Thursday, October 22, 2015

மதுவால் சீரழிந்து வரும் தமிழகம்.....!

மதுவால் சீரழிந்து வரும் தமிழகம்.....!

மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர்  நக்மா கவலை.....!! 


தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, குடிநீர், மின் பற்றாக்குறை என மோசமான நிலை உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை.

குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை.

ஒருபக்கம் இலவசங்களை கொடுக்கும் தமிழக அரசு, மறுபக்கம் மது விற்பனை செய்கிறது.

மதுவால் தமிழகம் சீரழிந்து வருகிறது.

புள்ளிவிவரங்களின்படி இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விதவைகள் அதிகமாக உள்ளனர்.

இதற்கு மதுவே காரணம்.

இவற்றையெல்லாம் ஒரு பெண்ணாக முதலமைச்சர் ஜெயலலிதா புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், தலித்களுக்கு எதிரான வன்முறை நாடெங்கும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஹரியாணாவில் 2 தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற கொடுமைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.

சென்னையில் நேற்று (22.10.2015( செய்தியாளர்களிடம் பேசியபோதுதான் நக்மா இந்த கருத்தை தெரிவித்தார்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Wednesday, October 21, 2015

H I T L E R......!

H I T L E R......!



Once upon a Time there was Hitler

1. Hitler had not got married

2. Hitler used to think that people of certain religion were enemies of the country

3. Hitler’s supporters could not tolerate any criticism against him

4. Hitler used to paint and sell colours in his childhood

5. All the means of publicity, newspapers, magazines were devoted to publicise Hitler

6. Hitler had crushed all Labour movements

7. Hitler used to call his rivals anti-nationals/traitors

8. Hitler had joined the Nazi party as an ordinary worker and gone on to finish all his rivals and had become the leader of the party

9. Hitler had come to power campaigning that he would end all problems in a jiffy

10. Hitler, after he came to power could not manage to end any problems, but he certainly managed to destroy Germany

11. Hitler had come up with a slogan to come to power---Good Times will Come—Acche din aayenge!

12. Hitler’s party when it won, he went to the German Parliament for the first time and cried profusely

13. Hitler had come to power lying

14. Hitler used to love dressing up and look good

15. Hitler had the consummate art of making lies look like truth

16. Hitler always used to say, I, me, I, me, I, me always

17. Hitler used to love giving speeches on Radio

18. Hitler used to have a lover whom he used to get spied on

19. Hitler always used in his speeches “friends, friends””(mitron, mitron)

20. Hitler used to love getting photographed



P.S: This post is just and just about Hitler. If this post feels like it has any resemblance to anybody else except Hitler, you can blame it on your own imagination.

மாமன்னர் ஔரங்கசீப்.....!

மாமன்னர் ஔரங்கசீப்.....! 

வரலாற்று உண்மைகள்.....!!


ஔரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.

மேலும், அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.

அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் முகலாய படையில் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?

இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.

ஒளரங்கசீப் ஒரு முஸ்லிம் என்பதால், "உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு" என்னும் இஸ்லாமிய கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் கட்டாய மத மாற்றத்தை இவர் செயற்படுத்தவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும்.

அதேபோல் இராஜபுத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினார். "அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன்" என்று அந்த இந்து அரசியே சொன்னபோது... அதனை ஏற்றுக் கொள்ளாது மறுத்தவர் ஒளரங்கசீப்.

விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும்.

தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட்படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் Islam and Indian Culture(1578 - 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது.

''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன்மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.

பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து சிற்றசர்கள் மற்றும் தளபதிகள் வாரணாசியில் மொகலாய படை ஒரு நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.

தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இராணியை மட்டும் திரும்பவே இல்லை.

இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த அரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் திடீரென வெளிப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் அரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இராணி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க மாமன்னர் ஒளரங்கசீப்பை வேண்டினர்.

மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், ‪#‎கற்பக்கிரகத்தின்_புனிதம்_அழிந்துவிட்டதாகக்கருதி‬ மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டு, கர்பக்கிரக சாமி சிலை இல்லாத ‪#‎தோஷம்பட்டக்கட்டிடம்‬ (அந்தக்கோயில்) இந்து அரசர்கள் ஆதரவோடு அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, மாமன்னர் ஒளரங்கசீப்பின் ஒப்புதலுடன் இடிக்கப்பட்டது.

இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் ஆதாரமாக தரப்பட்டுள்ளது.

மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மையான வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற பொய்யான வரலாறு வேறு.

நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?

ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். அப்படியான ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.

முனைவர் அ. தஸ்தகீர்.
(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)

வரலாற்று ஆதாரம்:
பிஷம்பர் நாத் பாண்டே,
சரித்திர ஆய்வாளர் மற்றும் முன்னாள் ஒரிசா மாநில கவர்னர்
'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'
Page : 70,71

மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

P.N.Pande

“Aurangzeb came to Know of it. He was very much enraged. He sent his senior officers to search for the Rani. Ultimately they found that the statue of Ganesh: which was fixed in the wall was a movable one. When the statue was moved. They saw a flight of stairs that led to the basement. To their horror, they found the missing Rani dishonoured and crying. The basement was just beneath Lord Vishwanaths seat. The Rajas expressed their vociferous protests. As the crime was heinous the Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred precinets has despoiled. Lord Viswanath may be moved to some other place. The temple be razed to the ground and the Mahant be arrested and punished.”

P.N.Pande, Islam And Indian Culture, Page 55

Tuesday, October 20, 2015

முகத்தை பார்க்காதீர்கள்....!

முகத்தை, மதத்தை பார்க்காதீர்கள்....! 

இதயத்தை பாருங்கள்...!!


அமெரிக்காவைச் சேர்ந்த அகமது முகமது என்ற பள்ளி மாணவன் தனது புதிய கண்டுபிடிப்பான நவீன கடிகாரத்தை தாம் படிக்கும் பள்ளிக்கு கொண்டு சென்றார்.

அதை பார்த்ததும், அதில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு இருப்பதாகவும் விரைவில் வெடிக்கும் என்றும் சிலர் புரளி கிளப்ப, போலீசார் வந்து அகமதை கைது செய்தனர்.

பிறகு, தீவிர விசாரணைக்கு பிறகு அகமது விடுதலை செய்யப்பட்டார்.

முஸ்லிம் சிறுவனை தீவிரவாதி என்றும் கைது செய்த அமெரிக்க போலீசாரின் இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கண்டனங்கள் எழுந்தன.

இதையடுத்து, தமது அதிபர் மாளிகைக்கு சிறுவன் அகமதை வரவழைத்து, தவறுக்கு மன்னிப்பு கேட்டார் அதிபர் ஒபாமா.

இந்நிலையில், ஒரு மனிதனின் நிறம், முகம் மற்றும் மதத்தை வைத்து அவரை எடை போடக்கூடாது என அகமது தெரிவித்துள்ளார்.


மனிதனை இதயத்தை பார்த்து அவரை எடை போட வேண்டும்.

மனித இதயத்தை பார்த்து அவனை தீர்மானிக்க வேண்டும் என அகமது கேட்டுக் கொண்டுள்ளார்.

இதயங்களின் மூலம் பிறரை எடை போடுங்கள் என்றும் தீர்மானிங்கள் என்றும் உலக மக்களை கேட்டுக் கொண்டுள்ளார் அகமது முகமது.

அகமதின் வேண்டுகோளில் நியாயம் இருப்பது உண்மைதான்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

படித்த முட்டாள்கள்....!

படித்த முட்டாள்கள்....!


பொதுவாக டாக்டர்கள் வக்கீல்கள் குறித்து எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை.

அதற்கு காரணம் இந்த இரண்டு பேருக்கும் உலகத்தில் தாங்கள்தான் மெத்த படித்தவர்கள் என்ற எண்ணம் கொஞ்சம் அதிகம்.

அதைவிட மற்றவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்ற நினைப்பு வேறு.

இதனால்தான் டாக்டர்கள் வக்கீல்களின் நடவடிக்கைகள் எப்போதும் கொஞ்சம் மாறுப்பட்டே இருக்கும்.

வக்கீல்களில் பலர் சட்டத்தை மதிக்கவே மாட்டார்கள்.

போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காமல் வாகனங்களை ஓட்டுவார்கள்.

இதனால் போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடக்கும்.

இதேபோல் டாக்டர்களின் நடவடிக்கைகளும் இருக்கும்.

சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் கருணை உள்ளத்துடன் டாக்டர்கள் நடந்துக் கொள்ளமாட்டார்கள்.

ஒரு நோயாளியை நான்கு பேர் மத்தியில் எவ்வளவு அவமரியாதை செய்ய முடியுமோ அவ்வளவு செய்வார்கள்.

நோயாளிகளை சரியாக பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க மாட்டார்கள்.

பல டாக்டர்கள் நோயாளிகளை தங்கள் அருகில் அமர வைத்து அவர்களின் பிரச்சினைகளை கனிவுடன் கேட்காமல் தூரத்தில் நிற்க வைத்து மருந்து மாத்திரைகளை சீட்டில் எழுதி கொடுத்து அனுப்பி விடுவார்கள்.

இவர்களுக்கு எப்போதும் பணம்தான் குறிக்கோள்.

வேலூரில் ஒரு வக்கீல் இருக்கிறார்.


அவருக்கு தாம் பெரிய ராம்ஜெத்மலானி கபில் சிபில் அருண் ஜெட்லி என்ற நினைப்பு.

அவருடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தால் சிரிப்பு மட்டுமல்ல அவர் மீது வெறுப்பும் ஏற்படும்.

இதேபோல் சில டாகடர்களும் நடந்துகொள்வார்கள்.

அதேநேரத்தில் நல்ல உள்ளம் கொண்ட பல டாக்டர்கள் வக்கீல்கள் இருக்கவே செய்கிறார்கள்.

அதை மறுப்பதற்கில்லை.

மருத்துவம் மற்றும் சட்டம் இரண்டும் மிகவும் புனிதமான தொழில்.

குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு உயர்ந்த அர்ப்பணிப்பு உள்ளத்துடன் செய்ய வேண்டிய பணி.

இதை பெரும்பாலான டாக்டர்கள் வக்கீல்கள் உணர்ந்து கொள்வதில்லை.

அதனால் எப்போதும் இவர்கள் தெனாவட்டாகவே நடந்து கொள்வார்கள்.

மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் ஆகியோரிடம் எனக்கு ஏற்பட்ட அனுபவம்தான் அவர்கள் குறித்து இந்த மதிப்பு ஏற்பட காரணம்.

உங்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டு இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும்.....!

கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும்.....!


கடனுடன் பகை.

பொதுவாக உணவு விடுதிகள் டீ கடைகளில் இப்படி ஒரு வாசகத்துடன் கூடிய பதாகை தொடங்குவதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம்.

கடன் அன்பை முறிக்கும் என பெரியவர்கள் சொல்வார்கள்.

எனக்கு கடன் வாங்கும் பழக்கம் இல்லை.

அப்படியே வாங்கினாலும் குறிப்பிட்ட காலகெடுவிற்கு முன்பே கடன் பணத்தை அதை கொடுத்தவர்களிடம் திருப்பி கொடுத்து விடுவேன்.

யாராவது கடன் கொடுத்து உதவ முன்வந்தால் கண்ணியத்துடன் வாங்க மறுத்து விடுவேன்.

ஆனால் கடன் விஷயத்தில் எனக்கு பல அனுபவங்கள் உண்டு.

ஒருமுறை நண்பர் ஒருவர் ஒரு அவசர தேவைக்காக மிகப் பெரிய தொகையை கடனாக கேட்டிருந்தார்.

நானும் கொடுத்தேன்.

அதனை பல மாதங்களுக்கு பிறகுதான் என்னால் திருப்பி வாங்க முடிந்தது.

மீண்டும் அதே நபர் கடன் கேட்டபோது என்னிடம் பணம் இல்லை.

அதனால் இல்லை என்றேன்.

நண்பருக்கு கோபம் வந்துவிட்டது.

என்னிடம் பேசுவதையும் பழகுவதையும் குறைத்துக் கொண்டார்.

இதேபோல் உறவினர் ஒருவருக்கு கடன் கொடுத்து இருந்தேன்.

பல ஆண்டுகள் ஆகியும் என்னால் முழு பணத்தை இன்னும் வாங்க முடியவில்லை.

கடனாக வாங்கி பணத்தை கூட முழுமையாக கொடுக்காமல் அவ்வப்போது கை செலவுக்கு செலவழிக்கும் வகையில்தான் உறவினர் பணத்தை திருப்பி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

இதனால் இரண்டு பேர் இடையே உறவு முறையில் லேசான விரிசல் ஏற்பட்டு விட்டது.

ஆக கடன் கொடுத்தாலும் தொல்லை.

கொடுக்காமல் இருந்தாலும் பாதிப்பு.

கடன் விவகாரம் மனிதனை எப்படி ஆட்டிப் புரட்டுகிறது என்பதை அதை கொடுத்தும் கொடுக்காமல் இருந்தவர்களுக்கு தெரியும்.

அந்த அனுபவம் எனக்கு கொஞ்சம் அதிகமாக உண்டு.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Friday, October 16, 2015

கவர்ச்சி உடை வேண்டாம்....!

பெண்கள் கவர்ச்சி உடை அணிய வேண்டாம்....!

நடிகை தமன்னா...!!

நடிகைகள் போல கவர்ச்சி உடை அணியும் மோகம் இளம்பெண்கள் மத்தியில் தற்போது. வேகமாக பரவி வருகிறது.

இதனால் இளம்பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.

இந்நிலையில் சினிமாவை பார்த்து நடிகைகளை போன்று பெண்கள் கவர்ச்சி உடைகளை அணியக்கூடாது என நடிகை தமன்னா கேட்டுக் கொண்டுள்ளார்.

சினிமா வேறு. நிஜ வாழ்க்கை வேறு.

இரண்டையும் கலக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் நடிகைகள் அணிவது போன்ற ஆடைகளை குடும்பத்து பெண்கள் அணிய விரும்புவது நல்லது அல்ல என்றும் தமன்னா கூறியுள்ளார்.

சினிமாவை சினிமா மாதிரி பார்க்க வேண்டும் என்றும் நிஜ வாழ்க்கைக்கு அதை கொண்டு வந்து நடிகைகள் அணிவது போல கவர்ச்சி ஆடைகளை உடுத்திக்கொள்ள ஆசைப்பட வேண்டாம் என்றும் பெண்களை தமன்னா கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகை தமன்னாவின் அட்வைஸ் இளம் பெண்களின் காதுகளில் விழுந்தால் சரி.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

பிரசங்கம் பிறருக்குதான்...!

பிரசங்கம் எல்லாம் பிறருக்குதான்...!


வேலூரில் சாதிக் பாய் என்ற வணிகர் ஒருவர் இருக்கிறார்.

என் மூத்த சகோதரரின் நண்பர் அவர்.

அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள்.

சாதிக் பாய் பழகுவதற்கு நல்ல மனிதர்.

ஏதாவது ஒரு விஷயம் பேசினால் குர்ஆன் நபி மொழி ஆகியவற்றில் இருந்து மேற்கோள் காட்டி பேசுவார்.

ஏழை பெண்கள் குறித்து நிறைய பேசுவார்.

திருமணம் ஆகாத ஏழை பெண்களுக்கு படித்த இளைஞர்கள் வாழ்வு கொடுக்க முன்வர வேண்டும் என்பார்.

திருமணங்கள் எளிமையாக நடத்த வேண்டும் என மனதை கவரும் வகையில் பிரசங்கம் செய்வார்.

ஏழை பெண்களின் திருமணத்தில் பெரிதும் அக்கறை கொண்ட சாதிக் பாய் தம்முடைய ஆண் பிள்ளைகளில் யாருக்காவது ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தாரா என்றால் பதில் இல்லை என்றே கிடைக்கும்.

எளிய திருமணங்களை ஆதரிக்கும் சாதிக் பாய் தம் குடும்ப திருமணங்களை எளிமையாக நடத்தினாரா என்றால் அதற்கும் பதில் இல்லைதான்.

எல்லாமே தடால் புடால் திருமணங்கள்தான்.

சாதிக் பாயை நான் குறை சொல்லவில்லை.

பிறகுக்கு அட்வைஸ் செய்யும் நபர்கள் சமூக சுழல்களில் சிக்கி அதை தங்களுடைய வாழ்வில் கடைப்பிடிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

இதுதான் இன்றைய யதார்த்தம்.

இதனால்தான் நல்ல விஷயங்கள் குறித்து பிறருக்கு அட்வைஸ் செய்துவிட்டு வாழ்க்கையில் பலர் நிம்மதி அடைகின்றனர்.

சாதிக் பாயை போன்று நீங்களும் உங்கள் வாழ்க்கையில் சிலரை சந்தித்து இருப்பீர்கள்.

உண்மை தானே.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

நிறம் மாறும் பூக்கள்...!

நிறம் மாறும் பூக்கள்...!


அடிக்கடி நிறம் மாற்றிக் கொள்ளும் நபர்களை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்து இருக்கலாம்.

அதனால் பல நேரங்களில் இப்படிப்பட்ட நபர்கள் ஏன்தான் நம்முடைய வாழ்க்கை பயணத்தில் வந்து செல்கிறார்களோ என நினைத்து நீங்கள் வருத்தப்பட்டு இருக்கலாம்.

குறிப்பாக உங்களது நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அடிக்கடி நிறம் மாறி நடந்து கொண்டால் சே இவ்வளவு தானா இவர்கள் என நீங்கள் மனதிற்குள் நினைத்து வேதனை அடைந்திருக்கலாம்.

உங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை போன்று நானும் வாழ்க்கையில் பல அனுபவங்களை சந்தித்து இருக்கிறேன்.

தற்போதும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆம் வசதி வாய்ப்புகளை பார்த்து பழகும் நபர்களைப் பற்றிதான் கூறுகிறேன்.

என்னுடைய நண்பர் ஒருவர் ஆரம்ப காலத்தில் சாதாரண நிலையில் இருந்தவர்.

தற்போது நம்மை விட கூடுதல் வசதி வாய்ப்பு அவருக்கு.

ஆனால் பண்பிலும் பழகும் முறையிலும் அவரிடம் நிறைய மாற்றங்கள்.

அவருடைய அந்தஸ்துக்கு நிகராக நாம் இல்லை என்ற சூப்பிரியாட்டி காம்ப்ளக்ஸ் நண்பருக்கு.

எனவே நம்முடைய நட்பை குறைத்து கொண்டு அவருடைய அந்தஸ்துக்கு தகுதியானவர்களுடன் மட்டுமே நட்பு வட்டாரத்தை அமைத்துக் கொண்டு இயங்கி வருகிறார்.

அதேநேரத்தில் நமக்கு ஏதாவது ஒரு வளர்ச்சி முன்னேற்றம் கிடைத்தால் அப்போது மட்டுமே நம்மிடம் தொடர்பு கொள்ள முயலுவார் அந்த நண்பர்.

நமது வீழ்ச்சி தோல்வி ஆகியவற்றின் போது நம்மை கண்டுகொள்ள மாட்டார்.

இதுபோன்ற நண்பர்கள் உறவினர்களை நாமும் கண்டுகொள்ள கூடாது.

வசதி வாய்ப்புகளை மட்டுமே பார்த்து உறவுமுறையை வளர்க்கும் நபர்களிடம் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இல்லையெனில் நம்முடைய வாழ்க்கையில் பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டிய சுழல் ஏற்படும்.

ஏன் அவமானம் கூட ஏற்படலாம்.

என் வாழ்க்கையில் வந்த சென்ற இதுபோன்ற நிறம் மாறும் நபர்களை நான் தற்போது முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டேன்.

கூடா நட்பு கேடாக முடியும் என்பது போல ஒருவரின் வசதியை மட்டும் பார்த்து பழகும் நபர்களின் நட்பை உதறி தள்ளியதால் தற்போது எனக்கு வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இல்லை.

அவமானங்கள் இல்லை.

வாழ்க்கை அமைதியாக அதன் வழியில் சென்றுகொண்டிருக்கிறது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Tuesday, October 13, 2015

கண்கள் குளமானது....!

கண்கள் குளமானது....!


இயக்குநர் தங்கர் பச்சான் எழுதி இயக்கிய இரண்டு திரைப்படங்களை சமீபத்தில் பார்த்தபோது என்னையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக ஓடியது.

ஒன்று மனித உறவுகளை மையமாக வைத்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஒன்பது ரூபா நோட்டு திரைப்படம். அதை பார்த்தபோது இயக்குநர் தங்கர் பச்சானின் சமூக உணர்வு மற்றும் அக்கறையை உணர முடிந்தது.

இதேபோன்று மற்றொரு திரைப்படம் அழகி.

மனித வாழ்வில் முதல் காதலை யாராலும் எப்போதும் மறக்க முடியாது.

திருமணம் செய்துக் கொண்ட பிறகு கூட முதல் காதலின் நினைவுகள் அடிக்கடி நம்மை பாடாய் படுத்தும்.

நமது தூக்கத்தை கெடுக்கும்.

அதுவும் நாம் விரும்பியவர்கள் துன்பத்தில் ஏழ்மையில் தவிக்கும் போது நம்மால் நிச்சயமாக நிம்மதியாக அமைதியாக இருக்கவே முடியாது.

இதைத்தான் மிக அற்புதமான தனது கற்பனை மூலம் மண்ணின் கலாச்சாரம் பண்பாடு குறையாமல் அழகி படத்தில் கொண்டு வந்து நிறுத்தி பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கி விட்டார் தங்கர் பச்சான்.

இரண்டு திரைப்படங்களும் ஏற்கனவே வந்த பழைய படங்கள்தான்.

ஆனால் இவற்றை ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது என்னால் அழாமல் இருக்க முடியவில்லை.

அற்புதமான கலைப் படைப்பை தந்த இயக்குநர் தங்கர் பச்சானை கட்டித் தழுவி முத்தம் கொடுத்து பாராட்ட மனம் துடிக்கிறது.

தமது அற்புதமான படைப்புகள் மூலம் கண்களை குளமாக்கி எனது மனதை லேசாக்கிய தங்கர் பச்சானுக்கு பாராட்டுகள்.

நன்றிகள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

துண்டு துண்டாக....!

துண்டு துண்டாக....!


என்ன சாபக் கேடோ தெரியவில்லை.

தமிழக முஸ்லிம் அமைப்புகள் ஒவ்வொன்றும் துண்டு துண்டாக உடைந்து வருகின்றன.

இப்படி நடப்பது தற்போது தொடர்கதையாக மாறிவிட்டது.

இப்படி நடப்பதற்கு என்ன காரணம் என ஆராய்ந்தால் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது.

அது முஸ்லிம் அமைப்பு தலைவர்களின் சுயநலம் மற்றும் பதவி ஆசைதான்.

எல்லாமே தன்னை முன்னிலை படுத்தியே நடக்க வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம் தலைவர்களிடம் தற்போது அதிகமாக உள்ளது.

தன்னை மீறி தாண்டி எதுவுமே நடக்கக் கூடாது என முஸ்லிம் இயக்க தலைவர்கள் நினைக்கிறார்கள்.

மீடியாக்களில் தாம் மட்டுமே வர வேண்டும்.

தொலைக்காட்சி விவாதங்களில் தாம் மட்டுமே பங்கெடுத்து சமுதாயத்திற்கு பெரிய சேவை ஆற்றி வருவதாக காட்டிக் கொள்ள வேண்டும்.

இப்படிதான் தற்போதைய தலைவர்கள் எண்ணுகிறார்கள்.

தமக்கு மட்டுமே விளம்பரம் புகழ் கிடைக்க வேண்டும் என கருதுகிறார்கள்.

சமுதாய அக்கறை தமிழக முஸ்லிம் தலைவர்களிடம் சிறிதும் இல்லை.

ஒருசிலர் விதிவிலக்காக இருக்கலாம்.

அத்துடன் முஸ்லிம் இயக்க தலைவர்களிடம் ஈகோ பிரச்சினை கொஞ்சம் கூடுதலாக இருந்து வருகிறது.

இதனால்தான் தமிழக முஸ்லிம் இயக்கங்கள் தோன்றிய சில மாதங்களில் கருத்து வேறுபாடுகள் காரணமாக துண்டு துண்டாக உடைகின்றன.

அத்துடன் எல்லா இயக்கங்களும் தாங்கள்தான் முஸ்லிம் சமுதாயத்திற்கு உண்மையாக சேவை ஆற்றுவதாக கூறிக்கொண்டு மற்ற இயக்கங்கள் மீது சேற்றை வாரி பூசுகின்றன.

இப்படிப்பட்ட நிலையில் முஸ்லிம் இயக்கங்கள் மீது சமுதாய மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்.

மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் முஸ்லிம் இயக்கங்களை எப்படி மரியாதையாக நடத்தும்.

அதனால்தான் தேர்தல் காலங்களில் முஸ்லிம் இயக்கங்களை வெறும் கறிவேப்பிலையாக மற்ற பிரதான கட்சிகள் பயன்படுத்தி இலாபம் அடைகின்றன.

சுயநலம் பதவி ஆசை இல்லாமல் சமுதாய முன்னேற்றம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் தலைவர்கள் கிடைக்கும் வரை தமிழக முஸ்லிம் இயக்கங்களின் பிளவுகளை யாராலும் தடுக்கவே முடியாது.

இதுதான் தற்போதைய நிதர்சனம்.

உண்மை நிலையும் அதுதான்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

அப்படி நினைக்க வேண்டாம்...!

அப்படி நினைக்க வேண்டாம்...!


கடின உழைப்பிற்கு பிறகு உங்களுக்கு கிடைக்கும் வெற்றியை கண்டு பிறர் பொறாமை கொள்வதாக நீங்கள் நினைக்க வேண்டாம்.

குறிப்பாக உங்களது நெருங்கிய உறவினர்கள் உங்களின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமை கொள்வதாக நீங்களே தவறாக கற்பனை செய்துக் கொள்ள வேண்டாம்.

ஒருவரது முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை காணும் போது அதுபோல நமக்கும் கிடைத்தால் நன்றாக இருக்குமே என நினைப்பது எண்ணுவது மனித இயல்பு.

அதை நாம் பொறாமை என நினைத்து நம் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரை எப்போதும் சந்தேக கண்ணோடு நோக்குவது சரியல்ல.

இதுபோன்ற செயல்களால் உறவுகள் சிதைக்கப்பட்டு பகை உணர்வு ஏற்படுகிறது.

பல தொல்லைகளுக்கு நாம் தவறாக எண்ணும் எண்ணங்களே காரணமாக அமைந்து விடுகின்றன.

அதேநேரத்தில் பல தீய சக்திகள் உண்மையாகவே பொறாமை கொண்டு நம் வளர்ச்சியை முன்னேற்றத்தை குழித் தோண்டி புதைக்க நினைக்கும் போது அத்தகைய தீய சக்திகளிடமிருந்து நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் மறந்து விடக்கூடாது.

இல்லையெனில் பல தோல்விகள் நம் வாழ்வில் தொடர்கதையாக தொடரும் நிலை உருவாகும்.

இது என் அனுபவம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

எதிர்பார்ப்பு.....!

எதிர்பார்ப்பு.....!


யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

அப்படி ஒரு எதிர்பார்ப்பு எண்ணம் உங்களிடம் இருந்தால் அது உங்களுக்கு நிச்சயம் ஏமாற்றத்தை தான் கொண்டு வந்து தரும்.

மனிதனுக்கு அவன் மூலமாகவே அனைத்து காரியங்களும் நடக்கும் வகையில் இயற்கை பல விதிகளை ஏற்படுத்தி உள்ளது.

எனவே உங்கள் மீதும் இயற்கையின் மீதும் நம்பிக்கை வைத்து பணிகளை செய்யுங்கள்.

நீங்கள் நினைப்பது நடக்கும்.

அதை விட்டுவிட்டு ஒவ்வொரு காரியத்திற்கும் நண்பர்கள் உறவினர்கள் உதவ முன் வருவார்கள் என நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

குறிப்பாக மீடியா துறையில் இருப்பவர்கள் யாரையும் உடனே நம்பி விடக்கூடாது.

அப்படி நம்பி எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டால் அவ்வளவுதான்.

அது பிறகு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

தோல்விகளை அள்ளித் தரும்.

(இது என் அனுபவம்)

அதேநேரத்தில் வாழ்க்கையில் சில பணிகள் மற்றவர்களின் உதவி இல்லாமல் செய்ய முடியாது என்பதையும் மறந்து விடக்கூடாது.

ஆனால் இங்கேயும் எதிர்பார்ப்புகளை நாம் குறைவாகவே வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் ஏமாற்றம் ஏற்படாது.

உங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல நிகழ்வுகளை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

அவை அனைத்திற்கும் நீங்களே காரணமாக இருந்திருப்பீர்கள்.

பிறரின் உதவிகள் இல்லாமலேயே சில வெற்றிகள் உங்களை வந்து அடைந்து இருக்கும்.

ஆக எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு ஏமாற்றங்களை தவிர்ப்போம்.

அதை விட்டுவிட்டு எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் நிச்சயம் நிம்மதி இருக்காது.

வருத்தமே மிஞ்சும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

கண்டுகொள்ள வேண்டாம்...!

கண்டுகொள்ள வேண்டாம்...!


பாபநாசம் திரைப்படத்தில் கமல்ஹாசன் ஒரு வசனம் பேசுவார்.

அது

என் முதுகுக்கு பின்னாடி இந்த ஊர்லே என்ன பேசிக்கிறாங்க என்பது எல்லோருக்கும் தெரியும்.

அதற்காக பயப்பட்டா வருத்தப்பட்டா இதுபோன்ற ஒரு வளர்ச்சி எனக்கு கிடைத்திருக்குமா.

இப்படி வசனம் பேசும் கமல்ஹாசன் தம்முடைய முன்னேற்றத்துக்கு தாம் செய்த தியாகங்கள் மற்றும் உழைப்பு அகியவை குறித்து மறைமுகமாக கூறுவார்.

இதேபோன்றுதான் நம்முடைய வாழ்விலும் நம் முதுகுக்கு பின்னால் நம்மைக் குறித்து இல்லாத விஷயங்களை சிலர் விமர்சனம் செய்துக் கொண்டே இருக்கிறார்கள்.

குறிப்பாக நமது நண்பர்கள் நெருங்கிய உறவினர்கள் என நமது வாழ்க்கையுடன் தொடர்புடைய சொந்தங்கள் சிலர் பல இடங்களில் பலரிடம் தேவையே இல்லாமல் நம்மை ஏதாவது குறை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த தகவல்கள் நமது காதுகளுக்கு எட்டிக் கொண்டே இருக்கின்றன.

இத்தகைய விமர்சனங்களை நாம் கண்டுகொள்ளவே கூடாது.

அதற்காக கொஞ்சமும் வருத்தப்படக் கூடாது.

அப்படி வருத்தப்பட்டால் நமது வாழ்க்கையில் வளர்ச்சி இருக்காது.

மாறாக மன நிம்மதி அமைதி காணாமல் போய்விடும்.

அதேநேரத்தில் நம் மீது உண்மையான அக்கறை கொண்டு நண்பர்கள் உறவினர்கள் நம்மிடம் நேருக்கு நேர் கூறும் விமர்சனங்கள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அதில் கவனக்குறைவாக இருக்கக் கூடாது.

அப்படி கவனக்குறைவாக இருந்துவிட்டால் அது பல பிரச்சினைகளை கொண்டு வந்து நிறுத்தி விடும்.

ஆக நமது முதுகிற்கு பின்னால் செய்யப்படும் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் அதில் கவனம் செலுத்தாமல் நம்முடைய பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி அமைதியாக மகிழ்ச்சியாக வாழ முயற்சி செய்வோம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

புண்ணியவானுக்கு நன்றி...!

வாய்ப்பு கொடுக்காத அந்த புண்ணியவானுக்கு நன்றி...!


உலக புகழ் பெற்று விளங்கும் சன் டி.வி.யில் விஷூவல் எடிட்டராக கலக்கி கொண்டு இருப்பவர் சகோதரர் கதீர் சரவணன்.

செல்பேசியில் நேற்று தொடர்பு கொண்ட அவரிடம் அவரது படத்தொகுப்பு திறமையை பாராட்டி புகழ்ந்து தள்ளினேன்.

ஆதித்யா டி.வி.யில் வரும் ஒரு காமெடி கலக்கல் நிகழ்ச்சிக்கு கதீர் சரவணன்தான் எடிட்டர்.

டைட்டில் கார்ட்டில் அவர் பெயர் பார்த்த போது மனம் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தது.

செல்பேசியில் பேசியபோது சரவணனுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தேன்.

அத்துடன் அவருடன் இணைந்து பணியாற்றிய தொலைக்காட்சியில் எடிட்டராக பணிபுரிய சரவணனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதையும் வேதனையுடன் தெரிவித்தேன்.

அதற்கு சரவணன் சொன்ன பதில் என்ன தெரியுமா.

எல்லாம் நல்லதுக்குதான் சார்.

அங்கு எனக்கு வாய்ப்பு வழங்கி இருந்தால் இப்போது என்னால் இதுபோல் சாதித்து இருக்க முடியாது.

உண்மைதான் சரவணன்.

உங்களுக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்த அந்த புண்ணியவானுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

எஸ்.ஏ.அப்துல்அஜீஸ் 

பத்திரிகையாளர்.

காலம் பதில் சொல்லியே தீரும்...!

காலம் பதில் சொல்லியே தீரும்...!


ம.ம.க. தொடங்கப்பட்ட நேரம் அது.

முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வலிமையான இயக்கமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருக்கும் போது புதிதாக ஒரு இயக்கம் தேவையா என சமுதாயத்தில் அக்கறை உள்ளவர்கள் வினா எழுப்பினார்கள்.

இதனால் முஸ்லிம் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும்.

பிளவுகள் உருவாகும் என அச்சம் தெரிவித்தனர்.

இந்த கேள்வி இப்போது ம.ம.க.வின். உண்மையான தலைவர் நான்தான் என கூறிக் கொள்ளும் ஜவாஹிருல்லாவிடம் அப்போது முன் வைக்கப்பட்டது.

ஊடகங்களும் இதே வினாவை எழுப்பின.

அதற்கு கண்ணியமான முறையில் ஜவாஹிருல்லா பதில் அளித்து இருக்கலாம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அதன் தலைவர்களை விமர்சனம் செய்யாமல் இருந்திருக்கலாம்.

மாறாக என்ன பதில் மற்றும் விளக்கம் சொன்னார் தெரியுமா.

காயிதே மில்லத் தொடங்கிய முஸ்லிம் லீக் தற்போது இல்லை.

அதன் தலைவர்கள் முஸ்லிம் லீக்கை சரியாக நடத்தவில்லை.

அதனால் அது வலிமையான இயக்கமாக செயல்படவில்லை என தாறுமாறாக விமர்சனம் செய்தார்.

சக முஸ்லிம் இயக்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் கிண்டலடித்தார்.

அத்துடன் ம.ம.க.தான் முஸ்லிம் சமுதாயத்தின் வலிமையான இயக்கம்.

உண்மையான முஸ்லிம் இயக்கம்.

மற்ற முஸ்லிம் இயக்கங்கள் அனைத்தும் போலி இயக்கங்கள்.

சுயநல இயக்கங்கள் என்ற பாணியில் கொக்கரித்தார்.

மீடியாக்களில் மற்ற முஸ்லிம் இயக்கங்களை அவமானம் செய்தார்.

ம.ம.க.வில் உள்ளவர்கள் வைரங்கள் என்றார்.

சுயநலம் இல்லாதவர்கள் என தமக்கு தாமே சான்றிதழ் கொடுத்துக் கொண்டார்.

இன்று நிலைமை என்ன.

ஜவாஹிருல்லா & கோவும்

தமீமுன் அன்சாரி & கோவும்

ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசிக் கொள்கிறார்கள்.

மீடியாக்களில் பேட்டியும் அறிக்கைகளையும் கொடுத்து முஸ்லிம் சமுதாயத்தை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதை சமுதாய அக்கறையுடன் எடுத்துக் கூறி விமர்சனம் செய்தால் ம.ம.க.வையும் அதன் தலைவர்களையும் தாக்கி எழுதுவதை தவிர்க்கலாமே சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

வரலாற்று பாரம்பரிய இயக்கமாக விளங்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை கிண்டல் செய்த ம.ம.க. தலைவர்களுக்கு தற்போது காலம் பதில் சொல்லியுள்ளது.

சமுதாயத்தில் அவர்களுக்கு இருந்த கொஞ்ச நல்ல பெயரும் தற்போது இல்லை.

அதற்கு காரணம் அவர்களின் பக்கா சுயநலம்.

பதவி ஆசை.

தாம் என்ற ஈகோ.

இத்தகைய அரசியல் வியாதிகளை விமர்சனம் செய்வதில் ஒன்றும் தவறே இல்லை என்பதுதான் என் கருத்து.

ம.ம.க. விவகாரத்தை கூர்ந்து நோக்கும்போது ஒரு உண்மை தெரிய வருகிறது.

ஒரு இயக்கத்தை இறுமாப்புடன் கிண்டல் அடிப்பவர்கள் பின்னர் காலத்திற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.

இது நிஜம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

காரியம் முடிந்ததும்....!

காரியம் முடிந்ததும்....!


வேலூரில் எனக்கு நண்பர் ஒருவர் இருந்தார்.

இப்போதும் அவர் உயிருடன்தான் இருக்கிறார்.

ஆனால் என் நட்பு வட்டத்தில் அவர் தற்போது இல்லை.

அந்த நபரின் பெயர் அஸிமுதீன்.

தமக்கு ஏதாவதொரு காரியம் வேலை நடக்க வேண்டுமானால் நம்மை தேடி வருவார்.

நம்மை புகழ்ந்து பேசுவார்.

உங்களால்தான் அது முடியும் என்பார்.

இப்படி பேசி பேசியே தனக்கு நடக்க வேண்டிய காரியங்களை நம்மிடம் இருந்து செய்ய வைத்து விடுவார்.

ஆரம்பத்தில் அவர் கடைப்பிடித்து வரும் இந்த டெக்னிக்கை நான் புரிந்துகொள்ளவில்லை.

நமக்குதான் வெளுத்தது எல்லாம் பால் என நினைக்கும் பண்பாச்சே.

அதனால் அஸிமுதீன் குறித்து நண்பர்கள் சிலர் குறை கூறியபோது அதை நான் நம்பவில்லை.

பிறகுதான் போக போக அவரின் உண்மை முகம் எனக்கு தெரியவந்தது.

ஒருநாள் கடை வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த அவருக்கு சலாம் கூறினேன்.

பதிலுக்கு அந்த நபர் என்ன செய்தார் தெரியுமா.

முகத்தை சடார் என திருப்பிக் கொண்டு கண்டும் காணாமல் போய்க் கொண்டே இருந்தார்.

அப்போதுதான் இந்த மரமண்டைக்கு லேசாக புரிய ஆரம்பித்தது.

அஸிமுதீன் குறித்து நண்பர்கள் சிலர் கணித்தது சரிதான் என்றும் அதில் உண்மை இருப்பதையும் உணர்ந்தேன்.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருநாள் என் வீட்டை தேடி அஸிமுதீன் வந்தார்.

ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றார்.

என்னால்தான் அந்த பணியை செய்து முடிக்க முடியும் என தனது பழைய டெக்னிக்கை என் முன் வைத்தார்.

அமைதியாக பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த நான் பின்னர் எரிமலையாக சீறி வெடித்தேன்.

அவமானத்தில் தலை குனிந்து சென்ற அஸிமுதீன் மீண்டும் என்னிடம் நட்பை வளர்க்க பல முறை முயன்றார்.

ஆனால் அதெல்லாம் வீணாகவே முடிந்தது.

காரியம் முடிந்ததும் கழற்றி விடும் இதுபோன்ற நபர்களை நாமும் கழற்றி விடுவதுதான் சரியான முடிவாக இருக்கும்.

இதுதான் அஸிமுதீன் மூலம் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த படிப்பினை.

ஊடகத்துறையிலும் இதுபோன்ற ஏராளமான நபர்களை நான் தற்போது சந்தித்து வருவது வேறு விஷயம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.