Thursday, April 16, 2026

கொளத்தூர் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் திவிர பிரச்சாரம்....!

 தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :

முதலமைச்சர் மு..ஸ்டாலின் போட்டியிடும்

கொளத்தூர் தொகுதியில் .யூ.முஸ்லிம் லீக் திவிர பிரச்சாரம்

வீடுவீடாகச் சென்று வாக்குசேகரிக்கும் முஸ்லிம் லீகர்கள்


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் தற்போது ராக்கெட் வேகத்தில் படுவேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள கொளத்தூர் உள்ளிட்ட அனைத்துத் தொகுதிகளின் நிலவரத்தை அறிந்துகொள்ள தமிழ்நாடு முழுவதும் ஓர் ஆர்வம் இருந்து வருகிறது. சென்னையில் உள்ள கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு..ஸ்டாலின் போட்டியிடுகிறார். மு..ஸ்டாலின் அவர்கள்  சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக கடந்த 2011 முதல் தொடர்ந்து போட்டியிட்டு, தனது தொகுதியை ஒரு மாதிரித் தொகுதியாக மாற்றியுள்ளார்.  முதல்வர்  ஸ்டாலின் தமது தொகுதியில் 'முதல்வர் படைப்பகம்', நவீன சந்தை வளாகம், ரெட்டேரி ஏரிப் பூங்கா போன்ற பல மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். கொளத்தூர் அலங்கார மீன் சந்தைக்காகப் பிரபலமானது மற்றும் இப்பகுதி 'சென்னையின் மீன் கிண்ணம்' என்று அழைக்கப்படுகிறது. முதலமைச்சரின் சாதனை தொடர்பாக 5 ஆண்டு சாதனை விளக்கப் புத்தகத்தை வெளியிட்டு, தீவிர தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பிரச்சாரம் செய்து வருகிறது. கொளத்தூர் தொகுதியில் 238 வாக்குச் சாவடிகள் உள்ளன.

தற்போது தேர்தல் களத்தில் அனல் பறக்கும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் .யூ.முஸ்லிம் லீக், தீவிர பிரச்சாரம் செய்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் .யூ.முஸ்லிம் லீகின் பிரச்சாரம் களைகட்டியுள்ள நிலையில், தற்போது .யூ.முஸ்லிம் லீகின் தேர்தல் பணிகள் எப்படி உள்ளன என்பதை அறிய விரும்பினோம். எனவே, .யூ.முஸ்லிம் லீக் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர்  .எச்.எம்.முஹம்மது இஸ்மாயில், சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் கே.கோதர் ஷா ஆகியோரிடம் தேர்தல் பிரச்சாரப் பணிகள் குறித்து நேரில் கேட்டு தகவல்களை திரட்ட முடிவு செய்து இருவரிடமும் கூட்டாக மணிச்சுடர் நாளிதழுக்காக சிறப்பு நேர்காணல் ஒன்றை நடத்தினோம். சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் நடத்திய நேர்காணலின்போது இருவரும் கூட்டாக தெரிவித்த சுவையான தகவல்களின் முழு விவரத்தை உங்கள் பார்வைக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

6 தொகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பு :

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், 6 தொகுதிகள் எங்களது இ.யூ.முஸ்லிம் லீக் சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பில் வருகிறது. அதன்படி, துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர்., வில்லிவாக்கம், கொளத்தூர், அம்பத்தூர் ஆகிய 6 தொகுதிகளில், நாங்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறோம்.

