Friday, April 10, 2026

அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருவெறும்பூர் தொகுதி....!

தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருவெறும்பூர் தொகுதி....!

இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீர் ரஹ்மான் தீவிர பிரச்சாரம்....!!

- தொகுதியின் நிலவரம் குறித்த ஓர் சிறப்பு பார்வை -

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் சார்பில், திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் இ.யூ.முஸ்லிம் லீக் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த வகையில் திருச்சியின் மண்ணின் மைந்தர்கள் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் வெற்றிக்காக இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீர் ரஹ்மான் தலைமையில் நிர்வாகிகள் அனைவரும் இரண்டு தொகுதி முழுவதும் வலம்வந்து வீடுவீடாகச் சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள், சமூக நலத் திட்டங்கள், பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி, மாணவ மாணவர்களின் கல்வியின் முக்கியத்துவத்திற்கு எடுக்கப்பட்டு செயல்திட்டங்கள் குறித்து, இ.யூ.முஸ்லிம் லீகினர், வாக்காளர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் இந்த பிரச்சாரம் தற்போது படுவேகம் எடுத்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்மூலம் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் மத்தியில் கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் மிகப்பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைத்து வருவதை காண முடிகிறது. 

திருவெறும்பூர் தொகுதியில் ஒருநாள் :

இத்தகைய சூழ்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடும் திருவெறும்பூர் தொகுதியில், இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீர் ரஹ்மான் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் 10.04.2026 அன்று ஒருநாள் தீவிர பிரச்சாரம் செய்தார்கள். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தாய்ச்சபை முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பச்சிளம் பிறைக் கொடியுடன் திரளாக பங்கேற்று தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்த பிரச்சாரத்தின்போது திருவெறும்பூர் தொகுதியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எந்தளவுக்கு வளம்படுத்தி மிகச் சிறந்த முறையில் வைத்துள்ளார் என்பதை நேரடியாக காணும் வாய்ப்பு முஸ்லிம் லீகர்களுக்கு கிடைத்தது. ஒரு சட்டமன்றத் தொகுதியை எப்படி சிறந்த முறையில் வைத்து, மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதை திருவெறும்பூர் தொகுதி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றே கூறலாம். 

திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் இணைந்து தீவிர பிரச்சாரம் செய்த கே.எம்.கே.ஹபீர் ரஹ்மான், தனது அனுபவங்களை மணிச்சுடர் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸிடம் பகிர்ந்து கொண்டார். அதன் சுவையான தகவல்கள் இதோ உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். 

அனைத்து வசதிகளும் கொண்ட தொகுதி :

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்டம் சார்பில் நாங்கள் பிரச்சாரம் செய்தோம். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் இணைந்து தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் அருமையான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. முஸ்லிம் லீகர்கள் தமக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்து இருப்பதை கண்டு அன்பில் மகேஷ் பொய்யாமொழி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அதனை தனது அன்பின் மூலம் எங்களிடம் வெளிப்படுத்தினார். திருவெறும்பூர் தொகுதி முழுவதும் அனைத்து வீதிகளிலும் அனைத்து வார்டுகளிலும் நாங்கள் வாக்குகளை சேகரிக்கச் சென்றோம். எல்லா பகுதிகளிலும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நல்ல ஆதரவு இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அனைத்து பகுதிகளையும் மிகச் சிறந்த முறையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வைத்துள்ளார். 

தொகுதி முழுவதும் மிகச் சிறந்த முறையில் தரமான சாலை வசதிகள் உள்ளன. இதேபோன்று, தெரு விளக்கு, தண்ணீர் வசதி, திருவெறும்பூர் தொகுதி முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் நல்ல முறையில் தூய்மைப் பணிகள் நடைபெற்று, தொகுதி தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது. நியாய விலைக்கடைகளில் நல்ல தரமான பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 80 சதவீதம் அளவுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படு வருவதை காண முடிகிறது. அத்துடன், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப பள்ளிக்கூடங்கள் என அனைத்தும் அருமையான முறையில் தனிக் கவனத்துடன் திருவெறும்பூர் தொகுதியில் இருந்து வருகின்றன. 

தொகுதியில் சிறந்த பணிகள் :

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதியில் தம்மால் முடிந்த அளவுக்கு சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். அதனை நாம் நேரில் கண்டு, அவரிடமே, பெருமையுடன் தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தோம். திருவெறும்பூர் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எங்களுக்கு மன திருப்தி ஏற்பட்டதை அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பகிர்ந்துகொண்டோம். இந்த தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியே அமையும். அந்த ஆட்சியில் நீங்கள் மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பணியாற்றும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் என்று நாங்கள் தெரிவித்தோம். 

இ.யூ.முஸ்லிம் லீகர்கள் தமக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.  அதனை மீண்டும் அமையும் திமுக ஆட்சியில் நாங்கள் நிச்சயம் செய்வோம் என்று நம்மிடம் கூறி, தமிழகத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் குறித்து நீண்ட நேரம் தமது எண்ணங்களை எங்களிடம் பகிர்ந்துகொண்டார். 

காலை உணவுத்திட்டத்தின் பலன் :

குறிப்பாக, காலை உணவுத் திட்டம் என்பது மிகவும் அற்புதமான ஒரு திட்டம். இந்த திட்டம் நடைமுறைப்படுத்திய பிறகு, தமிழக பள்ளிகளில் இருந்து படிப்பை விட்டு நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துவிட்டது. தமிழகத்தின்  கிராமங்களில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த திட்டத்தின் மூலம் பலன் அடைந்து வருகிறார்கள். இதுபோன்ற திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தினால் தமிழக மக்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியபோது உண்மையில் எங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. 

திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் ஏற்பட்ட மிகப்பெரிய மறுமலர்ச்சிக்கு திருவெறும்பூர் தொகுதி ஒரு சாட்சி என்றே கூறலாம். இதன்மூலம் திருவெறும்பூர் தொகுதியில் மட்டுமல்லாமல், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறிவருவது போல, 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். 

இவ்வாறு இ.யூ.முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே.எம்.கே.ஹபீர் ரஹ்மான் திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தமது அனுபவங்களையும் எண்ணங்களையும் எங்களிடம் பகிர்ந்துகொண்டார். அவருக்கும் அவருடன் பயணித்த இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகளுக்கும் மணிச்சுடர் சார்பில் வாழ்த்துகளைக் கூறி விடைப்பெற்றோம். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: