தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா:
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி எதிரொலி:
தமிழகம் முழுவதும் மக்களிடையே உருவாகியுள்ள புதிய எழுச்சி....!
திமுக கூட்டணிக்கு ஆதரவாக வீசும் வெற்றி அலை....!!
தமிழகத்தில் சமீபகாலமாக நிலவும் அரசியல், சமூக மற்றும் பண்பாட்டுச் சூழலில் மக்கள் மத்தியில் பல்வேறு எழுச்சிகள் காணப்படுகின்றன. 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, முக்கியமாக அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த 15 நாட்களாக தமிழகம் முழுவதும் அரசியல் தலைவர்களின் எழுச்சிமிகு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, தொகுதி மறுவரையறை தொடர்பான ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு எதிராக, அது தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் "சதி" என்று கருதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்புக் கொடி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தார். திமுக தலைவரின் இந்த அழைப்பை ஏற்று தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்பட்டு, ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தென்னிந்திய மாநிலங்களின், குறிப்பாகத் தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி :
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற தமிழக மக்களவை உறுப்பினர்கள் அனைவரும், மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதங்களை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவிற்கு மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்கவில்லை. மசோதாவிற்கு ஆதரவாக 278 பேரும் எதிராக 211 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதா வெற்றி பெற மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள், அதாவது 326 வாக்குகள் தேவை என்ற நிலையில், பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காததால், மசோதா தோல்வி அடைந்தது. இது மோடி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வியாகும்.
தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி :
நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி அடைந்த செய்தியைக் கேட்டதும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அடைந்த மகிழ்ச்சி அளவே இல்லை என்று கூறலாம். பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் அவர் தம்முடைய ஆனந்தத்தை வெளிப்படுத்தினார். இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த முதல் வெற்றி என்று மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். இந்த வெற்றி 100 ஆண்டுகள் ஆனாலும், வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்றும் அவர் உறுதிப்பட கூறினார். தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் நடக்கும் போரில், முதல்கட்டமாக தமிழ்நாடு தற்போது வெற்றி பெற்று இருக்கிறது. வரும் 23ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மிகப்பெரிய வெற்றியை திமுக கூட்டணி பெறும், தமிழ்நாட்டின் இரண்டாவது வெற்றியை மீண்டும் பதிவு செய்யும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அத்துடன் நிற்காமல், மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அது தோல்வி அடையச் செய்த காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார். அத்துடன் சமூக நீதியை காப்பாற்ற திமுக தொடர்ந்து போராடும் என்றும் மாநிலங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் அவர் உறுதிப்பட கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் எழுச்சி :
இத்தகைய சூழ்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்ததையடுத்து, தமிழ்நாடு முழுவதும் மக்களிடையே ஒரு புதிய எழுச்சி உருவாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், இந்த மக்கள் எழுச்சி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக மாறிவிட்டது என்றே கூறலாம்.
தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது என்று திமுக கூட்டணித் தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது, தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க வகைசெய்யும் மசோதா தோல்வி அடைந்ததால், அது திமுக அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறிவிட்டது. தவெக,., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவாக இருந்த மக்கள் கூட, தற்போது திமுக அணியின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர். இதன் காரணமாக, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்த வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியை தமிழக மக்கள் தருவார்கள் என அரசியல் நோக்கர்கள் கருகிறார்கள்.
சரியான திசையில் திமுக அணி :
இத்தகைய அரசியல் சூழ்நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைவர்கள், தமிழ்நாடு முழுவதும் உருவாக்கியுள்ள மக்கள் எழுச்சியை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள தீவிரம் காட்டி வருகின்றனர். வாக்குப்பதிவு நாள் வரை இந்த எழுச்சி மக்கள் மத்தியில் இருக்கும் வகையில், சரியான திட்டமிடலுடன் திமுக அணி தங்களது பிரச்சாரங்கள் செய்துவருவதாகவே தெரிகிறது. இதன்மூலம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் வரலாற்று வெற்றி கிடைக்கும் என உறுதியாக கூறலாம்.
இதுஒருபுறம் இருக்க, தமிழ்நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகிகள், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதர்ச்சார்ப்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு இஸ்லாமியர்கள் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். வெள்ளி மேடையிலும் தேர்தல் குறித்து இஸ்லாமியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசங்கம் செய்யப்பட்டது. இதன்மூலம் அனைத்து இஸ்லாமியர்களின் வாக்குகள் திமுக அணிக்கு கிடைக்கும் என்று உறுதிப்பட கூறலாம். இதேபோன்று, கிறிஸ்துவ பெருமக்கள் கூட, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவான நிலையை எடுத்து இருக்கிறார்கள். மேலும், தமிழ்நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மையின மக்களின் ஒரே தேர்வாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இருந்து வருகிறது.
எனவே, தற்போது தமிழ்நாட்டில் மக்களிடையே உருவாகியுள்ள புதிய எழுச்சி, தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடர வழிவகை செய்து, ஒன்றியத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற உறுதியுடன் போராடும் ஒரு நல்ல ஆட்சியை அமைக்க துணை நிற்கும் என்று உறுதியாக கூறலாம்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்






No comments:
Post a Comment