Sunday, March 31, 2024

அழகிய செயல்....!

 புனித ரமலானில் ஒரு அழகிய செயல்:



கேள்வி....!

 அகிலேஷ் யாதவ் அதிரடி கேள்வி....!

டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அதிரடி பேச்சு...!



அழகோ....அழகு....!

அற்புதமான திறமை....!

அழகோ....அழகு.....!



சிந்தனைகள்....!

 வாழ்க்கைக்கு மிகவும் தேவையான அழகிய சிந்தனைகள்....!

Never measure your life by possessions. Measure it by the hearts you touched, the smiles you created and the love you shared.

========================

Look at your daily habits and ask yourself if they are causing you to evolve or revolve. Are you moving forward, or just moving in circles.

=======================

Life has five pillars: Family, friends, kindness, honesty, and humidity. But the foundation is always love.

=========================

Successful people always have two things on their lips silence and a smile. Smile to solve problems and silence to avoid problems.

========================

இரக்க மனமும் இரும்பாகி போகிறது. சிலர் சுயநலவாதியாகும் போது.

======================

 Everything you lost will be replaced with something better.

===================

வாழ்க்கையில் நமக்கான நேரம் ஒருநாள் வரும். அதுவரை சிலவற்றை பொறுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்.

=======================

மேகங்கள் சூரியனை கடந்து செல்வதைப் போல, நம் வாழ்வில் துன்பங்கள் வந்து போகும் என்றும், சூரியனைப் போல பிரகாசமாக என்றும் ஒளித்து கொண்டே இருங்கள்.

========================

You can't start the next chapter if you keep rereading the last.

====================

Train your mind to see the good in every situations.

====================

Your good deeds might seems invisible, but they leave a trail that is imprinted on the hearts of others.

====================

Re-set, Re-adjust, Re-start, Re-focus, as many times as you need to. Just don't quite.

======================

Even the smallest lie can break the biggest trust.

=====================

Values are more important than valuables.

=====================

தேடாத போது கிடைப்பதும், தேடும் போது தொலைப்பதும், வாய்ப்புகள் மட்டுமல்ல, வாழ்க்கையும்.

=======================

Travel. Your money will return, but your time won't.

==========================


நட்பு....!

 Best friends love to race each other..!



உரை....!

 காங்கிரஸ் தலைவர் திரு. @kharge , CPP தலைவர் அன்னை. சோனியா காந்தி மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திரு. @RahulGandhi  ஆகியோர் ஜனநாயகத்தை காப்போம் பேரணியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நாட்டில் ஜனநாயகத்தை ஒழிக்க நினைக்கிறது மோடி அரசு, அவரது இந்த சதியை ஒருபோதும் வெற்றி பெற விடமாட்டோம்.

பயப்பட மாட்டோம்.
தலைவணங்க மாட்டோம்.
போராடி வெற்றி பெறுவோம்.

SaveDemocracy
BJPMatchFixingElection



அதிரடி பேச்சு....!

 டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் அதிரடி பேச்சு;



மத நல்லிணக்கம்....!

A Hindu woman sells fruits outside a mosque. 

According to her, 'Muslims help her and never bother or discriminate. Her business is doing well in Ramadan'



அழகு...!

 அழகோ.....அழகு.....!

அற்புதமான அழகு....!!



Saturday, March 30, 2024

ரம்ஜான் ஆனந்தம்....!

 புனித ரமலானில் உணவுத் திருவிழா;



வயது தடையில்லை...!

 Age is just a number...!

உண்மையிலேயே அருமையாக நடனம் ஆடுகிறார்.



தாக்கு.....!

Listen carefully to Hon'ble SC Justice Nagarathna.

"Courts & The Constitution Conference".

Sharing 2 parts of 24+ min speech.

1. Demonetisation

2. Governors of the States.

Demonetisation part.

Her take on the Governors of the states shared below. Don't miss that.



கேள்வி....!

 ManipurViolence UnnaoGangRape KathuaGangRape BilkisBano BrijBhushanSingh - என பா.ஜ.க. ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு அவலநிலையில் இருக்கும்போது பெண்சக்தி பற்றிப் பிரதமர் அவர்கள் பேசலாமா?

HistorySheeter ரவுடிகளைக் கூண்டோடு கட்சியில் இணைத்துவிட்டு, சட்டம் - ஒழுங்கு பற்றிப் பாடம் எடுக்கலாமா?

தமிழ்நாடு புண்ணிய பூமியாகத்தான் இருக்கிறது; இருக்கும்! பா.ஜ.க. பாவிகளின் மண்ணாக என்றும் மாறாது!

Vote4INDIA



உரை....!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உரை:



திருக்குர்ஆன் எனும் ஒளி...!

திருக்குர்ஆன் எனும் ஒளி....!

புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே. அல்லாஹ்வின் துணைக் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தில், ஏக இறைவனின் திருவாக்கான, திருக்குர்ஆனின் தமிழாக்கத்தை வாசிப்பதை நான் எப்போதும் வழக்கமாக கொண்டு இருக்கிறேன். அதன்படி, இந்தாண்டும், புனித ரமலான் மாத நோன்பு தொடங்கிய நாள் முதல், தொடர்ந்து திருக்குர்ஆனை வாசித்து, அதை முடிந்த அளவுக்கு உள்வாங்கி, செயல்புரிய முயற்சி செய்து வருகிறேன். 

திருக்குர்ஆனில் மனிதனின் நன்மைக்காக ஏக இறைவன் என்ன சொல்லி இருக்கிறான்? மனித வாழ்விற்காக அவன் காட்டும் அழகிய வழி என்ன? மனிதன் அமைதியாக, ஆனந்தமாக, சிறப்பாக வாழ, ஏக இறைவன் என்னென்ன நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சொல்லிக் காட்டுகின்றான்? ஓர் இறைக் கொள்கையின் முக்கியத்துவம் என்ன? இப்படி பல கேள்விகளுக்கு திருக்குர்ஆனில் நமக்கு மிகச் சிறப்பாக விளக்கங்கள் கிடைக்கின்றன. 

ஓர் இறைக் கொள்கை:

இஸ்லாமிய இறைக் கொள்கையின் அடிப்படையாக இருப்பது, ஓரே இறைவனாகிய அல்லாஹ் மட்டுமே, வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் என நம்பிக்கை கொள்வதாகும். இதேபோன்று, ஏக இறைவனால் படைக்கப்பட்டுள்ள வானவர்களை நம்பிக்கை கொள்ள வேண்டும். ஏக இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்துத் தூதர்களையும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அல்லாஹ்வினால் இறக்கப்பட்ட அனைத்து வேதங்களையும் நம்ப வேண்டும். மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கிறது என நம்பிக்கை கொள்ள வேண்டும். 

திருக்குர்ஆனை வாசிக்கும்போது, நாம் மேலே குறிப்பிட்ட இந்த 6 அம்சங்கள் நமக்கு மிக அழகிய முறையில் எடுத்துரைக்கப்படுகின்றன. திருக்குர்ஆனை திரும்ப, திரும்ப வாசிக்கும்போது, ஓர் இறைக் கொள்கையில் மனிதன் எந்தளவுக்கு உறுதியாக இருக்க வேண்டும் என்பதையும், ஓர் இறைக் கொள்கையில் உறுதியாக இருப்பதன் மூலம், மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும், மிகவும் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. 

ஓர் இறைக் கொள்கை குறித்து திருக்குர்ஆன் முழுவதும் சொல்லப்பட்டு இருக்கிறது. அதுவும், ஆதாரப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக ஓர் இறைக் கொள்கைக்கு திருக்குர்ஆன் விளக்கங்களை அளிக்கிறது. பூமி, வானம், சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், மலைகள், கடல்கள், செடி, மரம், கொடி, விலங்குகள் என அனைத்தும் எப்படி படைக்கப்பட்டிருக்கிறது? என கேள்வி எழுப்பி, அதுகுறித்து சிந்திக்கும்படி, ஏக இறைவன் மனிதனை கேட்டுக் கொள்கிறான். 

அத்துடன், மனித இனம் படைக்கப்பட்ட விதம் குறித்து எடுத்துக் கூறி, ஓர் இறைக் கொள்கையில் உறுதியாக இருக்கும்படியும் நிலைத்து நிற்கும்படியும், மனிதனுக்கு ஏக இறைவன் அறிவுறுத்துகிறான். மேலும், மனிதன் தன்னுடைய அறிவைப் பயன்படுத்தி சிந்திக்க வேண்டும் என்றும் இறைவன் கேட்டுக் கொள்கிறான். 

பல தெய்வக் கொள்கைக்கு இஸ்லாத்தில் சிறிதும் இடமில்லை. இந்த உலகத்தில் உள்ள அனைவருமே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது பல்வேறு பிரிவுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தாலும், மனிதன் தனக்கு விரும்பும் வகையில் தெய்வங்களை ஏற்படுத்திக் கொள்வதையும், அவற்றை வணங்குவதையும், ஏக இறைவன் கண்டிக்கின்றான். அதை ஏற்றக் கொள்ள மறுக்கிறான். எந்த குற்றத்தையும் மன்னிக்க தயாராக உள்ள இறைவன், பல தெய்வக் கொள்கையை மன்னிக்கவே முடியாது என மிகவும் திட்டவட்டமாகவும், உறுதியாகவும் கூறுகிறான். 

திருக்குர்ஆனை வாசித்துவிட்டு, நாம் கொஞ்சம் ஆழமாக, அமைதியாக, திறந்த மனதுடன் சிந்தித்தால், ஓர் இறைக் கொள்கையே உன்னத கொள்கை என்பதை அறிந்துகொள்ள முடியும். ஓர் இறைக் கொள்கையே மனிதனை நல்வாழ்விற்கு அழைத்துச் செல்லும் சிறந்த வாழ்க்கை நெறி என்பதை புரிந்துகொள்ள முடியும். ஓர் இறைக் கொள்கையே, மனிதனிடம் நல்ல பண்புகளையும், நல்ல ஒழுக்கத்தையும் எற்படுத்தும் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள முடியும். 

வாழ்க்கை நெறிகள்:

திருக்குர்ஆனினில் இறைத்தூதர்களின் வரலாறுகள், மனிதன் எப்படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்? தாய் தந்தைக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன? உற்றார் உறவினர்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் என்ன? ஏழை, எளிய மக்களிடம் எப்படி அன்புடன் நடந்துகொள்ள வேண்டும்? அனைத்து மக்களிடமூம் எப்படி அன்பு செலுத்த வேண்டும்? வட்டியை ஏன் வாங்கக் கூடாது? ஜகாத் எனும் ஏழை வரியை ஏன் செலுத்த வேண்டும்? அதனால் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் என்ன? ஜகாத் மூலம், ஏழைகளின் வாழ்வில் எப்படி ஒளி ஏற்படுகிறது? பெண்களின் உரிமைகள் என்ன? பெண்களிடம் எப்படி கண்ணியமாக முறையில் நடந்துகொள்ள வேண்டும்? இப்படி நிறைய விஷயங்கள், வாழ்க்கைக்கு தேவையான அழ்கிய நெறிமுறைகள் நமக்கு கிடைக்கின்றன. 

அத்துடன், மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய சமூக ஒழுக்கங்களையும் இஸ்லாமிய மார்க்கம் மிக அழகிய முறையில் கற்றுக் கொடுக்கிறது. தாய், தந்தைக்கு நன்மை செய்ய வேண்டும். அவர்களைப் புண்படுத்தக் கூடாது. உறவினர்களின் உறவைத் துண்டிக்காமல் சேர்ந்து வாழ வேண்டும். அநாதைகளை ஆதரிக்க வேண்டும். ஏழைகளுக்கும் கடனாளிகளுக்கும், நிதியுதவி செய்ய வேண்டும். விதவைகளுக்கு மறுவாழ்வளிக்க வேண்டும். அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும். பேச்சிலும், செயலிலும் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். 

பெண்களைத் தீய பார்வையால் பார்க்கக் கூடாது. பிறர் நலம் பேண வேண்டும். நோயாளிகளை நலம் விசாரிக்க வேண்டும். விருந்தாளிகளை உபசரிக்க வேண்டும். இப்படி ஏராளமான நற்பண்புகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

திருக்குர்ஆனை ஒவ்வொரு முறையும் வாசிக்கும்போது, ஏக இறைவன் மனிதன் மீது எந்தளவுக்கு அக்கறை கொண்டு இருக்கிறான் என்பதையும், மனிதன் அழகிய, அற்புத வாழ்வு வாழ வேண்டும் என ஏக இறைவன் விரும்புகிறான் என்பதையும், நாம் அறிந்துகொள்ள முடிகிறது. மனிதன் இம்மையில் மட்டுமல்ல, தன்னுடைய அழகிய செயல்கள், பண்புகள், ஒழுக்கங்கள் மூலம் மறுமையிலும் அற்புதமான, அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என இறைவன் விரும்புகிறான். அதற்காக பல அழகிய நல்ல நெறிகளை பின்பற்ற வேண்டும் என அவன் மனிதனை அறிவுறுத்துகிறான். 

மனிதன் தன்னுடைய ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டியவனாக இருக்கிறான். ஒவ்வொரு நன்மை, தீமைக்கு தக்கப்படி, மனிதனுக்கு கண்டிப்பாக வெகுமதிகள் வழங்கப்படும். தீமைக்கு தண்டனையும், நன்மைக்கு வெகுமதியும் அளிக்கப்படும். எனவே, மனிதன் தன்னுடைய செயல்களை சீர்படுத்திக் கொண்டு, ஓர் இறைக் கொள்கையில் உறுதியாக நிலைத்து நின்று, உலகில் அழகிய வாழ்வு வாழ வேண்டும். தன்னுடைய தவறுளை திருத்திக் கொண்டு, ஏக இறைவனிடம் மன்னிப்புக் கோரி, தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை நன்மையின் பக்கம் செல்லும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் நன்மையின் பக்கம் எப்போதும் நிலைத்து நிற்க வேண்டும். 

திருக்குர்ஆனை வாசிக்கும்போது, நாம் மேலே குறிப்பிட்ட இந்த முக்கிய  அம்சங்கள் தான் நமக்கு எடுத்துரைக்கப்படுகின்றன. மனிதன் அழகிய வாழ்வு வாழ்வதே, அவனது மன அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் நன்மையாக இருக்கும்.

திருக்குர்ஆனின் அத்தியாயம் 103-ல் வரும், மூன்று அற்புதமான வசனங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.  

“காலத்தின் மீது சத்தியமாக!

மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான்.

ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும்,

நற்செயல்கள் புரிந்துகொண்டும், மேலும்,

ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும்,

பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் 

கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர”

திருக்குர்ஆன் இஸ்லாமியர்களுக்கான வேதம் மட்டுமல்ல, அது உலக மக்கள் அனைவருக்கும் நல்ல வாழ்க்கை நெறியை போதிக்கும் வேதமாகும். எனவே தான் ஏக இறைவன் திருமுறையில் இப்படி கூறி இருக்கிறான். 

“இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை” (81:27)

கடைசியாக, ஒவ்வொரு ஆண்டும், திருக்குர்ஆனை வாசிக்க வாய்ப்பு அளிக்கும் ஏக இறைவனுக்கு என்னுடைய நன்றியை கூறிக் கொள்வதுடன், திருக்குர்ஆனின் ஒளி, எப்போதும் என்னுடைய மனதிலும் வாழ்க்கையிலும் வீசிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த அற்புத ஒளியின் மூலம் நான் இம்மை, மறுமையின் பலன்களை பெற வேண்டும் என ஏக இறைவனிடம் துஆ செய்கிறேன். நீங்களும், துஆ செய்யுங்கள், அத்துடன், திருக்குர்ஆனின் ஒளியை பெற நீங்களும் முயற்சி செய்யுங்கள்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

ரம்ஜான் உணவுத் திருவிழா...!

இந்தியாவில் களைக் கட்டும் ரம்ஜான் உணவுத் திருவிழா:



புதுசு.....!

 புது வகையான கொண்டை....!



ரவீஷ் குமார் விளாசல்...!

காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரி துறை நோட்டீஸ்...!

பிரபல பத்திரிகையாளர் ரவீஷ் குமார் தாக்கு:




Friday, March 29, 2024

விளாசல்.....!

 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் விளாசல்....!



சிங்கம்.....!

 சிங்கம்.....சிங்கம் தான்....!



வேதனை....!

இந்தியாவின் தலைமை நீதிபதி அவர்களின் மனதை எப்படி எல்லாம் நோகடித்து இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா..என்று வேதனை பட வைக்கிறது

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால்.. 

நீதிமன்றங்கள் இருக்குமா என்பது சந்தேகம் தான்.



உணவுத் திருவிழா...!

 ரமலான் உணவுத் திருவிழா;



முதல் பள்ளிவாசல்...!

 India's first and one of the oldest mosque in the world in Kerala, built in 643 CE



கேள்வி....!

 மருத்துவர் ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி:



முஸ்லிம்கள்....!

 முஸ்லிம்கள் குறித்து ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பேச்சு:



இந்திய ஊடகங்கள்....!

 இந்திய ஊடகங்கள் குறித்த அல்ஜசீரா தொலைக்காட்சியின் படப்பிடிப்பு:



காலை உணவுத் திட்டம்...!

தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் - ஒரு ரிப்போர்ட்....!



நோன்புக் கஞ்சி.....!

நோன்புக் கஞ்சியில் இவ்வளவு பலன்களா....?

என்னுடைய இளமைப் பருவம் அது. எனக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. என்னுடைய பள்ளி நாட்களில், ரமலான் மாதத்தில் நோன்பு வைக்க நான் எவ்வளவு ஆர்வத்துடன் இருப்பேனோ, அதைவிட அதிக ஆர்வத்துடன், நோன்புக் கஞ்சியை குடிக்க மனம் அதிகம் விரும்பும். நோன்புக் கஞ்சிக் குறித்து நினைத்தாலே உள்ளத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். வீட்டில் சுவையான நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டாலும், பள்ளிவாசலில் தயாரிக்கப்பட்டு, வினியோகம் செய்யப்படும் நோன்புக் கஞ்சியின் சுவை கொஞ்சம் தூள் கிளப்பும் வகையில் இருக்கும். 

எனவேதான், நோன்புத் திறக்கும் நேரத்தில், முன்னதாகவே பள்ளிவாசலுக்குச் சென்று, இரண்டு அல்லது மூன்று கிண்ணங்களில் நோன்புக் கஞ்சியை வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்து விடுவேன். மற்ற நாட்களில் நோன்புக் கஞ்சியை சாப்பிடுவதைவிட, ரமலான் நோன்பு காலங்களில், அதை சாப்பிடும்போது, நமக்கே அறியாமல் ஒருவித ஆனந்தமும் புத்துணர்ச்சியும் எற்படும். அதுவும், பள்ளிவாசல்களில் நோன்பு திறக்க வரும் சக இஸ்லாமிய தோழர்களுடன் இணைந்து அமர்ந்துகொண்டு, நோன்புக் கஞ்சியுடன் வடை, போண்டா வகைகள் மற்றும் புதினா சட்னி ஆகியவற்றையும் சாப்பிடும்போது, மனதில் மேலும் மகிழ்ச்சியும் உற்சாகமும் உருவாகும்.

நோன்புக் கஞ்சி-ஒரு பார்வை:


ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து மதத்தினரும் விரும்பி உண்ணக் கூடியது நோன்புக் கஞ்சி. நாள் முழுவதும் நோன்பு நோற்று வாடிப் போய் இருக்கும் முஸ்லிம்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது நோன்புக் கஞ்சி. 

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில், தமிழகம் முழுவதிலும் உள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் ஒரு மாதத்துக்கு கஞ்சி தயாரிக்கப்படும். ’நோன்புக் கஞ்சி’ எனச் சொல்லப்படும் அதை பொதுமக்கள் அனைவருக்கும் விநியோகம் செய்வதோடு, பள்ளிவாசல்களில் நோன்பு துறக்கும் முஸ்லிம்களும் அதை அருந்துவார்கள். நோன்புக் கஞ்சி ருசியாக இருக்கும் என்பதாலேயே அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் அது மிகப் பிரபலமாக இருந்து வருகிறது. 

நோன்புக் கஞ்சி, பச்சை அரிசி, பாசி பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, சின்ன வெங்காயம், பட்டை, கிராம்பு, தக்காளி, இஞ்சி, பூண்டு, வெங்காயம், கேரட், மல்லிக்கீரை, பச்சை மிளகாய், கெட்டியான தேங்காய் பால், மட்டன் கைமா அல்லது பீப் கைமா, உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதுதான் நோன்பு கஞ்சியாகும். மேலே நாம் குறிப்பிட்டுள்ள இந்த உணவுப் பொருட்கள் அனைத்தும், உடலுக்கு ஆரோக்கியமும் தெம்பும் தரும் பொருட்கள் என்பால், நோன்புக் கஞ்சி சாப்பிடும்போதும் நமது உடல் நல்ல ஆரோக்கியத்தை பெறும் என உறுதியாக கூறலாம். 

நோன்புக் கஞ்சியின் பலன்கள்:


நோன்பாளிகள் பசித்திருக்கும் போது உடலில் தேங்கிய சர்க்கரையளவு பகலில் உடலை இயங்க வைப்பதற்காக அதிகமாகச் செலவிடப்படுகிறது. மாலையில் இஃப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நேரத்தில், உடலின் நீர்ச்சத்து குறைந்து நாவரட்சி ஏற்பட்டு, உடலின் சர்க்கரை பகல் முழுவதும் பயன்படுத்தப்பட்டதால் சிலருக்கு சோர்வு, தலைவலி ஏற்படும். இப்படி, சோர்வுற்ற உடலுக்குத் தேவையான உடனடி புத்துணர்வை வழங்க அருமையான ஆகாரமாக நோன்புக் கஞ்சி இருக்கிறது. நோன்பு நாட்களில். நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து எடுத்துக்கொள்ளும் இந்த முதல் உணவானது ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. நோன்புக் கஞ்சி சுவையில் பிரியாணியை போலவே இருக்கும். அத்துடன்,  உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு ஊட்டம் தரும். இதுவரை நோன்புக் கஞ்சியை நீங்கள் ருசித்ததில்லை என்றால், ஒரு முறை நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள். பின்னர் அதற்கு அடிமையாகி, ஒவ்வொரு நாளும் தேடி தேடி வாங்கி சாப்பிடுவீர்கள். 

ரமலானில் உணவுத் திருவிழா:

ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும், நோன்புக் கஞ்சியை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். பெரும்பாலான முஸ்லிம்கள், தங்களுடைய சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர்களிடம் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையிலும், விருந்தோம்பல் மூலமும், நோன்புக் கஞ்சி விருந்து வைத்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது தமிழகத்தில் தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. பல அரசியல் கட்சிகள் ரமலான் மாதத்தில், அனைத்து மதத்தினரும் கலந்துகொள்ளும் வகையில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மற்ற உணவுப் பொருட்களுடன் கண்டிப்பாக நோன்புக் கஞ்சி இடம்பிடித்து இருக்கும். 

அத்துடன், சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களில், ரமலான் காலத்தில் நாவுக்கு சுவையான விதவிதமான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், ரமலான் காலத்தில் முக்கிய நகரங்களில் உணவுத் திருவிழா நடைபெற்று, இந்த திருவிழாவில் அனைத்துத் தரப்பு மக்களும் கலந்துகொண்டு, இஸ்லாமிய உணவுகளை மட்டுமல்லாமல், இந்திய உணவு வகைகளையும் ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்து வருகிறார்கள். 

நோன்புக் கஞ்சி சாதாரணக் கஞ்சியாக நமக்கு தென்பட்டாலும், அது உடலுக்கு ஆரோக்கியத்தையும், தெம்பையும் தருவதுடன், மக்கள் மத்தியில் சகோதரத்துவத்தையும் அன்பையும் வளர்க்கும் உணவாக இருந்து வருகிறது என்று உறுதியாக கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Thursday, March 28, 2024

பாம்பு.....!

 World’s biggest King Cobra....!

உலகின் மிகவும் நீளமான பாம்பு...!



ஒரு அழகிய செயல்...!

மதநல்லிணக்கத்திற்காக, ரமலான் மாதத்தில்  சுஃபிதார் அமைப்பு செய்யும் ஒரு அழகிய செயல்.....!

ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசலில், இந்து அமைப்பைச் சேர்ந்தச் சகோதரர்கள், ரமலான் நோன்பு வைக்கும் இஸ்லாமியர்களுக்கு, நோன்பு திறக்க உணவுப் பொருட்களை வழங்கி தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.  கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்த அழகிய, அற்புதனமான பணி நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்து தகவல் அறிந்த மணிச்சுடர் நாளிதழ் சிறப்பு செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசலுக்கு சென்று, இந்து சகோதரர்களின் அழகிய செயலை  நேரில் கண்டு வியப்பு அடைந்தார். மத நல்லிணக்கம் தழைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், ரமலான் மாதத்தில் செய்யப்பட்டு வரும் இந்த அழகிய பணி குறித்து, மணிச்சுடர் வாசகர்களும் அறிந்துகொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும். அத்துடன், மற்றவர்களுக்கும் இந்த மத நல்லிணக்க செய்தி பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட ஒரு சிறப்பு ரிப்போர்ட், இதோ உங்கள் பார்வைக்கு:

சுஃபிதார் அமைப்பு:

விடுதலைக்குப் பிறகு, நாடு இந்தியா-பாகிஸ்தான் என பிரிந்தபோது, தற்போதைய பாகிஸ்தானின் சிந்து பகுதியில் இருந்து சென்னைக்கு வந்த தாதா ரத்தன்சந்த் என்பவர், சுஃபிதார் அமைப்பு என்ற பெயரில் ஒரு பொதுநல தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் சுஃபி  போதனைகள், தத்துவங்கள் மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டு வருகின்றன. அத்துடன், பொதுமக்களுக்கு பல்வேறு சமூகச் சேவைகளும், மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.  தற்போது இந்த அமைப்பு சென்னை மயிலாப்பூரில் இயங்கி வருகிறது. 

மதங்கள் பல இருந்தாலும், மனிதர்கள் அனைவரும் இறைவனின் படைப்புகள் என்பது சுஃபி அமைப்பின் கருத்தாக இருந்து வருகிறது. எனவே தான், தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களிடமும் அன்பை போதிக்கும் பணியில் இந்த அமைப்பு  தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தொடர்ந்து அழகிய செயல்களையும் பணிகளையும் ஆற்றி வருகிறது.  

ரமலானில் அழகிய செயல்:

அதன்படி, இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தில் நோன்பு வைக்கும் முஸ்லிம்களுக்கு, அவர்கள் நோன்பை திறக்க உணவுப் பொருட்களை வழங்கி, தங்களது அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம், சுஃபி அறிஞர் தாதா ரத்தன்சந்தின் உள்ளத்தில் உதயமானது. தனது மனதில் இந்த எண்ணம் பிறந்ததும், சிறிதும் எந்தவித தயக்கமும் இல்லாமல், அதை உடனடியாக ரமலான் மாதத்தில் செயல்படுத்த தொடங்கிய அவர், அதற்காக தேர்வு செய்த இடம், சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசலாகும். 

சென்னையில் புகழ்பெற்ற மிகப்பெரிய பள்ளிவாசலான இந்த பள்ளிவாசலில், ஒவ்வொரு நாளும் நோன்பு திறக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வருவது உண்டு. இப்படி, நோன்பு திறக்க வரும் முஸ்லிம்களுக்கு நோன்பு கஞ்சி, பழங்கள், குளிர்ந்த நீர், தண்ணீர், பழச்சாறு, இனிப்பு வகைகள், மற்றும் ஏராளமான உணவுப் பொருட்களை, சுஃபிதார் அமைப்பினர் வழங்கி வருகிறார்கள். 

குழுவினருடன் சேவை:

ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நாளும், மாலை ஐந்து மணிக்கு, ஒரு வேனில் உணவுப் பொருட்களுடன்  வாலாஜா பெரிய பள்ளிவாசலுக்கு வரும் சுஃபிதார் அமைப்பினர், தங்களது 30க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்களுடன், அந்த உணவுப் பொருட்களை பள்ளிவாசலுக்கு உள்ளே எடுத்துச் செல்கிறார்கள். 

நோன்பு திறக்க வரும் முஸ்லிம்கள் அனைவருக்கும், இந்த 30க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்களும் தங்களது அன்பை வெளிப்படுத்தி, பாசத்துடன் உணவுப் பொருட்களை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். 

நோன்பு திறக்க உணவுப் பொருட்கள் வழங்குவதுடன் தங்களது பணி முடிந்துவிட்டது என அவர்கள் இருப்பதில்லை. நோன்பு திறந்துவிட்ட, தொழுகை நடத்த முஸ்லிம்கள், சென்றபிறகு, நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்ட பகுதியில் கிடக்கும் பொருட்களை அப்புறப்படுத்தி, தூய்மை செய்து, அந்த பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை மேற்கொள்ளும் வகையில் இடம் அமைத்து தருகிறார்கள். 

சேவை செய்வது பெருமை:

கடந்த நாற்பது ஆண்டுகளாக செய்துவரும் இந்த அரிய சேவை குறித்து சுஃபிதார் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளான ராம் தேவ், முரளி, கோமல், குமார் ஆகியோரிடம் நாம் பேசியபோது, "நோன்பு வைக்கும் நமது முஸ்லிம் சகோதரர்களுக்கு நாம் பணி செய்வது எங்களுக்கு கிடைத்த பெருமை" என அவர்கள் தெரிவித்தனர். "ரமலான் மாதம் முஸ்லிம்களுக்கு மட்டுமானா ஆன்மீக மாதமாக நாங்கள் கருதவில்லை. அது எங்களுக்கும் ஒரு ஆன்மீக மாதமாக கருதுகிறோம்" என்று ராம் தேவ் கூறியபோது உண்மையில் நமக்கு மகிழ்ச்சி அளித்தது. 

மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து, குடியேறியுள்ள சிந்தி மக்கள், ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இந்த புனித சேவையில் தங்களை ஆர்வத்துடன் இணைத்துக் கொள்கிறார்கள். ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். இதற்காக தங்களது நேரத்தை திட்டமிட்டு அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 

நாற்பது ஆண்டு கால தொடர்பு:

திருவல்லிக்கேணி வாலாஜா பள்ளிவாசலுக்கும், சுஃபிதார் அமைப்புக்கும் இடையே நாற்பது ஆண்டு காலமாக நல்ல உறவு நீடித்து வருகிறது. இதன் காரணமாக தான், இந்துக்களும், முஸ்லிம்களும், தங்களது அன்பை வெளிப்படுத்தி, சகோதரத்துவத்தை நிலைநிறுத்தி வருகிறார்கள். 

சென்னையில் உள்ள பல முஸ்லிம்கள், நோன்பு திறக்கும் நேரத்தில் எங்கு இருந்தாலும், உடனே வாலாஜா பெரிய பள்ளிவாசலுக்கு கட்டாயம் சென்றுவிடுவதை ஒரு பழக்கமாகக் கொண்டு இருக்கிறார்கள் அதற்கு முக்கிய காரணம், சுஃபிதார் அமைப்புச் சேர்ந்தவர்களின் அன்பும், அவர்கள் காட்டும் மனிதநேயமும் தான் என பல்லாவரத்தைச் சேர்ந்த ஜமீல் என்பவர் உட்பட பலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். 

அன்பை விதைத்து, அறுவடை:

நாட்டின் சில பகுதிகளில் ஒருசில அமைப்புகள், வெறுப்பை விதைத்து, மக்கள் மத்தியில் பதற்றத்தையும், வன்முறையையும் ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் அன்பை விதைத்து அறுவடை செய்யும் பழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு, ரமலான் மாதத்தில், சுஃபிதார் அமைப்பினரின் மதநல்லிணக்க செயல்கள் இருந்து வருகின்றன. மக்களிடையே அன்பை விதைத்து, சகோதரத்துவதை வெளிப்படுத்தி வரும் சுஃபிதார் அமைப்புச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மணிச்சுடர் சார்பில் பாராட்டும், வாழ்த்தும் கூறி விடைப்பெற்றோம். 

- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


அழகு.....!

 அழகோ....அழகு....!

அற்புதமான அழகு....!!



மத ஒற்றுமை....!

ரமலான் மாதத்தில் நோன்பு வைக்கும் முஸ்லிம்கள், மாலையில் நோன்பு திறக்க இந்து அமைப்பு ஒன்று பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

கடந்த 40 ஆண்டு காலமாக சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பள்ளிவாசலில் இந்த நல்ல செயல் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பு:



Wednesday, March 27, 2024

பாலம்....!

In the Dadong River Grand Canyon, Chongqing, there is a 300-m-high suspended iron chain bridge with no piers & no cable-stayed ropes: just 4 sets of ropes to provide horizontal tension. It can withstand the weight of a 45-ton truck.



கட்டாயம் வீழ்த்தப்பட வேண்டும்....!

ஒன்றிய பா.ஜ.க. அரசு கட்டாயம் வீழ்த்தப்பட வேண்டும்....!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு கட்டாயம் வீழ்த்தப்பட வேண்டும் என்பது, நாட்டு மக்கள் அனைவரின் விருப்பமாக தற்போது இருந்து வருகிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏன் வீழ்த்தப்பட வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பினால், அதற்கு நாட்டு நலனில் அக்கறைக் கொண்ட சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பல அற்புதமான விளக்கங்களை மக்கள் முன் வைக்கிறார்கள். 

கடந்த பத்து ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் நாட்டு மக்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை என்பது அவர்களின் வாதமாக இருந்து வருகிறது. உயரும் பணவீக்கம், வேலையின்மை அதிகரிப்பு, ஜனநாயகத்தை நசுக்குதல், தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதில்லை தோல்வி, வெறுப்பு அரசியல், பொருளாதார சரிவு, சமூக கட்டமைப்பில் பாதிப்பு என ஏராளமான புள்ளிவிவரங்களை அரசியல் கட்சிகள் முன் வைக்கின்றன.

பா.ஜ.க.வும் ஊழலும்:

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, தாம் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ஊழலே நடைபெறாது என உறுதி அளித்தார். "நானும் சாப்பிட மாட்டேன். யாரையும் சாப்பிட விட மாட்டேன்" என்று ஊழல் குறித்து அவர் புதிய விளக்கம் அளித்தார். 

ஆனால், ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தபிறகு, பிரதமராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட மோடி, ஊழலை ஒழித்தாரா? என்று கேள்வி எழுப்பினால், அதற்கு பதில் இல்லை என்றே வருகிறது. ஆனால், ஊழலை ஒழிப்பதற்கு பதிலாக, பா.ஜ.க. செய்த ஊழல்கள் குறித்து தற்போது பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. 

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 7 பெரிய ஊழல்களை செய்துள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) வெளியிட்டுள்ளது. அதன்படி, பாரத்மாலா திட்ட ஏலத்தில் மோசடி, துவாரகா எக்ஸ்பிரஸ்வேயில் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க 250 கோடி ரூபாய் செலவு, சுங்கச்சாவடி விதிகளை மீறி மக்களிடம் இருந்து 132 கோடியை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வசூல் செய்துள்ளது உள்ளிட்டவை அடங்கும்.

மேலும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் ஒரே எண்ணின் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். அதோடு, அயோத்தி வளர்ச்சித் திட்டத்தில், ஒப்பந்ததாரர்களுக்கு தேவையற்ற சலுகைகள் அளிக்கப்பட்டது. ஊரக வளர்ச்சி அமைச்சகம், ஓய்வூதியத் திட்டத்தின் பணத்தை விளம்பரத்திற்காக செலவிட்டுள்ளது. எச்ஏஎல் நிறுவனத்தில், விமான என்ஜின் வடிவமைப்பில் ஏற்பட்ட குளறுபடியால் 154 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிஏஜி கூறியுள்ளது.

தேர்தல் பத்திர மெகா ஊழல்:

இதுஒருபுறம் இருக்க, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை என்ற திட்டத்தின் மூலம் மிகப்பெரிய அளவுக்கு பா.ஜ.க. ஊழல் செய்து இருப்பது தற்போது வெளிச்சமாகியுள்ளது. இந்த விவகார வழக்கில், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரம் பெற்ற அரசியல் கட்சிகள் குறித்த விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தேர்தல் பத்திரங்கள் குறித்த முழு விவரங்களையும் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. 

கடந்த நான்காண்டுகளில் (ஏப்ரல் 2019 முதல் 15 பிப்ரவரி 2024) தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்ச நன்கொடையைப் பெற்ற கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது. பா.ஜ.க.விற்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் 6 ஆயிரத்து 986 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாக எஸ்பிஐ அளித்த தகவல்களின்படி, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் பத்திர ஊழல்கள் குறித்த செய்திகளை வெளியிட முக்கிய ஊடகங்கள் மறுத்து வருகின்றன. அதுகுறித்த விவாதங்கள் கூட நடத்தப்படுவதில்லை. மக்களின் கவனத்தைத் திசை திருப்ப பல்வேறு புதிய பிரச்சினைகள் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உருவாக்கி வருகின்றன. 

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகளவு நிதியை பா.ஜ.க. எப்படி பெற்றது என்று கேள்வி எழுப்பினால், தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை மிரட்டி, ஒன்றியத்தின் சுதந்திரமான அமைப்புகள் மூலம் சோதனை நடத்தி, அதன்மூலம் அதிகளவு நிதியை பா.ஜ.க. பெற்று வந்து இருக்கிறது என்பது தற்போது உண்மையாகியுள்ளது. 

தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கிய இந்த பட்டியலில், பாரதி ஏர்டெல், வேதாந்தா, முத்தூட், பஜாஜ், உத்தராகண்ட் சுரங்க பணிகளை மேற்கொண்ட நவ யுகா, அப்பல்லோ டயர்ஸ், லக்ஷ்மி மிட்டல், எடெல்வீஸ், பிவிஆர், சுலா ஒயின், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. பிறகு அவர்கள் பத்திரங்கள் வாங்கி நன்கொடை அளித்து இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க.வின் பணம் பறிக்கும் வழியே தேர்தல் பத்திரம் திட்டம் என கடுமையாக சாடி இருக்கிறார்,

பரகலா பிரபாகர் கருத்து:

தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர், தற்போது கருத்து தெரிவித்திருப்பது நாடு முழுவதும் பேசுபொருளாகி வருகிறது.

"தேர்தல் பத்திரங்கள் விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும். இந்த விவகாரம் காரணமாக பா.ஜ.க. மற்றும் ஒட்டுமொத்த இந்திய மக்கள் இடையேதான் மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. மற்றும் இதர அரசியல் கட்சிகளோ அல்லது அவற்றின் கூட்டணிகள் இடையிலோ இருக்காது. தேர்தல் பத்திரங்கள் விவகாரம், தற்போது இருப்பதைவிட அதிகளவில் பூதாகாரமாக உருவெடுக்கும். இந்த விவகாரம் பா.ஜ.க. மற்றும் ஒன்றிய அரசை கடந்து பொதுமக்களிடம் அதிவேகமாகச் சென்றடைய தொடங்கிவிட்டது. அனைவருக்கும் இந்தத் தேர்தல் பத்திரங்கள் விவகாரம் இந்தியா மட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய ஊழல் என்று புரிய தொடங்கிவிட்டது. தேர்தல் பத்திரங்கள் விவகாரம் தொடர்பாக இந்த பா.ஜ.க. அரசு மிகப்பெரிய தண்டனையை பெறும் என தாம் நினைப்பதாகவும்,  2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பா.ஜ.க.வுக்கு எதிராக உள்ளது” என்றும் பொருளாதார நிபுணர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

முழிக்கும் பா.ஜ.க.:

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகளவு நிதியை சுருட்டி, மிகப்பெரிய அளவுக்கு ஊழல் செய்துள்ள பா.ஜ.க. மற்றும் அக்கட்சியின் தலைவர்கள், தற்போது என்ன செய்வது என தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், தங்களது மெகா ஊழல் நாட்டு மக்கள் மத்தியில் வெள்ள வெளிச்சம் ஆகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள அவர்கள், அதனை திசைத் திருப்ப பல்வேறு முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள். 

ஆனால், தற்போது காலம் கடந்துவிட்டதால், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் மீது வேண்டும் என்றே பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள். அதில் ஒன்று வாரிசு அரசியலாகும். ஆனால், எதிர்க்கட்சிகளில் இருப்பதைவிட பா.ஜ.க.வில் தான் அதிகளவு வாரிசு அரசியல் இருந்து வருகிறது என்பதை புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது. 

எச்சரிக்கை மிகவும் அவசியம்:

நாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலை, முற்றிலும் பா.ஜ.க.விற்கு எதிராக மாறிவிட்டது. நாட்டின் ஒரே நம்பிக்கையாக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி மட்டுமே இருந்து வருகிறது. எனவே, அதிர்ச்சி அடைந்துள்ள பா.ஜ.க. பல்வேறு சதித் திட்டங்கள் மூலம் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சிகளை மேற்கொள்ளும். கடந்த தேர்தலில் புல்வாமா தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்றதால், அதன்மூலம் அரசியல் ஆதாயம் அடைந்து ஆட்சியை கைப்பிடித்த பா.ஜ.க. மீண்டும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதா என ஆர்வத்துடன் இருந்து வருகிறது. 

எனவே, எதிர்க்கட்சிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாட்டு மக்கள் மத்தியில் பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியல் மற்றும் ஊழல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மதத்தை ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் பா.ஜ.க.வின் சதித் திட்டங்களை சரியான பிரச்சாரம் மூலம் உடைக்க வேண்டும். நாட்டில், அமைதி, ஒற்றுமை, வளர்ச்சி கிடைக்க வேண்டுமானால், ஒன்றிய பா.ஜ.க. அரசு கட்டாயம் வீழ்த்தப்பட வேண்டும். இதனை நாட்டு மக்களின் மனங்களில், பதியவைத்து அவர்களின் எண்ணங்களில் பிரதிபலிக்க எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, நாட்டு நலனின் அக்கறைக் கொண்ட அனைவரும் பணியாற்ற வேண்டும். உழைக்க வேண்டும். 18வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் படுதோல்வி அடைவது உறுதி. எனினும், இந்த எண்ணம் மற்றும் எதிர்பார்ப்பின் காரணமாக, எதிர்க்கட்சிகளும், நாட்டு மக்களும், அலட்சியமாக இருந்துவிடாமல், தேர்தல் நடந்து முடிந்து, முடிவுகள் வெளியாகி, ஒன்றியத்தில் நல்லாட்சி அமையும் வரை மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

உரை.....!

 ஒரு அருமையான உரை:



கேள்வி.....!

 பிரதமர் மோடி நாட்டுக்கு என்ன செய்தார்?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி.



பிரமாண்டம்...!

The massive making of 4800 Kg of Prasad in Ajmer Dargah for the Ramadan.





விளாசல்....!

பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல் இந்தியாவில் மட்டும் பெரிய ஊழல் அல்ல, உலகிலேயே மிகப்பெரிய ஊழல்.

திரு பரகலா பிரபாகர் அவர்களின் நேர்காணல்

(பரகலா ஜி ஒரு பிரபலமான பொருளாதார நிபுணர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் ஆவார்.)

ElectrolBondScam BJPScam @INCIndia



முடிவு....!

 கதவைத் திறந்து விடுங்கள். மூடாதீர்கள்...!



Tuesday, March 26, 2024

புதுசு....!

வித்தியாசமான புது வகையான உணவகம்:



திருமா உரை...!

 சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அரியலூர் மாவட்டத்தில் இந்தியா கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் மாண்புமிகு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களின் தலைமையில் குன்னம் ராஜேந்திரன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. திமுக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பல்லாயிரக்கணக்கான பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.  செயல்வீரர்கள் கூட்டத்தில் திருமாவளவன் ஆற்றிய உரை...



மோடிக்கு தோல்வி பரிசு...!

பாசாங்குக்காகக் கூட பத்து வார்த்தை பா.ஜ.க.வைக் கண்டிக்க நெஞ்சுரம் இல்லாத பழனிசாமி ஊரை ஏமாற்றப் போடும் கபட நாடகத்தை யாரும் நம்பவில்லை.

பழனிசாமி அவர்களின் கபட நாடகத்துக்கான ஸ்க்ரிப்ட் தயாராகும் இடமே பா.ஜ.க.தான்!

பத்தாண்டுகள் பா.ஜ.க.வின் பாதம் தாங்கி,

தலைமேல் தூக்கிச் சுமந்து,

தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து,

பதவி சுகம் அனுபவித்துவிட்டு,

திடீர் ஞானோதயம் வந்ததுபோல் பேசினால் தமிழர்கள் நம்பிவிடுவார்களா?

அ.தி.மு.க.வுக்கு மோடிதான் டாடி என்பது எல்லோருக்குமே தெரியும்!

Vote4INDIA



ஒன்றியத்திலும் திராவிட மாடல் ஆட்சி.....!

ஒன்றியத்திலும் மலர வேண்டும் திராவிட மாடல் ஆட்சி.....!

தமிழகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் திராடவிட மாடல் ஆட்சி, ஒன்றியத்திலும் ஏற்பட வேண்டும் என்பது தற்போது தமிழக மக்களின் விருப்பமாக மட்டுமல்லாமல், அனைத்து மாநில மக்களின் எண்ணமாகவும் இருந்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சி என்பது, என்ன? என்று கேள்வி எழுப்பினால், "எல்லோருக்கும் எல்லாமே" என்பதே, திராவிட மாடல் ஆட்சி என்று மிகச் சிறந்த விளக்கம் நமக்கு கிடைக்கிறது. 

சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இனஉரிமை, மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் இயங்குவதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

ஒரு ஆட்சி என்பது, குறிப்பிட்ட ஒருசிலருக்கு மட்டுமான ஆட்சியாக இல்லாமல், எல்லோருக்குமான ஆட்சியாக இருக்க வேண்டும். எல்லோருக்குமான ஆட்சியில், மாநிலத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயன் அடைய வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அந்த  உயர்ந்த நோக்கத்தில் தான், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் மிகச் சிறந்த முறையில், திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். 

திராவிட மாடல் ஆட்சியில்  முன்னேற்றம்:


திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில், தமிழகம் முன்னேற்றம் அடைந்து இருக்கிறதா என சிலர் சந்தேகம் எழுப்பலாம். பல்வேறு கேள்விகளை முன் வைக்கலாம். இப்படி கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பும் மக்களுக்கு சில விளக்கங்களை தருவது மிகவும் அவசியமாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், இந்தியாவின் பொருளாதாரத்துக்கு தமிழகம், 9 சதவீத பங்கைத் தருகிறது. இது, திராவிட மாடல் ஆட்சியின் முதல் சாதனை. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.)அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.  இது, இரண்டாவது சாதனை. ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7 புள்ளி இரண்டு நான்கு சதவீதமாக இருக்கும்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சியானது 8 புள்ளி ஒன்று ஒன்பது சதவீதமாக உயர்ந்துள்ளது! இது, மூன்றாவது சாதனை. 

இந்திய அளவில் பணவீக்கமானது 6 புள்ளி ஆறு ஐந்து சதவீதமாக  இருக்கும்போது, தமிழ்நாட்டில் அது 5 புள்ளி ஒன்பது ஏழாக குறைந்துள்ளது.இது, நான்காவது சாதனை. ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது! இது, ஐந்தாவது சாதனை. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது! இது, ஆறாவது சாதனை. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 3-ஆவது இடத்துக்கு உயர்ந்துள்ளது. இது, ஏழாவது சாதனை.

கல்வியில் இரண்டாவது இடத்துக்குத் தமிழ்நாட்டை உயர்த்தியது திராவிட மாடல் ஆட்சியின் எட்டாவது சாதனை. புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது ஒன்பதாவது சாதனை. இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், விளிம்புநிலை மக்கள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து, தங்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதாகச் சொல்லத் தொடங்கி இருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் பத்தாவது சாதனை. இப்படி நாம் சொல்லிக் கொண்டே போகலாம். 

மக்கள் நலத் திட்டங்கள்:


திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய திட்டங்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். திராவிட மாடல் ஆட்சியில் மகளிருக்காக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மகளிர்க்கு விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.  மேலும்,  காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் திட்டம், களஆய்வில் முதலமைச்சர் திட்டம், மக்களுடன் முதல்வர் திட்டம் “நீங்கள் நலமா?” திட்டம் என பல மக்கள் நலத் திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இதுமட்டுமல்ல, பட்டப்படிப்பு வரை கல்வி இலவசம், பட்டப்படிப்பு வரை பேருந்து பயணம் இலவசம், பெண் தொழில் முனைவோருக்கு உதவி, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க பல திட்டங்கள் நிறைவேற்றம், கலை அறிவியல் கல்லூரிகள் அதிகரிப்பு, மருத்துவக் கல்லூரிகள் அதிகரிப்பு, 

சட்டக் கல்லூரிகள் அதிகரிப்பு, என வளர்ச்சி, முன்னேற்றம் என்ற இலக்கை நோக்கியே திராவிட மாடல் ஆட்சி இருந்து வருகிறது. மக்களுக்கு பயன் அளிக்கும் வகையிலான பல்வேறு திட்டங்களை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றி வருகிறது. 

சிறுபான்மையினர் நலன்:


திராவிட மாடல் ஆட்சியில் சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்படுகிறது. அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வருகிறது.  சிறுபான்மையினர் நலன் காப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முன்னேடியாக இருந்து வருகிறது. ஒன்றிய அரசால் நிறுத்தப்பட்ட சிறுபான்மையின மக்கள் கல்வி உதவித் தொகையை திராவிட மாடல் ஆட்சி வழங்கி வருகிறது. மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதச்சார்பு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் இனி நிரந்தரமாக வழங்கப்படும் என்பது தான் திராவிட மாடல் அரசின் அறிவிப்பாக இருந்து வருகிறது. 

அத்துடன் சிறுபான்மையின மக்களுக்கு வளமாக எதிர்காலத்தை உருவாக்குவதில் திராவிட மாடல் அரசு பெரும் பங்காற்றி வருகிறது. இதன்மூலம் சிறுபான்மையின மக்களின் வாழ்க்கையில் நல்ல ஒளியும், வெளிச்சமும் ஏற்பட்டுள்ளது. உர்தூ உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் மொழிகளை காக்க நடவடிக்கை திராவிட மாடல் ஆட்சியில் எடுக்கப்பட்டுள்ளது. 

ஒன்றியத்தில் திராவிட மாடல் ஆட்சி:


தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில், மக்களுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்படுகிறது. அதன்மூலம், அனைத்துத் தரப்பு மக்களும் பயன் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், மகளிர், மாணவ மாணவியர் என பல்வேறு தரப்பினரும், நல்ல பயன் அடைந்து வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள். 

இப்படி, தமிழகத்தில் மிகச் சிறப்பாக வீறு நடைபோடும் திராடவிட மாடல் ஆட்சி, ஒன்றியத்திலும் மலர வேண்டும். ஒன்றியத்தில் திராவிட மாடல் ஆட்சி மலர்ந்தால், நாட்டின் ஜனநாயக நெறிமுறைகள் பாதுகாக்கப்படும். அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்படும். நாட்டில் உள்ள சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூகப் பிரிவு மக்களுக்கு அனைத்து உரிமைகள் வழங்கப்படும். அவர்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு பாதுகாக்கப்படும். 

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல் ஆகிய முழக்கங்களுக்கு, திராவிட மாடல் ஆட்சியில் சிறிதும் இடமே இல்லை. மதசார்பற்ற இந்திய நாட்டில், அனைத்து மதங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அவர்களின் உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கப்படும். மிகவும் பழமையான இந்திய ஜனநாயகம், உலக அளவில் மிகவும் புகழ்பெற்றது. அத்தகைய புகழ்பெற்ற இந்திய ஜனநாயகத்தின் மாண்புகள், திராவிட மாடல் ஆட்சியில் பாதுகாக்கப்படும். 

பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் சதித் திட்டங்களுக்கு திராவிட மாடல் ஆட்சியில் கொஞ்சம் கூட இடமில்லை. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேச்சுக்கே திராவிட மாடல் ஆட்சியில் இடமில்லை. 

அனைத்துத் தரப்பு மக்களும் நல்ல கல்வி பெற வேண்டும். வாழ்க்கையில் ஒளியை பெற வேண்டும். வாழ்க்கையில் வளர்ச்சியும், முன்னேற்றமும் காண வேண்டும். இந்த கொள்கைகளை முன்நிறுத்திக் கொண்டு, தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி மிகச் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. அதன்மூலம் அனைத்துத் தரப்பு மக்களும் பலன் அடைந்து வருகிறார்கள். 

தமிழக மக்கள் அடையும் பலன்களை, நாட்டில் உள்ள அனைத்துத்  தரப்பு மக்களும் பெற வேண்டுமானால், ஒன்றியத்தில் கட்டாயம் திராவிட மாடல் ஆட்சி ஏற்பட வேண்டும். அப்போது தான் அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துக் கொண்டு செல்லும் ஆட்சி மக்களுக்கு கிடைக்கும். திராவிட மாடல் ஆட்சியில், நாட்டில் வன்முறை நடைபெற அனுமதிக்கப்பட மாட்டாது. அனைத்துத் தரப்பு மக்களும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

சமூகநீதி, சமத்துவம் கிடைக்க:

சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இனஉரிமை, மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் இயங்கும் திராவிட மாடல் ஆட்சி, ஒன்றியத்தில் ஏற்பட்டால், அது இந்தியாவிற்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசாகும். 

தற்போது நாடு எந்த திசையை நோக்கிச்  சென்றுக் கொண்டு இருக்கிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிந்து இருக்கிறோம். கடந்த பத்து ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில், மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்து, அதன்மூலம் அரசியல் லாபம் பெற பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டன. 

ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் வெறுப்பு பேச்சுக்கும், வெறுப்பு நடவடிக்கைகளுக்கும், வெறுப்பு வன்முறைக்கும் இடமில்லை. மகளிரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு அவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படும். ஒன்றியத்தில் உள்ள சி.பி.ஐ. உள்ளிட்ட சுதந்திர அமைப்புகளின் செயல்பாட்டில் அரசியல் தலையீடு இருக்காது. இது திராவிட மாடல் ஆட்சியின் முக்கிய அம்சமாகும். 

ஆக, மக்களுக்கு சமூக நீதி, சமத்துவம் கிடைக்க வேண்டுனால், ஒன்றியத்தில் திராவிட மாடல் ஆட்சி மலர வேண்டும். 18வது மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஒன்றியத்தில் ஆட்சியை கைப்பற்றும். அப்போது, இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக உள்ளிட்ட கட்சிகள், திராவிட மாடல் ஆட்சியின் முக்கியத்துவத்தை கூட்டணி கட்சிகளுக்கு எடுத்துரைத்து, அதனை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை கட்டாயம் எடுப்பார்கள். இதன்மூலம், நாடு முழுவதும் திராவிட மாடல் ஆட்சியின் முக்கியத்துவம் உணரப்பட்டு, ஒவ்வொரு மாநிலங்களிலும் திராவிட மாடல் ஆட்சி நடைமுறைக்கு வர வாய்ப்பு ஏற்படும். தமிழகத்தில் மட்டுமல்ல, ஒன்றியத்திலும் திராவிட மாடல் ஆட்சி என்பதே இனி ஒவ்வொருவரின் முழக்கமாக இருக்க வேண்டும். இது சாதாரண முழக்கம் அல்ல. மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் முழக்கமாகும் என்பதை நாம் நினைவில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


அழகு....!

 அழகு.... அற்புத அழகு....!

நிழல் அழகு....!


சென்னை பாஷை...!

 சென்னை பாஷை - சில தகவல்கள்:



Monday, March 25, 2024

மகிழ்ச்சியான வாழ்க்கை....!

 மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உங்களுக்கு விருப்பமா!


-  ஜாவீத்  -

மனிதர்களில் மகிழ்ச்சியை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். மனிதன் அப்படி இருக்கவே முடியாது. தங்களுடைய வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியும், ஆனந்தமும் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பதுதான் மனிதனின் இயல்பு. இப்படி நினைப்பதில் எந்தவித தவறும் இல்லை. ஏக இறைவன் கூட, மனிதன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என விரும்புகிறான். திருமறையாம் திருக்குர்ஆனை நாம் அரபி மூலத்துடன், நமது தாய் மொழியில் அர்த்தம் அறிந்து வாசிக்கும்போது, மனிதனின் வாழ்க்கை, உன்னத வாழ்க்கையாக அமைய வேண்டும் என ஏக இறைவன் விரும்புவது தெரியவரும். அதற்காக, பல்வேறு சிறந்த வழிமுறைகளையும் ஏக இறைவன் மிக அழகாக நமக்கு சொல்லிக் காட்டியுள்ளான். இப்படி, ஏக இறைவன் காட்டிய வழியில் நாம் பயணித்தால் நிச்சயம் நமது வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கையாக அமையும். 

நல்ல பழக்கங்கள் அவசியம்:

ஒரு மனிதன் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால், அவன் முதலில் நல்ல பழக்கங்களை தத்தெடுக்க வேண்டும். இப்படி, தத்தெடுக்கும் நல்ல பழக்கங்களை, தனது வழக்கமான பழக்கங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். மனிதனின் அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் எதிராக இருப்பது, அவனது சோம்பல் மற்றும் கெட்டப் பழக்கங்கள் தான் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அத்துடன், வாழ்க்கையில் சில பழக்கங்களை அவசியம் நாம் கடைபிடித்தால், நம்மை எல்லோரும் விரும்புவார்கள். அதுகுறித்த ஒருசில முக்கிய அம்சங்களை நாம் அவசியம் அறிந்துகொள்வது நமக்கு நன்மை அளிக்கும். வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ள அந்த அம்சங்கள் உதவியாக இருக்கும். இதனை நாம் எளிதாக செய்ய முடியும். இதன் விளைவாக, நாம் மகிழ்ச்சியாகவும் திருப்திகரமாகவும் வாழ்க்கையை வாழ முடியும். 

தகவல்தொடர்புகளை அதிகரிக்க வேண்டும்:

வீட்டில் உள்ளவர்களுடன் மட்டுமல்லாமல், உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் என அனைத்து தரப்பு மக்களுடன் நாம் நமது தொடர்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும். நண்பர்கள், அன்பான அண்டை வீட்டார், நமது உறவினர்கள், அலுவலக தோழர்கள் என இவர்கள் அனைவரிடமும் நல்ல தொடர்புகளை நாம் கடைப்பிடிப்பதன் மூலம், பல்வேறு நல்ல அனுபவங்கள் நமக்கு கிடைக்கும். நம்மீது அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படும். இது உண்மையிலேயே நமக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

எப்போதும் நேர்மை அவசியம்:

வாழ்க்கையில் நாம் எப்போதும் நேர்மையாக இருப்பது, நம்மீது மற்றவர்களுக்கு ஒரு நல்ல பிம்பத்தை ஏற்படுத்தும். அதன் காரணமாக, அவர்கள் எல்லோரும் நம்மை நேசிப்பார்கள். விரும்புவார்கள். நமது நலனில் அக்கறை செலுத்துவர்கள். மற்றவர்கள் நமது நலனில் அக்கறை செலுத்தினால், அதுவே நமக்கு கிடைத்த மிகப்பெரிய நல்ல பரிசு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதன்மூலம், நமது வாழ்க்கை ஆனந்த வாழ்க்கையாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.  

சிறிய விஷயங்களை மகிழ்ச்சியாக செய்ய முயற்சி செய்தால், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மெல்ல மெல்ல உங்கள் வீட்டுக் கதவை தட்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. நீங்கள் மகிழ்ச்சியாக செய்யும் சின்னச் சின்ன செயல்கள், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஒரு வழி என்பதையும், வாழ்க்கையில் சில மாற்றங்கள் கூட, பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.  எனவே உங்கள் விருப்பப்படி நல்ல மாற்றங்களை செய்யுங்கள்.

தேவையற்ற பணிகளில் ஆற்றலை வீணடிப்பதில் நாம் அதிக நேரம் செலவழிக்கிறோம். இது மகிழ்ச்சிக்கு பதிலாக, துன்பத்தை தான் தரும் என்பதை மறந்துவிடக் கூடாது. அதேநேரத்தில் வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் தைரியமாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டால் மட்டுமே, நமது இலட்சியம் நிறைவேறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

வாழ்க்கை ஏதாவது எடுத்துகொண்டு, ஏதாவது கொடுக்கிறது. எனவே இந்த உண்மையை புரிந்துகொண்டு, வாழ ஆரம்பித்தால், வேதனைகள், துன்பங்கள் நம்மை பின் தொடர வாய்ப்பே இல்லை. மிகவும் எதிர்பார்க்காத விசயங்களை செய்யாமல் இருப்பது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என மனநல வல்லுநர்கள் ஆலோசனை தருகிறார்கள். 

நமது கடமைகளை நிறைவேற்றும்போது, பல்வேறு தவறுகள் ஏற்படலாம். அந்த தவறுளை நிவர்த்திச் செய்துகொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும். இதன்மூலம், நாம் செய்யும் ஒவ்வொரு பணியிலும் நம்மால் நல்ல கவனம் செலுத்த முடியும். 

மன அழுத்தம் வேண்டாம்:

மனிதர்களில் பலர் எப்போதும் பதற்றத்துடன் இருப்பதை நாம் காண முடிகிறது. வாழ்க்கை குறித்து ஒருவித பயம், ஒருவித அச்சம், ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை இல்லாமல் இருப்பதே வாழ்க்கையில் இதுபோன்ற அச்சம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். இதனால் பதற்றம் ஏற்பட்டு, மன அழுத்தம் உருவாகி, மனிதனின் வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறிவிடுகிறது. எனவே, மன அழுத்தம் தரும் விஷங்களில் நாம் ஒருபோதும் கவனம் செலுத்துக் கூடாது. எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருந்தால், பதற்றம் ஏற்படாது. வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமையும். 

பொறுப்பு உள்ளவராக இருக்க வேண்டும்:

மனிதன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்புகளை ஏக இறைவன் வழங்கியுள்ளான். அந்த பொறுப்புகளை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும். முதலில் வீட்டில் உள்ளவர்களுக்கு நாம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, பின்னர், பிற மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள், பொறுப்புகள் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும். இப்படி ஒருவர் பொறுப்பு உள்ளவராக இருந்தால், பின்னர் அவரது மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. 

பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்:

எந்தவொரு பிரச்சினையையும் தள்ளி போடாமல் அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். அப்போது தான் பிரச்சினைகள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க முடியும். குறிப்பிட்ட பிரச்சினையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிட்டால், நமது மனதில் அமைதியும், நிம்மதியும் ஏற்படும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்:


நமது இலட்சியங்கள், இலக்குகளை எளிதாக அடைய நம்மிடம் சுறுசுறுப்பாக செயல்படும் பழக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். வாழ்க்கையில் சாதித்தவர்கள் அனைவரும் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி, அதன்மூலம் வெற்றிகளை குவித்து இருப்பதை நாம் அறிய முடிகிறது. எனவே சுறுசுறுப்பு என்ற பழக்கத்தை நமது வழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். சுறுசுறுப்பாக பணி செய்பவர்களை எல்லோரும் விரும்பி, அன்பை செலுத்துவார்கள் என்பதையும் நாம், நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

நேர்மறை சிந்தனை அவசியம்:

வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமானால், எதிர்மறை சிந்தனை, எண்ணங்களை நாம் கட்டாயம் கைவிட வேண்டும். எப்போதும் நேர்முறை சிந்தனைகள் நம்மிடம் இருக்க வேண்டும். நேர்மறை சிந்தனை, நமக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி, நமது பணிகளில் வேகத்தை ஏற்படுத்தி, குறுகிய காலத்தில் நமது இலக்கை எட்ட உதவும் என்பதை மறந்துவிடக் கூடாது. நேர்மறை சிந்தனை நமது உடலுக்கும், மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும் என மருத்துவர்கள் ஆலோசனைகளை தருகிறார்கள். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

நமது வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடாமல், தனித்தன்மையுடன் நாம் செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால், நமது எண்ணங்கள் தூய்மையாக மாறும். அத்துடன், நம்மிடையே நேர்மறை சிந்தனைகள் வளர்ந்துகொண்டே வரும். இது வாழ்க்கையை மகிழ்ச்சி பாதையில் பயணிக்க பெரிதும் உதவி அளிக்கும். அதன்மூலம், நாம் மட்டுமல்லாமல், மற்றவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு, செயல்படும் ஒரு மனிதன் எப்போதும் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாவும் வாழ்வான். வெற்றிகளை குவித்துக் கொண்டே இருப்பான். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. 

===================== 


குற்றச்சாட்டு....!

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பு....!



மெகா ஊழல்...!

 தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் நடந்த மெகா ஊழல்...!

ஒரு விரிவான அலசல் மற்றும் தகவல்கள்;



கே.எம்.சி.சி.க்கு பாராட்டு...!

அனைத்துத் தரப்பு மக்களுக்கு சேவை ஆற்றும் காயிதே மில்லத் மனிதநேய மையம்....!

கே.எம்.சி.சி. சார்பில் சென்னையில் நடைபெற்ற இஃப்தார் திறப்பு நிகழ்ச்சியில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பாராட்டு....!

சென்னை, மார்ச்25-சென்னையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் கே.எம்.சி.சி. தமிழக கிளையின் சார்பில், புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, எழும்பூர் பைஸ் மஹாலில் 24.03.24 அன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மற்றும் ஆலிம் பெருமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கே.எம்.கே.பேச்சு:

நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், காயிதே மில்லத் மனிதநேய மையம் செய்து வரும் மனித நேயப்பணிகளை வெகுவாக பாராட்டினார். சாதி, மதம் பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும், காயிதே மில்லத் மனிதநேய மையம் செய்துவரும் பணிகள் மூலம் 700க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் பயன் அடைந்து இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். இதுபோன்ற பணிகள் இனியும் தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் பேசிய பேராசிரியர், சென்னையில் இயங்கி வரும் கே.எம்.சி.சி. கேரள மக்களின் நலனுக்காக மட்டுமே பணியாற்றவில்லை என்றும், அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தன்னுடைய பணிகளை செய்து வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார். 

செல்வப் பெருந்தகை கேள்வி:

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, நாட்டின் விடுதலைக்காக எந்தவித பங்களிப்பையும் வழங்காத பா.ஜ.க. உள்ளிட்ட அமைப்புகள், நாட்டின் உண்மையான பூர்வகுடி மக்களை பார்த்து, தற்போது நீங்கள் நாட்டிற்கு எந்த பணிகளையும் ஆற்றவில்லை என கூறி வருவதாக குற்றம்சாட்டினார். நாட்டின், விடுதலைக்காக இஸ்லாமியர்கள் ஆற்றிய பங்களிப்பை போன்ற பங்களிப்பை இதுவரை யாரும் செய்து இருக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்திய நாடு, இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் சொந்தமான நாடு என்றும், விரைவில் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், பா.ஜ.க. அரசு கொண்டு வந்த சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. உள்ளிட்ட சட்டங்கள் ஒழிக்கப்படும் என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் முன்னாள் எம்.பி. அப்துர் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மகளிர் அமைப்பின் தேசிய தலைவர் பாத்திமா முசப்பர், இ.யூ.முஸ்லிம் லீக் சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சமுத தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


ஏன் வீழ்த்தப்பட வேண்டும்...?

ஒன்றிய பாஜக அரசு, ஏன் வீழ்த்தப்பட வேண்டும்...?

ஒன்றியத்தில் கடந்த பத்து ஆண்டு காலமாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, ஏன் வீழ்த்தப்பட வேண்டும்? என்ற கேள்வி தற்போது நாடு முழுவதும் மக்களின் மனங்களில் உருவாகி, கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருக்கிறது. நாட்டு மக்களுக்கு சிறிதும் பயன் அளிக்காத மோடி அரசு, கட்டாயம் வீழ்த்தப்பட வேண்டும் என மக்கள் அனைவரும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதுகுறித்து விவாதிக்க தொடங்கிவிட்டார்கள். 

பாஜக அரசு - ஒரு பார்வை:

கடந்த பத்து ஆண்டுகளில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை மோடி அரசு உருவாக்கி, அவர்களின் வாழ்க்கையை ஒளியை ஏற்றி இருக்கிறதா? என கேள்வி எழுப்பினால், படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களும், இளைஞர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற மோடி அரசு எந்த முயற்சியையும் செய்யவில்லை என்றும், அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றே குற்றம்சாட்டி வருகிறார்கள். 

நல்ல கல்வி பெற்று வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், வங்கிகளில் கல்விக் கடன் வாங்கிய மாணவர்களின் கடனை, ஒன்றிய பாஜக அரசு தள்ளுபடி செய்ய மறுக்கிறது. ஆனால், தொழில் அதிபர்களின் லட்சக்கணக்ககான கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்கிறது. 

நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இதன் காரணமாக அவர்கள் அடிக்கடி தலைநகர் டெல்லியை நோக்கி வந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். 

மோடி அரசின் தவறாக பொருளாதாரக் கொள்கை காரணமாக, நாட்டில் அனைத்து அத்தியாவசிப் பொருட்களின் விலைகளும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துவிட்டன. இதனால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகிறார்கள். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் உயர்வு காரணமாக மக்கள் சந்திக்கும் துன்பங்கள் ஏராளம் என கூறலாம்.

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை வங்கிக் கணக்குகளை தொடங்க வைத்து, அவர்கள் சேமித்த வைத்த பணத்தை குறைந்தபட்ட தொகை இல்லை என காரணம் கூறி, மோடி அரசு சுருண்டியுள்ளது. இதனால், ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு கணக்கான ரூபாய் அளவுக்கு வருவாய் வந்துக் கொண்டே இருக்கிறது. இப்படி, ஏழை, எளிய மக்களின் பணம், அவர்களை அறியாமலேயே சுரண்டப்பட்டு வருகிறது. 

இந்திய ரூபாயின் மதிப்பு மோடி ஆட்சியில் வரலாறு காணாத அளவுக்குச் சரிந்துவிட்டது. அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 48 காசுகள் சரிந்து 83 ரூபாய் 61 காசுகளாக  வீழ்ச்சி அடைந்துவிட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி ரூபாய் மதிப்பு அதன் மிகக்குறைந்த அளவாக 83 ரூபாய் 40 காசுகளாக இருந்தது.  தற்போது மீண்டும் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன் போன்ற கடன்களுக்கு மக்கள் வங்கிகளுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.  "2014க்கு முன்பு ரூபாய் மதிப்பு சரிவையும், அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் வயதையும் ஒப்பிட்டு அநாகரிக கருத்துகள் சொன்ன அப்போதைய குஜராத் முதல்வர் மோடி, தற்போது பிரதமராக இருக்கும் நிலையில், அதுகுறித்து எதுவும் ஏன் கூறுவது இல்லை என்றும் அவர் எங்கே போய் விட்டார்?” என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 

மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டு இருக்கும் நிலையில், இதுவரை பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்று, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இது ஒரு பிரதமருக்கு அழகா என்றும், நாட்டு மக்கள் தற்போது கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். தனது வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்றும் வெறும் வெற்று முழக்கங்களை மட்டுமே, நாட்டு மக்களுக்கு பரிசாக அவர் அளித்து வருவதாகவும், பல்வேறு தரப்பினர் தற்போது குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த பத்து ஆண்டு காலமாக ஒன்றிய பாஜக அரசு, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்படாமல், நாட்டு மக்களுக்கு சிறிதும் பலன் இல்லாத அரசாக இருந்து வருகிறது. 

மோடி ஆட்சியில் தமிழகம் பாதிப்பு:

சரி, மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு நன்மை கிடைத்து இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினால், அதற்கும் பதில் இல்லை என்றே வருகிறது. தமிழகத்திற்கு அடிக்கடி வந்து, தமிழ்நாட்டின் மீது, தமிழக மக்கள் மீது தனக்கு மிகப்பெரிய அளவுக்கு அன்பும், பாசமும் உள்ளது என கூறிக் கொள்ளும், பிரதமர் மோடி, உண்மையில் தமிழகத்தின் நலன் சார்ந்த விஷயங்களில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை. அக்கறை காட்டவில்லை. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டு, மாநிலம் கடுமையாக பாதிப்பு அடைந்தது. அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பிற பொதுநல அமைப்புகள் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்கள். 

வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஒன்றியத்தில் இருந்து வந்த குழுக்கள், தங்களது ஆய்வை முடித்துக் கொண்டு சென்று அறிக்கைகளையும் சமர்ப்பித்துவிட்டன. ஆனால், இதுவரை வெள்ள நிவாரண நிதியை, தமிழகத்திற்கு மோடி அரசு வழங்கவே இல்லை. இதுதொடர்பாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் குழு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்கள். அப்போது உடனே நிதி அளிக்கப்படும் என அமித்ஷா உறுதி அளித்தார். ஆனால், அது பொய் உறுதி என்பது தற்போது உறுதியாகியுள்ளது. 

இதேபோன்று, சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டம் என்பது தமிழக அரசு 50 சதவீத நிதி, ஒன்றிய அரசு 50 சதவீத நிதி என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு பா.ஜ.க. அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. 

மும்பை-அகமதாபாத் இடைய புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த ஒன்னே கால் லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்யும் பிரதமர் மோடி, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏன் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதேபோன்று, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் பத்து ஆண்டுகளில், தமிழகத்தில் ஒன்றிய அரசின் சார்பில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால், அது இன்னும் ஒற்றை செங்கல்லுடன் இருந்து வருகிறது. பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் விரைவாக கட்டப்பட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் ஏன் கட்டப்படவில்லை? என்பது தமிழக மக்களின் கேள்வியாகும். 

நீட் விவகாரத்தில் மோடி அரசு தமிழக மாணவர்களின் நலனை கருத்திக் கொள்ளவில்லை. ஆனால், தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்தில் உருவாக்கியுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மட்டும், நீட் முறைப்படி, மாணவர்களை சேர்ப்பதை நாங்கள் தான் தீர்மானிப்போம என மோடி அரசு பிடிவாதம் செய்து வருகிறது. இதன் காரணமாக தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவு கரைந்து போய்கொண்டே இருக்கிறது. 

தமிழகத்திற்கு எதிராக மோடி அரசு செயல்பட்டு வருவதை, மேலே கண்ட தகவல்கள் மட்டுமல்ல, பல்வேறு புள்ளிவிவரங்களும் தமிழகத்திற்கு விரோதமான அரசு, பாஜக அரசு என்பதை சுட்டிக் காட்டுகின்றன. 

ஏன் வீழ்த்தப்பட வேண்டும்?

தமிழகத்திற்கு மட்டுமல்ல, பா.ஜ.க. ஆளாத பிற மாநிலங்களுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்து, அரசியலமைப்பு சட்டத்தின் படி செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தற்போது கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு, தங்கள் மாநிலத்திற்கு மோடி அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் அதை உடனே வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

இப்படி, கடந்த பத்து ஆண்டுகளில் வெறும் வெற்று முழக்கங்கள் மூலம் ஆட்சியை நடத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் எந்தவித முறையான திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அத்துடன், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருவது அதன் செயல்பாடுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. 

எதிர்க்கட்சிகளை ஒழிப்பது, எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குவது, எதிர்க்கட்சி ஆட்சிகளை கவிழ்ப்பது, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற ஒன்றிய சுதந்திரமான அமைப்புகளை தனது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துவது என்ற வகையில் தான் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. அத்துடன், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கையை கடைப்பிடிக்காமல், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ஆட்சி, ஒரே கொள்கை என பா.ஜ.க. முழக்கங்களை எழுப்பி வருகிறது. இதன் காரணமாகதான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு வீழ்த்தப்பட வேண்டும் என நாட்டு மக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதுகுறித்து விவாதிக்க தொடங்கிவிட்டார்கள்.  

நாட்டு மக்கள் மட்டுமல்ல, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோரும், மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்று கருத்துகளை கூறி வருகிறார்கள். அண்மையில் தமிழத்திற்கு  வந்த சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்ததுடன்,  18வது மக்களவைத் தேர்தலில், மோடி தோல்வி அடைவது உறுதி என்றும் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறுவது உறுதி என்றும் கூறியுள்ளார். ஆக, நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் விருப்பமாக தற்போது இருப்பது, மோடி வீழ்த்தப்பட வேண்டும். ஒன்றியத்தில் மக்கள் நலன் சார்ந்த, நாட்டு நலன் சார்ந்த நல்லாட்சி மலர வேண்டும். அது இந்தியா கூட்டணியின் ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதாகும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்