Sunday, April 20, 2025

Massive Protest.

 Massive Protest Against WaqfAct Held in Hyderabad, AIMPLB Announces More Agitations Across Telugu States

In one of the largest protests yet against the contentious Waqf Act, the All India Muslim Personal Law Board (AIMPLB) organised a massive public protest meeting on Saturday. The gathering took place at Darussalam, the AIMIM's headquarters in Hyderabad, drawing thousands of participants who voiced their opposition to the current provisions of the Act.

Leaders and community representatives addressed the crowd, expressing concern over the amended Waqf Act

In a significant announcement during the event, the All India Muslim Personal Law Board also released its upcoming schedule of protests to be held across Telangana and AndhraPradesh. The Board stated that these agitations will continue until the government roll backs The Waqf Act.

AIMPLB_Official



உரை....!

 All India Muslim Personal Law Board ki janib se Waqf Amendment Bill ke khilaf Darussalam, Hyderabad mein munaqid Protest Public Meeting se mera Khitab.



Saturday, April 19, 2025

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு....!

"வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு" 

- நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரி நூருல் ஹோடா ராஜினாமா -

இந்திய முஸ்லிம்களை குறிவைத்து ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி, போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. வக்பு திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த நிலையிலும் கூட, ஒன்றிய அரசின் முஸ்லிம் விரோதப் போக்கைக் கண்டித்து, முஸ்லிம் அமைப்புகள் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் கடந்த 13.04.2025 அன்று நடைபெற்ற நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில், 16.04.2025 அன்று லட்சக்கணக்கான மக்கள் திரண்ட மெகா  கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்றது. இதேபோன்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பில் தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் வக்பு திருத்தச் சட்டத்திற்கு 19.04.2025 அன்று  நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டம், முஸ்லிம் சமுதாயத்தை மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள மக்களை வியப்பு அடையச் செய்தது. அத்தகைய வகையில் ஹைதராபாத் குலுங்கும் வகையில் மக்கள் அலை அங்கு காணப்பட்டது. 

வக்பு திருத்தச் சட்டத்திற்கு முஸ்லிம் சமுதாயம் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், சமூக ஆர்வலர்கள், நாட்டின் பன்முகத்தன்மையில் அக்கறை கொண்ட நல்லவர்கள், மதச்சார்பின்மையில் உறுதிகொண்ட மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒன்றிய அரசின் சதிக்கு எதிராக தைரியமாக தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். முஸ்லிம்களை குறிவைத்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்தைக் கண்டித்து சிலர் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்யும் போக்கும் நாட்டில் தற்போது காணப்படுகிறது. அந்த வகையில் பீகாரைச் சேர்ந்த நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரி நூருல் ஹோடா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து, தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரி நூருல் ஹோடா :

பீகார் மாநிலம் சீதாமர்ஹியைச் சேர்ந்தவரான மூத்த ஐபிஎஸ் அதிகாரி நூருல் ஹோடா, 1995 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார். ஒரு துணிச்சலான மற்றும் அடையாள நடவடிக்கை, நேர்மை மற்றும் சேவைக்கு பெயர் பெற்ற  நூருல் ஹோடா, இந்தியாவின் மிகவும் உணர்திறன் வாய்ந்த சில மண்டலங்களில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக தேசத்திற்கு சேவை செய்துள்ளார். தனது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும், ஹோடா, தன்பாத், அசன்சோல் மற்றும் டெல்லி பிரிவு உள்ளிட்ட பல உணர்திறன் மற்றும் உயர் அழுத்த மண்டலங்களில் பணியாற்றினார். ரயில்வே பாதுகாப்பு, நக்சல் கட்டுப்பாடு மற்றும் குற்றத் தடுப்பு ஆகியவற்றில் புதுமையான உத்திகளை செயல்படுத்திய பெருமை அவருக்கு உண்டு. அவரது சிறந்த சேவை, அவருக்கு இரண்டு முறை மதிப்புமிக்க விஷிஷ்ட் சேவா பதக்கத்தையும், இரண்டு முறை டைரக்டர் ஜெனரல் சக்ராவையும் பெற்றுத் தந்துள்ளது.

சமூக சேவையில் ஆர்வம்:

தனது பணி சீருடையைத் தாண்டி, ஹோடா சமூக மாற்றத்திற்கான தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். தனது சொந்த கிராமத்தில், கிட்டத்தட்ட 300 பின்தங்கிய குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்கி வருகிறார். கல்விதான் உண்மையான அதிகாரமளிப்பின் அடித்தளம் என்று அவர் உறுதியாக நம்புகிறார். கல்விதான் உண்மையான  அனைத்துக்குமான திறவுகோல் என்று உறுதியாக நம்பும் அவர், அதை மற்றவர்களுக்கும் அளிக்க வேண்டும் என ஆர்வம் கொண்டு, அதற்கான ஒரு செயல்திட்டத்தை உருவாக்கி,  தனது கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட  குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்கி வருவதுடன், அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற தேவையான பணிகளையும் உறுதியாக தொடர்ந்து செய்து வருகிறார். 

வக்பு சட்டத்திற்கு எதிராக பதவி ராஜினாமா:

தனது அர்ப்பணிப்பு மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்ற ஹோடா, தற்போது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய காவல் பணியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இப்போது சேவையிலிருந்து வெளியேறும் ஹோடா, பொது வாழ்க்கையில் நுழைய உள்ளார். 

தனது பதவி விலகல் குறித்து கருத்து கூறியுள்ள அவர், "காக்கியில் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, நான் இப்போது காதி அணிவேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும், அரசியலில் சேரும் தனது விருப்பத்தைக் குறிப்பிடுகிறார்.  அரசியலில் நுழைவதற்கான அவரது முடிவு, அவரது சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஒரு பரந்த தளத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தால் உந்தப்படுகிறது. மேலும், ஜனநாயக தளங்கள் மூலம் முறையான பிரச்சினைகளைத் தீர்த்து, அவரது சமூகம் மற்றும் தேசத்திற்கு அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு தொலைநோக்குப் பார்வையால் அவரது வருகை உந்தப்படுகிறது. அதன்படி, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் விகாஷீல் இன்சான் கட்சியில் அவர் இணைந்துள்ளார். 

நிர்வாக அனுபவம், அடிமட்ட ஈடுபாடு மற்றும் நீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் தனித்துவமான கலவையுடன், நூருல் ஹோடா, இந்திய அரசியலில் ஒரு வலுவான மற்றும் கொள்கை ரீதியான குரலாக வெளிப்படத் தயாராக உள்ளார். நிர்வாக மற்றும் சிவில் சமூக வட்டாரங்களில் பரவலாக மதிக்கப்படும் ஹோடாவின் ராஜினாமா, அதிகாரத்துவ மற்றும் அரசியல் நிலப்பரப்பில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. "நான் எப்போதும் நீதியுடன் நிற்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். இன்று, என் மனசாட்சி இனி என்னை அமைதியாக இருக்க அனுமதிக்கவில்லை" என்று ஹோடா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

பாராட்டப்பட வேண்டிய முடிவு:

பல தசாப்தங்களாக சீருடையில் இருந்த ஹுடா, இப்போது ஒரு புதிய பாதையை தேர்வு செய்ய முடிவு செய்து இருப்பது பாராட்டப்பட வேண்டிய, வரவேற்றக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.  அவரது நிர்வாக அனுபவம், தரைமட்ட ஈடுபாடு மற்றும் நீதிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன், ஜனநாயக வழிமுறைகள் மூலம் அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டுவர விரும்பும் அவர், அதில் நிச்சயம் வெற்றி பெறுவார் என உறுதியாக கூறலாம்.

ஒன்றிய பாஜக அரசின் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து ஒருபுறம், நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மற்றொரு புறம், நூருல் ஹோடா போன்ற நேர்மையான அதிகாரிகள், தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி இருப்பது சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என உறுதியாக கூறலாம். இன்னும் சமூக அக்கறை இல்லாமல் இருக்கும் மற்றவர்களையும்  நூருல் ஹோடாவின் முடிவு நிச்சயம் யோசிக்க, சிந்திக்க வைக்கும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


போராட்டம்....!

 கண்டன போராட்டம்.

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் தமிழகம் முழுவதும் 18.04.2025 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.




நேரு....!

I seldom urge something so forcefully, but please do spare 32 minutes today to watch this brilliant interaction between @RahulGandhi and @_SandeepDikshit

A wonderful insight into Pandit Nehru and an equally commendable understanding and articulation of his greatness by Rahul Ji

“𝐍𝐞𝐡𝐫𝐮 𝐣𝐢 𝐝𝐢𝐝𝐧’𝐭 𝐭𝐞𝐚𝐜𝐡 𝐮𝐬 𝐩𝐨𝐥𝐢𝐭𝐢𝐜𝐬; 𝐡𝐞 𝐭𝐚𝐮𝐠𝐡𝐭 𝐮𝐬 𝐭𝐨 𝐜𝐨𝐧𝐟𝐫𝐨𝐧𝐭 𝐟𝐞𝐚𝐫 𝐚𝐧𝐝 𝐬𝐭𝐚𝐧𝐝 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐭𝐫𝐮𝐭𝐡. 𝐇𝐞 𝐠𝐚𝐯𝐞 𝐈𝐧𝐝𝐢𝐚𝐧𝐬 𝐭𝐡𝐞 𝐜𝐨𝐮𝐫𝐚𝐠𝐞 𝐭𝐨 𝐫𝐞𝐬𝐢𝐬𝐭 𝐨𝐩𝐩𝐫𝐞𝐬𝐬𝐢𝐨𝐧 𝐚𝐧𝐝 𝐮𝐥𝐭𝐢𝐦𝐚𝐭𝐞𝐥𝐲 𝐜𝐥𝐚𝐢𝐦 𝐟𝐫𝐞𝐞𝐝𝐨𝐦.

𝐇𝐢𝐬 𝐠𝐫𝐞𝐚𝐭𝐞𝐬𝐭 𝐥𝐞𝐠𝐚𝐜𝐲 𝐥𝐢𝐞𝐬 𝐢𝐧 𝐡𝐢𝐬 𝐫𝐞𝐥𝐞𝐧𝐭𝐥𝐞𝐬𝐬 𝐩𝐮𝐫𝐬𝐮𝐢𝐭 𝐨𝐟 𝐭𝐫𝐮𝐭𝐡—𝐚 𝐩𝐫𝐢𝐧𝐜𝐢𝐩𝐥𝐞 𝐭𝐡𝐚𝐭 𝐬𝐡𝐚𝐩𝐞𝐝 𝐞𝐯𝐞𝐫𝐲𝐭𝐡𝐢𝐧𝐠 𝐡𝐞 𝐬𝐭𝐨𝐨𝐝 𝐟𝐨𝐫.”



Friday, April 18, 2025

அன்பின் மொழி உர்தூ....!

"அன்பின் மொழி உர்தூவை, மதத்துடன் இணைத்த வெறுப்பு அரசியல்"

- ஜாவீத் -

இந்திய முஸ்லிம்கள் மீது மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து  பல்வேறு நெருக்கடிகளை சுமத்திக் கொண்டே வருகிறது. அரசின் தோல்விகளை மறைக்க பாஜக பயன்படுத்தும் மிகப்பெரிய ஆயுதமாக முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் முதல், வக்பு திருத்தச் சட்டம் வரை பல்வேறு பிரச்சினைகளை பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஏதாவது ஒரு காரணம் காட்டி, முஸ்லிம் வீடுகள் புல்டோர் மூலம் இடிக்கப்படுவது உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தபிறகும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை குறைத்துகொண்டதாக தெரியவில்லை. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போது பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் முஸ்லிம்கள் அதிகமாக பேசும் உர்தூ மொழி மீது தங்களுடைய வெறுப்பு காட்டத் தொடங்கியுள்ளனர்.  மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள பட்டூர் நகராட்சி மன்றத்தின் பெயர்ப்பலகையில் மராத்தியுடன் உர்தூ மொழியை பயன்படுத்துவது தவறு என்று கூறி, முன்னாள் கவுன்சிலர் வர்ஷதை சஞ்சய் பகடே என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த ஏப்ரல் மாதம், நீதிபதிகள் சுதன்ஷு துலியா, கே வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மொழி என்பது மதம் அல்ல.  உர்தூவை முஸ்லிம்களின் மொழியாகக் கருதுவது யதார்த்தம் மற்றும் பன்முகத்தன்மையில் ஒற்றுமையிலிருந்து பரிதாபகரமான விலகல் என்று  கருத்து தெரிவித்தனர்.

மேலும், மொழி ஒரு சமூகத்திற்கும், ஒரு பிராந்தியத்திற்கும், மக்களுக்கும் சொந்தமானது. ஒரு மதத்திற்கும் அல்ல. மொழி என்பது கலாச்சாரம். மொழி என்பது ஒரு சமூகம் மற்றும் அதன் மக்களின் நாகரிக அணிவகுப்பை அளவிடுவதற்கான அளவுகோல். மொழி கற்றலுக்கான ஒரு கருவியாக மாறுவதற்கு முன்பு, அதன் ஆரம்பகால மற்றும் முதன்மையான நோக்கம் எப்போதும் தகவல்தொடர்பாகவே இருக்கும்  என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

உர்தூவுக்கு எதிராக பாரபட்சம்:

உர்தூவுக்கு எதிரான பாரபட்சம், உர்தூ இந்தியாவிற்கு அந்நியமானது என்ற தவறான எண்ணத்திலிருந்து வருகிறது. உர்தூ இந்த மண்ணில் பிறந்த ஒரு மொழி. கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும், தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும் விரும்பும் பல்வேறு கலாச்சார சூழலைச் சேர்ந்த மக்களின் தேவை காரணமாக உர்தூ இந்தியாவில் வளர்ச்சியடைந்து செழித்தது. பல நூற்றாண்டுகளாக, அது எப்போதும் இல்லாத அளவுக்கு மெருகேறி, பல புகழ்பெற்ற கவிஞர்களின் விருப்ப மொழியாக மாறியது என்றும்  நீதிபதிகள் கூறினர். மேலும், உர்தூ வார்த்தைகளையோ அல்லது உர்தூவிலிருந்து பெறப்பட்ட வார்த்தைகளையோ பயன்படுத்தாமல் இந்தி மொழியில் அன்றாட உரையாடலை நடத்த முடியாது. இந்தி என்ற வார்த்தையே பாரசீக வார்த்தையான 'ஹிந்தவி' என்பதிலிருந்து வந்தது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. 

மதத்தின் அடிப்படையில் மொழிகளை பிரிப்பதில் காலனித்துவ சக்திகளால் பயன்படுத்தப்பட்ட ஒரு பிளவு. இந்தி இந்துக்களின் மொழியாகவும், உர்தூ முஸ்லிம்களின் மொழியாகவும் புரிந்து கொள்ளப்பட்டது. இது யதார்த்தத்திலிருந்து மிகவும் பரிதாபகரமான விலகல். பன்முகத்தன்மையில் ஒற்றுமை மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் என்ற கருத்தாக்கத்திலிருந்து விலகல் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.  ஒருவரின் தவறான எண்ணங்கள், ஒருவேளை ஒரு மொழிக்கு எதிரான நமது தப்பெண்ணங்கள் கூட, நமது தேசத்தின் இந்த மாபெரும் பன்முகத்தன்மையான யதார்த்தத்திற்கு எதிராக தைரியமாகவும் உண்மையாகவும் சோதிக்கப்பட வேண்டும். உர்தூ மற்றும் ஒவ்வொரு மொழியுடனும் நாட்டு மக்கள் அனைவரும் நட்பு கொள்ள வேண்டும். என்றும் நீதிபதிகள் அற்புதமான கருத்து தெரிவித்தனர்.  

அன்பின் மொழி உர்தூ:

உர்தூ மொழி குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள்  தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் ஆழமானவையாகும். இந்தியாவின் மொழி பாரம்பரியத்தில், உச்சநீதிமன்றம் தற்போது தெளிவான ஒரு பாடத்தை எடுத்துள்ளது. இப்படி உச்சநீதிமன்றம் கருத்துகளை தெரிவித்துள்ள இத்தகைய சூழ்நிலையில்,  இந்தியாவில் உர்தூவின் பரிணாமம் எவ்வளவு ஒத்திசைவானது, இந்தி உடனான அதன் பிணைப்பு எவ்வளவு வலுவானது என்பதை நினைவில் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்

"அப்னி உர்தூ மொஹப்பத் கி ஜபான் தி பியாரே, உஃப் சியாசத் நே உஸ்ஸே ஜோட் தியா மஜாப் சே "  என்று உர்தூ மொழியில் சொல்வார்கள். அதாவது 'நமது உர்தூ அன்பின் மொழியாக இருந்தது. ஆனால் அரசியல் அதை மதத்துடன் இணைத்துவிட்டது'. என்ற வார்த்தைகளில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. 

