Thursday, August 31, 2023

சிந்தனைகள்....!

 அழகான, நிம்மதியான வாழ்க்கைக்கு பயன்படும் அழகிய சிந்தனைகள்....!


உழைப்பதை ஒருபோதும் நிறுத்தி விடாதீர்கள். ஏனென்றால், உழைப்பு மட்டும் தான் உங்கள் மரியாதையை அடுத்தவர்களிடம் உயர்த்திக் காட்டும்.

================

Psychology says people who like the colour black have the most colourful minds. 

What say you?=

================

Some things take time. Stay patient and stay positive. Things will get better.

===================

Behind every delay, there's goodness.

===================

 If you improve by 1% every day, within a year you'll have improved by 365%.

=======================

Direction is more important than speed.

=====================

 Surround yourself with only people, who are going to lift you higher.

=====================

எப்பொழுது முடிவுகளை நாமே எடுக்க பழகுகின்றோமோ, அப்பொழுது தான் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் நமக்குள் பிறக்கும்.

======================

 Sometimes losing a battle shows you how to win the war.

========================

Memories take us back, dreams take us forward.

=======================

Lessons in life will be repeated, until they are learned.

=========

Bad times always let you meet good people.

=================

முட்டாள் பழி வாங்க துடிப்பான். புத்திசாலி மன்னித்து விடுவான். அதி புத்திசாலி, அந்த இடத்தில் இருந்து விலகி விடுவான்.

====================

A man who is master of patience is a master of everything.

=======================

சில அவமானங்கள் நம்மை அழ வைத்தாலும்,  பின்னாளில் நம் வாழ்க்கையை அழகாக, வலிமையாக மாற்றும்.

===================

Do not get upset with people or situations, both are powerless without your reaction.

==============

 Your future starts today, not tomorrow.

===================

ராகுல் காந்தி பேட்டி...!

மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய கருத்து....



மஹபூபா முப்தி பேட்டி...!

மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட காஷ்மீரின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மெஹபூபா முப்தி அளித்த பேட்டி....



தேசியவாத காங்கிரஸ் கருத்து....!

மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் கூட்டணியின் அவசியம் குறித்து விளக்கம்....



பஞ்சாப் முதலமைச்சர் கருத்து...!

மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டபஞ்சாப் முதலமைச்சர், இந்தியா கூட்டணி குறித்து கூறிய கருத்து.... 


திருமாவளவன் கருத்து...!

மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அளித்த பேட்டி..




ராஜா பேட்டி....!

மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ராஜா, செய்தியாளர்களிடம் கூறிய கருத்து....



சீதாராம் யெச்சூரி கருத்து...!

மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அளித்த பேட்டி......



பீகார் துணை முதல்வர் பேட்டி...!

மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பீகார் துணை முதலமைச்சர் அளித்த பேட்டி...



.

லாலு பிரசாத் யாதவ் கருத்து....!

மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்களின் 
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட 
ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர்  
லாலு பிரசாத் யாதவ் கூறிய கருத்து....


 

மும்மைபயில் இந்தியா கூட்டணி ஆலோசனை...!

இந்தியா கூட்டணி தலைவர்களின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்று (31.08.2023 மற்றும் 01.09.2023) நடைபெற்றது. 

இதில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த  தலைவர்கள் கலந்துகொண்டனர். 



Wednesday, August 30, 2023

அஞ்சும் என்.டி.ஏ.....!

இந்தியாவை கண்டு அஞ்சும் என்.டி.ஏ.....!


இந்திய பாரம்பரியம் மற்றும் ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தையும் குழித்தோண்டி புதைத்துவிட்டு, நாட்டில் உள்ள எல்லா தரப்பு மக்களும் பாதிப்பு அடையும் வகையில் கடந்த 9 ஆண்டு காலமாக ஒன்றியத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு, சமூகங்களுக்கு இடையே வெறுப்பு விதைப்பு என பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் தலைவிரித்து ஆடும் நிலையில், அதற்கு எந்தவித தீர்வையும் காண பாஜக அரசு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, அனைத்துப் பிரச்சினைகளையும் கண்டும் காணாமல் இருந்து வருகிறது. இதற்கு மணிப்பூர், அரியானா மாநிலங்களில் ஏற்பட்ட வன்முறைகளை உதாரணங்களாக கூறலாம். இத்தகைய சூழ்நிலையில், நாடு மற்றும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இந்த இந்தியா கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், அதனைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களுரூவிலும் நடைபெற்றது. இந்தியா கூட்டணி தலைவர்களின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் இன்றும் நாளையும் (ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில்) மும்பையில் நடைபெறுகிறது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.  இதற்காக சிறப்பான ஏற்பாடுகளை மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் செய்துள்ளனர். இந்த கூட்டத்தில் 26 கட்சியுடன் மேலும் சில கட்சிகளும் இணைந்து கலந்துகொள்ளும் என சரத்பவார் தெரிவித்துள்ளார். 

பாஜகவிற்கு உருவானது பயம்:

இந்தியா கூட்டணியின் செயல்பாடுகளை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தற்போது நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதைக் கண்டு அச்சம் அடைந்து வருகிறது. விரைவில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எங்கு தங்களுக்கு தோல்வி ஏற்பட்டு விடுமோ என்ற பயம், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு ஏற்பட்டு இருப்பதை அவர்களின் பேச்சுகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் நன்கு அறிய முடிகிறது. 

இந்தியா கூட்டணி குறித்தும் அதன் தலைவர்கள் குறித்தும் தரம் தாழ்ந்த விமர்சனம், இது ஊழல் கூட்டணி, குடும்ப அரசியல் செய்யும் கூட்டணி என பல்வேறு விமர்சனங்களை பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செய்து வருகின்றன. ஆனால் தங்கள் நிலை குறித்து அவர்கள் மறந்துவிட்டு, இந்தியா கூட்டணி தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். 

ஊழல் குறித்து பேச தகுதியில்லை:

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் மீது, அதன் தலைவர்கள் மீது ஊழல் குறித்து பேசிய பாஜகவிற்கு எந்த தகுதியும் இல்லை என அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். சிஏஜி அறிக்கையில் பாஜக ஆட்சி ஊழல் ஆட்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், ஊழல் பெருகிவிட்டது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். ஆயுஷ்மான் பாரத் திட்டம், விமான வடிவமைப்பு திட்டம், சுங்கச்சாவடி திட்டம் என 7 திட்டங்களில் ஊழல் நடைபெற்று இருப்பது வெளிச்சத்திற்கு வந்து இருப்பதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின், சி.ஏ.ஜி. அறிக்கைப்படி ஒன்றிய அரசு துறைகளில் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். எனவே ஊழல் குறித்து பேச பிரதமர் மோடிக்கும், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தகுதியில்லை என மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார். இதேபோன்று, காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இதன்மூலம் ஊழல் குறித்து பேச பாஜகவிற்கு அச்சம் ஏற்பட்டு வருகிறது என்றே கூறலாம். 

வாரிசு அரசியல்:

திமுக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் குறித்து பேசும் பிரதமர் மோடி, அக்கட்சிகள் வாரிசு அரசியல் செய்து வருவதாக அடிக்கடி குற்றம்சாட்டி வருகிறார். வாரிசு அரசியல் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் இருந்து வருகிறது என்பதை அவர் மறந்துவிட்டு, விமர்சனம் செய்கிறார். ஏன், தன்னுடைய பாஜக கட்சியில் கூட வாரிசு அரசியல் தொடர்கிறது என்பதை பிரதமர் மறந்துவிடுகிறார். பாஜக தன்னை வாரிசு அரசியல் இல்லாத கட்சி என்று சொல்லிக் கொள்கிறதே தவிர, அக்கட்சியில் அங்கம் வகிக்கும் மூத்த தலைவர்களில் பலர், தங்களுடைய வாரிசுகளை அரசியல் வாரிசுகளாக்கி அழகு பார்த்து வருகின்றனர். 

பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான விஜயராஜ சிந்தியாவின் வாரிசுகள் இன்றுவரை ராஜஸ்தான் அரசியலிலும், மத்தியிலும் ஆக்கிரமித்து வருகின்றனர். இந்த வாரிசைத் தவிர, முன்னாள் முதல்வர்கள் கல்யாண் சிங், ராஜ்நாத் சிங், பிரேம்குமார் தூமல், சிவ்ராஜ் சிங் சௌஹான், எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, வீரேந்திர சக்லேச்சா. ரமண் சிங் ஆகியோரின் வாரிசுகள் பாஜகவில் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். அதுபோல் தேவேந்திர பட்னாவிஸ், யோகி ஆதித்யநாத், பெமா காண்டு ஆகியோரின் குடும்ப வாரிசுகளும் பாஜகவில் கோலோச்சி வருகின்றனர். இப்படி பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. எனவே இனி வாரிசு அரசியல் என்று கூறி எதிர்க்கட்சிகள் மீது பாஜக விமர்சனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

விலைவாசி, வேலையில்லா திண்டாட்டம்:

நாட்டில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு அனைத்து அத்தியாவசிப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. அண்மையில் கிடைத்த புள்ளிவிவரங்களின்படி, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 65 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதேபோன்று படித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வுகளை காண ஒன்றிய பாஜக அரசும் அதன் தலைவர்களும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதனால் மக்கள் மிகுந்த கோபத்தில் இருப்பதை சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்கள் மூலம் நன்கு அறிந்துகொள்ள முடிகிறது. 

தோல்வி பயத்தால் விலை குறைப்பு:

இந்தாண்டு இறுதிக்குள் நடக்க இருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடையும் என முதல்கட்ட கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், மக்களின் கோபத்தை குறைக்க வேண்டும் என முடிவு செய்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் வரை குறைத்து அதை உடனடியாக அமல்படுத்தியுள்ளனர். 

இதுகுறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தோல்வி பயமே, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்க முக்கிய காரணம் என விமர்சனம் செய்துள்ளார். இதேபோன்று, கருத்து கூறியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணி இரண்டு கூட்டங்களை நடத்திய நிலையில் சிலிண்டர்  விலை குறைக்கப்பட்டு இருப்பது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார். 

ஆயிரத்து 200 ரூபாய் சிலிண்டர் விலையை உயர்த்திவிட்டு, வெறும் 200 ரூபாய் வரை குறைத்து இருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என தேசியவாத காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. சிலிண்டர் விலை குறைப்பு தேர்தலுக்கான அறிகுறி என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்  விமர்சித்துள்ளார். தோல்வி பயத்தால் இனி வரும் நாட்களில் சமையல் எரிவாயு சிலிண்டரை இலவசமாக கூட பாஜக வழங்கும் என சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கிண்டல் செய்துள்ளார். 

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைத்ததன் மூலம், மக்களின் கோபம் தணியும் என எதிர்பார்த்த பாஜகவிற்கு, அதனால் மக்கள் மேலும் கோபம் அடைந்து பாஜகவையும் ஒன்றிய அரசையும் தாக்கி கருத்து தெரிவித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பாஜக தலைவர்கள் விழி பிதுங்கி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்: 

நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் கோபத்தை சம்பாதித்துள்ள பாஜக, கடந்த ஒன்பது ஆண்டு காலத்தில் எந்தவித வளர்ச்சிப் பணிகளையும் செய்யாததால், வரும் தேர்தல்களில் அதை மக்களிடம் கூறி வாக்குகளை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, மத ரீதியாக மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்து அதன்மூலம், அரசியல் லாபம் அடைய பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அத்துடன், மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என ஆசையுடன் போலியான கருத்துக் கணிப்புகளை தங்களது ஆதரவு ஊடகங்கள் மூலம் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. 

இந்நிலையில், பாஜகவிற்கு எதிரான மக்கள் அலையை இந்தியா கூட்டணி சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு, தன்னுடைய பணிகளையும் செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மாறுதலுக்கான வாய்ப்பை இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் நன்கு உணர்ந்துகொண்டு, அதன்படி, தங்களுடைய பணிகளை அமைத்துக் கொண்டு, தொலைநோக்கு செயல்திட்டங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்க வேண்டும். சுயநலம், ஈகோ ஆகியவற்றை கைவிட்டு விட்டு, நாட்டின் நலன் மற்றும் நாட்டில் ஜனநாயக நெறிமுறைகள் மீண்டும் மலர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். 

இந்தியா கூட்டணிக்கு தென்மாநிலங்களில் மட்டுமல்லாமல், தற்போது வட மாநிலங்களிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நாடு முழுவதும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த விழிப்புணர்வையும், பெருகிவரும் ஆதரவையும் இந்தியா கூட்டணி தலைவர்கள் நன்கு உணர்ந்துகொண்டு, அதனை சரியாக மற்றும் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாடு முழுவதும் இந்தியா கூட்டணி குறித்து மக்கள் மத்தியில் ஓர் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். இதன்மூலம் நிச்சயம் நாட்டில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் மாற்றம் ஏற்படும் என்பது உறுதி. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


உத்தவ் தாக்கரே விமர்சனம்...!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு 200 ரூபாய் குறைத்தது குறித்து கருத்து கூறியுள்ள சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, கூடிய விரைவில் சமையல் எரிவாயு சிலிண்டரை இலவசமாக கூட பாஜக வழங்கும் என விமர்சனம் செய்தார். 

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அவர் கூறினார். 



ராகுல் காந்தி பெருமிதம்...!

கர்நாடக மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.2,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உரை. காங்கிரஸ் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பெருமிதம்.



மாதம்தோறும் ரூ.2,000 வழங்கும் திட்டம்...!

கர்நாடகாவில் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.





Tuesday, August 29, 2023

இணையதள அடிமை....!

கோடி நன்மைகளை வாரி வழங்கும் இணையதளங்களுக்கு எளிதில் அடிமையாகும் போக்கு இளைஞர்களிடையே தற்போது அதிகரித்துள்ளது. 

இணையதளங்களில் மூழ்கி கிடக்கும் இளைஞர்களால், குடும்ப உறவுகள் சீர்குலைந்து,  மன நோய்க்கும். ஆளாகும் நிலை உருவாகிறது.  

வீட்டில் இருந்தபடியே பயணச்சீட்டு பதிவு! வெளிநாட்டு  நண்பர்களுடன் உரையாடல்!! கை நுனியில் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள்!!! 

இப்படி, கோடி நன்மைகளை வாரி வழங்குகின்றன நவீன இணையதளங்கள். இது மட்டுமல்லாமல், கணினி விளையாட்டு முதல், புதிய தொழில்நுட்பம் வரை,  பல தகவல்கள் இணையதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. 

இதனால், மாணவர்கள்,  இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் தன்வசமாக்கியுள்ளது இணையதளம். 

வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி பெட்டிகள் என்ற நிலை மாறி தற்போது இணையதளங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன. 

மடிக்கணினி, கைப்பேசியில் இணையதளம்  என்ற நவீன  தொழில் நுட்ப வளர்ச்சி, இளைஞர்களை சுண்டி இழுத்து பல மணி நேரம் இணையதளத்திலேயே மூழ்கச் செய்கிறது.  

இதனால், குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பு குறைந்து, உறவுகள் சீர்குலைந்து போக இணையதளம் முக்கிய காரணியாக அமைந்து விடுகிறது.

இணையதளங்களின் வசதியால் கவரப்பட்ட இளைஞர்கள், தற்போது அதற்கு அடிமையாகி வருகின்றனர். 

பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் ஒருவர், அண்மையில் நடத்திய ஆய்வில், உலக அளவில் 20 விழுக்காட்டினர் இணையதளங்களுக்கு அடிமையாகிய இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நீடித்தால் மிகப் பெரிய விபரீதங்களை ஏற்படும் என மனநல வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். 

அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து என்ற பொனமொழியை மனதில் ஏற்றிக் கொண்டு இணையதளங்களை பயன்படுத்த வேண்டும். 

இதன்மூலம் மட்டுமே, இணையதள பலன்களை அனுபவித்து, மிகப் பெரிய ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம். 

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு....!

ஒன்றிய பாஜக ஆட்சியில் ஐந்து ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலைகள் 65 சதவீதம் உயர்வு....!

ஆய்வில் பரபரப்பு தகவல்கள் வெளியீடு....!

ஒன்றியதில் பாஜக ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருவதாக கூறிக் கொள்கிறது. விலைவாசி கட்டுக்குள் இருப்பதாகவும், மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், ஒன்றிய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், உண்மையில் அப்படிப்பட்ட நிலை நாட்டில் இல்லை. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், அனைத்து வகையான அத்தியாவசி உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

ஆய்வில் அதிர்ச்சி தகவல்:

நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலைகள், நகர்புற, கிராமப்புற ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் பணியாளர்களின் ஊதியம் ஆகியவை குறித்து ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள் துறை, தேசிய தோட்டக்கலை வாரியம், காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு உள்ளிட்ட அமைப்புகள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளன. இந்த ஆய்வில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உணவின் விலை 65 சதவீதம் உயர்வு:

கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் வீட்டு உபபோயத்திற்காக பயன்படுத்தப்படும் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக, துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள், உப்பு, எண்ணெய் வகைகள், வெங்காயம், இஞ்சி, தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள், கோதுமை மற்றும் மைதா மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 65 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஆய்வு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக நாட்டில் உள்ள அனைத்து நகரங்களிலும் உள்ள உணவு விடுதிகளில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளின் விலைகளும் தாறுமாறாக அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆறுபது ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அளவு சாப்பாடு தற்போது நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று, எட்டு ரூபாய் முதல் 10 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்த தேநீர், தற்போது 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனையாகிறது. பிற உணவு வகைகளின் விலைகளும் அதிரடியாக உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. 

மேலும் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துவிட்டன. ஆனால் அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்த ஒன்றிய பாஜக அரசு எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என பல்வேறு தரப்பினர் வேதனை தெரிவித்து வருகின்றனர். 

ஊதிய உயர்வு 37 சதவீதம் மட்டுமே:

கடந்த ஐந்து ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்த அளவுக்கு, மக்களின் வருவாய் அதிகரிக்கவில்லை என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நகரப்புற மற்றும் கிராமப்புற ஊழியர்களின் ஊதியம் வெறும் 37 சதவீதம் அளவுக்கு மட்டுமே உயர்ந்துள்ளது. இதேபோன்று, மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் ஊதியம் கடந்த 5 ஆண்டுகளில் 28 சதவீதம் அளவுக்கு மட்டும் உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, ஊதியம் உயர்த்தப்படாததால், நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், தங்களுடைய அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் திகைத்து வருகிறார்கள். 

குறைந்த வருமானம் காரணமாக நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள், சமநிலையான அல்லது ஆரோக்கியமான உணவை உண்ண முடியாத நிலையில் இருந்து வருகின்றன. பல குடும்பங்கள் நாள்தோறும் மூன்று வேளை உணவை உண்ணும் நிலையில் இல்லை என்பதும் இதன்மூலம் தெரியவந்துள்ளது. 

விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும்:

தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசியால் பெரும் பாதிக்கப்பட்டு இருப்பது ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் என்பது இந்த தரவுகள் மூலம் உறுதியாக தெரியவருகிறது. உயர்ந்து வரும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களின் விலைகளையும் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து கூறியுள்ளனர். அத்துடன், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, ஊதியமும் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் நகர்புற, கிராமப்புற ஊழியர்கள் மற்றும் மாத சம்பளம் பெறும் பணியாளர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஊதிய உயர்வு இல்லையென்றாலும், விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாக இருந்து வருகிறது. 

(குறிப்பு: தி இந்து ஆங்கில நாளிதழில் வந்த டேடா பாயிண்ட்யை (தரவு புள்ளி)அடிப்படையாக கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது)

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


ஓர் சிறப்பு ரிப்போர்ட்....!

ராஜஸ்தானில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முன்மாதியாக திகழும் துங்கர்பூர் மாவட்டம்....!

- ஓர் சிறப்பு ரிப்போர்ட் -

ஜார்கண்ட், பீகார், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் பிற மாநிலங்கள் உட்பட நாட்டின் ஏழ்மையான பகுதிகளில் உள்ள குழந்தைகள் கடத்தப்படுவது ஒரு ஆபத்தான பிரச்சனையாக இருந்து வருகிறது. இப்படி கடத்தப்படும் குழந்தைகளை வைத்துகொண்டு பல்வேறு சமூக விரோத செயல்களில் ஒரு கும்பல் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதனால், இளம் சிறார்களின் வாழ்க்கை சூனியமாகி விடுகிறது. 

யுனிசெஃப் முயற்சி:

குழந்தைகள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தி அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற யுனிசெஃப் அமைப்பு, மாநில அரசுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவையாளர்களுடன் இணைந்து அயராது உழைத்து வருகிறது. இந்த பணியில் நிறைய வெற்றிகளை யுனிசெஃப் அமைப்பு கண்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு வெற்றி கதை ராஜஸ்தானின் துங்கர்பூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. 

குழந்தை கடத்தல் - துங்கர்பூர் மாவட்டம்:

துங்கர்பூர், ராஜஸ்தானின் தெற்கே, குஜராத் எல்லையில் அமைந்துள்ளது. துங்கர்பூரில் சுமார் 15 லட்சம் பேர் வாழ்கின்றனர். மாவட்டத்தின் மக்கள் தொகையில் 71 சதவீதம் பேர் பட்டியல் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஏழ்மையை பயன்படுத்தி துங்கர்பூரில் இருந்து குழந்தை கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. 

குஜராத், துங்கர்பூர் பகுதிக்கு இடையே உள்ள எல்லைக்கு அருகாமையில் இருப்பதால், குழந்தை கடத்தல் எப்போதும் அங்கு கவலைக்குரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. குஜராத்தி வயல்களில் வேலை செய்ய ஒப்பந்தக்காரர்கள் அல்லது குழந்தை கடத்தல்காரர்களின் உதவியுடன் குழந்தைகள் குஜராத்திற்கு கடத்தி செல்லப்படுகிறார்கள். 

குழந்தைகள் மீட்பு திட்டம்:

இந்நிலையில், யுனிசெஃப்,  மற்றும் மாநில அரசு, சமூக காவல் துறையின் உதவியுடன் குழந்தை கடத்தல் அச்சுறுத்தல் தற்போது தடுக்கப்பட்டுள்ளது. குழந்தை மீட்புத் திட்டத்தில் யுனிசெஃப் அமைப்பு, ஆசிரியர்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வத் தொண்டர்களை ஈடுபடுத்தியது.

குழந்தைகள் கடத்தப்பட்டு, பல்வேறு பணிகளில் ஈடுபட வைப்பதை தடுக்க யுனிசெப்பின் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு ஆலோசகர் திருமதி. சிந்து பினுஜீத் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்கு அவர் தனது நிறைய நேரத்தை செலவிட்டார். சமூக தொண்டு நிறுவனங்கள் மற்றும் காவல்துறை இணைந்து செயல்பட்டால்,  குழந்தை கடத்தலைத் திறம்பட தடுத்து நிறுத்த முடியும் என சிந்து பினுஜீத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கையால், கடத்தப்பட்ட குழந்தைகள் குறுகிய காலத்திற்குள் வீடு திரும்பி இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

வறுமை காரணமாக பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப தயாராக உள்ளதாகவும், அதன் காரணமாக குழந்தை கடத்தல் அதிகரிக்கிறது என்றும் சிந்து பினுஜீத் வேதனை தெரிவித்துள்ளார். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிறது என்று தெரிவித்துள்ள அவர், குழந்தை கடத்தல் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதில் உள்ளூர் காவல்துறை நல்ல பங்கை ஆற்றி வருகிறது என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

யுனிசெஃப் மற்றும் போலீஸ் படை இரண்டும் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், தன்னார்வத் தொண்டர்கள் குடும்பங்களைத் உதவுவதற்கும், பாதுகாப்பதற்கும் சேவை ஆற்றி வருகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

விழிப்புணர்வு பயிலரங்குகள்:

குழந்தை கடத்தல் அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த யுனிசெஃப் மற்றும் காவல்துறை மூலம் பயிலரங்குகளும் நடத்தப்படுகின்றன. துங்கர்பூர் மாவட்டத்தின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதில் மாநில அரசு மற்றும் யுனிசெஃப் தனி கவனம் செலுத்தி வருகிறது. சுகாதார பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  கூட்டு மற்றும் நீடித்த முயற்சிகள் காரணமாக, இப்பகுதியில் பெண் குழந்தைகளின் சுகாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிரசவங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் குழந்தை இறப்பும் குறைந்துள்ளது. 

யுனிசெஃப் அமைப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் போன்ற மருத்துவ வல்லுநர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்து, துப்புரவுப் பணியாளர்களுக்கு, மாதாந்திர அடிப்படையில் மற்றும் தேவைக்கேற்ப, மருத்துவமனை ஊழியர்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறது.  கூடுதலாக தொழில்நுட்ப உதவியை  யுனிசெஃப் வழங்கியதன் மூலம் இந்த மாவட்டம் மாநில அளவில் இன்று விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் குழந்தை கடத்தலுக்கு புகழ்பெற்ற இருந்த  துங்கர்பூர் மாவட்டம் தற்போது பல நிலைகளில் முன்னேற்றம் கண்டு வளர்ச்சி பெற்ற மாவட்டமாக நடைபோடுகிறது. இதற்கு  யுனிசெஃப் மேற்கொண்ட தொடர் முயற்சிகளே முக்கிய காரணம் என உறுதிப்பட கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

அரியானாவில் வெறுப்பு பிரச்சாரம்...!

அரியானாவில் முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு பிரச்சாரம்....!

அரியானா மாநிலம் நூஹ்வில் கடந்த ஜுலை 31ஆம் தேதி விஸ்வ இந்து பரிஷத் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த திட்டமிட்ட வன்முறையை தொடர்ந்து, ஏற்பட்ட கலவரத்தில் முஸ்லிம்கள் மீது குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் மீது பாசிச அமைப்புகள் தாக்குல்களை நடத்தின. மேலும் முஸ்லிம்களின் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பாசிச அமைப்புகள் நடத்திய இந்த வன்முறை வெறியாட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளிவாசல் இமாம் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைக்குப் பிறகு, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக அரசு நடவடிக்கைகளை எடுத்து, அவர்களின் வீடுகளை புல்டோசரால் இடித்து தள்ளியது. இதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பிறகு, இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது. ஆனால், பாசிச அமைப்புகளின் வெறுப்பு பேச்சுகள், பிரச்சாரங்கள் இன்னும் நிறுத்தப்படவில்லை. இதனால் முஸ்லிம்கள் மத்தியில் பீதியும், அச்சமும் இன்னும் நீங்கவில்லை. 

அச்சத்தால் வெளியேறும் முஸ்லிம்கள்:

அரியானா மாநிலத்தில் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஏராளமான புலம் பெயர்ந்த முஸ்லிம் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் அவர்களை இப்போது பாசிச அமைப்புகள் குறிவைத்து மிரட்டி வருகின்றன. புலம்பெயர்ந்த முஸ்லிம் தொழிலாளர்களுக்கு எதிராக பகிரங்கமாக வெறுப்பு பரப்பப்படுகிறது. இதனால் அரியானாவில் உள்ள வெளிமாநில முஸ்லிம் தொழிலாளர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். 

பாசிச அமைப்புகளின் மிரட்டல் காரணமாக, பீதி அடைந்துள்ள பீகாரை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர் இம்ரான் அலி, எனது குடும்பத்திற்கு பணம் தேவையில்லை. நான் பாதுகாப்புடன் கிராமத்திற்கு திரும்பினால் போது என்று குடும்பத்தினர் விரும்புகிறார்கள். எனவே, நான் குருகிராமில் இருந்து தப்பி சொந்த கிராமத்திற்கு வந்துவிட்டேன் என வேதனையுடன் கூறியுள்ளார். வன்முறை நடந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, குருகிராமமுக்குத் திரும்பி வந்து தனது உடைமைகளை சேகரித்து, மீண்டும் சொந்த ஊருக்கு அலி புறப்பட்டார். இதேபோன்று ஏராளமான முஸ்லிம்கள், அரியானாவில் இருந்து தப்பித்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

பாஜக மீது குற்றச்சாட்டு:

நூஹ்வில் வசிக்கும் ஒரு முஸ்லிம், பாஜகவினர் தங்கள் பகுதிகளில் முஸ்லிம்களைக் குறிவைத்து கலவரங்களை ஏற்படுத்தும் என தான் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்ததாக கூறியுள்ளார். அது இப்போது உண்மையாகி இருப்பதாகவும், இதன்மூலம் முஸ்லிம்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். 

நூஹ்வில் வசிக்கும் இந்துக்கள் கலவரத்தில் ஈடுபடவில்லை என்றும் இங்கு முஸ்லிம்களும், இந்துக்களும் நல்ல புரிதலுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ள அந்த முஸ்லிம் முதியவர், வெளியாட்களை கொண்டு வந்து, பேரணியின்போது, முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறான வார்த்தையும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

இதனால், நூஹ் வன்முறை குருகிராம் வரை பரவியது என்றும் வன்முறை கும்பல் தெருக்களில் புகுந்து, பாசிச முழக்கங்களை எழுப்பி, முஸ்லீம் குடிசைகள் மற்றும் வணிகங்களை குறிவைத்தது என்றும் முஸ்லிம்கள் கூறியுள்ளனர். ஆனால் கலவரத்தை தடுக்க குருகிராம் போலீசார் தவறிவிட்டனர் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

தொடரும் வெறுப்பு பிரச்சாரம்:

இந்த கலவரத்திற்குப் பிறகு, இந்து அமைப்புகள் தங்களுக்கு எதிராக பகிரங்கமாக வெறுப்பை பரப்பி வருகின்றன. நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில், முஸ்லிம்களைப் புறக்கணிக்க வேண்டும் என இந்துக் குழுக்கள் மிரட்டி வருகின்றன. முஸ்லிம் கடைகளில் எதையும் வாங்குவதில்லை என்றும், வீடுகளை வாடகைக்கு விடுவதில்லை என்றும் பாசிச அமைப்புகள் வெறுப்பை பரப்பி வருகின்றன. 

ஆனால், அரியானா காவல்துறையும் நிர்வாகமும் முஸ்லீம்களை பாதுகாக்க தவறி விட்டன என அச்சம் காரணமாக நூஹ்வில் இருந்து வெளியேறிய பீகாரை சேர்ந்த அகமது கான் வேதனை தெரிவித்துள்ளர். இந்த நாட்டில் உள்ள அனைத்தும் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று இந்து பாசிச அமைப்புகள் நினைக்கிறார்கள் என்றும்,  காவல்துறையும், நிர்வாகமும் அமைதியாக வேடிக்கை பார்ப்பதால்,  முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் எந்த உரிமையும் இல்லை என்பது போல உள்ளது என்றும் அகமது கான் கூறியுள்ளார். 

இந்நிலையில், ஜமியத்துல் உலமா-இ-ஹிந்த் நடத்திய ஆய்வில், அஞ்சுமன் இஸ்லாம் மஸ்ஜித் குருகிராம், மௌல்வி ஜமீல் வாலி மஸ்ஜித் சோஹ்னா, ஷாஹி ஜாமி மஸ்ஜித் பாரா கம்பா சோஹ்னா(, லக்கட்ஷா மஸ்ஜித் சோஹ்னா,  பஜார் வாலி மஸ்ஜித் ஹோடல், ஈத்கா மஸ்ஜித் ஹோடல், மதரஸா வாலி மஸ்ஜி பல்வால், பீர் கலி வாலி மஸ்ஜித் பல்வால், குப்தகஞ்ச் வாலி மஸ்ஜித் பல்வால்,  காளி மஸ்ஜித் பல்வால், ஹாஜி நிஜாம் வாலி மஸ்ஜித் பஸ் ஸ்டாண்ட் புல்வால், ரசூல்பூர் காவ்வால் வாலி மசூதி ஆகிய 13 மசூதிகள் மீது பாசிச அமைப்புகள் தாக்குதல் நடத்தி கடுமையாக சேதத்தை ஏற்படுத்தி இருப்பது அறிய முடிந்தது. 

விவசாய அமைப்புகள் எச்சரிக்கை:

அரியானாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை தொடர்ந்து இந்து, சீக்கிய மற்றும் முஸ்லிம் விவசாயிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இதில் பேசிய அனைத்து அமைப்புகளை சேர்ந்த விவசாயிகளும், முஸ்லிம்கள் எங்கள் சகோதரர்கள், இந்த நாட்டிற்கு சொந்தமானவர்கள், அவர்கள் மீது இனி தாக்குதல்களை நடத்துவதை அனுமதிக்க முடியாது. அப்படி பாசிச அமைப்புகள் செய்தால், விவசாயிகள் இனி வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என எச்சரிக்கை விடுத்தனர்.  பாசிச அமைப்புகளின் மிரட்டல்களால் அச்சம் அடைந்துள்ள அரியானா முஸ்லிம்களுக்கு, விவசாயிகளின் ஆதரவு கொஞ்சம் ஆறுதலையும் நிம்மதியையும் தந்துள்ளது என கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

டெல்லி பள்ளியிலும்.....!

டெல்லி பள்ளியிலும் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு....!

உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர், முஸ்லிம் மாணவரை சக மாணவர்களை வைத்து அடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கடும்  கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து தாம் தவறு செய்ததாக அந்த ஆசிரியை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவத்தின் வடு ஆறுவதற்குள்,  தலைநகர் டெல்லியிலும் முஸ்லிம் மாணவர்களை மதத்தின் அடிப்படையில் குறிவைக்கும்  சம்பவம் அரங்கேறியுள்ளது. 

டெல்லி அரசு பள்ளியில் நடந்த சம்பவம்:

கிழக்கு டெல்லியின் காந்திநகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கைலாஷ் நகரில் உள்ள சரோத்யா பால் வித்யாலயாவில், கடந்த 23ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நிலவில் சந்திரயான் - 3 வெற்றிகரமாக தரையிறங்கிய சந்தர்ப்பத்தில், பள்ளி ஆசிரியை ஹேமா குலாட்டி, முஸ்லிம் மாணவர்களை மதத்தின் அடிப்படையில் குறிவைத்து பேசியுள்ளார். மேலும், இஸ்லாத்தைப் பற்றி தவறாகப் பேசிய அவர், "நீங்கள் முஸ்லீம்கள் இல்லை, நீங்கள் இந்தியர்கள் அல்ல, சுதந்திரப் போரில் நீங்கள் எந்த ஆதரவையும் கொடுக்கவில்லை, நாடு விடுதலை அடைந்தபிறகும்  முஸ்லிம்கள் நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை, மனிதர்களாகிய நீங்கள் மிருகங்களை கொடூரமாக கொல்கிறீர்கள்" என சரமாரியாக தாக்கி பேசியது மாணவர்களை பெரும் அதிர்ச்சி அடையச் செய்தது. 

மாணவர்கள் வேதனை:

ஆசிரியையின் இந்த செயல் குறித்து பேசிய 9ம் வகுப்பு மாணவர் ஃபர்ஹான், “ இஸ்லாமிய புனித ஸ்தலங்கள் குறித்தும் ஆசிரியர் கெட்ட வார்த்தைகளை கூறியதாக தெரிவித்துள்ளார்.  இதனை சக மாணவர் இஷ்ராக்கும் உறுதிபடுத்தியுள்ளார். 

ஆசிரியையின் நடவடிக்கையால் கோபம் அடைந்துள்ள ஃபர்ஹானின் தந்தை முஹம்மது ஹாஷிம்,  "எங்கள் குழந்தைகளை நல்ல மனிதராக உருவாக்கவும், அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தவும் நாங்கள் பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால் இதுபோன்ற கல்வியை பள்ளியில் கொடுத்தால், குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என கேள்வி எழுப்பியுள்ளார். 

பெற்றோர்கள் கண்டனம்:

இதேபோன்று, பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவியின் தாயான கௌசர், “எனது இரண்டு குழந்தைகள் அந்த பள்ளியில் படிக்கின்றனர். ஆசிரியையின் செயலைக் கேட்டு நாங்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தோம். எங்கள் இஸ்லாம் மதத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் எப்படி அவர் அவதூறாக  பேசுவார் என்றும், எங்கள் மத நூல்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் குறித்து அவர் தவறான கருத்து தெரிவித்து இருப்பதால் நாங்கள் காயப்பட்டுள்ளோம் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த ஆசிரியை தண்டிக்கப்படாமல் போனால், மற்ற ஆசிரியர்களும் அவ்வாறே செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் மாணவர்களிடையே வேறுபாடுகளை உருவாக்கும் ஆசிரியரால் எந்தப் பயனும் இல்லை என்றும் கௌசர் வேதனை தெரிவித்துள்ளார். 

பெற்றோர்கள் போராட்டம்:

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் அப்பகுதி மக்கள் மற்றும் உள்ளூர் தலைவர் ஹசீபுல் ஹசனுடன் பள்ளிக்கு வெளியே போராட்டம் நடத்தி ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காந்திநகர் காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். அதன் பிறகு பள்ளி ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 153 ஏ (மதத்தின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295 ஏ (எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும் சீற்றம் செய்யும் வகையில் திட்டமிட்டு தீங்கிழைக்கும் செயல்கள்) ஆகியவற்றின் கீழ் ஹேமா குலாதி மீது வழக்குப் பதிவு செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். சட்டப்பிரிவு 298 கீழ் (மத நம்பிக்கைகள் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடன் வார்த்தைகளை உச்சரித்தல் போன்றவை) ஆசிரியர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்:

வகுப்பில் முஸ்லிம்கள் குறித்து ஆசிரியையால் சொல்லப்பட்ட விஷயங்கள் பயங்கரமானவை என்றும்  அர்த்தமற்றவை என்றும்  ஜமியத் உலமா டெல்லி மாநில தலைவரான மௌலானா அபித் காஸ்மி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லிம்கள் நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை என்று முஸ்லிம் மாணவர்களிடம் கூறிய அந்த ஆசிரியை கைது செய்யப்பட வேண்டும் என்றும் அந்த ஆசிரியையை பள்ளியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், ஆசிரியை ஹேமா குலாட்டி எந்தப் பள்ளியிலும் பணியில் சேர அனுமதிக்க கூடாது, அப்படி அனுமதித்தால், அந்த பள்ளியிலும் இதேபோன்று முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை கூறும் செயலில் அந்த  ஆசிரியை ஈடுபடுவார்  என்றும் என்றும் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Monday, August 28, 2023

அன்பு செலுத்துங்கள்....:!

எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள்....! எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்...!!

ஊடகத் தோழர்கள் மற்றும் பிற நண்பர்களுடனான இனிய நினைவுகள்...!!!



தமாஷ்.....!

இது கொஞ்சம் வித்தியாசமான விஷயம். 

வாழ்க்கையில், உங்களுக்குகூட ஏற்பட்டு இருக்கலாம். 

கல்லூரியில் படித்தபோது, நண்பருடன் சேர்ந்து ஒருநாள் சென்னைக்கு வந்திருந்தேன். 

இந்தி படங்கள் பார்க்கும் ஆர்வம் காரணமாக,  விடுமுறை நாட்களில் நாங்கள் இரண்டு பேரும்  இப்படி, சென்னைக்கு வந்து செல்வது வழக்கம். 

வீட்டில் கல்லூரியில் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு என பொய் சொல்லிவிட்டு சென்னைக்கு வந்து விடுவோம். 

புதிதாக ரில¦ஸ் ஆன இந்தி பாடத்தை பார்த்துவிட்டு திரும்பவும் ஊருக்கு கிளம்பி விடுவோம். 

இப்படிதான், ஒருநாள் சென்னைக்கு நண்பருடன் வந்திருந்தேன். 

இரண்டு பேரும் பாரீஸ் கார்னர் சென்றோம். 

பூக்கடை போலிஸ் ஸ்டேஷன் அருகே இருக்கும் பூக்கடை மார்க்கெட்டிற்கு நண்பர் என்னை அழைத்துச் சென்றார். 

அவருக்கு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என ஆசை ஏற்பட்டது. 

அந்த மார்க்கெட்டில் இருந்த ஒரு கடையில், பளபளப்பான ஆப்பிள்களை கூடையில் அடுக்கி வைத்திருந்தார் வியாபாரி ஒருவர். 

ஐந்து ஆப்பிள்களை கொண்ட ஒரு குவியல் என 10 குவியல்களை அடுக்கி வைத்திருந்த அந்த ஆப்பிள் வியாபாரி, ஒன்று பத்து ரூபாய், ஒன்று பத்து ரூபாய் என ஒரு குவியலை காட்டி கத்திக் கொண்டிருந்தார். 

நண்பருக்கு ஆர்வம் அதிகமானது. 

ஐந்து ஆப்பிள்கள். 10 ரூபாய்க்கு கிடைக்கிறது. 

வாங்கி ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டு, ஆப்பிள் வியாபாரியிடம் சென்றார். 

என்னப்பா ஆப்பிள் என்ன விலை என ஒரு குவியலை பார்த்து கேட்டார். 

10 ரூபாய் சார் என்றார் ஆப்பிள் வியாபாரி.

ஆப்பிள் நல்ல இருக்குமில்லே என திரும்ப கேட்டார் நண்பர். 

மிகச் சுவையாக இருக்கும் சார். இப்படிப்பட்ட ஆப்பிளை இதற்கு முன்பு நீங்கள் சாப்பிட்டு இருக்க முடியாது. 

இது ஆப்பிள் வியாபாரியின் பதில். 

நண்பர் ஐந்து குவியல்களை எடுத்து தன்னுடைய பையில் போட ஆரம்பித்தார். 

ஐந்து குவியல்களில் 25 ஆப்பிள்கள் இருந்தன. 

ஆப்பிள் வியாபாரியிடம் 50 ரூபாயை நீட்டினார் நண்பர். 

என்ன சார் 50 ரூபாய் கொடுக்கிறீங்க. 250 ரூபாய் கொடுங்க சார் என்றார் ஆப்பிள் வியாபாரி. 

நண்பருக்கு உடனே அதிர்ச்சி ஏற்பட்டது. 

என்னப்பா அநியாயம். ஒரு குவியல் 10 ரூபான்னா, 50 ரூபாதானப்பா கொடுக்கனும்.

ஒரு ஆப்பிள்தான் சார் 10 ரூபா. ஒரு குவியல் இல்லை என விளக்கம் சொல்ல ஆரம்பித்தார் ஆப்பிள் வியாபாரி. 

இதனால், நண்பருக்கும், ஆப்பிள் வியாபாரிக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் நடைபெற்றது. 

கடைசியாக 5 ஆப்பிள்களை நண்பரின் பையில் வலுக்கட்டாயமாக திணத்தார் அந்த ஆப்பிள் வியாபாரி. 

அதனை வாங்கிக் கொண்ட நண்பர், 50 ரூபாயை ஆப்பிள் வியாபாரிடம் கொடுத்து கோபத்துடன் என்னை நோக்கி வந்தார். 

எனக்கு உள்ளுக்குள் சிரிப்பு ஏற்பட்டது. 

அதை அடக்க முடியாமல் நண்பரிடம் வெளிப்படுத்தினேன். 

ஒரு குவியல் ஆப்பிளை வைத்துக் கொண்டு, 10 ரூபாய் என சொல்லி மக்களை மடையர்களாக மாற்றி, வணிகம் செய்யும் சென்னை வியாபாரிகள் குறித்து, நண்பருக்கு அப்போதுதான் கொஞ்சம், கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. 

இருந்தாலும், அந்த ஆப்பிள் வியாபாரியின் சதூரியமான வணிக நுணுக்கத்தை கண்டு இரண்டு பேரும் நீண்ட நேரம்  பேசி சிரித்தோம்.

இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கும் வாழ்க்கையில், குறிப்பாக சென்னையில் ஏற்பட்டிருக்கும் இல்லையா!

அனுபவம் எல்லாம் தமாஷ்தான். சிரியுங்கள். 

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

சென்னையில் நான் - 11....!

சென்னையில் ஊடகத்துறை நண்பர்களை, சகோதரர்களை  சந்தித்தபோது, அவர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு,....












எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

சென்னையில் நான் - 10...!

சென்னையில் ஊடகத்துறை நண்பர்களை, சகோதரர்களை  சந்தித்தபோது, அவர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு,....










எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

சென்னையில் நான் - 9...!

சென்னையில் ஊடகத்துறை நண்பர்களை, சகோதரர்களை  சந்தித்தபோது, அவர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு,....








எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

ஈட்டி எரிதலில் சோப்ரா சாதனை....!

2023 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எரிதலில் இந்திய வீரர் நீரவ் சோப்ரா தங்கம் வென்று சாதனை....!

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த சோப்ராவுக்கு எமது வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்...!!



Sunday, August 27, 2023

கொய்யா.....!


கொய்யாவின் மருத்துவ பலன்கள்….!

இயற்கை மனித இனத்திற்கு ஏராளமான அருட்கொடைகளை வாரி வழங்கியுள்ளது. அந்த அருட்கொடைகளில் ஒன்றுதான் கொய்யாப்பழம். கொய்யா மிகவும் சுவையான மற்றும் பயனுள்ள பழம். இதில் பல வகைகள் உண்டு. சில கொய்யாப்பழங்கள், வெளிப்புறமாக பச்சை நிறத்திலும், பச்சை மற்றும் வெள்ளை நிறத்திலும் அல்லது மஞ்சள் நிறத்திலும் இருக்கும். உள்ளே, கூழ் வெள்ளை, மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு. ஒரு வெளியில் பிரகாசமான சிவப்பு புள்ளிகள் மற்றும் உள்ளே மிகவும் கடினமான விதைகள் என பல வகையில் கொய்யாக்கள் உள்ளன.

ஒரு கொய்யா வெளியில் பச்சை மற்றும் வெள்ளை நிறத்திலும், சிவப்பு மற்றும் மெல்லிய விதைகள் உள்ளே இருக்கும். இந்தப் பழம் சுவையில் இனிப்பானது. இது 4 முதல் 12 சென்டி மீட்டர் அளவுள்ள தோற்றத்தில் வட்டமான அல்லது பேரிக்காய் வடிவில் உள்ளது. இதன் இலைகளை வாய் கொப்பளித்து அல்லது சாம்பலாக்கி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த சுவையான பழத்திற்கு இயற்கை அதன் சொந்த வாசனையையும் சுவையையும் அளித்துள்ளது. பல ஆரோக்கிய நன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த பழம் மற்ற பழங்களை விட முதன்மையானது. மேலும் இதை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால், அது நமது உணவில் ஆரோக்கியமான சேர்க்கையாக இருக்கும். பழுத்த கொய்யா சுவையில் இனிப்பாகவும், தொடுவதற்கு சற்று மென்மையாகவும் இருக்கும்.

சத்துக்கள் நிறைந்த கொய்யா:

கொய்யாவில் சர்க்கரை, நார்ச்சத்து, சோடியம், பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி ஆகியவை நிறைந்துள்ளன, இது நமது ஆரோக்கியத்தை நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. கொய்யா பயன்படுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைவதோடு, இந்த பழம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாகவும் இருப்பதால், இதை பயன்படுத்துபவர்கள் நமது இரத்தத்தில் உருவாகும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்தும் (ஃப்ரீ ரேடிக்கல்ஸ்) நம் உடலில் பல மோசமான நோய்களிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறார்கள்.


உணவுக்கு முன் கொய்யாப்பழத்தை சரியாக சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும், மேலும் அதில் உள்ள உணவு நார்ச்சத்து நம் வயிறு மற்றும் குடலுக்கு பயனுள்ளதாக இருக்கும், இதன் காரணமாக குடல் இயக்கம் மிதமானது மற்றும் இது நன்மை பயக்கும். மலச்சிக்கல் புகார். கர்ப்பிணிகள் இதைப் பயன்படுத்தினால், அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் சி, இரும்புச்சத்தை உடலில் உறிஞ்சுவதற்கு உதவும்.(நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்) ஏனெனில் இதில் வைட்டமின் சி மற்றும் பிற வைட்டமின்கள் உள்ளன. இதன் பயன்பாடு உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

சிவப்பு கொய்யா:


கொய்யா பழங்களில் சிவப்பு கொய்யாவும் உள்ளது, இது ஒரு சிறப்பு வாசனை, நிறம் மற்றும் சுவை கொண்டது. மேலும் இது கொய்யா சாற்றை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் விதைகள் நன்றாகவும் கூழ் போலவும் இருக்கும். ஒரு வகை கொய்யாவின் தோலின் வெளிப்புறத்தில் அனைத்து சிவப்பு புள்ளிகளும் இருந்தாலும் உள்ளே மிகவும் இனிமையாக இருக்கும். காட்டு கொய்யாக்கள் வெளிப்புறத்தில் கடினமானதாகவும், உள்ளே மிகவும் கடினமான விதைகளை கொண்டதாகவும் இருக்கும். கொய்யாவை ஆப்பிள் போல் சாப்பிடலாம். கொய்யாவுடன் சிறிது உப்பு, மிளகு அல்லது மசாலா சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொய்யா இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக உத்தரப் பிரதேசம்  மற்றும் மகாராஷ்டிராவில் அதிகமாக விளைகிறது.

கொய்யாவின் பலன்கள்:

கொய்யாப்பழத்தை உட்கொள்வதன் மூலம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இதைப் பயன்படுத்தலாம். கொய்யாவின் பயன்பாடு செரிமான அமைப்பை மேம்படுத்துவதோடு மலச்சிக்கலில் இருந்து பலனளிக்கும். இதில் வைட்டமின்கள் இருப்பதால் கண்பார்வைக்கு பலன் கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்திற்கு கொய்யா பயனுள்ளதாக இருக்கும்.

-          கிரேக்க மருத்துவர் அக்லக் அகமது

-          தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.....!

 மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சிறந்த வழி என்ன....?

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ, ஒருவருக்கு நிறைய செல்வமும் வசதியும் இருக்க வேண்டிய அவசியமில்லை. செல்வத்தால் உலகில் உள்ள அனைத்தையும் வாங்க முடியாது. செல்வம் மட்டுமே திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றியிருந்தால், வளமான குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே சண்டைகள் இருக்காது. கணவன்-மனைவி இருவரும் விவாகரத்து செய்ய மாட்டார்கள். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு செல்வத்தைத் தவிர வேறெதுவும் தேவையில்லை என்று மாறிவிடும்.

எதிர்பார்ப்புகள்:

பொதுவாக இல்லத்தரசிகள், தங்கள் கணவரிடம் இருந்து எந்த ஒரு விலையுயர்ந்த பரிசையோ செல்வத்தையோ விரும்பது இல்லை. மாறாக, பணி முடிந்து கணவன் வீட்டிற்குள் நுழையும் போது, மகிழ்ச்சியான மனநிலையுடனும் சுபாவத்துடனும் திரும்ப வேண்டும் என  அவர்கள் விரும்புகிறார்கள். அதன்மூலம் வீடு முழுவதும் மகிழ்ச்சி நிறைந்த குழந்தைகளும் புதிய உற்சாகத்துடன் இருப்பார்கள் என மனைவிமார்கள் விரும்புகிறார்கள். 

முடிந்தால், பிள்ளைகள் மற்றும் மனைவியின் ஒழுக்க மாண்புகள்,  அவர்களது அலங்காரம், உடை, பாவனையைப் பாராட்டி, அன்றைய தினத்தின் முழுத் துன்பத்தையும் மறந்துவிடும் வகையில் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் கணவன்மார்கள் வெளிப்படுத்த வேண்டும்.

அழகான எடுத்துக்காட்டு:

அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். "உங்களில் சிறந்த நபர். தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சிறந்தவராக இருப்பவர்தான்" இதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஹஸ்ரத் ஆயிஷா அவர்கள் நபிகள் நாயகத்தின் பண்புகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் மட்டுமின்றி தம் மனைவியுடனும் சிரித்து அன்பை வெளிப்படுத்தினார்கள்" என்று கூறியுள்ளார்கள். 

ஒரு முஸ்லிமோ அல்லது ஒரு மனிதரோ தனது சிரிப்பு, புன்னகை, உற்சாகம் மற்றும் கலகலப்பு ஆகிய பரிசுகளை மற்றவர்களுக்கு வழங்கி எப்போதும் அன்புடன் பழக வேண்டும். தனது அழகான இந்த செயல்கள் மூலம்,  மனைவி மற்றும் குடும்பத்தினர் இந்த பாக்கியத்தை பெறும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்திருக்கிறார்கள். 

கேலி, கிண்டல் வேண்டாம்:

பொதுவாக கேலி, கிண்டல் செய்பவர்களை மக்கள் விரும்ப மாட்டார்கள். அப்படி செய்வர்களை தங்கள் நண்பராக இருக்க யாரும் விரும்புவதில்லை. மாறாக, தார்மீக, மகிழ்ச்சியான, மற்றும் நல்ல குணமுள்ளவர்களை நண்பர்களாக ஆக்குவதன் மூலம் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். மேலும் அவர்களின் மகிழ்ச்சி, புத்துணர்ச்சி, புன்னகை ஆகியவற்றைக் கண்டு, மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். எனவே, கணவன் தன் மனைவியை மிகுந்த மகிழ்ச்சியுடனும் புத்துணர்ச்சியுடனும் புன்னகையுடன் சந்திப்பது அவசியமாகிறது. எந்த சூழ்நிலையிலும் கெட்ட கோபத்தைக் காட்டக்கூடாது.

ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்த்துவதில் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறியுள்ளது. எனவே கணவனும் மனைவிக்கு வாழ்த்து தெரிவிப்பதில் முனைப்பு காட்ட வேண்டும்.  நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் அனஸ் அவர்களிடம் கூறினார்கள்; "ஓ அனஸ்! நீங்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைந்தால், உங்கள் குடும்பத்தாரை வாழ்த்துங்கள். உங்கள் வாழ்த்து உங்களுக்கும் வீட்டிற்கும் ஆசீர்வாதமாக மாறும்". ஒரு வாழ்த்து எப்படி குடும்பத்தை மகிழ்ச்சி அடையச் செய்யும் என்பதற்கு இந்த நபிமொழியே ஓர் சிறந்த எடுத்துக்காட்டு என கூறலாம். 

இஸ்லாத்தில் கைகுலுக்கலும் முக்கியமானது. மனித உளவியல் மற்றும் பிற விஞ்ஞானங்களின்படி, கைகுலுக்கல் மூலம், ஒருவரின் கை மற்றொரு நபரின் கைக்கு வரும்போது, ​அவரது இதய உணர்வுகள் அனைத்தும் ஒருவருக்கொருவர் தெரியும். எனவே கைகுலுக்கிக்கொண்டே இருக்க வேண்டும். கைகுலுக்கல் என்பது காயங்களை மறைக்கும் கட்டு என்று கூறப்படுகிறது. கைகுலுக்கல் என்பது எரியும் காயங்களை குளிர்விக்கும் தைலம். எனினும் நவீன கலாச்சாரத்தில் நுழைந்து விடாமல், ஒவ்வொரு சூழ்நிலையிலும் இஸ்லாமிய வரம்புகளையும் போதனைகளையும் நாம் கவனித்தில் எடுத்துக் கொண்டு செயல்பட  வேண்டும்.

மனம் விட்டு பேச வேண்டும்:

கணவன்-மனைவி இடையே பிரச்சினைகள் வராமல் இருக்க இருவர் மத்தியில் நிகழும் உரையாடல் சிறப்பாக இருக்கும் என மனத்தத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். எனவே, மனைவியிடம் எப்போதும் மனம் விட்டு பேசி நல்லவராகவும், மகிழ்ச்சியாகவும், ஊக்கமளிப்பவராகவும் கணவன் இருக்க வேண்டும். 

நல்ல விஷயங்களைச் சொல்வது தர்மம். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், நீங்கள் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். முதலில், உங்கள் மனைவியிடம் மென்மையாகவும், அன்பாகவும், இனிமையாகவும் பேசுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஒரு பெண்ணின் மனநிலை மென்மையானது. அதனாலேயே மென்மையும் இனிமையுமான வார்த்தைகளால் மட்டுமே மனைவியிடம் பேச வேண்டும். வாக்கியங்கள் எப்போதும் அன்பால் நிறைந்ததாக இருக்க வேண்டும். உரையாடலின் பாணி பாராட்டப்பட வேண்டும். அதில் அவளுடைய அழகு பாராட்டப்பட வேண்டும். அவளுடைய கருணைக்கும் சேவைக்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டும். 

குடும்பத்திற்காக செலவழிக்க வேண்டும்:

ஒரு நல்ல மற்றும் சிறந்த கணவனின் குணங்களில் ஒன்று, அவர் தனது குடும்பம் மற்றும் மனைவியின் நியாயமான தேவைகளை அறிந்திருப்பது மட்டுமல்லாமல், புன்னகையுடனும் மகிழ்ச்சியுடனும் அவற்றை நிறைவேற்றுவதாகும். மேலும் அவற்றை நிறைவேற்றுவதில், எந்த வித கஞ்சத்தனம் செய்யாமல் வசதிக்கு ஏற்ப தாராளமாக இருக்க வேண்டும். இஸ்லாத்தில், மனைவி மற்றும் குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுதல், அவர்களுக்காக செலவிடுவது தர்மம் என்று அழைக்கப்படுகிறது. மனைவிக்கு செலவு செய்வது சமூகத் தேவை மட்டுமல்ல, வெகுமதியும் கூட என்பது தெளிவாகிறது

உரிமைகள் சமம்:

இஸ்லாத்தில் கணவன்-மனைவியின் உரிமைகள் சமம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்., ஏனென்றால் பரஸ்பர ஒத்துழைப்பும் அன்பும் திருமணமும் இருவரின் உரிமைகளும் அந்தஸ்தும் சமமாக இருக்கும்போது மட்டுமே உருவாகின்றன. குடும்பத்திற்காக கணவன் பணிக்கு செல்கிறான். மனைவி வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருக்கிறாள் என நினைப்பது தவறு. கூர்ந்து கவனித்தால், உண்மையில் அந்த வீட்டின் கட்டிடக் கலைஞரும், பொறுப்பாளரும் பெண் என்பது தெரியும். பெண்கள் எவ்வளவு வேலை செய்கிறார்களோ, அத்தனை பணிகளுக்கும் தனித்தனியாக பணியாளர்களை வைத்துக் கொண்டால், மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை செலவாகும் என்பதை கணவர்மார்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

சமையலறையில் சமையல்காரர்,  குழந்தைகளுக்கான குழந்தை பராமரிப்பு, நர்சரி மேலாளர். மாமியார் மாமனாருக்கு செவிலியராகவும் வேலைக்காரராகவும் மனைவி இருக்கிறார், அதே நேரத்தில் கணவன் வீட்டு அமைப்பு மற்றும் செலவுகளை நிர்வகிக்கிறார். இந்த உண்மைகளை புரிந்துகொண்டு, வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தால், வாழ்க்கை எப்போதும் மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் இருக்கும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்