பணம் என்றுமே
நிம்மதியை தருவதில்லை.
ஆனால் நிம்மதி இல்லாமல்
போவதற்கு பணமும்
ஓர் முக்கிய காரணம்
என்பதை மறக்க முடியாது.
பணத்திற்கு தரும் மரியாதையை
சிலர் நல்ல குணமுள்ள
மனிதர்களுக்கு தருவதில்லை.
பணம் என்றுமே
நிம்மதியை தருவதில்லை.
ஆனால் நிம்மதி இல்லாமல்
போவதற்கு பணமும்
ஓர் முக்கிய காரணம்
என்பதை மறக்க முடியாது.
பணத்திற்கு தரும் மரியாதையை
சிலர் நல்ல குணமுள்ள
மனிதர்களுக்கு தருவதில்லை.
The whole world is heading into unpredictable times. Geopolitics is crumbling. At this moment, an election is not the time for change. it is the time for stable and steady governance to continue for the future of our people. Don’t end up on the wrong side of history.
Vote For DMK
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை!
- மு.க.ஸ்டாலின்...
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் தாம் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்....!
அவசியம் கேளுங்கள்...!
தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :
வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் ஒருநாள்...!
2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் இ.யூ.முஸ்லிம் லீகின் வேட்பாளர்களாக முறையே ஏ.எம்.ஷாஜஹான், எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான பிரச்சாரம் 21.04.2026 அன்று மாலையுடன் நிறைவு அடைகிறது.
இத்தகைய சூழ்நிலையில், வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் பிரச்சாரம் உச்சக் கட்டத்தில் இருக்கும் நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் ஏப்ரல் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வாணியம்பாடி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக்கிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து, ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதனால் வாணியம்பாடி தேர்தல் களத்தில் ஒரு புதிய எழுச்சி உருவானது. தமது பிரச்சாரத்தின் போது, ஏணி சின்னத்திற்கு வாக்களித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.
இதேபோன்று, திமுக கூட்டணி தலைவர்களும் ஏணி சின்னத்திற்கு இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் ஷாஜஹான், மாநில முதன்மை துணைத் தலைவரும் தொகுதி மேலிட பொறுப்பாளருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர் ரஹ்மான், தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித் மற்றும்இ.யூ.முஸ்லிம்லீகின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் வாணியம்பாடியில் முகாமிட்டு ஏணியின் வெற்றிக்காக உழைத்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூடான தேர்தல் களத்தில், மணிச்சுடர் நாளிதழின் சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், வாணியம்பாடி தொகுதியில் ஒருநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொகுதியில் பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து அவர்களது கருத்துகளை கேட்டறிந்தார். மேலும் வாணியம்பாடி தொகுதியில் ஏணி சின்னத்திற்கு ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை அறிய முயன்றார். சுட்டெரிக்கும் கடும் வெயிலுக்கு மத்தியில் அவர் திரட்டிய முழு விவரம் இதோ உங்கள் பார்வைக்கு:
வாணியம்பாடி தொகுதி ஒரு பார்வை :
வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி என்பது தமிழ்நாடு மாநிலத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்த தொகுதியின் எண் 47 ஆகும். திருப்பத்தூர், அணைக்கட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. தமிழகத்தில் பாலாறு தொடங்கும் இடத்தில் வாணியம்பாடி தொகுதி உள்ளது. தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியுடன் கூடிய காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையம், ஆண்டியப்பனூர் அணை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, ஜவ்வாதுமலையின் சந்தன மரங்கள் மற்றும் சுவையான பிரியாணிக்கும் வாணியம்பாடி தொகுதி பெயர் பெற்றது. வாணியம்பாடி தொகுதி மக்களின் பிரதான தொழிலாக தோல் பதனிடும் தொழில், தோல் பொருட்கள் தயாரிப்பு, தென்னை, கரும்பு உள்ளிட்ட வேளாண்மை, கோரை பாய் தயாரிப்பு, பீடி சுற்றுதல், ஊதுபத்தி தயாரித்தல் ஆகும்.
வாணியம்பாடி தொகுதியில் இஸ்லாமியர்களும், வன்னியர்களும் ஏறத்தாழ சமநிலையிலும், பட்டியல் இனமக்கள், முதலியார், நாயுடு, யாதவர், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர சமூகத்தினரும் உள்ளனர். இந்த தொகுதியில் வாணியம்பாடி நகராட்சியின் 36 வார்டுகள், ஆலங்காயம், உதயேந்திரம் பேரூராட்சிகள் உள்ளன. இத்தொகுதியில் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பீமகுளம், நாயக்கனூர், நரசிங்கபுரம், நிம்மியம்பட்டு, 102 ரெட்டியூர், வெள்ளக்குட்டை, கொத்தகோட்டை, பெரியகுரும்பதெரு, விஜிலாபுரம், பெத்தவேப்பம்பட்டு, வள்ளிப்பட்டு, கோவிந்தாபுரம், வளையாம்பட்டு, நெக்னாமலை, தேவஸ்தானம், பள்ளிப்பட்டு, ஜாப்ராபாத் ஆகிய 17 ஊராட்சிகள், திருப்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பூங்குளம், மரிமாணி குப்பம், மிட்டூர் பெருமாபட்டு, பள்ளவள்ளி, குரிசிலாப்பட்டு, இருணாப்பட்டு, ஆண்டியப்பனூர் ஆகிய 8 ஊராட்சிகள், நாட்டறம் பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட நாராயணபுரம், அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, புல்லூர், ராமநாயக்கன்பேட்டை, ஆவராங்குப்பம், மல்லகுண்டா, சிக்கனாகுப்பம், அம்பலூர், கொடையாஞ்சி, தும்பேரி, வடக்குபட்டு, தெக்குபட்டு, எக்லாசபுரம், மல்லங்குப்பம், சங்கரபுரம், அழிஞ்சிகுப்பம் ஆகிய 17 ஊராட்சிகள் அடங்கியுள்ளன.
அத்துடன், தும்பேரி, நெக்னாமலை, ஆலங்காயம் (ஆர்.எப்), நிம்மியம்பட்டு, வெள்ளகுடை, கொத்தகொட்டை, வளையாம்பட்டு, வாணியம்பாடி, சிக்கனாங்குப்பம், திம்மாம்பேட்டை, புல்லூர், சீமுகம்பட்டு, அலசந்தாபுரம், வெங்கடராஜசமுத்திரம், நாராயணபுரம், ஜவாதுராமசமுத்திரம், கொள்ளப்பள்ளி, குருவானிகுண்டா, ராமநாயக்கன்பேட்டை, வடக்குப்பட்டு, கனகப்பட்டு, தேவஸ்தானம், அம்பலூர், கோவிந்தபுரம், ஆம்பூர்பேட்டை, வள்ளிப்பட்டு, தெக்குப்பட்டு, மல்லான்குப்பம், மல்லகுண்டா, ரெட்டியூர், நரசிங்கபுரம், மரிமாணிகுப்பம், நாச்சியார்குப்பம், பூங்குளம், நாய்க்கனூர், சத்திரம்,காவலூர், பீமகுளம்,மிட்டூர், ஆண்டியப்பனூர், இருணாப்பட்டு, பெருமாபட்டு மற்றும் குரிசிலாபட்டு கிராமங்கள் இந்த தொகுதியில் உள்ளன. உதயேந்திரம் பேரூராட்சி, ஜாபராபாத் சென்சஸ் டவுன், வாணியம்பாடி நகராட்சி மற்றும் ஆலங்காயம் பேரூராட்சி மற்றும் வேலூரின் முக்கிய சுற்றுலா தலமான காவலூர் இப்பகுதியில் அமைந்துள்ளது.
வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 262 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. நாராயணபுரம், ஜவாதுராமசமுத்திரம், மோட்டூர் மற்றும் திம்மாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை,தொடக்கப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் வாக்குச்சாவடிகளாகச் செயல்படுகின்றன. இந்த தொகுதியில் முஸ்லிம் லீக் 6 முறையில் வெற்றி பெற்று இருக்கிறது. அதிமுக 3 மூன்று முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றிவாகை சூடியுள்ளன. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 220 வாக்காளர்கள் உள்ளனர். அவற்றில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 457 பேரும் பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 713 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 50 பேரும் அடங்குவர்.
மீண்டும் இ.யூ.முஸ்லிம் லீக் போட்டி :
வாணியம்பாடி தொகுதியில் கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிவாய்ப்பை இழந்த இ.யூ.முஸ்லிம் லீக், இந்த முறை மீண்டும் இந்த பாரம்பரியமான தொகுதியில் தனது தனிச் சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறது. அத்துடன், இ.யூ.முஸ்லிம் லீகின் வேட்பாளராக எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் இந்த தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சமான பாரூக், பழகுவதிலும் அன்பானவர் என்பதால், அவரை இந்தமுறை வாணியம்பாடி தொகுதி வாக்காளர்கள் வெற்றிபெற செய்வார்கள் என்ற நம்பிக்கை தொகுதி முழுவதும் இருந்து வருகிறது.
நாம், வாணியம்பாடி நகரப் பகுதியில் வாக்காளர்கள் சிலரை சந்தித்து அவர்களின் கருத்தை கேட்டபோது, பெரும்பாலான மக்கள் ஏணி சின்னத்திற்கு ஆதரவாகவே இருப்பது தெரிய வந்தது. இதன்மூலம் ஏணி சின்னம் வாணியம்பாடி தொகுதியின் வாக்காளர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டு விட்டது உறுதியாக தெரிய வந்தது. திமுக கூட்டணி நிர்வாகிகளும் ஏணி சின்னத்திற்கு ஆதரவாக கடுமையாக உழைப்பதையும் தொகுதியில் பரவலாக காண முடிந்தது.
வீடு வீடாக பிரச்சாரம் :
இ.யூ.முஸ்லிம் லீகின் மூத்த நிர்வாகியும் கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவருமான, நரி முஹம்மது நயீம், தம்முடைய தேர்தல் அனுபவம் முழுவதையும் இந்த முறை வாணியம்பாடி தொகுதி முழுவதும் நன்கு பயன்படுத்தி, இ.யூ.முஸ்லிம் லீகின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருவதை நாம் காண முடிந்தது. வாணியம்பாடி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து ஏணி சின்னத்திற்கு அவரது குழுவினர் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
இப்படி பல்வேறு நிலைகளில் பிரச்சாரம் நடந்துவரும் நிலையில் திராவிட மாடல் ஆட்சியின் ஐந்து ஆண்டு கால சாதனைகள், வாக்காளர்களை வெகுவாக கவர்ந்து இருப்பதை தொகுதியில் பார்க்க முடிந்தது. பெண்களின் வாக்குகள் திமுக கூட்டணிக்கே என்பதும் அவர்களின் கருத்துகள் மூலம் அறிய முடிந்தது.
முஸ்லிம் இளைஞர்களில் சிலர் த.வெ.க.விற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தாலும், தற்போது உண்மை நிலையை உணர்ந்து அவர்களும் திமுக கூட்டணியின் வெற்றி தான் தமிழகத்தை வளர்ச்சிக்கு கொண்டும் செல்லும் என்பதை உணர்ந்து இருக்கிறார்கள். அதுகுறித்து சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். தங்களது வாக்குகளை த.வெ.க.விற்கு அளித்து அதன்மூலம் பாசிச ஆட்சி தமிழகத்தில் வருவதை இளைஞர்கள் விரும்பவில்லை என்பது அவர்களின் பேச்சு மூலம் நம்மால் அறிய முடிந்தது.
சிறப்பான தேர்தல் ஒருங்கிணைப்பு பிரச்சாரம், வாக்காளர்கள் சந்திப்பு, பல்வேறு அமைப்புகளோடு கலந்துரையாடல், திட்டமிட்டு வாக்கு சேகரிப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தல் என அனைத்தும் வாணியம்பாடி தொகுதியில் சிறப்பாகவே நடந்துள்ளது.
இதன்மூலம் வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூகின் வெற்றி உறுதியாகிவிட்டது என்றே கூற வேண்டும்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
அன்பை விதைத்தால்
அன்பு கிடைக்கும்.
வெறுப்பை கக்கினால்
வெறுப்புதான் கிடைக்கும்.
ஆயிரம் முறை
தோல்வி தழுவினாலும்
முயற்சியை கைவிடாதீர்கள்.
நிச்சயம் ஒருநாள்
வெற்றி கிடைக்கும்.
அன்பு மூலம் வெற்றி் கிடைக்கும்.
வாழ்த்துகள்....!
வாழ்க்கையில் புதிய அத்தியாயம் என்ற புதிய பயணத்தை, திருமண வாழ்க்கையை இன்று தொடங்கியுள்ள தோழர் ஜெரால்ட் அவர்களுக்கு எமது வாழ்த்துகள். வாழ்க்கை இணையுடன் பல்லாண்டு, மகிழ்ச்சி மற்றும் வளமுடன் வாழ வாழ்த்துகிறோம். வாழ்த்துகள் தோழரே...
Happy married life. God bless you.
Life is beautiful.
One day one hour and
one minute will not come again
in your entire life.
Avoid fights, angriness
and speak lovely to every person.
கவலை ஒருபோதும் நாளைய
சோகத்தை தீர்த்து விடாது. ஆனால்
அது இன்றைய மகிழ்ச்சியை
பறித்துவிடும் என்பது தான் உண்மை.
வாழ்க்கையில் சின்ன சின்ன
விஷயங்களில் கிடைக்கும் மகிழ்ச்சியை
அனுபவித்து வாழ்வோம்.
காரணம், சில நேரங்களில் சின்ன
விஷயங்களில் கூட
அற்புதம் நிகழ வாய்ப்பு உண்டு.
If we judge people, nobody is ours.
If we understand people, everyone is ours.
Develop the habit of understanding
and we will experience peace and love
in all relations.
தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா:
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி எதிரொலி:
தமிழகம் முழுவதும் மக்களிடையே உருவாகியுள்ள புதிய எழுச்சி....!
திமுக கூட்டணிக்கு ஆதரவாக வீசும் வெற்றி அலை....!!
தமிழகத்தில் சமீபகாலமாக நிலவும் அரசியல், சமூக மற்றும் பண்பாட்டுச் சூழலில் மக்கள் மத்தியில் பல்வேறு எழுச்சிகள் காணப்படுகின்றன. 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, முக்கியமாக அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த 15 நாட்களாக தமிழகம் முழுவதும் அரசியல் தலைவர்களின் எழுச்சிமிகு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, தொகுதி மறுவரையறை தொடர்பான ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு எதிராக, அது தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் "சதி" என்று கருதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்புக் கொடி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தார். திமுக தலைவரின் இந்த அழைப்பை ஏற்று தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்பட்டு, ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தென்னிந்திய மாநிலங்களின், குறிப்பாகத் தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி :
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற தமிழக மக்களவை உறுப்பினர்கள் அனைவரும், மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதங்களை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவிற்கு மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்கவில்லை. மசோதாவிற்கு ஆதரவாக 278 பேரும் எதிராக 211 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதா வெற்றி பெற மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள், அதாவது 326 வாக்குகள் தேவை என்ற நிலையில், பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காததால், மசோதா தோல்வி அடைந்தது. இது மோடி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வியாகும்.
தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி :
நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி அடைந்த செய்தியைக் கேட்டதும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அடைந்த மகிழ்ச்சி அளவே இல்லை என்று கூறலாம். பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் அவர் தம்முடைய ஆனந்தத்தை வெளிப்படுத்தினார். இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த முதல் வெற்றி என்று மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். இந்த வெற்றி 100 ஆண்டுகள் ஆனாலும், வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்றும் அவர் உறுதிப்பட கூறினார். தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் நடக்கும் போரில், முதல்கட்டமாக தமிழ்நாடு தற்போது வெற்றி பெற்று இருக்கிறது. வரும் 23ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மிகப்பெரிய வெற்றியை திமுக கூட்டணி பெறும், தமிழ்நாட்டின் இரண்டாவது வெற்றியை மீண்டும் பதிவு செய்யும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அத்துடன் நிற்காமல், மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அது தோல்வி அடையச் செய்த காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார். அத்துடன் சமூக நீதியை காப்பாற்ற திமுக தொடர்ந்து போராடும் என்றும் மாநிலங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் அவர் உறுதிப்பட கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் எழுச்சி :
இத்தகைய சூழ்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்ததையடுத்து, தமிழ்நாடு முழுவதும் மக்களிடையே ஒரு புதிய எழுச்சி உருவாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், இந்த மக்கள் எழுச்சி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக மாறிவிட்டது என்றே கூறலாம்.
தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது என்று திமுக கூட்டணித் தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது, தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க வகைசெய்யும் மசோதா தோல்வி அடைந்ததால், அது திமுக அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறிவிட்டது. தவெக,., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவாக இருந்த மக்கள் கூட, தற்போது திமுக அணியின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர். இதன் காரணமாக, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்த வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியை தமிழக மக்கள் தருவார்கள் என அரசியல் நோக்கர்கள் கருகிறார்கள்.
சரியான திசையில் திமுக அணி :
இத்தகைய அரசியல் சூழ்நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைவர்கள், தமிழ்நாடு முழுவதும் உருவாக்கியுள்ள மக்கள் எழுச்சியை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள தீவிரம் காட்டி வருகின்றனர். வாக்குப்பதிவு நாள் வரை இந்த எழுச்சி மக்கள் மத்தியில் இருக்கும் வகையில், சரியான திட்டமிடலுடன் திமுக அணி தங்களது பிரச்சாரங்கள் செய்துவருவதாகவே தெரிகிறது. இதன்மூலம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் வரலாற்று வெற்றி கிடைக்கும் என உறுதியாக கூறலாம்.
இதுஒருபுறம் இருக்க, தமிழ்நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகிகள், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதர்ச்சார்ப்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு இஸ்லாமியர்கள் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். வெள்ளி மேடையிலும் தேர்தல் குறித்து இஸ்லாமியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசங்கம் செய்யப்பட்டது. இதன்மூலம் அனைத்து இஸ்லாமியர்களின் வாக்குகள் திமுக அணிக்கு கிடைக்கும் என்று உறுதிப்பட கூறலாம். இதேபோன்று, கிறிஸ்துவ பெருமக்கள் கூட, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவான நிலையை எடுத்து இருக்கிறார்கள். மேலும், தமிழ்நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மையின மக்களின் ஒரே தேர்வாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இருந்து வருகிறது.
எனவே, தற்போது தமிழ்நாட்டில் மக்களிடையே உருவாகியுள்ள புதிய எழுச்சி, தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடர வழிவகை செய்து, ஒன்றியத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற உறுதியுடன் போராடும் ஒரு நல்ல ஆட்சியை அமைக்க துணை நிற்கும் என்று உறுதியாக கூறலாம்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா:
" ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் "
தமிழ்நாடு முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முழக்கம்.....!
தமிழக வாக்காளர்களை கவர்ந்த அரசியல் முழக்கம்....!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, களம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் வரும் 21ஆம் தேதி நிறைவுபெற்று, 23ஆம் தேதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் ஒரு முழக்கம் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த முழக்கம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்று சேர்ந்திருக்கிறது.
"ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்பது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுகவால் முன்வைக்கப்பட்ட முக்கிய முழக்கமாகும். 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இந்த முழக்கம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முழக்கத்தை மையமாக வைத்து "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற அதிகாரப்பூர்வ பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
"வெல்வோம் 200" அதாவது 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை நோக்கி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும் என்பதை இந்த முழக்கம் குறிக்கின்றது. ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் திமுகவின் சார்பில் பல்வேறு மாநாடுகள், பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் சமூக ஊடக பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முழக்கத்தின் கீழ், கல்வி, சமூக நீதி, மற்றும் மாநில உரிமைகள் போன்ற பிரச்சனைகளை முன்னிறுத்தி, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசைக் கடுமையாக விமர்சித்து, "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற பிரச்சாரத்தையும் திமுக முன்னெடுத்து வருகிறது. சுருக்கமாகச் சொன்னால், "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்பது 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை வலியுறுத்தும் ஒரு முக்கிய அரசியல் முழக்கமாகும்.
தமிழ்நாடு முழுவதும் ஒலிக்கும் முழக்கம் :
"ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற இந்த முழக்கத்தின் முக்கிய அம்சங்களாக திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மகளிர் நலன், மாணவ மாணவியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவை இருந்து வருகின்றன.
சரி, "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற முழக்கம் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இதுகுறித்து பெண்கள், மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரை நாம் நேரில் சந்தித்து கருத்துகளை சேகரித்தோம். அவர்களில் பெரும்பாலானவர்கள், தற்போதைய திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டில் தொடர வேண்டும் என தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்., தமிழ்ப்புதல்வன் உதவித் தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும்., மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆயிரத்து 500-இல் இருந்து 2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படும்., நலவாரியங்கள் ஓய்வூதியம் ஆயிரத்து 200 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்ற திமுகவின் அறிவிப்புகள் ஏழை, மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
இதேபோன்று, கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் ஆயிரத்து 200 ரூபாயில் இருந்து, 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்., புதுமைப்பெண் திட்டம் நிதியுதவி ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும்., முதியோர் உதவித்தொகை ஆயிரத்து 200 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்., நெல்கொள்முதல் 2 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகள் தமிழக வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன என்றே கூற வேண்டும். இதன் காரணமாக "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற முழக்கம் தமிழ்நாடு முழுவதும் தற்போது ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
வாக்காளர்களின் கருத்து :
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்காளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்தோம். அதற்காக, மக்கள் அதிகம் கூடும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், தேநீர் விடுதிகள், ஓட்டல்கள் நடைபாதைகள் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும்போது, அங்கு மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை காதுகொடுத்து கொஞ்சம் கேட்டோம். அப்போது அவர்களின் விருப்பமாக திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் தொடர வேண்டும் என்பதாக இருந்தது.
* இந்த தேர்தலில் நிச்சயம் திமுக தான் ஜெயிக்கும்.,
* மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார்.
* நாங்கள் அனைவரும் திமுக கூட்டணிக்கு தான் வாக்கு போடுவோம்.
* திமுக கூட்டணி தான் வலிமையான கூட்டணியாக உள்ளது.
* தமிழ்நாட்டின் நலனில் உண்மையான அக்கறை கொண்டு கூட்டணியாக திமுக கூட்டணி உள்ளது.
* தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும்.
* அதிமுக தற்போது மறைந்த அம்மையார் ஜெயலலிதா காலத்தில் இருந்த அதிமுகவாக இல்லை. பாஜகவின் அடிமைக்கட்சியாக அதிமுக மாறிவிட்டது.
* வடநாட்டில் ஏற்பட்டுள்ள நிலையை போன்று தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது.
* வட நாட்டில் பல கட்சிகளை ஒன்றும் இல்லாத கட்சிகளாக பாஜக மாற்றிவிட்டது. அதேபோன்ற ஒரு நிலைமைய அதிமுகவிற்கு நிச்சயம் வரும்.
* தமிழ்நாட்டில் நிலவும் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க சதி நடைபெறுகிறது. அதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
* திமுக குறித்து ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டின் நலன், தமிழர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நாம் திமுகவிற்கு தான் வாக்களிக்க வேண்டும்.
இப்படி சாதாரண தொழிலாளி முதல் அனைத்துத் தரப்பு மக்களும் பேசிக் கொள்வது நமது காதுகளில் விழுந்தது.
ஒருசிலர் மட்டுமே, திமுக கூட்டணியை விமர்சனம் செய்தனர். பெரும்பாலானவர்கள், திமுக கூட்டணி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்று புகழாரம் சூட்டினார்கள்.
மக்களின் எண்ணங்கள் வாக்குகளாக மாறும் :
இதன்மூலம், தமிழக வாக்காளர்களில் பெரும்பாலானோர் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை விரும்புகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக தெரியவருகிறது. தமிழக மக்களின் உள்ளங்களில் ஓங்கி ஒலிக்கும் "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற முழக்கம் தேர்தல் நாளான ஏப்ரல் 23ஆம் தேதி திமுக கூட்டணிக்கு ஆதரவான வாக்குகளாக மாறும் என்பது உறுதி. கடந்த பல தேர்தல்களில் ஆளும் கட்சிக்கு எதிரான ஒரு மனநிலை மக்கள் மத்தியில் இருப்பதை காண முடிந்தது. ஆனால், 2026ஆம் நடக்கும் இந்த தேர்தலில் அப்படியொரு மனநிலை மக்கள் மத்தியில் இல்லை.
அதுவே, கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியின் மிகப்பெரிய பலமாகும். திமுக ஆட்சியின் சாதனையாகும். பல்வேறு சவால்களை சந்தித்து தமிழக மக்களின் உரிமைக்காக போராடும் திமுக, தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலிலும் சவால்களை முறியடித்து, மிகப்பெரிய வரலாற்று வெற்றியை நிச்சயம் பெறும் என்று உறுதியாக கூறலாம். மே 4ஆம் தேதி அன்று வெளியாகும் தேர்தல் முடிவுகள், திமுக கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்யும். அதன்மூலம் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், இந்திய அரசியலுக்கும் புதிய அரசியல் நெறிகளை உருவாக்கி அரசியல் ஆர்வலர்களை வியக்க வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட தங்க சாலை பகுதியில் துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேகர் பாபு , பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தார்.
பகுதியில் இளைஞர்களுடன் அவர் கேரம் விளையாடி நூதன முறையில் வாக்குகளை சேகரித்தது குறிப்பிடத்தக்கது.
பயணம் இன்றி
வாழ்க்கையும் இல்லை.
பணம் இன்றி
உறவுகளும் இல்லை.
உறவுகளுக்காக
பணத்தை செலவழிப்பது
ஒருவகையில் முதலீடாகும்.
முதலீடு செய்ய ஒருபோதும்
தயங்காதீர்கள். அதன்மூலம்
உறவுகளை நல்ல முறையில்
பேணுங்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - திமுக தேர்தல் அறிக்கை - ஒரு பார்வை.
இனிய திசைகள் ஏப்ரல் 2026 மாத இதழில் என்னுடைய சிறப்பு ரிப்போர்ட்....!
திமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும்...!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நம்பிக்கை...!
இனிய திசைகள் ஏப்ரல் 2026 மாத இதழில் என்னுடைய சிறப்பு ரிப்போர்ட்....!
Your smile is your logo.
Your personality is your business card.
And the way you make others
feel is your trademark.
உங்களிடம் இருக்கும்
சூப்பர் பவரை (திறமையை)
நீங்கள் மட்டுமே அறிய முடியும்.
உங்களைத் தவிமற்றவர்கள்
அதை அறிந்துகொள்ள முடியாது.
உங்கள் திறமையை அறிந்து
அதை வெளிப்படுத்தி
வாழ்க்கையை வசப்படுத்தி
வெற்றிபெற்று
மகிழ்ச்சி அடையுங்கள்.
தமிழ்நாட்டில் தேர்தல் பெருவிழா :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும்
கொளத்தூர் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் திவிர பிரச்சாரம்
வீடுவீடாகச் சென்று வாக்குசேகரிக்கும் முஸ்லிம் லீகர்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் தற்போது ராக்கெட் வேகத்தில் படுவேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள கொளத்தூர் உள்ளிட்ட அனைத்துத் தொகுதிகளின் நிலவரத்தை அறிந்துகொள்ள தமிழ்நாடு முழுவதும் ஓர் ஆர்வம் இருந்து வருகிறது. சென்னையில் உள்ள கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக கடந்த 2011 முதல் தொடர்ந்து போட்டியிட்டு, தனது தொகுதியை ஒரு மாதிரித் தொகுதியாக மாற்றியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தமது தொகுதியில் 'முதல்வர் படைப்பகம்', நவீன சந்தை வளாகம், ரெட்டேரி ஏரிப் பூங்கா போன்ற பல மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். கொளத்தூர் அலங்கார மீன் சந்தைக்காகப் பிரபலமானது மற்றும் இப்பகுதி 'சென்னையின் மீன் கிண்ணம்' என்று அழைக்கப்படுகிறது. முதலமைச்சரின் சாதனை தொடர்பாக 5 ஆண்டு சாதனை விளக்கப் புத்தகத்தை வெளியிட்டு, தீவிர தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பிரச்சாரம் செய்து வருகிறது. கொளத்தூர் தொகுதியில் 238 வாக்குச் சாவடிகள் உள்ளன.
தற்போது தேர்தல் களத்தில் அனல் பறக்கும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இ.யூ.முஸ்லிம் லீக், தீவிர பிரச்சாரம் செய்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் இ.யூ.முஸ்லிம் லீகின் பிரச்சாரம் களைகட்டியுள்ள நிலையில், தற்போது இ.யூ.முஸ்லிம் லீகின் தேர்தல் பணிகள் எப்படி உள்ளன என்பதை அறிய விரும்பினோம். எனவே, இ.யூ.முஸ்லிம் லீக் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.எச்.எம்.முஹம்மது இஸ்மாயில், சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் கே.கோதர் ஷா ஆகியோரிடம் தேர்தல் பிரச்சாரப் பணிகள் குறித்து நேரில் கேட்டு தகவல்களை திரட்ட முடிவு செய்து இருவரிடமும் கூட்டாக மணிச்சுடர் நாளிதழுக்காக சிறப்பு நேர்காணல் ஒன்றை நடத்தினோம். சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் நடத்திய நேர்காணலின்போது இருவரும் கூட்டாக தெரிவித்த சுவையான தகவல்களின் முழு விவரத்தை உங்கள் பார்வைக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
6 தொகுதிகளில்
தீவிர வாக்குசேகரிப்பு :
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், 6 தொகுதிகள் எங்களது இ.யூ.முஸ்லிம் லீக் சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பில் வருகிறது. அதன்படி, துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர்., வில்லிவாக்கம், கொளத்தூர், அம்பத்தூர் ஆகிய 6 தொகுதிகளில், நாங்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறோம்.
எங்களது பிரச்சாரம் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு தொடங்கி, 11 மணி வரை நடைபெற்று வருகிறது. மீண்டும் மாலை 4 மணிக்கு தொடங்கும் எங்களது பிரச்சாரம் இரவு 10 மணி வரை நீடிக்கிறது. நாங்கள் பிரச்சாரம் செய்வதற்காக, இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் தனிக்குழுக்களை அமைத்துள்ளோம். அந்த தனிக்குழுக்கள் எங்கள் பொறுப்பில் உள்ள 6 தொகுதிகளுக்கும் சென்று நாள்தோறும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன், எங்களது இ.யூ.முஸ்லிம் லீக் குழுக்கள் இணைந்து பிரச்சாரம் செய்து வருகிறது. திமுக பகுதி நிர்வாகிகள், மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் இணைந்து நாங்கள், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களை நேரில் சந்தித்து, கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் நடைபெற்ற வளர்ச்சி திட்டங்கள், மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலப் பணிகள் ஆகியவை விளக்கம் அளித்து வருகிறோம். மேலும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்றும், அதன்மூலம் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கும் என்றும் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
சென்னையில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு சென்னை கிழக்கு மாவட்ட இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அனைவரும் மிகச் சிறந்த முறையில், ஆதரவு திரட்டி வருகிறார்கள். அதன் காரணமாக எங்கள் பிரச்சாத்திற்கு வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
கொளத்தூர்
தொகுதியில் பிரச்சாரம் :
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் நாள்தோறும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. எங்களது சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து வாக்காளர்கள் மத்தியில் எடுத்துக்கூறி மீண்டும் இந்த தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்றால், தொகுதி மேன்மேலும் வளர்ச்சி அடையும் என்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
கொளத்தூர் தொகுதி முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவான அலை வீசுவதை நாங்கள் காண முடிந்தது. வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குகள் அனைத்தும், நிச்சயமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கே என்று எங்களிடம் கூறும்போது, உண்மையிலேயே கொளத்தூர் தொகுதியை மிகப்பெரிய அளவுக்கு மாற்றி, ஒரு நட்சத்திர தொகுதியாக தளபதி அவர்கள் உருவாக்கி இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து நாங்கள் வியப்பு அடைந்தோம். எனவே கடந்த சட்டமன்றத் தேர்தலை விட இந்த முறை, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கையை கொளத்தூர் தொகுதி வாக்காளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. எங்களுக்கும் அந்த நம்பிக்கை உள்ளது.
துறைமுகம் தொகுதியில் களப் பணி :
இதேபோன்று, அமைச்சர் பி.கே.சேகர் பாபு போட்டியிடும் சென்னை துறைமுகம் தொகுதியில், இ.யூ.முஸ்லிம் லீக் கிழக்கு மாவட்ட தொண்டர்கள் நாள்தோறும் கடும் வெயிலுக்கு மத்தியிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் தனிதனித் குழுக்களாக துறைமுகம் தொகுதி முழுவதும் வளம்வரும் இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள், அமைச்சர் சேகர் பாபு கலந்துகொள்ளும் வாக்குசேகரிக்கும் நிகழ்ச்சிகளின்போது, 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் லீகர்கள் பிறைக் கொடி ஏந்திக் கொண்டு கலந்துகொள்கிறார்கள். வேட்பாளர் சேகர் பாபு உடன்சென்று வாக்காளர்கள் மத்தியில் திமுக ஆட்சியின் சிறப்புகள் அதனால் ஏற்பட்ட பலன்கள், திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து துறைமுகம் தொகுதி வாக்காளர்கள் மத்தியில் நாங்கள் எடுத்துக் கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
துறைமுகம் தொகுதியில் உள்ள பிடாரியார் கோவில் தெரு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு 14.04.2026 அன்று பிரச்சாரம் செய்தபோது, இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது, சேகர் பாபுவிற்கு பொன்னாடை அணிவித்து பேராசிரியர் வாழ்த்து தெரிவித்தார். இந்த பிரச்சாரத்தின்போது, சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் தலைவர், பொதுச் செயலாளர் என்ற முறையில் நாங்கள் இருவரும் கலந்துகொண்டோம். மேலும், மாவட்ட துணைத் தலைவர் அக்பர் அலி சேட், முஸ்லிம் யூத் லீக் மாவட்டத் தலைவர் சுல்தான், துறைமுகம் பகுதி தலைவர் அப்துல் சுக்கூர், வடக்கு மாவட்ட எஸ்.டி.யூ. செயலாளர் ஏ.கே.முஹம்மது ரபி, பூவை காதர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். அப்போது துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர் பாபுவிற்கு வாக்காளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருவதை நாங்கள் நேரில் கண்டோம்.
துறைமுகம் தொகுதியில் நடத்தப்பட்ட வாகன பேரணியில் கூட இ.யூ.முஸ்லிம் லீக் கிழக்கு மாவட்டம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்,. கொளத்தூர், துறைமுகம் தொகுதிகளை போன்றே மற்ற 4 தொகுதிகளிலும் எங்களது பிரச்சாரம் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, எழும்பூர், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய நான்கு தொகுதிகளிலும் இ.யூ.முஸ்லிம் லீக் கிழக்கு மாவட்ட பிரதிநிதிகள் திரளாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். திமுக அரசின் 5 ஆண்டு கால பணிகள் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன்மூலம் எங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள 6 தொகுதிகளிலும் திமுக மகத்தான வெற்றிபெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதேநேரத்தில் கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் மாற அதிக வாய்ப்பு உள்ளது.
த.வெ.க. ஒரு பிரச்சினையே இல்லை :
துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர்., வில்லிவாக்கம், கொளத்தூர், அம்பத்தூர் ஆகிய 6 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அந்த வேட்பாளர்கள் யாரும் வாக்காளர்களின் கவனத்தை பெறவில்லை. இதேபோன்று அதிமுக வேட்பாளர்கள் கூட, வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமல் இருந்து வருகிறார்கள். ஒருசில இளைஞர்கள், மற்றும் பெண்கள், த.வெ.க,.விற்கு ஆதரவான நிலையில் இருந்தாலும், திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மகளிர் நலத்திட்டங்கள் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த திட்டங்கள் மூலம் பயன் அடைந்த அனைத்து பெண்களும், திமுகவிற்கு தான் தங்கள் வாக்கு என்று உறுதியாக கூறி வருகிறார்கள். இதை நாங்கள் நேரில் பார்க்க முடிந்தது.
சென்னையை பொருத்தவரை, தற்போது போட்டியே, திமுகவிற்கும் த.வெ.க.விற்கும் இடையே தான் என்ற நிலை இருந்து வருகிறது. எழும்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக தேர்தல் பணிமனையே திறக்கவே இல்லை. இதன்மூலம், அவர்களின் தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். திமுகவின் தேர்தல் பணிகள் இந்த முறை ராக்கெட் வேகத்தில் இருப்பதால், மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, சென்னை எப்போதும் திமுகவின் கோட்டை என்பதையும் இந்த முறையும் அது உண்மையாகும் என்பதையும் மே 4ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
நல்ல ஒத்துழைப்பு :
சென்னையில் எங்கள் பொறுப்பில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் நாங்கள் பிரச்சாரம் செய்யும்போது, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. அத்துடன், கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக பணியாற்றி வருகின்றன. தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற இன்னும் குறைந்த நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தோழமைக் கட்சி நிர்வாகிகள் அனைவருடன் இணைந்து 6 தொகுதிகளிலும் இ.யூ.முஸ்லிம் லீக் கிழக்கு மாவட்ட சார்பில் நாங்கள் இன்னும் படுவேகத்தில் பிரச்சாரம் செய்வோம்,. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வரலாற்று வெற்றியை நிச்சயம் பெறும் என்று நாங்கள் மிகவும் உறுதியாக நம்புகிறோம்.
இவ்வாறு இ.யூ.முஸ்லிம் லீக் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.எச்.எம்.முஹம்மது இஸ்மாயில், இ.யூ.முஸ்லிம் லீக் சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் கே.கோதர் ஷா ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர். அவர்களது எண்ணங்கள் நிறைவேற வாழத்திவிட்டு விடைப்பெற்றோம்.
- சந்திப்பு
: சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்