அன்பின் மொழி உர்தூவை, முஸ்லிம்கள் மட்டுமே பேசும் மொழியாக தவறான ஒரு பிம்பத்தை, வரைப்படத்தை வேண்டும் என்றே சிலர் வரைந்துவிட்டார்கள். தற்போதும் அந்த வெறுப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்தியாவில் உர்தூ மொழிக்கு என தனி இடம் எப்போதும் இருந்து வருகிறது. இதேபோன்று பாகிஸ்தானிலும் உர்தூ மொழி முக்கியத்துவம் வாய்ந்த மொழியாக உள்ளது. இதுபோன்ற ஒரு நிலை மற்ற இஸ்லாமிய நாடுகளில் இல்லை. உர்தூ மொழியை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்துவதில்லை. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்துகிறார்கள் என்பது தான் உண்மையாகும். எனவே உர்தூ மொழி தங்களுக்கு மட்டுமே சொந்தமான மொழி என்று முஸ்லிம்கள் உரிமை கோர முடியாது. 

உர்தூ மொழியின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முஸ்லிம்கள் மட்டுமே பங்களிப்புகளை அளிக்கவில்லை. சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான கவிஞர்கள், எழுத்தாளர்கள் தங்களுடைய கவிதைகள், படைப்புகள் மூலம் மிகச் சிறந்த பங்களிப்பை அளித்து, உர்தூ மொழியின் மேன்மைக்கு மிகப்பெரிய அளவுக்கு பணியாற்றி இருக்கிறார்கள். உர்தூ மொழி இலக்கியங்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பிற படைப்புகளை ஆழ்ந்து படித்தால், அந்த மொழிக்கு சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வழங்கிய, வழங்கிக் கொண்டு இருக்கும் பங்களிப்பை மிகவும் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.  இந்தி மொழியை பயன்படுத்தும் மக்கள் கூட, உர்தூ மொழியின் சொற்களை பயன்படுத்தாமல், பேசவோ, எழுதவோ முடியாது. அந்த வகையில் உர்தூ மொழி, மிகப்பெரிய தாக்கத்தை இந்திய மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

மதத்துடன் இணைத்த வெறுப்பு அரசியல்:

அப்படி, அழகான ஒரு அன்பின் மொழியை, தற்போது மதத்துடன் இணைத்து வெறுப்பு அரசியல் செய்யும் முயற்சிகளில் இந்துத்துவ சக்திகள் இறங்கியுள்ளன. அதன் காரணமாக உர்தூ மொழியின் வளர்ச்சிக்கு முன்பு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் தற்போது கொடுக்கப்படுவதில்லை. கல்வி நிறுவனங்களில் உர்தூ மொழி துறை சரியான முறையில் இயங்குவதில்லை. உர்தூ ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. இந்திய விடுதலை போராட்டங்களின் போது கூட, உர்தூ மொழிக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகள் தங்களுடைய வெறுப்பை வெளிப்படுத்தினர். தற்போதும் அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 29, இந்தியாவில் வாழும் மக்கள் தங்களுக்கு விருப்பான மொழியை பேசவும், கற்கவும், உரிமை வழங்கிறது. அதன்படி 8வது அட்டவணையில் மொத்தம் 22 மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன. அப்படி இணைக்கப்பட்ட 22 மொழிகளில் உர்தூ மொழியும் ஒன்றாகும். இந்தியாவில் அதிகமாக பேசப்படும் மொழிகளில் உர்தூ மொழி 6வது இடத்தில் இருந்து வருகிறது. 

ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளை போல வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட மொழி, உர்தூ இல்லை. உர்தூ மொழி அசல் இந்திய மொழியாகும். உர்தூ மொழி,  ஒரு விலைமதிப்பற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அழகிய மலராகும். எனவே அன்பின் மொழியான உர்தூ,  அழிந்து வரும் இனமாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

=================================

Thursday, April 17, 2025

விளக்கம்....!

 வக்பு - உச்சநீதிமன்றம் உத்தரவு.

காங்கிரஸ் எம்.பி. வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி விளக்கம்.