தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் எதிரொலிக்கும் ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் முழக்கம்.....!
அமைச்சர் கே.என்.நேருவுக்கு ஆதரவாக இ.யூ.முஸ்லிம் லீகின் களப்பணி.!
- ஓர் சிறப்பு ரிப்போர்ட் -
திருச்சி எப்போதும் திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது. குறிப்பாக, திமுக என்றாலே திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி தான் என சொல்லும் அளவுக்கு அந்த தொகுதியை தம்முடைய சிறப்பான பணிகள் மூலம் திமுகவின் அஞ்சாநெஞ்சன் அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் வளம்படுத்தி சிறப்பாக வைத்துள்ளார். தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும்போது, கே.என்.நேருவின் பணிகள், செயல்பாடுகள் அனைத்தும், வாக்காளர்களின் கண்களுக்கு நன்றாக தெரிகிறது.
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியின் பிரச்சினைகளை உடனுக்கு உடனே தீர்க்கும் கே.என்.நேரு, தொகுதி மக்கள் அனைவரிடமும் குடும்ப பாசத்துடன் பழகும் பண்பு, அனைத்துச் சமுதாய மக்களையும் வெகுவாக கவர்ந்து ஈர்த்து வருகிறது. அதன் காரணமாக, நேருவின் வெற்றி உறுதி என்றே கூற வேண்டும்.
இ.யூ.முஸ்லிம் லீகின் களப்பணி :
இத்தகைய சூழ்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் அனைத்து முஸ்லிம் லீகர்களும், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களப்பணி எனும் தீவிர பிரச்சாத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், 12.04.2026 ஞாயிற்றுக்கிழமையன்று, காஜாமலை மெயின் ரோடு, காளியம்மன் கோவில் தெரு, ஐய்யனார்கோவில் தெரு, அண்ணா நகர் ரோடு, லூர்துசாமி பிள்ளை காலனி 2வது தெரு, லூர்துசாமி பிள்ளை காலனி 1வது தெரு, முஸ்லிம் தெரு பள்ளிவாசல், ஈ.பி. காலனி மெயின் தெரு, கோகுலம் காலனி, இந்தியன் பேங்க் காலனி மெயின் ரோடு, இந்தியன் பேங்க் காலனி கோவில், சுந்தர் நகர், அம்மன் நகர் கோவில், எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் கே.என்.நேரு தீவிரப் பிரச்சாரம் செய்தார்.
அப்போது, இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்று, கே.என்.நேருவுக்கு ஆதரவாக வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். இந்த பிரச்சாரத்தின்போது, இஸ்லாமிய சொந்தங்கள் அளித்த அன்பின் ஆரவாரமும், உற்சாக வரவேற்பும் வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேருவை பெரிதும் அக மகிழ செய்தது.
திராவிட மாடல் அரசின் 5 ஆண்டு சாதனைகள் :
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியின் வெற்றியை முன்கூட்டியே முடிவு செய்யும் வகையில் அமைந்த இந்த சந்திப்பின்போது, திராவிட மாடல் அரசின் 5 ஆண்டு சாதனைகளை எடுத்துக் கூறியும், திராவிட மாடல் 2.0 ஆட்சியில் திமுக செய்யப் போகும் சாதனைகளை வாக்குறுதிகளாகவும் விளக்கிக் கூறியும் வீதி வீதியாகச் சென்று திமுக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து இ.யூ.முஸ்லிம் லீகர்கள் வாக்கு சேகரித்தனர். அப்போது ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கம் தொகுதி முழுவதும் எதிரொலித்தது. தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
வைகோவுடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு :
திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளர் கே.என்.நேருவை ஆதரித்து, உறையூர் அரசமரத்தடி பகுதியில் திருச்சி மாநகர மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான், திருச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் இ.யூ.முஸ்லிம் லீக் செய்துவரும் பிரச்சாரம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு உறுதியாக வெற்றி பெறுவார் என்றும், அதற்கு முக்கிய காரணம் தொகுதிக்கு அவர் ஆற்றியுள்ள சிறப்பான பணிகள், நிறைவேற்றியுள்ள திட்டங்களே ஆகும் என்றும் ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரவில்லை. மக்களை நேரில் சந்தித்து அவர்களின் ஆதரவோடு தான் ஆட்சிக்கு வந்து இருக்கிறார்கள். தமிழக மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை அவர்கள் தந்து இருக்கிறார்கள். அதன் காரணமாக தற்போது திருச்சி மேற்கு தொகுதியில் ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கம் தொகுதி முழுவதும் எதிரொலித்து வருகிறது. அது தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இந்த முழுக்கம் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் பாசிச ஆட்சியை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். திராவிட மாடல் ஆட்சியை தான் விரும்புகிறார்கள். அதன் காரணமாக ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கம் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மே 4ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் திராவிட மாடல் ஆட்சி நிச்சயம் அமையும். திருச்சி மேற்கு தொகுதியில் அமோக வெற்றிபெறும் கே.என்.நேரு மீண்டும் அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்பது உறுதி. அமைச்சர் கே.என்.நேருவின் வெற்றிக்கு இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்ந்து கடுமையான உழைப்பை வழங்கும் என்று உறுதியாக கூறிக் கொள்கிறேன்.
இவ்வாறு கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் பேசினார்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்





No comments:
Post a Comment