Sunday, December 31, 2023

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்....!!

போக்குவரத்துக்கு சிறிதும் இடையூறு இல்லாத பாரம்பரிய சுன்ஹாரி பாக் மசூதியை ஒருபோதும் அகற்ற கூடாது...!

புதுடெல்லி முனிசிபல் கவுன்சிலுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்....!!


புதுடெல்லி, ஜன02- டெல்லியில் உள்ள புகழ்பெற்ற சுன்ஹாரி பாக் பள்ளிவாசல், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என காரணம் கூறி, அதனை அகற்றும் நடவடிக்கைகளை புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை  ஜனவரி ஒன்றாம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் என்.டி.எம்.சி. சார்பில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முஸ்லிம்கள் உட்பட ஏராளமானோர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். 

இ.யூ.முஸ்லிம் லீக் கடிதம்:

இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நாடாளுமன்ற உறுப்பினரும், கேரளாவின் முன்னாள் கல்வி அமைச்சருமான இ.டி.முஹம்மது பஷீர்,  புதுடெல்லி முனிசிபல் கவுன்சிலின் தலைமை கட்டிடக் கலைஞர் அசோக்குமார் திமானுக்கு, சுன்ஹாரி பாக் மசூதி விவகாரம் குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பாரம்பரியமான சுன்ஹாரி பாக் மசூதியை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், போக்குவரத்துக்கு சிறிதும் இடையூறு இல்லாத வகையில் அமைந்துள்ள இந்த பள்ளிவாசலை ஒருபோதும் இடிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

இ.டி.முஹம்மது பஷீர் வேண்டுகோள்:

தலைமை கட்டிடக் கலைஞருக்கு இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில் சில முக்கிய அம்சங்களை குறிப்பிட்டு, தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், சுன்ஹரி பாக் மசூதி விவகாரம் தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், என்.டி.எம்.சி.யின் உத்தரவாதத்தின் பேரில், மசூதி இடிக்கப்பட மாட்டாது என நீதிமன்றம் கூறியதை சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால், நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குப் பிறகும் புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் அறிவிப்பை வெளியிட்டு அதுதொடர்பாக ஒரு வார காலத்திற்கு பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறியிருப்பது வியப்பு அளிப்பதாகவும் பஷீர் தெரிவித்துள்ளார். என்.டி.எம்.சி. அவசர அவசரமாக அறிவிப்பை வெளியிட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள அவர், 8 நாட்களாக அவகாசம் அளித்து, மசூதியை இடிக்க சட்டப்பூர்வ பாதுகாப்பை பெறும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

பாரம்பரிய நினைவு சின்னம்:

புதுடெல்லி முனிசிபல் கவுன்சிலின் முக்கிய நோக்கம் மசூதியை இடிப்பதைத் தவிர, போக்குவரத்தை சீர்படுத்துவது இல்லை என்று குற்றம்சாட்டியுள்ள பஷீர், சுன்ஹாரி பாக் மஸ்ஜித், டெல்லியில் பதிவு செய்யப்பட்டு நிர்வகிக்கப்படும் வக்ஃப் மட்டுமல்ல என்றும், என்.டி.எம்.சி.யால் அறிவிக்கப்பட்ட 141 பாரம்பரிய நினைவு சின்னங்களில் ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார். சுன்ஹேரி மஸ்ஜித் வழிப்பாட்டு தளங்கள் தொடர்பாக 1991 சட்டத்தின் பாதுகாப்பைக் கொண்ட ஒரு நடைமுறை மசூதி என்றும், மசூதிக்கு அருகாமையில் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து பரிசீலிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

மசூதியை ஏன் இடிக்கக் கூடாது:

மேலும், சுன்ஹாரி பாக் மஸ்ஜித் இடிக்காமல் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான தனது கருத்துக்களையும் முஹம்மது பஷீர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், மசூதி ரவுண்டானாவிற்குள்ளேயே அமைந்துள்ளது என்றும், அதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  மசூதியால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத காரணத்தால், அவர்களிடம் இருந்து எந்த ஆலோசனைகளும், ஆட்சேபனைகள் வர வாய்ப்பு இல்லை என்றும் பஷீர் கூறியுள்ளார். இந்த மசூதியில் மிகப்பெரிய அளவுக்கு கூட்டம் வருவதில்லை என்றும், வெள்ளிக்கிழமைக் கூட, சமாளிக்கும் வகையில் மட்டுமே தொழுகையாளிகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த புகாரும் வராத நிலையில் மசூதியை இடிக்க முயற்சி செய்வது அநீதி என்றும், தேவைப்பட்டால், எதிர்காலத்தில், நடைபாதையில் இருந்து சுரங்கப்பாதை வசதியை வழங்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். 

மசூதிக்கு அருகாமையில் இதுபோன்ற இரண்டு சுற்றுச் சாலைகள் உள்ளன என்றும், துக்ளக் சாலையில்  அக்பர் சாலை சந்திப்பு, கிருஷி பவன் மற்றும் ஜன்பத் -மோதிலால் நேரு சாலை சந்திப்பு, உள்ளது என்றும், அங்கு போக்குவரத்து அதிகமாக இருந்தாலும், அந்த ரவுண்டானாக்களுக்கு கட்டிடங்கள் இடிப்பது தொடர்பான அத்தகைய முன்மொழிவு இல்லை என்றும் பஷீர் சுட்டிக்காட்டியுள்ளார். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சுற்றுவட்டத்தின் உள்ளே அமைந்துள்ள மசூதியை பாதுகாக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், கேள்விக்குரிய பொது அறிவிப்பு பாரம்பரிய பாதுகாப்பு குழு (எச்.சி.சி.) இருக்க முடியும் என்றும், ஆனால்,  பாரம்பரியச் சின்னமாக இருக்கும் மசூதியால் அப்படி எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள முஹம்மது பஷீர், எனவே, சுன்ஹாரி பாக் பள்ளிவாசலை இடிக்காமல் பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தனது கடித்தில் வலியுறுத்தியுள்ளார்.

- தகவல்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


புத்தாண்டு வாழ்த்துகள்...!

தோழமை அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்....!

Happy New Year 2024....!



Saturday, December 30, 2023

வாவ்.....!

வாவ்....என்ன ஒரு அற்புதமான திறமை....!

அழகோ.....அழகு.....!!




பார்வை....!

பார்வை ஒன்றே போதுமே....! பல்லாயிரம் சொல் வேண்டுமா....!



சுன்ஹாரி பாக் பள்ளிவசால்...!

மதவெறியர்களின் பார்வையில் வரலாற்று சிறப்புமிக்க  டெல்லி சுன்ஹாரி பாக் பள்ளிவசால்...!

உத்தரப் பிரரேதச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபரி மசூதியை இடித்துவிட்டு, அங்கு ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதன் சிறப்பு வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ராமர் கோவில் திறப்பு விழாவை தங்களது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ள பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துகொண்டு, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக ஏற்பாடுகள் மிகவும் தடல்புடலாக நடைபெற்று வருகின்றன. 

இத்தகைய சூழ்நிலையில், சத்தமில்லாமல் டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சுன்ஹாரி பாக் மசூதி மீது தற்போது பாசிச மதவெறியர்களின் பார்வை விழுந்துள்ளது. போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி, இந்த பள்ளிவாசலை இடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

சுன்ஹாரி பாக் பள்ளிவாசல்: 

டெல்லி மக்களால், சுன்ஹாரி பாக் மஸ்ஜித் என அழைக்கப்படும் கோல்டன் பாக் பள்ளிவாசல், 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது. அத்துடன் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக இருக்கும் பாரம்பரிய கட்டிடமாகும். சுனேஹ்ரி மஸ்ஜித்  பழைய டெல்லியில் உள்ள 18ஆம் நூற்றாண்டு மசூதியாகும். இது முகலாய பேரரசர் முகமது ஷாவின் ஆட்சியின் போது, மொகலாய பிரபு ரோஷன்-உத்-தௌலாவால் கட்டப்பட்டது. சுனேஹ்ரி மஸ்ஜித் 1721-1722 காலகட்டத்தில் கட்டப்பட்டது. இந்த மசூதி ரோஷன்-உத்-தௌலாவின் ஆன்மீக வழிகாட்டியான ஷாபிக்க்கு அர்ப்பணிக்கப்பட்டது.

ஒரு பீடத்தின் மீது தெரு மட்டத்திற்கு மேலே உயர்த்தப்பட்ட சுனேஹ்ரி மஸ்ஜித் ஒரு படிக்கட்டு மூலம் அடையப்படுகிறது. மசூதியில் மூன்று பல்புகள், கில்டட் குவிமாடங்கள் மற்றும் மெல்லிய மினாரட்டுகள் உள்ளன. மசூதியின் முகப்பில் மூன்று வளைவு நுழைவாயில்கள் உள்ளன. மசூதியின் உட்புறம் மூன்று விரிகுடாக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மசூதியின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய இரண்டிலும் ஸ்டக்கோ அலங்கார வேலைப்பாடுகள், அரேபிஸ்குகள் மற்றும் மலர் வடிவங்களில் தோன்றும் வகையில் உள்ளன. இது சாந்தினி சௌக்கில் உள்ள குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப் அருகே அமைந்துள்ளது. சுனேஹரி பாக் மஸ்ஜித், கோல்சக்கர் மௌலானா ஆசாத் சாலை, மோதிலால் நேரு மார்க் மற்றும் காமராஜ் மார்க் ஆகியவற்றை இணைக்கிறது. அத்துடன், சுன்ஹாரி பாக் மஸ்ஜித் மூன்றாவது வகை பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய பிரச்சினை: 

இப்படி வரலாற்று சிறப்புமிக்க இந்த சுன்ஹாரி பாக் மஸ்ஜித், கடந்த காலங்களில் எந்தவித பிரச்சினைகளையும் சந்திக்கவில்லை. தற்போது திடீரென புதிய பிரச்சினையை கிளப்பி, மஸ்ஜித்தை இடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது.  டெல்லியில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இந்த மசூதி இருப்பதாக ஒரு பிரச்சினையை கிளப்பியுள்ள சிலர், மசூதியை இடிக்கும் காரியங்களையும் செய்து வருகிறார்கள்.  இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சுன்ஹாரி பாக் மசூதி இடிப்புக்கு எதிராக மசூதியின் இமாம் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனு  விசாரணைக்கு வந்தபோது, டெல்லி நிலைக்குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மசூதி இடிப்பு குறித்து ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக பொதுமக்களின் ஆலோசனைகளை தாங்கள் கேட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார். பொதுமக்கள் அளிக்கும் இந்த பரிந்துரைகள் பாரம்பரிய பாதுகாப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், எனவே பள்ளிவாசலை இடிக்கும் எண்ணம் தற்போது இல்லை என்றும் அவர் கூறினார். 

மசூதி நிர்வாகம் வாதம்:

வழக்கில் மசூதியின் சார்பில் ஆஜரான இமாமின் வழக்கறிஞர், மசூதி இடிப்பு தொடர்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸ் சட்டவிரோதமானது மட்டுமல்ல, நோட்டீஸுக்குப் பிறகு எடுக்கப்பட்ட சாத்தியமான நடவடிக்கைகளும் சட்டவிரோதமானது என வாதிட்டார். இந்த வழக்கில் டெல்லி வக்பு வாரியம் சார்பில் வழக்கறிஞர் ஃபெரோஸ் இக்பால் கான், வழக்கறிஞர் ஃபர்ஹத் ஜஹான் ரஹ்மானி மற்றும் வழக்கறிஞர் இம்ரான் ஹுசைன் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். மசூதியை அகற்றுவதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து, ஊடகங்களில் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அதில் நாட்டின் பெரிய அமைப்புகள் தவிர, முக்கிய பிரமுகர்களும் மசூதியின் பாதுகாப்பிற்காக குரல் எழுப்பி வருகின்றனர். 

சுன்ஹாரி பாக் மசூதி வழக்கில் மசூதியின் இமாம் மௌலானா அப்துல் அஜீஸ் தாக்கல் செய்த மனுவில், மசூதியின் முழு வரலாறு மற்றும் ஆவணங்களை முன்வைத்து, விதிமுறைகளின்படி, மசூதியை தியாகம் செய்ய முடியாது என்று உறுதிப்பட குறிப்பிட்டுள்ளார். . 

போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் இல்லை:


போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு இரண்டு முறை போக்குவரத்து போலீசாருடன் இணைந்து சோதனை நடத்தப்பட்டதாகவும், அப்போது, இந்த பள்ளிவாசலை அகற்றுவதற்கு அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் நிர்வாகம் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால், சுன்ஹாரி பாக் மசூதி, போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இல்லை என்றும், அப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள்தான் போக்குவரத்துப் பிரச்னைகளுக்குப் பங்களித்ததாகவும் மசூதி நிர்வாகம் மற்றும் பல்வேறு தரப்பினரும் கருத்து கூறி வருகிறார்கள்.  இந்த விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை வரும் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலைமை கொஞ்சம் அடங்கியுள்ளது. எனினும், பாசிச அமைப்புகளின் திட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. 

என்ன செய்ய வேண்டும்:


சுன்ஹாரி பாக் மஸ்ஜித் போன்ற பாரம்பரிய கட்டமைப்பை அகற்ற புதுடெல்லி முனிசிபல் கவுன்சிலுக்கு சட்டம், அதிகாரம் அளிக்கவில்லை. இந்த மசூதி தொடர்ந்து செயல்பாட்டில் உள்ள ஒரு வழிபாட்டுத்தலமாக இருப்பதால், அதனை ஒருபோதும் அகற்ற முடியாது. கடந்த 1991ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வழிப்பாட்டுத்தலங்களின் நிலை குறித்த சட்டத்தின்படி, சுன்ஹரி பாக் மசூதியை இடிக்க முடியாது. 

மசூதி பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லை என்பதுதான் உண்மையாகும். மேலும் பள்ளிவாசலில் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக தொழுகை நடைபெற்று வருகிறது. ஈத் பெருநாள் தொழுகைகள், ஜும்மா தொழுகை என அனைத்துவிதமான தொழுகைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, சட்டப்படி பள்ளிவாசலை யாராலும் இடிக்க முடியாது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கூட, இந்த மசூதி தொடர்பாக எந்தவித பிரச்சினையும் எழவில்லை. இத்தகைய சூழ்நிலையில், புதிதாக ஒரு பிரச்சினையை எழுப்பி, சுன்ஹாரி பாக் மசூதியை அகற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. நாட்டில், கோவில்-பள்ளிவசால் விளையாட்டு தொடருவதை உடனே நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தாவிட்டால், அது நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக அமையும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 


கயிறு....!

நாம் பயன்படுத்தும் கயிறு எப்படி உருவாகிறது? அதில் எத்தனை பேரின் உழைப்பு உள்ளது? இதை கொஞ்சம் பாருங்கள்:



முயற்சி.....!

விடாமுயற்சி நிச்சயம் வெற்றியை தரும். அதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு இதோ:




சும்மாவோ....சும்மா....!

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கியபோது நடந்த சுவராஸ்சியமான சம்பவம்:



சிந்தனைகள்..!

Never seek revenge....rotten fruit will fall by itself.

=====================

முடிவே இல்லாத போராட்டம் தான் இந்த வாழ்க்கை. முடியும் வரை போராடுங்கள். வென்று விடலாம்.

=======================

 One loyal friend is worth a thousand relative.

======================

There is no right time. Just time and what you do with it.

=======================

 எல்லோரும் பயணிக்கிறார்கள் என நினைத்து அதே பாதையில் பயணிக்காதீர்கள். உங்களுக்காக தனி பாதையை தேர்ந்தெடுத்து பயணம் செய்யுங்கள்.

==========================

 If you realize that you have enough, you are truly rich.

==========================

பிரச்சினைகளை கடந்து வந்து விட வேண்டும். இல்லையெனில்,  அதன் கூடவே பயணம் செய்து அவற்றை தோற்கடிக்க வேண்டும். பிரச்சினைகள் கூடவே வாழக் கூடாது.

=========================

 If you don't sacrifice for what you want, what you want becomes the sacrifice.

=======================

 ஆயிரம் கவலைகள் வந்தாலும், அதை கண்டுகொள்ளாதவரின் வாழ்க்கை எப்போதும் மிகச்சிறப்பாக இருக்கும்.

======================

Never sacrifice these three things. Your family, your heart and your dignity.

=========================

திறமை....!

ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கவே செய்கிறது.

நன்கு முறையான பயிற்சி பெற்றால், நமது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தலாம்.



அழகோ.....அழகு....!

பறவைகள் பலவிதம், அதில் இது ஒருவிதம்...!

இந்த பறவையின் அழகை கண்டு ஆனந்தம் கொள்ளுங்கள்...!!



Friday, December 29, 2023

கிளாம்பாக்கம் பேருந்து முனையம்...!

சென்னை கிளாம்பாக்கத்தில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை கொண்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30.12.2023 அன்று திறந்து வைத்தார்.




அழகு.....!

அழகிய பறவைகள் ஆனந்தமாக குளிக்கும் அழகை கண்டு மகிழுங்கள்.



வேண்டாம் மின்னணு எந்திரம்...!

𝐄𝐕𝐌: 𝐄𝐥𝐞𝐜𝐭𝐫𝐨𝐧𝐢𝐜 𝐕𝐨𝐭𝐢𝐧𝐠 𝐌𝐚𝐜𝐡𝐢𝐧𝐞𝐬 - 𝐖𝐡𝐲 𝐍𝐨, 𝐍𝐨 & 𝐍𝐨.

𝐍𝐨 𝐓𝐫𝐮𝐬𝐭: 𝐁𝐚𝐧 𝐄𝐕𝐌𝐬 - 𝐁𝐚𝐥𝐥𝐨𝐭𝐬 & 𝐁𝐚𝐥𝐥𝐨𝐭 𝐁𝐨𝐱𝐞𝐬.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏன் பயன்படுத்த கூடாது என்பதற்கும் அதில் நடக்கும் மோசடிகள் குறித்தும் விரிவாக விளக்கும் காணொளி:



திறமை....!

இளம் துளிரின் அற்புதமான திறமையை பாருங்கள்....!



கிராமிய நடனம்...!

பாரம்பரிய கிராமிய நடனம்....! கலைஞர்களின் திறமையோ....திறமை...!



சும்மா.....!

 சும்மா கண்டு ரசித்து மகிழுங்கள்....!



இஸ்லாத்தில் ஆஸ்திரேலிய பெண்கள்...!

பாலஸ்தீன மக்களின் மன உறுதியால் ஈர்க்கப்பட்டு  இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட 30 ஆஸ்திரேலிய பெண்கள்...!

