Wednesday, April 15, 2026

கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் சிறப்பு நேர்காணல்....!

 தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :

தமிழகத்தில் மு..ஸ்டாலின் தலைமையில்

மீண்டும் திராவிட மாடல் ஆட்சி நிச்சயம் அமையும்

பாபநாசம், வாணியம்பாடி தொகுதிகளில்

.யூ.முஸ்லிம் லீக் வெற்றிபெறுவது உறுதி

.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே..எம்.முஹம்மது அபூபக்கர் நம்பிக்கை 

- ஓர் சிறப்பு நேர்காணல் -

திமுக தலைமையிலான மதர்ச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக, .யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே..எம்.முஹம்மது அபூபக்கர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல் கட்டமாக தேர்தல்  பிரச்சாரத்தை நிறைவு செய்துவிட்டு, சென்னை திரும்பிய அவர், இரண்டாவது கட்டமாக தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். திமுக கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்துவரும் அவர், தனது தேர்தல் காலப்பணிகளுக்கு  மத்தியில், மணிச்சுடர் நாளிதழ் சிறப்புச் செய்தியாளர் எஸ்..அப்துல் அஜீஸூக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை அளிக்க ஒப்புக் கொண்டார்.

அந்த நேர்காணலில், திமுக தலைமையிலான மதர்ச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிவாய்ப்பு, .யூ.முஸ்லிம் லீக் போட்டியிடும் பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளின் கள நிலவரம், தோழமை கட்சிகளின் ஒத்துழைப்பு, மக்களின் எழுச்சி ஆகியவை குறித்து பல்வேறு சுவையான தகவல்களை தெரிவித்தார். தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா என்ற தலைப்பின் கீழ் நாள்தோறும், சிறப்பு தகவல்களை வெளியிட்டு வரும் மணிச்சுடர் நாளிதழ், .யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே..எம்.முஹம்மது அபூபக்கரின் நேர்காணலையும் பெருமையுடன் வெளியிடுகிறது.

சூறாவளி சுற்றுப்பயணம் :

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை .யூ.முஸ்லிம் லீக் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தொடங்கி முஸ்லிம் லீகர்கள் மத்தியில், 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது. இத்தகைய சூழ்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொகுதிகள் இறுதிசெய்யப்பட்டு, தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்தவுடன், .யூ.முஸ்லிம் லீக், தனது தேர்தல் பணிகளை மேலும் தீவிரப்படுத்தி, மக்கள் மத்தியில் திராவிட மாடல் ஆட்சியின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில முக்கிய நிர்வாகிகள் அனைவரும், திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மாநில பொதுச் செயலாளர் என்ற முறையில் நானும், எனது முதல்கட்ட பிரச்சாரத்தை கடந்த 10 நாட்கள் செய்து முடித்துவிட்டு, இரண்டாவது கட்டப் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கியுள்ளேன். எனது முதல்கட்ட பிரச்சாரத்தில் 40க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குசேகரிப்பு பணியில் நாங்கள் ஈடுபட்டோம். வாகன பேரணி, வாகன பிரச்சாரம், தெருமுனை பிரச்சாரம் என பல்வேறு வகைகளில் நாங்கள் வாக்காளர்களை சந்தித்து அவர்களது ஆதரவை பெற்று வருகின்றோம்.

அதுமட்டுமல்லாமல், நாம் சுற்றுப்பயணம் செய்த அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்ட அணிகளின் பொறுப்பாளர்கள், மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள், வணிக பெருமக்கள், தொழில் நிறுவன நிர்வாகிகள் என அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு திரட்டினோம். கடந்த 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களை நாம் எடுத்துக்கூறி, மீண்டும் திராவிட மாடல் ஆட்சி வந்தால் மட்டுமே, தமிழ்நாடு சிறப்பான முன்னேற்றத்தை அடையும் என்று தெரிவித்தோம். எங்களுடைய கருத்துகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

.யூ.முஸ்லிம் லீகின் இரண்டு தொகுதிகள் :

