Thursday, April 30, 2026

நூல்கள் அறிமுகம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும் ' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை ,இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களிடம் இருந்து, கவிஞர் ஆலிம் செல்வன் (எஸ்.என்.எம்.அஹ்மது சம்சுதீன்) அவர்கள் பெற்றுக் கொண்டு வாழ்த்தியபோது, மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.






Trying....!

If you're at least trying, 

then you're already halfway there.



சாய்ந்துக் கொள்வதற்கு...!

 சாய்ந்துக் கொள்வதற்கு 

ஒரு தோள் தோவை தான். 

ஆனால் எப்போதுமே 

சாய்ந்து கொண்டிருந்தால் 

நாம் பாரமாகிவிடுவோம். 

நம்முடைய பாரத்தை தாங்கிக் கொள்ள 

யாரும் விரும்ப மாட்டார்கள். 

சாய்ந்துக்  கொள்வதும் 

ஓர்  அளவோடு இருக்க வேண்டும்.



வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் ஊடகத்துறையின் தரம்...!

" வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் ஊடகத்துறையின் தரம் "

- மக்களை மனரீதியாக பாதிக்க வைக்கும் சமூக வலைத்தளங்கள் -

ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக உள்ள ஊடகத்துறை, கடந்த சில ஆண்டுகளாக வலுவிழந்து வீழ்ச்சியை நோக்கிச் சென்றுக் கொண்டு இருக்கிறது. சுதந்திரமாக செயல்பட்டு வந்த ஊடகத்துறை, தற்போது கார்ப்பரேட்டுகளின் கைகளில் சிக்கி. தனது உண்மையான சுதந்திரமான செயல்பட்டை விட்டுவிட்டு, கார்ப்பரேட் முதலாளிகளின் ஊதுகுரலாக மாறிவிட்டது. எனவே வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் ஊடகத்துறையின் தரம் என்பது இன்றைய காலகட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான அம்சமாக மாறியுள்ளது. 

கடந்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு,ஊடகங்கள் மிகவும் சுதந்திரமாக செயல்பட்டு, தங்களது ஜனநாயகக் கடமையை திறம்பட செயலாற்றின. ஆனால், அண்மைக் காலமாக ஊடகங்களின் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைந்துகொண்டே செல்கிறது. அதற்கு முக்கிய காரணம்,  தற்போது பிரபலமான ஊடகங்கள் செய்திகளைத் தருவதை விடுத்து, ஆளும் தரப்பு அல்லது அரசியல் தலைவர்களின் கருத்துக்களை மட்டுமே முன்னிறுத்துகின்றன. இதனால் சமூகப் பொறுப்புணர்வு குறைந்து, உண்மையான செய்திகள் மறைக்கப்படுகின்றன. தற்போதைய சூழலில், பத்திரிகை மற்றும் ஊடகங்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி மற்றும் வர்த்தகக் கொள்கைகள் ஊடகங்களின் தரமான செயல்பாட்டிற்குப் பெரிய தடையாக உள்ளன.

மேலும் நவீன டிஜிட்டல் யுகத்தில், நுகர்வோருக்குத் தேவைப்படும் தகவல்களுக்குப் பதிலாக, ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட, பொழுதுபோக்கு மற்றும் மேம்போக்கான செய்திகள் அதிகமாக வழங்கப்படுகின்றன. ஆழமான களப்பணியுடன் கூடிய புலனாய்வு இதழியல் குறைந்து, பரபரப்புக்காக செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது, சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆய்வுகளைத் தவிர்த்து, வெறும் போட்டிச் செய்திகளாக ஊடகங்களை மாற்றியுள்ளது. சமூகத்தின் தற்போதைய சூழல், மக்களின் வாழ்வாதாரம் போன்றவற்றைப் பற்றி அறியாமல், அரசியல் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காகச் செயல்படும் ஊடகங்களின் போக்கு, இளம் தலைமுறையினரைத் தவறான வழியில் கொண்டு செல்கிறது.  

உண்மை நிலையில் இருந்து விலகல் :

தற்போது, சமூக வலைத்தளங்கள் உலகம் முழுவதும்  அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஊடகங்களின் மீதான பார்வை அல்லது கவனம் மக்கள் மத்தியில் குறைந்துகொண்டே வருகிறது. செய்தி வாசிப்புகள், உலக நடப்புகளை ஆய்வு செய்தல் என ஒரு காலத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த மக்கள், தற்போது தங்களது செல்பேசி மூலம் அனைத்துத் தகவல்களையும் பெற்று விடுகிறார்கள். இப்படி சமூக வலைத்தளங்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் உண்மை என்றும் மக்கள் நம்பி விடுகிறார்கள். 

இதன் காரணமாக, பிரபலமாக ஊடகங்கள் கூட, தங்கள் நிலைப்பாடுகளில் இருந்து விலகி, மக்களுக்கு விருப்பமான செய்திகளை, தகவல்களை தர வேண்டும் என நினைக்க ஆரம்பித்துவிட்டன. மக்கள் விரும்பும் செய்திகளை கொடுப்பதன் மூலம் தங்களது ஊடக வணிகத்தை மேம்படுத்த முடியும் என்றும் ஊடக முதலாளிகள் நம்புகிறார்கள். இதன் காரணமாக, ஊடகங்களில் பணிபுரியும் ஆசிரியர் குழு, சுதந்திரமாக செயல்பட வேண்டிய கட்டாய நிலையில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. 

                                                        ===================

"ஊடகங்கள் தங்களின் வர்த்தக நோக்கங்களை விடுத்து, உண்மையான மற்றும் நடுநிலையான செய்திகளை வழங்குவதன் மூலமே ஊடகத்துறையின் தரத்தை மேம்படுத்த முடியும். இனி வரும் நாட்களில், ஊடகத்துறை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, சிறப்புடன் செயல்பட்டாமல் மட்டுமே,  ஊடகங்கள் மீது மக்களுக்கு மீண்டும்  நம்பிக்கை ஏற்படும்"

                                                        ===================

இதனால், வாசகர்களுக்கு உண்மை தகவல்கள் மறைக்கப்படுகின்றன. மக்கள் மத்தியில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஜனநாயக நெறிமுறைகள் மீறப்படுகின்றன. இதனால் ஊடகத் தர்மம் காணாமல் போய்விடுகிறது. இதற்கு பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். 

ஊடகங்களின் நிலையில் தடுமாற்றம் :

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, பெரும்பாலான ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதை நாம் கடந்த 12 ஆண்டுகளாக கண்டு வருகிறோம். ஆளும் கட்சிக்கு எதிரான தகவல்கள், குற்றச்சாட்டுகள் மறைக்கப்படுகின்றன. நாட்டில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் மூடி மறைக்கப்படுகின்றன. சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் மக்களின் வாழ்க்கை நிலை குறித்த உண்மை நிலவரங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுவதில்லை. புலனாய்வு பத்திரிகைகள் கூட தற்போது, பல உண்மை செய்திகளை மறைத்துவிடுகின்றன. ஆளும் தரப்பு செய்யும் பல ஜனநாயக விரோதச் செயல்களை கூட, இன்றைய ஊடகங்கள் வெளியிடாமல் மூடி மறைத்துவிடுகின்றன. 

இதனால் இந்திய ஊடகங்களின் நிலையில் தடுமாற்றம் இருப்பதை நாம் காணலாம். தேர்தல் காலங்களில், உண்மை தகவல்களை ஊடகங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம், ஒன்றிய பாஜக அரசின் மீது இருக்கும் பயம் தான் முக்கிய காரணம் என சொல்லலாம். எதிர்க்கட்சிகளின் குரல்களை, அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை, அவர்களின் எண்ணங்களை பிரபலமான  ஊடகங்கள் மூடி மறைக்கின்றன. தேர்தலில் வெற்றி வாய்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு இருந்தாலும் கூட, அப்படி ஒரு நிலை இல்லை என்ற வகையில் பிரபலமான ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. 

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, அண்மையில் நடந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் என கூறலாம். பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளும் பாஜக தரப்புக்கு எதிராக மக்களின் கோப அலை இருந்துவந்தாலும், அப்படி ஒரு நிலை இல்லை என்ற வகையிலேயே ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இதேபோன்று, தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள், மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவற்றை சில ஊடகடங்கள் பாராட்டவில்லை. மாறாக, குறைகளை மட்டுமே கண்டன. 

கொள்கை எதுவும் இல்லாத, சினிமா கவர்ச்சியை மட்டுமே கொண்ட ஒரு நடிகரின் கட்சிக்கு சில ஊடகங்கள் ஆதரவு கரம் நீட்டியது மட்டுமல்லாமல், கருத்துக்கணிப்பு என்ற பெயரில், அந்த நடிகர் கட்சிக்கே வாய்ப்புகள் அதிகம் என்று பொய்யான கணிப்புகளையும் கூட வெளியிட்டன. இதேபோன்று, சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் மீது தங்கள் பொய்யான தகவல்களை சில ஊடகங்கள் திணித்தன. இதன்மூலம் மக்கள் மன ரீதியாக பாதிக்கும் வகையில் சமூக வலைத்தங்கள் செயல்பட்டன. 

அதேநேரத்தில், ஒருசில ஊடகவியலாளர்கள், தங்கள் ஊடகப் பணியின் முக்கியத்துவதை நன்கு உணர்ந்துகொண்டு, பொறுப்புடன் செயல்பட்டதை நாம் இந்த தேர்தலில் காண முடிந்தது. திராவிட மாடல் ஆட்சியின் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறிய அவர்கள், திமுக ஆட்சியின் சில குறைகளை விமர்சனம் செய்வதையும் நிறுத்தவில்லை. இதுதான் உண்மையான ஊடகத் தர்மம் ஆகும். ஊடகங்கள் தங்களின் வர்த்தக நோக்கங்களை விடுத்து, உண்மையான மற்றும் நடுநிலையான செய்திகளை வழங்குவதன் மூலமே ஊடகத்துறையின் தரத்தை மேம்படுத்த முடியும். இனி வரும் நாட்களில், ஊடகத்துறை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, சிறப்புடன் செயல்பட்டாமல் மட்டுமே, ஊடகங்கள் மீது மக்களுக்கு மீண்டும்  நம்பிக்கை ஏற்படும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Wednesday, April 29, 2026

ஹஜ் விதிமுறைகளை மீறியவர்கள் கைது.....!

ஹஜ் விதிமுறைகளை மீறியவர்கள் கைது.....!

மக்கா பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.....!! 

ஜித்தா ஏப்.30- ஹஜ் அனுமதிச் சீட்டு இல்லாத நபர்கள் மக்காவிலும் புனிதத் தலங்களிலும் நுழைவதையோ அல்லது தங்குவதையோ தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். விதிகளை மீறுபவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத புனிதப் பயணங்களுக்குத் துணை நிற்பவர்கள் கைது மற்றும் சட்டரீதியான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் பாதுகாப்பு படைகள் எச்சரித்துள்ளன.

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் அனுமதிச் சீட்டு கட்டாயம் பெற வேண்டும் என சவூதி அரேபியா அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, மக்காவில் நுழைய அனுமதிச்  சீட்டு கட்டாயம் என்ற விதி தற்போது கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விதியை மீறுபவர்கள் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மக்கா பாதுகாப்பு அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். 

தொடரும் கைது நடவடிக்கை :

இந்நிலையில், மக்காவிற்குள் நுழைவதற்கான போலி அனுமதிச் சீட்டுகளை வழங்குவதாக சமூக ஊடகங்களில் மோசடியான மற்றும் தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக, யேமன் நாட்டைச் சேர்ந்த ஒருவரை மக்கா காவல்துறை கைது செய்தனர்.  இதேபோன்று, மற்றொரு சம்பவத்தில், ஹஜ் அனுமதிச் சீட்டு பெறாமல் மக்காவிற்குள் நுழைந்து தங்கியதன் மூலம் ஹஜ் விதிமுறைகளை மீறியதற்காக, எகிப்தைச் சேர்ந்த ஐந்து பேரை மக்கா காவல்துறை கைது செய்தது.

மேலும், ஹஜ் அனுமதிச் சீட்டு இல்லாமல் ஐந்து சக நாட்டுக்காரர்களை ஏற்றிச் சென்று மக்காவிற்குள் நுழைய முயன்று ஹஜ் விதிமுறைகளை மீறியதற்காக, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரையும் ஹஜ் பாதுகாப்புப் படைகள் கைது செய்தன.

மற்றொரு சம்பவத்தில், ஒரு சரக்கு வாகனத்தில் மறைக்கப்பட்ட அறைகளில் இரண்டு சக எகிப்தியர்களை ஏற்றிச் சென்று ஹஜ் அனுமதிச் சீட்டு இல்லாமல் மக்காவிற்குள் நுழைய முயன்று ஹஜ் விதிமுறைகளை மீறியதற்காக, எகிப்தைச் சேர்ந்த ஒருவரை பாதுகாப்புப் படைகள் தடுத்து வைத்தன. இதேபோன்று, ஹஜ் விதிமுறைகளை மீறி ஆறு குடியிருப்பாளர்களை மக்காவிற்குள் அழைத்துச் செல்ல முயன்றதற்காக, மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அனைவரும் அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை :

ஹஜ் பருவம் தொடங்குவதற்கு முன்னதாக, பாதுகாப்பான மற்றும் சுமுகமான புனிதப் பயணத்தை உறுதி செய்வதற்காக, அனுமதி விதிமுறைகளை மீறுபவர்களுக்கான தண்டனைகளை சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 18 முதல் மே 31 வரை மக்கா அல்லது புனிதத் தலங்களுக்குள் நுழையும் அல்லது தங்கியிருக்கும் விசிட் விசா வைத்திருப்பவர்கள் உட்பட, அனுமதி இல்லாமல் ஹஜ் செய்பவர்கள் அல்லது முயற்சிப்பவர்களுக்கு 20 ஆயிரம் சவூதி ரியால் வரை அபராதம் விதிக்கப்படும்.

அதே காலகட்டத்தில், அனுமதி இல்லாமல் ஹஜ் செய்பவர்கள் அல்லது முயற்சிப்பவர்கள், அல்லது மக்கா மற்றும் புனிதத் தலங்களுக்குள் நுழைபவர்கள் அல்லது தங்குபவர்களுக்காக விசிட் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு லட்சம் சவூதி ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட விதிமீறல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அபராதம் அதிகரிக்கப்படும்.

இந்தக் காலகட்டத்தில் வருகை விசா வைத்திருப்பவர்களை மக்காவிற்கோ அல்லது புனிதத் தலங்களுக்கோ ஏற்றிச் செல்பவர்கள் அல்லது ஏற்றிச் செல்ல முயற்சிப்பவர்களுக்கும் இதேபோன்ற அபராதம் விதிக்கப்படும்.

வருகை விசா வைத்திருப்பவர்களுக்குத் தங்குமிடம் வழங்குபவர்கள் அல்லது வழங்க முயற்சிப்பவர்கள், அல்லது அவர்களுக்கு உதவுபவர்கள் அல்லது அவர்களை மறைத்து வைப்பவர்களுக்கு ஒரு லட்சம் சவூதி ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். விதிமீறுபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தண்டனைகள் அதிகரிக்கும்.

கடுமையான தண்டனை அறிவிப்பு :

குடியிருப்பாளர்கள் மற்றும் விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்கள் உட்பட ஊடுருவுபவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு இராச்சியத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.

அதே காலகட்டத்தில், வருகை விசா வைத்திருப்பவர்களை மக்காவிற்கும் புனித தலங்களுக்கும் அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், சம்பந்தப்பட்டவர்களுக்குச் சொந்தமானவையாக இருந்தால், அவற்றைப் பறிமுதல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன், மக்கா, ரியாத், மதீனா மற்றும் கிழக்கு மாகாணத்தில் 911 என்ற எண்ணிலும், இராச்சியத்தின் பிற பகுதிகளில் 999 என்ற எண்ணிலும் அழைத்து, ஹஜ் விதிமுறைகளைப் பின்பற்றுமாறும், விதிமீறுபவர்களைப் பற்றித் தெரிவிக்குமாறும் பொதுப் பாதுகாப்புப் பொது இயக்குநரகம் குடிமக்களையும் குடியிருப்பாளர்களையும் வலியுறுத்தியுள்ளது.

எனவே புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள மக்கா, மதீனாவிற்கு செல்லும் பயணிகள் அனைவரும் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, சிறப்பான முறையில் ஹஜ் கடமையை நிறைவேற்ற முன்வர வேண்டும். விதிகளை மீறினால் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Focus....!

When you focus on problems

you will have more problems. 

When you focus on possibilities 

you'll have more opportunities.




நம்பாதீர்கள்....!

 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு...! 

ஒரு மிகப்பெரியமோசடி கணிப்புகள். 

மக்களை மனரீதியாக குழப்பி, அவர்களின் அமைதியை முற்றிலும் சீர்குலைக்கும் கணிப்புகள். 

மக்களே வாழ்க்கையில் 

நிம்மதியாக இருக்க விரும்புகிறீர்களா?

தயவுசெய்து கருத்துக்கணிப்புகளை 

நம்பாதீர்கள். அதன்பக்கம் போகாதீர்கள். 

குறிப்பாக, சமூக வலைதளங்களின் 

பக்கம் தலை வைத்து படுக்காதீர்கள். 



அறிவாளி....!

 தன்னை அறிவாளி 

என்று நினைத்துக் கொள்வது தப்பில்லை.

 ஆனால் 

பிறரை முட்டாளாக நினைப்பது 

மாபெரும் தவறு.

கழுத்தளவு துன்பம் வந்தாலும் 

கதறி அழுது விடுங்கள்.

யாரிடமும் ஆறுதல் தேடாதீர்கள்.



God's Glory....!

 God's Glory is truly unparalleled.

When He gives, He gives in abundance.

ஏக இறைவனின்  அற்புதமான படைப்பு.



Tuesday, April 28, 2026

இந்திய ஹஜ் பயணிகள் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்....!

மத்திய கிழக்கு போர் பதற்றம் எதிரொலியால் விமான கட்டணங்கள் உயர்வு....! 

இந்திய ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரும் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்....!!

இந்திய ஹஜ் குழு சுற்றறிக்கை...!!! 

புதுடெல்லி, ஏப்.29- மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துவிட்டதால், இந்திய ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரும் கூடுலாக தலா 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று ஒன்றிய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது. 

இந்திய ஹஜ் குழு சுற்றறிக்கை :

தற்போது ஹஜ் பெருவிழாவிற்கான காலம் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து புனித ஹஜ் பயணிகள், மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு புறப்பட்ட வண்ணம் உள்ளனர். எனினும், மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக அனைத்து விமான நிறுவனங்களும் தங்களது விமான பயணிகள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன. இதனால், ஹஜ் பயணிகள் பலரும் புதிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஒன்றிய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் குழு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய ஹஜ் குழுவின் தலைமை செயல் அலுவலர் ஷாநவாஸ் வெயிட்டுள்ள அறிக்கையில், தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடி மற்றும் பதற்றம் காரணமாக விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒன்றிய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் குழுவிற்கு, ஹஜ் பயணிகளுக்கான விமான கட்டணம் குறித்து 28.04.2026 அன்று முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூடுதல் விமான கட்டணம் : 

அதன்படி, இந்திய ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரும் தாங்கள் ஏற்கனவே செலுத்திய விமான கட்டணத்துடன் கூடுதலாக 100 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும்.  மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக விமான கட்டணம் 400 அமெரிக்க டாலர் அளவுக்கு  உயர்த்த வேண்டும் என  விமான நிறுவனங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டது. எனினும், ஒவ்வொரு இந்திய ஹஜ் பயணிகளும் குறைந்த பட்சமாக 100 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும் என்பதை இந்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகம்,  விமான நிறுவனங்களிடம் கலந்தாலோசித்து  ஒப்புதல் வழங்கியுள்ளது. 

எனவே, இந்திய ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த தொகையை வழக்கம் போல எஸ்.பி.ஐ., யு.பி.ஐ., வங்கிகள் அல்லது இ.பேமெண்ட் வழியாக செலுத்த வேண்டும். இந்த கூடுதல் கட்டணத்தை வரும் மே 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும், கூடுதல் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுகளை இந்திய ஹஜ் குழுவிற்கு அனுப்ப வேண்டும். மேலும், இதுதொடர்பாக அனைத்து மாநில ஹஜ் குழுக்களும் உரிய நடவடிக்கை எடுத்து, ஹஜ் பயணிகளிட்ம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். செலுத்த கடைசி நாள் 15-05-2026..

இவ்வாறு இந்திய ஹஜ் குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


சவால்....!

 Derek O'Brien to PM Modi, on polling day:

"Narendra, if Mamata wins Bengal, resign as PM. Got the guts?"



மனிதன்....!

 சில நேரங்களில் சில மனிதர்கள்....

இவர் வித்தியாசமான மனிதர். 

ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை 

கொண்ட மனிதர்...



View....!

 The best view comes 

after the hardest climb.




உயிர் உண்டு....!

 வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு. 

அதனால் தான் 

சில வார்த்தைகள் 

ஆனந்தத்தையும், 

சில வார்த்தைகள் 

அழுகையையும், 

சில வார்த்தைகள் 

ஆறுதலையும் தருகின்றன. 

வாழும் நாட்களில் சந்தோஷத்தையும் 

மன அமைதியையும் தேடுங்கள்.



உஷார்....!

 எச்சரிக்கை...

மிகமிக கவனமாக இருக்க வேண்டும்...!



Tamil Nadu...!

Muslims are serving Hindu devotees during the Chitirai festival in Tamil nadu.

This is Tamilnadu without BJP-RSS.



உலக புகழ்பெற்ற தாயிஃப் ரோஜா...!

 உலக புகழ்பெற்ற தாயிஃப் ரோஜா: 

100 ஆண்டுகால பாரம்பரிய தொழிலின் ஒரு சுவையான கதை...!

சவூதி அரேபியாவின் தாயிஃப்  நகரம், அதன் புகழ்பெற்ற வாசனையுள்ள ரோஜாக்களுக்கு உலகப் புகழ்பெற்றது. ஆண்டுக்கு 500 மில்லியனுக்கும் அதிகமான ரோஜாக்கள், குறிப்பாக டமாஸ்க் வகை ரோஜாக்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ரோஜாக்கள் விலைமதிப்பற்ற நறுமண எண்ணெய்  தயாரிக்கப் பயன்படுகின்றன. அதன் காரணமாக, அழகு மற்றும் நளினத்தின் சின்னமான தாயிஃப் ரோஜா, சவூதி அரேபியாவின் வரலாற்றிலும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதன் துடிப்பான இளஞ்சிவப்பு நிறங்களும் இனிமையான நறுமணமும் சர்வதேசப் பயணிகளைக் கவர்கின்றன. இந்த புகழ்பெற்ற மலர், தாயிஃப் மாகாணத்தில் முதல் ரோஜா தொழிற்சாலையை நிறுவ உதவ ஒரு இந்திய யாத்ரீகருக்கு உத்வேகம் அளித்தது என்பது ஆச்சரியம் அளிக்கும் சுவையான தகவலாகும். 

தாயிஃப் ரோஜாக்கள், ரோசா டமாசெனா மற்றும் ரோசா சென்டிஃபோலியாவகைகளைச் சேர்ந்தவை. ரோஜா எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. இங்கிருந்து ரோஜா நீர் மற்றும் வாசனை திரவியங்கள்  முக்கியமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக,  சவூதி அரேபியாவின் தாயிஃப் பகுதியில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. சவூதி அரேபியாவில், ஆண்டுக்கு 500 மில்லியனுக்கும் அதிகமான ரோஜாக்கள், குறிப்பாக தாயிஃப் பகுதியில் விளைகின்றன. உலகளாவிய தேவை அதிகரிப்பு காரணமாக, இந்த பகுதியில் ரோஜா உற்பத்தி ஆண்டுக்கு 15 சதவீதத்கும் மேலாக உயர்ந்துள்ளது.  தாயிஃப் ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், மிகவும் சுத்தமானதாகவும், வாசனையானதாகவும் கருதப்படுகிறது.

பழமையான ரோஜா தொழிற்சாலை :

தாயிஃபின் நூற்றாண்டு பழமையான ரோஜா தொழிற்சாலை மற்றும் அதன் ரோஜா வடித்தல் முறைகளின் கதை, இந்த பாரம்பரியப் பொருளின் அடையாளத்தை வடிவமைத்த இரகசியங்களைப் பாதுகாத்து, தலைமுறை தலைமுறையாக பாதுகாப்புடன் பின்பற்றப்பட்டு வருகிறது.

தாயிஃபைப் பூர்வீகமாகக் கொண்ட அப்துல்ரஹ்மான் பின் ஹுமைத் அல்-குராஷி, இந்தக் கதை தனது தாத்தாவிடமிருந்து தொடங்கியது என்று விவரிக்கிறார். அவர் யாத்ரீகர்களுக்கு தாயிஃப் ரோஜாக்களை விற்று வந்தார். அப்போது, இந்தியாவிலிருந்து வந்த யாத்ரீகர்களில் ஒருவரின் கவனத்தை அதன் தரம் ஈர்த்தது. அவர், அடுத்த பருவத்தில் ரோஜாக்களை வடிப்பதற்காக ஒரு சிறப்பு செப்புப் பானையைக் கொண்டு வருவதாக உறுதியளித்தார்.

                                                ====================

"அழகு மற்றும் நளினத்தின் சின்னமான தாயிஃப் ரோஜா, சவூதி அரேபியாவின் வரலாற்றிலும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதன் துடிப்பான இளஞ்சிவப்பு நிறங்களும் இனிமையான நறுமணமும் சர்வதேசப் பயணிகளைக் கவர்கின்றன"

                                            ====================

“அந்த இந்திய யாத்ரீகர் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, அந்தச் செப்புப் பானையைக் கொண்டு வந்தார். அது இன்றும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நம்மிடம் உள்ளது,” என்று குறிப்பிட்ட அல்-குராஷி, தனது தாத்தா முதலில் அதைப் பயன்படுத்தி ரோஜாக்களைக் காய்ச்சி ரோஜா நீரை மட்டும் எடுக்கத் தொடங்கினார் என்றும், பின்னர் ஒரு கண்டுபிடிப்பு அந்த வேலையின் போக்கையே மாற்றியது என்றும், அதன் மூலம் அவர் முதன்முறையாக ரோஜா எண்ணெயைப் பிரித்தெடுக்க முடிந்தது என்றும் குறிப்பிடுகிறார்.

சில பருவங்களில் தனது தாத்தா பயிர் சேதத்தால் அவதிப்பட்டதாகவும், ஆனால் செப்புப் பானையின் பயன்பாடு ரோஜாப் பொருட்களின் வளர்ச்சிக்கு பங்களித்ததாகவும் அவர் மேலும் கூறுகிறார். இது ரோஜா நீருடன் தொடங்கி, பின்னர் அதிக விலையுள்ள ரோஜா எண்ணெயை உற்பத்தி செய்யும் அளவுக்கு பரிணமித்தது. அல்-ஹதா மலைகளுக்கு இடையேயான பசுமைப் பள்ளத்தாக்கில் தனது தாத்தா அப்துல்லா அவ்வாறு செய்த முதல் நபர்களில் ஒருவராக இருந்ததால், ரோஜாக்களை சமைக்கும் பழக்கத்தை மேற்கொண்ட முதல் குடும்பமாக தங்கள் குடும்பம் கருதப்படுகிறது என்று அல்-குராஷி குறிப்பிட்டார்.

பொருளாதார மதிப்பு அதிகரிப்பு :

அக்காலத்தில் ரோஜா நீரின் விலை சுமார் 1 புள்ளி 5 ரியால்களாக இருந்தது என்று அல்-குராஷி சுட்டிக்காட்டினார். இந்தத் தொழில் வளர வளர, அது அதிக பொருளாதார மதிப்பைப் பெற்றது. மேலும் அதன் அரிதான தன்மை மற்றும் உயர் தரம் காரணமாக முதல் தோலா ரோஜா எண்ணெய் அதிக விலைக்கு விற்கப்பட்டது.

இந்தத் தொழிலின் விவரங்கள் குறித்து விளக்கும் அல்-குராஷி, இது விடியற்காலையின் முதல் ஒளியில் தொடங்குகிறது என்றும், அப்போது ரோஜாக்கள் அவற்றின் நறுமண எண்ணெய்களைப் பாதுகாப்பதற்காக கவனமாகப் பறிக்கப்பட்டு, பின்னர் பாரம்பரிய பட்டறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, வரலாற்றின் வாசனையை இன்னும் தக்கவைத்துக் கொண்டிருக்கும் செப்புப் "பானைகளுக்குள்" வைக்கப்படுகின்றன என்றும் கூறுகிறார். .

 உலகளவில் புகழ்பெற்ற ரோஜாப் பண்ணைகள் :

விவசாயிகளின் அனுபவங்களின்படி, உயர்தர ரோஜாக்களை உற்பத்தி செய்வதற்கு உகந்த சூழல்களை வழங்குவதால், அல்-ஹதா மற்றும் அல்-ஷஃபாவில் உள்ள ரோஜாப் பண்ணைகள் உலகளவில் மிகவும் புகழ்பெற்றவை என்றும் அவர் பெருமையுடன் மகிழ்ச்சி அடைகிறார். 

மேலும், பல தசாப்தங்களாக தாயிஃப் ரோஜாக்களைத் தனித்துவப்படுத்திய பாரம்பரியத்தைப் பாதுகாத்துக்கொண்டே, விவசாயிகள் தங்கள் முறைகளைத் தொடர்ந்து செம்மைப்படுத்தி, அவற்றை பல்வேறு உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தைகளில் விற்கப்படும் ஒரு பொருளாக மாற்றி வருவதாகவும் அல்-குராஷி  குறிப்பிட்டார்.

சவூதி அரேபியாவின் தாயிஃப் நகரத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால், அங்கு நடந்த இஸ்லாமிய வரலாற்று சம்பவங்களை உங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, மகிழ்ச்சியும் பரவசமும் அடையும் அதேவேளையில், உலக அளவில் புகழ்பெற்ற தாயிஃப் ரோஜாக்களின் அழகையும் கண்டு மகிழ்ச்சி அடையுங்கள். அத்துடன், இயற்கையின் அற்புதங்களை பார்த்து வியப்பு அடைந்து ஏக இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


வேதனை....!

A man in Odisha dug up his deceased sister’s grave and brought her skeleton to the bank Just to prove she had died.

He had been trying to withdraw ₹20,000 from her account, but bank officials kept insisting he bring the account holder in person. Despite repeatedly telling them she had passed away, they didn’t listen.

Frustrated and unaware of the legal process, he took this extreme step.

This incident shows not just a lack of awareness, but also a failure of basic human understanding in the system.



Monday, April 27, 2026

நூல்கள் அறிமுகம்...!

இனிய தருணம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை, பல்வேறு துறை தோழர்களுக்கு  வழங்கி மகிழ்ச்சி அடைந்த  இனிமையான தருணம்.





மக்காவில் தயார் நிலை....!

ஹஜ் பெருவிழாவிற்காக மக்காவில் தயார் நிலையில் இருக்கும் வசதிகள்

ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். உடல்நலம் மற்றும் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த ஆண்டு ஹஜ் பெருவிழா மே 24 முதல் 29 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஏற்கனவே சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ளனர்.

குறிப்பாக, இந்தியா, இந்தோனேஷியா, வங்கதேசம் என உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் இந்தாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு இஸ்லாமியர்கள் வந்தவண்ணம் உள்ளனர். போர் பதற்றத்திற்கு மத்தியில் கூட, ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள், தங்களது ஐந்தாவது கடமையை நிறைவேற்ற திங்கட்கிழமையன்று (27.04.2026) மதீனா வந்து சேர்ந்தபோது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

விருந்தோம்பலுக்குப் புகழ்பெற்ற மதீனா நகரம், அங்கு வாழும் மதீனாவாசிகளின் பாரம்பரிய விருந்தோம்பல் குணத்தை எப்போதும் கடைப்பிடித்து வருகிறது. தற்போது ஹஜ் பெருவிழா காலம் தொடங்கியுள்ள நிலையில், மதீனாவாசிகள், தங்களுடைய விருந்தோம்பல் குணத்தை மேலும் தீவிரமாக வெளிப்படுத்தி, ஹஜ் பயணிகளின் இதயங்களை கவர்ந்து வருகிறார்கள். 

தயார் நிலையில் இருக்கும் வசதிகள் :

இதுஒருபுறம் இருக்க, இந்தாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்திரீகர்கள் தங்குவதற்காக பிரமாண்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,  புதிய உரிமம் வழங்கும் சேவை மூலம், மக்காவில் ஹஜ் பயணிகள் தங்க 5 லட்சத்து 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள வருடாந்திர ஹஜ் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, சவூதி அரேபியாவின் சுற்றுலாத் துறை அமைச்சர் அகமது அல்-கதீப், திங்களன்று (27.04.2026) மக்காவில் ஹஜ் பயணிகள் தங்கும் வசதிகளை  நேரில் ஆய்வு செய்தார்.

ஹஜ் யாத்திரீகர்களுக்கு வழங்கப்படவுள்ள சேவைகளை ஆய்வு செய்ததுடன், சுற்றுலாத் துறை ஊழியர்களையும் அமைச்சர் அகமது அல்-கதீப் சந்தித்துப் பேசினார். இவர்களில் சிலர் அமைச்சகத்தின் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்று சிறப்பான பயிற்சி பெற்றவர்கள். இந்த பயிற்சி மூலம், ஹஜ் பயணிகளுக்கு இவர்கள் நல்ல சேவையை ஆற்ற முடியும் என அமைச்சர் அகமது அல்-கதீப் நம்பிக்கை தெரிவித்தார். 

===================
"காசியாபாத் வீட்டு வசதி சங்கத்தில், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக சவூதி அரேபியா சென்ற முஸ்லிம் அண்டை வீட்டாருக்கு, இந்து குடியிருப்பாளர்கள் மலர் மாலைகள் அணிவித்து, ஆரத்தழுவி வழியனுப்பி வைத்தனர். இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் காணொளியாக சமூக ஊடகங்களில் வெளியாகி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது"
===================

இதனிடையே, கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட புதிய தற்காலிகத் தங்கும் இடங்களுக்கான உரிமம் வழங்கும் சேவை மூலம், மக்காவில் ஹஜ் யாத்திரீகர்களுக்கான தங்கும் வசதித் துறையில் கூடுதலாக 5 லட்சத்து 66 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட படுக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்தாண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றவரும் ஹஜ் பயணிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாது என்று சவூதி அரேபிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

சிறப்பான பாதுகாப்பான ஏற்பாடுகள் :

சவூதி அரேபியா அரசின் பொதுப் புள்ளியியல் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு 16 லட்சத்து 73 ஆயிரத்து 230 யாத்திரீகர்கள் புனித ஹஜ் கடமையை மேற்கொண்டனர். இவர்களில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 654 பேர் சவூதி குடிமக்களாகவோ அல்லது அங்கு வசிப்பவர்களாகவோ இருந்தனர். எஞ்சியோர் சவூதி அரேபியாவிற்கு வெளியிலிருந்து வருகை தந்தவர்களாவர்.

தற்போது ஹஜ் பெருவிழா காலம் தொடங்கியுள்ளதால், சவூதி அரேபியாவில் மட்டுமல்லாமல், இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் கூட, ஹஜ் கடமையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு முஸ்லிம்கள் மத்தியில் அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் அவர்களின் உள்ளத்தில், ஹஜ்ஜின் விதை விதைக்கப்பட்டு, வாழ்நாளில் எப்படியாவது ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவல் வளர்க்கப்பட்டு வருகிறது. 

இத்தகைய அருமையான சூழ்நிலையில், புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக நாட்டின் பல இடங்களில் வழியனுப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சகோதரத்துவம் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சில இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த இந்து சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு, இஸ்லாமியர்களை வழியனுப்பி வைத்தது, அனைவரின் இதயங்களை கவர்ந்தது. 

பரிவு மற்றும் சமூக நல்லிணக்கம் :

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்காக, அவர்களின் இந்து அண்டை வீட்டாரால் நடத்தப்பட்ட வழியனுப்பு விழா, சமூக நல்லிணக்கத்தின் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.  காசியாபாத் வீட்டு வசதி சங்கத்தில், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக சவூதி அரேபியா சென்ற முஸ்லிம் அண்டை வீட்டாருக்கு, இந்து குடியிருப்பாளர்கள் மலர் மாலைகள் அணிவித்து, ஆரத்தழுவி வழியனுப்பி வைத்தனர். ஏப்ரல் 21, 2026 அன்று, இரண்டாவது குழுவினர் புறப்படும்போது, இந்த அன்பான வழியனுப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் காணொளியாக சமூக ஊடகங்களில் வெளியாகி, பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இது இந்தியாவில் நிலவும் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வை, மதங்களுக்கு அப்பாற்பட்ட, அண்டை வீட்டாரின் இயற்கையான கடமை மற்றும் நீண்ட கால நட்பின் அடையாளமாக அப்பகுதி மக்கள் விவரித்தனர். மேலும், இந்தச் சம்பவம், சமூகங்களுக்கு இடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Relationship....!

A relationship with a nice person is like a sugarcane. You break it, crush it, squeeze it, even beat or grind it, still you will get only sweetness. 



எண்ணங்களில்....!

 எண்ணங்களில் 

நீங்கள் எப்போதும் 

அழகாக இருங்கள். 

தோற்றம் எப்படி இருந்தாலும் 

கவலை கொள்ளாதீர்கள்.

எண்ணமே வாழ்வு என்பதை 

உறுதியாக நம்புங்கள். 

அந்த நம்பிக்கை உங்களை 

எப்போதும் அழகாக வைத்திருக்கும்



நூல்கள் அறிமுகம்....!

 இனிய தருணம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை, கல்லூரி தோழர் குமரேஸ்வரன் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த  இனிமையான தருணம்.



ஹாஃபிஸ் சையத் ஜைத் சாதிக் சாதனை....!

ஜே.இ.இ. மெயின் தேர்வு :

ஹாஃபிஸ் சையத் ஜைத் சாதிக் 99 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை....!

நாசிக், ஏப்.27- நாசிக்கைச் சேர்ந்த 15 வயது ஹாஃபிஸ், குர்ஆனை மனப்பாடம் செய்துகொண்டே ஜே.இ.இ. மெயின் தேர்வில் 99 புள்ளி 927 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார்.  கட்டுப்பாடு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழும் வகையில், நாசிக்கைச் சேர்ந்த  ஹாஃபிஸ்' சையத் ஜைத் சாதிக், JEE Main 2026 (இரண்டாம் அமர்வு) தேர்வில் 99 புள்ளி 927 சதவீத மதிப்பெண் பெற்று, நாசிக் நகரத்திலேயே அதிக மதிப்பெண் பெற்ற மாணவராக உருவெடுத்துள்ளார்.

இதன்மூலம், அசோகா கல்லூரியின் மாணவரான சையத் ஜைத் சாதிக், தீவிரமான கல்விப் பயிற்சியையும் ஆழ்ந்த மத ஈடுபாட்டையும் சமநிலையில் கையாண்டு, மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

15 வது வயதில் ஹாஃபிஸ் :

மேலும், சையத் ஜைத் சாதிக் தனது 15-வது வயதிற்குள்ளேயே முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்து முடிக்கும் அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். தனது ஆரம்பகால மதக் கல்வியை மதரஸாக்கள் மூலம் பயின்ற அவர், பள்ளிப் படிப்பு காரணமாக ஏற்பட்ட நேர நெருக்கடியால், 9-ம் வகுப்பில் பயிலும்போது ஒரு ஆசிரியரின் வழிகாட்டுதலிலும் தனது தாயாரின் மேற்பார்வையிலும் வீட்டிலிருந்தபடியே குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்து முடித்தார்.

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 95 சதவீத மதிப்பெண் பெற்றபோதே அவரது கல்வித் திறமை வெளிப்பட்டது. அதே சீரான செயல்திறனைத் தொடர்ந்து கடைப்பிடித்த ஜைத், ஜே.இ.இ.  மெயின்  தேர்வின் இரண்டு அமர்வுகளிலும் 99 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.  அவரது தந்தை சையத் சாதிக் மற்றும் தாயார் சையத் ஜௌக்கியா ஆகியோரின் ஆதரவுடன், பல மாதங்களாக அவர் மேற்கொண்ட தீவிரமான மற்றும் ஒருமுகப்படுத்தப்பட்ட பயிற்சியே, கல்விக்கும் மதக் கல்விக்கும் இடையே ஒரு சரியான சமநிலையைப் பேண அவருக்கு உதவியது.

கல்விப் பின்னணி கொண்ட குடும்பம் :


கல்விப் பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த,சையத் ஜைத் சாதிக், மறைந்த சையத் சத்தார் அலி ரோஷன் என்பவரின் பேரனாவார். சையத் சத்தார் அலி ரோஷன் ஒரு மதிப்பிற்குரிய முன்னாள் நகராட்சிப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர்.

சையத் ஜைத் சாதிகின் நேர மேலாண்மைத் திறனைப் பாராட்டிப் பேசிய அசோகா கல்லூரியைச் சேர்ந்த ஒரு ஆசிரியர், "முறையான கால அட்டவணை மற்றும் முழுமையான கவனத்துடன் செயல்பட்டால், மாணவர்கள் கல்வி மற்றும் மதக் கல்வி ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்க முடியும் என்பதை ஜைத் நிரூபித்துக் காட்டியுள்ளார்" என்று பெருமையுடன் கூறியுள்ளார். 

ஒரு புகழ்பெற்ற இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி.) இடம் பிடிக்கும் கனவுடன், சையத் ஜைத் சாதிக்,  தற்போது JEE Advanced தேர்வுக்கான தீவிரத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவரது இந்த வெற்றிக்கு, நாசிக் நகரம் முழுவதிலுமிருந்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

===========================

Sunday, April 26, 2026

ஹஜ் - யாத்ரீகர்களுக்கு சவூதி அரேபியா அறிவுறுத்தல்...!

ஹஜ் பயண ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன் அனுமதி குறித்த நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும்....!

புனித ஹஜ் பயணிகளுக்கு சவூதி அரேபியா அறிவுறுத்தல்....!!

மக்கா, ஏப்.27- அனைத்து ஹஜ் யாத்ரீகர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதற்கு, அதிகாரப்பூர்வ ஹஜ் அனுமதிச் சீட்டுகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவது ஒரு அடிப்படைத் தேவை என்று சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், பயண ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன்,  யாத்ரீகர்கள் அனைவரும் தங்கள் அனுமதிச் சீட்டுகளின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்குமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டது. 

"அனுமதிச் சீட்டு இல்லாமல் ஹஜ் இல்லை" என்ற கொள்கையே, உலகின் இரு புனித மஸ்ஜித்துகளுக்கு வரும் ஒவ்வொரு யாத்ரீகருக்கும் பாதுகாப்பான மற்றும் ஆன்மீக அனுபவத்தை வழங்குவதற்கான முதன்மை உத்தரவாதம் என்று சவூதி அரசு மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், யாத்ரீகர்கள் தங்கள் சடங்குகளை எளிதாகவும் வசதியாகவும் செய்ய அதிகாரம் பெறுகிறார்கள். இது, யாத்ரீகர்களின் தடையற்ற பயணத்திற்கும், 2026 ஹஜ் பருவத்தின் ஒட்டுமொத்த நிலைத்தன்மைக்கும் கணிசமாகப் பங்களிக்கிறது  என்று சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. 

அனுமதி சீட்டு முக்கிய அங்கம் :

ஹஜ் பயணிகளின் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், புனிதத் தலங்கள் முழுவதும் யாத்ரீகர்களைச் சமமாகப் பகிர்ந்தளிப்பதற்கும் அனுமதிச் சீட்டு முறை ஒரு முக்கிய அங்கமாகும் என்று சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் விளக்கியுள்ளது. இந்தக் கட்டமைப்பு, குறிப்பிட்ட ஹஜ் பயணங்களின் தேவைகளைச் சரியான நேரங்களிலும் இடங்களிலும் பூர்த்தி செய்வதற்கு, கள சேவைகள் முழுமையாகத் தயாராக இருப்பதை உறுதி செய்கிறது.

இந்த விதிமுறைகளை மீறுவது, குற்றவாளிகளைச் சட்டரீதியான தண்டனைகளுக்கு உள்ளாக்குவது மட்டுமல்லாமல், பரந்த யாத்ரீகர்களின் பாதுகாப்பையும், சேவை உள்கட்டமைப்பின் செயல்திறனையும் சீர்குலைக்கும் என்று அமைச்சகம் எச்சரித்துள்ளது. உரிமம் பெறாத ஹஜ் பயணங்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்களில் தவறான விளம்பரங்கள் பரவுவதற்கு எதிராகவும் அது எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு :

உலகளாவிய இணக்கத்தை உறுதி செய்யும் முயற்சியில், யாத்ரீகர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு வந்து சேர்வதற்கு முன்பே, அவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வுச் செய்திகளைப் பரப்புவதற்காக, உலகெங்கிலும் உள்ள ஹஜ் விவகார அலுவலகங்களுடன் அமைச்சகம் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பைப் பேணி வருகிறது. இந்த முன்கூட்டிய அணுகுமுறை, புனிதப் பயணத்தை அதன் ஆரம்பக் கட்டங்களிலிருந்தே ஒழுங்கமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து இந்தாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற முஸ்லிம்கள் மதீனா மற்றும் மக்கா நகருக்கு வந்தவண்ணம் உள்ளனர். மே மாத இறுதியில் தியாகத் திருநாள் நடைபெறும் நிலையில், தங்களது வாழ்நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவல் முஸ்லிம்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கூட, புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலக முஸ்லிம்கள் மக்காவிற்கு புறப்பட்டு செல்லும் வண்ணம் இருந்து வருகின்றனர். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

விருந்தோம்பல்...!

 மதீனாவில் 

ஒரு அழகிய 

விருந்தோம்பல்....!



அருமையான தருணம்...!

என்னுடைய 

' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' 

மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1' 

 ஆகிய இரண்டு நூல்களை, 

கல்லூரி தோழர் வி.சி.ராஜா அவர்களுக்கு

 வழங்கி மகிழ்ச்சி அடைந்த  

இனிமையான தருணம்.



Good...!

Always do good. 

It comes back to you in unexpected ways.

Believe it.




வாழ்க்கையில்....

ஒருவர் உங்களை தாழ்த்திப் பேசும் போது

 ஊமையாய் இருங்கள். 

புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இருங்கள்.

 மேலும் சிந்திக்கும் போது நிதானமாக சிந்தியுங்கள். 

செயல்படும் போது உறுதியாக செயல்படுகள்.

 வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

 அத்துடன் மகிழ்ச்சியும் கிடைக்கும்.



மகிழ்ச்சியான தருணம்...!

 இனிய மகிழ்ச்சியான தருணம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி (சி.ஆர்.பி.எஃப்.) மற்றும் சமூக ஆர்வலர்  தோழர் தயாளன் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த  இனிமையான தருணம். அவரது துணைவியாரும் நூல்களை பெற்றுக் கொண்டு என்னை வாழ்த்தியது மகிழ்ச்சியை அளித்தது.



Watches...!

This is Lulu group's M.D. Yusuf Ali, who even today wear a simple ordinary watch on his writs, while his staff have diamond watches....



நண்பர்கள்....!

A lovely video on friends. 

Felt like sharing with all those 

whom I cherish the moments spent...!



Saturday, April 25, 2026

முஸ்லிம் உணவுகள்....!

முஸ்லிம்கள்  அறிமுகப்படுத்திய  அன்றாட இந்திய உணவு வகைகள்....!

உலகில் மிகச்சிறந்த நாடு நம் இந்திய திருநாடு. நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூகங்கள் வாழும் நாடு நமது இந்திய நாடாகும். பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள் என இந்திய நாட்டில் வாழும் மக்கள் கடைப்பிடித்து வந்தாலும், எல்லோருமே ஒற்றுமையாக, அமைதியாக வாழ விரும்புகிறார்கள். அப்படி தான் வாழ்ந்தும் வருகிறார்கள்.

ஆனால், ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, மக்கள் மத்தியில் வெறுப்பு பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இஸ்லாமிய மக்கள் மீதான வெறுப்பு பிரச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்திய முஸ்லிம்களை தனிமைப்படுத்தி, அதன்மூலம் அரசியல் இலாபம் அடைய பாஜக உள்ளிட்ட சில அமைப்புகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.

ஒன்றிய பாஜக அரசில் ஒரு முஸ்லிம் அமைச்சர் இல்லை. ஏன், பாஜகவில் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட கிடையாது. அந்தளவுக்கு முஸ்லிம் வெறுப்பு பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளிடம் இருந்து வருகிறது. முஸ்லிம்கள் இந்திய நாட்டிற்கு எதுவுமே செய்யவில்லை என்ற பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.  வரலாறு மாற்றப்பட்டு எழுதப்படுகிறது. இந்திய நாட்டின் விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்களை போன்று வேறு யாருமே செய்யவில்லை. இது தான் உண்மை வரலாறு.

முஸ்லிம்கள் அறிமுப்படுத்திய உணவுகள் :

நாட்டின் விடுதலைக்காக மட்டும் முஸ்லிம்கள் தியாகம் செய்யவில்லை. மாறாக, நாட்டின் வளர்ச்சிக்காக முஸ்லிம்கள் வழங்கிய பங்களிப்புகள் ஏராளம். அறிவியல், பொருளாதாரம், மொழி, கலை, சுகாதாரம், இலக்கியம் என பல்வேறு துறைகளில் இந்திய முஸ்லிம்கள் தொடர்ந்து தங்களுடைய உழைப்பை செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

உணவு வகைகளை எடுத்துக் கொண்டாலும் முஸ்லிம்கள் அறிமுகம் செய்த உணவுகளை தான் பெரும்பாலான இந்தியர்கள் தற்போது சுவைத்து உண்டு மகிழ்கிறார்கள்.

முஸ்லிம்கள் இந்தியாவிற்கு அறிமுகப் படுத்திய உணவு வகைகள் ஏராளம். அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்.

* பிரியாணி (பாரசீகம்)

* சமோசா (மத்திய கிழக்கு)

* குலாப் ஜாமூன் & ஜிலேபி (முஸ்லிம்கள் அறிமுகம்)

* கபாப் & குர்மா

* நான் & பராத்தா (முகலாய பாணி)

* ஹலீம் & ஷீர் குர்மா

* முகலாய கறிகள் & இனிப்புகள்

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அதன் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

முஸ்லிம்கள் அறிமுகம் செய்த உணவு வகைகளை நாம்  தினமும் வீட்டிலோ அல்லது வெளியிலோ உண்டு வருகிறோம்.

இவற்றுள் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? என்று கேள்வி எழுப்பினால், அனைத்தும் பிடிக்கும் என்றே கூறுவீர்கள்.

வேண்டாம் வெறுப்பு :

முஸ்லிம்கள் மீது வெறுப்புடன் இருப்பவர்கள் கூட, முஸ்லிம்கள் அறிமுகம் செய்த உணவு வகைகளை விரும்பி உண்டு மகிழ்கிறார்கள். முஸ்லிம்கள் மீது வெறுப்பு., ஆனால் முஸ்லிம்கள் அறிமுகம் செய்த உணவு வகைகள் மீது அதிக நாட்டம் இருப்பதை நாம் காண முடிகிறது.

                                                ==================

"இந்திய முஸ்லிம்கள் அறிமுகம் செய்த உணவு வகைகள் ஏராளம். முஸ்லிம் உணவுகளை போன்றே முஸ்லிம்களும் சுவையானவர்கள். அன்பானவர்கள். அவர்கள் மீது வேண்டாம் வெறுப்பு"

                                                ==================

முஸ்லிம்கள் அறிமுகம் செய்த உணவு வகைகள்  எப்படி சுவையானதோ, அதேபோன்றே, முஸ்லிம்களும் அன்பானவர்கள், சகோதர குணம் கொண்டவர்கள், எல்லோரையும் நேசிப்பவர்கள், அமைதியை விரும்புகிறவர்கள், இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைகளின் படி அனைவருக்கும் வழங்கி அன்பை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவர்கள். 

முஸ்லிம்கள் உணவு வகைகளை விரும்பி உண்ணும் சகோதர சமுதாய மக்கள், முஸ்லிம்களையும் நேசிக்க வேண்டும். பாசிச அமைப்புகளின் சதி வலையில் சிக்காமல், முஸ்லிம்கள் மீது வெறுப்பு கொள்ளாமல் பழக முன்வர வேண்டும்.

அப்படி பழக ஆரம்பித்தால், முஸ்லிம் உணவு வகைகள் போன்று, முஸ்லிம்களும் உங்களுக்கு சுவையாக இருப்பார்கள்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

மகிழ்ச்சி தருணம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்,  இஸ்லாமிய சிந்தனையாளர்  தோழர் குத்தூஸ் சாஹிப் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த  இனிமையான தருணம்.



Don't try....!

For your peace of mind, 

don't try to understand 

everything.




குற்றச்சாட்டு....!

 "BJP doesn't win from elections, they come to power by buying MPs and MLAs.

People in north have not understood this but it will change and Rahul Gandhi will become PM."

- Former Puducherry CM Narayanasamy on AAP MPs joining BJP



வாழ்த்து....!

 வேலூர் தொழில் அதிபர் எஸ்.கே.நிஜாமுதீனின் இளைய மகன் என்.ஜமாலுத்தீனின் நிக்காஹ் எஸ்.யு.ஏ.பாத்திமாவுடன் ஏக இறைவனின் அருளால் இன்று சிறப்பாக நடைபெற்றது. திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ச்சி அடைந்த இனிய தருணம்...


மணமகனின் தந்தை தோழர் நிஜாமுதீனுக்கு எமது வாழ்த்துகள்...




மகிழ்ச்சி...!

 என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை இளம் வழக்கறிஞர் முஹம்மது இம்ரானுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.



வாய்ப்பு....!

 வாய்ப்பை சரியான 

முறையில் பயன்படுத்தி, 

எப்போதும் தயாராக இருக்கும் 

இடத்தில் தான் வெற்றி குடிபுகுந்து 

தஞ்சம் கொள்ளும். 

வெற்றியை சுவைக்க வேண்டுமானால் 

வாய்ப்பை சரியாக பயன்படுத்த 

தயாராக இருக்க வேண்டும்.



இனிய தருணம்...!

என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை, சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர் மற்றும் நல்ல சமூக ஆர்வலர் தோழர் முஹம்மது உமர் அவர்களுக்கு வழங்கிபோது, அவர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து எனக்கு சால்வை அணிவித்து வாழ்த்திய இனிமையான தருணம்.



Friday, April 24, 2026

நூல்கள் அறிமுகம்...!

 என்னுடைய ' உலகில் வீசும் இஸ்லாமிய ஒளி' மற்றும்' இந்திய முஸ்லிம்கள்- பாகம் 1'  ஆகிய இரண்டு நூல்களை, சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர் மற்றும் நல்ல சமூக ஆர்வலர் தோழர் முஹம்மது உமர் அவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்த இனிமையான தருணம்.



Happy Life....!

A simple formula for a Happy life. 

Never try to defeat anyone. 

Just try to win everyone. 

Don't laugh at anyone. 

But laugh with everyone.