" ஈரானின் நெஞ்சுறுதி "
புனித ரமழான் மாத நோன்பின் பத்தாவது நாள்.
அதிகாலை நேரம்....
ஏக இறைக்கட்டளையை நிறைவேற்ற ஈரான் மக்கள் முனைந்திருந்த சமயம்.
உலக ரவுடிகளான, சாத்தான்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து உலகின் மிகவும் வலிமையான இஸ்லாமிய நாடாக கருதப்படும் ஈரான் மீது திடீரென தாக்குதல்களை தொடங்கின.
அணு உலை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டே இருந்த சமயத்தில், வேண்டும் என்றே ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கொடூர தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, சிறுமிகள் படிக்கும் பள்ளிக்கூடத்தின் மீது குண்டுவீசி நடத்திய தாக்குதலில் 168 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டனர். அத்துடன், ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினரையும் குறிவைத்து குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உச்சத் தலைவர் அலி கமேனி அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்.
இப்படி ஈரான் மீது போர் வெறிக்கொண்டு இஸ்ரேல், அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் உலக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஈரானில் ஆட்சி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதே தங்களது இலக்கு என கொக்கரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் ராணுவம் சரண் அடைய வேண்டும் என்றும் எச்சரித்தார்.
வீரம் செறிந்த ஈரான் :
ஆனால், வீரம் செறிந்த ஈரான் ஒருபோதும் பணியவில்லை. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் தாக்குதல்களுக்கு மத்தியிலும், ஈரான் மக்கள் தங்கள் தேசத்தின் மீதான பற்றாலும், கொடுங்கோன்மைக்கு எதிரான தைரியத்தாலும் வீரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆயுதப்படை மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பிறகும், ஈரான் ராணுவம் தொடர்ந்து சூளுரைத்து, தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் சிதைக்கப்பட்டாலும், ஈரான் ராணுவம் தளராமல் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகக் கூறி தகுந்த பதிலடியும் கொடுத்துக் கொண்டே வருகிறது.
ஈரானின் மிக உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனிகொல்லப்பட்ட பிறகும், அவரது போராட்டப் பாதையைத் தொடர மக்கள் உறுதியுடன் இருந்து வருகிறார்கள். அணு ஆயுதத் தயாரிப்பு அச்சுறுத்தல்களால் சர்வதேச அழுத்தங்களைச் சந்தித்தாலும், ஈரான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
2026-ன் தொடக்கத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் எச்சரிக்கைகள், போர் கப்பல்களின் குவிப்பு மற்றும் அணுசக்தி ஒப்பந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஈரான் தனது இறையாண்மை மற்றும் அணுசக்தி திட்டங்களில் சமரசமற்ற நெஞ்சுறுதியுடன் செயல்படுகிறது. அலி கமேனியின் மறைவிற்குப் பிறகும், புதிய தலைவர்கள் அமெரிக்கா மீதான நம்பிக்கையின்மையைத் தெரிவித்து, நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளைத் தவிர்த்து, ராணுவ ரீதியாகத் தற்காத்துக்கொள்ளும் உத்தியைக் கையாண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் தடைகள் மற்றும் எச்சரிக்கைகளை மீறி, அணுசக்தி திட்டங்களை ஈரான் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இது உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கர்கள் மீது நம்பிக்கை இல்லை என அறிவித்து, ஈரான் சமரசத்திற்கு உடன்படாமல், நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தைகளுக்கு மட்டுமே தயாராக உள்ளது. மலைப்பாதைகளுக்குள் ராட்சத ஏவுகணைகளை மறைத்து வைத்து, அமெரிக்காவின் போர் கப்பல் குவிப்புக்கு மத்தியிலும் தன் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது. ஈரானின் புதிய தலைமை கமேனியின் கொள்கைகளைத் தொடர்ந்து, முன்னிலும் வலிமையாக அமெரிக்காவின் ராஜதந்திர நடவடிக்கைகளை எதிர்கொள்கிறது. ஈரானின் இந்த போர்க்குணமிக்க அணுகுமுறை, மேற்காசியாவில் தற்போதைய சூழலில், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கு எதிரான ஒரு பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.
