Saturday, April 27, 2024

அம்மாடியோ.....!

 என்னவொரு அற்புதம்....!

ஏக இறைவனின் படைப்பில் எப்போதும் ஒரு அழகான அற்புதம்தான்...!



வேதனை...!

 “India is getting heavily polarized & put on fire over the past few years & that is extremely dangerous.”

A rare Bollywood actress with a spine, take a bow Vidya Balan.

நடிகை வித்யா பாலன் வேதனை...!



அழகு....!

 அழகோ....அழகு....!

அற்புதமான அழகு....!



Friday, April 26, 2024

இந்தியா வெல்லும்....!

    "இந்தியா வெல்லும்"

     - எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -

18வது மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,  முதல் கட்டமாக 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் நடந்த இந்த தேர்தலில், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்கள். 

இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 26ஆம் தேதி 14 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இரண்டாவது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மே, 7ஆம் தேதி 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் மூன்றாவது கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. 

இப்படி ஒவ்வொரு கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இந்த தேர்தலில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், முன்எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன், தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்கள் என்பதாகும். 

முஸ்லிம் வாக்காளர்கள் ஆர்வம்:

தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் நடந்த முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு, வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டாலும், அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், முஸ்லிம் வாக்காளர்கள், குறிப்பாக முஸ்லிம் பெண்கள், தங்களுக்குள்ள வாக்குரிமையை மிகவும் சரியான முறையில் பயன்படுத்தி, ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி இருக்கிறார்கள். 

கேரளாவில் 20 தொகுதிகளுக்கும், கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை  தேர்தல் நடைபெற்றது. இங்கும், முஸ்லிம் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்கள். தேர்தலில் வாக்களிப்பது ஒரு முக்கிய கடமையாக கருத வேண்டும் என முஸ்லிம்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என கூறலாம். 

வெள்ளிக்கிழமை அன்று வாக்குப்பதிவு வைத்தால், சிறுபான்மையின மக்கள் வாக்குப்திவு மைய்யங்களுக்கு வர மாட்டார்கள். இதனால், சிறுபான்மையின மக்களின் வாக்குகள் இந்தியா கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படாது என, சிலர் போட்ட திட்டங்கள் அனைத்தும், தோல்வியில் முடிந்தன. முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என அனைத்து சிறுபான்மையின மக்களும், இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் என உறுதியாக நம்பி, தங்களுக்கு உள்ள ஜனநாயக உரிமையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்து, அதை ஒரு அழகான செயல்மூலம் நிறைவேற்றி இருக்கிறார்கள். 

சிறப்பு விமானங்களில் வந்த வாக்காளர்கள்:

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சிறுபான்மையின மக்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இதேபோன்று, பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த மக்களும், வெளிநாடுகளில் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை இந்தியாவில் உள்ளதால், அவர்கள், இந்த முறை கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என முடிவு செய்து, தாயகம் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி இருக்கிறார்கள். 

கேரளாவைச் சேர்ந சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வளைகுடா நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் வந்து, கடந்த 26ஆம் தேதி தங்கள் தொகுதிகளில் வாக்களித்து, மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இதேபோன்று, தமிழகம் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த சிலரும் வெளிநாடுகளில் இருந்து வாக்களிப்பதற்காக மட்டுமே, இந்தியா வந்து இருக்கிறார்கள். 

ஒவ்வொரு தேர்தலின்போதும் இப்படி நடப்பது இல்லை. ஆனால், இந்த முறை, 18வது மக்களவைத் தேர்தலில் இந்த அதிசயம் நடைபெற்றுள்ளது. நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களும், அமைதியாக ஒற்றுமையாக வாழ வேண்டும். நாடு உண்மையான, வேகமான வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான், அனைத்து வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி இருக்கிறார்கள். 

கடந்த பத்து ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில், நாட்டில் உள்ள சிறுபான்மையின மக்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையின மக்களும் துன்பங்களையும் துயரங்களை சந்தித்து மிகுந்த வேதனையில் இருந்து வந்தார்கள். வாழ்க்கையே நடத்த முடியாத அளவுக்கு விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முடிவு காண,  ஒரே தீர்வு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான், நல்ல விடிவு கிடைக்கும் என உறுதியாக நம்பிய மக்கள், தங்களது ஆசையை, விருப்பதை,  ஜனநாயகக் கடமை செலுத்தி நிறைவேற்றி இருக்கிறார்கள். 

தரவுகள் தரும் நம்பிக்கை:

முதல் கட்டமாக 102 தொகுதிகளில் நடந்த தேர்தலில் கிடைத்த தரவுகள் மூலம், இந்தியா கூட்டணிக்கே அதிக தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதேபோன்று, இரண்டாவது கட்டமாக நடைபெற்ற 88 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி, நல்ல தொகுதிகளை அள்ளும் என தகவல்கள் வந்துள்ளன. 

நாட்டில் தற்போது பா.ஜ.க.விற்கு எதிராக மக்களின் எழுச்சி அலை ஏற்பட்டுள்ளதால், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாவது கட்ட தேர்தல் முடிந்தபிறகு, கிடைத்த தரவுகளின்படி, இந்தியா கூட்டணி கட்சிகள் பா.ஜ.க.வை வீழ்த்தும் என்பதால், அதிர்ச்சி அடைந்த பாசிச அமைப்புகள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்துள்ளன. 

அதன் காரணமாகதான், பிரதமர் நரேந்திர மோடி, முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் தமது அரசு செய்த சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறி, வாக்குகளை கேட்க வழியில்லாமல், இதுபோன்ற வெறுப்பு பேச்சை அவர் கக்கியுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் பா.ஜ.க. மிகப்பெரிய அளவுக்கு எந்தவித சாதனைகளையும் நிகழ்த்தவில்லை. எனவே, அதை எடுத்துக்கூறி வாக்குகளை கேட்க முடியாத நிலையில் அக்கட்சி உள்ளது. இதன் காரணமாக,  தற்போது வெறுப்பு அலையை ஏற்படுத்தி, அதன்மூலம், அரசியல் லாபம் பெற பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். 

மக்களின் நம்பிக்கை:

பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்று முழக்கங்களை காது கொடுத்துக் கேட்க தற்போது நாட்டு மக்கள் தயாராக இல்லை. கடந்த பத்து ஆண்டுகளாக இதுபோன்ற வெற்று முழக்கங்களை கேட்டுகேட்டு நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் சலிப்பு அடைந்துவிட்டார்கள். அதனால், அவர்கள் பொறுமை இழந்து நிற்கிறார்கள். நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மாற்றம் மிகவும் நல்ல மாற்றமாக இருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். 

இந்த மாற்றத்தை இந்தியா கூட்டணி மட்டுமே தர முடியும் என்பதை, நாட்டு மக்கள் தற்போது நன்கு உணரத் தொடங்கியுள்ளார்கள். மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சிகளாக காங்கிரஸ், தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே இருந்து வருகின்றன. எனவே, சிறுபான்மையின மக்கள் இந்த தேர்தலில், தங்களது வாக்குகள் சிதறி போய்விடாமல் இருக்கும் வகையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மட்டுமே, வாக்களித்து வருகிறார்கள். 

இந்தியா வெல்லும்:

18வது மக்களவைத் தேர்தலில் அனைத்துக் கட்ட வாக்குப்பதிவுகளும் நிறைவு பெற்றபிறகு, ஜுன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நாட்டில் தற்போது கோடைக்காலம் நீடிக்கும் நிலையில், அரசியல் களமும், கோடை வெப்பத்தை விட மிகவும் சூடாக இருந்து வருகிறது. பா.ஜ.க.வின் செயல்பாடுகளால், கோடை வெயிலைப் போன்று, மிகவும் சூடாகி மாறியுள்ள மக்கள், மிகுந்த கோபத்துடன் பா.ஜ.க.விற்கு எதிராக வாக்குகளை அளித்து வருகிறார்கள். 

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி உள்ளிட்ட சில தலைவர்கள் கணித்தது போன்று, இந்த முறை பா.ஜ.க. 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என்ற நிலை, தற்போது உருவாகியுள்ளது. அடுத்தடுத்தக் கட்டத் தேர்தல்கள் நடைபெற்று முடியும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புகள் அதிகம் என அரசியல் பார்வையாளர்கள் கணித்து இருக்கிறார்கள். 

எனவே, 18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள், நாட்டில் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அதன்மூலம் இந்தியா வெல்லும் என உறுதியாக கூறலாம். நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதால், அந்த நம்பிக்கையில் நாம் உறுதியாக இருந்தால், இந்தியா வென்று, நாட்டில், புதிய விடியலை ஏற்படுத்தும். அதன்மூலம் அனைத்துத் தரப்பு மக்களும், சகோதரத்துடன் அமைதியாக வாழ வழி பிறக்கும். இந்தியா வேகமான வளர்ச்சியை எட்டி, உலக அளவில் தனது பெருமையை மீண்டும் நிலைநிறுத்தும். 

=================================

Thursday, April 25, 2024

கேள்விகள்....!

 காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி பேச்சு...!

மக்கள் கேள்வி....!



வெற்றியை குவிக்கலாம்...!

ஆர்வமும், கடின உழைப்பும் இருந்தால், வெற்றியை குவிக்கலாம்...!

சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த இஸ்லாமிய இளைஞர்கள்....!

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஃப்.எஸ். உள்ளிட்ட உயரிய பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த வகையில், 2023-ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் ஆகிய முறைப்படி நடத்தப்பட்டது.

2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட முதன்மை தேர்வில் வெற்றிப்பெற்றவர்களுக்கு, இந்தாண்டு ஜனவர் முதல் ஏப்ரல் வரை நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், நாடு முழுவதும் ஆயிரத்து 16 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் இளைஞர்கள் சாதனை:

மொத்தம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்து 16 பேரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 50ஆக இருந்து வருகிறது. தேர்வு செய்யப்பட்டவர்களில் முஸ்லிம்கள் மட்டும் 5 சதவீதம் அளவுக்கு இருந்து வருகிறார்கள். 

தரவரிசையில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களின் பட்டியலில், முஸ்லிம்கள் 4 பேர் இடம் பெற்றுள்ளனர். அகில இந்திய தரவரிசைப் பட்டியலின்படி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நௌஷீன் 9வது இடத்தையும், வர்தா கான் 18வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதேபோன்று, சுபைஷன் ஹக் 34 இடத்தைப் பிடித்துள்ளார். ஃபபி ரஷீத் என்ற மற்றொருவர் 71வது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளார். 

கடின உழைப்பே வெற்றியின் ரகசியம் :

தரவரிசைப் பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்த நௌஷீன், உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரைச் சேர்ந்த அப்துல் கைய்யூமின் மகளாவர். தன்னுடைய தொடர் முயற்சி காரணமாக 4வது முறையாக தேர்வு எழுதி, வெற்றி பெற்று, இந்த சாதனையை நௌஷீன் புரிந்துள்ளார். 

இந்த சாதனை புரிய தமக்கு பக்கபலமாக இருந்தது எது என்ன கேள்விக்கு பதில் அளித்துள்ள நௌஷீன், டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின், பயிற்சி மையம் என தெரிவித்துள்ளார். அதற்காக ஜாமியா மில்லியா இஸ்லாமிய பயிற்சி மையத்திற்கு தாம் நன்றி கூறிக் கொள்வதாவும், அந்த மையம் அளித்த பயிற்சிகளை ஒருபோதும் மறக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். 


சிவில் சர்வீஸ் தேர்வில் தொடர்ந்து மூன்று முறை தோல்வி அடைந்த பிறகும், தாம் முயற்சியை கைவிடவில்லை என தெரிவித்துள்ள நௌஷீன், மற்றவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றாமல், இந்த முறை தனியாக தமக்கு என ஒரு பாணியை உருவாக்கி கொண்டு, அதன் வழியில் பயணித்து, வெற்றிக்கனியை பறித்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

நாள்தோறும், தேர்வுக்காக நேரம் ஒதுக்கி, கடினமாக பயிற்சி எடுத்துக் கொண்டு, மற்றவர்களின் முயற்சிகளை விட, தன்னுடைய முயற்சி ஒரு தனிப்பட்ட முயற்சியாக, பாணியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அதற்காக திட்டமிட்டு உழைத்ததாக நௌஷன் கூறியுள்ளார். வெற்றிக்கு ஒரே வழி, கடின உழைப்பு மட்டுமே என்று தெரிவித்துள்ள அவர், தோல்வியை கண்டு அதிர்ச்சி அடையாமல், துவண்டு இருக்காமல், வெற்றிக்காக மீண்டும், மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். அப்படி செய்தால் நிச்சயம் வெற்றிக்கான கதவுகள் உங்களை தட்டும். வழிகளை திறக்கும் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் நௌஷன். 

ஷாயிதா பேகம் சாதனை:

இந்தாண்டு சிவில் சர்வீஸ் தேர்வில், 50 முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த ஷாஹிதா பேகமுகம் அவர்களில் ஒருவராவார். தொழில் அதிபர் ஷாஜி மற்றும் குடும்பத் தலைவி சரினா பேகத்தின் மகளான ஷாஹிதா பேகம், சிவில் சர்வீஸ் தேர்வு எழுத ஆர்வம் கொண்டு, அதற்கான தொடர் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார். 

அகில இந்திய தேர்வு பட்டியல் தரவரிசையின்படி, ஷாஹிதா பேகம், 323வது இடத்தை பிடித்துள்ளார். பள்ளி, கல்லூரி நாட்களிலேயே ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வர வேண்டும் என கனவு கண்ட ஷாஹிதா பேகம், அந்த கனவை தனது உழைப்பின் மூலம் நிறைவு செய்துள்ளார். 

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்த ஷாஹிதா பேகம், சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து தேர்வுக்கான பயிற்சியை எடுத்துக் கொண்டுள்ளார். தீவிர உழைப்பு, கடின பயிற்சி, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், தேர்வில் வெற்றி பெற்று ஷாயிதா பேகம், தன்னுடைய பெற்றோர்களை மட்டுமல்ல, திண்டிவனம் நகரத்தையும் பெருமை அடையச் செய்துள்ளார். 

ஆர்வமும், கடின உழைப்பும் இருந்தால்:

வாழ்க்கையில் நாம் சாதிக்க வேண்டுமானால், அதற்கு முதல்படியாக நாம் கனவை காண வேண்டும். நமது இலட்சியத்தை அடைய தினமும் கனவு கண்டு, அதற்கான பாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சரியான பாதையை உருவாக்கிக் கொண்டு, அதில் நாம் பயணிக்க வேண்டும். இந்த பயணத்தில், தடங்கல்கள், நெருக்கடிகள் வரும். அப்படி வந்தால், அவற்றை துணிவுடன் சந்திக்க வேண்டும். தோல்வியைக் கண்டு அதிர்ச்சி அடையாமல், கவலை அடையாமல், மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். 

தொடர் முயற்சி, கடின உழைப்பு செலுத்தி, நமது இலக்கை அடைய முயற்சி செய்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி, கன உழைப்புடன் நாம் இலட்சிப் பாதையை நோக்கி பயணம் செய்தால், நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும். அதற்கு நல்ல எடுத்துக்காட்டுகளாக நௌஷன்,  ஷாஹிதா பேகம் உள்ளிட்ட 50 முஸ்லிம் இளைஞர்கள் இருந்து வருகிறார்கள். 

முஸ்லிம் சமுதாயம் வாழ்க்கையில் வெற்றி வாகை சூட வேண்டுமானால், அவர்கள் நல்ல கல்வி பெற வேண்டும். உயர் பதவிகளில் வர ஆசை கொள்ள வேண்டும். அந்த ஆசை, சாதாரண ஆசையாக இருக்கக் கூடாது. தீப்பற்றி எரியும் ஆசையாக இருக்க வேண்டும். இலட்சியத்தை அடையும் வரை ஆசை தீ எரிந்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி எரிந்துகொண்டே இருந்தால், நம்மிடம் கடின உழைப்பும், அயராத ஆர்வமும் ஏற்பட்டுவிடும். பிறகு என்ன, வெற்றி நம் கைகளில் தான். அதை தான், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 50 முஸ்லிம்கள், தங்களது வெற்றியின் மூலம் நமக்கு நல்ல பாடமாக சொல்லி இருக்கிறார்கள். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

திறமை....!

 ஒரு அழகிய திறமை....!

கொஞ்சம் நீங்களும் பாருங்கள்....!



சிறந்த ஆய்வு....!

Ravish Kumar has released an excellent case study on Rahul Gandhi.

He has covered Rahul Gandhi's campaign, speeches, his transformation & everything about him from the past few years.

He praised Rahul Gandhi & explained why India needs such progressive leader as Prime Minister.

Truly one of the best biographies on Rahul Gandhi by far & Ravish Kumar also mentions Dhruv Rathee by the end of the video. 

A must watch & share for mass impact.



வெறுப்புக்கு....!

 வெறுப்புக்கு வாக்கு இல்லை....!

No vote for hate....!



வாக்கு யாருக்கு....?

இளைஞர்களின் வாக்கு யாருக்கு?

இதோ பதில்.....!

 Will Vote For Rahul Gandhi

An Unemployed Youth Blasts BJP In HemaMalini's Rally, Says "Will Vote For Rahul Gandhi"

Exposed WhatsApp University & Andha Bhakts.



யாருக்கு....?

 நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்கு?

இளைஞர் சமுதாயம் முடிவு....!!

The youth of our Country have decided to SaveDemocracySaveIndia.



ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற....!

இரண்டாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல்:

ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வளைகுடா நாடுகளில் இருந்து கேரள வந்த மக்கள்....!

கே.எம்.சி.சி., இ.யூ.முஸ்லிம் லீக் சிறப்பு ஏற்பாடு...!

மலப்புரம், ஏப்,25-நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளில் 26.04.24 அன்று இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் 24.04.2024 அன்று நிறைவுப் பெற்றதையடுத்து, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 

கேரளாவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு:

இரண்டாவது கட்டத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இடம்பெற்ற கேரளாவில் இருக்கும் 20 தொகுதிகளுக்கும், 26.04.24 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கேரளாவின் மலப்புரம் மற்றும் பொன்னேனி ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். மலப்புரம் தொகுதியில் இ.டி.முஹம்மது பஷீரும், பொன்னேனி தொகுதியில், அப்துஸ் ஸமது சமதானியும் களம் காண்கிறார்கள். 

கடந்த 20 நாட்களாக இருவரும் தீவிரப் பிரச்சாரம் செய்துவந்த நிலையில், 24.04.24 அன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெற்றபோது, இருவரும் ஆதரவாக இ.யூ.முஸ்லிம் லீகின் வெளிநாடு வாழ் உறுப்பினர்கள் சார்பில் மாபெரும் வாகனப் பேரணி நடைபெற்றது. இதேபோன்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியிலும் அவருக்கு ஆதரவாக இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் வாகனப் பேரணி நடைபெற்றபோது, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். 

வளைகுடா நாடுகளில் இருந்து வருகை:

கேரளாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு தேர்தலின்போதும், தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற சொந்த தொகுதிகளுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் 18வது மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடிவு செய்துள்ள கேரள மக்கள், வளைகுடா நாடுகளில் இருந்து விமானங்களை பிடித்து கேரளாவிற்கு வந்துள்ளனர். 

சிறப்பு விமானங்கள் ஏற்பாடு:

கேரள வாக்காளர்கள் எந்தவித சிரமும் இல்லாமம் வாக்களிக்க வரும் வகையில், கேரள முஸ்லிம் கலாச்சார அமைப்பு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி, ஏரளமான சிறப்பு விமானங்கள் மூலம் கேரள வாக்களார்கள், தங்களது ஊர்களுக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டது. 

சவுதி அரேபியாவில் இருந்து மட்டும், கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதால், மக்கள் எந்தவித இன்னலும் இல்லாமல், வாக்களிக்க வருகை தந்துள்ளார்கள். இதுகுறித்து கருத்து கூறியுள்ள கே.எம்.சி.சி. தலைவர்கள், தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேரள மக்கள், சொந்த ஊர்களுக்கு வந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

விழிப்புணர்வு பிரச்சாரம்:

இந்த தேர்தலின்போது, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வளைகுடா நாடுகளில் வாழும் மக்கள் மத்தியில் கேரள முஸ்லிம் கலாச்சார அமைப்பு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு முந்தையத் தேர்தல்களில் இதுபோன்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. 

இந்திய தொழிலாளர்கள் மக்களவைத் தேர்தலின்போது வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் செல்ல வளைகுடா நாடுகளில் உள்ள அரபிய தொழில் அதிபர்களும் ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது கூறிய கே.எம்.சி.சி. ஜெத்தா பிரிவு தலைவர் அபூபக்கர் அரிம்பரா, இந்திய பிரதமர் மோடியின் முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கைகள் காரணமாக மக்கள் மத்தியில் பெரும் விரக்தி ஏற்பட்டு இருப்பதாகவும், எனவே, கேரள மக்கள் அனைவரும் பல்வேறு சிரமங்களை சந்தித்தாலும் பரவாயில்லை என்ற நோக்கில், கேரளாவிற்கு விமானங்கள் மூலம் சென்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற இருப்பதாகவும் தெரிவித்தார். 

இதேபோன்று, கருத்து கூறியுள்ள கே.எம்.சி.சி. சவுதி அரேபியா பிரிவின் தலைவர் கே.பி.முஹம்மது குட்டி, மோடி அரசின் தவறான கொள்கைகள் காரணமாகமாவும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாகவும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே, இந்த முறை இந்தியாவில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் அனைத்து கேரள மக்களும், வாக்களிக்க விமானங்களை பிடித்து கேரளாவிற்கு பறந்து இருப்பதாக கூறியுள்ளார். 

கேரளாவில் மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வளைகுடா நாடுகளில் பணிபுரிந்துவரும், இந்தியர்கள், 18வது மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க, தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு கே.எம்.சி.சி., செய்துவரும் ஏற்பாடுகளுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Wednesday, April 24, 2024

அழகு...!

 அழகோ.....அழகு....!

மகிழ்ச்சி அளிக்கும் அழகு....!



பட்டினியால் வாடும் மக்கள்....!


உணவின் முக்கியத்துவமும், பட்டினியால் வாடும் மக்களும்....!

பெரும்பாலான திருமண விழாக்களில் மட்டுமல்ல, பொதுவாக நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் விதவிதமான சுவையான உணவு வகைகள் விருந்தாளிகளுக்கு பரிமாறப்படுகின்றன. இந்த விழாக்களில், முக்கிய உணவுக்கு முன்பு, விருந்தினர்களுக்கு முதலில் பல்வேறு வகையான உணவுப் பொருட்கள், அதாவது சுவையான தேநீர், சுவையான இனிப்பு, சுவையான குளிர்ந்த பானம் ஆகியவை வழங்கப்படுகின்றன. இத்தகைய உணவு வகைகளை விருந்தாளிகளில் பெரும்பாலோர் ஆர்வத்துடன் வாங்கி உண்ணுகின்றனர்.

இதைத் தொடர்ந்து மதிய உணவு அல்லது இரவு உணவு.என விருந்தாளிகளுக்கு வழங்கப்படுகிறது. விழாவிற்கு வரும் அனைவருக்கும், குளிர்ந்த பானம், தேநீர், இனிப்பு வகைகள் என முதலில் அளிக்கப்படுவதால், அதை உண்ணும், அவர்கள் வயிறு நிரம்பியவர்களாகவே மாறிவிடுகின்றனர். பின்னர், மதிய உணவு, அல்லது இரவு உணவு என்ற முக்கியமான விருந்துக்குச் செல்லும்போது, ​​அவர்களில் பலர் உணவை அதிகமாகவும் மிருகத்தனமாகவும் சாப்பிடுவதை நாம் அடிக்கடி கவனிக்கலாம்.

இப்படி, சாப்பிடும் அவர்கள், அந்த உணவை முழுமையாக சாப்பிட்டு முடிக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்தால், நிச்சயமாக இல்லை என்ற பதில் தான் வருகிறது. பெரும்பாலான விருந்தாளிகள், தங்களுக்கு வைக்கப்படும் உணவு வகைகளை, சிறிது சிறிது மட்டுமே சுவைத்துவிட்டு, அதை அப்படியே சாப்பிடாமல் மீதம் வைத்து விடுகிறார்கள். இதனால் முக்கிய விழாக்களில், உணவுகள் வீணடிக்கப்பட்டு, குப்பைத் தொட்டியில் வீசப்படுகிறது.

மாறாத மக்களின் மனநிலை:

திருமண விழா உள்ளிட்ட முக்கிய விழாக்களில், இந்த செயல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. உணவின் முக்கியத்துவம் குறித்து இஸ்லாமிய மார்க்கம் சிறப்பான முறையில் எடுத்துக் கூறிய நிலையிலும், முஸ்லிம்கள் மத்தியிலும், உணவை வீணடிக்கப்படும் பழக்கம் இருந்து வருவது வேதனை அளிக்கிறது.

இதேபோன்று, உணவு விடுதிகளுக்குச் செல்லும் மக்களில் பெரும்பாலோர், அதிகப்படியான உணவுகளுக்கு ஆர்டர் செய்துவிட்டு, பின்னர் அதை சாப்பிடாமல் அப்படியே வைத்துவிட்டு வருகின்றனர். இது, பின்னர், குப்பைத் தொட்டியில் வீசப்படுகிறது என்பதை அவர்கள் நன்கு அறிந்தும் இருக்கிறார்கள். இதன் காரணமாக ஒருசில உணவு விடுதிகளில், வாடிக்கையாளர்கள், தாங்கள் ஆர்டம் செய்யும் அனைத்து உணவு வகைகளையும் ரூசித்து சாப்பிட்டு, சென்றால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என விழிப்புணர்வு வாசகங்களை எழுதி வைக்கிறார்கள்.

இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உணவு சாப்பிடும்போது, அதை முழுமையாக சாப்பிட்டு முடித்து விடுவார்கள். அவர் சாப்பிட்டு முடிக்கும்போது, அவரது தட்டு அல்லது கிண்ணத்தை கவனித்தால் அது மிகவும் தூய்மையாக இருக்கும் என்றும் அதில், உணவு மீதமாக இருக்காது என்றும், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து பெறப்பட்ட ஒரு ஹதீஸ் உள்ளது, இதன்மூலம், இஸ்லாம் உணவின் முக்கியத்துவம் குறித்தும், அதை வீணாக்கக் கூடாது என்பது குறித்தும், மிகச் சிறப்பான முறையில் எடுத்துக் கூறி இருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

உணவின் முக்கியத்துவம்:

உணவின் முக்கியத்துவம் குறித்து அறிந்துகொள்ள உங்களுக்கு ஆசையா? அப்படியெனில், பல நாட்கள் கடந்தும் உணவு கிடைக்காமல், பட்டினி கிடக்கும் மக்களிடம் உணவின் முக்கியத்துவம் பற்றி கேளுங்கள். உணவை மதிக்க வேண்டும் என்ற போதனை கிட்டத்தட்ட எல்லா மதங்களிலும் உள்ளது, இஸ்லாமிய மார்க்கத்தில்,உணவின் முக்கியத்துவம் பற்றிய ஏராளமான குறிப்புகள், திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் உள்ளன.

ஏக இறைவன், தன் அடியார்கள் உண்பதற்காக ஏராளமான உணவுப் பொருட்களை படைத்துள்ளான். அவற்றை உண்ணும் போதும், தனது பசியைத் தணிக்கும்போதும் ஒரு நபர்,, வெவ்வேறு விஷயங்களின் வெவ்வேறு இன்பங்களை உணர்கிறார். அவற்றிலிருந்து தன் உடலுக்குத் தேவையான பலத்தையும் சக்தியையும் பெற்று தன் வாழ்வை வாழ்கிறான்.

இத்தகைய சூழ்நிலையில், ஏக இறைவன் தனது திருமறையில் உணவு குறித்து குறிப்பிடும்போது, “மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில் அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளை  பின்பற்றாதீர்கள், நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாளவான்” (அத்தியாயம் 2:168)

ஏக இறைவனின் இந்த அறிவுரை மூலம், தூய்மையானப் பொருட்களை மட்டுமே உண்ண வேண்டும், ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றி அதனை வீணடிக்கக் கூடாது என நமக்கு நன்கு தெரிய வருகிறது. இதேபோன்று, உணவு மற்றும் பானம் தொடர்பாக நபிகள் நாயயம் (ஸல்) அவர்களின் பல்வேறு ஹதீஸ்களில் காணப்படும் வழிகாட்டுதல்கள், மக்களுக்கு நல்ல வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.

நிச்சயமாக, உணவின் கடைசி பகுதி ஆசீர்வதிக்கப்படுகிறது. மேசையில் கிடந்த சிறுசிறு உணவுத் துண்டுகளைக் கூட வீணாக்கக் கூடாது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள். இறுதிவரை ஒரே இடத்தில் உணவை முடிப்பது அண்ணல் நபி (ஸல்) அவர்களின பழக்கமாக இருந்தது என நாம் அறிய முடிகிறது.

உணவை வீணடிக்கக் கூடாது:

ஏக இறைவன் வழங்கிய உணவை வீணாக்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் மற்றும் அவரது வாழ்க்கை நமக்கு எடுத்துக் கூறுகிறது. உணவு என்பது ஒரு வரம். அதை வீணாக்காமல் கவனமாகக் காப்பாற்றுபவர், தனது இந்த செயல் மூலம், நல்ல செழிப்பை பெற முடியும். உணவை வீணாக்காமல் இருந்தால், உலகில் எங்கும் உணவுப் பற்றாக்குறை இருக்காது, யாரும் பசியுடன் தூங்க வேண்டியதில்லை.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபை சுற்றுச்சூழல் திட்டத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, 2022இல் உலகில் 1.05 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்பட்டுள்ளது. . அதாவது, உலகில் உள்ள உணவில் ஐந்தில் ஒரு பங்கு மக்களின் வயிற்றிற்குச் செல்வதற்குப் பதிலாக வீணாகிறது. 2022 ஆம் ஆண்டில், கெட்டுப்போன அல்லது வீணாக்கப்படும் உணவின் மதிப்பு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகில் 783 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் இந்த நிலை. வீணாகும் உணவு, சேமித்து வைத்திருந்தால், கோடிக்கணக்கான மக்களுக்கு உணவை வழங்கியிருக்கலாம்.

உண்மையில், உலகம் சமநிலையற்றது. ஒரு பிரிவினர் உணவை வீணாக்குகிறார்கள், மற்றொரு பிரிவினர் குறைந்தபட்ச தேவையான உணவைப் பெறாமல் உள்ளனர், 2018ஆம் ஆண்டில் உலகில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 21.9% பேர் உணவுப் பற்றாக்குறையால் வளர்ச்சி குன்றியிருக்கிறார்கள், அதாவது சுமார் ஒன்றரை மில்லியன் குழந்தைகள் தங்கள் வயதுக்கு ஏற்றவாறு வளர்ச்சி குன்றியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே இதன் தீவிரம் தெரிகிறது. உலகில் 3 பிராந்தியங்களில் உணவுப் பற்றாக்குறையால் குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய பிரச்னை அதிகமாக உள்ளது. இந்த பிராந்தியங்கள் தெற்காசியா, கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆப்பிரிக்கா ஆகும்.

மிகப்பெரிய சோகம்:

ஒரு அறிக்கையின்படி, வயல்களில் அறுவடை செய்யும் போது அல்லது உணவு பேக்கேஜிங் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் போது உணவு உற்பத்தியின் பெரும்பகுதி இழக்கப்படுகிறது. உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு கொண்டு செல்பவர்களும் அதாவது நுகர்வோரும் இந்த விரயத்திற்கு பெரும் பொறுப்பு. ஒரு ஆய்வின்படி, ஸ்வீடனில் உணவு சேவைத் துறையால் வாங்கப்படும் உணவில் 20 சதவீதம் வீணடிக்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டி நடத்திய ஆய்வில், .49% மாணவர்கள் காலை உணவையும், 55% மதிய உணவையும், 35% இரவு உணவையும் தவிர்ப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வின்படி, உலகில் பல்வேறு நிலைகளில் உணவு வீணடிக்கப்படுகிறது, உணவுத் தட்டுகளில் மட்டும் 6% உணவு வீணடிக்கப்படுகிறது.

குறைந்த வளங்களைக் கொண்ட நாடுகள் உணவுப் பொருட்களை வீணடிப்பதில் பணக்கார நாடுகளுக்குப் பின்தங்கவில்லை. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் கூட உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுகின்றன என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதிகப்படியான உணவு தயாரித்தல், நுகர்வோர் உணவை வீணாக்குதல் மற்றும் உணவு கெட்டுப் போவது போன்ற காரணங்கள், உணவு வீணடிக்கப்படும் முக்கிய அம்சங்களாக உள்ளன.

ஒருபுறம், உலகில் மில்லியன் கணக்கான மக்கள் பசியுடன் வாடும் நிலையில், மறுபுறம், பெரும்பாலான மக்களின் இதயமின்மையால், உணவு வீணடிக்கப்படுகிறது, இது மிகப்பெரிய சோகம் மட்டுமல்ல, மனித சமுதாயத்திற்கு செய்யும் அநீதி என உறுதியாக கூறலாம்.

-            எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

கேள்வி...!

 மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம்.

மோடிக்கு கேள்வியோ...கேள்வி...!



பார்வை.....!

 லுக்....அழகு....!

பார்வை....அழகோ....அழகு.....!



வெயில்....!

 அப்பப்பா என்ன வெயில்....!

தாங்க முடியலே.....!




Tuesday, April 23, 2024

விளக்கம்.....!

"நாங்கள் எந்த ஒரு தனிப் பட்ட சமூகத்தை திருப்திப்படுத்துவதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறோம் என்று ஒரு பத்தியைச் சுட்டிக் காட்டச் சொல்லுங்கள்.

நாட்டில் சமூகப்பிளவு, சமூக சமத்துவமின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. அதிகம் பாதிக்கப்படுவது மத வேறுபாடின்றி எஸ்சி எஸ்டி, ஏழைகள் என  நாங்கள் நீதியை நிலைநாட்டச் சொல்கிறோம்.

ஒவ்வொரு பிரிவினரும் பேசும் பொருளாக மாறிவிட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்து பாஜகவினர் பொறாமை கொள்கிறார்கள்.

- முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு @PChidambaram_IN MP



வயநாடு மருத்துவமனை...!

Shocking Expose on Rahul Gandhi's Model of Development.

This is not Appolo or Manipal or any multinational private hospital. This is a Govt Hospital in Rahul Gandhi's constituency Wayanad.

It has world class infrastructure, facilities, equipment, best doctors & staff also excellent sanitization.

This is not fake Gujarat model or fake Delhi Model, this is Rahul Gandhi Model of Development.

Once INDIA forms the Govt on 4th June, this is how PM Rahul Gandhi will tranform the entire country..



கார்கே உரை....!

Only Congress can protect the Unity, Democracy and the Constitution of the country.

Wayanad, Kerala.

M.Kharge Speech.



கண்டனம்....!

 மோடி வெறுப்பு பேச்சு....!.

நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம்....!



கேள்வி..!

மோடிக்கு பிரியங்கா காந்தி சவால்....!

கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு...!

தாலியின் முக்கியத்துவம் மோடிக்கு தெரியுமா? என்றும் பிரியங்கா காந்தி கேள்வி!




உறுதியாக இருக்கும் இந்திய மக்கள்....!

 மதசார்பற்றக் கொள்கையில் உறுதியாக இருக்கும் இந்திய மக்கள்....!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, ஒரு மதசார்பற்ற நாடாக இருந்து வருகிறது. நாட்டில் வாழும் 140 கோடி மக்கள், பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது. நாடு முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூகங்கள் இருந்து வருகின்றன. ஒவ்வொரு சமூக மக்களும், தங்களது கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் உறுதியாக இருந்து வருகிறார்கள். நிலைத்து நிற்கிறார்கள். 

மற்றவர்களின் கலாச்சாரங்களில், பண்பாடுகளில், யாரும் மூக்கை நுழைக்காமல், அமைதியாக, ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். பண்டிகை மற்றும் திருவிழாக்காலங்களில், ஒவ்வொரு சமூக மக்களும், மற்றவர்களுடன் கூடி, தங்களது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி, மதசார்பின்மையை உறுதியாக கடைப்பிடித்து வருகிறார்கள். 

நாடு விடுதலை அடைந்தபிறகு, மதசார்பற்றக் கொள்கை உறுதியுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் ஒருசில பகுதிகளில் மதசார்பின்மையை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் எந்தவித பலனையும் அளிக்கவில்லை. மக்கள் ஒற்றுமையுடன் வாழ விரும்புவதால், இத்தகைய முயற்சிகள் தோல்வியே அடைந்தன. 

பா.ஜ.க. ஆட்சியில் வெறுப்பு முழக்கங்கள்:

உலகின் மிகவும் அற்புதமான மதசார்பற்ற நாடாக இருந்து வரும் இந்தியாவில், ஒன்றியத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. மதசார்பின்மையை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமூகங்கள் இடையே வெறுப்பு ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் பிரச்சினையை உருவாக்கி, அமைதியை சீர்குலைக்க திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 

இதன் காரணமாக ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு போன்ற முழக்கங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக பா.ஜ.க.வினர் எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக, சிறுபான்மையின மக்களை குறிவைத்து, அவர்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை சீர்குலைக்கும் நோக்கில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இயங்கி வருகின்றன. 

தற்போது நாட்டில் 18வது மக்களவைத் தேர்தல் நடைபெற்றுகொண்டிருக்கும் நிலையில், மீண்டும், வெறுப்பு பேச்சுகள், வெறுப்பு முழக்கங்கள் மிகவும் வேகமாக தலை தூக்கியுள்ளன. அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, முஸ்லிம்களுக்கு எதிராக பேசிய வெறுப்பு பேச்சை குறிப்பிடலாம். 

"நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என காங்கிரஸ் ஆட்சியில் சொன்னதாக பொய் தகவலைக் கூறி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்துக்களின் சொத்துக்கள், இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும்" என மோடி பேசி, அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கே களங்கம் ஏற்படுத்தி இருக்கிறார். 

தனது பத்து ஆண்டு கால ஆட்சியின் சாதனைகள் குறித்து, மக்களிடம் எடுத்துக்கூறி, வாக்குகளை கேட்க தைரியம் இல்லாத மோடி, மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி, அதன்மூலம், மக்களவைத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

கோபம் அடைந்த மக்கள்:

இந்திய முஸ்லிம்கள் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய பிரதமர் மோடிக்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள், மோடிக்கு எதிராக கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள். 

இதுஒருபுறம் இருக்க, இந்திய முஸ்லிம்கள் குறித்து பிரதமர் மோடி பேசிய வெறுப்பு பேச்சுக்கு, நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்திய தலைவர்களிலேயே மிகவும் மோசமான தலைவர், மோசமான பிரதமர் மோடியே தான் என பல்வேறு தரப்பினர் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். 

இந்திய நாட்டில் வாழ்ந்து, நாட்டின் விடுதலைக்காக தங்கள் உயிர், உடமைகளை இழந்த முஸ்லிம்கள், இன்னும் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சி அடையாமல், வாழ்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் பிரதமருக்கு முஸ்லிம் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் எப்படி பேச முடிந்தது என மக்கள் கேள்வி கேட்கிறார்கள். 

பட்டியல் இன மக்களை விட சமூக, பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் தளங்களில் மிகவும் மோசமான நிலையில் இந்திய முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகையை சூழ்நிலையில் இந்திய இஸ்லாமியர்களைப் பற்றி ஏன் இவ்வளவு துவேஷமாக பேசுகின்றீர் என பிரதமர் மோடிக்கு மக்கள் வினா எழுப்பி இருக்கிறார்கள். 

இந்தியாவில் வாழும் 87 கோடி இந்துக்களின் சொத்துக்களை, 27 கோடி முஸ்லிம்கள் எப்படி அபகரிக்க முடியும் என்றும், ஒரு தாய் மக்களாக வாழும் மக்களை பிளவுபடுத்தும் முயற்சி எதற்காக செய்கிறீர்கள் என்றும், வரலாறு உங்களை மன்னிக்காது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

முதல் கட்டத் தேர்தலில் 102 தொகுதிகளிலும் மக்கள் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வாக்களித்து இருக்கிறார்கள் என்ற தரவுகள் கிடைத்தால், இதுபோன்ற, வெறுப்பை பேச்சு மோடி கையில் எடுத்து இருப்பதாக சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் சாடியுள்ளார். 

நாட்டில் வாழும் இந்திய முஸ்லிம்கள் அனைவரும், மதசார்பற்ற நாட்டில் பாதுகாப்புடன் வாழ்ந்து வரும் நிலையில், ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, பாதுகாப்பின்மையை உணர தொடங்கி இருக்கிறார்கள். சகோதரத்துவத்தை பா.ஜ.க. தலைவர்கள் தங்களுடைய வெறுப்பு பேச்சின் மூலம் சீர்குலைத்து வருகிறார்கள் என சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் சலீம் ஷெர்வானி வேதனை தெரிவித்துள்ளார். 

மதசார்பற்றக் கொள்கையில் உறுதி:

ராஜஸ்தானில் முஸ்லிம்களுக்கு எதிராக பிரதமர் மோடி வெறுப்பை கக்கிய நிலையில், அதற்கு மக்கள் மத்தியில் கண்டனங்கள் தொடர்ந்து கிளம்பியுள்ளதால், தற்போது தங்களது சுருதியை பா.ஜ.க.வினர் சற்று குறைத்துள்ளனர். எனினும், மீதமுள்ள 6 கட்டத் தேர்தல்களில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை மறுக்க முடியாது. இதைத்தான், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கும் முன்பே எச்சரித்து இருந்தார். அது தற்போது நிகழ்ந்து வருகிறது. 

பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள், மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்க முயற்சி செய்தாலும், தற்போது நாட்டு மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். தங்களது மதசார்பற்றக் கொள்கையில், நாட்டில் வாழும் 140 கோடி மக்களும் நிலைத்து நிற்கிறார்கள். சமூக வலைத்தளங்களில்  மோடிக்கு எதிராகவும், பா.ஜ.க. தலைவர்களுக்கு எதிராகவும் வரும் பதிவுகள், கருத்துகளை, கண்டனங்களை உன்னிப்பாக கவனித்து பார்த்தால், மக்கள் எப்படி மதசார்பற்ற கொள்கையில் உறுதியுடன் இருந்து வருகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். 

பல்வேறு இனங்கள், பல்வேறு சமூகங்கள் கொண்ட 140 கோடி மக்கள் வாழும் இந்திய நாடு, முன்பும் மதசார்பற்ற நாடாக இருந்தது. இனி எப்போதும் மதசார்பற்ற நாடாக இருக்கும். நாட்டு மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க செய்யப்படும் முயற்சிகள் இனி ஒருபோதும் பலன் அளிக்காது. அதை, 18வது மக்களவைத் தேர்தல் மூலம், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 97 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையயை பயன்படுத்தி, பா.ஜ.க.விற்கு படுதோல்வியை தருவார்கள். இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்து, மதசார்பற்ற நாட்டில் அனைத்து தரப்பு மக்களும், ஒற்றுமையுடன் அமைதியுடன் வாழ தனது பணிகளையும், கடமைகளையும் சிறப்பான முறையில் செய்யும் என உறுதியாக நம்பலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Monday, April 22, 2024

மதிப்புரை....!

 

நூல் மதிப்புரை

நூல்             : களம் வென்ற வரலாற்று நாயகன்

ஆசிரியர்    : முனைவர் .ரசித்கான்

வெளியீடு  : நூர்ஜஹான் பதிப்பகம்,

                         எண் 21/10, நல்லெண்ண முதலி தெரு,

                         இராயப்பேட்டை, சென்னை - 600 014.

                         செல்பேசி: 90809 13636

                         E.mail: rasheedrubina@gmail.com

விலை                     : ரூ.600/-

உலக வரலாற்றில் ஒவ்வொரு தலைவர்களின் பேச்சும் கடலில் கண்டெடுத்த முத்துக்களாக ஒலிக்கின்றன. அந்த வகையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி என்னும் பட்டறையில் தீட்டப்பட்ட உறைவாள், தேர்தல் போர்க்களத்தில் சூழற்றிய உரைவீச்சுகளை எதிர்கால சமூகத்திற்கு பலன் அளிக்கும் வகையில், சென்னை புதுக்கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் .ரசித்கான் மிகச்சிறப்பான முறையில், "களம் வென்ற வரலாற்று நாயகன்" என்ற இந்த நூலை படைத்துள்ளார்.


பத்திரிகைகள், ஊடகங்களின் ஆரூடங்கள்”, “எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும், ஆரூடங்களும்”, “தோழமை இயக்கத் தலைவர்கள் நம்பிக்கை ஒளிக்கீற்று”. “உங்களின் ஒருவன் மடைதிறந்த நினைவோடை”, “தலைவரின் அறிக்கைகள், காணொலி வேண்டுகோள்’, “முரசொலி கட்டுரைகளும், கவிதைகளும் உருவாக்கிய உணர்வலைகள்”, “தேர்தல் கதாநாயகன் கழகத்தின் தேர்தல் அறிக்கை”, “100 நாட்களில் மக்கள் குறை தீர்க்கும் திட்டம்”, “அ.தி.மு.க. ஊழல் அமைச்சர்கள் ஆளுநரிடம் புகார்பட்டியல்”, “ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள்”, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி மக்கள் நெகிழ்ச்சி”, “கழகத் தலைவர் சுடர்விடும் சூரியனின் சூறாவளி பிரச்சாரங்கள்”, “வெற்றி முழக்கங்களும், வாழ்த்துக் குவியங்களும்”, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்ற 14 தலைப்புகளில், பல்வேறு நாளிதழ்கள், பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகள், ஆக்கங்கள், செய்திகள் மற்றும் தகவல்களை ஒன்று திரட்டி, தனது கடின உழைப்பின் மூலம், "களம் வென்ற வரலாற்று நாயகன்" என்ற இந்த அருமையான, அற்புதமான நூலை முனைவர் ரசித்கான் உருவாக்கியுள்ளார்.

மொத்தம் 655 பக்கங்களைக் கொண்ட இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் “தீரர்கள் வாழும் திராவிடர் நாட்டை வென்றவர் கிடையாது” என்ற கவியரசு கண்ணதாசனின் பொன்மொழியில் இருந்து தொடங்கி, “பேச்சு பெரியதுதான், ஆனால் மௌனம் அதைவிடப் பெரியதாகும்” என்ற தாமஸ் கார்லைலின் பொன்மொழிகள் இடம்பெற்று, நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி ஏற்ப, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அனைத்து முயற்சிகள் குறித்தும் மிக நேர்த்தியாக முனைவர் அ.ரசித்கான், "களம் வென்ற வரலாற்று நாயகன்" என்ற இந்த நூலில் அழகாக தொகுத்துள்ளார்.

மிகவும் சிறப்பான முறையில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நூலகங்களில் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும். அதன்மூலம், ஆயிரக்கணக்கான வாசகர்கள் மற்றும் பொதுமக்கள், திராவிட மாடல் ஆட்சி குறித்தும், தேர்தல் களத்தில் எப்படி செயல்பட்டு, வெற்றி பெற வேண்டும் என்பது குறித்தும், அறிந்துகொள்ள நல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும். பள்ளி, கல்லூரி நூலகங்களிலும் இந்த நூலை இடம்பெறச் செய்தால், தமிழக மாணவச் சமுதாயமும் நல்ல விளக்கங்களையும் தகவல்களையும் பெற முடியும்.

"களம் வென்ற வரலாற்று நாயகன்" நூல், ஒரு சாதாரண நூல் கிடையாது. அரிய தகவல்களைக் கொண்ட ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும், அவரது ஆளுமை திறனையும், அவரது அரசின் சாதனைகளையும் வளரும் தலைமுறையினர் தெரிந்துகொள்ள இந்த தொகுப்பு நூல் பெரிதும் உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது என்றே கூறலாம்.

- ஜாவீத்