மத்திய கிழக்கு போர் பதற்றம் எதிரொலியால் விமான கட்டணங்கள் உயர்வு....!
இந்திய ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரும் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்....!!
இந்திய ஹஜ் குழு சுற்றறிக்கை...!!!
புதுடெல்லி, ஏப்.29- மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துவிட்டதால், இந்திய ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரும் கூடுலாக தலா 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று ஒன்றிய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது.
இந்திய ஹஜ் குழு சுற்றறிக்கை :
தற்போது ஹஜ் பெருவிழாவிற்கான காலம் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து புனித ஹஜ் பயணிகள், மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு புறப்பட்ட வண்ணம் உள்ளனர். எனினும், மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக அனைத்து விமான நிறுவனங்களும் தங்களது விமான பயணிகள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன. இதனால், ஹஜ் பயணிகள் பலரும் புதிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒன்றிய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் குழு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய ஹஜ் குழுவின் தலைமை செயல் அலுவலர் ஷாநவாஸ் வெயிட்டுள்ள அறிக்கையில், தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடி மற்றும் பதற்றம் காரணமாக விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒன்றிய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் குழுவிற்கு, ஹஜ் பயணிகளுக்கான விமான கட்டணம் குறித்து 28.04.2026 அன்று முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விமான கட்டணம் :
அதன்படி, இந்திய ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரும் தாங்கள் ஏற்கனவே செலுத்திய விமான கட்டணத்துடன் கூடுதலாக 100 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக விமான கட்டணம் 400 அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என விமான நிறுவனங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டது. எனினும், ஒவ்வொரு இந்திய ஹஜ் பயணிகளும் குறைந்த பட்சமாக 100 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும் என்பதை இந்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகம், விமான நிறுவனங்களிடம் கலந்தாலோசித்து ஒப்புதல் வழங்கியுள்ளது.
எனவே, இந்திய ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த தொகையை வழக்கம் போல எஸ்.பி.ஐ., யு.பி.ஐ., வங்கிகள் அல்லது இ.பேமெண்ட் வழியாக செலுத்த வேண்டும். இந்த கூடுதல் கட்டணத்தை வரும் மே 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும், கூடுதல் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுகளை இந்திய ஹஜ் குழுவிற்கு அனுப்ப வேண்டும். மேலும், இதுதொடர்பாக அனைத்து மாநில ஹஜ் குழுக்களும் உரிய நடவடிக்கை எடுத்து, ஹஜ் பயணிகளிட்ம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். செலுத்த கடைசி நாள் 15-05-2026..
இவ்வாறு இந்திய ஹஜ் குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்



No comments:
Post a Comment