ஈரானின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடுகள் :
ஈரானின் ஏவுகணை தாக்குதல்கள் மூலம் இஸ்ரேல், ராணுவ ரீதியான நேரடித் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது. இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீது நாள்தோறும் ஏவுகணை தாக்குதல்கள் ஈரான் நடத்தி வருவதால், அந்த நகரங்கள் நரகங்களாக மாறிவிட்டன. காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை போன்று, ஈரான் டெல்அவிவ் உள்ளிட்ட முக்கிய இஸ்ரேல் நகரங்கள் மீது தொடந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அந்த நகரங்கள் சுடுகாடாகி மாறவிட்டன. கடந்த முறை நடத்தப்பட்ட 12 நாள் போரின் போது ஏற்பட்ட பாதிப்பை விட, இந்த முறை மிகப்பெரிய பாதிப்பை இஸ்ரேல் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
======================
"வீரம் செறிந்த ஈரான் ஒருபோதும் பணியவில்லை. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் தாக்குதல்களுக்கு மத்தியிலும், ஈரான் மக்கள் தங்கள் தேசத்தின் மீதான பற்றாலும், கொடுங்கோன்மைக்கு எதிரான தைரியத்தாலும் வீரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆயுதப்படை மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பிறகும், ஈரான் ராணுவம் தொடர்ந்து சூளுரைத்து, தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது"
======================
இதேபோன்று அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்பட்டு வரும், ஐக்கிய அரபு அமீரகம், ஈரானின் தாக்குதல்கள் காரணமாக 165-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் 541-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை எதிர்கொண்டதாக தி குளோப் அண்ட் மெயில்செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. சவூதி அரேபியாவில் ரியாத் மற்றும் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் விமான நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. குவைத் 97 ஏவுகணைகள் மற்றும் 283 ட்ரோன்களால் தாக்குதலுக்கு உள்ளானது.
கத்தாரில் அல் உடைத் விமான தளம் மற்றும் பிற பகுதிகளில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டன. பஹ்ரைனில் அமெரிக்க கடற்படை தலைமையகம் மீதான தாக்குதல் நடத்தப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டது. ஜோர்டானின் முவாஃபக் அல்-சால்டி விமான தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஈராக்கின் ஐன் அல்-அசாத் மற்றும் ஏர்பில் ஆகிய அமெரிக்க ராணுவ தளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. அஜர்பைஜானின் நக் சிவனில் விமான நிலையம் மற்றும் அருகில் உள்ள இடங்கள் மீது ட்ரோன் தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. சிரியாவின் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஈரானின் தாக்குதல்கள் காரணமாக துருக்கிபிராந்திய பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான இந்த மோதலால், இப்பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டு, விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன
அமெரிக்காவிற்கு மிகப்பெரிய தலைவலி :
இந்த போர் நடவடிக்கையின் காரணமாக அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள செலவு விவரம் குறித்து அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. முதல் 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 166 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு முன் விமானங்களை மாற்றி நிலைநிறுத்துதல், 12க்கும் மேற்பட்ட கடற்படை கப்பல்களை பணியில் ஈடுபடுத்துதல், பிராந்திய ஆதாரங்களை இயக்குதல் ஆகியவற்றிற்கு கூடுதலாக 5 ஆயிரத்து 796 கோடி செலவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. விமானம்தாங்கி கப்பலான ஜெரால்டு போர்ட்-ஐ இயக்குவதற்காக ஒருநாளுக்கு 60 கோடி ரூபாய் செலவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஈரானின் தாக்குதல்கள் காரணமாக அமெரிக்க ராணுவ வீரர்களின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. ஈரான் அமரிக்கா இஸ்ரேல் இடைய நடைபெற்று வரும் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை விண்ணை எட்டி வருகிறது. இதனால் உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சளைக்காமல் திருப்பி அடிப்பதற்கு காரணங்கள் :
