Tuesday, October 8, 2024

ஒரு முஸ்லிம் அமைச்சரின் சிறப்பான பணி....!

ஒரு முஸ்லிம் அமைச்சரின் சிறப்பான பணியால்  அனைத்துசமுதாய மக்களுக்கு கிடைக்கும் பலன்கள்...!

-  ஒரு சிறப்பு ரிப்போர்ட் - 

உலகில் வாழும் ஒருவருக்கு, ஒரு பொறுப்பு அல்லது பதவி கிடைக்கிறது என்றால், அந்த பதவியை அல்லது பொறுப்பை அவர் மிகச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும். தமக்கு கிடைத்து பொறுப்பு அல்லது பதவியை எப்படி நிறைவேற்றினார் என்பது குறித்து, அவர் ஏக இறைவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பது, இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியாக நம்பப்படும் நெறிமுறைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. எனவே தான் எந்த பதவிக்கு வந்தாலும், அந்த பணிகளை சிறப்பான முறையில் ஆற்றும் வகையில், அனைத்து சமுதாய மக்களுக்கும் அதன்மூலம் பலன் கிடைக்கும் வகையில், இஸ்லாமியர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு பணியாற்றி, தங்களது கடமைகளை நிறைவேற்றி வருகிறார்கள். இந்திய நாட்டில் பல்வேறு மாநிலங்களில் முஸ்லிம் அமைச்சர்கள் ஆற்றிவரும் பணிகள், மிகச் சிறப்பாகவே இருந்து வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்துவரும் ஜமீர் அகமது கான், செய்துவரும் சேவைகள், கர்நாடகா மாநில மக்களை மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும் பெருமை கொள்ளும் வகையில் கவர்ந்து வருகிறது. 

ஜமீர் அகமது கான்:

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 1966ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் ஒன்றாம் தேதி பிறந்த ஜமீர் அகமது கான், சாம்ராஜ்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். நேஷனல் டிராவல்ஸ் நிறுவனத்தை நிறுவிய பிபி பஷீர் அகமது கான், 1950களின் முற்பகுதியில் இறந்த பிறகு, அவரது மூத்த மகன் பி அதாவுல்லா கான் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இத்தகைய பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்த ஜமீர் அகமது கான், எப்போதும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வதை தனது கடமையாகவும், பொறுப்பாகவும் நினைத்து வருகிறார். வக்பு வாரிய சொத்துகளை மிகச் சிறந்த முறையில் சமுதாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்., வக்பு சொத்துகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் அவர் செய்துவரும் பணிகளை கர்நாடக மாநில மக்கள் மட்டுமல்லாமல், பிற மாநில முஸ்லிம் சமுதாய மக்களும் பாராட்டி வருகிறார்கள். 

ஐந்து அற்புதமான திட்டங்கள்:

இப்படி மிகச் சிறப்பான முறையில் தனது பணிகளை ஆற்றிவரும் ஜமீர் அகமது கான், கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநில சிறுபான்மையின நலத்துறை மற்றும் வக்பு வாரியத்தின் மூலம் ஐந்து புதிய திட்டங்களை அறிமுகம் செய்துவைத்து தொடங்கி வைத்தார். இந்த ஐந்து திட்டங்களும் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மட்டுமல்லாமல், சகோதரச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கும் மிகவும் பலன் அளிக்கும் வகையில் இருந்து வருகின்றன. புதிய திட்டங்கள் தொடர்பாக பெங்களூருவில் நடைபெற்ற விழாவில், சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் ஹஜ் துறை அமைச்சர் ரஹீம் கான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

15 புதிய மகளிர் கல்லூரிகள்:

சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில்,  வக்பு வாரியத்தின் மூலம் கர்நாடகாவில் 15 புதிய மகளிர் கல்லூரிகள் திறக்கப்படும் என்ற அறிவித்த அமைச்சர் ஜமீர் அகமது கான், இதன்மூலம், கர்நாடக மாநிலத்தில் உள்ள முஸ்லிம் பெண்கள் மிகச் சிறந்த முறையில் உயர்கல்வி பெற முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். 

சவக்கிடங்கு உறைவிப்பான் பெட்டிகள்: 

 மாநிலத்தில் உள்ள அனைத்து 242 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இலவச ஜனாஸா பெட்டிகள் (சவக்கிடங்கு உறைவிப்பான் பெட்டிகள்) வழங்கும் திட்டத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இவை அனைத்தும் வக்பு மற்றும் முக்கிய முஸ்லிம் சமூக அமைப்புகள் மூலம் அளிக்கப்படும். 242 சவக்கிடங்கு உறைவிப்பான் பெட்டிகள் வழங்குவதன் மூலம், உள்நாட்டில் ஒருவர் இறந்துவிட்டால், அவரது உடல் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரண்டு, மூன்று நாட்கள் உரிய முறையில் பாதுகாக்க முடியும். இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்கள், இறந்தவரின் உடலை பார்க்க முடியும் என்றும் ஜமீர் அகமது கான் தெரிவித்தார். 

வக்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள்: 

கர்நாடகா வக்பு வாரியத்தின் மூலம் மாநிலம் முழுவதும் இலவச ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இது 'வக்பு ஆம்புலன்ஸ்' என்று அழைக்கப்படும். நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இந்த வாகனத்தின் மதிப்பு சுமார் 40 லட்சமாகும். இந்த நவீன ஆம்புலன்ஸில் ஆக்சிஜன்  மற்றும் முதலுதவி கருவிகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளன. செவிலியர் உள்ளிட்டோரும் நோயாளிகளுக்கு முதலுதவி வழங்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மட்டுமல்லாமல், சகோதரச் சமுதாய மக்களுக்கும் பலன் அளிக்கும் என்றும், தன்னுடைய சேவையை ஆற்றும் என்றும் ஜமீர் அகமது கான் நம்பிக்கை தெரிவித்தார். 

அந்த வாகன சேவை அறிமுகம் மூலம், இந்திய வரலாற்றில் முதல்முறையாக வக்பு வாரியத்தின் மூலம், இலவச ஆம்புலன்ஸ் வாகனங்கள் அறிமுகம் செய்து இருப்பது, கர்நாடகா வக்பு வாரியம் தான் என்ற பெருமையும் அந்த வாரியம் பெற்றுள்ளது. 

கல்வி உதவித் தொகை திட்டம்:

கர்நாடகாவில் வாழும் சிறுபான்மையின மாணவர்களின் கல்வி தடையில்லாமல் தொடர, கல்வி உதவித் தொகை திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 190 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையின மாணவர்கள், தங்களது கல்வியை இடையில் நிறுத்துவது இனி தடுக்கப்படும். அவர்கள் நல்ல உயர்கல்வியை பெற தற்போது வாய்ப்பு உருவாக்கியுள்ளது. 

மதரஸா மாணவர்களுக்கு நவீனக் கல்வி:

இதேபோன்று, கர்நாடகா மாநிலத்தில் உள்ள மதரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்கள்  அனைவரும் உலகக் கல்வியும் பெற வழி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்காக மதரஸா மாணவர்களுக்கு நல்ல பயிற்சி அளித்து, அவர்கள் 10வது வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெறும் வகையில் புதிய முயற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, ஆசிரியர், கணினி உள்ளிட்ட வசதிகளுடன் மதரஸா மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மதரஸாக்களில் இருந்து கல்வி பயின்று ஆலிம், ஹாபிஸாக மாணவர்கள் வெளியே வருவதுடன், எஸ்.எஸ்.எல்.சி. தேர்விலும் அவர்கள் தேர்ச்சி பெற, தற்போது புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக நூறு மதரஸாக்களுக்கு கணினி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

பெருமை அளிக்கும் திட்டங்கள்:

விழாவில் ஐந்து திட்டங்களையும் தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் ஜமீர் அகமது கான், "கர்நாடகாவில் நாங்கள் புதிய முயற்சியை தொடங்கியுள்ளோம். தற்போது பொதுவாக சாதாரண ஆமபுலன்ஸ்களே உள்ளன . ஆனால் நாங்கள் வக்பு வாரியம் மூலம் ஏற்பாடு செய்துள்ள ஆம்புலன்ஸ்கள்,  நவீன வசதிகள் கொண்ட வாகனங்கள் ஆகும்.  அனைத்து மாவட்டங்களிலும் ஒரு ஆம்புலன்ஸ் என்ற வகையில் 30 மாவட்டங்களில் 30 வாகனங்களை நாம் கொடுத்து இருக்கிறோம். நன்கு பயிற்சி பெற்ற செவிலியர் இந்த வாகனத்தில் நிச்சயம் இருப்பார். பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் எந்தவித பிரச்சினையும் உருவாகாத வகையில், செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் சேவை ஆற்றுவார். இதேபோன்று, மாநிலத்தில் யாராவது மரணம் அடைந்துவிட்டால், அவரது உடல் எந்தவித பாதிப்பும் அடையாமல் இருக்க சவக்கிடங்கு உறைவிப்பான் பெட்டிகள் (freezer box) ஆகியவற்றை வழங்கி இருக்கிறோம். 

வக்பு வாரியத்தின் மூலம் மாநிலத்தில் ஆயிரத்து 30 மருத்துவ மாணவர்கள் உருவாக்கப்படுவார்கள் மாநிலத்தில் உள்ள மதரஸாக்களில், 100 மதரஸாக்களை தேர்வு செய்து, மார்க்கக் கல்வியுடன், உலக கல்வியையும் அளிக்கும் திட்டத்தை நாம் தொடங்கியுள்ளோம். இந்த திட்டத்தின்படி, 200 ஆசிரியர்களை நியமித்து, மாணவர்களுக்கு உலகக் கல்வி பெற பணிகளை தொடங்கியுள்ளோம். இந்த திட்டத்தின்படி, 5 ஆயிரம் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதேபோன்று, ஜன்பாட்டினா சிட்டில், வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில், ஆயிரத்து 200 குடும்ங்கள் வசிக்க கூடிய அடுக்குமாடி கட்டடம் ஒன்று கட்டப்பட உள்ளது. 

கர்நாடகாவில், முஸ்லிம் சமுதாயத்திற்காக மட்டுமல்லாமல், அனைத்து சகோதர சமுதாயத்திற்கும் பலன் அளிக்கும் வகையில் சிறுபான்மையின நலத்துறை தனது பணிகளை ஆற்றி வருகிறது. இதன்மூலம் ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது" இவ்வாறு பேசிய அமைச்சர் ஜமீர் அகமது கான், இதற்காக சிறுபான்மையின நலத்துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என போராடி பெற்று சிறப்பான முறையில் பணிகளில் ஆற்றி வருவதாகவும் தெரிவித்தார். 

குவியும் பாராட்டுகள்:

கர்நாடக மாநில சிறுபான்மையனர் நலத்துறை அமைச்சர், ஜமீர் அகமது கான், ஆற்றிவரும் பணிகளை அம்மாநில முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகிறார்கள். சாதி, மதம், மொழி, இனம் என எதையும் பார்க்காமல், தாம் ஏற்றுக் கொண்டு அரசிலமைப்பு சட்ட உறுதிமொழிக்கு ஏற்ப, ஒரு அமைச்சர் பணியாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில், ஜமீர் அகமது கான் உறுதியுடன் இருந்து சேவை ஆற்றி வருகிறார். ஏக இறைவன் அவரது பணிகளை ஏற்றுக் கொள்ள நாமும் பாராட்டி துஆ செய்கிறோம். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

நல்ல செயல்....!

 Karnataka Minister Zameer Ahmed Khan,

Inaugurated the Minority Education & Welfare Driver 2024-25 and Distributed Computers to 100 Madrasa(Educational Institution) at the Hajj Bhavan of Bengaluru on the same occasion handover New ICU Ambulances & Mortuary Freezer Boxs to 26 Districts organized by Waqf Board.



உங்களுக்கு நீங்களே .....!

உங்களுக்கு நீங்களே மிகப்பெரிய போட்டியாளர்!

உலகில் நீங்கள் மற்றவர்களைப் புகழ்வதில் தவறில்லை. யாராவது நல்ல வேலையைச் செய்தால் அவரை ஊக்குவிக்கலாம். ஆனால் அவருடன் உங்களை ஒருபோதும் ஒப்பிடாதீர்கள். உங்கள் போட்டி உங்களுடனே என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உண்மையான ஒப்பீடு, நீங்கள் நேற்று என்னவாக இருந்தீர்கள், இன்று நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. 

பொதுவாக மாணவர்களிடையே ஒரு குறிப்பிட்ட போக்கு உள்ளது. அதாவது ஒப்பிடுவது. தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது என்ற மனநிலையில் பெரும்பாலான மாணவர்கள் இருந்து வருகிறார்கள். ஆரோக்கியமான போட்டி நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் ஒப்பீடு மற்றும் போட்டி என்ற பந்தயத்தில் நல்லது, கெட்டது என்ற வித்தியாசத்தை மறப்பது சரியல்ல. சில சந்தர்ப்பங்களில் ஒப்பிடும் பழக்கம் இளைஞர்களிடையே எதிர்மறையான போக்குகளை தூண்டிவிடும். நீங்கள் உங்கள் மீது கவனம் செலுத்தும்போது உங்கள் தனிப்பட்ட வளர்ச்சி ஏற்படும். கண்ணாடி முன் நின்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களின் தற்போதைய பதிப்பு முந்தைய பதிப்பை விட சிறந்ததா? என அடிக்கடி கேட்டுக் கொள்ளுங்கள். 

சுய ஒப்பீட்டின் பலன்கள்:

உங்களுடைய முந்தைய வாழ்க்கை எப்படி இருந்தது? அதாவது ஒன்று அல்லது 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த, உங்கள் நிலை என்ன? உங்களுக்கு வயது ஏற ஏற, உங்கள் வாழ்க்கை முறையும், சூழ்நிலைகளும் மாறுகின்றன. மேலும் நீங்கள் தொடர்ந்து வாழ்க்கை முறையை மாற்றியமைத்து மாறுகிறீர்கள். இது இயற்கையான மாற்றம்தான். ஆனால் உங்கள் முந்தைய வாழ்க்கை நிலையை, உங்களை நீங்களே ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ​​நீங்கள் முன்பை விட புத்திசாலியாகவும், திறமைசாலியாகவும் ஆகிவிட்டீர்கள் என்பதை உணர்வீர்கள். உங்கள் தற்போதைய நிலை மற்றும் முந்தைய நிலையை விடவும், எதிர்கால வாழ்க்கை சூழல் கடந்த மற்றும் நிகழ்காலத்தை விடவும் சிறந்ததாக மாற்ற முயற்சிக்கும்போது, ​​அது சரியான மற்றும் ஆரோக்கியமான ஒப்பீடாக இருக்கும். 

எனவே, இது சுய ஒப்பீடு மற்றும் சுய முன்னேற்றத்திற்கான முதல் படியாகும். நீங்கள் செய்யும் தொழில் அல்லது பணியில் குறைந்த அளவு வெற்றி பெற்றிருந்தால், அடுத்த நிலைக்கு கடினமாக உழைக்க வேண்டும். இப்படி உங்களை நீங்களே ஒப்பிட்டுக் கொண்டு, செயல்பட்டால், நிச்சயம் உங்கள் தொழில், அல்லது பணியில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்பட்டு, நல்ல பலன் கிடைக்கும். உங்களை உங்களுடன் ஒப்பிட்டுக் கொண்டதன் விளைவு இது. உங்களுடன் போட்டியிட்டதன் விளைவு இது. இந்த வழியில் செயல்பட்டால், நீங்கள் ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருப்பீர்கள். ஒரு நபர் தன்னை மேம்படுத்திக்கொள்ள முடிவு செய்தால், அவரை யாராலும் தோற்கடிக்க முடியாது.

உண்மையான போட்டி:

உங்கள் உண்மையான, நிறைவான வெற்றிக்கு உங்கள் சுயம்தான், உங்கள் பணிகள்தான் பலன் அளிக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் நேற்று எப்படி இருந்தீர்கள் என்பதை மனதில் கொண்டு அந்த வகையில் நேற்றைய அந்த நபரே (நீங்களே) உங்கள் உண்மையான போட்டி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.. ஒவ்வொரு நாளும் உங்களை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். உறங்கச் செல்வதற்கு முன், ஒரு எளிய கேள்வியை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நேற்றையதை விட இன்று நான் ஏதாவது சிறப்பாகச் செய்திருக்கிறேனா? இன்று நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் அல்லது நீங்கள் என்ன செய்ய மறந்துவிட்டீர்கள், அல்லது நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் மற்றும் செய்ய முடியவில்லை என்பதைக் கண்டுபிடித்து, அடுத்த நாள் உங்களை எவ்வாறு சிறப்பாகச் செய்யலாம் என்பதைத் திட்டமிடுங்கள்.

உங்கள் உண்மையான போட்டி உங்களுடனேயே உள்ளது. மேலும் உங்களுடன் போட்டியிடுவதற்கான ஒரே வழி இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய ஒரு "செயல் திட்டத்தை" உருவாக்குவதுதான். இலக்கு பெரியதாகவும் கடினமாகவும் இருந்தால், அதை நோக்கி சிறிய படிகளை எடுத்து வையுங்கள். எதிர்மறை எண்ணத்தை அகற்றி செயல்படுங்கள். "என்னால் முடியும்", "நான் வலிமையாக இருக்கிறேன். இதை என்னால் எளிதாக செய்ய முடியும், கொஞ்சம் கவனம் தேவை" என்று எப்போதும் உங்கள் மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள்.

ஆரோக்கியமான பழக்கம்:

வேறொருவருடன் ஒப்பிட்டு போட்டியிடுவதை விட, உங்களை நீங்களே அடித்துக்கொள்வது, உங்களை மேம்படுத்திக் கொள்வது, உங்களோடு ஒப்பிடுவது மற்றும் போட்டியிடுவது சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மற்றவர்களுடன் போட்டியிடுவது உங்களைச் சிறப்பாகச் செயல்பட செய்யாது. மாறாக பல்வேறு பிரச்சினைகளை கொண்டு வந்து மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, நீங்கள் உங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிதாகவும் சிறப்பாகவும் செய்ய முயற்சிக்க வேண்டும். நீங்கள் யார்? நீங்கள் என்ன ஆவீர்கள்? என்பதில் கவனம் செலுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நேற்றையதை விட இன்று நீங்கள் கொஞ்சம் சிறப்பாக இருந்தால், நீங்கள் உண்மையான வெற்றியை நோக்கி செல்கிறீர்கள் என்று அர்த்தம். 

நம்பிக்கையை இழக்காதீர்கள்:

வாழ்க்கையில் நாம் எதை இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்கவே கூடாது. ஏக இறைவனின் மீது முழு நம்பிக்கை வைத்து, ஒவ்வொரு நாளும் நமது காரியங்களை நம்பிக்கையோடு தொடங்க வேண்டும். நம்மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையை வைத்து, ஒரு பணியில் ஈடுபட்டால், அந்த பணி, முன்எப்போதும் இல்லாத அளவுக்கும் இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். உலகில் சாதனை நிகழ்த்தியவர்களின் வரலாறுகளைப் படித்தால், சாதாரண நிலையில் தங்களுடைய வாழ்க்கையை தொடங்கிய அவர்கள், தங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து, தங்களை பிறருடன் ஒப்பீடு செய்யாமல், பணிகளை ஆற்றியதன் மூலம் வரலாற்று நாயகர்களாக மாறினார்கள் என்பது தான் உண்மையாகும். நம்மை நாமே ஒப்பிட்டுக் கொண்டு, முழு நம்பிக்கையுடன் நமது இலக்குகளை நோக்கிப் பயணம் செய்தால், நிச்சயம், நமது எண்ணங்கள் நிறைவேறும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உருவாகி எப்போதும் நிலைத்து இருக்கும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Monday, October 7, 2024

Rahul Gandhi....!

Jan Nayak  Rahul Gandhi shared a video on twitter where he spent time with Ajay and his wife in Kolhapur.

They cooked together & discussed how people understand Dalit cuisine.

He said true equality comes when every culture is respected and celebrated.

What a man RaGa is turning out to be.



Sunday, October 6, 2024

தேங்காய் .....!

தேங்காய் குறித்த ஆச்சரியமூட்டும் பல சுவையான தகவல்கள்....!

ஏக இறைவன் மனித இனத்திற்காக ஏராளமான அருட்கொடைகளை வாரி வழங்கியுள்ளான். மனிதன் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ, இயற்கை அற்புதமான பல உணவு வகைகளை மனித இனத்திற்கு மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் வழங்கிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு உணவும், சுவையில் மட்டுமல்லாமல், உடலுக்கு வழங்கும் சக்தியிலும் வெவ்வொரு வகையில் இருந்து வருகின்றன. அந்த வகையில், ஏக இறைவன் இந்த உலகத்திற்காக வழங்கிய ஒரு அற்புதமான உணவு வகை தான் தேங்காய் ஆகும். நாம் சாதாரணதாக நினைக்கும் தேங்காயில், ஏராளமான அற்புதனப் பலன்கள் குவிந்து கிடக்கின்றன என்பதை அறியும்போது, உண்மையில் வியப்புக்கு மேல் வியப்பு ஏற்படும். 

வீணாக்கப்படாத தேங்காய்:

பெரும்பாலான மக்கள் தேங்காய்களை அதிகம் விரும்புகிறார்கள். எப்போதும் பல்துறைப் பழம், சுவையான உணவுகளைத் தயாரிக்கும் போதும், அல்லது தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு ஆகியவற்றுக்கு நாம் தேடும் முக்கிய பொருளாக தேங்காய் நம்  கைக்கு வரும். விதவிதமான உணவு வகைகளை சமைக்கும்போதும் அதில் சேர்க்கப்படும் முக்கிய பொருட்களில் தேங்காய் நிச்சயம் இருக்கும். தேங்காய் சட்னி, தேங்காய் வறுவல், தேங்காய் உப்புமா, தேங்காய் புட்டு, தேங்காய் லட்டு என இப்படி பல்வேறு வகையான சுவையான உணவுகள், தேங்காய் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம், தேங்காய், சுவையாக இருப்பதுடன், உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது என்பதாகும். 

ஒரு முக்கியமான விஷயம் உங்களுக்குத் தெரியுமா? தேங்காய் வீணாக்கப்படாத ஒரு அற்புதமான உணவுப் பொருளாகும். அதாவது, தேங்காயில், எந்தப் பகுதியும் பயன்படுத்தப்படாமல் இருக்க முடியாது. தேங்காயில் உள்ள ஒவ்வொரு அம்சங்களும் நிச்சயம் பயன்படுத்த முடியும் என்ற அளவுக்கு இருப்பதால், அதை யாரும் வீணடிப்பதில்லை. மனித இனத்திற்கு பல வழிகளில் பயன் அளிக்கும் வகையில் தேங்காய் இருந்து வருகிறது என்பதை அறியும்போது, நமக்கு வியப்பு ஏற்படும். 

இயற்கையின் வரப்பிரசாதம்:

தேங்காய் உண்மையிலேயே இயற்கையின் வரப்பிரசாதம். அதன் ஒவ்வொரு பகுதியும் ஒன்று அல்லது மற்றொரு வழியில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கிட்டத்தட்ட எதையும் வீணாக்காமல் பயன்படுத்தப்படும் ஒரு உணவாக இருப்பதால், இது பொதுவாக கடவுளின் பழம் என அழைக்கப்படுகிறது. 

தேங்காயின் பல்துறை பயன்பாட்டில் இருந்து, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதன் கர்னலில் உள்ள சக்திவாய்ந்த லாரிக் அமிலம் வரை, தேங்காய் ஒரு உண்மையான ஆசீர்வாதம் என கூறப்படுகிறது. ஆரோக்கியமான கூந்தலுக்கு எண்ணெய் அல்லது சிறந்த இயற்கை எலக்ட்ரோலைட்டுக்கான தேங்காய்த் தண்ணீர் எதுவாக இருந்தாலும், அது பலவற்றை வழங்குகிறது.

தேங்காய் மூலம் கிடைக்கும் இளநீர் எனப்படும் தண்ணீர், மற்றும் தேங்காயின் உள்ளே இருக்கும் மென்மையான சதை ஆகியவை சுவையாக மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல வகையில் இருந்து வருகிறது. இளநீர் எனப்படும் தேங்காய் நீர், இயற்கையின் சொந்த புத்துணர்ச்சியூட்டும் பானத்தைப் போன்றது. உயிர் கொடுக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

பலவிதங்களில் பலன்கள்:

தேங்காயை ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டாக நாம் அனுபவிக்கலாம். ஒருவர் தனது மில்க் ஷேக்குகள் அல்லது இனிப்புகளில் சேர்க்கலாம். பொதுவாக தேங்காய் ஒரு பழமாக கருதப்படுகிறது. தேங்காயின் வெளிப்புற கடினமான ஷெல், அழகான கிண்ணங்கள், பாத்திரங்கள் அல்லது பிற அலங்கார பொருட்களாக மாற்றப்படலாம்.  உண்மையில் தேங்காயின் மேல்பகுதியில்இருந்து உறிச்சி வீசப்படும் நார் மற்றும் உமி ஆகியவை பல்துறை திறன் வாய்ந்தது. இது பெரும்பாலும் கயிறுகள், கதவு மெத்தைகள் மற்றும் தூரிகைகள் மற்றும் படுக்கை மெத்தைகளை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

தேங்காய் துருவல் கூடுகளை உருவாக்கவும், வீடுகளுக்கு ஓலைகளை உருவாக்கவும் அல்லது பல்வேறு வெற்று பொருட்களுக்கு  திணிப்புக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தேங்காய் சிறிதும் வீண் செய்யப்படதாக உணவு வகையாக இருந்து வருகிறது. இதன்மூலம் தேங்காயை நீங்கள் விரும்பும் வகையில் அதை பயன்படுத்த முடியும் என தெளிவாக அறிந்துகொள்ளலாம். 

பல வழிகளில் சேவை:

வயிறு நிரம்ப வகைவகையாகச் சாப்பிடுவதைவிட, அரை மூடி தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டால்,  உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கும். எனவே தான் தேங்காயை மட்டுமே உண்டு உயிர் வாழும் மனிதர்களும் உண்டு. உலகில் பல்வேறு மருத்துவ முறைகளிலும் தேங்காய் முக்கியப் பங்காற்றுகிறது. தேங்காய், மிகச் சிறந்த ரத்த சுத்திகரிப்புப் பண்டமாகும். தேங்காயின் மருத்துவத்தன்மை இருதயம், கல்லீரல், சிறுநீரகக் குறைப்பாடுகளை களையக்கூடியது. தாகம் தணிக்கவும் உடலின் சூட்டைத் தணிப்பதற்கும் இளநீரைப் போன்றச் சிறந்த ஒன்று இல்லை. சமனற்ற உடல் சூட்டினால் ஏற்படும் விக்கல்களை தேங்காய் நீரைப் பருகுவதால் தணிக்க முடியும். முற்றாத தேங்காய்களில் உடலுக்குத் தேவையான புரோட்டீனும் குளுகோஸும் அதிகம். வாழைப்பழம், ஆப்பிள் பழங்களில் உள்ளதைவிட அதிக புரோட்டீன் தேங்காயில் உள்ளது. இளம் தேங்காயின் குளிர்ந்த நீர் செரிமாணத்துக்கு மிகமிக ஏற்றது. குழந்தைகளுக்கும் இதனைப் பருகக் கொடுக்கலாம். வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பாதையில் தொற்றுநோய் உள்ளவர்கள் இளநீர் பருகினால் குணப்படும் வாய்ப்பு உள்ளது. தீவிர வயிற்றுப் புண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீரை தினமும் இரண்டு முறை அருந்தலாம்.

இப்படி பல வழிகளில் மனித இனத்திற்கு மட்டுமல்லாமல், கால்நடைகளுக்கும் தேங்காய் அற்புதமான சேவையை ஆற்றி வருகிறது. ஏக இறைவனின் படைப்புகள் ஒவ்வொன்றும், சாதாரணமானவை என  நாம் நினைத்துவிடக் கூடாது. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேங்காய் என்றே கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


புதிய இமாம்....!

 Newly appointed Imam, Sheikh Waleed Al Shamsan leads Fajr for the first time in Masjid Al Haram..



கூட்டம்....!

Chennai: Massive crowd at Velachery MRTS railway station to catch a train to reach Marina to watch the Indian Air Force’s Air show

Commuters said they expected S Rly to operate more trains 

There was heavy traffic on Velachery Tambaram main road too.