எங்களது பிரச்சாரம் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு தொடங்கி, 11 மணி வரை நடைபெற்று வருகிறது. மீண்டும் மாலை 4 மணிக்கு தொடங்கும் எங்களது பிரச்சாரம் இரவு 10 மணி வரை நீடிக்கிறது. நாங்கள் பிரச்சாரம் செய்வதற்காக, இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் தனிக்குழுக்களை அமைத்துள்ளோம். அந்த தனிக்குழுக்கள் எங்கள் பொறுப்பில் உள்ள 6 தொகுதிகளுக்கும் சென்று நாள்தோறும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன், எங்களது இ.யூ.முஸ்லிம் லீக் குழுக்கள் இணைந்து பிரச்சாரம் செய்து வருகிறது. திமுக பகுதி நிர்வாகிகள், மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் இணைந்து நாங்கள், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களை நேரில் சந்தித்து, கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் நடைபெற்ற வளர்ச்சி திட்டங்கள், மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலப் பணிகள் ஆகியவை விளக்கம் அளித்து வருகிறோம். மேலும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்றும், அதன்மூலம் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கும் என்றும் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

சென்னையில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு சென்னை கிழக்கு மாவட்ட இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அனைவரும் மிகச் சிறந்த முறையில், ஆதரவு திரட்டி வருகிறார்கள். அதன் காரணமாக எங்கள் பிரச்சாத்திற்கு வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் :

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் நாள்தோறும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. எங்களது சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து வாக்காளர்கள் மத்தியில் எடுத்துக்கூறி மீண்டும் இந்த தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்றால், தொகுதி மேன்மேலும் வளர்ச்சி அடையும் என்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

கொளத்தூர் தொகுதி முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவான அலை வீசுவதை நாங்கள் காண முடிந்தது. வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குகள் அனைத்தும், நிச்சயமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கே என்று எங்களிடம் கூறும்போது, உண்மையிலேயே கொளத்தூர் தொகுதியை மிகப்பெரிய அளவுக்கு மாற்றி, ஒரு நட்சத்திர தொகுதியாக தளபதி அவர்கள் உருவாக்கி இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து நாங்கள் வியப்பு அடைந்தோம். எனவே கடந்த சட்டமன்றத் தேர்தலை விட இந்த முறை, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கையை கொளத்தூர் தொகுதி வாக்காளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. எங்களுக்கும் அந்த நம்பிக்கை உள்ளது.

துறைமுகம் தொகுதியில் களப் பணி :

இதேபோன்று, அமைச்சர் பி.கே.சேகர் பாபு போட்டியிடும் சென்னை துறைமுகம் தொகுதியில், இ.யூ.முஸ்லிம் லீக் கிழக்கு மாவட்ட தொண்டர்கள் நாள்தோறும் கடும் வெயிலுக்கு மத்தியிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் தனிதனித் குழுக்களாக துறைமுகம் தொகுதி முழுவதும் வளம்வரும் இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள், அமைச்சர் சேகர் பாபு கலந்துகொள்ளும் வாக்குசேகரிக்கும் நிகழ்ச்சிகளின்போது, 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் லீகர்கள் பிறைக் கொடி ஏந்திக் கொண்டு கலந்துகொள்கிறார்கள்.  வேட்பாளர் சேகர் பாபு உடன்சென்று வாக்காளர்கள் மத்தியில் திமுக ஆட்சியின் சிறப்புகள் அதனால் ஏற்பட்ட பலன்கள், திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து துறைமுகம் தொகுதி வாக்காளர்கள் மத்தியில் நாங்கள் எடுத்துக் கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

துறைமுகம் தொகுதியில் உள்ள பிடாரியார் கோவில் தெரு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு 14.04.2026 அன்று பிரச்சாரம் செய்தபோது, இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது, சேகர் பாபுவிற்கு பொன்னாடை அணிவித்து பேராசிரியர் வாழ்த்து தெரிவித்தார். இந்த பிரச்சாரத்தின்போது, சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் தலைவர், பொதுச் செயலாளர் என்ற முறையில் நாங்கள் இருவரும் கலந்துகொண்டோம். மேலும், மாவட்ட துணைத் தலைவர் அக்பர் அலி சேட், முஸ்லிம் யூத் லீக் மாவட்டத் தலைவர் சுல்தான், துறைமுகம் பகுதி தலைவர் அப்துல் சுக்கூர், வடக்கு மாவட்ட எஸ்.டி.யூ. செயலாளர் ஏ.கே.முஹம்மது ரபி, பூவை காதர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். அப்போது துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர் பாபுவிற்கு வாக்காளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருவதை நாங்கள் நேரில் கண்டோம்.

துறைமுகம் தொகுதியில் நடத்தப்பட்ட வாகன பேரணியில் கூட இ.யூ.முஸ்லிம் லீக் கிழக்கு மாவட்டம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்,. கொளத்தூர், துறைமுகம் தொகுதிகளை போன்றே மற்ற 4 தொகுதிகளிலும் எங்களது பிரச்சாரம் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, எழும்பூர், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய நான்கு தொகுதிகளிலும் இ.யூ.முஸ்லிம் லீக் கிழக்கு மாவட்ட பிரதிநிதிகள் திரளாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். திமுக அரசின் 5 ஆண்டு கால பணிகள் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன்மூலம் எங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள 6 தொகுதிகளிலும் திமுக மகத்தான வெற்றிபெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதேநேரத்தில் கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் மாற அதிக வாய்ப்பு உள்ளது.

த.வெ.க. ஒரு பிரச்சினையே இல்லை :

துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர்., வில்லிவாக்கம், கொளத்தூர், அம்பத்தூர் ஆகிய 6 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அந்த வேட்பாளர்கள் யாரும் வாக்காளர்களின் கவனத்தை பெறவில்லை. இதேபோன்று அதிமுக வேட்பாளர்கள் கூட, வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமல் இருந்து வருகிறார்கள். ஒருசில இளைஞர்கள், மற்றும் பெண்கள், த.வெ.க,.விற்கு ஆதரவான நிலையில் இருந்தாலும், திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மகளிர் நலத்திட்டங்கள் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த திட்டங்கள் மூலம் பயன் அடைந்த அனைத்து பெண்களும், திமுகவிற்கு தான் தங்கள் வாக்கு என்று உறுதியாக கூறி வருகிறார்கள். இதை நாங்கள் நேரில் பார்க்க முடிந்தது.

சென்னையை பொருத்தவரை, தற்போது போட்டியே, திமுகவிற்கும் த.வெ.க.விற்கும் இடையே தான் என்ற நிலை இருந்து வருகிறது. எழும்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக தேர்தல் பணிமனையே திறக்கவே இல்லை. இதன்மூலம், அவர்களின் தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். திமுகவின் தேர்தல் பணிகள் இந்த முறை ராக்கெட் வேகத்தில் இருப்பதால், மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, சென்னை எப்போதும் திமுகவின் கோட்டை என்பதையும் இந்த முறையும் அது உண்மையாகும் என்பதையும் மே 4ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

நல்ல ஒத்துழைப்பு :

சென்னையில் எங்கள் பொறுப்பில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் நாங்கள் பிரச்சாரம் செய்யும்போது, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. அத்துடன், கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக பணியாற்றி வருகின்றன. தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற இன்னும் குறைந்த நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தோழமைக் கட்சி நிர்வாகிகள் அனைவருடன் இணைந்து 6 தொகுதிகளிலும் இ.யூ.முஸ்லிம் லீக் கிழக்கு மாவட்ட சார்பில் நாங்கள் இன்னும் படுவேகத்தில் பிரச்சாரம் செய்வோம்,. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வரலாற்று வெற்றியை நிச்சயம் பெறும் என்று நாங்கள் மிகவும் உறுதியாக நம்புகிறோம்.  

இவ்வாறு இ.யூ.முஸ்லிம் லீக் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர்  .எச்.எம்.முஹம்மது இஸ்மாயில், இ.யூ.முஸ்லிம் லீக் சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் கே.கோதர் ஷா ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர். அவர்களது எண்ணங்கள் நிறைவேற வாழத்திவிட்டு விடைப்பெற்றோம்.

- சந்திப்பு : சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: