Monday, July 31, 2023

News Reading...!

                செய்தி வாசிப்பாளராக.....!



Sunday, July 30, 2023

Delhi Fire.....!

    தலைநகர் டெல்லியில் தீ விபத்து.....!



Thoughts.....!

               அழகிய சிந்தனைகள்.....!



மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு....!

          கேரளாவில் மத நல்லிணக்கத்திற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு....!

நாட்டில் மதங்கள் இடையே நீடிக்கும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாசிச சக்திகள் முயற்சிகள் செய்துவரும் நிலையில், தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்து-முஸ்லிம் மக்களிடையே நல்ல புரிதல் இருந்து வருகிறது. அதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருந்து வருகின்றன. 

கேரளாவில் புதிய முயற்சி:

கேரள மாநிலத்தில் இந்து-முஸ்லிம்-கிறிஸ்துவ மக்கள் மத்தியில் நல்ல சகோதரத்துவ இணைக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில், மத நல்லிணக்கத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்லும் வகையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொல்லத்தில் உள்ள எலவரம்குழி என்ற கிராமத்தில் உள்ள இரண்டு சின்னங்களுடன் கூடிய உண்டியல்  ஒரே மேடையில் வெவ்வேறு மதங்களின் அம்சங்களைத் தாங்கி நிற்கின்றன. 

ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் மகாதேவா ஆலயம், 250 மீட்டர் இடைவெளியில், பரஸ்பர மரியாதை மற்றும் சகோதரத்துவத்தின் நீண்ட வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன, எந்த பிரச்சாரமும் முறியாத பிணைப்பு. சின்னங்களை ஆங்காங்கே நிறுவுவது என்ற முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு முன் நடைமுறைக்கு வந்தது. மசூதி மற்றும் கோயில் இரண்டிற்கும் தனித்தனி சின்னங்கள் இருந்த நிலையில், ஒரு முன்மாதிரியாக இருக்கும் வகையில் புதியவற்றைக் கட்டுவதற்காக இரண்டையும் இடித்து . கட்டுமானத்திற்காக ஒரு பொதுவான குழுவை அங்குள்ள மக்கள் அமைத்தார்கள்.  இதற்காக ஷாஜி சண்முகம் என்பவர் நிலத்தை நன்கொடையாக வழங்கினார். சொத்துப் பத்திரங்களின்படி, நிலம் இப்போது மசூதிக்கும் கோவிலுக்கும் கூட்டாகச் சொந்தமாகியுள்ளது. இந்த இரண்டு சின்னங்களுக்கான உண்டியலில்  பக்தர்கள் காணிக்கை செலுத்துகிறார்கள். 

இணக்க நுழைவாயில்:

இரண்டு மத ஸ்தலங்களும் இணைந்து செயல்படுவது இது முதல் முறை அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இரண்டு வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்லும் பிரதான சாலையில் பொதுவான வளைவு அமைக்கப்பட்டது. இணக்க நுழைவாயில் என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு இரு மதங்களுக்கும் சொந்தமான வசனங்கள் மற்றும் வேதங்களைக் எடுத்துக் காட்டுகிறது. எலவரம்குழி கேரளாவின் ஒரு உள் பகுதி, ஆனால் அது மிகவும் வலுவான மதச்சார்பற்ற தன்மையைக் கொண்டுள்ளது. ஈத் ஊர்வலத்தின்போது முஸ்லிம்களுக்கு  முதலில் இனிப்புகளை வழங்குவது கோவில் கமிட்டிதான் என்று அங்குள்ள முஸ்லிம்கள் பெருமையுடன் கூறுகின்றனர். 

ஆண்டு தொடக்கத்தில் கோயில் திருவிழா நடைபெறும் போது, மசூதியின் உறுப்பினர்கள் விழாக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். திருவிழாவின் போது மஸ்ஜித் கமிட்டி கோவிலில் அன்னதானம் வழங்குகிறது. அமைதியான சகவாழ்வு மற்றும் மத நல்லிணக்கத்தின் தேவை தற்போதைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது. எதிர்காலத்தில் இதுபோன்ற பல முயற்சிகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்று கோவில் நிர்வாகி பணிக்கர்  கூறுகிறார்.

முஸ்லிம் வீடுகளில் தயாரிப்பு:

இதேபோன்று சபரிமலை யாத்ரீகர்களுக்கு முஸ்லீம் வீடுகளில் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. எலவரம்குழியில் வசிக்கும் அயூப் கான் இதுகுறித்து கூறும்போது, எங்களில் பெரும்பாலானோர் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள், வகுப்புவாத தடைகளை நாங்கள் நம்புவதில்லை. கட்டுமானத்திற்கு நிதியுதவி செய்ய சிலர் முன் வந்தாலும், பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இது பொதுக் கருத்தை அறியும் ஒரு வழியாகும். ஒரு நபர் கூட அதை எதிர்க்கவில்லை மற்றும் அனைத்து குடியிருப்பாளர்களும் பங்களித்தனர், என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். 

சின்னம் தயாரித்த சிற்பி:

மத நல்லிணக்க சின்னங்களை தயாரிக்க கதகளியின் வீடான கொட்டாரகராவில் இருந்து ஒரு சிற்பி பணியமர்த்தப்பட்டார். இரு சமூகத்தினரிடமிருந்தும் கட்டிடக்கலை கூறுகள் இருப்பதை உறுதி செய்வதற்காக, வடிவமைப்பு மற்றும் வண்ணத் திட்டம் பக்தர்களுடன் கலந்தாலோசித்து சரி செய்யப்பட்டது. இது ஒரு பெரிய விஷயமாக நினைக்கவில்லை என்று கூறும் இந்து சமுகத்தைச் சேர்ந்த ராஜாமணி,  தினமும் காலையில் கோயிலுக்குப் போவேன். தற்போது ஒரே வித்தியாசம் என்னவென்றால், நான் காணிக்கை செலுத்தும்போதெல்லாம் இரண்டு காசுகளை எடுத்துச் செல்வதுதான் என்று பெருமையுடன் கூறுகிறார். 

நன்றி: தி இந்து நாளிதழ் - தமிழில் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Saturday, July 29, 2023

பர்கர்கள் மற்றும் சிப்ஸ்கள் ஆபத்து...!

 பர்கர்கள் மற்றும் சிப்ஸ்கள்  அடிக்கடி சாப்பிடுவது ஆபத்தை விளைவிக்கும்....!


நாம் அனைவரும் நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறோம். ஆனால், அதற்கான சரியான முறைகளை நாம் பின்பற்றுகிறோமா என்றால், அதற்கு பதில் இல்லை என்றே வருகிறது. உணவுப்பழக்க வழக்கங்கள், மக்கள் மத்தியில் சரியாக இருப்பதில்லை. உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும் என விரும்பும், மக்கள், தங்கள் உணவு முறைகளில் சரியான முறைகளை எப்போதும் பின்பற்றுவதில்லை. சரியான நேரத்தில், சத்தான உணவு சாப்பிடும் பழக்கம் மக்களிடையே தற்போது இல்லை. 

நமது முன்னோர்கள் நூறு வயதை தாண்டி நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து இருக்கிறார்கள். நம்மிடையே நூறு வயதை எட்டி தற்போது வாழ்ந்து வரும்  பல முதியோர்களை சந்தித்து, அவர்களின் இந்த ஆரோக்கியமான நிலைக்கு என்ன காரணம் என வினா எழுப்பினால், ஆரோக்கியமான வாழ்விற்கு ஆரோக்கியமான உணவு, நல்ல எண்ணங்கள், சரியான தூக்கம் என்றே பதில் வரும். இன்றைய நவீன யுகத்தில், இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியமான உணவு உட்கொள்ளும் முறைகளில் சரியான வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. அதன் காரணமாக இளமை காலத்திலேயே ஹார்ட் அட்டாக் வந்து சில இளைஞர்கள் உயிரிழக்கிறார்கள். இத்தகைய நிலை, தற்போது அதிகமாக கொண்டே செல்கிறது. 

உணவே மருந்து:

கடந்த 50 அல்லது 60 ஆண்டுகளுக்கு முன்பு ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவரிடம் சென்றால், அவர், நல்ல தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறி, உணவே மருந்து என்ற  கொள்கையின்படி, அதற்கு ஏற்ப ஆலோசனைகளை தருவார். நல்ல சத்தான உணவுகளை, குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுங்கள், மருந்து மாத்திரைகளால், மிகப்பெரிய அளவுக்கு பயன் கிடைக்காது. ஆனால், சத்தான உணவை சாப்பிடுவதால், உங்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலப் பாதிப்பு விரைவில் குணம் அடைந்து விடும். எப்போதும் ஆரோக்கியமான சிந்தனைகளுடன் வாழுங்கள் என ஆலோசனைகளை தருவார். இதை கேட்கும், நோயாளிக்கு அப்போதே, உடல் நன்றாக மாறிவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. 

உலகில் தற்போது மருத்துவத்துறை மிகப்பெரிய வியாபாரத்துறையாக மாறிவிட்டது. சின்ன பிரச்சினைக்குக் கூட மருத்துவரிடம் சொன்றால், உடனடியாக ஓர் டெஸ்ட் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி விடுகிறார்கள். ஒரு சின்ன டெஸ்ட்க்கு கூட ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், நோயாளி மன ரீதியாக மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதன்மூலம், அவரது சின்ன பிரச்சினை கூட மிகப்பெரிய பிரச்சினையாக மாறி, உடல்நிலை மேலும் மோசம் அடைந்து விடுகிறது. 

நம்பிக்கை தரும் வார்த்தைகள் கூறுவது தற்போது மருத்துவர்கள் மத்தியில் மிகவும் குறைந்துவிட்டது. லட்சக்கணக்கில் பணம் செலவழித்து, மருத்துவப் படிப்பு படித்துவரும் இளம் மருத்துவர்கள், அதை திருப்பி எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே மருத்துவப் பணியை செய்கிறார்கள். எனினும், சமூக நலனில் அக்கறை கொண்ட ஒருசில நல்ல மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. உணவு முறைகள் குறித்தும், அதை எப்படி சரியான அளவுக்கு பயன்படுத்துவது குறித்தும் தற்போதைய மருத்துவ உலகம் அறிந்து இருந்தாலும், அதை பெரும்பாலான நேரங்களில் நோயாளிகளுக்கு எடுத்துக் கூறுவது இல்லை. நம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறுவதில்லை. நோயாளிகள் மேலும் அதிர்ச்சி அடையும் வகையில் எதிர்மறை வார்த்தைகளை தற்போதைய மருத்துவர்களில் பெரும்பாலானோர் கூறிவிடுகிறார்கள். இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது என்பதை ஏனோ அவர்கள் அறிந்து கொள்வதில்லை. 

பர்கர்கள் மற்றும் சிப்ஸ்கள் ஆபத்து:

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் மத்தியில் பர்கர்கள் மற்றும் சிப்ஸ்கள் அடிக்கடி சாப்பிடும் பழக்கம் இருந்து வருகிறது. இப்படி அடிக்கடி சாப்பிடுவதல் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் ஆபத்துகள் குறித்து அவர்கள் அறிந்துகொள்வதில்லை. பர்கர்கள் மற்றும் சிப்ஸ்கள் சாப்பிடுவதல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

ஆஸ்துமா ஒரு அழற்சி நோய். யாரேனும் சில தூண்டுதல்களுக்கு (சுவாச வைரஸ்கள், தூசி அல்லது உடற்பயிற்சி போன்றவை) வெளிப்படும்போது, நுரையீரலுக்குச் செல்லும் காற்றுப்பாதைகள் வீக்கமடைந்து குறுகியதாக மாறும். இது பொதுவாக ஆஸ்துமா தாக்குதல் (அல்லது தீவிரமடைதல்) எனப்படும் போது சுவாசிப்பதை கடினமாக்குகிறது. ஆஸ்திரேலியர்களில் பத்தில் ஒருவருக்கு ஆஸ்துமா உள்ளது. இது ஆஸ்திரேலியாவில் நான்காவது பொதுவான நாள்பட்ட நோயாக இருந்து வருகிறது. இந்தியாவிலும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது. 

ஒருவரின் உணவுமுறை அவர்களின் ஆஸ்துமா அறிகுறிகளை எவ்வாறு பாதிக்கலாம் என்பது குறித்து  மருத்துவ ஆய்வுகள் அதிர்ச்சி தரும் தகவல்களை தருகின்றன.  அதில், பர்கர்கள் மற்றும் சிப்ஸ்கள் உணவு நேரங்களில் சேர்த்துகொள்வது ஆபத்தை தரும் என தெரியவந்துள்ளது.  ஒருவரின் நுரையீரல் எவ்வளவு நன்றாகச் செயல்படுகிறது, ஒருவருக்கு எவ்வளவு அடிக்கடி ஆஸ்துமா தாக்குதல்கள் உள்ளன  என்பதற்கு உணவு முறைகள் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக மருத்துவர் ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது. 

பழங்கள் மற்றும் காய்கறிகள்:

ஆஸ்துமா உள்ள பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் பழங்கள், காய்கறிகள் அதிகம் உணவில் சேர்த்துகொள்வது மிகவும் அவசியம். பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் உண்ணும்படி அறிவுறுத்தப்பட்ட பெரியவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது என்றும், குறைந்த அளவுக்கு சாப்பிட்டவர்களுக்கு நுரையீரல் செயல்பாடு மோசமாக இருந்தது என்றும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. 

எனினும், எண்ணெய் மீன், ஆளிவிதை, சியா விதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற ஒமேகா-3 அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதில் எந்தத் தீங்கும் இல்லை. இது இதய நோய் அபாயத்தைக் குறைப்பது போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது என்றும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

பிஸ்கட், சாசேஜ்கள், பேஸ்ட்ரிகள் மற்றும் சாக்லேட் போன்ற அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும், துரித உணவுகளிலும் நிறைவுற்ற கொழுப்புகள் காணப்படுகின்றன. நிறைவுற்ற கொழுப்புகள் உள்ள உணவுகள், சர்க்கரை மற்றும் சிவப்பு இறைச்சி, ஒருவரின் ஆஸ்துமா அறிகுறிகளை  மேலும் மோசமாக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 

உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால் எப்போதாவது ஒரு பர்கர் அல்லது சில சூடான சிப்ஸ் சாப்பிடுவது சரி. ஆனால் இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது உங்கள் ஆஸ்துமாவை மேலும் பாதிக்கும் என்பதை அறிவது உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக்கூடிய  முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

ஆஸ்துமா உள்ளவர்கள் பால் சாப்பிடுவதால் ஆஸ்துமா மோசமடைகிறது என்று கூறினாலும், இது உண்மையல்ல என்று சான்றுகள் காட்டுகின்றன. உண்மையில், ஆஸ்துமா உள்ள பெரியவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பால் குடிப்பது சிறந்த நுரையீரல் செயல்பாட்டுக்கு உதவும் என தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், அடிக்கடி கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது சரியல்ல என்றும் இதன்மூலம் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனைகளை தருகிறார்கள். 

எனவே, நவீன நாகரீக உலகத்தில் வாழும் இளைஞர்கள் அனைவரும் தங்கள் உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். அதற்காக தவிர்க்க வேண்டிய உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். இதன்மூலம், ஆஸ்துமா உள்ளிட்ட நோய் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதுடன், ஆரோக்கியமான வாழ்வை வாழலாம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Delhi Heavy Rain....!

                 டெல்லியில் கனமழை.....!

                       மக்கள் பாதிப்பு......!!



டெல்லியில் கனமழை....!

டெல்லியில் பெய்த கனமழையால் கடும் போக்குவரத்து பாதிப்பு.....!

Manipur Protest.....!

மணிப்பூரில் அமைதி திரும்ப வலியுறுத்தி மக்கள் போராட்டம்....!



Delhi Memories....!

             நியூ டெல்லி நினைவுகள்.......!




முன்னுதாரணம்...!

இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறையின் மூலம் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.....!

இந்தியா உட்பட உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் தாங்கள் தங்களுடைய மார்க்கச் சட்டங்களை  பின்பற்றி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்களா என்ற கேள்வி பொதுவாக இருந்து வருகிறது. மாறிவரும் நவீன காலத்தில் முஸ்லிம்களும் தங்களுடையே வாழ்க்கையை நவீனத்துவமாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள். 

நவீன காலத்தில், பெண்களுக்கான சிறப்பு உரிமைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பெண்கள் உரிமை அமைப்புகள் கூக்குரலிட்டு வருகின்றன. இந்தியாவில் வாழும் முஸ்லிம் பெண்களுக்கு உரிமைகளை வழங்கப்படவில்லை என ஒருசில பாசிச அமைப்புகள் கூச்சலிட்டு வருகின்றன. முத்தலாக் உள்ளிட்ட விவகாரங்களை கையில் எடுத்துக் கொண்டு, முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக தாங்கள் பேசுவதாக கூறிக் கொண்டு, முஸ்லிம் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அந்த அமைப்புகள் பணியாற்றி வருகின்றன. 

இஸ்லாத்தில் பெண் உரிமை:

இஸ்லாத்தின் செய்திக்கு முன், அரேபியர்கள் ஒரு பெண் குழந்தை பிறப்பை அறிவிப்பதைக் கூட தங்கள் கண்ணியத்திற்குக் கீழே கருதினர். புனித குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவர்கள் தங்கள் மகள்களை உயிருடன் புதைத்தனர். அரேபியர்கள் பெண்களை வீட்டு விலங்குகளைப் போலவே வாங்கவும் விற்கவும் கூடிய ஒரு பொருளாகக் கருதினர். அவர்கள் கொள்கையற்ற பலதார மணத்தை கடைப்பிடித்தனர்.  தங்கள் பெண்களை மக்கள் குறையாக பார்த்தனர். 

ஆனால், இஸ்லாமிய நெறி அரேபிய தீபகற்பத்தில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பரவியபோது, பெண்களுக்கு அவர்களுக்கான கண்ணியம் கிடைத்தது. திருமணங்கள் கூட பெண்ணின் சம்மதத்துடன் ஒரு சமூக ஒப்பந்தமாக நடைபெற்றன. கடுமையான தண்டனைகளின் மூலம் விபச்சாரம் ஒழிக்கப்பட்டது.  திரும்ணம் செய்துக் கொண்டு, தீன்நெறியில் வாழ்வது  எளிதான காரியமாக மாற்றப்பட்டது. 

இஸ்லாத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ்வுடனான உறவைப் பொருத்தவரையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஏனெனில் இருவருக்கும் நல்ல நடத்தைக்கு ஒரே வெகுமதியும் தீய நடத்தைக்கு ஒரே தண்டனையும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் "ஆண்களுக்கு பெண்கள் மீதுள்ள உரிமைகளைப் போலவே பெண்களுக்கும் ஆண்கள் மீதான உரிமைகள் உள்ளன  ” என்று குர்ஆன் கூறுகிறது.(2:226)

பலதார மணத்தைப் பொறுத்த வரையில் இஸ்லாம் அதை அனுமதித்துள்ளது ஆனால் நிபந்தனைகளுடன் கூடியது. 

“அனாதை பெண்களிடம் நீங்கள் நியாயமாக நடந்து கொள்ள மாட்டீர்கள் என்று நீங்கள் அஞ்சினால், இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை திருமணம் செய்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் நீதியாக இருக்க மாட்டீர்கள் என்று நீங்கள் பயந்தால், உங்கள் வலது கரம் உடையவர்களையோ அல்லது ஒருவரையோ [திருமணம் செய்து கொள்ளுங்கள்]. நீங்கள் [அநீதிக்கு] சாய்ந்துவிடாதிருக்க இது மிகவும் பொருத்தமானது. (அல்குர்ஆன் 4:129)

“அவ்வாறு நீங்கள் முயற்சி செய்தாலும், மனைவிகளுக்கு இடையே சமமாக இருக்க முடியாது. எனவே முழுமையாக [ஒன்று நோக்கி] சாய்ந்து மற்றொன்றை தொங்கவிடாதீர்கள். மேலும் நீங்கள் (உங்கள் விவகாரங்களை) திருத்திக்கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சுவீர்களானால் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்று ஏக இறைவன் கூறுகின்றான். 

எளிமையான திருமணங்கள்:

திருமணம் குறைந்த செலவில் மிகமிக எளிமையாக நடத்தப்பட வேண்டும் என இஸ்லாம் நமக்கு சொல்லித் தருகிறது. ஆனால், பொதுவாக அப்படி நடப்பது இல்லை. முஸ்லிம்கள் திருமணங்களுக்கு கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்கிறார்கள். இதனால் அல்லாஹ்வின் கட்டளையை மீறுவது மட்டுமல்லாமல், நம் அன்பிற்குரிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளுக்கும் எதிராகவும் நடந்துக் கொள்கிறார்கள். 

நம் சமுதாயத்தில் மாற்று மத தோழர்கள் பின்பற்றும் முறைப்படி திருமணங்கள் மிகவும் ஆடம்பரமாக நடைபெறுகின்றன. இஸ்லாமிய நெறிமுறைகளை ஓரளவுக்கு தெரிந்த நபர், இஸ்லாமிய முறைப்படி திருமணங்கள் நடந்தால், வரதட்சணை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக லட்சக்கணக்கான பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் கடன் தொல்லை இருக்காது என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். 

ஆனால், முஸ்லிம்களின் வாழ்க்கை அவர்கள் காணும்போது, இவர்களும் நம்மைப் போன்றுதான் இருக்கிறார்கள் என வேதனை அடைகிறார்கள்.  இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி திருமணங்களை மட்டுமே செய்திருந்தால் மற்றவர்களின்  பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதற்கு பதிலாக இஸ்லாமிய பழக்க வழக்கங்களில் உறுதியாக இருந்தால், அதுவே, மற்ற சமுதாய மக்களுக்கு ஓர் அழைப்பு பணியாக இருக்கும் என்பதை முஸ்லிம்கள் மறந்துவிட்டார்கள். 

சொத்துரிமை மற்றும் தலாக்:

இஸ்லாம் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது. இது முதலில் மகள்களின் பங்கை நிர்ணயித்தது. அதன்பின் இரு மடங்கு மகன்களுக்கு வழங்கப்பட்டது, ஏனெனில் மகள்களுக்கும் கணவரின் சொத்தில் உரிமை உண்டு. மேலும், மகன்கள் தங்கள் பெற்றோரைக் கவனித்துக்கொள்வதுடன், தங்களுடைய சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கும் உதவுகிறார்கள்.  இத்தகைய விதிகள் 1950களின் பிற்பகுதியில் மட்டுமே இந்து குறியீட்டு மசோதாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அது கடுமையாக எதிர்க்கப்பட்டது.

உண்மையில் முஸ்லீம் சமூகம் குர்ஆன் வழிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். நாம் இஸ்லாமிய சட்டங்களை மட்டுமே பின்பற்றியிருந்தால், நமது நாட்டில், இஸ்லாமிய சட்டங்கள் குறித்து தெளிவான மற்றும் உறுதியான ஓர் பார்வை மற்றவர்களுக்கு  கிடைத்து இருக்கும். 

இதேபோன்று தலாக்-விவாகரத்து பிரச்சினையிலும் முஸ்லிம்கள், மார்க்கச் சட்டங்களை பின்பற்றாமல், தங்கள் விருப்பம் போல் நடந்துக் கொள்வதால், மற்றவர்களின் பார்வையில் தலாக் குறித்து தவறான கண்ணோட்டம் உருவாகிறது. எனவே, முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும், அவர்களின் உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் போலியான கூச்சலை சிலர் எழுப்புகிறார்கள். 

முஸ்லிம் சமுகம் மாற வேண்டும்:

இஸ்லாமிய வாழ்க்கை முறை தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிவற்றுடன் மட்டுமே முடிந்து விடுவதில்லை. ஒரு முஸ்லிமின் உண்மையான ஈமானிய வாழ்க்கையே, பிற மத சமுதாய மக்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க முடியும். முஸ்லிம்கள் குறித்து அவர்கள் மிகவும் பெருமையாக பேசும் வகையில் இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்க்கையை மார்க்க நெறிமுறைகளுக்கு ஏற்ப வாழ வேண்டும். ஒருமுறை மாற்று மத நண்பர் ஒருவர் என்னிடம் பேசியபோது, இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிந்துக் கொண்டு செல்வதை பார்க்கும்போது, அவர்களை தவறான  கண்ணோட்டத்துடன் பார்க்காமல், கண்ணியத்துடன் பார்க்க முடிகிறது என கூறினார். 

இதேபோன்று, வாக்குறுதி, வட்டி, சகோதரத்துவம், பிறர் நலன் பேணுதல் உள்ளிட்ட பல விவகாரங்களில் முஸ்லிம்களின் பண்புகள் தம்மை கவருகின்றன என்றும் அந்த நண்பர் கருத்து தெரிவித்தார். இப்படி நல்ல இஸ்லாமிய வாழ்க்கையை ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்ந்து, அதன்மூலம் உண்மையான இஸ்லாமிய நெறியை மற்றவர்களுக்கு எளிமையாக எடுத்துக் கூற வேண்டும். நல்ல முஸ்லிமாக வாழ்வதன் மூலம் மட்டுமே, இஸ்லாமியர்கள்  குறித்து தவறாக பரப்பப்படும் கருத்துகள், சர்ச்சைகள் யாரிடும் எடுப்படாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட இஸ்லாமிய வாழ்க்கை நெறியுடன் வாழ்ந்து அழகிய தாவா பணியின் மூலம் நல்ல மாற்றத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். அழகிய வாழ்க்கையின் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Friday, July 28, 2023

TN Leading Journalist...!

தமிழகத்தின் திறமையான ஊடகத் தோழர்கள் மற்றும் தோழிகள்.....!

இன்னும் சிறப்பாக பணிபுரிந்து ஊடகத் துறையில் சாதிக்க வாழ்த்துகள்....!



உறவுகள் ஒரு தொடர்கதை...!

                 அழகிய உறவுகள்......!

        மறக்க முடியாத மகிழ்ச்சிகள்......!!

           

நீதி.....!

                      தாமதமான நீதி.....!

                     மறுக்கப்பட்ட நீதி....!!

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு வகைகளில் நெருக்கடிகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, போலி வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நாட்டின் பல சிறைகளில் அடைக்கப்பட்டு தங்கள் வாழ்நாளை வேதனையுடன் கழித்து வருகிறார்கள்.

நீதிமன்றங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வழக்குகள் இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன.

பாட்லா ஹவுஸ் போலி என்கவுன்டர்:

கடந்த செப்டம்பர் 19, 2008 அன்று டெல்லியில் பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் நடந்தது.

இந்த சம்பவம் நடந்த பதினைந்து வருடங்களாகியும் வழக்கு இன்னும் நீதிமன்றங்களில் நீடிக்கிறது. இந்த இழிவான என்கவுண்டரில் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, இறந்த சிறுவர்கள் மீது  மண்டை ஓடுகள் காணப்பட்டன. இது ஒரு என்கவுண்டரில் ஒருபோதும் நடக்காது.

ஜாமியா மில்லியா பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஒற்றுமைக் குழு, பட்லா ஹவுஸில் 'என்கவுண்டர்' என்ற அறிக்கையை வெளியிட்டது. 

அதில், சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களில், ஒரு ஜீஷான் அஹ்மத் சம்பவத்தின் போது அங்கு இருக்கவில்லை. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளானிங் அண்ட் மேனேஜ்மென்ட் மாணவராக இருந்த அவர், தேர்வில் கலந்து கொண்டார். வர்த்தக ஆசிரியரான ஜீஷனின் தந்தை, ஜீஷானின் எதிர்கால வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைத்து இருந்தார். எனவே அவரது இருப்புப் பிஎஃப் பணத்தைப் பயன்படுத்தி தனது மகனை ஐஐபிஎம்மில் சேர்த்துக் கொள்ள முயற்சித்தார். 

பாட்லாவில் நடந்த சம்பவங்களை ஜீஷன் அறிந்ததும், அவர் தனது தந்தையை அழைத்தார். அவர், ஒரு செய்தி சேனலுக்குச் சென்று அனைத்து உண்மைகளையும் சொல்லும்படி மகனை அறிவுறுத்தினார். இருப்பினும், அந்த செய்தி சேனல் அலுவலகத்தில் இருந்து ஜீஷன் கைது செய்யப்பட்டார்.  

இப்படி, உயர்கல்வியைத் தொடர பெரிய நகரங்களுக்குச் செல்லும் முஸ்லிம் இளைஞர்கள், ஏதாவது ஒரு சாக்குப்போக்கு கூறி சிறையில் அடைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. 

இளமை பாழகிறது:

இறுதியில், கணிசமான ஆதாரம் இல்லாத காரணத்திற்காக நீதிமன்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டபோது, ​​அவர்கள் சிறையில் தங்கள் இளமைக் காலத்தை இழந்ததோடு, சமூகக் கைகலப்பில் இருந்து தங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டனர். 

நமது நீதித்துறை நீதியை நிலைநாட்ட முனைகிறது. ஆனால் இந்த நீதியின் நோக்கம் அதிகப்படியான தாமதம் காரணமாக நிறைவேற்றப்படுவதில்லை. "தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி" என்பது பழமொழி. தவறான விசாரணை, வேண்டுமென்றே தவறாக வழிநடத்தும் வாதங்கள் போன்றவற்றை நமது நீதிமன்றங்கள் ஒருபோதும் கவனத்தில் கொள்வதில்லை. விசாரணை அதிகாரிகளோ அல்லது ஏஜென்சிகளோ மனித உயிர்களை சீரழித்ததற்காக ஒருபோதும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதில்லை.

ஒருவர் குற்றவாளி என  நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவர்  என்பது, ஊடகப் பிரச்சாரத்தின் மூலம் உண்மையில் தற்போது தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது.

மொஹமட், முகமது சர்வார் போன்றவர்கள் விடுவிக்கப்பட்டாலும், மற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை.இந்த வழியில், அவர்களின் முழு வாழ்க்கையும் பாழாகிறது. 

நாகரீக உலகில் இருந்து வெளியேற்றப்பட்ட நபரின் கொலைக்கு இது குறைவானது அல்ல. 

சமூகம் சிந்திக்க வேண்டும்:

தமிழகம் உட்பட நாட்டின் பல சிறைச்சாலைகளில் பல ஆண்டுகளாக முஸ்லிம் இளைஞர்கள் அடைக்கப்பட்டு வாழ்க்கையில் வேதனை அனுபவித்து வருகிறார்கள். பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதனால் தண்டனை காலம் முடிந்த பிறகும் முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் விடுதலைக்காக நீதிமன்றங்களை ஏறி இறங்க வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான இந்த போக்கு மாற வேண்டும். அரசும் நீதித்துறையும் வழக்குகளை விரைந்து முடித்து முஸ்லிம் இளைஞர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும். தாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பதை அனைவரும் உணர வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Thursday, July 27, 2023

Exhibition....!

               வேலூர் பொருட்காட்சியில் 

                    ஓர் அழகிய அரங்கம்.....!



சுற்றுல்லா தளம்....!

          இந்தியாவின் சுற்றுலா தளங்கள்....!

                   கர்நாடகாவின் ஒரு பகுதி.....!





 

அரண்மனை....!


அழகிய அரண்மனையின் அற்புத காட்சி.....!


 

பொருட்காட்சி....!

வேலூர் பொருட்காட்சியில்
 ஓர் அழகிய அரங்கம்....!


 

சிறுத்தை....!

       உயிரியல் பூங்காவில் ஒரு சிறுத்தை....!





 

சகோ.ஷெரீப்-வுடன்....!


ஊடகத் தோழர் மெஹபூப் ஷெரீப்-வுடன்...!



 

Tuesday, July 25, 2023

Monday, July 24, 2023

டி.டி.பொதிகை நினைவுகள்...!

        டி.டி.பொதிகை நினைவுகள்......!



Black & White....!

         கறுப்பு - வெள்ளை, நான்.....!



Vellore Lions....!

              வேலூர் வேங்கைகள்.....!




 

கனவு நகரம்.....!

                          கனவு நகரம்....!

சென்னை மாநகரம், தற்போது வட இந்திய இளைஞர்களின் கனவு நகரமாக மாறி வருகிறது. 

மாறிவிட்டது. 

சென்னையின் எந்த பக்கம் திரும்பினாலும்,  இந்தி கலந்த தமிழ் மொழியை பேசும் வட இந்திய இளைஞர்களை, மக்களை காண முடிகிறது. 

உணவகங்களில் வேலை செய்யும் பத்து பேரில் 8 பேர் வட இந்திய இளைஞர்கள்.

மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும்போது, வட இந்திய இளைஞர்களைதான் அதிகம் பார்க்க முடிகிறது. 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களில் வட மாநில மக்களின் கூட்டம்தான் அதிகம்.

சினிமா தியேட்டர்களில், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள்தான் டிக்கெட் வாங்க அதிகமாக வரிசையில் நிற்கிறார்கள். 

கட்டிட தொழிலாளிகளில் வட இந்திய மக்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். 

சின்ன சின்ன தொழில்களை கூட கவுரவம் பார்க்காமல் செய்யும் வட இந்திய இளைஞர்களை சென்னையில் அதிகமாக பார்க்க முடிகிறது. 

ஏன்,

பிச்சை எடுக்கும் தொழிலை செய்யும் பலரில், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். 

ஒருசில கொள்ளை சம்பவங்களிலும் வட இந்திய இளைஞர்கள் இருப்பது செய்தி ஊடகங்கள் தரும் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. 

சரி,

நம்ம ஆளுங்க என்ன செய்கிறார்கள். 

அதுதான் இருக்கிறதே, அரசு மதுபானக் கடையான டாஸ்மாக். 

அதில், கூட்டம் கூட்டமாக மொய்கிறார்கள் தமிழர்கள். 

வேலை செய்யும் ஆர்வம் சிறிதும் இல்லை தமிழர்களுக்கு. 

பணம் சம்பாதித்து குடும்பத்தை காப்பற்ற மனம் இல்லை தமிழர்களுக்கு.

சம்பாதிக்கும் பணத்தைக்கூட,  மது அருந்தி, செலவழிக்கதான் தமிழர்களின் புத்தி செல்கிறது. 

அத்துடன்,

கபாலி, கபாலி என சினிமா பின்னாடி ஓடுகிறான்.

நடிகனுக்கு பாலாபிஷேகம் செய்கிறான்.

முதல்நாள் முதல் ஷோ பார்த்து அதை படம் எடுத்து முகநூலில் போட்டு மகிழ்ச்சி அடைகிறான்.

ஏதோ உலகத்தில் மிகப்பெரிய சாதனை செய்துவிட்டதாக நினைத்து பூரிப்பு அடைகிறான்.

இதே நிலை தொடர்ந்தால், 

சென்னை மட்டுமல்ல, தமிழகமே இனி வட இந்திய இளைஞர்களின், மக்களின் கனவு நகரமாக மாநிலமாக விரைவில் மாறி விடும். 

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்.

Sunday, July 23, 2023

நச்சுப் பிரச்சாரம்.....!

முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுப் பிரச்சாரம்..!

நாட்டில் வாழும் 20 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள், அமைதியாக, மகிழ்ச்சியாக வாழவே கூடாது என்ற ஒரே கொள்கையுடன் இந்துத்துவ அமைப்புகள் உறுதியாக இருந்து செயல்பட்டு வருகின்றன. அதற்காக அனைத்து சக்திகளையும் அவை பயன்படுத்தி வருகின்றன.

குறிப்பாக, ஊடகத் துறை, சமூக வலைத்தளம் ஆகியவற்றை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தி போலி தகவல்களை பரப்பி, முஸ்லிம்கள் குறித்து பிற   சமுதாய மக்கள் மத்தியில் தப்பான எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. இதன்மூலம், நாட்டில் ஒரு பதற்றத்தை உருவாக்கி முஸ்லிம்களின் அமைதியை சீர்குலைக்கின்றன. முஸ்லிம் இளைஞர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கின்றன. 

மணிப்பூர் விவகாரம்:

முஸ்லிம்கள் குறித்து தவறான தகவல்கள், போலி செய்திகள் ஆகியற்றை செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள் பரப்பி வருவதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அண்மையில், நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்த மணிப்பூர் பாலியல் வன்முறை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் குறித்து தகவல்களை வெளியிட்ட ஏஎன்ஐ செய்தி நிறுவனம், அதில் அப்துல் ஹிலிம் என்ற முஸ்லிம் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டார் என செய்தியை பரப்பியது.

இந்த செய்தியின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள புதிய  தலைமுறை தொலைக்காட்சியும் முஸ்லிம் இளைஞர் கைது என பரபரப்பான செய்தியை ஒளிபரப்பியது.

இதேபோன்று, பாசிச அமைப்புகளும் சமூக வலைத்தளங்களில், மணிப்பூர் பாலியல் வன்முறையில் முஸ்லிம் இளைஞர் கைது என போலி தகவல்களை பரப்பின.

இப்படி போலியாக பரப்பும் தகவல் மற்றும் செய்திகளால் எத்தகைய விபரீத பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து அவர்களுக்கு கவலையில்லை. முஸ்லிம்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் பதற்றதை உருவாக்க வேண்டும். இதுதான் பாசிச அமைப்புகளின் ஓரே திட்டம். மணிப்பூர் விவகாரத்தில் அந்த திட்டத்தை சரியாக பாசிச அமைப்புகள் நிறைவேற்றின.

மன்னிப்பு கேட்ட ஏஎன்ஐ:

மணிப்பூர் பாலியல் வன்முறை விவகாரத்தில் முஸ்லிம் இளைஞர் கைது என போலி செய்தி வெளியிட்டு நாடு முழுவதும் பரப்பிய ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு, அது வெளியிட்ட தகவல் பொய் மற்றும் போலியானது என சமூக நலனில் அக்கறை கொண்ட சிலர், ஆதாரப்பூர்வமாக எடுத்துக் கூறி கண்டனம் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஏஎன்ஐ நிறுவனம், தான் வெளியிட்ட செய்தியை நீக்கியதுடன், வருத்தமும் தெரிவித்துக் கொண்டு செய்தி வெளியிட்டது.

இதேபோன்று, புதிய தொலைக்காட்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசிய திருச்சியை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர், மணிப்பூர் பாலியல் வன்முறையில் முஸ்லிம் இளைஞர் கைது என்ற செய்தியை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வெளியிட்டடீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்த போலி செய்தி குறித்து வருத்தம் தெரிவித்து, செய்தி வெளியிட வேண்டும் என்றும் இல்லையெனில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த எச்சரிக்கைக்குப் பிறகு, புதிய தொலைக்காட்சி நிறுவனம், தான் வெளியிட்ட செய்தியை நீக்கியதுடன், வருத்தமும் தெரிவித்துக் கொண்டது.

மணிப்பூரில் முஸ்லிம் இளைஞரின் மனிதநேயம்:

மணிப்பூரில் கலவரம், வன்முறை வெடித்தபோது, முஸ்லிம் இளைஞர்கள் சிலர், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், பல பெண்களை காப்பற்றியுள்ளனர்.

இப்படி காப்பாற்றப்பட்ட பெண் ஒருவர் குறித்த செய்தி Quint என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பாலியல் வன்கொடுமைக்கு  இலக்கான குக்கி இன பெண், தன்னை ஒரு  முஸ்லிம் எப்படி காப்பாற்றினார் என்பதை விவரிக்கிறார். முஸ்லிம் இளைஞர் மூலம் மட்டுமே தான் பாதுகாப்புடன் வீடு சென்று சேர முடிந்தது என அந்த பெண்மணி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

இதன்மூலம், ஒரு முஸ்லிமிடம் எதிர்பார்க்கப்படும்  பொறுப்புணர்வை அந்த முஸ்லிம் நிறைவேற்றியுள்ளார்.

ஆனால், இது குறித்த தகவல்களை மீடியாக்கள் வெளியிடுவதில்லை. மறைத்து விடுகின்றன. அதற்கு ஒரே காரணம், முஸ்லிம் என்ற பெயர்தான். முஸ்லிம் சமுதாயத்திற்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதில் பாசிச மீடியாக்கள் உறுதியாக உள்ளன. முஸ்லிம்கள் குறித்து தவறான தகவல்கள், போலி செய்திகள் ஆகிவற்றை பரப்புவதில் நாட்டில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் உறுதியாக உள்ளன. ஊடக அறம் நாட்டில் தற்போது கொஞ்சம் கூட இல்லை என்றே கூறலாம்.

முஸ்லிம்கள் விழித்துக் கொள்ள வேண்டும்:

முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான இதுபோன்ற பொய்யான செய்திகள், தகவல்களை பார்க்கும், படிக்கும் முஸ்லிம்கள், அதன் உண்மை தன்மை அறிந்து கொண்டு, உடனடியாக, செயல்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு தவற்றை சுட்டிக் காட்ட வேண்டும்.

மேலும், சமூக வலைத்தளத்தில் அதுகுறித்த உண்மை தகவல்களை ஆதாரத்துடன் பதிவு செய்ய வேண்டும்.

மணிப்பூர் வன்முறை, கலவரங்களில் முஸ்லிம்கள் செய்த மனிதநேயம், தியாகம் ஆகிவற்றை மற்றவர்களுக்கு எடுத்து கூற வேண்டும். அதற்காக சமூக வலைத்தளத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

போலி செய்திகளை கண்டு ஆத்திரம் அடைந்து, பாசிச சக்திகளை போன்று முஸ்லிம் சமுதாயமும் தவறான பாதையில் செல்லக் கூடாது. பொறுமை மற்றும் சரியான அணுகுமுறையில் பிரச்சினையை கையாள வேண்டும்.இதன்மூலம் மட்டுமே முஸ்லிம் சமுதாயத்திற்கு நற்பெயர் கிடைக்கும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Friday, July 21, 2023

இயற்கையின் அழகு....!

Beauty of Nature.....! 

இயற்கையின் அழகு....!


 

சிந்தனைகள்...!

                                               THOUGHTS - சிந்தனைகள்...!


 Do not pray for an easy life. Pray for the strength to endure a difficult one.

======================

Move in silence. Speak only when it is time to say, checkmate.

=====================

Don't let yourself be controlled by three things: People, Money and past experiences.

========================

Take a risk. If you don't try you will never know.

========================

Stay strong and never surrender. Never give up keep going.

======================

A calm mind will always bring a better outcome.

=======================

Do every good deed for the sake of Allah.

=======================

Be a good person but don't waste time to prove it.

========================

Silence isn't empty, it's full of answers.

=====================

No matter what happens in life, be good to people. Being good to people is a wonderful legacy to leave behind.

======================

காங்கிரஸ் மகளிர் அமைப்பு போராட்டம்...!


மணிப்பூர் விவகாரத்தைக் கண்டித்து 
காங்கிரஸ் மகளிர் அமைப்பு சார்பில் 
அசாமில் போராட்டம் நடைபெற்றது.

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை 
அமல்படுத்த வேண்டும் என 
அப்போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

 

பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு....!

நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை 
பிரதமர் மோடி தனியாருக்கு விற்பனை செய்து விட்டதாக 
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு..

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற 
பொதுக்கூட்டத்தில் பரபரப்பு பேச்சு...!


 

பிரியங்கா காந்தி கேள்வி...!

மணிப்பூர் விவகாரம்...!

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி...!

பிரதமர் நரேந்திர மோடி மீது கடும் தாக்கு...!!



 

Thursday, July 20, 2023

அறிவுசார் குழு அவசியம்....!

                        முஸ்லிம்களுக்கான 

         அறிவுசார் குழு மிகவும் அவசியம்....!

இந்திய முஸ்லீம்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நாட்டில் உள்ள தனித்தனி அமைப்புகளால், அவ்வவ்போது தீர்வுகள் காணப்படுகின்றன.  ஆனால், இப்படி காணப்படும் தனித்தனி தீர்வுகள், முழுமையான தீர்வுகளாக இருப்பது இல்லை. அதன் காரணமாக, முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன. 

சமூக, அரசியல், பொருளாதார விவகாரங்களில் ஆலோசனைகளை வழங்க நாட்டில் உள்ள பெரிய முஸ்லிம் அமைப்புகளில், அரசியல், பொருளாதார வல்லுநர்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. உலகில் அதிகமாக முஸ்லிம்கள் வாழும் இரண்டாவது நாடாக இந்தியா இருந்து வருகிறது. எனினும் முஸ்லிம் மக்களின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்க நல்ல நிபுணர் மன்றங்கள் நாட்டில் இல்லை. இதனால் அவ்வப்போது  ஏற்படும் பிரச்சினைகள், சிக்கல்கள் ஆகியவற்றிக்கு தீர்வு காண நல்ல ஆலோசனைகள் நிபுணர்களால் வழங்கப்படுவதில்லை. 

அறிவுசார் அமைப்பு:

நாட்டில் முஸ்லிம்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் அறிவார்ந்த மற்றும் சித்தாந்த முறையில் ஆலோசனைகள் கிடைப்பது இல்லை. இதனால், நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் விழி பிதுங்கி தனியாக நிற்கும் நிலை உள்ளது. ஒருசில இஸ்லாமிய அமைப்புகள் நல்ல ஆலோசனைகளை வழங்கினாலும், அது அனைத்து தரப்பு முஸ்லிம்களிடமும் சென்று சேருவதில்லை. 

எனவே, முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு அளிக்கும் வகையில் நாட்டில் அறிவுசார் அமைப்பு ஒன்று அமைக்கப்பட வேண்டும். விஞ்ஞானி ஆக, சமூக விவகாரங்களில் நிபுணராக ஆக, அறிவாளி ஆக, வெற்றிகரமான தொழிலதிபராக அல்லது தலைவனாக ஆக, எல்லா மனிதர்களும் செய்ய வேண்டியது கடின உழைப்பாகும். ஆனால் நம் முன்னுரிமையின்படி எவ்வளவு வளங்களை முதலீடு செய்ய வேண்டும் என்பதில் நமக்குள் பல தவறான புரிதல்கள் உள்ளன. நமது தேவைகள் ஏராளம், நமது வளங்கள் குறைவு. ஆபத்துகள், சவால்கள் அதிகம். நேரம் குறைவு. எனவே, எல்லா விஷயங்களைப் பற்றிய தகவல்களை வழங்குவது மட்டுமேயான ஒரு அமைப்பை முஸ்லிம்கள் ஏற்படுத்த வேண்டும். அது அறிவுசார் அமைப்பாக இருக்க வேண்டும். 

சிக்கல்களை சந்திக்கும் முஸ்லிம் சமூகம்:

நாட்டில் உள்ள 30 வெவ்வேறு மாநிலங்களில் 20 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் பரவி வாழ்ந்து வருகிறார்கள். எனவே, அவர்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களும் அந்தந்த மாநிலங்களுடன் தொடர்புடையவை. நாட்டில் வாழும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள், தங்களை குறித்த அனைத்து தகவல்களையும் சரியான முறையில் திரட்டி, பொது நிகழ்ச்சிகளில் தங்களின் பிரச்சினைகள் குறித்து பேசுகிறார்கள். புதிய திட்டங்கள், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை எடுத்துரைக்கிறார்கள். ஆனால், முஸ்லிம்கள் மத்தியில் இத்தகைய ஒரு நிலை இல்லை. 

இந்திய முஸ்லீம்களின் வளர்ச்சி நிலை பற்றிய தகவல்களை சேகரிப்பதில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எந்த ஆர்வமும் அக்கறையும் இல்லை. நாட்டில் உள்ள பெரும்பாலான ஊடகங்களும் முஸ்லிம்களின் வறுமை, அவர்களின் வேலைவாய்ப்பு, சமூக, பொருளாதார நிலை ஆகியவற்றை குறித்து எழுதுவதில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. எனவே, முஸ்லிம்களின் சிக்கல்கள் குறித்து  பெரும்பான்மை மக்கள் அறிய வாய்ப்பு கிட்டுவதில்லை. 

முஸ்லிம்களே செய்ய வேண்டும்:

எனவே, தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முஸ்லிம்களே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் முஸ்லிம்களின் பொருளாதார, சமூகப் பிரச்னைகள் குறித்து நிபுணர்கள் குழுவை அமைத்து, மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரம், கிராமம், பகுதி முஸ்லிம்கள் பற்றிய தரவுகளையும் உண்மைகளையும் சேகரிக்கும் பாரம்பரியத்தை ஏற்படுத்த வேண்டும்.

இப்போதை இணைய யுகத்தில் தகவல்களைச் சேமித்து ஒழுங்கமைக்க நேரமும் வளமும் தேவைப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் எல்லா மாவட்டங்களிலும் இதுபோன்ற பணிகள் நடந்தால் நல்ல தகவல்களை நாம் கையில் வைத்துக் கொள்ள முடியும். இதன்மூலம், நாட்டில் உள்ள முஸ்லிம்களின் உண்மையான நிலைமை குறித்து ஆட்சியாளர்களுக்கும், பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றத்திற்கும் நாம் எடுத்துக் கூறலாம். நாட்டில் வாழும் முஸ்லிம்களின் உண்மையான நிலைமையை கண்டு, நல்ல சமூக சிந்தனையாளர்கள் அதிர்ச்சி அடைவார்கள். முஸ்லிம்களின் வளர்ச்சிக்காக குரல் கொடுப்பார்கள். இதற்கு, நீண்ட கால திட்டங்கள் மற்றும் நீண்ட கால இலக்குகள் திட்டமிடப்பட்ட மற்றும் முறையான பரிசீலனை மற்றும் முறையான ஆய்வு தேவை. இதில் பொருளாதார மேம்பாடு பற்றிய பார்வை ஒன்று அல்லது இரண்டு நபர்களுக்கு அல்ல, ஆயிரக்கணக்கான மக்களுக்காக உருவாக்கப்பட வேண்டும். 

வறுமையில் முஸ்லிம் சமூகம்:

வெறும் 40 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான முஸ்லிம் அல்லாத இளைஞர்கள் கடுமையான வறுமையிலிருந்து கோடீஸ்வரர்களாக உயர்ந்துள்ளனர். ஆனால் முஸ்லிம் இளைஞர்கள் இன்னும் வறுமையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வேலைவாய்ப்புகளுக்காக ஒவ்வொரு அலுவலகங்களின் படிகளை ஏறி இறங்குகிறார்கள். அல்லது சிறு வணிகம் செய்து தங்களது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்கிறார்கள். 

எனவே, இந்திய முஸ்லிம்கள் குறித்த சரியான தரவுகள் திரப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இதற்கு நூற்றுக்கணக்கான மசூதிகள் மற்றும் மதரஸாக்களின் உதவிகளை முஸ்லிம் சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீண்ட காலத் திட்டங்கள் மற்றும் நீண்ட கால இலக்குகளுக்கு, ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மக்களுக்கும் பொருளாதார மேம்பாடு பற்றிய பார்வையை உருவாக்குவதற்கு, திட்டமிட்ட மற்றும் முறையான ஆலோசனை மற்றும் முறையான ஆய்வு தேவைப்படுகிறது. பொருளாதார மற்றும் சமூக எதிர்காலம், அடிமட்டத்தின் முறையான ஆய்வுகளில் கவனம் செலுத்தாததால் முஸ்லிம் சமுதாயம் எந்தவித முன்னேற்றத்தையும் காணாமல் பின்தங்கியே உள்ளது. இந்த தவற்றை நாம் நிறுத்த  வேண்டும். அதற்காக முஸ்லிம் திட்ட கமிஷன் அதாவது முஸ்லிம்கள் மத்தியில் அறிவுசார் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

டெல்லி நினைவுகள்...!

Delhi Memories....!

டெல்லியின் இனிய நினைவுகள்...!


 

மணிப்பூர் விவகாரம் - காங்கிரஸ் போராட்டம்...!

Manipur Crises.....!

Congress Protest in Delhi.....!



 

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி..!

Manipur - Congress Questions....!

மணிப்பூர் விவகாரம்....!

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி...!!


 

மணிப்பூர் விவகாரம் - மல்லிகார்ஜுன கார்கே தாக்குதல்....!

Manipur is Burning - LoP Mallikarjun Kharge Speech in RS



 

ஓரங்கட்டப்படும் முஸ்லிம் சமுதாயம்....!

              அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்படும்                                       முஸ்லிம் சமுதாயம்....!

நாட்டில் 20 கோடிக்கும் அதிகமான  முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  எனினும், இந்திய நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் தற்போது இல்லாமல் உள்ளது. ஏற்கனவே முஸ்லிம் சமுதாயம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்த நிலையில், தற்போது ஒன்றிய பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் நாள்தோறும் சந்திக்கும் நெருக்கடிகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. 

முஸ்லிம் சமுதாயத்தை குறிவைத்து இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றன. கல்வி, அரசியல், சமுக மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முஸ்லிம்களின் வளர்ச்சியை தடுக்க  ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பாசிச அமைப்புகள் தொடர்ந்து முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்று வருகின்றன.  முஸ்லிம் சமுதாயத்தை நசுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாஜக உள்ளிட்ட அமைப்புகள் இயங்கி வரும் நிலையில், முஸ்லிம்களுக்கு ஆதரவாக நாட்டில் ஒருசில தலைவர்கள் மட்டுமே குரல் கொடுத்து வருகிறார்கள். நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் முஸ்லிம்களின் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பதால், அந்த அவைகளில், நாட்டில் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூற வாய்ப்பு ஏற்படுவதில்லை. இதன் காரணமாக முஸ்லிம்களின் குரல்கள் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டுவதில்லை. 

ஓரங்கட்டப்படும் முஸ்லிம்கள்:

முஸ்லீம் மக்கள் அதிகமாக உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில்,  முஸ்லிம் சமூகத்தின் தேர்தல் பலத்தை நசுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின்  எல்லை நிர்ணய நடவடிக்கையின் மூலம் முஸ்லிம் மக்கள் தொகை மாற்றப்படுகிறது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில்  முஸ்லிம் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை தடுப்பதற்காக கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த எல்லை நிர்ணய மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. 

மக்கள்தொகை மாற்றத்தைத் தவிர, முஸ்லீம் பெரும்பான்மை மக்கள்தொகை கொண்ட தொகுதிகள் பொதுவாக இந்து தலித்துகளுக்கு  ஒதுக்கப்படுகின்றன. இதன் விளைவாக, இந்தியாவில் உள்ள முஸ்லீம்களில் தலித் இல்லை என்பதால், அத்தகைய தொகுதி அவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் ஒரு முஸ்லிமை ஒருபோதும் தேர்ந்தெடுக்க முடியாது. முஸ்லிம்கள் எம்.பி.க்களாகவும் எம்.எல்.ஏ.க்களாகவும் வர முடியாத நிலையில், முஸ்லிம்களின் குரல்கள் நாட்டின் அரசியல் செயல்பாட்டில் இருந்து பறிக்கப்படுகின்றன. இந்தியாவில்  ஜனநாயகம் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் புத்திசாலித்தனமான விளையாட்டுகள் இவை. 

சில தொகுதிகள் உங்கள் பார்வைக்கு: 

மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி, பீகாரின் கோபால்கஞ்சில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 17 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, அதே சமயம் இங்கு தலித்துகள் 12 சதவீதம் மட்டுமே உள்ளனர். ஆனால் இந்த தொகுதி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் முஸ்லிம்கள் 56 சதவீதம் மற்றும் தலித்துகள் 12 சதவீதம் உள்ளனர். அதேநேரத்தில்  இந்த தொகுதியும்  தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூரில் உள்ள நாகினா தொகுதியில் 43 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். இங்கு தலித்துகளின் எண்ணிக்கை 21 சதவீதம் மட்டுமே. ஆனால் இந்த தொகுதி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கட்ச் மற்றும் அகமதாபாத் மேற்குத் தொகுதிகளும் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளாக உள்ளன.  இந்த தொகுதிகள் ஒருசில  எடுத்துக்காட்டுதான். இப்படி நாம் சொல்லிக் கொண்டே போகலாம். 

முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதிகளை  தலித் பிரிவில் ஒதுக்குவது என்பது அதிகாரத்தில் இருப்பவர்கள் விளையாடும் சாதுர்யமான விளையாட்டாகும். இதன் விளைவாக, அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்தை அடைய முடியாது.

மற்றொரு விளையாட்டு:

மற்றொரு அரசியல் விளையாட்டும் நடத்தப்பட்டு வருகிறது.  தலித் மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகள் இடஒதுக்கீடு இல்லாத பிரிவில் சேர்க்கப்படுகிறது. பீகாரில் உள்ள அவுரங்காபாத் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதிகளில் இதற்கு உதாரணங்களாகும். ஔரங்காபாத்தில் அதிக எண்ணிக்கையிலான தலித்துகள் உள்ளனர். ஆனால் இந்த இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதேபோல், ரேபரேலியில் 30 சதவீத தலித் மக்கள் உள்ளனர். ஆனால் அது ஒதுக்கப்படாத தொகுதியாக உள்ளது.  இப்படி நாட்டின் பல மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இந்த அரசியல் விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. 

கமிட்டிகள் பரிந்துரை: 

கடந்த 2005ஆம் ஆண்டு மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டியும், பின்னர் ரங்கநாத் மிஸ்ரா கமிட்டியின் அறிக்கையும் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, தேர்தலில் முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகளில் ஒதுக்க வேண்டும் என்றும் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. 

தலித்-பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் அத்தகைய இடங்களை அவர்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. எல்லை நிர்ணய தேர்தல் நடவடிக்கையின் மூலம் முஸ்லிம் பெரும்பான்மை இடங்களை எஸ்சி பிரிவில் ஒதுக்கவும் சச்சார் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், சச்சார் கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகள் பல ஆண்டுகளுக்குப் பிறகும், நிலைமை மாறாமல் உள்ளது.

மேற்கு வங்கம், அசாம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் 9 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு முஸ்லிம் மக்கள் தொகை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.  ஆனால் இந்த தொகுதிகள்முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படவில்லை. இதேபோன்று, ஜம்மு-காஷ்மீரில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இல்லை. 

வாக்கு வங்கியாக  முஸ்லிம்கள்:

நாடு விடுதலை அடைந்தபிறகு, இந்திய முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் ஒரே இயக்கமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்து வருகிறது. எனினும், அதன் வளர்ச்சியில், அதன் வலிமையில் சமுதாயம் சிறிதும் அக்கறை செலுத்தவில்லை. மாறாக பல்வேறு குழுக்களாக பிரிந்து ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி, அரசியல் ரீதியாக செயல்பட்டு வருகின்றன. இதனால் முக்கிய கட்சிகள், இந்திய முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்டுத்தி கொண்டு அரசியல் இலாபம் பெற்று வருகின்றன. 

குறிப்பிட்ட சில கட்சிகள் மட்டுமே, முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கின்றன. எனினும், முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்பட அவர்களுக்கு தனித் தொகுதிகள் இல்லாத காரணத்தால், பொது தொகுதிகளில் நிற்க வேண்டிய கட்டாய சூழ்நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக, தேர்தலில் கடும் சவால்களை முஸ்லிம் வேட்பாளர்கள் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு ஏற்ப தேர்தல் நடைமுறைகள் இல்லாத காரணத்தால், முஸ்லிம்களின் வாக்குகளை பெற, முஸ்லிம் மதகுருமார்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்திக்கிறார்கள். அவர்களின் ஆதரவு பெற்றாலே போதும் என்ற எண்ணமும் அரசியல் கட்சிகளிடையே இருந்து வருகிறது. 

பாஜகவின் சூழ்ச்சி:

நாட்டில் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க பாஜக திட்டங்களையும், சூழ்ச்சிகளையும் அரங்கேற்றி வருகிறது. அந்த வகையில், பாஜகவின் பார்வையில், முஸ்லிம்களுக்கோ அல்லது அதன் தலைமைக்கோ நாட்டின்  அரசியலில் இடம் இல்லை.  முஸ்லீம்கள் இல்லாத 80-20 ஃபார்முலாவின் அடிப்படையில் மாநிலங்களையும் நாட்டையும்  ஆட்சி செய்ய பாஜக செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதற்காக வாக்குகளைப் பெற்றுத் தரக்கூடிய இடைத்தரகர்களாக மட்டுமே முஸ்லிம்களை  பயன்படுத்திக் கொள்ள பாஜக விரும்புகிறது.  முஸ்லீம்களுடன் இந்த வாக்கு விளையாட்டை பாஜக விளையாடும்போது, இந்து சமூகத்துடன் அதைச் செய்வதில்லை. இது பாஜக  ஆடும் கபட நாடகமாகும்.

முஸ்லிம்கள் விழித்துக் கொள்ள வேண்டும்: 

இந்தியாவில் பெரும்பான்மை சமூகத்திற்கு மட்டுமே அரசியல் ஜனநாயகம் இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் வெளிப்படையாக தென்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், நாட்டில் முஸ்லிம்களின் எதிர்கால நிலை என்னவாகும்?   தங்களது சொந்த நாட்டிலேயே நிரந்தரமாக ஒதுக்கி வைப்பதற்கான ஒரு மோசமான திட்டம் தற்போது நடைபெற்று வருவதை முஸ்லிம்கள் உணர வேண்டும். மிகவும் சவால்கள் நிறைந்த நெருக்கடியான சூழ்நிலைகள் தற்போது நாட்டில் நிலவி வருவதால், அதை எதிர்கொள்ள முஸ்லிம் சமுதாயம் தயாராக இருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் சமூகம் இன்னும் ஆழ்ந்த உறக்கத்திலும் கனவில் இருந்துக் கொண்டிருக்கிறது. மிகப்பெரிய நெருக்கடிகளில் இருந்து மீண்டு வர முஸ்லிம்கள் விழித்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Wednesday, July 19, 2023

டி.டி.பொதிகை நினைவுகள்...!

டி.டி.பொதிகை தொலைக்காட்சி 
செய்திப்பிரிவு குழுவுடன்...!


 

சட்டப்பேரவையில் பாஜக அமளி....!


கர்நாடக மாநில சட்டப்பேரவையில் பாஜக அமளி....!
10 பாஜக எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்...!!


 

ஆற்காடு வேங்கைகள்.....!

ஆற்காடு வேங்கைகள்.....!



 

குழந்தைகளின் மூளை வளர்ச்சி.....!

           குழந்தைகளின் மூளை வளர்ச்சி.....!

            இனி பெற்றோர்களின் கையில்....!!

மாறிவரும் நவீன கால சூழ்நிலைகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுவது தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. குழந்தைகளும் சமூகத்தில் தாங்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்கள் பெற்றோர்களிடம் கலந்துரையாடுவது கிடையாது.  அல்லது உரிய ஆலோசனைகளை பெறுவதில்லை. இதன் காரணமாக பெற்றோர்-குழந்தைகளுக்கு இடையேயான அன்பு இடைவெளி அதிகமாகி கொண்டே செல்கிறது.  அத்துடன், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் மனம்விட்டு பேசாத காரணங்களால், அந்த குழந்தைகள் மன, உடல் ரீதியாக பாதிப்புகளை சந்திக்கிறார்கள். 

டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வு:

அமெரிக்காவின் டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் வளர்ச்சி ஆய்வாளர் தலைமையிலான குழு, அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதாவது, பிறந்த குழந்தைகளுடன்  அவர்களது பெற்றோர்கள்  மனம் விட்டு பேசுவதால்,  எத்தகைய பயன்கள் கிடைக்கின்றன. அதன்மூலம் குழந்தைகளின் உடல்நலம் எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது, மூளை வளர்ச்சி எப்படி உள்ளது என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இப்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிறந்த குழந்தைகளுடன் பேசும் பெற்றோர்கள் அவர்களின் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்துவதைக் காட்டும் மிக அழுத்தமான ஆதாரங்கள் சிலவற்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் டெவலப்மென்ட் காக்னிட்டிவ் நியூரோ சயின்ஸின் அச்சு இதழிலும் ஆன்லைனிலும் வெளியிடப்பட்டது. 

ஆய்வில் பரபரப்பு தகவல்கள்:

இந்த ஆய்வில், அதிக வார்த்தைகளைக் கேட்கும் குழந்தைகள் ஏன் சிறந்த மொழித்திறனைப் பெறுகிறார்கள் மற்றும் அந்த பொறிமுறையை எந்த செயல்முறை எளிதாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான  வழி கிடைத்து இருப்பதாக ஆய்வாளர் ஸ்வான்சன் கூறியுள்ளார்.  மூளையில் உள்ள வெள்ளைப் பொருள் பல்வேறு சாம்பல் நிறப் பகுதிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குகிறது என்றும் அங்கு மூளையில் தகவல் செயலாக்கம் நடைபெறுகிறது என்றும் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். 

இந்த ஆய்வில், அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள எட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் சியாட்டில், பிலடெல்பியா, செயின்ட் லூயிஸ், மினியாபோலிஸ் மற்றும் மினியாபோலிஸ் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவத் தளங்களைச் சேர்ந்த பகுதிகளில் இருந்து 52 குழந்தைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.  குழந்தைகள் 9 மாதங்கள் மற்றும் ஆறு மாதங்களுக்குப் பிறகு வீட்டு மொழி பதிவுகள் சேகரிக்கப்பட்டன. மேலும் 3 மாதங்கள் மற்றும் 6 மாதங்கள் மற்றும் 1 மற்றும் 2 வயதில் எம்.ஆர்.ஐ. பதிவுகள்  செய்யப்பட்டன. 

ஒரு குழந்தையின் வீட்டுச் சூழல், குறிப்பாக பராமரிப்பாளரின் பேச்சின் தரம், மொழி கையகப்படுத்துதலை நேரடியாக பாதிக்கிறது என்பது நீண்ட காலமாக அறியப்படுகிறது, ஆனால் இதன் பின்னணியில் உள்ள வழிமுறைகள் தெளிவாக இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ஒரு மூளை முதிர்ச்சியடையும் போது, அது குறைவான பிளாஸ்டிக் ஆகிறது. நெட்வொர்க்குகள் அமைக்கப்படுகின்றன. ஆனால் ஒரு நரம்பியல் நிலைப்பாட்டில் இருந்து, குழந்தைப் பருவம் வேறு எந்த நேரத்தையும் போல அல்ல. ஒரு குழந்தை மூளை சில திறன்களைக் கற்றுக்கொள்வதற்கு நீண்ட கால பிளாஸ்டிசிட்டியை நம்பியிருப்பதாகத் தெரிகிறது என்று ஆய்வாளர் ஸ்வான்சன் கூறியுள்ளார். 

பெற்றோர்களின் பங்களிப்பு:

குழந்தைகளின் மூளை சிறப்பான முறையில் வளர்ச்சி அடைய வேண்டுமானால், அது அவர்களின் பெற்றோர்களின் கைகளில்தான் உள்ளது. குழந்தை பேசுகிறதோ இல்லையோ, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் சிரித்துக் கொண்டு மனம் விட்டு பேச வேண்டும். பெற்றோரின்  அன்பு மொழிகளில் குழந்தைகளை மகிழ்ச்சி அடையச் செய்யும். இதன்மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி பிறப்பதுடன், குழந்தைகளும் ஆரோக்கியமாக வளருவார்கள். 

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் 

மழலைச்சொல் கேளா தவர் 

என்ற திருக்குறளை நாம் கவனத்தில் வைத்துக் கொண்டு, நம்முடைய குழந்தைகளின் மழலைச் சொற்களை கேட்டு ரசிக்க வேண்டும். அதன்மூலம் அவர்களிடம் நாமும் மழலை மொழியில் பேச வேண்டும். இப்படி நாள்தோறும் குழந்தைகளிடம் பேசினால், அதன் மூளை வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். 

குழந்தைகளுடன் பேசும் பெற்றோர் அவர்களின் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்துகிறார்கள் என்ற ஆராய்ச்சியின் முடிவுகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு, குழந்தைகளிடம் பேச நேரத்தை ஒதுக்க வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமான குழந்தைகளின் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Tuesday, July 18, 2023

சிந்தனை....!

சிந்தனையோ....சிந்தனை....!


 

விவசாயிகளுடன் ராகுல் காந்தி...!

ஏழை விவசாயிகளுடன் ராகுல் காந்தி...!



 

ராகுல் காந்தி உறுதி...!

இனி இந்தியாவிற்கும், என்டிஏ எனப்படும் 
தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தான் போட்டி. 
இந்தியாவை யாரும் வீழ்த்த முடியாது என 
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  உறுதி...!


 

மம்தா பானர்ஜி சூளுரை...!

Bangalore Opposition Meet - Mamatha Press Meet....!
பெங்களூரூ எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்...!!
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி சூளுரை...!!!


 

Congress President Press Meet...!

Bangalore Opposition Meet - Congress President Press Meet...!

பெங்களூரூ எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு 
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 
செய்தியாளர்களுடன் சந்திப்பு...!


 

இந்தியா......இனி ஒளிரும்....!

                                                         இந்தியா......இனி ஒளிரும்....!


ஒன்றிய பாஜக ஆட்சியில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாடு மிகவும் நெருக்கடியான நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  இந்த நிலையில், 26 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கர்நாடக தலைநகர் பெங்களூரூவில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக் கொண்டு தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். 

பெங்களூரூவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனை கூட்டத்தில், புதிய கூட்டணிக்கு இந்திய தேசிய உள்ளடக்கிய வளர்ச்சி கூட்டணி அதாவது இந்தியா என்ற புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

பாஜக ஆட்சி படுமோசம்:

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக ஆட்சியில், நாட்டில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. மாறாக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, அவர்களிடையே பிளவை உருவாக்கி அரசியல் இலாபம் பெற பாஜக தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறது. பாஜகவின் இந்த பாசிச திட்டத்திற்கு இந்துத்துவ கொள்கை கொண்ட மக்கள் சிலர் வீழ்ந்து கிடக்கிறார்கள். ஆனால், நாட்டு மக்களில் பெரும்பாலாலோனர், பாஜகவின் சதித் திட்டங்களை தற்போது உணர ஆரம்பித்து இருக்கிறார்கள். 

நாட்டில் ஜனநயாக நெறிமுறைகள் குழித்தோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில கட்சிகளை உடைத்து, பாஜக அரசியல் செய்து வருகிறது. அமலாகத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்து அவர்களை மிரட்டி தங்கள் பக்கம் இழக்க ஒன்றிய பாஜக அரசு காரியங்களை செய்து வருகிறது. நாட்டில் பாஜகவை தவிர வேறு கட்சிகளே இருக்கக் கூடாது என்ற சர்வாதிகார கொள்கையுடன் பாஜக திட்டங்களை அரங்கேற்றி வருகிறது. 

நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோன்று அனைத்துத் துறைகளிலும் ஒன்றிய பாஜக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. அரசு நிறுவனங்கள், தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் சூழ்நிலையில், இந்து-முஸ்லிம் என அடிக்கடி பிரச்சினையை உருவாக்கி, நாட்டில் பாஜக குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 

எதிர்க்கட்சிகள் ஆலோசனை:

நாடு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கியுள்ள இந்த தருணத்தில் ஒன்றிய பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி, நாட்டில் ஜனநாயக நெறிமுறைகளையும், நாட்டின் பன்முகத்தன்மையையும் பாதுகாக்க எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் திரள முடிவு செய்து, அதன்படி, முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற்றது. பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் அணியை மேலும் வலிமைப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் இந்த கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றன. 

கூட்டத்தில் பேசிய அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் சிந்தாந்தத்திற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓர் அணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அதன்மூலம் மட்டுமே நாடு பாசிச கொள்கையில் இருந்து மீட்க முடியும் என்றும் உறுதிப்பட தெரிவித்தனர்.  தற்போது நாடு இரண்டாவது சுதந்திர போராட்டத்தை தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டாவது சுதந்திர போராட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் சுயநலம் கைவிட்டு, பாஜகவிற்கு எதிரான எத்தகைய நெருக்கடிகளையும் துணிச்சலுடன் சந்தித்து போராட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கருத்து கூறியுள்ளன. 

ஆக்கப்பூர்வமான விவாதம்:

இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நல்ல ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற்றதாக கூறியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சிகளின் பலத்தைக் கண்டு பிரதமர் மோடி அதிர்ச்சி அடைந்து இருப்பதாகவும், லெட்டர் பேடு கட்சிகளை ஒருங்கிணைத்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு எதிராக டெல்லியில் போட்டி ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இதேபோன்று, லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களும், பாஜகவை வீழ்த்துவதே தங்களின் ஒரே இலக்கு என உறுதிப்பட கூறியுள்ளனர். 

கூட்டணிக்குப் பெயர் இந்தியா:

இரண்டு நாள் ஆலோசனைக்குப் பிறகு, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு Indian National Developmental Inclusive Alliance - INDIA,  தமிழில் இந்திய தேசிய உள்ளடக்கிய வளர்ச்சி கூட்டணி அதாவது இந்தியா என புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க 11 உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளது. 

நாட்டு மக்கள் வரவேற்பு:

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைக்கப்பட்டு இருப்பதற்கு நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் கோடிக்கணக்கான மக்கள் தங்களது கருத்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். பாஜக ஆட்சியில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் நாட்டு மக்கள் எதிர்க்கட்சிகளின் இந்தியாவிற்கு நல்ல ஆதரவு வழங்கி வருகிறார்கள். 

நாட்டு மக்களின் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக நல்ல திட்டங்களை உருவாக்கி 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை உடடினயாக தொடங்கி விட வேண்டும். அப்போதுதான், நாட்டு மக்கள் மத்தியில் தொடர்ந்து ஓர் உற்சாகம்  இருந்துக் கொண்டே இருக்கும். நாடு முழுவதும் நல்ல விழிப்புணர்பு ஏற்படும். 

இந்தியா இனி ஒளிரும்:

இனி இந்தியாவிற்கும், என்டிஏ எனப்படும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தான் போட்டி. இந்தியாவை யாரும் வீழ்த்த முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். இது உண்மையான கருத்தாகும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கூட்டணியான இந்தியாவை பாஜக உள்ளிட்ட பாசிச சக்திகள் நிச்சயம் வீழ்த்த முடியாது. 

எனினும், பல்வேறு சதி திட்டங்களை இனி பாஜக அரங்கேற்றும். இந்த சதி திட்டங்களை இந்தியா கூட்டணி உடைக்க வேண்டும். தேர்தல் காலங்களில் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இப்படி, சரியான அணுகுமுறையை இந்தியா கூட்டணி கடைப்பிடித்தால், இந்தியா இனி நிச்சயம் ஒளிரும். கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மக்கள் அடைந்து பல்வேறு துன்பங்களும் இனி தொடராது. மேலும் சர்வாதிகார மனப்பான்மை நாட்டில் இருந்து விலகும். ஜனநாயக நெறிமுறைகள் மீண்டும் தழைக்கும்.  அதற்காக இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாட்டு நலனில் உண்மையான அக்கறை கொண்டு, தங்கள் பணிகளை செய்ய வேண்டும்.  இதுவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 


லாலு பிரசாத் யாதவ் கருத்து...!

நாட்டின் நலனுக்காக எதிர்க்கட்சிகள் ஆலோசனை....!
ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கருத்து...!


 

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்...!


பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்...!
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்பு...!!


 

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பங்கேற்பு...!

பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்ட்சிகளின் 
ஆலோசனை கூட்டத்தில் 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் 
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பங்கேற்பு...!


 

I N D I A - இந்திய தேசிய ஜனநாயக ஒற்றுமை கூட்டணி....!

Indian National Demoratic Inclusive Alliance 
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெய சூட்டப்பட்டுள்ளது. 
(இந்திய தேசிய ஜனநாயக ஒற்றுமை கூட்டணி)


 

Monday, July 17, 2023

மு.க.ஸ்டாலின் பங்கேற்பு,,,!

பெங்களூருவில் ஜுலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 
நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் 
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு,,,!


 

மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்...!

தமிழக அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அலுவலகங்களில் 
அமலாக்கத்துறை சோதனை....!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்...!!


 

தோழர் சுப்ரமணியம்...!

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் 
தோழர் சுப்ரமணியம் அவர்களுடன்...!


 

தூக்கமின்மை.....!

                                      தூக்கமின்மை - அலட்சியம் வேண்டாம்...!

ஏக இறைவன் மனிதனுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் கொடுத்துள்ள மிகப்பெரிய வரம் மற்றும் பரிசு தூக்கம் ஆகும். மனிதன் சரியான அளவுக்கு தூங்கினால், அவனுக்கு உடல், மன ரீதியாக எந்த பிரச்சினைகளும் ஏற்படாது என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனினும், தூக்கத்தின் அருமையை அறிந்துக் கொள்ளாமல், பலர், நீண்ட நேரம் கண் விழித்து தங்களுடைய உடல்நலத்தை கெடுத்துக் கொள்கிறார்கள்.  சிலருக்கு தூக்கமின்மை என்ற பிரச்சினை இருந்து வருகிறது. அதுகுறித்து கவலைப்படாமல் அதை அவர்கள் இலேசாக எடுத்துக் கொள்கிறார்கள். 

தூக்கமின்மை:

தூக்கம் தொடர்பான பிரச்சினைகளை நாம் இலகுவாக எடுத்துக் கொள்ள கூடாது. தொடர்ச்சியான தூக்கமின்மை உடல்நலம் மற்றும் நல்வாழ்வை பாதிக்கிறது. ஐ.டி. எனப்படும்  தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் பலர், வீட்டில் இருந்து வேலை செய்யும்போதும், இரவில் சரியாக தூங்குவதில்லை. இதனால் காலை நேரத்தில் தலைவலி உள்ளிட்ட பிரச்சினைகளை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பணியின் அழுத்தமே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தூக்கமின்மை பிரச்சினையை சரி செய்ய அவர்கள் மேற்கொள்ளும் பல்வேறு நிலைகள் மிகப்பெரிய அளவுக்கு பலன் அளிப்பது இல்லை. இதனால், உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், வேலை பளூவும் அதிகமாகி விடுகிறது. தூக்கமின்மை காரணத்தால், குடும்ப உறவுகளும் சீர்குலைகின்றன.

தூக்கமின்மையால் ஆபத்து:

சிலருக்கு தூக்கமின்மையால், லேசான தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறைந்தபட்சம் ஏழு முதல் எட்டு மணிநேர தூக்கத்துடன் கடுமையான தூக்க சுகாதாரத்தைப் பின்பற்றுதல், சாப்பிடுவதற்கும் உறங்குவதற்கும் நிலையான வழக்கமான உணவு, போன்ற வாழ்க்கை முறையை நாம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தினசரி நடைப்பயிற்சி, யோகா மற்றும் தியானம், உள்ளிட்டவைகளை செய்து வருவது தூக்கமின்மையால் ஏற்படும் ஆபத்துகளை தடுக்க முடியும். 

தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட பலருக்கு அவர்களின் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் சிலவற்றை மருத்துவ ஆலோசனைகளின்படி செய்யப்பட்டது. இப்படி செய்யப்பட்ட மாற்றங்கள் மூலம், தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட பெண் அல்லது ஆண் ஆகியோரின் பணி உற்பத்தித்திறன், மனநிலை மாற்றங்கள் மற்றும் ஆற்றல் நிலைகள் மிகவும் சிறப்பாக இருந்தது. 

சூழ்நிலைகளை மாற்ற வேண்டும்:

தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு காண படுக்கையறை சூழல் மற்றும் தூக்கம் தொடர்பான பழக்கங்களை மேம்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்குகிறார்கள். இதன்மூலம் ஒருவர் சிறந்த தூக்கத்தைப் பெறலாம். தூக்க அட்டவணையை வைத்து தினசரி வழக்கமான தூக்கத்தை ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனை தருகிறார்கள். 

அடிக்கடி தேநீர், காபி, குளிர் பானங்கள் மற்றும் காரமான உணவுகளை சாப்பிடுவததைத் தவிர்க்க வேண்டும் என்றும், இரவில் தாமதமாக சாப்பிடுவதை கைவிட்டு, சரியான நேரத்தில் சாப்பிடுவதை பழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தரும் ஆலோசனையாகும். இதேபோன்று, படுக்கையறை இருட்டாகவும் அமைதியாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். படுக்கைக்கு முன் குறைந்தது ஒரு மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பது, செல்போனில் பேசுவது, சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அத்துடன் ஒவ்வொரு நாளும், மிதமான உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் அவசியம். 

குறைவாக தூங்கும் இந்தியர்கள்:

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவின் நகர்ப்புற மக்களில் 61 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு ஏழு மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகிறார்கள் என தெரியவந்துள்ளது.  வேலை அழுத்தம், சமூக சூழ்நிலைகள் ஆகியவற்றால், அனைத்து தரப்பு மக்களிடையேயும் கவலையளிக்கும் விளைவுகளுடன் தூக்கமின்மை இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீரற்ற உடல் செயல்பாடு மற்றும் உணவு முறைகள் காரணமாக இந்த தூக்க நேரம் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை மேலும் சுருங்கியுள்ளது. இதனால் குறுகிய கால மற்றும் நீண்ட கால விளைவுகளை ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

தூக்கமின்மை இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவதற்கு வழிவகுக்கிறது. இது உயர் இரத்த அழுத்தம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிற நாட்பட்ட கோளாறுகளுக்கு வழிவகுக்கும். தூக்கமின்மை இருதய அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நீடித்த தூக்கமின்மை மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவை அதிகரிக்கிறது. இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது. உடல் பருமன், பலவீனமான நோய் எதிர்ப்பு, தொற்று நோய்கள், மனநல கோளாறுகள், மற்றும் பக்கவாதம் போன்றவற்றுக்கும் தூக்கமின்மை முக்கிய காரணமாக இருந்து வருகிறது. 

இளைஞர்கள் அலட்சியம்:

இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் இளைஞர்கள் தூக்கமின்மைக்கு ஆளாகிறார்கள்.  இதனால் அவர்கள் நீண்ட காலத்திற்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மற்றும் உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியன் ஜர்னல் ஆஃப் ஸ்லீப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நரம்பியல் உளவியல் பரிசோதனையில் இந்தியாவில் 31-50 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில்  தூக்கமின்மை அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில்,  87 சதவீத இந்தியர்கள் தூங்குவதற்கு முன் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர் என்றும்,  25-34 வயதிற்குட்பட்டவர்களில் 78 சதவீதம் பேர் தாமதமாக எழுந்து சமூக ஊடகங்களில் உலாவுகிறார்கள் அல்லது இணையத்தளங்களை அதிகமாகப் பார்க்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது. 

அலட்சியம் வேண்டாம்:

மிகவும் கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால், தூக்கத்தின் அளவு மற்றும் தரத்தை எதிர்மறையாக பாதிக்கும் நாள்பட்ட தூக்கக் கோளாறுகளுக்கு மக்கள் அரிதாகவே சிகிச்சை பெறுகிறார்கள். வாகனம் ஓட்டும்போது தூங்குவது போன்ற பிரச்சினைகளுக்கு  விபத்துகளுக்குப் பிறகே மருத்துவ ஆலோசனை பெரும்பாலும் பெறப்படுகிறது.

18 நாடுகளில் ஃபிட்பிட் நடத்திய 2019 ஆய்வில், உலகில் தூக்கமின்மை உள்ளவர்களில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். சராசரியாக ஏழு மணி நேரம் ஒரு நிமிடம் தூங்குகிறார்கள். ஆரோக்கியமான பகல்நேர பழக்கவழக்கங்கள், வழக்கமான இரவு மற்றும் தூக்க அட்டவணை, தூக்கத்திற்கு ஏற்ற படுக்கையறை சூழலை உருவாக்குதல் மற்றும் தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்தல் போன்ற அடிப்படை வாழ்க்கை முறை மாற்றங்கள் சிறந்த தூக்க விளைவுகளை ஊக்குவிக்கும். தூக்கத்தை ஆதரிக்க அடிக்கடி மருந்துகளை பயன்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்தும் என  ஹார்வர்டு-இணைந்த ப்ரிகாம் மற்றும் பாஸ்டனில் உள்ள பெண்கள் மருத்துவமனையின் நடத்தை இயக்குனர் டாக்டர் சுசான் பெர்டிஷ் கூறியுள்ளார். 

எனவே, தூக்கமின்மை பிரச்சினையை நாம் அலட்சியம் செய்யக் கூடாது. ஏக இறைவனின் அருட்கொடையான தூக்கத்தை சரியான அளவுக்கு பயன்படுத்திக் கொண்டு தூங்க வேண்டும். அதற்காக எந்த நேரமும் தூங்கிக் கொண்டே இருக்கக் கூடாது. அப்படி தூங்கிக் கொண்டே இருந்தால், வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது என்பதை நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்