ஈரான், அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், பெரும் தியாகங்களுக்குத் தயாராக நின்று, வீரத்தை நிலைநிறுத்த முயற்சி வருகிறது. உச்ச தலைவர் உயிரிழப்பு, ராணுவ தளபதிகள் பலி, வான் பாதுகாப்பு அமைப்புகள் முடக்கம் என ஈரான் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகிறது. இத்தனை இழப்புகளை ஏற்படுத்திய பிறகும், ஈரான் சளைக்காமல் திருப்பி அடிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இயற்கையாகவே இருக்கும் புவியியல் அமைப்பு. அதன் மொத்தப் பரப்பளவு சுமார் 16 புள்ளி 5 லட்சம் சதுர கிலோ மீட்டர். பரப்பளவில் ஈரான் உலகின் 17-வது பெரிய நாடு. ஈரானின் பிரம்மாண்டத்தைப் புரிந்துகொள்ள சில ஒப்பீடுகள் அவசியம். ஐரோப்பிய நாடுகளை எடுத்துக்கொண்டால் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நான்கு நாடுகளையும் ஒன்றாகச் சேர்த்தால் எவ்வளவு நிலப்பரப்பு இருக்குமோ, அதைவிட ஈரான் பெரியது.
ஈராக்கை விட 3 மடங்கும், ஆப்கானிஸ்தானை விட 2 மடங்கும் பெரியது. ஒரு நாடு இவ்வளவு பெரியதாக இருப்பது வெறும் பெருமைக்காக மட்டுமல்ல. அது ஈரானுக்கு மூன்று முக்கியமான இயற்கை பாதுகாப்பு அரண்களை வழங்குகிறது. ஈரானின் பரப்பளவு காரணமாக, அதன் முக்கியமான அணுசக்தி நிலையங்கள், ஏவுகணைத் தளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஒரே இடத்தில் குவிக்கப்படவில்லை. இந்த வசதிகள் பல நூறு மைல்கள் இடைவெளியில், மலைகளுக்கு அடியில் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு தாக்குதல் மூலம் ஈரானை முடக்க முடியாது. ஆயிரக்கணக்கான வான்வழித் தாக்குதல்கள் நடத்தினாலும், ஒரு பெரிய நாட்டை முழுமையாகக் கட்டுப்படுத்துவது எந்த ஒரு நாட்டிற்கும் சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும்.
இப்படி ஒரு வரலாற்று ரீதியான பாரம்பரியம் மிக்க நாடாக இருப்பதால், எந்தவித போரையும் தைரியமாக எதிர்கொள்ளும் நெஞ்சுறுதியுடன் ஈரான் இருந்து வருகிறது. தற்போது போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா மறைமுகமாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும், தேன் கூட்டில் கை வைத்து கலைத்துவிட்டதால், ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தயாராக இல்லை. நீங்கள் ஆரம்பித்து வைத்த போரை நாங்கள் முடித்து வைப்போம் என்று உறுதியாக கூறி, சாத்தான்களை தைரியாமாக எதிர்கொண்டு வருகிறது. ஏக இறைவனின் துணை, ரமழானின் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் துஆ ஆகியவற்றின் உதவியுடன் இந்த போரில் ஈரான் நிச்சயம் வெற்றி பெறும். வியட்நாம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பில நாடுகளில் படுதோல்வி அடைந்தது போன்று, அமெரிக்கா மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். அமெரிக்கர்கள் கூட இந்த போரை விரும்பவில்லை என்பது அங்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கருத்து தெரிவித்து இருப்பது உறுதியாக தெரிய வருகிறது. ஈரான் மீது போரை திணித்த இஸ்ரேல், அமெரிக்கா வரலாற்றில் மிகப்பெரிய அவமானத்தையும் தோல்வியையும் அடைவார்கள் என்பது தான் உண்மை.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=======================







No comments:
Post a Comment