பள்ளிக்கூடம்....!
முன்பதிவு
செய்யவில்லை,
வரிசையில்
நிற்கவில்லை,
நன்கொடை
எதுவும் தரவில்லை,
ஆதார் அட்டை
ஜெராக்ஸ் கேட்கவில்லை,
பிறப்புச் சான்று
எடுத்துச் செல்லவில்லை,
மஞ்சப் பையில்
கல் சிலேட்டையும்,
பலப்பத்தையும்,
ஒரு வாய்பாட்டையும்
எடுத்துக் கொண்டு,
அப்பாவின் கையை
பிடித்துச் சென்று,
கையினால்
காதைத் தொட்டு,
ஆரஞ்சு மிட்டாயை
அனைவருக்கும்
கொடுத்து,
ஆனந்தமாய்
ஆரம்பமானதுதான்
என் படிப்பு.
- எக்ஸ் வலைத்தள பதிவில் பார்வையில் பட்ட அழகிய கவிதை....

No comments:
Post a Comment