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் .யூ.முஸ்லிம் லீக் வாணியம்பாடி, பாபநாசம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. வாணியம்பாடி தொகுதிகளில் லீகின் வேட்பாளராக எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் களத்தில் உள்ளார். வாணியம்பாடி தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளின் ஒத்துழைப்பு மிகவும் சிறந்த முறையில் இருந்து வருகிறது. திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், வாணியம்பாடி தொகுதியின் வெற்றி மிகமிக முக்கியம் என்று கூறி, திமுக நிர்வாகிகளை, குறிப்பாக திருப்பத்தூர் மாவட்ட திமுக நிர்வாகிகளை தேர்தல் பணிகளை மேலும் தீவிரமாக செய்ய வேண்டும். .யூ.முஸ்லிம் லீகின் ஏணி சின்னம் வாக்காளர்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில், நல்ல ஆலோசனைகளை வழங்கி தேர்தல் பணிகளை மிகவும் சிறந்த முறையில் நடக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்கள். தேர்தல் பணி பொறுப்பாளர்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி தேர்தல் பணிகளை செய்ய அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாக .யூ.முஸ்லிம் லீக் போட்டியிடும் வாணியம்பாடி, பாபநாசம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் பரப்புரை முன்எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக தலைவர் மு..ஸ்டாலின் தான் வேட்பாளர் என்பதை நினைவில் கொண்டு, தேர்தல் பணிகளை ஆற்ற வேண்டும் என்று திமுகவினருக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருப்பதால், பணிகள் உண்மையிலேயே சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த சட்டமன்றத் தேர்தல் என்பது மிகவும் முக்கியமான தேர்தல் என்று கூறி, நாங்கள் பிரச்சாரம் செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் பாசிச பாஜக, அதிமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடக்க வேண்டும். தமிழ்நாட்டின் தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அடிமைகளின் கீழ் வழி நடத்தப்படக் கூடாது. தமிழ்நாட்டில் மதநல்லிணக்கம் மிகவும் சிறந்த முறையில் இருக்க வேண்டும். தமிழக மக்கள் ஒற்றுமையாக அமைதியாக வாழ வேண்டும் என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். எங்களுடைய பிரச்சாரம் உண்மையிலேயே மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வாணியம்பாடி தொகுதியின் நிலவரம் :

பாரம்பரியமான வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியை பொருத்தவரை, கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தலுக்கும், தற்போது நடக்கும் தேர்தலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருந்து வருகிறது. தற்போது திமுக ஆளும் கட்சியாக இருப்பதால், கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலப்பணிகள், வளர்ச்சி திட்டங்கள், மகளிர் நலன், மாணவ மாணவியரின் கல்வி முன்னேற்றம் ஆகியவை குறித்து நாங்கள் வாக்காளர்கள் மத்தியில் எடுத்துக்கூறி, பிரச்சாரம் செய்கிறோம். திமுக அரசின் பணிகள் மக்களை வெகுவாகவே கவர்ந்து இருப்பதை நாங்கள் நேரில் காண முடிகிறது.

வாணியம்பாடி தொகுதியில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் அதிகளவு திமுக பிரதிநிதிகள் இருந்து வருகிறார்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் திமுக அரசின் திட்டங்களை மக்கள் முன்கொண்டு சென்று சேர்த்து இருக்கிறார்கள். இது வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் .யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூகிற்கு ஒரு பலமாக இருந்து வருகிறது. கடந்த மூன்று தேர்தல்களில் அதிமுகவைச் சேர்ந்தவர்  மட்டுமே தொடர்ந்து வெற்றிபெற்று வருவதால், இந்த முறை, மாற்றம் தேவை என்ற எண்ணம் வாணியம்பாடி தொகுதி மக்களிடம் இருப்பதை காண முடிகிறது. அத்துடன், திமுக கூட்டணி மிகவும் வலிமையான கூட்டணியாக இருந்துகொண்டு, தேர்தல் பணிகளை ஆற்றிவருகிறது. திமுக கூட்டணியின் பலமே, திமுக தலைவர் தான் என்று கூற வேண்டும்.

தமிழ்நாட்டில் தற்போது நல்லாட்சி நடந்து வருவதால், அந்த ஆட்சியே தொடர வேண்டும் என்று வாணியம்பாடி தொகுதி மக்கள் விரும்புகிறார்கள். மற்ற அணிகள் வெற்றிபெற்றால், தமிழ்நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படும், தமிழ்நாடு பின்னோக்கிச் சென்றுவிடும் என்ற மனநிலை மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் பெருமை, கலாச்சாரம், பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டுமானால், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அவசியம் வெற்றிபெற வேண்டும் என்று வாணியம்பாடி தொகுதி வாக்காளர்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதி வாக்காளர்களும் விரும்புகிறார்கள். இதன் காரணமாக இந்த முறை வாணியம்பாடி தொகுதியில் .யூ.முஸ்லிம் லீக் நிச்சயம் வெற்றிபெறும். .யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக், கண்டிப்பாக தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, மிகச் சிறந்த முறையில் பணியாற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

பாபநாசம் தொகுதியின் நிலவரம் :

வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் எப்படி ஒரு சிறப்பான சூழல் நிலவுகிறதோ, அதேபோன்ற ஒரு சாதகமான சூழ்நிலை பாபநாசம் தொகுதியிலும் இருந்து வருகிறது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தற்போது திமுகவில்  ஐக்கியமாகி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிவருகிறார்கள். டிடிவி தினகரன் ஆதரவாளர் ..மு.கவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டார். இதேபோன்று முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், திமுகவில் சேர்ந்து, திராவிட மாடல் ஆட்சிக்கு துணையாக இருந்து வருகிறார். இவையெல்லாம் திமுகவிற்கு பலமாகும்.   தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் அதிமுகவிற்கு ஆதரவு வழங்கி இருப்பதால், பாபநாசம் தொகுதியில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

பாபநாசம் தொகுதியில் துணை முதலமைச்சர் மு..ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும்போது மிகவும் தெளிவாக கூறிவிட்டார். பாபநாசம் தொகுதியில் ஏணி சின்னம் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும். இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும். எனவே திமுகவினர் கடுமையான உழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். பாபநாசம் தொகுதியில் .யூ.முஸ்லிம் லீகின் ஏணி சின்னம் வாக்காளர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டு வருகின்றது. சுவர் விளம்பரம், சமூக வலைத்தளங்கள் என பல்வேறு வகையிலும் ஏணி சின்னம் மக்கள் மத்தியில் தற்போது பிரபலம் அடைந்து வருகின்றது. அத்துடன் வீடு வீடாக சென்றுஏணி சின்னத்தை அறிமுகம் செய்து வருகிறோம்.

.யூ.முஸ்லிம் லீகின் மாநில நிர்வாகிகள் அணிகளின் பொறுப்பாளர்கள் பாபநாசம் தொகுதியில் முகாமிட்டு, தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். இ.யூ.முஸ்லிம் லீகில் உள்ள துணை அமைப்புகள். அனைத்தும் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள், சந்திப்பு நிகழ்ச்சிகள், மகளிர் அணி தலைமையில் சந்திப்பு நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படி .யூ.முஸ்லிம் லீக் மட்டுமல்லாமல், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளும் சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிவருவதால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, பாபநாசம் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் .யூ.முஸ்லிம் லீக் இந்தமுறை நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உறுதியாக உள்ளது.

13 முஸ்லிம் வேட்பாளர்கள் :

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் .யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்களை சேர்ந்து மொத்தம் 13 பேர் களத்தில்  உள்ளனர். இவர்கள் அனைவரும் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்கு நுழைய வேண்டும் என்பது நமது தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் விருப்பமாகும். அதை நோக்கிதான் எங்களது பிரச்சாரமும் இருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும், வாக்குகளை பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் .வெ.., நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி இருக்கின்றன. இக்கட்சிகள் குறித்து மக்கள்  விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக இஸ்லாமிய சமுதாயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

திராவிட மாடல் ஆட்சிக்கு எதிரான .வெ.., திரைப்பட கவர்ச்சியின் மூலம் வெற்றிபெற்று விடலாம் என்று நினைக்கிறது. எனவே தான் சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பிரிக்க சதித் திட்டம் நடைபெற்று வருகிறது. நமது சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த சதி வலையில் வீழ்ந்து சிக்கி விடக் கூடாது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்த முறையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளன. இதை சமுதாயம் உணர்ந்துகொண்டு, தங்களது ஜனநாயக் கடமையை ஆற்ற வேண்டும். இதன்மூலம், திமுக அணியில் உள்ள 13 முஸ்லிம் வேட்பாளர்களும் நிச்சயம் வெற்றிபெறுவார்கள்.

திமுக அணிக்கு ஆதரவான நிலை :

தற்போதைய சட்டமன்றத் தேர்தலில், மாநிலம் முழுவதும் திமுக அணிக்கு ஆதரவாக நிலை மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் என்றே கூற வேண்டும். இதனால், ஒவ்வொரு தேர்தலிலும், ஆளும் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தி இந்த முறை இல்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், ஏதோ ஒருவகையில் திமுக ஆட்சியில் பலன் பெற்று இருக்கிறது. மகளிர் நலன், மாணவர் நலன், சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பு என அனைத்து வகைகளிலும் திமுக ஆட்சி மிகச் சிறந்த ஆட்சியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, அனைத்துக் கருத்துக் கணிப்புகளும், திமுகவிற்கு சாதகமாகவே இருந்து வருகின்றன.

திமுக தலைமையிலான அணியில் நல்ல புரிதல் இருந்து வருகிறது. ஆனால், அதிமுக அணியில் ஒரு குழப்பம் நிலவி வருகிறது. நாம் தமிழர் கட்சி, .வெ.., உள்ளிட்ட கட்சிகளிலும் கொள்கை குழப்பத்திற்கு குறைவு இல்லை. தேர்தல் காலங்களில் மட்டுமே இந்த இயக்கங்கள் மக்கள் முன்வந்து செல்கின்றன. ஆனால், திமுக, .யூ.முஸ்லிம் லீக், மற்றும் பிற தோழமை கட்சிகள் அனைத்து காலங்களிலும் மக்களுக்கு துணையாக இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இளைஞர்களில் சிலர் நடிகர் விஜய்க்கு ஆதரவாக இருப்பது காண முடிகிறது. எனினும், அவர்கள் மிகப்பெரிய அளவுக்கு வாக்குகளை பிரிக்க முடியாது.

இதற்கு முன்பு நடைபெற்ற பல தேர்தல்களில் இதேபோன்று, மூன்றவாது அணி களத்தில் இறங்கி போட்டியிட்டன. ஆனால் அவற்றால் திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியவில்லை. மறைந்த தலைவர்கள் மூப்பனார், விஜயகாந்த் உள்ளிட்டோர் மூன்றாவது அணியை உருவாக்கி களம் கண்டபோது, அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அதேபோன்ற ஒரு நிலை தான் இந்த தேர்தலிலும் விஜய் உள்ளிட்டோருக்கு கிடைக்கும்.

எங்களை பொருத்தவரை, திமுக தலைமையிலான மதர்ச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, மகத்தான வெற்றி பெறும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். திராவிட மாடல் ஆட்சி 2.0 மீண்டும் மலர வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் விருப்பமாக உள்ளது. அதை நாங்கள் பிரச்சாரம் செய்யும்போது நேரில் கண்டு மகிழ்ந்து வருகிறோம். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவான மற்றும் சாதகமான சூழல் நிலவி வருகிறது. எனவே, திமுக கூட்டணி வரலாற்று வெற்றியை நிச்சயம் பெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இவ்வாறு .யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே..எம்.முஹம்மது அபூபக்கர் தெரிவித்தார். அவரது விருப்பம் மற்றும் ஆசையின்படி, தமிழகத்தில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி மலர வாழ்த்திவிட்டு விடைப்பெற்றோம்.

- சந்திப்பு : சிறப்புச் செய்தியாளர் : எஸ்..அப்துல் அஜீஸ்

=========================

No comments: