதான விசாரணை,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.  

இந்த வழக்கில், அலிகர் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், பல்கலைக்கழகத்தில் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் சேர்க்கப்படுவதாகவும் வகுப்புவாத நிறுவனமாக அலிகர் பல்கலைக்கழகம் இல்லை என்றும் குறிப்பிட்டார். சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான பாகுபாட்டைத் தடுக்க சிறுபான்மை அந்தஸ்து பாதுகாப்பு தேவை என்றும், சிறுபான்மை கல்வி நிறுவனங்களை கட்டாயப்படுத்த அரசுக்கு உரிமை இல்லை என்றும் தவான் கூறினார்.

இதேபோன்று, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்புச்  சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அலிகர் பல்கலைக்கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்தை அளித்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், அதை ரத்து செய்ய முடியாது என வாதிட்டார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தனது இறுதி வாதத்தை அவர் நேற்று நிறைவு செய்தார்.

சிறுபான்மையினருக்கு உரிமை:

அப்போது பேசிய கபில் சிபல், நாட்டில் வாழும் சிறுபான்மையின சமுதாயத்தினர், கல்வி நிறுவனங்களை நிறுவி, அதனை நிர்வாகிக்க அரசியலமைப்பு சட்டம் உரிமை வழங்கி இருப்பதாக கூறினார். ஒரு கல்வி நிறுவன நிர்வாகத்தில் அதிகளவு சிறுபான்மையின மக்களை ஈடுபடுத்தப்படுவதன் மூலம், சிறுபான்மை அந்தஸ்து மதிப்பை குறைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டம் 30 (1) அளித்த உரிமையின்படி, நிர்வாகத்தை முழுமையாக தனது கட்டுக்குள் வைத்துக் கொள்ள அலிகர் பல்கலைக்கழகத்திற்கு உரிமை உண்டு என்றும் கபில் சிபல் கூறினார். 

கறுப்பு தினம்:

அலிகர் பல்கலைக்கழகம் அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு இயங்கி வருவதாகவும், அனைத்து சமுதாய மாணவர்களும் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இத்தகையை சூழ்நிலையில், கல்வி நிறுவனங்களை தொடங்குவது மற்றும் நிர்வகிப்பது தொடர்பான பிரச்சினையில், உச்சநீதிமன்றம் இரட்டை நிலையை எடுத்தால், இனி நாட்டில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களே இருக்க முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும் வழக்கறிஞர் குறிப்பிட்டார். மேலும், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வழக்கில் சிறுபான்மை அந்தஸ்து பறிக்கும் முடிவை உச்சநீதிமன்றம் எடுத்தால், அது வருத்தம் அளிக்கும் சோகமான தினமாகவே இருக்கும் என்றும் கபில் சிபல் தெரிவித்தார்.

இந்த வழக்கில் 8 நாட்கள் விசாரணை நடைபெற்று நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

-     சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்