Sunday, September 22, 2024

ஏசி அறையில் வாழ்க்கை....!

தினமும் ஏசி அறையில் வாழ்க்கை....!

"அப்பப்பா என்ன வெயில்? உடம்பு தாங்க முடியலே. வீட்டிற்கு போனதும் முதல் வேலையாக ஏ.சி. அறையில் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும்" இப்படிப்பட்ட டைலாக்கை நாம் பலரிடம் இருந்து அடிக்கடி கேட்டு இருக்கிறோம். நம்மில் ஒருசிலர், ஏ.சி. இல்லாமல் வாழவே முடியாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். ஏ.சி.க்கு அடிமையாகி, 24 மணி நேரமும் ஏ.சி. அறையிலேயே தங்களது வாழ்க்கையை கழித்துக் கொண்டு இருக்கிறார்கள். அலுவலகம், வீடு எங்குச் சென்றாலும், அவர்களுக்கு கட்டாயம் ஏ.சி. இருக்க வேண்டும். ஏ.சி. இல்லாத ஒரு வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ சென்றுவிட்டால், மனரீதியாக அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் செயல்பாடுகளில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றன. பணியில் முழு கவனமும் செல்வதில்லை. 

சரி, ஏ.சி., மனித உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா, அல்லது கெட்டதா? என்ற கேள்வி எழுப்பினால், வீட்டிற்குள் குளிச்சியாகவும், வசதியாகவும் இருக்க ஏ.சி. பயன் உள்ளதாக இருந்தாலும், அதற்கு அடிமையாகிவிட்டால், மிகப்பெரிய அளவுக்கு உடல் பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

உடலுக்கு என்ன நடக்கும்?

ஏர் கண்டிஷனிங் (ஏசி), வெப்பமான காலநிலையில் உடலுக்கு இதமான சுகத்தை தந்து உயிர்காக்கும். ஆனால் நீங்கள் ஒவ்வொரு நாளும் குளிர்ந்த, கண்டிஷனிங் அறையில் உங்கள் நேரத்தை செலவழித்தால் உங்கள் உடலுக்கு என்ன நடக்கும்? இதுகுறித்து, ஹைதராபாத்தின் ஹைடெக் சிட்டியில் உள்ள கேர் மருத்துவமனைகளின் நுரையீரல் ஆலோசகர் டாக்டர் சதீஷ் சி ரெட்டி, வீட்டிற்குள் குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கான உதவிக்குறிப்புகளுடன், ஏசி வெளிப்பாட்டின் நன்மைகள் மற்றும் சாத்தியமான குறைபாடுகளை அருமையாக விளக்கியுள்ளார். 

"வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதன் மூலமும், காற்றின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமும் ஏசி தனது மந்திரத்தை வேலை செய்கிறது, இது வெப்பம் தொடர்பான நோய்களான ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீரிழப்பு போன்றவற்றைத் தடுக்கலாம். குறிப்பாக, வெப்பமான காலநிலையில், நவீன ஏசி அமைப்புகளில் பெரும்பாலும் தூசி, மகரந்தம் மற்றும் பிற காற்றில் உள்ள துகள்களை அகற்றும் வடிகட்டிகள் அடங்கும். உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் சுவாச பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கிறது. ஈரப்பதத்தைக் குறைப்பதன் மூலமும் ஒவ்வாமைகளை வடிகட்டுவதன் மூலமும், ஏசி அறிகுறிகளைக் குறைக்க உதவும்" என்று டாக்டர் ரெட்டி கூறியுள்ளார். 

ஏசியின் குளிர்ச்சியான விளைவுகள்:

"அதேநரத்தில், தொடர்ந்து குளிர்ச்சியான அறையில் அமர்ந்திருப்பது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும்: ஏசி காற்றை உலர்த்துகிறது. இதனால் நீங்கள் திரவங்களை வேகமாக இழக்கிறீர்கள். நீரேற்றமாக இருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏ.சி. எல்லாவற்றையும் உலர்த்துகிறது. வறண்ட காற்று வறண்ட தோல், அரிப்பு கண்கள் மற்றும் எரிச்சலூட்டும் சளி சவ்வுகளை ஏற்படுத்துகிறது. 

தொடர்ந்து குளிர்ச்சியானது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தலாம். மேலும் உங்களுக்கு சளி பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். மேலும் சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. மோசமாகப் பராமரிக்கப்படும் ஏசி யூனிட்கள் அச்சு மற்றும் ஒவ்வாமைகளை உண்டாக்கி, சுவாசப் பிரச்சனைகளைத் தூண்டும்.

குளிர் வெப்பநிலை தசை மற்றும் மூட்டு விறைப்புக்கு வழிவகுக்கும், குறிப்பாக நீங்கள் அதிகம் நகரவில்லை என்றால் உடல்நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் ஆபத்துகள் உண்டு.  எப்போதும் ஏ.சி. அறையில் இருக்க பழகிக் கொண்டால், காலப்போக்கில், உங்கள் உடல் கட்டுப்படுத்தப்பட்ட ஏசி சூழலுக்குப் பழக்கப்பட்டு, இயற்கையான வெப்பநிலை மாறுபாடுகளைக் கையாள்வது கடினமாகிவிடும்" என்று எச்சரிக்கிறார் டாக்டர் ரெட்டி. 

சில பயனுள்ள குறிப்புகள்:

குளிர்ச்சியாகவும் வசதியாகவும் இருக்க ஏசியை முழுவதுமாக துண்டிக்க வேண்டியதில்லை. குறைபாடுகளைக் குறைக்கும் போது அதன் பலன்களை அனுபவிக்க முடியும். அதுகுறித்து அனுபவிக்க டாக்டர் ரெட்டி தரும் சில பயனுள்ள சில குறிப்புகள் இதோ உங்கள் பார்வைக்கு:

ஏசியின் உலர்த்தும் விளைவுகளை எதிர்த்துப் போராட நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.  ஈரப்பதமூட்டியுடன் காற்றில் ஈரப்பதத்தை மீண்டும் சேர்ப்பது, வறண்ட சருமம் மற்றும் கண்களை ஆபத்தில் இருந்து தடுக்க உதவுகிறது.

உங்கள் உடலை வெவ்வேறு வெப்பநிலைகளுக்கு ஏற்ப மாற்றுவதற்கு வெளியில் அல்லது இயற்கையாகவே காற்றோட்டம் உள்ள பகுதிகளில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். தூசி, அச்சு மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க உங்கள் ஏசி சிஸ்டத்தை தவறாமல் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.  மிகவும் முக்கியமான குறிப்பு, உங்கள் ஆறுதல் மண்டலத்தைக் கண்டறிய வேண்டும். தசை விறைப்பு மற்றும் சுவாசப் பிரச்சனைகளைத் தவிர்க்க, ஏசியை வசதியான வெப்பநிலையில் அமைக்க வேண்டும், மிகக் குறைவாக இல்லை. உங்கள் சருமத்தை நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், ஏர் கண்டிஷனிங்கின் புத்துணர்ச்சியூட்டும் வசதியை அனுபவிக்கும் போது, ​​நீங்கள் குளிர்ச்சியான மற்றும் ஆரோக்கியமான உட்புற சூழலை உருவாக்கலாம்.

இயற்கையே நல்ல துணை:

ஏ.சி.யின் நன்மைகள், தீமைகள் குறித்து மேலே நாம் பல விரிவான தகவல்களை அறிந்துகொண்டோம். அதேநேரத்தில், இயற்கையே மனிதனுக்கு நல்ல ஆரோக்கியமான வழிகளை காட்டியுள்ளது. ஏக இறைவன் வழங்கிய ஆரோக்கிய வழிகள் மூலம் வாழ்க்கையை நல்ல நெறிகளுடன் பின்பற்றி வாழ்ந்தால், உடல் மட்டுமல்லாமல், உள்ளமும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். ஏ.சி.., ஏ.சி., என்ற மனநிலையில் எப்போதும் இருக்காமல், ஒவ்வொரு காலக்கட்டத்தில் உள்ள வெப்பநிலை, குளிர்ச்சி மற்றும் மழை உள்ளிட்ட அனைத்தையும் அனுபவித்து வாழ்ந்தால், வாழ்க்கை மகிழ்ச்சியமாக இருப்பதுடன், ஒவ்வொரு காலநிலையில், இயற்கை மனிதனுக்கு தரும் பயன்களை நிச்சயம் அனுபவிக்கலாம். அதன்மூலம் எப்போதும் ஆரோக்கியமாக வாழலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா....!

எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா....!

வாழ்க்கையில் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட யாருக்கு தான் ஆசை இருக்காது? ஒவ்வொரு நாளும் உற்சாத்துடன் இருக்க பல்வேறு வழிகள் உண்டு. அவற்றில் ஒன்று தான் விளையாட்டு போட்டிகள் ஆகும். குறிப்பாக, இளைஞர்கள் சோர்வு அடையாமல், வழக்கமான உற்சாகத்துடன் செயல்பட கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் உதவும் வகையில் உள்ளன. எதிலும் ஆர்வம் இல்லாமல் எப்போதும் சோர்வுடன் இருக்கும் இளைஞர்கள் குறித்து கருத்து கூறும் மனநல வல்லுநர்கள், இளைஞர்களை ஏதாவது ஒரு விளையாட்டில் தனிக் கவனம் செலுத்த அறிவுறுத்துகிறார்கள். மனநல மருத்துவர்களின் இந்த ஆலோசனைகள் மிகவும் பலன் அளிக்கும் வகையில் இருப்பதை, விளையாட்டின் மூலம் சாதித்த இளைஞர்களை காணும்போது  உண்மை என்றே எண்ணத் தோன்றுகிறது. 

தற்போது உலகில் மிகவும் பிரபலமான விளையாட்டு எது என்று கேள்வி எழுப்பினால், அதற்கு கால்பந்து விளையாட்டு என்ற பதில் தான் வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 350 கோடிக்கும் அதிகமான மக்களை கவர்ந்த விளையாட்டாக கால்பந்து போட்டி இருந்து வருகிறது. அதன் காரணமாக தான் உலகின் பிரபலமான விளையாட்டுகளுள் கால்பந்து முதல் இடத்தில் உள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் கால்பந்து விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக உலக கோப்பை கால்பந்து தொடர்களில், மக்கள் தொகையில் குறைவாக உள்ள முஸ்லிம் நாடுகள் கூட பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றன. சவுதி அரேபியாவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க அந்நாட்டு அரசு தனிக் கவனம் செலுத்தி, இளைஞர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கம் அளித்து வருகிறது. கால்பந்து விளையாட்டு போட்டிக்காக பிரமாண்ட விளையாட்டு அரங்குகள் சவுதி அரேபியாவின் பல நகரங்களில் உள்ளன. இப்படி பல காரணங்களால், சவுதி அரேபியாவில் திறமையான இளம் கால்பந்து வீரர்கள் உருவாகி வருவதுடன் சர்வதேச அளவிலும் அவர்கள் சாதித்தும் வருகிறார்கள். 

 நௌமன் சித்திக் எனும் இளம் வீரர்:

இந்திய திருநாட்டில், கிரிக்கெட் விளையாட்டில் இளைஞர்களுக்கு அதிக ஆர்வம் இருந்து வருகிறது. அதேநேரத்தில் கால்பந்து உள்ளிட்ட பிற விளையாட்டுகளிலும் சில இளைஞர்கள் கவனம் செலுத்தி, அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அத்தகைய இளைஞர்களில் ஒருவர் தான் நௌமன் சித்திக் ஆவார். மும்பையைச் சேர்ந்த நௌமன் சித்திக், வணிகவியல் இளங்கலை இறுதியாண்டு மாணவர். கல்லூரி மாணவராக இருந்தாலும், கால்பந்து பயிற்சியாளராகவும் அவர் இருந்து வருகிறார். பொதுவாக, மாணவர்கள் பள்ளியில் நடத்தப்படும் படிப்பு சாராத பிற செயல்களில் பங்கேற்க விரும்புவதில்லை. வெறும் பதக்கம் அல்லது சான்றிதழ் என்ன செய்யும் என்று  அவர்கள் தவறாக புரிந்துகொள்கிறார்கள். 

ஆனால், குறிப்பிட்ட விளையாட்டில் சிறப்பு கவனம் செலுத்தினால், அதை ஒரு தொழிலாக எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அதில் சிறந்து விளங்கலாம். இளைஞர்கள் கல்விப் பணியுடன், தங்களை ஆக்கப்பூர்வமாக வளர்த்துக் கொள்ள விளையாட்டுக்கு சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். அப்படி நேரம் ஒதுக்கினால் சில மாதங்களுக்குப் பிறகு ஏற்படும் மாற்றத்தை இளைஞர்கள் நிச்சயம் உணருவார்கள். கல்வியுடன் விளையாட்டு எவ்வளவு முக்கியமானது என்பதை, பள்ளியில் பல்வேறு பாடங்களுடன் விளையாட்டு ஒரு காலகட்டம் என்பதில் இருந்து அறியலாம். பல மாணவர்கள் படிப்பில் ஊக்கம் பெற மற்றும் விளையாட்டில் தங்கள் எதிர்காலத்தை பிரகாசமாக்க முயற்சி ஒரு பகுதியாக உள்ளது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அப்படி உணர்ந்துகொண்டு செயல்படும் நௌமன் சித்திக், 2க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் கால்பந்து பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். 

சாதிக்க ஆர்வம்:

தனது கால்பந்து ஆர்வம் குறித்து கருத்து கூறியுள்ள நௌமன் சித்திக், "தனது கல்வியை முடித்தவுடன் ஏதாவது ஒரு வேலையில் சேர வேண்டும் என்று தனது பெற்றோர் விரும்பினார்கள். ஆனால் கால்பந்தின் மீதான தனது ஆர்வத்தைக் கண்டு, அவர்கள் தன்னை ஒருபோதும் தடுக்கவில்லை. மாறாக எப்போதும் தன்னை ஊக்கப்படுத்துகிறார்கள். இதனால் கல்வி மற்றும் கால்பந்து விளையாட்டு மற்றும் மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்தல் என மூன்று அம்சங்களுடன் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். பகலில் கல்லூரியின் பிஸியான பிறகு, மாலையில் கோச்சிங்கிற்குச் செல்வேன். ஆனால் சில சமயங்களில் இரவு கால்பந்து விளையாட நேரம் கிடைக்கும்" என்று  பெருமையுடன் தெரிவித்துள்ளார். 

கால்பந்து மீதான தனது பிரியம் குறித்து பெருமையுடன் மேலும் கூறும் சித்திக், "நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பேன்.  10வது மற்றும் 12வது வகுப்புகளில் படிக்கும்போது, கால்பந்தின் மீது ஈர்ப்பு அதிகமானது.  அதன் பின்னர் ஆர்வம் வளர ஆரம்பித்தது. நான் ஒரு கால்பந்து பயிற்சியாளரிடமிருந்து விளையாட்டின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன், பின்னர் எனது பிராந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்தேன். பயிற்சியாளர் எனக்கு நிறைய உதவினார்.

மன அழுத்தத்தை குறைக்க:

எந்த விளையாட்டும் மன அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் ஒவ்வொரு மாணவரும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். வெற்றி, தோல்வி இரண்டாம் பட்சம். போட்டி முக்கியம். விளையாட்டு பல முக்கியமான வாழ்க்கை பாடங்களை கற்றுத் தருகிறது. பள்ளியின் கூடுதல் பாடநெறி நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம், மாணவர்கள் எந்த விளையாட்டு அல்லது செயல்பாடுகளில் சிறந்தவர்கள் என்பதைக் கண்டறியலாம்.

எனவே இளைஞர்கள் பள்ளி படிப்பு சாராத பிற விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும். மாணவர் காலத்தில் எதையும் சாதிக்க முடியும். திறமையை வெளிப்படுத்த முடியும். எனவே தயக்கம் இல்லாமல், எதையும் செய்ய முயற்சி செய்ய வேண்டும்.  எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். படிப்புடன் விளையாட்டுக்கும் நேரம் கொடுங்கள். நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். கல்வி வாழ்க்கையில் உள்ள சிரமங்களை எதிர்கொள்வதில் விடாமுயற்சியுடன் இருங்கள். உங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்".

இவை அனைத்தும் இளம் கால்பந்து பயிற்சியாளர் நௌமன் சித்திக்கின் வார்த்தைகள். இளம் வயதில் எவ்வளவு தெளிவுடன் வாழ்க்கையை எதிர்கொள்கிறார் என்பதை, அவரது வார்த்தை மொழிகளே மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களுடைய நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தினால், நௌமன் சித்திக் போன்று வாழ்க்கையில் நிச்சயம் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க முடியும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Friday, September 20, 2024

காங்.கேள்வி...!

 ஓடிசாவில் பெண் மீது தாக்குதல்...!

காங்கிரஸ் கேள்வி...!!



Thursday, September 19, 2024

கேள்வி....!

 ஓரே நாடு....ஓரே தேர்தல்....!

காங்கிரஸ் கேள்வி....!!



Wednesday, September 18, 2024

வக்பு சட்டத் திருத்த மசோதா - 2024....!

வக்பு சட்டத் திருத்த மசோதா - 2024 ஆலோசனைகளும் - ஆட்சேபனைகளும் என்ற கருத்தரங்கத்தை முஸ்லிம் சமுதாயம் தான் நடத்துகிறது....!

ஆட்சியாளர்கள் தெளிவுப்பெற வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்படுகிறது...!!

சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேச்சு:

சென்னை, செப்.18- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வரும் 27ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் "வக்பு சட்ட திருத்த மசோதா - 2024 ஆலோசனைகளும் - ஆட்சேபனைகளும்" என்ற பெயரிர் மாபெரும் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. இந்த கருத்தரங்கத்தை சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையகமான காயிதே மில்லத் மன்ஸிலில் 18.09.2024 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையின் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், சென்னை மண்டலத்திற்கு பட்ட மாவட்ட நிர்வாகிகள், முஸ்லிம் மாணவர் பேரவை, முஸ்லிம் யூத் லீக், இந்திய யூனியன் மகளிர் லீக், சுதந்திர கிசான் சங்கம், வழக்கறிஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, அகில இந்திய கேஎம்சிசி பிரவாசி லீக் ஆகிய அணிகளின் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூக்கர் வரவேற்று பேசினார். அப்போது, கருத்தரங்களை வெற்றிகரமாக நடத்துவது குறித்து அனைவரும் ஆலோசனையும் கருத்துகளையும் அளிக்கலாம் என அவர் கேட்டுக் கொண்டார். அதன்படி, கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களுடைய ஆலோசனையும் கருத்துகளையும் வழங்கினார்கள். இறுதியில்  தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நிறைவுரை ஆற்றினார். 

கே.எம்.கே. உரை:

வக்பு சட்டத் திருத்த மசோதா 2024 ஆலோசனைகளும் - ஆட்சேபனைகளும் என்ற பெயரில் வரும் 27ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நாம் மாபெரும் கருத்தரங்கம் ஒன்றை நடத்த இருக்கிறோம். இந்த கருத்தரங்கம் மிகவும் பயன் உள்ளதாக  இருக்க வேண்டும். அதன்மூலம் சமுதாயம் பயன் அடைய வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற மாபெரும் கருத்தரங்கம் நடத்த வழிவகை பிறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது நாம் ஆலோசனை நடத்திக் கொண்டு இருக்கிறோம். 

வக்பு சட்டத் திருத்த மசோதா 2024 கருத்து கருத்தரங்கம் ஒன்றை நடத்த வேண்டும் என்ற யோசனை நடக்கும் தோன்றியபோது, நாம் தேசிய அளவில் புகழ்பெற்ற முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரகுமான் கானை தொடர்பு கொண்டு அவரிடம் ஒப்புதல் பெற்றோம். இதேபோன்று, கேரள மாநில தலைவர்களை தொடர்பு கொண்டு அவர்களிடமும் ஒப்புதல் பெற்று கருத்தரங்கம் நடத்துவதற்காக பணிகளை தொடங்கினோம். தற்போது கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்துவது குறித்து உங்களிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு இருக்கிறோம். 

நீங்கள் இங்கே சொல்லிய ஒவ்வொரு கருத்துகளும், ஆலோசனைகளும் மிகவும் அற்புதமான ஆலோசனைகளாக உள்ளன. அவற்றை உள்வாங்கிக் கொண்டு, கருத்தரங்கை வெற்றி கருத்தரங்கமாக மாற்றி அமைக்க முயற்சிகளை மேற்கொள்வோம். இந்த கருத்தரங்கின் மூலம் புதிய வரலாற்றை படைப்போம். தமிழ்நாட்டில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றாலும், இந்திய அளவில் நம் சமுதாயத்திற்கு பயன் கிடைக்கும் வகையில் இது அமையும். 

மாநில அமைப்பு நடத்தும் கருத்தரங்கம்:

இந்த கருத்தரங்கை அகில இந்திய முஸ்லிம் லீக் அமைப்பு நடத்தவில்லை. மாறாக மாநில அமைப்பு தான் நடத்துகிறது. அகில இந்திய தலைவர்களை அழைத்து கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இதன்மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும், வக்பு சட்டம் குறித்து தெளிவு கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் நடத்தப்படுகிறது. 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது ஒரு அரசியல் கட்சியமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால், இ.யூ.முஸ்லிம் லீக் அரசியல் கட்சியாக இருந்தாலும், அது ஒரு இயக்கமாக செயல்படுகிறது. ஆங்கிலத்தில்  Movement என்று சொல்வார்கள். அந்த ஆங்கில சொல்லிற்கு ஏற்ப இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து ஒரு இயக்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இயக்கம் என்றால் தீவிரவாத இயக்கம் கிடையாது. மிதவாத இயக்கமும் கிடையாது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது ஒரு இதமான இயக்கமாகும். நாட்டில் வாழும் 25 கோடி முஸ்லிம்களுக்கும் சரியான வழிக்காட்டும் ஒரு இயக்கமாகும். 

சமுதாயத்திற்கு வழிக்காட்டுகிறது:

ஒரு ஊரில் ஒரு முஸ்லிம் இருந்தால் கூட, அவரின் மூலம் இ.யூ.முஸ்லிம் லீக் சமுதாயத்திற்கு வழிக்காட்டிக் கொண்டிருக்கிறது. உலமாக்கள், இமாம்கள் போன்றவர்கள் இந்த இயக்கத்திற்கு நல்ல ஆலோசனைகளை தந்து வழிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது 25 கோடி இந்திய முஸ்லிம்களின் ஒரே பிரதிநிதித்துவ இயக்கமாகும். அது சரியான வழியை முஸ்லிம் சமுதாயத்திற்கு காட்டுகிறது. தமிழக்ததில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் மஹல்லா ஜமாத், மஸ்ஜித் மற்றும் ஜமாத் மூலம் இணைந்து இருக்கிறார்கள். இந்த ஜமாத்துகளை அடிப்படையாகக் கொண்டு, சமுதாயத்திற்கு இ.யூ.முஸ்லிம் லீக் சேவை ஆற்றிக் கொண்டிருக்கிறது. சென்னை போன்ற பெரிய நகரங்களில் மஹல்லா ஜமாத் என்ற அமைப்புகள் இல்லை. ஆனால், ஒவ்வொரு ஊரின் பேரில் ஜமாத்கள் இயங்கி வருகின்றன. 

இந்த ஜமாத்களை அடிப்படையாகக் கொண்டு, நாம் பணிகளைச் செய்ய வேண்டும். அப்படி செயல்படாவிட்டால், நம்முடைய முயற்சிகள் பலன் அளிக்காது. எனவே, பெரிய நகரங்களில் முஸ்லிம் லீக் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் மிகப்பெரிய அளவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். மஹல்லா ஜாமத் மற்றும் உலமாக்களின் ஆலோசனைகளைக் கேட்டு நாம் நடக்க வேண்டும். உலமாக்களின் ஆதரவு எப்போதும் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு இருந்து வருகிறது. அதன்படி தான் கருத்தரங்கில் கலந்துகொள்ள ஜமாத்துல் உலமா முடிவு செய்துள்ளது. அதன் தலைவர் பி.ஏ.காஜா முயினுத்தீன் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். மேலும் ஏராளமான உலமாக்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். 

சமுதாய நன்மைக்காக கருத்தரங்கம்:

சமுதாயத்திற்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த கருத்தரங்கை நாம் நடத்த உள்ளோம். அதன்மூலம் சமுதாயத்திற்கு தீர்வு கிடைக்க வேண்டும். சமுதாயம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சமுதாயத்திற்கு எதிரான அம்புகளை தடுத்த நிறுத்த வேண்டும். சமுதாயம் எப்போதும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அந்த உயர்ந்த நோக்கில் தான் நாம் கருத்தரங்கை நடத்துகிறோம். எனவே ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் திரளாக மக்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். 

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அகில இந்திய உலமா சபை இருந்த நிலையில், முஸ்லிம் லீகிற்கு ஆதரவு தமிழகத்தில் உலமாக்களின் சபை இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கடந்த 1958ஆம் ஆண்டு ஜமாத்துல் உலமா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி, எப்போதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஜமாத்துல் உலமா ஆதரவாக இருந்து வருகிறது. அவர்களின் ஆலோசனைகள் எப்போதும் எங்களுக்கு துணையாக இருந்து வருகின்றன. 

ஏக இறைவனான அல்லாஹ்வின் துணைக் கொண்டு நாம் இந்த கருத்தரங்கை நடத்துகிறோம். இறைவனின் பெயரால் நடத்தப்படும் எந்த நிகழ்ச்சியும் தோல்வி அடைந்தது கிடையாது. நிச்சயம் வெற்றி கிடைத்தே தீரும். அதன்படி, நாம் நடத்தும் கருத்தரங்கமும் நிச்சயம் வெற்றி அடையும். 

முஸ்லிம் சமுதாயம் நடத்தும் கருத்தரங்கம்:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே இந்த கருத்தரங்கை நடத்தவில்லை. முஸ்லிம் சமுதாயம் தான் இந்த கருத்தரங்கை நடத்துகிறது. சமுதாயமும், ஆட்சியாளர்களும் தெளிவுப்பெற வேண்டும் என உயர்ந்த எண்ணத்தில் நாம் நடத்தும் இந்த கருத்தரங்கம் நிச்சயம் வெற்றி கருத்தரங்கமாக இருக்கும். இதன்மூலம் சமுதாயத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும். எதிர்காலத்தில் எந்தவித தடைகளும் வராமல் பாதுகாக்க முடியும். சமுதாயத்திற்கு வரும் எதிர்ப்புகளை கண்டு மவுனமாக இருந்தால், எதிர்கால சந்ததிகள் நம்மை குறைவாக மதிப்பிட வாய்ப்பு உருவாகி விடும். எனவே தான், தற்போது எழுந்துள்ள சிக்கல்களை தீர்வு, சமுதாயம் சந்திக்கும் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. நாம் எதிர்ப்பு காட்டாமல் இருந்தால், நம்முடைய இளம் சமுதாயம் நாளை நம்மை மிகவும் கேவலமாக பார்க்கும். இதை கவனத்தில் கொண்டு, வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தொடர்பாக நடத்தப்படும் இந்த கருத்தரங்கம் வெற்றி கருத்தரங்கமாக அமைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அதற்காக பணியாற்ற வேண்டும். 

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார். 

சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

=====================


Tuesday, September 17, 2024

உர்தூ மொழி மாணவர்கள்....!

"வாரியத் தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத சி.பி.எஸ்.இ. உத்தரவு"

- உர்தூ மொழி மாணவர்கள் பாதிக்கப்படும் ஆபத்து -

தெலங்கானாவின் ஹைதராபாத், ஹரியானாவின் நுஹ் மற்றும் பீகாரின் தர்பங்கா  ஆகிய இடங்களில் உள்ள 'மாதிரி பள்ளிகள்' மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தின் (MANUU) கீழ் உர்தூ மொழியில் கல்வியை வழங்குகின்றன. இந்த பள்ளிகள் சி.பி.எஸ்.இ.(CBSE) உடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளிகள் மொழியின் அடிப்படையில் எந்த மொழியையும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. மாறாக, மாணவர்கள் தங்கள் சேர்க்கை படிவங்களை நிரப்பும்போது அவர்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய பள்ளி வாரியமான மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மாணவர்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழியிலும் வாரியத் தேர்வுகளை எழுதக்கூடாது என்ற முடிவானது, மௌலானா ஆசாத் தேசிய உர்தூ  பல்கலைக்கழகத்தின் (MANUU) கீழ் இயங்கும் மூன்று உர்தூ நடுத்தரப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கவலை அடையச் செய்துள்ளது. ஹைதராபாத், நுஹ் (ஹரியானா) தர்பங்கா (பீகார்) ஆகிய இடங்களில் உள்ள MANUU "மாதிரி பள்ளிகள்" உர்தூ மொழியில் கல்வியை வழங்குவதுடன், இந்த பள்ளிகள் CBSE உடன் இணைக்கப்பட்டுள்ளன. 

சி.பி.எஸ்.இ.முடிவு:

இத்தகைய சூழ்நிலையில், வாரியத்தின் அனுமதியின்றி இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழியிலும் எழுதப்பட்ட விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது என்று கடந்த ஜூன் மாதம் சிபிஎஸ்இ நிர்வாகக் குழு முடிவு செய்தது. டெல்லியில் உள்ள பள்ளிகள் மட்டுமே இந்த அனுமதியைப் பெறுவதற்கான விருப்பத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CBSEயிடமிருந்து எந்த அனுமதியும் பெறாமல், அதன் விஜயவாடா பிராந்தியத்தின் கீழ் உள்ள பள்ளியின் மாணவர்கள் உர்தூ மொழியில் விடை எழுதுவதை வாரியம் இந்த ஆண்டு கவனித்தது. மேலும் இந்த மாணவர்கள் MANUU பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் அல்ல. "வாரியத்தின் அனுமதியின்றி இந்தி அல்லது ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் விடை எழுதும் மாணவர்களின் விடைப் புத்தகங்கள் (விடைத்தாள்கள்) மதிப்பீடு செய்யப்படக் கூடாது என்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு மண்டல அலுவலகம் அறிவுறுத்தியது. 

இந்த அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், எந்த ஒரு மாணவர் தானாக முன்வந்து விடை எழுதினால். வாரியத்தின் கொள்கைக்கு எதிராக இந்தி அல்லது ஆங்கிலம் தவிர மற்ற மொழி, பாடத்தில் எந்த மதிப்பெண்களும் வழங்கப்படாமல் அவரது முடிவு அறிவிக்கப்படும்" என்றும் வாரியத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தின் மினிஸ்ட்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிகளின் விளக்கம்:

மௌலானா ஆசாத் தேசிய உர்தூ  பல்கலைக்கழகம் இந்த மூன்று மாதிரிப் பள்ளிகளை கடந்த 2010 இல் தொடங்கியது. இவற்றில் இரண்டு பள்ளிகளின் அதிகாரிகள், மாணவர்களின் கற்றல் மொழி உர்தூ என்பதை சி.பி.எஸ்.இ.யின் முழு கவனத்துடன் இணைக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.  

MANUU பள்ளிகளின் மாணவர்கள் 2020 ஆம் ஆண்டு வரை ஆங்கிலம், இந்தி மற்றும் உர்தூ  மொழிகளில் வினாத்தாள்களைப் பெற்றனர். 2021 முதல், உர்தூவில் வினாத்தாள் வழங்குவதை வாரியம் நிறுத்தியது. கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆங்கிலம் மற்றும் இந்தியில் வினாத்தாள்கள் அனுப்பப்பட்டாலும், இந்த மூன்று பள்ளிகளின் மாணவர்களும் உர்தூ  மொழியில் தங்கள் பதில்களை எழுதினர். சிபிஎஸ்இயின் சமீபத்திய முடிவிற்குப் பிறகு, இந்தப் பள்ளிகளின் மாணவர்கள் உர்தூ  மொழியில் பதில் எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.

"உர்தூ மொழியிலும் வினாத்தாள் அனுப்புவதை நிறுத்த முடிவு செய்வதற்கு முன் சிபிஎஸ்இ எங்களுடன் எந்த விவாதமும் நடத்தவில்லை. எங்கள் மாணவர்கள் உர்தூ  மொழியில் இல்லாததால் கேள்விகளைப் புரிந்துகொள்வதில் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து சிபிஎஸ்இக்கு தெரிவித்துள்ளோம். வாரியம் இன்னும் பிரச்சனை தீர்க்கப்படவில்லை" என்று MANUU பள்ளியின் அதிகாரி ஒருவர்  வேதனையுடன் கூறியுள்ளார். 

தேசிய கல்வி கொள்கைக்கு எதிரானது:

MANUUஇன் அரசியல் அறிவியல் பேராசிரியரான அஃப்ரோஸ் ஆலம், தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியில் கல்வியை ஆதரிக்கிறது என்றும் CBSE இன் நடவடிக்கைகள் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.  "மாணவர்கள் உர்தூ மொழியில் கற்கத் தொடங்கியவுடன், அந்த மொழியில் தான் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அவர்களை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதச் சொல்வது நியாயமற்றது," என்றும் அஃப்ரோஸ் ஆலம் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரத்தில் CBSEயின் தேர்வுக் கட்டுப்பாட்டாளரான சன்யம் பரத்வாஜ், MANUU பள்ளிகளை உர்தூ நடுத்தரப் பள்ளிகளாக அங்கீகரிக்க மறுத்துவிட்டார். "டெல்லியில் மட்டுமே உர்தூ நடுத்தர பள்ளிகள் உள்ளன, அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப, வினாத்தாள்கள் உர்தூவில் வழங்கப்படுகின்றன" என்றும் பரத்வாஜ் விளக்கம் அளித்துள்ளார். 

 மௌலானா ஆசாத் தேசிய உர்தூ  பல்கலைக்கழகத்தின் (MANUU) கீழ் இயங்கும் மூன்று உர்தூ நடுத்தரப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உர்தூ மொழியில் கேள்வித்தாள்களுக்கு விடை அளிக்க மறுக்கப்பட்டு இருப்பது உர்தூ மொழி ஆர்வலர்களை மட்டுமல்லாமல், உர்தூ மொழியில் கல்விப் பயிலும் மாணவர்களையும் கவலை அடையச் செய்துள்ளது என்பது மட்டும் உண்மையாகும். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

நூறு நாட்கள்....!

 100 Days....!

In Modi's 100 days, there have been:்.

👉 26 terror attacks

👉 104 incidents of crime against women

👉 56 infrastructure collapse incidents

👉 38 train accidents

👉 Exam paper leaks

👉 Historic fall in rupee value

👉 Foreign investment (FDI) down by 43%

👉 Unemployment broke 8-month record

👉 The economy is at stake.

Questions for PM Modi:

❓ Why is there silence on Chinese encroachment in Ladakh?

❓ What are you going to do about Manipur?

❓ What plans do you have for our nation?

❓ What are you going to do about inflation, unemployment, terror attacks, and other pressing issues?

: @SupriyaShrinate ji