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக  பாலஸ்தீன முஸ்லிம்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, இஸ்ரேலிய படைகளை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் நடத்திய திடீர் தாக்குதல் காரணமாக, இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போரில், இஸ்ரேலிய ராணுவம், பாலஸ்தீன மக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் அப்பாவி குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய ராணுவம் காசாவில் உள்ள மருத்துவமனைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், ஏராளமான நோயாளிகள் உயிரிழந்தார்கள். எனினும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன மக்கள் மன உறுதியுடன் தைரியமாக போராடி வருகிறார்கள். ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த போரில் பாலஸ்தீன மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த போராட்டத்தில் பாலஸ்தீன மக்களின் உறுதியும், தைரியமும், நம்பிக்கையும், உலகில் உள்ள பல்வேறு நாட்டு மக்களை ஆச்சரியம் அளித்து வருகிறது. அத்துடன் அவர்களை சிந்திக்கவும் வைத்துள்ளது. 

உலகம் முழுவதும் போராட்டங்கள்:

பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்பு மற்றும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களை கண்டித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் இந்த கண்டன போராட்டங்களில் ஏராளான மக்கள் கலந்துகொண்டு, இஸ்ரேலிய ராணுவத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள். அப்பாவி பொதுமக்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திவரும் கொடூர தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற குரல் தற்போது உலகம் முழுவதும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இந்த போராட்டங்களில் மனிதநேயம் உள்ள சில யூதர்களும் கலந்துகொண்டு, இஸ்ரேலிய அரசுக்கு எதிராக களத்தில் இறங்கி, இஸ்ரேலிய ராணுவ தாக்குதல்களை கண்டித்து வருகிறார்கள். 

பாலஸ்தீன மக்களின் மன உறுதி:

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலிய ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்தாலும், பாலஸ்தீன மக்கள் மிகவும் மன உறுதியுடன் அதனை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், சுமார் மூன்று மாதங்களாக காஸாவில் இஸ்ரேலின் கொடூரமான ஆக்கிரமிப்புக்கும் தாக்குதலுக்கும் எதிராக பாலஸ்தீன முஸ்லிம்களின் மன உறுதி, உலகில் அமைதியின் மதமான இஸ்லாத்தை பரப்ப உதவி செய்துள்ளது. இதன் காரணமாக  இஸ்லாமிய போதனைகளால் மக்கள் வேகமாக கவரப்பட்டு, இஸ்லாத்தால் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள். இதுபோன்ற பல சம்பவங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. 

இஸ்லாத்தில் ஆஸ்திரேலிய பெண்கள்:

இத்தகைய சூழ்நிலையில், காசா மக்களின் மன உறுதியும் ஒற்றுமையும் கண்டு வியப்பு அடைந்த ஆஸ்திரேலிய பெண்கள் 30 பேர், இஸ்லாம் என்ற மிக உன்னதமான வட்டத்திற்குள் நுழைந்து தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள Meadow Heights மசூதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கான இந்த ஆன்மீக விழா அண்மையில் நடைபெற்றது. அப்போது, 30 பெண்கள், கலிமாவை சொல்லி தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர். 

துருக்கிய ஊடகம் ஒன்று தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது, அதில் பெண்கள் கண்ணியமான இஸ்லாமிய உடையணிந்து கல்மா-இ-ஷஹாதத்தை ஒரு ஆலிமின் உதவியுடன் ஓதுவதைக் காணலாம். இஸ்லாத்தை ஏற்றுகொண்ட புதிய முஸ்லீம் பெண்ணான கிறிஸ்டின் கெர்னோகோனாக், இஸ்லாத்தில் ஓர் இறைக்கொள்கை என்ற கருத்துடன் தனது ஆழமான தொடர்பை வெளிப்படுத்தினார். பாலஸ்தீனியர்களின் போராட்டம் தனது இதயத்தைத் தொட்டதாக ஒப்புக்கொண்ட அவர்,  பாலஸ்தீன மக்களின் உறுதியான போராட்டமே தன்னை இஸ்லாத்திற்கு மாறுவதற்கு வழிவகுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மற்றொரு புதிய முஸ்லீம் பெண்ணான ஜாக்குலின் ரெட்சாக், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, தான் மிகவும் நிம்மதியாக இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், காஸாவின் நிலவரத்தை பார்த்து தான் இதுபோன்ற முடிவை எடுத்ததாகவும், இப்போது இஸ்லாம் மற்றும் அல்லாஹ்வுடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

வேகமாக பரவும் இஸ்லாம்:

பாலஸ்தீன மக்கள் தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றை மிகுந்த தைரியத்துடன் எதிர்கொண்டு வருவதன் மூலம், இஸ்லாம் குறித்து பிற மத மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் உறுதி செய்துள்ளனர். இதன்மூலம், ஓர் இறைக்கொள்கை உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது என்றே கூறலாம். உலகில் தற்போது மக்களிடையே அதிகம் கவரப்பட்டு வரும் மார்க்கமாக இஸ்லாம் இருந்து வருவதை அண்மை கால பல புள்ளிவிவரங்கள் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில், இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி மக்கள் வேகமாக வருவதை உண்மையான செய்தி ஊடகங்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். பல்வேறு நெருக்கடிகள், சிரமங்களுக்கு மத்தியிலும் இஸ்லாமிய நெறி உலக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருவதை கண்டு பாசிச அமைப்புகள் கலக்கம் அடைந்துள்ளனர். எனினும், இஸ்லாமிய நெறி அனைத்து தரப்பு மக்களிடையே பரவுவதை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அந்த வகையில், பாலஸ்தீன் மக்களின் தியாகங்கள், ஏக இறைவனால் நிச்சயம் ஏற்றுகொள்ளப்படும் என உறுதியுடன் கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்



Thursday, December 28, 2023

மன அமைதி முக்கியம்....!

வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளை கண்டு பயந்து விடக் கூடாது. எல்லாமே நன்மைக்கே என்ற எண்ணத்துடன் வாழ்க்கை பயணத்தை தொடர வேண்டும். எப்போதும் மன அமைதியுடன் இருக்க வேண்டும்.



பலூன் திருவிழா....!

அழகிய பலூன் திருவிழாவின் அற்புதமான காட்சிகள்.....!



ராகுல் காந்தி பேச்சு....!

நாக்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் விழாவில் ராகுல் காந்தி எம்.பி. ஆற்றிய அற்புதமான உரை....!



கம்பீரமான உரை....!

நாக்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் விழாவில் இளம் தலைவர் கன்னையா குமார் ஆற்றிய கம்பீரமான உரை....!



ராகுல் காந்தியும் மல்யுத்தமும்...!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சற்று வித்தியாசமான அரசியல்வாதி. அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லும் துடிப்பான இளைஞர். மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆய்வு செய்த அவர், அவர்களுடன் மல்யுத்தம் விளையாடி மகிழ்ச்சி அடைந்தார்.



சும்மா....!

சும்மாவோ சும்மா....! என்ன ஒரு அறிவு. பாராட்ட வேண்டிய நபர்கள்....!!



கேப்டன் மறைவு....!

தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் இன்று 28.12.2023 அன்று காலமானார். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



Wednesday, December 27, 2023

இந்தியர்கள் ஆர்வம் ....!

தங்கம், வங்கி முதலீடுகள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள இந்தியர்கள்....!

ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் சம்பாதிக்கும் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதியை எதிர்கால தேவைக்காக சேமித்து வைப்பது வழக்கமாக உள்ளது. இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்களிடையே சேமிக்கும் பழக்கம் பொதுவாக இருந்து வருகிறது. இப்படி சேமிக்கும் பணம், மருத்துவச் செலவு, திருமணச் செலவு, சுற்றுலாப் பயணம் என பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் பயன் அளிக்கும் வகையில் இருந்து வருகிறது. சேமிக்கும் பழக்கம்  பிறரிடம் கடன் வாங்கும் நிலைக்கு மக்களை தள்ளிவிடுவதில்லை. ஒரு சுய கவுரவத்துடன் வாழ வழி காட்டுகிறது. இதன் காரணமாக தான், அரசுகளும் சேமிப்பு பழக்கத்தை மக்களிடையே ஊக்குவிக்கின்றன.  

இதேபோன்று, குடும்பங்களிலும் தங்களது பிள்ளைகளிடம் சேமிப்பு பழக்கத்தை பெற்றோர்கள் ஊக்குவித்து வருகிறார்கள். இப்படி சேமிக்கும் பணம் உண்மையிலேயே எதிர்கால தேவைகளை ஓரளவுக்கு பூர்த்தி செய்கின்றன என்று உறுதியாக கூறலாம். 

இந்தியர்கள் ஆர்வம்: 


பொதுவாக இந்தியர்களிடையே, சேமிப்பு பழக்கம், பண்டைக்காலத்தில் இருந்து வருகிறது என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. சரி, இந்தியர்கள் எந்தவகையில் தங்களது வருவாயை சேமிக்கிறார்கள் என ஆராய்ந்தால் பல சுவையாக தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. குறிப்பாக, தங்கம், மற்றும் வங்கி முதலீடுகளில் சேமிப்பதை இந்திய மக்கள் அதிக ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். இதேபோன்று, இந்திய பெண்மணிகள் மத்தியில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. 

ஆய்வில் தகவல்:

இந்நிலையில், இந்தியர்கள் இடையே இருக்கும் சேமிப்பு பழக்கம் தொடர்பாக நாட்டில் உள்ள 20 மாநிலங்களில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் விரிவான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் பல்வேறு கேள்விகள் மக்கள் முன்பு வைக்கப்பட்டன. அவர்கள் எந்த திட்டங்களில் சேமிக்க ஆர்வம் கொள்கிறார்கள். தங்கம், வங்கி முதலீடு ஆகியவற்றில் அதிகம் ஆர்வம் உள்ளதாக போன்ற வினாக்கள் ஆய்வில் கலந்துகொண்ட மக்களிடம் வினவுப்பட்டது. 

இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த பெரும்பாலான மக்கள், தங்கம் மற்றும் வங்கி டெபாசிட்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கணக்கெடுப்பில் சுமார் 77 சதவீத குடும்பங்கள் தங்களுடைய சேமிப்பை வங்கி வைப்பு மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்புவதாக கூறியுள்ளனர். இதன்மூலம் தங்கம் மற்றும் பாரம்பரிய வங்கி டெபாசிட்கள் மீதான இந்தியர்களின் நாட்டம் மாறாமல் உள்ளதை அறியமுடிகிறது. 

அவசர தேவைக்காக சேமிப்பு:


இதேபோன்று, 22 சதவீத இந்தியர்கள் எதிர்பாராத மருத்துவ அவசரநிலை காரணமாக தங்கள் வாழ்நாள் சேமிப்பை செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், 56 சதவீத இந்திய குடும்பங்கள் வேலை இழப்பு குறித்த அச்சத்தில் தொடர்ந்து வாழ்கின்றனர். அடுத்த ஆறு மாதங்களில் மூன்று சதவீத குடும்பங்கள் வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், 10 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் வாங்கப் போவதாகவும் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இந்த கணக்கெடுப்பின்படி, 53 சதவீத குடும்பங்களுக்கு இன்னும் உடல்நலக் காப்பீடு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதேபோன்று, பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் சதவீதம் முந்தைய ஆண்டை விட 3 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கூடுதலாக, 2022-இல் 6 சதவீதமாக இருந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை தற்போது 10 சதவீத இந்திய குடும்பங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.

 சவால்களுக்கு மத்தியில் கனவு: 

இந்திய மக்கள் அனைவரும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு நிலைப்பாடுகளை எதிர்கொண்டு, வாழும் மக்கள், வேலையில்லா திண்டாட்டம், தொழில் பாதிப்பு, வருவாய் குறைவு என ஏராளமான நெருக்கடிகளை நாள்தோறும் சந்தித்து வருகிறார்கள். இதனால், நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்களின் வருவாய் மிகப்பெரிய அளவுக்கு உயரவில்லை என்பது நிதர்சன உண்மையாகும். 

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், சராசரி மாத குடும்ப வருமானத்தின் அடிப்படையில் சண்டிகர் முதலிடத்தில் உள்ளது. இதேபோன்று, கர்நாடகா மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், இந்தியர்கள் மத்தியில் தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது என்றும், அந்த ஆர்வம் இன்னும் குறையவில்லை என்றும் ஆய்வில் தெரியவந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


எச்சரிக்கை....!

2024-ல் நாடாளுமன்ற தேர்தல் நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு. இந்த தேர்தலில் நரேந்திர மோடியை வீழ்த்தாவிட்டால், நாடு ஜனநாயக நெறிமுறையை இழந்து சர்வாதிகாரத்திற்கு வந்துவிடும்.

காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் எச்சரிக்கை...!




அழகிய நினைவுகள்....!

வாழ்க்கையில் மறக்க முடியாத அழகிய தருணங்களின் இனிய நினைவுகள்....!



இது திரைப்படம்....!

அருமையான திரைப்படம்....!

சேஷம் மைக்-இல் பாத்திமா என்ற இந்த மலையாளத் திரைப்படத்தை மிகவும் வித்தியாசமான கதை களத்துடன்   மனு சி குமார் எழுதி இயக்கியுள்ளார்.

படத்தில் பாத்திமா நூர்ஜஹானாக வாழ்ந்துள்ள நாயகி கல்யாணி பிரியதர்ஷனின் நடிப்பு பிரமாதம்.

2 மணி 15 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படத்தில் முகம் சுளிக்கும் காட்சிகள் இல்லை. மாறாக, ஒரு கால்பந்து வர்ணனையாளராக வர விரும்பும் முஸ்லிம் பெண் பாத்திமா, சந்திக்கும் போராட்டங்கள், அதில் அவர் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை இயக்குனர் மனு சி குமார், அருமையான திரைக்கதை எழுதி, படத்தில் ரசிகர்கள் ஒன்றி விடும்படி மிகச்சிறந்த முறையில் இயக்கியுள்ளார்.  ஹேஷாம் அப்துல் வஹாபின் இசை, சந்தான கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, கிரண் தாஸின் படத்தொகுப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.

இந்த திரைப்படத்தில் நடித்துள்ள அனைவரும், அதில் வாழ்ந்தே இருக்கிறார்கள் என கூறலாம்.

சேஷம் மைக்-இல் பாத்திமா, ஒவ்வொரு குடும்பங்களும் பார்க்க வேண்டிய மிகவும் தரமான திரைப்படம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

மோசடி எப்படி நடக்கிறது....?

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி எப்படி நடக்கிறது....!

ஒரு வல்லுநரின் அற்புதமான விளக்கம்...!!



Tuesday, December 26, 2023

கோழி திருடர்கள்....!

In UP's Agra, a lorry carrying chickens met with an accident in a road pile up due to dense fog. Commuters can be seen grabbing chickens and fleeing from the spot. Some bundled them in sack.

உத்தரப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்து கோழிகளை திருடிச் செல்லும் கயவர்கள்...!



அநீதிக்கு எதிராக....!

அநீதிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி யாத்திரை - காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்.

𝗕𝗛𝗔𝗥𝗔𝗧 𝗡𝗬𝗔𝗬 𝗬𝗔𝗧𝗥𝗔.

The yatra will cover a distance of 6200 kms, spanning 14 states (Manipur, Nagaland, Assam, Meghalaya, West Bengal, Bihar, Jharkhand, Odisha, Chhattisgarh, UP, Madhya Pradesh, Rajasthan, Gujarat & Maharashtra) and 85 districts.

The mode of the yatra is a bus journey, along with some short walks every now and then.



இதயங்களை இணைக்க....!

B𝗛𝗔𝗥𝗔𝗧 𝗡𝗬𝗔𝗬 𝗬𝗔𝗧𝗥𝗔...!

The yatra will cover a distance of 6200 kms, spanning 14 states (Manipur, Nagaland, Assam, Meghalaya, West Bengal, Bihar, Jharkhand, Odisha, Chhattisgarh, UP, Madhya Pradesh, Rajasthan, Gujarat & Maharashtra) and 85 districts.

The mode of the yatra is a bus journey, along with some short walks every now and then.

Shri kcvenugopalmp, AICC General Secretary (Organisation)



வேண்டாம் மெத்தனம்....!

மெத்தனம் வேண்டாம்....!

சிறுபான்மை சமூகங்களின் அரசியல் ஈடுபாடு, அவர்களின் குரல்களை வலுப்படுத்துவதிலும், ஜனநாயக செயல்முறைக்குள் அவர்களின் தேவைகள் மற்றும் உரிமைகளை திறம்பட முன்வைப்பதிலும் மிகவும் அவசியம். அதற்காக, வாக்களிக்கும் நாளில் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதிசெய்து, தகவலறிந்த முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இது ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான ஜனநாயகத்திற்கு சிறந்த பங்களிப்பை அளிக்கும் முக்கிய விஷயமாகும். 

ஆனால், சிறுபான்மையின மக்களிடையே, குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் தேர்தல் ஜனநாயக நடைமுறைகளில் பங்கேடுப்பது குறித்த அலட்சியப் போக்கு அல்லது மெத்தனம் தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் காரணமாகதான், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா, இல்லையா என்பதை அறிய அவர்கள் ஆர்வம் செலுத்துவதில்லை. வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இது பல்வேறு பிரச்சினைகளை கொண்டு வரும் என்பதையும் முஸ்லிம் சமுதாயம் இன்னும் உணர்ந்துகொள்வதில்லை. 

கவனம் மிகவும் தேவை:

நாடு தற்போது சென்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையை பார்த்தால், எதிர்க்காலத்தில் அடையாள அட்டைகள் பெறாத மக்கள், பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும்.  எனவே, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு, ரேஷன் அட்டை, பணிபுரியும், அலுவலக நிறுவனத்தின் அட்டை, வீட்டு முகவரி அட்டை போன்ற முக்கியமான அனைத்து அடையாள அட்டைகளையும் நாம் அனைவரும் பெற்று கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். இதேபோன்று, வங்கிக் கணக்கு வைத்து இருப்பவர்கள், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் உள்ளிட்ட புத்தகங்களையும் கட்டாயம் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும். சிறுபான்மையின மக்களை, குறிப்பாக முஸ்லிம்களை குறிவைத்து பாசிச கும்பம் பல்வேறு சதித் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், நமக்கு மிகமிக அவசியமான அடையாள அட்டைகளை எந்தவித சிரமம் அடைந்தாலும், அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

அலட்சியம், மெத்தனம் வேண்டாம்:

முக்கியமான அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதில் தங்களிடம் இருக்கும் அலட்சியம் மற்றும் மெத்தன போக்கை முஸ்லிம்கள் உடனே கைவிட வேண்டும். அந்த அடையாள அட்டைகள் மூலம் எந்தவித பலன்களும் இல்லை என நினைத்தாலும் கூட, அதைப் பற்றி கவலைப்படாமல், முக்கியமான அனைத்து வகையான அடையாள அட்டைகளையும் பெற்றுக் கவனத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக நேரம் ஒதுக்கி, அனைத்து விதமான அடையாள அட்டைகளையும் முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆண், பெண், குழந்தைகள் என அனைவருக்கும் அடையாள அட்டைகள் பெற்றுக் கொண்டு, கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். இது இன்றைய சூழ்நிலையில் காலத்தின் கட்டாயம் என்பதை சிறுபான்மையின மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். 

விழிப்புணர்வு பிரச்சாரம்:

முஸ்லிம் அமைப்புகள், சமூக நிறுவனங்கள், முஸ்லிம் தொண்டு நிறுவனங்கள் என அனைத்து வகையான நல்ல உள்ளம் கொண்ட நிறுவனங்கள், அடையாள அட்டையின் முக்கியத்துவம் குறித்து முஸ்லிம்கள் மத்தியில் விழிப்புணர்வு  பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, வாக்காளர் அடையாள அட்டை பெற்றுகொள்வதின் அவசியம் குறித்து அவர்கள் உடனடியாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து, முஸ்லிம்கள் மத்தியில் அதன் முக்கியத்துவம் குறித்து நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், நாட்டில் உள்ள 20 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள், தங்களது வாக்குரிமையை முறையாகப் பயன்படுத்த வேண்டும். அதற்கு முக்கியமானது, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் உள்ளதா, இல்லையா என்பதை அவர்கள் முதலில் அறிந்துகொண்டு, அப்படி இல்லையெனில், தங்களது பெயர்களை சேர்க்க வேண்டும். குடும்பத்தில், வாக்களிக்க உரிமை பெற்ற அனைவரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதையும் குடும்பத் தலைவர்கள் சரி பார்த்து, இல்லையெனில், அவர்களின் பெயர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க கால அவகாசம் அளித்துள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு உடனடியாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை கட்டாயம் சேர்க்க முன்வர வேண்டும். 

சமூக அமைப்புகளின் முயற்சி:

மகாராஷ்டிராவில் ரஹ்மான் அறக்கட்டளை என்ற அமைப்பு முக்கிய நிறுவனமான ஸ்டாஸ் பவுண்டேஷனுடன் இணைந்து,  சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களின் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெறுவதற்கு உதவும் நோக்கத்துடன், சிறுபான்மையின மக்கள் வசிக்கும் முக்கிய பகுதிகளில் விரிவான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. 

ரஹ்மான் அறக்கட்டளை மற்றும் ஸ்டார் அறக்கட்டளை ஆகியவை பல்வேறு சமூக மற்றும் அரசியல் குழுக்களுடன் இணைந்து விரிவான பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கின்றன. இந்த நிகழ்வுகள் குறிப்பாக, சிறுபான்மை சமூகங்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம், நடைமுறைகள் மற்றும் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வாக்களிக்கும் செயல்முறை, அதன் நன்மைகள் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கான அதன் முக்கியத்துவம் குறித்தும் முஸ்லிம்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த பிரச்சாரத்தின் முக்கிய அம்சம், உள்ளூர் மட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதிலும் பல்வேறு சிறுபான்மை குழுக்களிடையே இணைப்புகளை எளிதாக்குவதாகும்.   முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து இரு அமைப்புகளும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 

ரஹ்மான் அறக்கட்டளை மற்றும் ஸ்டார் அறக்கட்டளையின் இந்த முயற்சி, மகாராஷ்டிராவில் உள்ள சிறுபான்மை சமூகங்களுக்கு சாதகமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் படியாக பார்க்கப்படுகிறது. இந்த முயற்சிகள் சமூகங்களை ஜனநாயக செயல்முறையில் ஒருங்கிணைத்து அவர்களின் உரிமைகளுக்காக வாதிடுவதில் ஒரு மைல்கல்லாக இருக்கும். இந்த பிரச்சாரத்தின் வெற்றி சிறுபான்மை சமூகங்களுக்கு இன்றியமையாதது மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அளிக்கும். 

நாடு முழுவதும் விழிப்புணர்வு:

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகைய முயற்சி, நாடு முழுவதும் விரிவுப்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள முஸ்லிம் தொண்டு நிறுவனங்கள், முஸ்லிம் அமைப்புகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு குறுகிய காலமே எஞ்சியுள்ளதால், இந்த பணிகளை விரைப்படுத்த வேண்டும். அதன்மூலம் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு சிறுபான்மையின மக்களிடையே தேர்தல் ஜனநாயக நடைமுறைகளின் முக்கியத்துவம் குறித்து நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் சிதறி போகாமல் இருக்க இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மிகவும் அவசியம் என்பதை சமுதாயம் உணர்ந்துகொண்டு செயல்பட வேண்டும். அதன்முலம் மட்டுமே நாட்டில் நல்ல மாற்றதை ஏற்படுத்த முடியும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

அழகிய சிந்தனை....!

வாழ்க்கையில் நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் கிடைக்க வேண்டும் எனில் நல்ல சிந்தனைகள் நம்மிடையே தொடர்ந்து தவழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். அத்தகைய சிந்தனைகள் தான் இவை:




பிரார்த்தனை.....!

சமாஜ்வாதி கட்சி எம்பி ஷபிகுர் ரஹ்மான் கூறியது: 

"நான் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லமாட்டேன், ஏனென்றால் எனது மசூதி சூறையாடி கோவிலாக மாற்றப்பட்டுள்ளது. ராமர் கோவில் திறப்பு நாளில் கூட, பாபர் மசூதியை மீண்டும் கட்டுவதற்காக நான் பிரார்த்தனை செய்வேன்."




Monday, December 25, 2023

திருட்டு பய....!

கோவை  சாய்பாபா கோவிலின்,  கேட்  2 அருகே, நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியில் ஒருவித கெமிக்கல் பொடியை தூவியவுடன், கார் கண்ணாடி சத்தமில்லாமல் உடைகிறது...!

காரின் உள்ளே  இருக்கும்  பேக்  - ஐ  ஒருவன்  திருடி செல்கிறான்.

அனைவருக்குமான எச்சரிக்கை பதிவு  இது...!



குளிர் காயும் புலி...!

Tiger takes winter siesta at Uttar Pradesh village, refuses to budge.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வனப் பகுதியில் இருந்து வந்த புலி ஒன்று, குளிர் காயும் காட்சியை அச்சத்துடன் கண்டு ரசிக்கும் கிராம மக்கள்.



நிவாரணப் பணி...!

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பி டி காலனி, ராஜீவ் காலனி, பிரையண்ட் நகர் பகுதியில் சு.வெங்கடேசன் எம்.பி., நிவாரணப் பணியில் ஈடுபட்ட பொழுது!




கனமழை சேதம்...!

 

TamilNadu Rains. One of the worst-damaged sections of the railway track which were washed away on Tirunelveli-Tiruchendur section by the recent flood underway near Nazareth in Thoothukudi district.




எழுத்துக்கள்....!

சமூக உணர்வுடன் கூடிய கட்டுரைகளை மணிச்சுடர் நாளிதழ், இனிய திசைகள் மாத இதழ் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதியது மகிழ்ச்சி அளித்தது....!



Wow - வாவ்....!

கால்பந்து விளையாட்டில் திறமையான வீரர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு கோல் கீப்பரின் திறமையை கொஞ்சம் பாருங்கள்....!



சும்மாவோ....சும்மா....!

வாழ்க்கையில் நகைச்சுவை மிகவும் முக்கியம். அப்போதுதான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் இந்த நகைச்சுவையை கண்டு மகிழுங்கள்...!



அழகிய ஊர்வலம்....!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டென்மார்க் நாட்டில் நடைபெற்ற ஒரு அழகிய கிறிஸ்துமஸ் பேரணி....!



பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது எப்படி....?

திருமண வாழ்வில் உருவாகும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது எப்படி....?


இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைகளில் திருமணம் செய்வது ஒரு அழகிய சுன்னாவாகும்.  திருமணத்திற்குப் பிறகுதான் ஒருவரின் வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்குகிறது. திருமணத்திற்குப் பிறகு ஆண் மற்றும் பெண் இருவருக்கும் வெவ்வேறு பொறுப்புகள் உள்ளன. ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின்னால் ஒரு பெண் இருப்பதாக கூறப்படுகிறது, பொதுவாக அது அவரது மனைவி என கருதப்படுகிறது, அதேநேரத்தில், வெற்றியில் இருந்து தோல்விக்கு செல்லும் ஒவ்வொரு நபரின் பின்னாலும் ஒரு பெண்ணின் கை உள்ளது என்ற கருத்தும் இருந்து வருகிறது. குறிப்பாக, அந்த பெண் ஒருவரின் மனைவி என்றும் வழக்கமான கருத்து நிலவுகிறது. எனவே, திருமணத்திற்குப் பிறகு, வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமானால், ஆண், பெண் இருவரும் நல்ல புரிதலுடன் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடர வேண்டும். அதன்மூலம், ஆணின் தோல்விக்கு பெண் காரணம் என்ற குற்றச்சாட்டை உடைத்து எறியலாம். 

தவிர்க்க வேண்டிய அம்சங்கள்:


கணவனின் வெற்றிக்குக் காரணமான மனைவி, அவனுக்குத் துணையாக, அவர்களின் துயரங்களில் துணை நிற்கும் நம் சமூகத்தில், கணவன் வாழ்க்கையை அவலப்படுத்தும் சில மனைவிகளும் இருக்கவே செய்கிறார்கள். இப்படிப்பட்ட மனைவிகளால், ஒருவரின் முன்னேற்றம் என்பது வெற்றி ஏணியில் ஏறுவது கடினமாக மட்டுமல்ல, ஒருவரின் நிலையைத் தக்க வைத்துக்கொள்வதும் கடினமாகிறது. இதன் காரணமாகதான் கணவன்மார்கள், எப்போதும் தங்கள் மனைவிகள் உளவு பார்ப்பதைத் தவிர்க்கவும், அவர்களின் தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்கவும், சந்தேகத்திற்குரிய பழக்கங்களிலிருந்து விடுபடவும் வழிகளைத் தேடுகிறார்கள். 

கணவன் மீது சந்தேகம் கொள்ளும் பழக்கம் என்பது ஒரு நோயாகும். இந்த நோய் பல பெண்களிடம் காணப்படுகிறது. சில சமயங்களில் இந்த நோய் குணப்படுத்த முடியாத நோயாக மாறுகிறது. சந்தேகம் கொள்ளும் பழக்கத்திற்கு ஆளான மனைவிகள், தங்கள் கணவர்களை எப்போதும் உன்னிப்பாகக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் நல்ல பழக்கங்களைக் குறைத்து மதிப்பிடவும் தொடங்குகிறார்கள். கணவன் ஒரு விதவைக்கு உதவி செய்தாலோ, தொண்டு செய்தாலோ, ஒரு பெண்ணைப் புகழ்ந்தாலோ, ஒரு பெண் தனது கணவனைப் புகழ்ந்தாலோ, அவர்கள் அஞ்சுகிறார்கள்.

கணவனுக்கு அந்தப் பெண்ணின் மீது ஆர்வம், இரண்டாவது திருமணம் செய்ய விரும்புகிறார் என தேவையில்லாமல் இவர்களே கற்பனை செய்துக் கொள்கிறார்கள். இதன் காரணமாக கணவனின் பெண் முதலாளி, செயலாளர், பக்கத்து வீட்டுப் பெண்கள், அவர் சந்திக்கும் மற்ற பெண்களை மனைவிமார்கள் உளவுப் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். மேலும், கணவனுக்கு தன்னைப் பற்றி சிறிதும் கவலை இல்லை, அக்கறை இல்லை என நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். தாமதமாக வீட்டிற்கு வந்தால், குறைவாக சாப்பிட்டால், கணவன் வேறு பெண்களிடம் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டாரோ என்ற சந்தேக மனநிலையில் ஒரு மனைவி முதிர்ச்சி அடைந்து அந்த எண்ணத்துடனே வாழ்ந்து வருகிறார். இது ஒரு கட்டத்தில் கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் விரும்பாமல் பிரிந்து செல்ல விரும்பும் ஒரு முக்கியமான கட்டத்திற்கு வந்துவிடுகிறது. ஆரம்பத்தில் இந்த முடிவு மகிழ்ச்சியையும், திருப்தியை தரும் என அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், உண்மையில், இது மிகப்பெரிய ஆபத்துகளை கணவன்-மனைவிகளிடையே ஏற்படுத்தி விடுகிறது என உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். 

பிரிவுனைக்குப் பிறகு வாழ்க்கை:


திருமண உறவு முறிந்தபிறகு கணவன், மனைவியை ஒழித்துவிடலாம் என்று நினைக்கிறான். அவன் வேறொரு நல்ல மனைவியைத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்கிறான். ஆனால், ஒவ்வொரு பெண்ணிலும் அவன் கற்பனை செய்யும் மனைவி, அவனுக்கு அரிதாகவே காணப்படுகிறாள்.  இதேபோன்று, திருமண உறவை முறித்துக் கொண்ட பெண்,  தன் வாழ்நாள் முழுவதையும் குழந்தைகளையும் இழந்துவிட்டு தனியாகக் கழிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறாள்.  இதனால், வாழ்க்கையில் மன அமைதி பறிபோகிறது. கணவன்-மனைவி உறவை உடைத்துக் கொள்ளும் முடிவினால், அவர்கள் இருவர் மட்டுமல்லாமல், குடும்பத்தில் உள்ள அனைவரும் கடுமையான இழப்பை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

சிக்கலைத் தீர்க்க வழி:

குடும்பங்களில் ஏற்படும் எந்தவொரு சிக்கலையும் தீர்க்க மிகவும் கடினமான வழியை எடுப்பது புத்திசாலித்தனம் அல்ல. ஆனால் அந்த சிக்கலை எளிதான மற்றும் பேச்சுவார்த்தை வழியில் தீர்ப்பது உறவின் அழகையும் வலிமையையும் வெளிப்படுத்துகிறது. அதனால்தான், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையையே சிரமத்தில் ஆழ்த்தினாலும், அவர்களுடன் தொடர்புடையவர்களைக் கடுமையான சோதனைக்கு உட்படுத்தும் பிரச்சனைக்கு தீர்வு காண விவாகரத்து போன்ற ஆபத்தான நிலைக்கு செல்லாமல் இருப்பது முக்கியம். ஆனால், கணவனையும், வீட்டையும் நேசிக்கும் பெண், தன் காதல் எப்போதும் பறிபோகும் ஆபத்தில் இருப்பதாலேயே, இப்படிப்பட்ட நோய்களில் சிக்குகிறாள் என்பதே உண்மை. இல்லையெனில், கணவன் புரிந்துகொள்வது அவசியம். 

மனைவியின் இந்த பலவீனத்தை அவளிடம் அன்போடும், பாசத்தோடும் விளக்கி, அவள் மீது கோபப்படுவதையோ, அவள் சொல்வதற்காக அவளை திட்டுவதையோ விடுத்து, அவள் வாழ்க்கையில் யாரேனும் முக்கியமானவர் என்றால், அவள் மட்டுமே என்னை நேசிக்கிறாள் என்று கணவன் நினைக்க வேண்டும்.  இதுபோன்ற எண்ணங்கள், மனைவி சந்தேக நோயிலிருந்து மீள்வதற்கு உதவுவது மட்டுமல்லாமல், வீட்டுச் சூழலை மேம்படுத்துவதிலும் உறவை வலுப்படுத்துவதிலும் சிறந்த பங்கை வகிக்கும். கணவர்கள் தங்கள் மனைவிகளுடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். மனைவியிடம் தங்களுக்கு வரும் கடிதங்களைப் படிக்க வேண்டும், தங்களுடைய பொருட்களை சரிபார்க்க அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும், எந்த விஷயத்திலும் சுதந்திரமாக பேசுவதற்கும், தங்களை வெளிப்படுத்துவதற்கும் அவர்களுக்கு உரிமை அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க வேண்டும். கணவன்மார்கள், தங்கள் மனைவிகளுக்காக அதிக நேரம் ஒதுக்க வேண்டும். எந்தவொரு உறவிலும் இது மிகவும் முக்கியமானது என்பதால் அவற்றைப் புரிந்துகொண்டு அன்புடன் விளக்க முயற்சிக்க வேண்டும். கணவர்கள் தங்கள் மனைவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதபோது, ​​​​அவர்களிடம் தங்கள் விவகாரங்களை மறைக்கவோ அல்லது அவர்களிடம் பொய் சொல்லவோ முயலும்போது அவர்கள் சந்தேகத்திற்குரிய பழக்கத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்.  இது ஒரு குடும்பத்தை மற்றும் வீட்டை அழிக்கும் தீங்கு விளைவிக்கும் முடிவுகளுக்கு வழிவகுக்கிறது.

உளவியல் ரீதியான அணுகுமுறை:


கணவன்-மனைவி உறவுகள் மிகச் சிறப்பாக இருக்க வேண்டுமானால், இருவரும் உளவியல் ரீதியான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.  சில பெண்கள் தங்கள் சந்தேகங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையை அழிக்க வேண்டிய அறிவுரைகளையும் வழிமுறைகளையும் கேட்க வழிவகுக்கிறது. ஏனென்றால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர், உண்மையில் உங்கள் நலம் விரும்புபவர்கள் அல்ல. உங்கள் பிரச்சினைகளைப் பற்றி, அவர்கள் தங்கள் பகையை வெளிப்படுத்த எந்தக் கல்லையும் விட்டுவிட மாட்டார்கள். அவர்களின் அறிவுரைகள் உங்கள் வாழ்க்கையையும் உங்கள் அழகான உறவையும் அழிக்கும். நீங்கள் யாரிடமாவது எதையாவது பகிர்ந்து கொள்ள விரும்பினால், புத்திசாலித்தனமான பயனாளியைத் தேடுங்கள். 

பல்வேறு விசாரணைகள், கருணையுடன் கூடிய உறுதிமொழிகள் மற்றும் நீங்கள் தவறு என்று விளக்கங்கள் அளித்த போதிலும், உங்கள் கணவர் வேறொருவர் மீது ஆர்வமாக இருப்பதாக நீங்கள் உண்மையாக இன்னும் உணர்ந்தால், நீங்கள் ஒரு நல்ல உளவியலாளரை சந்திக்க வேண்டியிருக்கும். சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நோயால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்பது அதற்கு அர்த்தம். எனவே, வாழ்க்கையில் விவாகரத்து, பிரிவினை, சண்டை எல்லாம் நல்ல தீர்வல்ல என்பதை கணவன்-மனைவி ஆகிய இருவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் வீணான, கற்பனையான எண்ணங்கள் பல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகின்றன. அதை தவிர்த்துவிட்டு, புரிதல் மனப்பான்மையுடன் இருவரும் வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டும். கணவரின் விருப்பத்திற்கும் புரிதலுக்கும் ஏற்ப வழிமுறைகளை அமைத்துகொண்டு, அவருக்கு ஆதரவளிக்க மனைவி முன்வர வேண்டும். இதே நிலையில்தான் கணவனும் இருக்க வேண்டும்.  வாழ்க்கையில் திமிர் பிடிப்பதை விட நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும். இந்த குணங்களை அனைத்தும் மனைவியிடம் காணும் கணவன் அவள் மீது உண்மையான அன்பை செலுத்துவான் என்பது உண்மையான  உளவியல் கருத்தாக உள்ளது. 

- நன்றி: ரோஸ்நாமா ராஷ்ட்ரிய சஹாரா உர்தூ நாளிதழ், அலி அஷ்ஹத் அஸ்மி,தோஹா கத்தார்.

- தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Sunday, December 24, 2023

நடமாடும் உர்தூ நூலகம்....!

சென்னையில் முதல் முறையாக நடமாடும் உர்தூ நூலகம் அறிமுகம்....!

உர்தூ மொழிகளில் ஏராளமான நூல்களை கண்டுவியப்புடன் வாசித்த வாசகர்கள்....!


சென்னை, டிச26- தமிழகத்தில் உர்தூ மொழியை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சென்று சேர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மியாசி உர்தூ அகாடமியின் தலைவர் ஏ.முஹம்மது அஷ்ரப் மற்றும் உர்தூ அகாடமியின் ஒருங்கிணைப்பாளர் ருஹுல்லா ஆகியோரின் முயற்சியால், சென்னையில் முதல்முறையாக நடமாடும் வாகன உர்தூ நூலகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

நடமாடும் நூலகம்:

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பள்ளிவாசல் வளாகத்தில் உர்தூ நடமாடும் நூலக வேன்கள் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உர்தூ மொழியின் மேம்பாட்டிற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த புதிய முயற்சிக்கு முஸ்லிம்களிடம் இருந்து மட்டுமல்லாமல், உர்தூ மொழி மீது ஆர்வம் கொண்ட அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

திரண்ட உர்தூ ஆர்வலர்கள்:


குறிப்பாக, உர்தூ ஆர்வலர்கள், பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நடமாடும் உர்தூ நூலகத்திற்கு சென்று அந்த வாகன நூலகத்தில் உள்ள ஏராளமான உர்தூ நூல்கள் குறித்த தகவல்களை அறிந்துகொண்டதுடன், அவற்றை வாசிக்கும் வாய்ப்பையும் பெற்றனர். 

கோரிக்கை:

அத்துடன், நடமாடும் உர்தூ நூலகம் குறித்த தகவல்களை மற்றவர்களுக்கும் அவர்கள் எடுத்துக் கூறியதால், ஏராளமான மக்கள் அதனை காண திருவல்லிக்கேணி வாலாஜா பள்ளிவாசல் வளாகத்திற்கு திரண்டனர். உர்தூ அகாடமியின் இந்த புதிய முயற்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதுபோன்ற, நிகழ்வுகளை அடிக்கடி நடத்த வேண்டும் என்றும், மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கும் நடமாடும் உர்தூ நூலகங்கள் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


முஸ்லிம் கண்காணிப்பாளர் ஜவ்பர் அலி….!


துரித மனிதநேய சேவையால் 800 பயணிகளின் உயிர்களை

காப்பாற்றிய ரயில் நிலைய  முஸ்லிம் கண்காணிப்பாளர்

ஜவ்பர் அலி….!

தனது கடமையையே செய்ததாக

மணிச்சுடர் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் நெகிழ்ச்சி…!!

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் மனிதநேய சேவைகளை செய்யும் வாய்ப்புகள் மிக எளிதாக கிட்டி விடுவதில்லை. அப்படியே சேவை செய்யும் வாய்ப்புகள் கிடைத்தாலும் சிலர் அதனை கண்டுக் கொள்ளாமல் புறக்கணித்து சென்று விடுகின்றனர். அதன்மூலம் தங்களுக்கும் மனித சமுதாயத்திற்கும் அவர்கள் ஒரு விதத்தில் தீங்கு செய்கிறார்கள் என்றே கூறலாம். தாங்கள் செய்யும் பணிகளில் கூட சில அலட்சியமாக இருந்துவிட்டு, பலருக்கு துன்பங்களை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

ஆனால், தூத்துக்குடி மாவட்டம், காயாமொழி கிராமத்தை பூர்விகமாக கொண்டு, தற்போது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் எஸ்.எம்.ஜவ்பர் அலி, இயற்கையிலேயே சமூக சேவையில் அக்கறை கொண்டவர். மற்றவர்களுடன் மனிதநேயத்துடன் பழகும் குணம் கொண்டவர். அத்துடன், தனது பணியில் நேர்மையான முறையில் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் சேவை ஆற்றி வருபவர். இதன் காரணமாக தான், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17ஆம் தேதி கொட்டிய கனமழையின்போது, செந்தூர் விரைவு ரயிலில் பயணம் செய்த 800க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர்களை தனது துரித சேவை மூலம் அவர் காப்பாற்றியுள்ளார். இதுதொடர்பாக மணிச்சுடர் நாளிதழுக்கு ஜவ்பர் அலி அளித்த சிறப்பு நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:

துரித சேவை:

தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால், அங்குள்ள ரயில் வழித்தடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த 17ஆம் தேதி பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் திருச்செந்தூர்-நெல்லை வழித்தடத்தில் செய்துங்கநல்லூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்கள் இடையேயான ரயில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இத்தகைய சூழ்நிலையில், திருச்செந்தூரில் இருந்து செந்தூர் விரைவு ரயில், இரவு 8.25 மணிக்கு புறப்பட்டது. நாசரேத் ரயில் நிலையத்தை ரயில் கடந்தவுடன், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு செக்சன் என்ஜினியர் மற்றும் செய்துங்கநல்லூர் ரயில் நிலைய மேலாளர் ஆகியோர் மூலமாக ரயில் தண்டவாளங்கள் மிகவும் மோசமாக இருப்பதாக தகவல் கிடைத்தது.. இந்த பரபரப்பான சூழ்நிலையில், 5 நிமிடங்களே மட்டுமே எஞ்சி இருந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய கண்காணிப்பாளர் ஜவ்பர் அலி,  ரயிலை மேற்கொண்டு செல்ல அனுமதி அளிக்காமல், நிறுத்தி வைத்தார். அத்துடன், செக்சன் கண்ட்ரோலுக்கு தகவல் தெரிவித்து, தொடர்ந்து கனமழை பெய்துக் கொண்டிருந்ததால், மேற்கொண்டு ரயிலை இயக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.

மனிதநேய சேவை:

செந்தூர் விரைவு ரயில் மிகப்பெரிய விபத்தில் சிக்கிக் கொள்ள இருப்பதை தனது துரித சேவை மூலம் தடுத்த நிறுத்திய ஜவ்பர் அலி, அத்துடன் தனது பணிகளை நிறுத்திக் கொள்ளவில்லை. அந்த விரைவு ரயிலில் சிக்கிக் கொண்ட 800க்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாப்பாக தங்க வைக்க ரயில்வே நிர்வாகம் மூலம் ஏற்பாடுகளை செய்தார். இந்த நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், ரயில் நிலையம் முழுவதும் இருட்டாக மாறிவிட்டது. தொடர்ந்து மழை பெய்துக் கொண்டும் இருந்தது. இதனால் மீட்புப் பணிகளில் மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முதலில் இரண்டு பேருந்துகள் மூலம் பயணிகள் அனுப்பப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், தாமிரபரணி பாலத்தில் வெள்ளம் ஏற்பட்டதால், அந்த பேருந்துகள் மீண்டும் ரயில் நிலையத்திற்கு வரவில்லை. இதனால் பீதி அடைந்த 600க்கும் மேற்பட்ட பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே இரவு கழித்தனர்.

இந்த விவரங்கள் குறித்த தகவல்களை மதுரை கண்ட்ரோலுக்கு ஜவ்பர் அலி தொடர்ந்து அளித்துக் கொண்டே இருந்தார். ரயில் நிலையத்தில் தங்கி இருந்த 600 பயணிகளுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. வெள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டதால், வாகனங்கள் மூலம் உணவுப் பொருட்களை கொண்டு வர முடியவில்லை. எனவே ஹெலிகாப்டர் மூலம், உணவுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் வானிலை சரியில்லாத காரணத்தால், ஹெலிகாப்டர் திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்துடன் கோபம் அடைந்த நிலையில், புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் வீடுகளில் சமைத்த உணவுகளை கொண்டு வந்த பயணிகள் அனைவரும் சாப்பிட வழங்கினார்கள். 

இப்படி இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, 3 ஹெலிகாப்டர் மூலம் பயணிகளுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன. எனினும் பயணிகள் மத்தியில் பீதியும் பதற்றமும் நிலவியதைக் கண்ட ஜவ்பர் அலி மற்றும் ரயில் நிலைய ஊழியர்கள், அவர்களுக்கு நிலைமையை எடுத்துக் கூறி, எந்தவித பிரச்சினையும் வராமல் பார்த்துக் கொண்டனர்.

மூன்று நாட்களும் கனமழை, மின்சாரம் துண்டிப்பு, உணவுப் பிரச்சினை என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய கண்காணிப்பாளர் ஜவ்பர் அலி மற்றும் சசிகுமார் உள்ளிட்ட பாண்ட்ஸ்மேன்கள், ரயில் பயணிகளுக்கு மிகப்பெரிய அளவுக்கு சேவை ஆற்றி ரயில்வே துறைக்கு எந்தவித பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொண்டு பெருமையை சேர்த்தனர்.

குவியும் பாராட்டுகள்:

தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி கிராத்தில் பலசரக்கு கடை நடத்திய கே.எஸ்.அசன் மொய்தீனின்  7 பிள்ளைகளில் ஒருவரான ஜவ்பர் அலி, மிகவும் சிரமத்திற்கு மத்தியில் தன்னுடைய கல்வியை தொடர்ந்து, எம்.எஸ்.சி,, பி.எட். முடித்து பின்னர், ரயில்வே துறையில் சேர்ந்தார். மிகவும் நேர்மையான அசன் மொய்தீனின் மகனான ஜவ்பர் அலியிடமும் எப்போதும் மனிதநேயம் இருந்துகொண்டே இருக்கிறது என்பதற்கு செந்தூர் விரைவு ரயில் பயணிகளை காப்பாற்றிய சம்பவமே எடுத்துக்காட்டாக உள்ளது. இதன் காரணமாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 800 பயணிகளின் உயிர்களை தனது துரித சேவையால் காப்பாற்றிய ஜவ்பர் அலிக்கு, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா, நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அத்துடன், அவருடன் இணைந்து பணிபுரிந்து மற்ற ரயில் ஊழியர்களும் கவுரவிக்கப்பட்டனர். அனைவருக்கும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

வாழ்க்கையில் வாய்ப்புகள் கிடைக்கும்போது, மனிதர்களுக்கு சேவையை செய்ய கொஞ்சமும் தயங்கக் கூடாது. மேலும் தங்களுடைய கடமைகளில் ஒருபோதும் அலட்சியமாக இருக்காமல் எப்போதும் துரிதமாக செயல்பட வேண்டும் என்பதற்கு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய கண்காணிப்பாளர் ஜவ்பர் அலி ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றே கூறலாம். நாமும் மணிச்சுடர் நாளிதழ் தரப்பில் அவருக்கு வாழ்த்து கூறி மகிழ்கிறோம்.


-    சந்திப்பு: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

 

மரணம்....!

ஆர்டர் செய்த உணவு ஹோட்டல் மேசைக்கு வந்தது. மரணம் ஒருமுறை கூட சாப்பிட நேரம் கொடுக்கவில்லை.

மூச்சு வாங்கியது. வாழ்வின் அடுத்த நொடி நம்பிக்கை இல்லை.

பதவி, பலம், பணம்,அதிகாரம், செல்வம்,சொத்து, சுகம்,அனைத்தும் எங்கே?



அறிவுறுத்தல்....!

இந்திய முஸ்லிம் சமுதாயம் கடந்த 75 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் அடையவில்லை. நல்ல கல்வி பெறவில்லை. உயர் பதவிகளில் இடம்பெறவில்லை.  முஸ்லிம்கள் நல்ல கல்வி பெற வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவுறுத்தல்....!



இந்தியா கூட்டணி.....?

என்ன செய்யப் போகிறது இந்தியா கூட்டணி.....?


இந்திய ஜனநாயக தேர்தலில் அரையுறுதிப் போட்டியாக கருதப்பட்ட மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்ற பாஜக, விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று விடுவோம் என்ற மிக அதீத நம்பிக்கையில் இருந்து வருகிறது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் செயல்பாடுகள், பேச்சுக்களில் சர்வாதிகாரத்துடன் கூடிய ஒரு திமிர்தனம் இருந்து வருவதை அவர்களின் நடவடிக்கைகள் மூலம் காணலாம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என ஒரே குறிக்கோளுடன் பாஜக தனது பணிகளை செய்து வருகிறது. 

அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவு அடைந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா, தேர்தல் ஆணையர்களை பிரதமரே நியமிக்க முடிவு செய்யலாம் என்ற வகையில் அமைந்துள்ளது. இதன்மூலம் இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளது. இப்படி, ஜனநாயக நெறிமுறைகள் குறித்து சிறிதும் கவலைப்படாமல் பாஜக தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் மத்தியில் இன்னும் ஒரு சரியான புரிதல் இல்லை என்றே பல்வேறு அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

காங்கிரஸ் கட்சியின் நிலை:

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை, தலைகீழாக மாறியதால், அக்கட்சிக்கு தற்போதைய நிலையில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். எனினும், தெலங்கானாவில் வெற்றி, மிசோரமில் குறிப்பிடத்தக்க அளவு பெற்ற வாக்குகள், மற்றும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் பல தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி, ஆகியவை காங்கிரசுக்கு ஆறுதல் தரும் வகையில் அமைந்துள்ளது என்றே கூறலாம்.  நாட்டில் பாஜகவை எதிர்க்க மக்களின் நல்ல ஆதரவு பெற்ற மிகப்பெரிய கட்சியாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியே இருந்து வருகிறது என்பது அண்மையில் முடிந்த தேர்தல்கள் மூலம் நன்கு தெரிய வருகிறது. 

இத்தகைய சூழ்நிலையில் தான், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அக்கட்சி தொடங்கி, பல்வேறு மாற்றங்களை கட்சியில் செய்து வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு என பல்வேறு சிறப்பு குழுக்களை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அமைத்து, மக்கள் மத்தியில் நம்பிக்கை பெறும் வகையில், கட்சி செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் நம்பிக்கையை பெறும் வகையில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றியுள்ளதாக அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருந்து வருகிறது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் 150 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் காங்கிரஸ் கடந்த மாதம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் அதனை பிரதிபலிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

இந்தியா கூட்டணி ஆலோசனை:


இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்களின் 4வது ஆலோசனைக் கூட்டம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட 28 எதிக்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு, தங்களது கருத்துகளை முன்வைத்தனர். எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் பதவிக்கு தாம் முன்மொழிவதாக  திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், தேர்தல் வெற்றிக்குப் பிறகே, பிரதமர் யார் என்பது குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள், எம்.பி.க்கள் முடிவு செய்வார்கள் என மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதனால், பிரதமர் பதவி குறித்த சர்ச்சைக்கு இந்தியா கூட்டணியில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற ஆலோசனையில் ஆக்கப்பூர்வமான கருத்துகள் முன்வைக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு  தொகுதி பங்கீடு செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியா கூட்டணி தலைவர்கள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருவது உறுதியாக தெரியவந்துள்ளது. 

என்ன செய்யப் போகிறது இந்தியா:


தற்போதைய சூழ்நிலையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது நாட்டிற்கு மிகப்பெரிய கேடாக அமையும் என நாட்டில் உள்ள சமூக ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள் என அனைவரும் கருதுகிறார்கள். ஆனால், எந்தவிதத்திலும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கோடு, பாஜக, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அந்த வகையில் ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் நடக்கும்  ராமர் கோயில் திறப்பு விழாவை, தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.  மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் 'மோடி கி கியாரண்டி'  அதாவது மோடியின் உத்தரவாதம் என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜகவிற்கு தென்மாநிலங்களில் மிகப்பெரிய அளவுக்கு வரவேற்பு இல்லாததால், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை மட்டுமே குறிவைத்து, பாஜக தனது தேர்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த வட மாநில மக்களை கவரும் வகையில், 'மோடி கி கியாரண்டி' என்ற முழக்கத்தை பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. 

இப்படி, தேசிய அரசியல் களம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியா கூட்டணி என்ன செய்யப் போகிறது? என்ற கேள்வி நாட்டு மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. தன்னை மிகப்பெரிய சக்தியாகவும், வலுவான கட்சியாகவும் காட்டிக் கொள்ளும் பாஜகவை வீழ்த்த, இந்தியா கூட்டணி கட்சிகள் மத்தியில் நல்ல புரிதலுடன் கூடிய விட்டுகொடுக்கும் மனப்பான்மை இருக்க வேண்டியது மிகவும் அவசியம். நாட்டின் எதிர்காலம், நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்தியா கூட்டணி கட்சிகள் செயல்பட்டால் மட்டுமே, பாஜகவை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்த முடியும் என்பதை இந்தியா கூட்டணி தலைவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். 

எதிர்க்கட்சிகளை சிதைத்த திட்டம்:


நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என முடிவு செய்துள்ள பாஜக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சிதைக்க, கூட்டணியை உடைக்க பல்வேறு காரியங்களை அரங்கேற்றி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு செல்வாக்கு உள்ள மாநில கட்சிகளை தங்கள் பக்கம் இணைத்து கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி, கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை பாஜக கூட்டணியில் சேர்க்க காரியங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து கொள்ளவும் அல்லது தேர்தலில் மறைமுகமாக ஆதரவு அளிக்கும் வகையிலும் பாஜக திட்டங்களை அரங்கேற்றி வருகிறது. 

எனவே, இந்தியா கூட்டணி தலைவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்களது அரசியல் நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பாஜகவின் அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சாமல், மிகவும் உறுதியாக நாடாளுமன்றத் தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும். ஒன்றிய பாஜக ஆட்சியின் தோல்விகள் குறித்தும், பாஜக ஆட்சியில் மக்கள் அடைந்த துன்பங்கள், துயரங்கள் குறித்தும், நாட்டு மக்களில் அனைவரும் நன்கு அறிந்து தெளிவு பெறும் வகையில் இந்தியா கூட்டணி பிரச்சாரம் செய்ய வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே, எந்தவித தாமதமும் இல்லாமல் இந்தியா கூட்டணி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடு எப்படிப்பட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை அனைத்துவிதமான சமூக ஊடகங்கள் மூலம் இந்தியா கூட்டணி பிரச்சாரங்களை தொடர்ந்து செய்ய வேண்டும். கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற பாகுபாடு பார்க்காமல், அரவணைத்து செல்ல வேண்டும். 

மக்களுக்கும் பொறுப்பு:

நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், நிம்மதியான, அமைதியான, சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றி மிகவும் அவசியம் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அதற்காக நாடு மற்றும் சமூக நலனின் அக்கறை கொண்டு ஒவ்வொரு மாநில மக்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது இரண்டாவது சுதந்திர போர் என நினைவில் வைத்துக் கொண்டு, நாட்டில் உள்ள அனைவரும் அதில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.  தங்களது வாக்குகள் பிரிந்துவிடாமல் இருக்க, இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளித்து தங்களது ஜனநாயக கடமையை நல்லவிதமாக நிறைவேற்ற வேண்டும். இப்படி நாட்டு மக்கள் அனைவரும் தங்களது பொறுப்புகளை நன்கு உணர்ந்து செயல்பட்டால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவே எதிர்பார்க்காத, மிகப்பெரிய வெற்றி இந்தியா கூட்டணிக்கு நிச்சயம் கிடைக்கும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்