ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு கடும் கண்டனம்
வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களை பாதுகாக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...!!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அரசியல் ஆலோசனைக்குழு தீர்மானம்...!!!
புதுடெல்லி, மார்.05- ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து திடீரென தாக்குதல்களை நடத்தி வருவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த மோதல் காரணமாக வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிய செய்ய ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய அரசியல் ஆலோசனைக்குழு ஆலோசனை :
இந்திய யூனயின் முஸ்லிம் லீகின் தேசிய அரசியல் ஆலோசனைக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் பனக்காடு சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் தலைமையில் 04.03.2026 புதன்கிழமையன்று நடைபெற்றது. இணையதள காணொளி காட்சி மூலம் நடைபெற்ற ந்த கூட்டத்தில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பங்கேற்று விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, மத்திய கிழக்கில் வன்முறை அதிகரித்து அமைதி சீர்குலைவது குறித்து கடுமையான கவலையையும் மிகுந்த வேதனையையும் அவர்தெரிவிதார்.
தாக்குதலுக்கு எதிரான தீர்மானம் :
குறிப்பாக, நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதைக் கடுமையாகக் கண்டிக்கும் தீர்மானத்தை குழு நிறைவேற்றியது. எந்த காரணமும் இல்லாமல் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது திணிக்கப்பட்ட போரின் விளைவாக, அதன் தேசியத் தலைவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் உட்பட ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மனிதாபிமான மதிப்புகள், நெறிமுறைக் கொள்கைகள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச உறவுகளின் நன்கு மதிக்கப்படும் நெறிமுறைகளுக்கு எதிரான இந்த மிருகத்தனமான தாக்குதலை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும், வளைகுடா நாடுகள் தலைமையிலான அமைதி முயற்சிகளைப் பாராட்டுகையில், போர் மேலும் தீவிரமடைவதைத் தடுக்க, அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், அண்டை நாடுகளைத் தாக்குவதைத் தவிர்க்கவும் ஈரானை குழு வலியுறுத்தியது.
ஒன்றிய அரசுக்கு கோரிக்கை :
இந்தப் பிரச்சினை நமது இந்திய நாட்டிற்கும் நமது இந்திய மக்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளில், லட்சக்கணக்கானோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வசிக்கின்றனர். மேலும், சர்வதேச சமூகத்தில் உள்ள நாடுகளின் இருதரப்பு உறவுகளில் அமைதிக்காக வலுவான அர்ப்பணிப்புடன் இந்தியா ஒரு சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
எனவே, இந்தப் பிராந்தியத்தில் உள்ள இந்திய குடிமக்களைப் பாதுகாக்க உடனடி ராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்கவும், நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதிச் சூழலை நிலைநாட்டுவதில் முன்னெச்சரிக்கையான பங்கை வகிக்கவும் இந்திய அரசாங்கத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்துகிறது என்றும் தீர்மானத்தில் கேட்டுக் கொண்டுள்ளப்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய மூத்த தலைவர் எம்.பி.அப்துல் சமத் சம்தானி எம்.பி., தேசிய பொருளாளர் பி.வி.அப்துல் வஹாப் எம்.பி, தேசிய அமைப்புச் செயலாளர் முஹம்மது பஷீர் எம்.பி., தேசிய துணைத் தலைவர்கள் கே.பி.அப்துல்.மஜீத், எம்.அப்துர் ரஹ்மான், சீராஜ் இப்ராஹிம் சேட், நயீம் அக்தர், ஜெய்னுல் ஆபீதின், கவுசர் ஹயாத் கான், தேசிய செயலாளர்கள் குரம் அனிஸ் உமர், கே.நவாஸ் கனி, சி.கே.சுபைஹர், தேசிய துணைச் செயலாளர் ஹஜீப் அன்சாரி, வழக்கறிஞர் பைசல் பாபு, நஜ்முல் அசன் கனி, பாத்திமா முசப்பர், ஜெயந்தி ராஜன், அஞ்சலி குமார் சீனா, எம்.பி.முஹம்மது கோயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments:
Post a Comment