Wednesday, April 15, 2026

திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு மற்றும் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிகள் : ஓர் சிறப்பு ரிப்போர்ட்...!

திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு மற்றும்   திருவெறும்பூர்  சட்டமன்றத் தொகுதிகள் :

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் முஸ்லிம் லீகர்கள் தீவிர பிரச்சாரம்....! 

- ஓர் சிறப்பு ரிப்போர்ட் -

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் சார்பில், திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் இ.யூ.முஸ்லிம் லீக் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த வகையில் திருச்சியின் மண்ணின் மைந்தர்கள் அமைச்சர்கள் கே.என்.நேரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இனிகோ இருதயராஜ்  ஆகியோரின் வெற்றிக்காக இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் முஸ்லிம் லீகர்கள் அனைவரும் மூன்று தொகுதிகளில் வலம்வந்து, வீடுவீடாகச் சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட குழுவினர் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கி, இரவு 10 மணிக்கு நிறைவு செய்கிறார்கள்.  

கே.என்.நேருவுக்கு ஆதரவாக களப்பணி :

திருச்சி எப்போதும் திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது. குறிப்பாக,  திமுக என்றாலே திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி தான் என சொல்லும் அளவுக்கு அந்த தொகுதியை தம்முடைய சிறப்பான பணிகள் மூலம் திமுகவின் அஞ்சாநெஞ்சன் அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் வளம்படுத்தி சிறப்பாக வைத்துள்ளார். திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியின் பிரச்சினைகளை உடனுக்கு உடனே தீர்க்கும் கே.என்.நேரு, தொகுதி மக்கள் அனைவரிடமும் குடும்ப பாசத்துடன் பழகும் பண்பு, அனைத்துச் சமுதாய மக்களையும் வெகுவாக கவர்ந்து ஈர்த்து வருகிறது. அதன் காரணமாக, நேருவின் வெற்றி உறுதி என்றே கூற வேண்டும். 

இத்தகைய சூழ்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் அனைத்து முஸ்லிம் லீகர்களும், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களப்பணி எனும் தீவிர பிரச்சாத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், காஜாமலை மெயின் ரோடு,  காளியம்மன் கோவில் தெரு, ஐய்யனார்கோவில் தெரு, அண்ணா நகர் ரோடு, லூர்துசாமி பிள்ளை காலனி 2வது தெரு, லூர்துசாமி பிள்ளை காலனி 1வது தெரு, முஸ்லிம் தெரு பள்ளிவாசல், ஈ.பி. காலனி மெயின் தெரு, கோகுலம் காலனி, இந்தியன் பேங்க் காலனி மெயின் ரோடு, இந்தியன் பேங்க் காலனி கோவில், சுந்தர் நகர், அம்மன் நகர் கோவில், எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் கே.என்.நேருவுக்கு ஆதரவாக  தீவிரப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. 

அமைச்சர் கே.என்.நேருவுடன் இணைந்து வாக்குவேட்டையில் ஈடுபடும், இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தலைமையிலான குழுவினர்,  கே.என்.நேருவுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர். அப்போது,  இஸ்லாமிய சொந்தங்கள் அளித்த அன்பின் ஆரவாரமும், உற்சாக வரவேற்பும் வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேருவை பெரிதும் அக மகிழ செய்தது.

திராவிட மாடல் அரசின் சாதனைகள் :

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியின் பிரச்சாரத்தின்போது, திராவிட மாடல் அரசின் 5 ஆண்டு சாதனைகளை எடுத்துக் கூறியும், திராவிட மாடல் 2.0 ஆட்சியில் திமுக செய்யப் போகும் சாதனைகளை வாக்குறுதிகளாகவும் விளக்கிக் கூறியும் வீதி வீதியாகச் சென்று திமுக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து இ.யூ.முஸ்லிம் லீகர்கள் வாக்கு சேகரித்தனர். இதேபோன்று திருச்சி மேற்கு தொகுதியில் நடக்கும் தெருமுனை பிரச்சாரத்தில் பங்கேற்கும் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான், திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு உறுதியாக வெற்றி பெறுவார் என்றும், அதற்கு முக்கிய காரணம் தொகுதிக்கு அவர் ஆற்றியுள்ள சிறப்பான பணிகள், நிறைவேற்றியுள்ள திட்டங்களே ஆகும் என்றும் தெரிவித்தார்.  மேலும், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரவில்லை. மக்களை நேரில் சந்தித்து அவர்களின் ஆதரவோடு தான் ஆட்சிக்கு வந்து இருக்கிறார்கள். தமிழக மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை அவர்கள் தந்து இருக்கிறார்கள். அதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான அணி வெல்லும் என்ற முழக்கம் ஒலித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். 

திருவெறும்பூர் தொகுதியில் பிரச்சாரம் :

இதேபோன்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் திருவெறும்பூர் தொகுதியிலும் இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தலைமையிலான குழுவினர்  தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 

அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள், சமூக நலத் திட்டங்கள், பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி, மாணவ மாணவர்களின் கல்வியின் முக்கியத்துவத்திற்கு எடுக்கப்பட்டு செயல்திட்டங்கள் குறித்து, இ.யூ.முஸ்லிம் லீகினர், வாக்காளர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் இந்த பிரச்சாரம் தற்போது படுவேகம் எடுத்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்மூலம் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் மத்தியில் கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் மிகப்பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைத்து வருவதை காண முடிகிறது. 

திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்குசேகரிப்பு :

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மண்ணின் மைந்தர் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்களுக்கு ஆதரவாக 15.04.2026 புதன்கிழமையன்று, இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தலைமையிலான குழுவினர்  தீவிர பிரச்சாரம் செய்தனர். ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு, அண்ணா நகர், காந்தி நகர், பெரியார் தெரு,  அலிகான் குளம் ஆகிய பகுதிகளில் வேட்பாளருடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த பிரச்சாரத்தின்போது, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திராவிட மாடல் ஆட்சியில் ஏற்பட்ட பலன்கள் குறித்தும் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் குறித்தும் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

திருச்சியின் மண்ணின் மைந்தர்கள் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் இனிகோ இருதயராஜ் ஆகியோருக்கு இ.யூ.முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட குழுவினர் செய்த பிரச்சாரம் மூன்று தொகுதிகளில் உள்ள வாக்காளர்களை மட்டுமல்லாமல், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளையும்  பெரிதும் கவர்ந்து பெரும் வரவேற்பை பெற்றது என்றே கூறலாம்.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: